லேபிள்கள்

சனி, 20 நவம்பர், 2010

நாக்க முக்க பாடல் - ஒரு தத்துவக் கண்ணோட்டம்

(ஸ்ருதி தாளம் லயம் எந்தத் தேவையுமின்றி பாடகர் உச்சஸ்தானியில் அலறிப்பாடும் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை வெளிவராத தத்துவப் பாடலைப்பற்றி சில வரிகளை உங்களுக்காக தருகிறேன்...)
ங்களில் பலரைப் போலவே எனக்கும் ஆரம்பத்தில் இந்த நாக்க முக்கா நாக்க முக்கா என்ற 'காதலில் விழுந்தேன்' படப்பாடல் பிடிக்கவே இல்லை. அப்பப்ப தமிழ் சினிமாவில் இந்த மாதிரி வேகமான குத்துப் பாடல்கள் வந்து உலுக்கோ உலுக்கென்று உலுக்கிவிட்டு சிறிது காலத்தில் காணாமல் போய்விடும் என்று எனது பாட்டில் இருந்துவிட்டேன். உதாரணத்துக்கு 'ஓ போடு' 'மன்மதராசா' என நிறைய சொல்லலாம்..
தற்செயலாகத்தான் இந்த நாக்க முக்காவை கேட்க நேர்ந்தது (நிரப்பந்தத்தின் பேரில்தான்..) கேட்ட பிறகுதான் ஓர் அருமையான தத்துவப்பாடலை நான் இதுவரை வெறுத்து ஒதுக்கிவிட்டேன் என்று என்னையே கடிந்து கொண்டேன். வலுக்கட்டாயமாக இதைக் கேட்க வைத்த எனது நண்பனுக்கு நிறைய நன்றி சொன்னேன்.
இப்படி ஒரு தத்துவப் பாடலை கண்ணதாசன் கேட்டிருந்தால் அகமகிழ்ந்து போயிருப்பார், தனக்குப் பிறகும் அற்புதமான தத்துவப்பாடல்கள் வந்துகொண்டிருக்கின்றன என்று.
அதிகப் பிரசங்கத்தினம் போதும்.. இனி பாடலில் பொதிந்திருக்கும் தத்துவங்களைப் பார்க்கலாம்...
படம் : காதலில் விழுந்தேன் (படத் தலைப்பே கவிதை)
பாடல் : ஆர்ரார்ரா நாக்க முக்கா (தமிழ்ப்பாடல்தான்)
இசை+பாடியவர் : விஜய் ஆன்டனி
பாடல் தொடங்கும்போது நீங்களெல்லாம் அதி உன்னிப்பாக கேட்கவேண்டும் ஆங்கிலத்தில் பாடலைப் பற்றிய சிறு குறிப்பொன்று சொல்லப்படும். அதன் தமிழாக்கம் இதுதான். "நண்பர்களே இது ஒரு பாடல் (அதையும் அவர்கள் சொல்லித்தான் நம்ப வேண்டியிருக்கிறது) இது ஒரு உண்மைக் கணிதவியல் (அப்படித்தான் எனக்குக் கேட்டது) மற்றும் விளையாட்டு (எனது
மொழிபெயர்ப்பை நீங்கள் ஒருமுறை சரிபாருங்கள்) ஆங்கில வாசகங்கள் முடிந்தவுடன்
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா
என்று புரியாதவர்களுக்காக அந்தத் தத்துவம் இரண்டு முறை சொல்லப்படும்...
