லேபிள்கள்

சனி, 29 அக்டோபர், 2022

ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....

பிறர் கருத்துகளை திருடாமல் தங்களது சுயக் கருத்துக்களைக் கொண்டே எழுதவேண்டும் என்ற தூயவிதியை இஸ்லாமியர்கள் தான் இந்த உலகுக்கு முதலில் அறிமுகம் செய்தார்கள்.


ஆனாலும் வளர்ச்சியின் உச்சி நுகர்ந்தவர்கள் நாங்கள் என்று கூறித் தங்களை மாறுத்தட்டிக்கொண்டு நம்மை வளர்ச்சியடையவில்லை என்றுத் தூற்றிக் கொண்டும் இருக்கிற ஐரோப்பியர்கள் இதனை என்றைக்கும் கடைபிடித்ததேயில்லை.

சமூகவியலின் தந்தை என்று போற்றப்படுகின்றவர்,
டேவிட் எமைல் டுர்கைம் ஆனால் உண்மையிலேயே அந்த துறையை நிறுவியவர் இப்னு ஹல்தூன் என்ற முஸ்லிம் அறிஞர் தான்.ஆனால் இவரது கருத்துகளைக் கொண்டுத் தான் நான் ஆய்வுச் செய்தேன் என்று எந்த இடத்திலும் டேவிட் குறிப்பிடவேயில்லை.

இயக்க விதிகளை கண்டுபிடித்தது ஐஸக் நியுடன் என்கிறோம், ஆனால் அவருக்கு முன்பே அறிஞர் இப்னு ஸீனா அறிஞர் ஹிபதுல்லாஹ் இப்னு மல்கா ஆகிய இருப்பெரும் முஸ்லிம் அறிஞர்களே முதலில் அதனை கண்டுப்பிடித்தனர்.
ஆனால் இந்த இரு அறிஞர்களது கண்டுபிடிப்புகளை மையமாக வைத்து தான் தனது ஆராய்ச்சி அமைந்துள்ளதாக எந்த இடத்திலும் நியுடன் கூறியதாக வரலாறு இல்லை.

ராஜர் பேகனின் சிலப் புத்தகங்களில் இடம்பெற்ற அத்தியாயங்கள் முழுக்க முழுக்க முஸ்லிம் அறிஞர் இப்னுல் ஹைஸம் அவர்களது முனாளர் என்ற புத்தகத்திலிருந்து எடுத்து விஷயங்கள் தான். ஆனால் அவர் அதனை அப்படியே தனதுக் கருத்துப் போல் தான் கூறியிருப்பாரே தவிர இது இப்னுல் ஹைஸம் அவர்களது வரிகள் என்ற மேற்கோள்கள் எல்லாம் காணவே இயலாது.

'
ஹலாரத்துல் அரபு' என்ற புத்தகத்தின் ஆசிரியர் கஸ்தவே லீபான் தனது புத்தகத்தில் கூறுகிறார் அறிவியலின் அடிப்படை கூறுகளான ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு என்ற இந்த இருப் பெரும் முறைகளை முதலில் கண்டுபிடித்தவர் ராஜர் பேகன் தான் என்றுக்கூறியப்பிறகும் ஆனாலும் அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஆணி வேர் அரபுகள் தான் என்று நிறைவுச் செய்கிறார். .அரபுகளின் ஆக்கங்களை, புத்தகங்களை படிக்கும் அனைத்து அறிஞர்களுமே இந்த விஷயத்தை ஒப்புக்கொள்வார்கள்.

ஆனால் அதே நேரத்தில் அரபுகள் தங்களது புத்தகங்களில் மற்ற யாராவதுடைய கருத்தை அரபுகள் மேற்கோள் காட்டினார்கள் என்றால் அதை யாருடைய கருத்து என்று தெளிவாக பதிவுச் செய்திருப்பார்கள் அதோடு அவர்களது பணிவையும் வெளிப்படுத்தியிருப்பார்கள்.இது ஹிப்போகரட்ஸ் உடைய கூற்று இது கேலனுடைய கூற்று இது சாக்ரடீஸ் உடைய கூற்று என அவர்களுக்கு செலுத்தியாக வேண்டிய மரியாதையைச் செலுத்தியிருப்பார்கள்............

அரபி மூலம் : ராகிப் ஸர்ஜானீ
இஹ்திராமுல் மலக்கியத்தில் ஃபிக்ரியத்தில் ஃபி ஹளாரத்தில் இஸ்லாமியா.
தமிழில்: மௌலவி நியாசுதீன் புகாரி நத்வி

http://www.tamilislamicaudio.com/articles/detail.asp?alang=ln1&aid=528


--

புதன், 26 அக்டோபர், 2022

இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?

01. தர்மம், ஸதக்கா, அன்னதானம் எல்லாம் நாம் கொடுப்பது உண்மைதான். ஆனால், நமது வீட்டில் அன்றாடம் எத்தனை கவள உணவு குப்பைத் தொட்டி யில் கொட்டப்படுகிறது என்று யோசித்திருப்போமா?

