லேபிள்கள்

சனி, 29 ஜனவரி, 2022

பல் ஈறுகளில்ஏற்படும் பிரச்சனைகளை போக்கும் வெங்காய சாறு..!!

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி  குறையும்.

வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும். ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம். தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

நான்கு அல்லது ஐந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும்.

சம அளவு வெங்காயச் சாறு வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி குறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம  அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது லவங்க பிசினைத்தூள் செய்து சேர்த்து. சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/onion-juice-to-cure-gum-problems-120113000025_1.html


--

புதன், 26 ஜனவரி, 2022

அற்புத மருத்துவநன்மைகளை அள்ளி தரும் வில்வப்பழம்...!!

Sasikala|

வில்வப்பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் கண்டிக்கும்.

வாய்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும்   குணமாக்கும் வில்வப் பழம்.

வில்வப்பழமும் நல்லெண்ணெய்யும் சேர்ந்த தைலத்தை சிறிது விளக்கில் சூடாக்கி காதில் விட்டு பஞ்சால் அடைக்க வேண்டும் நாளடைவில் செவி நோய்கள்  நீங்கிவிடும்.

வில்வக்காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்துப் பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள்   போகும்.

வில்வத் தளிருடன் சிறிது துளசி, சில மிளகு ஆகியவற்றைச் சேர்த்து நசித்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். வில்வ வேர்ப்பொடி நான்கு சிட்டிகையெடுத்து தேனில் கலந்து உட்கொண்டால் உஷ்ணபேதி நிற்கும்.

வில்வவேர் தூளை நான்கு சிட்டிகையெடுத்து பசும்பாலில் கலந்து ஒரு நாளைக்கு இரு வேளையென தொடர்ந்து பதினெட்டு நாட்கள் உட்கொள்ள உடலழகும் சருமப்  பளபளப்பும் கூடும்.

வேர் நோய் நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம் மலமிளக்கும்.

வில்வப்பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அத்துடன் பழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் வீதம் ஒரு நாளைக்கு  3  முறை வீதம் குடித்து வந்தால் மலத்தில் சீதம், இரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளியேற்றும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/vilva-pazham-gives-amazing-medical-benefits-120113000080_1.html


--

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

சிறந்ததைத் தெரிவு செய்ய இஸ்திகாராதொழுகை

உங்களில் ஒருவருக்கு இரண்டு விடயங்களில் எதைத் தெரிவு செய்வது? எது நன்மையான காரியம் என்பதில் குழப்பமான நிலை ஏற்பட்டால் இஸ்லாம் காட்டும் அழகிய வழிமுறை தான் நீங்கள் இரண்டு ரக்அத் தொழுது விட்டு கீழ்வரும் துஆவை ஓதி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதன் பின்னர் நீங்கள் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.

இதற்கு மாற்றமாக குறி பார்பது, சீட்டுக் குளுக்கிப் போடுவது, போன்ற காரியங்கள் தவறான வழிமுறைகளாகும்.

قال تعالى (وأن تستقسموا بالأزلام ذلكم فسق

سورة المائدة :03

அல்லாஹ் கூறுகிறான்:

"நீங்கள் அம்பெறிந்து குறிபார்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளன. இவை பாவமாகும்" (அல்குர்-ஆன் 5:3)

இஸ்திகாரா தொழுகை முறை:

1) அழகிய முறையில் வுளூ செய்து இஸ்திகாரா நிய்யத்துடன் கடமையில்லாத இரண்டு ரக்அத்களைத் தொழ வேண்டும்.

2) இத்தொழுகை நமது வழமையான தொழுகைகளைப் போன்றது.

3) தேவை ஏற்படக்கூடிய நேரத்தில் தொழ முடியும். அதற்கென குறிப்பிடட்பட்ட நேரமில்லை. பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களை (இரவின் கடைசிப்பகுதி/அதானுக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரம்) தெரிவு செய்வது நல்லது.

4) தூங்கப் போகமுன் இஸ்திகாரா தொழுதால் நாம் தெரிவு செய்ய வேண்டிய விடயம் பற்றி கனவில் காட்டப்படும் என்ற நம்பிக்கை தவறானது.

5) ஹராமான காரியங்களுக்கு இஸ்திகாரா தொழக்கூடாது. அது போல் அன்றாட வாழ்கையில் உள்ள உண்ணுதல் , பருகுதல் போன்ற காரியங்களுக்கு இஸ்திகாரா கிடையாது.

6) இரண்டு ரக்ஆத் தொழுது விட்டே பின்வரும் துஆவை ஓத வேண்டும். மாதவிடாய் பெண்கள் தேவை ஏற்படும் போது இந்த துஆவை ஓதினால் போதுமானது.

7) நாம் இஸ்திகார தொழுது விட்டு எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். நாம் நினைத்ததற்கு மாற்றமாக நடை பெற்றால் கூட அதில் தான் நலவு இருப்பதாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:

"நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்; நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்குத் தீங்காகவும் இருக்கலாம்; நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன்" (அல்-குர்ஆன் 2:216)

இரண்டு ரக்அத்துக்களை தொழுத பின் ஓத வேண்டிய பிரார்த்தனை:

عن جابر بن عبد الله رضي الله عنهما، قال : كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كما يعلمنا السورة من القرآن، يقول : " إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة، ثم ليقل : اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك، وأسألك من فضلك العظيم، فإنك تقدر ولا أقدر، وتعلم ولا أعلم، وأنت علام الغيوب، اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني، ومعاشي، وعاقبة أمري " أو قال : " عاجل أمري وآجله، فاقدره لي ويسره لي ثم بارك لي فيه، وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري " أو قال : " في عاجل أمري وآجله، فاصرفه عني واصرفني عنه، واقدر لي الخير حيث كان، ثم أرضني ". قال : " ويسمي حاجته ".

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தது போல் எல்லாக் காரியங்களிலும் நல்லதைத் தேர்வு செய்யும் முறையையும் கற்றுத் தந்தார்கள்.

அவர்கள் கூறினார்கள்:

'உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கடமையல்லாத இரண்டு ரக்அத்களை அவர் தொழட்டும்.

பின்னர் 'இறைவா! உனக்கு ஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உனக்கு வல்லமை இருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன். உன்னுடைய மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ அனைத்திற்கும் அறிகிறாய். நான் அறிய மாட்டேன். மறைவான என்னுடைய இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் என்னுடைய மறுமைக்கும் சிறந்தது என்று நீ அறிந்தால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா! அதை எனக்கு பரக்கத் செய்! இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் கெட்டது என்று நீ அறிந்தால் என்னைவிட்டு இந்தக் காரியத்தையும் இந்தக் காரியத்தையும்விட்டு என்னையும் திருப்பி விடு. எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றிற்கு ஆற்றலைத் தா! திருப்தியைத் தா! என்று கூறட்டும். அதன் பிறகு தம் தேவையைக் குறிப்பிடட்டும்.'

ஸஹீஹ் புகாரி : 1162.

http://www.islamkalvi.com/?p=125528


--

புதன், 19 ஜனவரி, 2022

எடை போடப்படும் நன்மையும்– தீமையும்!

الوزن அல்வஸ்ன் – எடை,

ميزان மீஸான் – தராசு,

توازن தவாஸுன் – எடைக் கருவி,

மனிதன் தனது வாழ்க்கையில தவிர்க்க முடியாத ஒன்று அளவை கணக்கிட பயன்படுத்தும் கருவி "தராசு".

இந்த நவீன உலகில் மனிதன் பிறந்தவுடன் முதலில் அவனது உடல் தராசில் வைத்து எடை போடப்படுகிறது. அக்குழந்தையின் எடை மூன்று கிலோவுக்கும் அதிகமாக இருந்தால் அது ஆரோக்கியமான குழந்தை என்றும் மூன்று கிலோவுக்கும் குறைவாக இருந்தால் அது இன்னும் ஆரோக்கியம் தேவைப்படும் குழந்தை என்றும் இன்றைய மருத்துவ உலகம் கூறுகின்றது.

மனிதன் தனக்குத்தேவையான உணவுப் பொருட்களிலிருந்து கட்டுமானப் பொருட்கள்வரை அத்தனையும் அளந்து எடை போட்டுத்தான் பெறுகின்றான். விலை உயர்ந்த அல்லது விலை மலிவான ஆடைகள் முதல், தனது பாதங்களுக்கு அணியும் பாதணிகள் வரை அளவுகோல் வைத்து அளந்துதான் வாங்கமுடியும்.

கண்களால் பார்க்க முடியாத காற்றையும் அளந்து எடைபோட்டுத்தான் வாகனத்தின் டயர்களுக்கு நிரப்பப்பவேண்டும். அந்த வாகனத்தில் ஏற்றப்படும் சுமைகளையும் அளந்துதான் ஏற்றவேண்டும். அளவுக்கு அதிகமாக நிரப்பப்படும் காற்றும், சுமையும் வாகனத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

அதிகப் பணம் கொடுத்து, அளவில் குறைவாக வாங்கப்படும் தங்கம் முதல் பணம் குறைவாகக் கொடுத்து அளவில் அதிகமாக வாங்கப்படும் உப்புவரை அத்தனைப் பொருட்களையும் நிறுத்து எடை போட்டுத்தான் மனிதன் பெற்றுக்கொள்கின்றான்.

மனிதன் வாழ்வதற்கான வீட்டுமனை முதல் அவன் மரித்த பின்பு அவனை புதைப்பதற்கான புதைக்குழிவரை அளவுகோலைக் கொண்டு அளக்கப்படாமல் இல்லை! ஆக தராசு, அளவுகோல், எடைக் கருவி என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்கமுடியாத ஒன்றாகும்.

அதே போன்று வியாபாரத்தில் அளவையிலும், நிறுப்பதிலும் நியாயமாக நடந்து கொள்ளுங்கள், அளவையில் மோசடி செய்பவன் பாவத்தை சுமக்கின்றான், எடையில் மோசடி செய்பவனுக்குக் கேடுதான், அளப்பதிலும் நிறுப்பதிலும் நீதமாக நடந்துகொள்ளுங்கள், அளந்தால் நீதியாக சரியான தராசைக்கொண்டு நிறுத்து அளந்துகொடுங்கள் என்று அளவுகோல் மற்றும் தராசைப் பற்றி அல்குர்ஆன் பல இடங்களில் குறிப்படுகின்றது. (பார்க்க அல்குர்ஆன்:06:152, 07:85, 11:84, 11:85, 17:35, 26:181)

இப்படியாக தனது வாழ்நாள் முழுவதும் எடைக் கருவியை தவிர்க்க முடியாமல் வாழ்ந்த மனிதனின் செயல்களும் மறுமை நாளில் தராசில் வைத்து எடை போடப்படுகிறது.

அல்லாஹ், மறுமை நாளில் மனிதர்களின் நன்மை தீமைகளை நீதமான தராசைக் கொண்டு நிறுத்து அதிக நன்மையையோடு வருபவர்களை சொர்க்கத்திலும், அதிகம் தீமையோடு வந்தவர்களை நரகத்திலும் புகுத்துவான் என்பது அல்குர்ஆன் போதிக்கும் அடிப்படைகளில் உள்ளதாகும்.

وَنَضَعُ الْمَوَازِيْنَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيٰمَةِ فَلَا تُظْلَمُ نَـفْسٌ شَيْــٴًـــا‌ وَاِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ اَتَيْنَا بِهَا‌ وَكَفٰى بِنَا حٰسِبِيْنَ

மறுமை நாளுக்காக நியாயமான தராசுகளை நாம் நிறுவுவோம். எனவே, எந்த உயிருக்கும் சிறிதளவுகூட (அப்போது) அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகின் வித்தளவு (ஒரு செயல்) இருந்தாலும் அதையும் நாம் கொண்டு வந்து விடுவோம். கணக்கெடுக்க நாமே போதும். (அல்குர்ஆன்:21:47)

ஏமாற்றக் கூடிய, கள்ளத்தனம் செய்யக்கூடிய தராசும் அளவுகோலும் இந்த பூமியில்தான். உதாரணமாக ரேஷன் கடையில் மூன்று கிலோ சர்க்கரை வாங்கினால் 2,700 கிராம்தான் இருக்கும், மூன்று லிட்டர் மண்ணெண்ணெய் வாங்கினால் அதில் முன்னூறு மில்லி குறையும்.

அதேபோன்று நிலத்தகராறில் கைகலப்பு வரை போவதெல்லாம் நிலத்தை அளந்த அளவுகோல் மூலம் செய்த மோசடியால், இதுபோன்ற கள்ளத்தனங்கள் செய்யும் தராசும் அளவுகோலும் இந்த பூமியில்தான். மறுமையில் அல்லாஹ்விடம் உள்ள தராசு மிகவும் நீதமானது நேர்மையானது. அதில் ஒரு சிறிய வித்தளவு எடையையும் மிகத்துல்லியமாக காட்டிவிடும்.

يٰبُنَىَّ اِنَّهَاۤ اِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُنْ فِىْ صَخْرَةٍ اَوْ فِى السَّمٰوٰتِ اَوْ فِى الْاَرْضِ يَاْتِ بِهَا اللّٰهُ ‌ اِنَّ اللّٰهَ لَطِيْفٌ خَبِيْرٌ

என் அருமை மகனே! நிச்சயமாக கடுகின் வித்தளவு எடை உள்ளதையும், அது பாறையில் அல்லது வானங்களில், அல்லது பூமியில் (மறைந்து) கிடந்தாலும் அதையும் அல்லாஹ் வெளியே கொண்டுவந்துவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான். (என்று லுக்மான் கூறினார். (அல்குர்ஆன்: 31:16)

அதாவது மனிதன் செய்யக்கூடிய நன்மையோ – தீமையோ எதுவாயினும் அது அணுவளவு இருந்தாலும் சரி, அது கற்பாறைக்குள் மூடி மறைக்கப் பட்டிருந்தாலும் அதையும் அல்லாஹ் வெளியில் கொண்டுவந்து அவன் துரோகமிழைக்கப்படாமல் அதை நிறுத்து எடை போடப்பட்டு அதற்கான பிரதிபலன் வழங்கப்படுவான். இதனால்தான் லுக்மான் தன் மகனிடம் இதையெல்லாம் செய்யக்கூடிய அல்லாஹ் மிகவும் நுட்பாமானவனாவான், நன்கு அறியக்கூடியவன் என்று கூறினார்.

وَالْوَزْنُ يَوْمَٮِٕذِ اۨلْحَـقُّ‌ فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ

وَمَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤٮِٕكَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ بِمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَظْلِمُوْنَ

அந்நாளில் (நன்மை-தீமையை) எடை போடுதல் நியாயமாக இருக்கும். யாருடைய (நன்மையின்) எடை கனமாக இருக்குமோ அவர்கள்தான் வெற்றியாளர்கள். யாருடைய நன்மையின் எடை கணம் குறைவாக இருக்குமோ அவர்கள் தமக்குத்தாமே இழப்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள் ஆவர். நமது வசனங்களின் மீது அநீதி இழைத்துகொண்டிந்ததே இதற்கு காரணமாகும். (அல்குர்ஆன்: 07:8-9)

فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ ۙ
فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍ

وَاَمَّا مَنْ خَفَّتْ مَوَازِيْنُه
ٗ ۙ
 فَاُمُّهٗ هَاوِيَةٌ

அந்நாளில் (மறுமை) நாளில் எவருடைய நன்மையின் எடை கனத்ததோ அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் (சுவனத்தில்) இருப்பார். ஆனால் எவருடைய நன்மையில் எடை இலேசாக இருந்ததோ அவர் தாங்கும் இடம் "ஹாவிய"தான் ஹாவிய என்பது சுட்டெரிக்கும் நரகமாகும். (அல்குர்ஆன்: 101: 6-9)

மறுமை நாளில் மனிதர்களின் நன்மை – தீமையை எவ்வாறு எடை போடப்படும் என்பதில் மூன்று விதமாக கருத்துக்கள் உள்ளன:

1- நன்மை – தீமைகளுக்கு உருவத்தை அல்லாஹ் வழங்கி அதை தராசில் வைத்து எடை போடப்படும்.

2- நன்மை – தீமைகள் பதியப்பட்ட ஏட்டை (பதிவுப் புத்தகத்தை) தராசில் வைத்து எடை போடப்படும்.

3- நன்மை – தீமைகளைச் செய்த அந்த மனிதனை தராசில் வைத்து எடை போடப்படும்.

இந்த மூன்று கருத்துக்களுக்கும் ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது. ஆனால் அந்த தராசு எப்படி இருக்கும் என்பதை அல்லாஹ் ஒருவனே நன்கு அறிவான்!

ஆகவே நற்செயல்கள் குறைந்துவிட்ட இக்காலத்தில், ஒரு வித்தளவு நன்மை தரக்கூடிய அல்லது ஒரு அணுவளவு நன்மை தரக்கூடிய காரியமாக இருந்தாலும் அதைச்செய்யும் வாய்ப்பு யாருக்கெல்லாம் கிடைகின்றதோ அவர்கள் அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு நன்மையின் எடை கனத்த நிலையில் மறுமையில் தன் ரப்பை (இரட்சகனை) சந்தித்து சுவனத்தை அடையவேண்டும் அவர்தான் வெற்றி பெற்றவராவார்.

http://www.islamkalvi.com/?p=125364


--

ஞாயிறு, 16 ஜனவரி, 2022

யாரைப் புகழ்வது வணக்கம்?

நபி (ﷺ) அவர்கள் வபாத்தான தினத்தைப் பிறந்த தினமாகக் கொண்டாடும் சகோதரர்கள் ரபீஉல் அவ்வல் பிறை பன்னிரெண்டில் மௌலித் மஜ்லிஸ் போன்ற விசேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதை ஓர் இபாதத்தாக செய்து வருகின்றார்கள். இது பற்றிய தெளிவுகளை அவர்களுக்கு நாம் வழங்கினால் நபிகளாரை புகழக்கூடாதா…? நபிகளாரின் புகழை மேலோங்கச் செய்வதை எப்படி பித்அத் , ஷிர்க் என்று சொல்லுவீர்கள்? என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள்.

நபி (ﷺ) அவர்களைப் புகழுங்கள் என்று அல்லாஹ்வோ, அவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ சொல்லி உள்ளதாக வஹியிலிருந்து ஒரு செய்தி இவர்களால் காட்ட முடியுமா…? எனக் கேட்டால் நிச்சயமாக முடியாது.

இந்தக் கேள்விக்கு இவர்கள் கேட்கும் எதிர்க் கேள்வி அல்லாஹ் நபி (ﷺ) அவர்களின் மீது ஸலவாத் சொல்லும்படிக் கூறி உள்ளானே..? அப்படி இருக்க நீங்கள் எப்படிப் புகழக்கூடாது என்று கூறுவீர்கள் .? என்ற அடிப்படையிலாக இருக்கும்.

இதற்கான எமது பதில்.

1) நபிகளாரின் புகழை நாம் மேலோங்கச் செய்ய வேண்டிய தேவை எமக்கில்லை அல்லாஹ் அதை செய்து முடித்து விட்டான்.

وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَ

மேலும், உமக்காக உம் புகழினை உயர்த்தினோம்.
(அல்குர்ஆன் : 94:4)

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ

107. (முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.

திருக்குர்ஆன் (21:107)

நபி (ﷺ) அவர்கள் தனக்குள்ள பெயர்களைக் கூறும் போது இவ்வாறு கூறினார்கள்.

எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன.

1: நான் முஹம்மது – புகழப்பட்டவர் – ஆவேன்.

2: நான் அஹ்மத் – இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன்.

3: நான் மாஹீ – அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான்.

4: நான் ஹாஷிர் – ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள்.

5:நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன்.

என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹ் புகாரி)

நபிகளார் தன்னைப் பற்றிக் கூறும் போது ஏற்கனவே தான் புகழப்பட்டவர் என்று கூறுகின்றார் முன்னைய வேதங்களில் அவரின் பண்புகள் கூறப்பட்டிருந்ததை நாம் அறிவோம்.

عن عبد الله بن عمرو رضي الله عنهما قال: "قرأت في التوراة صفة النبي صلى الله عليه وسلم: محمد رسول الله، عبدي ورسولي، سميته المتوكل، ليس بفظ ولا غليظ" رواه البخاري.

அதா இப்னு யஸார் (ரஹ்) அறிவித்தார்.

நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து 'தவ்ராத்தில் நபி( ﷺ) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வர்ணனையை எனக்குச் சொல்லுங்கள்!' என்றேன். அவர்கள், 'இதோ சொல்கிறேன்!

அல்லாஹ்வின் மீது ஆணையாக! குர்ஆனில் கூறப்படும் அவர்களின் சில பண்புகள் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளன.

'நபியே! நிச்சயமாக உம்மை சாட்சியளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம்!

நீர் என்னுடைய அடிமையும் என்னுடைய தூதருமாவீர்!

المُتَوَكِّلُ

தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன்!'

(இவ்வாறெல்லாம் கூறிவிட்டு, நபி (ﷺ) அவர்களின் அடையாளங்களைக் கூறும் விதத்தில்)

1 'அவர் கடின சித்தம் கொண்டவராகவோ, முரட்டுத்தனமுடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசிச் சச்சரவு செய்பவராகவோ இருக்க மாட்டார்!

2 தீமைக்குப் பதிலாகத் தீமையைச் செய்யமாட்டார்; மாறாக, மன்னித்துக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்!

3: அவர் மூலம் வளைந்த மார்க்கத்தை நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவ(ரின் உயி)ரைக் கைப்பற்ற மாட்டான்! மக்கள் 'லாயிலாஹ இல்லல்லாஹு' என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும், செவிட்டுக் காதுகளும், மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும்!' என்று அதில் அவர்களைக் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது!' என பதிலளித்தார்கள்.

(ஸஹீஹ் புகாரி 2125 )

நான் முஹம்மத் புகழப்பட்டவன் எனக் கூறிவிட்டு அடுத்ததாக நபிகளார் சொல்லும் செய்தி நான் அஹ்மத் இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன் என்று தான் கூறுகின்றார்களே தவிர தன்னை அதிகம் புகழுமாறு கூறவில்லை.

2) நபி (ﷺ) அவர்களைப் புகழ்வதைப் பொதுவாக இரண்டு விதத்தில் நோக்க முடியும்

1: நபி (ﷺ) அவர்களின் வாழ்கையில் நடந்த நிகழ்வுகளைக் கூறி மக்களுக்கு உபதேசம் செய்தல். இதன் போது உத்தமத் தூதரின் பரிசுத்த வாழ்கையில் நடந்தவற்றை உள்ளதை உள்ளபடி புகழ்ந்து பேசுதல். இது அனுமதிக்கப்பட்ட காரியம். இது நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் என்ற பகுதியில் உள்ள ஓர் இபாதத்தாகும். பல நபித்தோழர்கள் நபிகளாரின் அழகிய வாழ்வு பற்றிக் கூறியுள்ள செய்திகள் இதற்குச் சிறந்த சான்றாகும்.

4625. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அவர்கள் ஒருபோதும் என்னிடம் "இன்னின்னதை நீ ஏன் செய்தாய்?" என்று கேட்டதாக எனக்குத் தெரியவில்லை; அவர்கள் எதற்காகவும் என்னை ஒருபோதும் குறை கூறியதுமில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்

لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا

உண்மை யாதெனில், உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருந்தது. உங்களில் அல்லாஹ்வையும், மறுமைநாளையும் நம்புகின்றவராகவும், அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருபவராகவும் இருக்கின்ற ஒவ்வொருவர்க்கும்!
(அல்குர்ஆன் : 33:21)

நபி (ﷺ) அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த விடயங்களைப் பாடலாகப் படித்து அவர்களைப் புகழ்வது வணக்கம் கிடையாது. நபி (ﷺ) அவர்களின் முன்மாதிரிகளை வாழ்கையில் எடுத்து நடப்பதே வணக்கமாகும்.

2: நபி(ﷺ) அவர்களைப் புகழ்வதை ஒரு வணக்கமாக எடுத்துக் கொண்டு அதற்காக அல்லாஹ்வின் இடத்துக்கு நபி (ﷺ) அவர்களை உயர்த்தி அல்லாஹ்வின் பண்புகளை நபி ( ﷺ) அவர்களுக்கு வழங்கும் விதமான வாசகங்களைக் கொண்ட கவிதைகளைக் கட்டி மக்களை ஒன்று திரட்டி அந்தக் கவிதைகளை நபிகளாரை புகழுகிறோம் என்ற பெயரில் பாடலாகப் படிப்பது ஷிர்க்காகும். இத்தகைய புகழ்ச்சியை நபி (ﷺ) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

ஆயிஷா(ரலி) அவர்கள், 'முஹம்மத் (ﷺ) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் அறிவிக்கிறவர் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ 'கண்பார்வைகள் அவனை எட்ட முடியாது' என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 06:103). மேலும், முஹம்மத் (ﷺ) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என உங்களிடம் அறிவிக்கின்றவரும் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ 'அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறியமாட்டார்' என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 27:65)' என்றார்கள்.

(ஸஹீஹ் புகாரி 7380)

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் இப்னி அஃப்ரா(ரலி) (காலித் இப்னு ஃதக்வான்(ரஹ்) அவர்களிடம்) கூறினார்.

எனக்குக் கல்யாணம் நடந்த நாள் (காலை) நபி (ﷺ) அவர்கள் (எங்கள் வீட்டுக்கு) வந்தார்கள். எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி(ﷺ) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்தார்கள். (அங்கு) சில (முஸ்லிம்) சிறுமியர் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக்கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட எம் முன்னோரைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒரு சிறுமி, 'எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்" என்று கூறினாள். உடனே, நபி( ﷺ) அவர்கள், '(இப்படிச் சொல்லாதே!) இதை விட்டுவிட்டு முன்பு நீ சொல்லிக்கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்!" என்று கூறினார்கள்.
(ஸஹீஹ் புகாரி 5147)

3) நபி( ﷺ) அவர்கள் மீது ஸலவாத் கூறுவது என்பது நாம் கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு இபாதத்தாகும். ஆனால் ஸலவாத் என்பது நாம் அவர்களுக்காகச் செய்யும் பிரார்த்தனையே ஒழிய புகழாரம் கிடையாது. என்பதை அதன் பொருளைப் படிக்கும் குர்ஆன் மத்ரஸா மாணவனும் அறிந்து கொள்ள முடியும்.

ஒரு முறை நபி(ﷺ) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களே உங்கள் மீது 'ஸலாம்" உரைப்பதை அறிந்து வைத்துள்ளோம். ஆனால் 'ஸலவாத்" சொல்வது எவ்வாறு என்று கேட்டோம். இதனை செவியுற்ற நபி(ﷺ) அவர்கள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். பின்னர் '

اللّهمّ صلّ على محمّد وعلى آل محمّد كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم إنّك حميد مجيد ، اللّهمّ وبارك على محمّد وعلى آل محمّد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنّك حميد مجيد

எனக் கூறும்படி கூறினார்கள் புகாரி, நஸயீ, இப்னுமாஜா, அபூதாவூத் – கஃப் இப்னு உஜ்ரா (ரலி).

பொருள்: இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள்புரிந்ததைப் போல் முஹம்மத் (ﷺ) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனும், கண்ணியத்திற்குரியவனுமாவாய்.

இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் பரக்கத் (அபிவிருத்தி) செய்தது போல் முஹம்மத் (ﷺ) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அபிவிருத்தியை(பரக்கத்தை) அருள்வாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும், கண்ணியத்திற்குரியவனுமாவாய்.

நபி (ﷺ) அவர்களைப் புகழ்வதை இஸ்லாம் ஒரு அமலாக இபாதத்தாகச் சொல்லவில்லை மாறாக நபி( ﷺ) அவர்களைப் பின்பற்றுவதையே இஸ்லாம் வணக்கமாகக் கூறி உள்ளது. அதுவே நபிகளாரை நேசிப்பதற்கான அடையாளமும் கூட.

4).அளவுக்கதிகமாக ஒருவர் மற்றவரைப் புகழ்வதை நபி (ﷺ) வெறுத்தார்கள்.

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ﷺ) அவர்கள், ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அளவுக்கதிகமாகப் புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பதைச் செவியுற்றார்கள். அப்போது நபி (ﷺ) அவர்கள், "அந்த மனிதரின் முதுகை அழித்துவிட்டீர்களே! அல்லது முறித்துவிட்டீர்களே" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5729.

ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்களைப் புகழ்ந்து பேசலானார். அப்போது மிக்தாத் பின் அம்ர் (ரலி) அவர்கள் அவரை நோக்கிச் சென்று முழந்தாளிட்டு அமர்ந்து, அவரது முகத்தில் பொடிக்கற்களை அள்ளி வீசலானார்கள். மிக்தாத் (ரலி) அவர்கள் உடல் பருமனான மனிதராயிருந்தார்கள். (எனவே தான், முழந்தாளிட்டு அமர்ந்தார்கள்.)
அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் அவரைப் பார்த்து, "உமக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டார்கள். அதற்கு மிக்தாத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ﷺ)
அவர்கள், "அளவுக்கதிகமாகப் புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களுடைய முகங்களில் மண்ணை அள்ளி வீசுங்கள்" என்று கூறினார்கள்" என்றார்கள்.
அறிவிப்பவர் மிக்தாத் (ரலி)
ஸஹீஹ் முஸ்லிம் : 5731.

5) இறந்த மனிதரின் நற்செயல்களைப் பற்றிப் புகழ்து பேச அனுமதியுண்டு:

அனஸ்(ரலி) அறிவித்தார்கள்.

ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி(ﷺ) அவர்கள், 'உறுதியாகிவிட்டது' என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி(ﷺ) அவர்கள், 'உறுதியாகிவிட்டது?' எனக் கூறினார்கள். உமர்(ரலி) 'எது உறுதியாகிவிட்டது?' எனக் கேட்டதும் நபி(ﷺ) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்' எனக் கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி : 1367.

இறந்தவர் உலகில் செய்த நற்கருமங்களைப் பற்றிப் பேசுவது நாம் அவருக்குச் செய்யும் ஒரு பிரார்த்தனை போன்ற ஒரு காரியமாகும். வானவர்கள் அதற்கு ஆமீன் கூறுவார்கள்.

6) புகழ்வதற்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே.

அல்லாஹ்வின் தூதர் (ﷺ)அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும், மாண்பும் மிக்க அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமில்லை. அதனால்தான்,அவன் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டுள்ளான். அல்லாஹ்வைவிட அதிகத் தன்மானமுள்ளவர் வேறெவருமில்லை. ஆகவேதான், மானக்கேடான செயல்களுக்கு அவன் தடை விதித்துள்ளான். அல்லாஹ்வைவிட அதிகமாகத் திருந்துவதற்கு வாய்ப்பு அளிப்பதை விரும்பக்கூடியவர் வேறெவருமில்லை. அதனால்தான், அவன் வேதங்களை அருளினான்; தூதர்களை அனுப்பினான்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 5328.

இப்னு மஸ்ஊத் ரழி அறிவித்தார்கள்.

'அல்லாஹ்வை விட அதிக ரோஷமுடையவர் வேறெவருமில்லை. எனவேதான் மானக் கேடான செயல்களில் வெளிப்படையானவை, மறைவானவை அனைத்தையும் அவன் தடைசெய்துள்ளான். மேலும், அல்லாஹ்வை விட அதிகமாகப் புகழ்ச்சியை விரும்பக்கூடியவர் வேறெவரும் இல்லை. எனவே, தான் அவன் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டுள்ளான்' என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 4637.

புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவனே அவனையே நாம் புகழ வேண்டும். அவன் தன்னைப் புகழ்வதை விரும்புகிறான். அதை அடியார்கள் மீது கடமையாக்கி உள்ளான்.

7) உயிரை விட மேலாக நபி (ﷺ) அவர்களை நேசிப்போம்.

النَّبِيُّ أَوْلَىٰ بِالْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ ۖ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ ۗ

6. நம்பிக்கை கொண்டோருக்குத் தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர்..

திருக்குர்ஆன் 33:6

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆகமாட்டார்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலிலி)
நூல் : புஹாரி (15)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்த வராவார். (அவை:)

1. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதனையும்விட அதிக நேசத்திற்குரியோராவது.

2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.

3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலிலி)
நூல் : புஹாரி (16)

8) நபிகளாரை நேசிப்பது அவர்களைப் பின்பற்றுவதாகும். கவிதைகளைக் கொண்டு புகழ்வது நேசிப்பதாக ஆகிவிடாது.

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ

(நபியே! மக்களிடம்) நீர் கூறுவீராக: "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுடைய பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் பெரும் கருணையுடையவனுமாவான்."
(அல்குர்ஆன் : 3:31)

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.
எவர் எனக்குக் கீழ்ப்படிந்தாரோ அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந் தவராவார். எவர் எனக்கு மாறு செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவராவார்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
நூல் : புஹாரி (2957)

9) நபிகளாரின் மீதான நேசத்தை வெளிப்படுத்துவது எப்படி?

பாங்கு சொல்லும் போது அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்பதை செவியுற்றால் இரு கட்டைவிரல்களையும் கண்களில் ஒத்திக்கொள்ளுதல், முஹம்மது என்று அட்டையில் எழுதி வீட்டு வாயலில் மாட்டி வைத்தல் போன்ற காரியங்கள் நபிகளாரை நேசிப்பதின் அடையாளமாக ஆகுமா என்றால் ? நிச்சயமாக இல்லை.

உண்மையான நேசம் எது தெரியுமா?

قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ‌ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ

(நபியே!) நீர் கூறுவீராக: "உங்கள் தந்தையர், உங்கள் பிள்ளைகள், உங்கள் சகோதரர்கள், உங்கள் மனைவியர், உங்களுடைய உறவினர்கள், நீங்கள் சம்பாதித்த செல்வங்கள் மற்றும் தேக்கநிலை ஏற்பட்டுவிடுமோ என நீங்கள் அஞ்சுகின்ற உங்களுடைய வணிகம், மற்றும் உங்களுக்கு விருப்பமான இல்லங்கள் ஆகியவை அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும்விட அவன் வழியில் போராடுவதைவிட உங்களுக்கு நேசமானவையாயிருந்தால்,

அல்லாஹ் தன்னுடைய தீர்ப்பினை (உங்களிடம்) செயல்படுத்தும் வரை நீங்கள் எதிர்பார்த்திருங்கள்! அல்லாஹ் தீய சமுதாயத்துக்கு நேர்வழி காட்டுவதில்லை."
(அல்குர்ஆன் : 9:24)

எமது வியாபாரம், எமது மனைவியர் , எமது பிள்ளைகள் , உற்றார் உறவினர்கள், எமது விருப்புக்கள், அனைத்தையும் விட உலகமே எம்மை எதிர்த்து நின்றால் கூட அல்லாஹ்வையும், றஸுலையுமே நாம் நேசிக்க வேண்டும். அப்போது தான் நபிகளாரை உண்மையில் நாம் நேசித்தவர்களாக ஆக முடியும்.

وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا نَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا‌ وَاتَّقُوا اللّٰهَ ‌ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‌ۘ

மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.
(அல்குர்ஆன் : 59:7)

ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ﷺ)
அவர்கள், "என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?" என்று கேட்டார்கள். நபி (ﷺ) அவர்கள், "எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்" என்று பதிலலித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)
நூல் : புஹாரி (7280)

வருடத்தில் ஒரு முறை நபிகளாரின் புகழைப்பாடி நினைவு கூற நபி( ﷺ) அவர்கள் ஒன்றும் கட்சித் தலைவர் கிடையாது. அவர் அல்லாஹ்வின் உத்தமத் தூதர் அவரின் வாழ்கை வழிமுறைகளை அணுவணுவாக வாழ்கையில் கடைபிடிப்பது ஒவ்வொருவர் மீதும் நாளாந்தக் கடமையாகும்.

மர்யமின் மகன் ஈஸாவை நஸாராக்கள் அளவு கடந்து புகழ்வதைப் போன்று என்னைப் புகழாதீர்கள், நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியான், (என்னை) அல்லாஹ்வின் அடியார், தூதரென்று மாத்திரமே சொல்லுங்கள்' என நபிகளார்(ﷺ) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 6830).

இவற்றைப் புரிந்து கொண்டு கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை அளவுகடந்து புகழ்ந்து அல்லாஹ்வின் மகன் என்று சொல்லி இன்று பிறந்ததினம் கொண்டாடுவதற்கு ஒப்பாக நபிகளாரை ஷிர்க்கான வாசகங்களைக் கொண்டு அளவுகடந்து புகழ்ந்து கவிதைபாடி பிறந்த தினக் கொண்டாட்டத்தை நிகழ்த்தும் சகோதரர்கள் நேர்வழியின்பால் மீள முயற்சிக்க வேண்டும்.

நபிகளாரை உண்மையிலே நேசித்த ஸஹாபாக்கள் நபிகளாரைப் புகழ அதற்கென மஜ்லிஸ்களை ஏற்படுத்தவுமில்லை. பிறந்த தினக் கொண்டாட்டங்களைக் கொண்டாடவுமில்லை. இத்தகைய பித்அத்துக்கள் அனைத்தும் ஹிஜ்ரி 600க்குப்பின் பாதிமிய்யாக்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட பித்அத்துக்களாகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்

http://www.islamkalvi.com/?p=125367


--

வியாழன், 13 ஜனவரி, 2022

சிறந்த ஆசிரியர் நபிகள் நாயகம்ﷺ அவர்கள்

படைப்பாளன் அல்லாஹ்வால் மனித குலத்தை இணைவைப்பிலிருந்தும், சமூகச் சீர்கேடுகளிலிருந்தும் பாதுகாப்பதற்காகத் தான் இப்பூமிக்கு இறுதித் தூதர் முஹம்மத் (ﷺ) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்களுக்கு அருளப்பட்ட வேதம் அல் குர்ஆனாகும். இறைவனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி அகிலத்தாரை அல் குர்ஆனின் பக்கம் அதனைக் கற்றுக் கொடுத்து அழைக்கும் பணியாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்.

يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ۖ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ ۚ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ ۗ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக.! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்.! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.

அல் குர்ஆன் 5:67

وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ

நபியே நீர் மக்களுக்கு அருளப்பட்டதை அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு நாம் அருளினோம்.

அல் குர்ஆன் 16:44

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அவர்களுக்கு அருளப்பட்ட வஹியை (அல் குர்ஆனை) அழகிய முறையில் மக்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள். அது மாத்திரமின்றி தனது வாழ்கையையும் அல் குர்ஆனிய வாழ்கையாக வாழ்ந்து காட்டினார்கள். செருப்பணிவது முதல் ஆட்சி அதிகாரம் வரை அனைத்துக்குமான வழிகாட்டல்களை நபிகளார் எமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹ் சொல்லுகிறான்.

لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

அல் குர்ஆன் 33:21

ஒரு ஆசிரியரிடம் எப்படியான பண்புகள் இருக்க வேண்டும். மாணவர்களை எப்படி வழிநடாத்த வேண்டும். என்று நபிகளாரின் முன்மாதிரிகளிலிருந்து ஆசிரியர்களுக்கான சில வழிகாட்டல்கள்.

1) கல்வி கற்பதை ஆர்வமூட்டல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)
யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்று கூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
.
ஸஹீஹ் முஸ்லிம் : 5231.

'எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான்..
ஸஹீஹ் புகாரி : 71.

அல் குர்ஆனைத் தானும் கற்றுப் பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: உஸ்மான்(ரலி) புகாரி

'ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும், கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 73

ஒவ்வொரு மாணவனுக்கும் கல்வியின் சிறப்பு பற்றி அறிவுரை கூறி ஆர்வத்தோடு கற்க முயற்சி செய்யத் தூண்டுவது ஆசிரியர்களிடம் இருக்க வேண்டிய முக்கியப் பண்பாகும்.

2) மாணவர்களை அமைதியாக
செவிதாழ்திக் கேட்கவைத்தல்.

'நபி(ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) என்னிடம் 'மக்களை அமைதியுடன் செவி தாழ்த்திக் கேட்கும் படி செய்வீராக!' என்று கூறினார்கள். (மக்கள் அமைதியுற்ற பின்னர்) 'எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடவேண்டாம்' என்று கூறினார்கள்' என ஜரீர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 121.

நபிகளார் தனது இருபத்தி மூன்று வருட காலப் பிரச்சாரத்தையும் இரத்தினச் சுருக்கமாக நினைவு கூறிய அரபாப் பேருரையை துவங்க முன் முதலில் மக்களை அமைதிப்படுத்தினார்கள். ஒரு பாடத்தை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க முன் மாணவர்களை அமைதிப்படுத்துவது ஆசிரியரிடம் இருக்க வேண்டிய முக்கிய பண்பாகும்.

3) உரத்த குரலில் கற்றுக் கொடுத்தல்.

'நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் வுளூச் செய்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) 'குதி கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் .

ஸஹீஹ் புகாரி : 60.

(பெருநாள் தினத்தில்)
'பெண்களுக்குக் (தம் உரையைக்) கேட்க வைக்க முடியவில்லை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கருதி, பிலால்(ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்குச் சென்று அறிவுரை கூறினார்கள்..
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 98.

சில ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பது முன் வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் கேட்கக் கூடியதாக இருக்கும். ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் போது குரலை உயர்த்தி மாணவர்கள் அனைவரும் கேட்கும் விதமாக ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.

4) மாணவர்கள் மறந்து விடாது சரி வரக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரே விடயத்தை மூன்று முறை மீட்டிக் கூறுதல்.

அபூ பக்ரா (ரலி) அறிவித்தார்கள்.

(ஒரு முறை) 'பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், 'ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)' என்றார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், '
அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்
பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)' என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, 'அறிந்து கொள்ளுங்கள்; பொய் சாட்சியமும் (மிகப் பெரும்பாவம்) தான்' என்று கூறினார்கள். 'நிறுத்திக் கொள்ளக் கூடாதா' என்று நாங்கள் சொல்கிற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள்.

ஸஹீஹ் புகாரி : 2654.

'நபி (ஸல்) அவர்கள் ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் அது அவர்களிடமிருந்து நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதைத் திரும்பக் கூறுவார்கள். ஏதாவது ஒரு சமூகத்தாரிடம் சென்றால் மும்முறை ஸலாம் கூறுவார்கள்' அனஸ்(ரலி)அவர்கள் அறிவித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 95.

5) மாணவர்களின் அறிவுத்திறனை
வளர்ப்பதற்காக சிந்திக்கத் தூண்டும் கேள்விகளைக் கேட்டு பதிலைக் கற்றுக் கொடுத்தல்.

'மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டபோது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம் தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் இறைத்தூதர் அவர்களே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்' எனத் தோழர்கள் கேட்டதற்கு, 'பேரீச்சை மரம்' என்றார்கள்' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 62.

புத்தகத்தில் இருப்பதை அப்படியே வாசித்து விளக்கிவிட்டுச் செல்லாது மாணவர்களை சிந்திக்கத்தூண்டும் கேள்விகளினூடகக் கற்பிப்பது மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் வழிமுறையாகும்.

6) மாணவர்கள் சலிப்படையாது ஆர்வத்தோடு கல்வி கற்கும் விதத்தில் கற்றுக் கொடுக்க வேண்டும்.

'இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 69.

'எங்களுக்குச் சலிப்பேற்பட்டு விடக் கூடும் என்று அஞ்சிப் பல்வேறு நாட்களிலும் கவனித்து எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அறிவுரை வழங்குபவர்களாக இருந்தார்கள்' என இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.
ஸஹீஹ் புகாரி : 68.

'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள். அப்போது (ஒரு நாள்) ஒருவர் அவர்களிடம் 'அபூ அப்துர் ரஹ்மானே! தாங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அறிவுரை பகர்ந்திட வேண்டும் எனப் பெரிதும் விரும்புகிறேன்' என்றார். அதற்கு (உங்களைச் சலிப்படையச் செய்து விடுவேனோ என்று அஞ்சுவதுதான் இதைவிட்டும் என்னைத் தடுக்கிறது. நான் உங்களுக்குச் சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன். அவ்வாறு தான் நபி(ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறிவந்தார்கள்' என்றார்' எனஅபூ வாயில் அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 70.

இன்று சிறு வயது முதல் கல்வியின் பெயரால் காலை, மதியம் , மாலை, இரவு என எல்லா நேரங்களிலும் மாணவர்கள் ஓய்வின்றி கல்விக்காக அழைவதை நாம் காண்கிறோம் . இருபத்தி நான்கு மணிநேரமும் படி படி என்று மாணவர்களை வற்புறுத்துவது கல்வியில் ஒருவித வெறுப்பை ஏற்படுத்தும் காரியமாகும் என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

7) மாணவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக உவமைளைக் கூறிக் கற்றுக் கொடுத்தல்.

'அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன் படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தம் கால் நடைகளுக்கும்) புகட்டினார்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும் நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 79.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கிறவனின் நிலையையும், (உலைக் களத்தில்) உலை ஊதுகிறவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக் கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால் உலை ஊதுபவனோ ஒன்று உன்னுடைய ஆடையை எரித்துக் கரித்துவிடுவான்; அல்லது (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய்.
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 5534.

நேரடியாக ஒரு விடயத்தை விளக்குவதை விட உதாரணங்களைக் கூறி விளக்கும் போது அது மனதில் ஆலமாகப் பதியும். அதனால் தான் அல்லாஹ்வும் அவனது தூதரும் பல விடயங்களை சம்பவங்கள், மற்றும் உதாரணங்களைக் கூறி எமக்குத் தெளிவு படுத்தியுள்ளார்கள். இப்படியான முறைகள் ஆசிரியர்களாகிய எம்மிடம் இருக்க வேண்டும்.

8) சபையில் தவறு செய்யும் மாணவர்களின் தவறை அழகிய முறையில் திருத்திக் கொடுத்தல்.

முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது (தொழுதுகொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் "யர்ஹமுக் கல்லாஹ்" (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி) கூறினேன்.

உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் "என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?" என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள்.

அவர்களுக்கு முன்னரோ, பின்னரோ அவர்களை விட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை.

அல்லாஹ்வின் மீதாணையாக!
அவர்கள் என்னைக்
கண்டிக்கவுமில்லை..
அடிக்கவுமில்லை..
திட்டவுமில்லை…

(மாறாக,) அவர்கள்,
"இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று"

"தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும்
குர்ஆன் ஓதுவதுமாகும்"

என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள்.

நான், "அல்லாஹ்வின் தூதரே!
நான் அறியாமைக் காலத்திற்கு நெருக்கமானவன். அல்லாஹ் இந்த இஸ்லாத்தை வழங்கினான். எங்களில் சிலர் சோதிடர்களிடம் செல்கிறார்களே?" என்றேன்.

அதற்கு அவர்கள் "சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்" என்றார்கள்.

நான் "எங்களில் இன்னும் சிலர் பறவையை வைத்துக் குறி பார்க்கிறார்களே?" என்றேன். அதற்கு நபியவர்கள் "இது, மக்கள் தம் உள்ளங்களில் காணும் (ஐதீகம் சார்ந்த) விஷயமாகும். ஆனால், இது "அவர்களை" அல்லது"உங்களை" (செயலாற்றுவதிலிருந்து) தடுத்திட வேண்டாம்" என்று கூறினார்கள்.

நான், "எங்களில் இன்னும் சிலர் (நற்குறி அறிய மணலில்) கோடு வரை(யும் பழங்கால கணிப்பு முறையை மேற்கொள்)கின்றனர்" என்றேன். அதற்கு அவர்கள், "நபிமார்களில் ஒருவர் இவ்வாறு கோடு வரைந்துவந்தார். யார் அவரைப் போன்று கோடு வரைகிறாரோ அது (சாத்தியம்)தான்" என்றார்கள்.

அடுத்து என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அவள் என் ஆட்டு மந்தையை (மதீனாவிற்கு அருகிலுள்ள) உஹுத் மலை மற்றும் (அதையொட்டி அமைந்துள்ள) ஜவ்வானிய்யாப் பகுதியில் மேய்த்து வந்தாள்.

ஒரு நாள் நான் சென்று பார்த்தபோது ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடுகளில் ஒன்றைக் கொண்டு சென்றுவிட்டது. (சராசரி) மனிதன் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப்பட்டேன். ஆயினும், அவளை நான் அறைந்துவிட்டேன். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது அது குறித்து அவர்கள் என்னைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.

நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவளை விடுதலை செய்து விடட்டுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்துவாருங்கள்!" என்று சொன்னார்கள்.

நான் அவளை அழைத்துச் சென்றபோது அவளிடம், "அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?" என்று நபியவர்கள் கேட்டார்கள்.

அவள், "வானத்தில்" என்று பதிலளித்தாள்.

நபி அவர்கள், "நான் யார்?" என்று கேட்டார்கள்.

அவள், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர்" என்றாள்.

அவர்கள் (என்னிடம்), "அவளை விடுதலை செய்துவிடுங்கள்! ஏனெனில், அவள் இறைநம்பிக்கையுடைய (முஃமினான) பெண் ஆவாள்" என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

  • மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
    ஸஹீஹ் முஸ்லிம் : 935.

நான் நபி (ஸல்) அவர்களின் பராமரிப்பில் சிறு குழந்தையாக இருக்கும் போது என் கை சாப்பிடும் பாத்திரத்தின் பக்கம் சென்றது, அப்போது நபியவர்கள், பையனே! பிஸ்மி சொல்லி சாப்பிடு, இன்னும் வலது கையால் சாப்பிடு, உனக்குப் பக்கத்தில் உள்ளதைச் சாப்பிடு, என எனக்குக் கூறியதாக உமர் இப்னு அபூஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
புகாரி, முஸ்லிம்

ஆசிரியர்களிடம் இருக்கும் மிக மோசமான பண்புகளில் ஒன்று தான் மாணவர்கள் தவறு செய்யும் போது அவர்களின் சுய கவ்ரவம் பாதிக்கும் விதத்தில் ஒருமையான வார்தைகளினூடாக சக மாணவர்களின் முன்னிலையில் ஏசுவது ,அடிப்பது , கடுகடுப்பது, அவமானப்படுத்துவது. இது போன்ற பண்புகள் மாணவர்களை மணம் புண்பட வைத்து பாடசாலையையும், படிப்பையும், ஆசிரியர்களையும் வெறுக்கும் அளவுக்கு மாற்றுகின்றது. இப்படியான முறைகளை பேராசிரியர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களை உயிராக நேசித்த தோழர்களிடமோ, அவர்களை வெறுத்தவர்களிடமோ காட்டவில்லை. நபிகளார் தவறுகளை அழகிய முறையில் திருத்திக் கொடுத்துள்ளார்கள்.

9) கட்டுப்படாத மாணவர்களைக் கண்டித்தல்.

குழந்தைகள் ஏழு வயதை அடையும் போது அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்! பத்து வயதை அடைந்து விட்டால் அடித்தாவது தொழ வையுங்கள்! என நபி (ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அம்ர் பின் ஷுஐப் -ரலி, நூல் : அபுதாவூத்)

وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا [النساء/34]

பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால்

1:அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! 2:படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! 3:(காயங்கள் ஏற்படாதவாரு)அவர்களை அடியுங்கள்!

அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:34
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களில் ஒருவர் (எவரையாவது தக்க காரணத்துடன்) தாக்கினால் முகத்(தில் அடிப்ப)தைத் தவிர்க்கட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 2559

இன்றைய உளவியலாளர்கள் மாணவர்களை அடிக்கவே கூடாது, கண்டிக்கவே கூடாது. அவர்கள் போக்கில் அவர்களை விட்டுவிட வேண்டும் என்று சொல்கின்றார்கள் . உண்மையில் இக்கூற்று நடைமுறை சாத்தியமற்ற கூற்றாகும். மாணவர்கள் வரம்பு மீறி ஒழுக்கக் கேடான காரியங்களில் ஈடுபடும் போது பெற்றோரின் ஆலோசனையுடன் காயங்கள் ஏற்படாத முறையில் அவர்களை திருத்த வேண்டும் எனும் நோக்கில் அடிப்பது தவறில்லை என்பதை மேலுள்ள குர்ஆன் வசனமும் ஹதீஸும் சொல்கின்றது. இதற்காக எடுத்ததற்கெல்லாம் அடிப்பது முறையில்லை அது அரக்கக் குணமாகும். சில ஆசிரியர்கள் மாணவர்கள் தப்புப்பன்னினால் கண்ணத்தில் அரைவதை வழக்கமாக் கொண்டுள்ளனர் இது தடுக்கப்பட்ட காரியமாகும்.

10) அறியாமையின் விபரீத விளைவுகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், மக்களி(ன் மனங்களி)லிருந்து கல்வியை ஒரேயடியாகப் பறித்துக்கொள்ள மாட்டான். மாறாக,கல்விமான்களைக் கைப்பற்றிக் கொள்வதன் மூலம் கல்வியைக் கைப்பற்றுகிறான். இறுதியில் ஒரு கல்வியாளரைக்கூட அவன் விட்டுவைக்காதபோது, மக்கள் அறிவீனர்களையே தலைவர்களாக ஆக்கிக்கொள்வார்கள். அவர்களிடம் கேள்வி கேட்கப்படும். அறிவில்லாமலேயே அவர்கள் தீர்ப்பு வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழிதவறி, பிறரையும் வழிதவறச் செய்வார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 5191.

'எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். 'கல்வி குறைந்து போய் விடுவதும் அறியாமை வெளிப்படுவதும் வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பதும் ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வகிக்கும் ஒரே ஆண் என்ற நிலமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுதியாவதும் ஆண்கள் குறைந்து விடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்' என்று இறைத்தூதர் (ஸல்) கூறக் கேட்டிருக்கிறேன். என அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 81.

மாணவர்கள் கல்வி கற்பதில் ஆர்வம் கொள்ளும் விதமாக அவர்களுக்கு அறியாமையின் பின் விளைவுகளைப் பற்றி ஞாபகமூட்டுவது அவசியமாகும்.

11) கேள்வி கேட்கும் மாணவர்களுக்கு செவிதாழ்த்தி பதில் கூறுதல்.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சொற்பொழிவு மேடைமீது அமர்ந்தார்கள். அவர்களைச் சுற்றி நாங்களும் அமர்ந்தோம். அப்போது அவர்கள் "எனக்குப் பின், உங்களிடையே இவ்வுலகின் கவர்ச்சியும், அதன் அலங்காரங்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதானது, உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகின்றவற்றில் ஒன்றாகும்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் எனும்) நன்மை, தீமையை உருவாக்குமா?" என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாக இருந்தார்கள்.

அப்போது அந்த மனிதரிடம் "உமக்கு என்ன ஆயிற்று? நீர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேச்சுக் கொடுக்கிறீர். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!" என்று கேட்கப்பட்டது.

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மௌனம் தொடருவதைக் கண்ட)நாங்கள் அவர்களுக்கு இறைஅறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது என்று கருதினோம். பிறகு அவர்கள் இயல்பு நிலைக்கு வந்து தம்மீதிருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துவிட்டு, "இந்தக் கேள்வி கேட்டவர் (எங்கே?)" என்று (அவரைப் பாராட்டுவதைப் போல) கேட்டார்கள்.

பின்னர், ""நன்மையால் நன்மையே விளையும். வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை), வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவிற்குச் சென்று விடுகின்றன. பச்சைப் புற்களைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை. ஏனெனில்,) அது (பச்சைப் புற்களைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, சூரியனை நேராக நோக்கி(ப் படுத்துக்கொண்டு அசை போடுகின்றது); சாணமிட்டு சிறுநீரும் கழிக்கின்றது. பின்னர் (வயிறு காலியானவுடன் மீண்டும் சென்று) மேய்கிறது.

இந்த (உலகின்) செல்வம் இனிமையும், பசுமையும் உடையதாகும். ஒரு முஸ்லிம் தமது செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அ(வரது செல்வமான)து அவருக்குச் சிறந்த தோழனாகும்.-(இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்) அல்லது அவர்கள் கூறியதைப் போன்று.- யார் முறையற்ற வழிகளில் செல்வத்தை எடுத்துக்கொள்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார். மேலும், மறுமை நாளில் அந்தச் செல்வம் அவருக்கு எதிரான சாட்சியாக அமையும்" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1901.

சில ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பார்கள் ஆனால் மாணவர்கள் எதிர் கேள்வி கேட்பதை விரும்பமாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டவரைத் தேடியறிந்து பதில் கூறும் வழக்கமுடையவராக இருந்துள்ளார்கள்.

12) வினவப்பட்டதை விட விரிவாக பதில் கூறுதல்.

'ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் அணிய வேண்டிய ஆடைகளைப் பற்றிக் கேட்டதற்கு, 'சட்டை, தலைப்பாகை, கால்சட்டைகள், முக்காடு (அல்லது தொப்பி), பச்சைச் சாயம் தோய்த்த ஆடை, அல்லது சிவப்புக் குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்) அணியக் கூடாது. பாதணிகள் கிடைக்கவில்லையானால் (கணுக்கால்வரை) உயரமான காலுறைகளை அவர் அணிந்து கொள்ளலாம். (ஆனால்) கணுக்காலுக்குக் கீழே உயரம் குறையும் வரை அவ்விரண்டையும் வெட்டிவிடட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 134.

மாணவர்களின் கேள்விக்காண பதிலைக் கூறும் போது அக் கேள்விக்குரிய நிறைவான பதிலை வழங்குவது கற்றறிந்த ஆசிறியரின் பண்பாகும்.

13) மாணவர்களின் உரிமைகளைப் பேணுதல்.

சஹ்ல் பின் சஅத்(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் (பால்) கொண்டு வரப்பட்டது. (அதை) அவர்கள் குடித்தார்கள். அப்போது அவர்களுடைய வலது பக்கத்தில் ஒரு சிறுவரும் இடது பக்கத்தில் முதியவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அந்த சிறுவரிடம், நீ அனுமதியளித்தால் நான் இவர்களுக்கு (என் பக்கத்திலுள்ள முதியவர்களுக்கு) கொடுத்து விடுகின்றேன் என்று கூறினார்கள்.

அந்தச் சிறுவர், அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து (எனக்குக் கிடைக்கக் கூடிய) என் பங்கை வேரொவருக்காகவும் விட்டுக் கொடுக்க நான் தயாராக இல்லை என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரின் கையில் அந்த (மீதி)ப் பானத்தை வைத்தார்கள்.

ஸஹீஹ் புகாரி 2602

எல்லா நிலைகளிலும் மாணவர்களின் உரிமைகள் பாதிக்கப்படாது நடப்பது ஆசிரியர்களிடம் இருக்க வேண்டிய முக்கியப் பண்பாகும்.

14) மாணவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளைக் கற்றுக் கொடுத்தல்.

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) அவர்கள் (இராக்கில் உள்ள) கூஃபாவுக்கு வந்தபோது நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நினைவுகூர்ந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை" என்று கூறிவிட்டு, "நற்குணங்கள் வாய்ந்தவரே உங்களில் மிகவும் சிறந்தவர்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்றும் தெரிவித்தார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 4640.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதரிடம் அடிமைப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் ஒழுக்கம் கற்பித்து, கல்வியையும் அழகிய முறையில் கற்றுக் கொடுத்து, அவளை விடுதலையும் செய்து, திருமணமும் முடித்து வைத்தால் அவருக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கும். மேலும், ஓர் அடிமை அல்லாஹ்வின் உரிமையையும் தன் எஜமானர்களின் உரிமையையும் (ஒழுங்காக) நிறைவேற்றுவானாயின் அவனுக்கும் இரண்டு நன்மைகள் கிடைக்கும்.
என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2547.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) செயலன்று.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 5001.

அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)
பிறகு (உடலிலிருந்து பிரியும்) நாற்ற வாயு காரணமாக மக்கள் சிரிப்பது குறித்து, "(அப்படிச் சிரிக்க வேண்டாமென தடை செய்தார்கள்) உங்களில் ஒருவர் தாம் செய்யும் ஒரு செயலுக்காக (அதே செயலைப் பிறர் செய்யும்போது) ஏன் சிரிக்கிறார்?" என்று கேட்டு உபதேசித்தார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 5484.

ஆசிரியர்கள் மூலம் தான் இன்னும் பல ஆசிரியர்களையும் ,எல்லாத் துறைகளிலும் பட்டதாரிகளையும் உருவாக்க முடியும். எனவே ஒழுக்கமில்லாத கல்வியைப் புகட்டினால் எந்தப் பட்டதாரியையும் முழுமையான அறிவாளியாகக் காணமுடியாமல் போய்விடும். ஒழுக்கத்தோடு சேர்ந்த கல்வியைக் கொடுக்காமல் ஆசிரியர்களாகிய நாம் எப்படிப்பட்ட கல்விமான்களை உருவாக்கினாலும் அவர்கள் சமூகத்துக்கு பயனற்றவர்களாகவே இருப்பார்கள். அத்தகையோர் தங்களின் பட்டம் பதவிகளை கேடயாமாகப் பயன்படுத்தி சமூக சீர்கேடுகளையே மேற்கொள்வார்கள். மனிதநேயம் அவர்களிடம் இருக்காது. பேராசிரியர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது அழகிய குணத்தைக் கொண்டு சிறந்த மனிதர்களை உருவாக்கினார்கள்.

15) மாணவர்களிடமுள்ள திறமையைப் பாராட்டுதல்.

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "ஒரு மனிதர் நற்செயல் புரிகிறார். அதற்காக அவரை மக்கள் பாராட்டிப் பேசுகின்றனர். இதைப் பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்கப்பட்டது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது இறைநம்பிக்கையாளருக்கு முன் கூட்டியே வரும் நற்செய்தியாகும்" என்றார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 5144.

அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி), "நீங்கள் நேற்றிரவில் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்ததைச் செவியுற்றேன். அப்போது நீங்கள் என்னைப் பார்த்திருந்தால் (உங்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்). (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சங்கீதம் (போன்ற இனிய குரல்) ஒன்று உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1454.

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நீண்ட ஹதீஸின் சுருக்கம்)
காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்றைய தினத்தில் நம் குதிரைப் படையில் மிகச் சிறந்த வீரர் அபூகத்தாதா ஆவார். நம் காலாட் படையில் மிகச் சிறந்த வீரர் சலமா ஆவார்" என்று (பாராட்டிக்) கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குதிரைப்படை வீரருக்கான ஒரு (பரிசுப்) பங்கும், காலாட்படை வீரருக்கான ஒரு பங்குமாக இரு பங்குகள் சேர்த்து (போர்ச் செல்வமாக) எனக்கு வழங்கினார்கள்….

ஸஹீஹ் முஸ்லிம் : 3695.

மாணவர்களிடமுள்ள திறமைகளைப் பாராட்டுவது. மேலும் அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் பரிசுகளை வழங்குவது போன்ற பண்புகள் ஆசிரியர்களிடம் இருந்தால் திறமையான மாணவர்கள் உருவாகுவது மட்டுமல்லாமல் ஆசிரியர், மாணவர் என்ற உறவில் நல்லிணக்கம் ஏற்படவும் அது காரணமாக இருக்கும். திறமைகள் பாராட்டப்படாமல் இருக்கும் பட்சத்தில் மாணவர்கள் சோர்வடைந்து பின் தள்ளப்பட்டு விடுவார்கள்.

16)ஆசிரியர்கள் மாணவர்களோடு அன்பாக நடக்க வேண்டும்.

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ‌ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ‌ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ‌ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ

(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். ஆகவே, அவர்(களின் குற்றங்)களை நீங்கள் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! அன்றி, (யுத்தம், சமாதானம் ஆகிய) மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வாருங்கள்! (யாதொரு விஷயத்தை செய்ய) நீங்கள் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 3:159)

இன்று அதிகமான இடங்களில் ஆசிரியர் மாணவர் உறவு என்பது கீரியும், பாம்பையும் போன்றுள்ளது. ஆசிரியர்களுக்கு மாணவர்கள் சிலரைப் பிடிப்பதில்லை. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிலரைப் பிடிப்பதில்லை. இந்த நிலமை சமூகத்திலிருந்து அழிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சிலவேலை மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பண்புகள், நடத்தைகள், பேச்சுக்கள் போன்றவையே அவர்களை பிடிக்காமல் வெறுப்பதற்கான காரணங்களாகவும் இருக்கலாம் என்பதை உணர்ந்து தம் குறைகளை மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுடன் இறக்க குணமுடையவர்களாக நற்பண்புடன் நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். மாணவர்கள் தவறு செய்தால் மன்னித்து அறிவுரை கூற வேண்டும். சில வேலை நாம் நடத்தும் பாடம் மாணவர்களுக்கு தெளிவில்லாமல் இருக்கலாம் எனவே பாட விவகாரங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்து கற்பித்தல் முறையில் அவர்களுக்கு இலகுவாக புரிந்து கொள்ள முடியுமான முறையை அறிந்து அவ்வழி முறையினூடாக பாடங்களைக் கற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.

17) ஆசிரியர் மாணவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தல்.

'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னை அணைத்து 'இறைவா! இவருக்கு வேத ஞானத்தைக் கற்றுக் கொடு' என்று கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 75.

ஒவ்வொரு வகுப்பிலும் திறமையான மாணவர்களும் இருப்பார்கள் திறமையற்ற மாணவர்களும் இருப்பார்கள். எனவே ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களையும் தனது பிள்ளைகளாக நினைத்து அவர்களுக்காக பிரார்த்தனை புரிய வேண்டும். இது சிறந்த ஆசிரியர்களிடம் இருக்க வேண்டிய பண்பாகும். பேராசிரியர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது மாணவர்களான நபித்தோழர்களுக்கு பல கட்டங்களிலும் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

18) ஆசிரியர்களும் மாணவர்களும் கட்டாயம் கேட்க வேண்டிய பிரார்த்தனை.

அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவந்ததைப் போன்றுதான் நான் உங்களிடம் அறிவிக்கிறேன்" என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ العَجزِ وَالكَسَلِ، وَالجُبنِ وَالبُخلِ، وَالهَرَمِ وَعَذَابِ القَبرِ، اللَّهُمَّ آتِ نَفسِي تَقوَاهَا، وَزَكِّهَا أَنتَ خَيرُ مَن زَكَّاهَا، أَنتَ وَلِيُّهَا وَمَولاهَا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِن عِلمٍ لا يَنفَعُ، وَمِن قَلبٍ لا يَخشَعُ، وَمِن نَفسٍ لا تَشبَعُ، وَمِن دَعوَةٍ لا يُستَجَابُ لَهَا

பொருள்:
இறைவா! உன்னிடம் நான் இயலாமையிலிருந்தும் சோம்பலிலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! எனது உள்ளத்தில் உன்னைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி, அதைத் தூய்மைப்படுத்துவாயாக! அதைத் தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீயே அதன் உரிமையாளன்; அதன் காவலன். இறைவா! உன்னிடம் நான் பயனளிக்காத கல்வியிலிருந்தும் உன்னை அஞ்சாத உள்ளத்திலிருந்தும் திருப்தியடையாத மனத்திலிருந்தும் ஏற்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.

ஸஹீஹ் முஸ்லிம் : 5266.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே..! அல்லாஹ்வின் தூதரிடத்தில் அனைவருக்கும் பல முன்மாதிரிகள் இருக்கின்றது. இந்த ஆக்கத்தில் ஆசிரியர்களிடம் இருக்க வேண்டிய சில பண்புகளை நபிகளாரின் வாழ்கையிலிரிந்து எடுத்துக் கூறியுள்ளேன். இங்கே கூறப்படாதவற்றை நீங்கள் பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.

http://www.islamkalvi.com/?p=125217


--

Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Paneer Health Benefits: ஆரோக்கியமான பால் உணவான பன்னீர் , அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவாக உள்ளது. ஆனால் , பன்னீர் சாப்பிடும் சரியான ம...

Popular Posts