அதாவது மாடு செத்தால் மனுசன் அதை சாப்பிட்டு விட்டு அதன் தோல் பகுதியை மேளமாக இசைக்காக உபயோகிக்கிறான் என்று சொல்லப்படுகிறது. ஆனால் மனுசன் செத்தால் என்ன செய்கிறோம்... அந்த மேளத்தை கொட்டி ஆடோ ஆடென்று ஆடி அவனுக்கு இறுதிக்கிரியைககள் செய்கிறோம். இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றது. மனுசன் மாட்டிலிருந்து தனது அறிவுக்கு எட்டியவரை அதனை உணவாகவும் இசைக்கருவி ஒன்றுக்கான மூலப்பொருளாகவும் பயன்படுத்தி தனக்கு ஆறறிவு என்பதை நிரூபிக்கிறான்!
இரண்டாவது விஷயம் மாடு மனிதனை விட சிறந்தது.காரணம் மனுசன் செத்த பிறகும் செத்த ஒரு மாட்டின் தோல்தானே அவனது இறுதி ஊர்வலத்தில் பயன்படுகிறது..? (புரியாதவர்கள் மீண்டும் ஒரு முறை இதை படியுங்கள்)
அதனைத்தொடர்ந்து...
அதி உச்சஸ்தானியில் பாடலின் முக்கிய கருப்பொருளான
"ஆர்ரார்ரா நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க....................."
"ஆர்ரார்ரா நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க....................."
என்று இசையோடு கலந்து நமது சிந்தைகளை மெல்ல மெல்ல கிளறுகிறது. அதற்குப் பிறகு ஒரே வகையான இசையோடு (16 ராகங்களிலிருந்து வேறுபட்ட புதியதொரு ராகம்... 7 ஸ்வரங்களில் இது எந்த ஸ்வரம் என்று பிடிபடவில்லை)
முதல் சரணம் தொடங்குவற்கு முதல் அந்தத் தத்துவம் மீண்டும் ஒலிக்கிறது (திரும்த் திரும்ப வாழ்வின் யதார்த்தத்தை நமக்கெல்லாம் புரியவைக்கத்தான்)
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா
"ஆர்ரார்ரா நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க....................."
"ஆர்ரார்ரா நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க....................."
சரணம் தொடங்க முதல் "அடி லாரீப் சோனா லாரீப் சோனா லாரீப் சோனாரே என்று இந்தியிலும் ஏதோ தத்துவம் சொல்கிறார்கள். எனக்கு இந்தி மொழி தெரியாததால் அதைப்பற்றி அலசிப்பயனில்லை.
தொடரும் முதலாவது சரணத்தை பாருங்கள்...
பந்தாட்டம் உழல வெச்சான்
ராட்டினம் போல் சுழல வெச்சான்
ஏற வெச்சான் எறங்க வெச்சான்
சுழலவிட்டு மயங்க வெச்சான்
மயங்கினவன எழுப்புடா எழுப்புடா எழுப்புடா 
(பாடகரின் கத்தலிலேயே உண்மையா மயங்கினவன் எழும்பி விடுவான் போலுள்ளது)
அடிங்கடா அடிங்கடா அடிங்கடா அடிங்கடா அடிங்கடா (அடிக்கச் சொல்வது மேளத்தையா... மயகக்த்தில எழுப்பியவனையா..? என்று பாடலைக் கேட்பவர்களை சிந்திக்க வைக்கிறார்கள்)
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
கூத்துக்கட்டுடா...
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
கூத்துக்கட்டுடா...

என்று மீண்டும் மீண்டும் உலக தத்துவத்தை நினைவுபடுத்துகிறார்கள்
உலக வாழ்க்கை வட்டம் மாதிரி. உயரத்தில் இருப்பவன் கீழே வந்துதான் ஆகணும். கீழ இருப்பவன் உயர்ந்துதான் ஆகவேண்டும். எனவே வீணான மமதை மயக்கத்திலிருந்து நாமெல்லாம் விடுபடவேண்டும் எனறு வித்தியாசமான உவமையில்
பாடலில் சொல்லப்படுகிறது. (பந்தாட்டம் ராட்டினம் போன்ற உவமைகளைச் சொன்னேன்)
அதைத்தொடர்ந்து மீண்டும் அந்த "அடி லாரீப் சோனா" என்ற இந்தி மொழித்தத்துவம் உச்சஸ்தானியில் பலமுறை ஒலிக்கிறது.
இனி இரண்டாவது சரணம்
பொண்ணுங்கள பொறக்க வெச்சான்
பொண்ணுக்குள்ள கருவ வெச்சான் கருவ வெச்சான்
கற்பவெச்சான்

(இது தெரியாதா எங்களுக்கு என்று விதண்டாவாதமாக கேட்க வேண்டாம் நண்பர்களே...)
கற்புக்குள்ள தீய வெச்சான்
தீய வெச்சு எரிய வெச்சான்
எரிய வெச்சான்
மதுர எரிய அணைங்கடா அணைங்கடா அணைங்கடா...
பொண்ணுங்கள பொறக்க வெச்சான்
பொண்ணுக்குள்ள கருவ வெச்சான் கருவ வெச்சான்
கற்பவெச்சான்
கற்புக்குள்ள தீய வெச்சான்
தீய வெச்சு எரிய வெச்சான்
எரிய வெச்சான்
மதுர எரிய அணைங்கடா அணைங்கடா அணைங்கடா...
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
கூத்துக்கட்டுடா...
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
கூத்துக்கட்டுடா...
அடி லாரீப் சோனா லாரீப் சோனா லாரீப் சோனா ரே....
அடி லாரீப் சோனா லாரீப் சோனா லாரீப் சோனா ரே....
அடி லாரீப் சோனா லாரீப் சோனா லாரீப் சோனா ரே....
அடி லாரீப் சோனா லாரீப் சோனா லாரீப் சோனா ரே....
(இந்தி மொழியை இதைப்புரிந்த கொள்ளவேனும் கற்றுக்கொண்டிருக்கலாம் என்று அதிகம் கவலைப்படுகிறேன்)
ரண்டாவது சரணத்தில் நிறைய உண்மைகள் தொடடுக் காட்டப்பட்டிருப்பதை அவதானியுங்கள்.. அவைகளில் சில அதோ இலக்க வடிவில்
01) பெண்ணியம் பேசப்படுகிறது
02) கண்ணகி மாதவியின் சிலப்பதிகார வரலாறு மீளப்போதிக்கப்பட்டுள்ளது.
03) கற்பு என்பதன் மகோன்னதம் விளக்கப்பட்டுள்ளது.
04) பெண்களின் கருவினால்தான் மனித உயிரகள் சூல் கொள்கின்றன என்பது அழகாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
05) பெண்களுக்கெதிரான வன்முறைகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என்ற எச்சரிக்கைத் தொனி ஒலிக்கக் காண்பீர்கள்
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
என்கிற வாசகங்களோடு
ஒரு பெண் குரலின்
"நாக்க முக்க.." என்ற உச்சரிப்புடன் அழகாக முடிகிறது இந்தப் பாடல்...
இப்போது சொல்லுங்கள்... அது எப்பேர்ப்பட்ட தத்துவப் பாடல் என்று..????
ரொம்ப கஷ்டப்பட்டு பாடல் வரிகளை விளங்க பல முறை பாடலைக் கேட்ட பிறகே எனக்குப் பாடல் புரிந்தது. இது கூட ஒரு உண்மையை சொல்கிறது. அதாவது கஷ்டப்பட்டால்தான் சில விஷயங்களை அடைய முடியும் என்ற தத்துவத்தை மிக
லாவகமாக பாடல் உணர்த்துகிறது.
இவ்வளவு கஷ்டப்பட்டும் என்னால் ஒரேயொரு விஷயத்தை இந்தப் பாடலில் இருந்து தெரிந்து கொள்ள முடியவில்லை. உங்களுக்குத் தெரிந்திருந்தால் தயவு செய்து சொல்லிவிடுங்கள். காரணம் தெரியும் வரை எனக்கு தூக்கம் வருவது
சந்தேகம்தான்...
அது என்னவெனில்...
"நாக்க முக்க" என்றால் என்ன என்பதுதான்...

கருத்துகள் இல்லை:

Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Paneer Health Benefits: ஆரோக்கியமான பால் உணவான பன்னீர் , அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவாக உள்ளது. ஆனால் , பன்னீர் சாப்பிடும் சரியான ம...

Popular Posts