02. நம் வீட்டுப் பெண்களை மஹ்ரமல்லாத அந்நிய ஆண்களின் பார்வையில் தடுக்க விரும்பும் நாம், அடுத்த வீட்டுப் பெண்களை கடைக்கண்ணால் பார்க்கும் முரண்பாட்டை என்னவென்று கூறுவது?

03. முதியோர், அனாதைகளை ஆதரிப்பது பற்றி பிறருக்கு அட்வைஸ் பண்ணும் நாம், நமது வீட்டில் யாராவது அப்படி இருந்தால், நமது மனம் என்ன சொல்கிறது? நமது நடைமுறை அவர்களது விசயத்தில் எப்படி இருக்கிறது?

04. பொய் பேசுவது, புறம் பேசுவது தவறு என்று பள்ளியில் பயான் கேட்ட பிறகு, எத்தனை தடவை நமது நட்பு, சொந்தபந்தத்தைப் பற்றி புறம் பேசி பயானை மீறி இருப்போம், சொல்லுங்கள் பார்க்கலாம்?

05. எல்லோரிடமும் அன்பாக உருகி உருகி சலாம் சொல்லும் நாம், நமது மனைவி மக்களிடம், உடன் பிறந்தவர்களிடம் அப்படி உருக்கமாக ஸலாம் சொல்லி பழகியிருப்போமா?

06. இரவில் இஷாவுக்குப் பிறகு உண்டு உறங்கி ஓய்வெடுத்து அதிகாலையில் சுபுஹ் தொழுகைக்கு உற்சாகமாக எழவேண்டும் என்ற அர்த்தமுள்ள நபிமொழியை எத்தனை தடவை நாம் மீறி இருப்போம்?

07. பணம் படைத்தவர்கள், பெரும் பதவிகளில் உள்ளவர்களோடு ஃபோட்டோ எடுக்கும் நாம், எத்தனை தடவை பாமர மக்களோடு, சாமான்ய மனிதர்களோடு அட்லீஸ்ட் செல்ஃபியாவது எடுத்திருப்போமோ?

08. ஆடம்பர மற்றும் வரதட்சினை திருமணங்கள், மார்க்க அடிப்படையில் தவறு என தெரிந்தும், கொஞ்சம் கூட மனஉறுத்தல் இன்றி அந்த மாதிரி திருமண நிகழ்ச்சி யில் எத்தனை தடவை சந்தோசமாக பங்கெடுத்திருப் போம்?

09. சாலையில் மனிதர்களுக்கு இடர்தரும் கல்லோ முள்ளோ கண்ணாடிச்சில்லோ கிடந்தால், அதை அகற்ற முயற்சிப்பது நபிவழி என அறிந்தும், துளிகூட மனசாட்சி இல்லாமல் அதனை எத்தனை தடவை நாம் கடந்து போயிருப்போம்?

10. சத்தியத்துக்குத்தான் துணை போகவேண்டும். அசத்தியத்துக்கு ஒருபோதும் துணை போய் விடக் கூடாது என்பது இஸ்லாமிய பால பாடம். ஆனால், நமது குடும்பம், நட்பு வட்டம், நமது இயக்கம் என்ற அடிப்படையில் எத்தனை அசத்தியத்துக்கு அநியாயத்துக்கு துணை போயிருப்போம் நாம்?

இன்னும்..... பட்டியல் நீளும். இருப்பினும் யோசித்துப் பார்த்தால், அன்றாடம் ஏகப்பட்ட முரண்களோடுதான் நமது வாழ்க்கை நகர்கிறது. குறைந்த பட்சம்...மேலே உள்ள இந்த பத்து கேள்விகளையும் தனிமையில் இரண்டு ரக்அத் நஃபில் தொழுதுவிட்டு ஆற அமர யோசிப்போம்...!

இவ்வளவு பெரிய முரண்களோடு இறைவனிடம் நாம் கையேந்தினால், இறைவன் எப்படி நமது துஆக்களை - பிரார்த்தனைகளை அங்கீகரிப்பான்; ஏற்றுக் கொள்வான்...?

இப்படி நம்மை நாமே சுயபரிசோதனை செய்து பார்த்தால், இறைவனிடம் துஆகேட்க - கையேந்த வெட்கமா இல்ல...?

எல்லாம் வல்ல இறைவா! இனிவரும் நாட்களிலாவது நாங்கள் ஹலால், ஹராம் பேணி முரண் இல்லாத வாழ்வு வாழ எங்களுக்கு நல்ல புத்தியையும் சந்தர்ப்ப சூழலையும் சாதகமாக்கி அருள்வாயாக!

மனித பலவீனங்களை வென்று, உன்னிடம் பிரார்த்திக் கும் தகுதியைப் பெற்று, ஸலாமத்தான பறக்கத்தான வாழ்வு வாழ, அருள்புரிவாயாக! ஆமீன், யா றப்பல் ஆலமீன்!

[சிங்கை பஷீர்... சிறிது வார்த்தை மாற்றங்களுடன்...]

http://www.tamilislamicaudio.com/articles/detail.asp?alang=ln1&aid=530


--

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts