லேபிள்கள்

வெள்ளி, 29 டிசம்பர், 2023

குழந்தைகளின் உடல் பருமன் குறித்து கவலைப்படும் பெற்றோரா?

குழந்தை பருவத்தில் உடல் எடை பிரச்சனையை எதிர் கொள்வோரின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாக அதிகரித்து வருகிறது.

இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் நீரிழிவு நோய், உயர் இரத்தஅழுத்த பிரச்சனை, அதிக கொழுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகளின் உடல் பருமனை குறைக்க ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் கேடானதாகும். குழந்தைகளுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பதின்ம வயதுள்ளவர்கள் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தி வரும் நிலையில், இரவில் தாமதமாக உறங்கி வருகின்றனர்.

இதனால் உடல் பருமன் ஏற்படும். இரவில் உறங்கும் போதுதான் வளர்சிதை மாற்றம் ஏற்படும். இரவில் 7.30 மணிக்கு சாப்பிட வேண்டும்.

குழந்தைகளுக்கு நீர்ச்சத்துள்ள உணவுகளை வழங்குதல் மூலமாக அவர்களின் உடலில் நீர்சத்து இருக்கும். பகல் வேளைகளில் குளிர்பானம் குடிப்பதை தவிர்த்து, இயற்கை பழச்சாறு போன்றவை வழங்கலாம்.

 

வானவில் உணவு என்ற முறையில், பலவண்ணம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும். தினமும் பச்சைகாய்கறி சாப்பிடலாம்.

துரித உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள், நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை குறைந்தளவு கொடுப்பது அல்லது கொடுக்காமல் இருப்பது நல்லது. நொறுக்குத்தீனிகள் வேண்டும் என்றால் அதனை முறுக்கு, தட்டை என வீட்டில் தயார் செய்து கொடுக்கலாம்.

குழந்தை பருவத்திலேயே அவர்களை இயற்கை சார்ந்த மற்றும் வீட்டில் தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை கொடுத்து பழக்கப்படுத்திவிட்டால், வளரும் பருவத்தில் அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும்.

குழந்தைகள் வீட்டிலேயே முடங்கி இருக்காமல், அவ்வப்போது வெளியே சென்று விளையாட அல்லது தாய்-தந்தையுடன் உடற்பயிற்சி செய்ய என அவர்களின் வாழ்க்கைமுறையை பயிற்றுவிக்க வேண்டும்.

சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட மாவு பொருட்களில் தயார் செய்யப்படும் உணவு பண்டங்களை தவிர்க்க வேண்டும்.

செவ்வாய், 26 டிசம்பர், 2023

"சமையல் எண்ணெய்களுக்கு எக்ஸ்பயரி தேதி உண்டா?"

விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் சுந்தரம் என்ற வாசகர், " நாம் பயன்படுத்தும் எண்ணெய் பொருட்கள் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் கடுகு எண்ணெய் விளக்கெண்ணெய் போன்றவற்றிற்கு எக்ஸ்பயரி தேதி உண்டா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

சமையலில் முக்கியப்பொருள் எண்ணெய். எண்ணெய்யின் தன்மை பொறுத்து உணவின் சுவையே மாறும். ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் கிட்டத்தட்ட 40 கலோரிகள் வரை கொண்டது. நம் ஊர் சமையலில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் உள்ளிட்ட பலதரப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்துகிறோம். இவற்றை நம்முடைய தினசரி உணவில் சேர்த்துக்கொள்கிறோம். ஆனால், நாம் சமையலில் தினசரிப் பயன்படுத்தும் இந்த எண்ணெய்க்கு எக்ஸ்பயரி தேதி உண்டா என என்றைக்காவது யோசித்திருக்கிறோமா. நம் விகடன் வாசகர் ஒருவருக்கு அந்த சந்தேகம் எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

சமையல் எண்ணெய்

நம் வாசகரின் கேள்வியை 'தமிழ்நாடு ஆயில் அண்ட் சீட்ஸ் அசோசியேசனிடம்' முன்வைத்தோம். அவர்கள் கூறியதாவது, "மற்ற சமையல் பொருட்களைப் போல எண்ணெய்க்கும் எக்ஸ்பயரி தேதி உண்டு. பொதுவாக எண்ணெய் உற்பத்தி தேதியில் இருந்து 6 முதல் 9 மாதம் வரை நன்றாக இருக்கும். ஒரு வருட காலம் வரை கூடக் கெடாமல் இருக்கும். அது எண்ணெய்யின் வகை மற்றும் தன்மையைப் பொறுத்தது. நீங்கள் எண்ணெய் வாங்கும்போதே அந்த பாக்கெட்டின் பின்புறம் அதன் காலாவதித் தேதி போடப்பட்டிருக்கும். அதனைச் சரிபார்த்து வாங்க வேண்டும்.

எண்ணெய்க்கு நிறமும் மனமும் மிகவும் முக்கியம். நிறமும் அல்லது மனம் இரண்டில் ஏதாவது ஒன்றில் மாற்றம் தெரிந்தாலும் அந்த எண்ணெய் பயன்படுத்தத் தகுதியற்றது என அர்த்தம். அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது." என்று கூறினார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்க!

 சமையல் எண்ணெய்

மேலும், எண்ணெய்களை எப்படி வைத்திருக்கிறோம் என்பதும் முக்கியம். பெரும்பாலானோர் எண்ணெய் வைத்திருக்கும் பாட்டில்கள் அல்லது பாத்திரங்களைச் சரியாக மூடாமல் வைத்திருப்பார்கள். மேலும் சிலர், பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என நாம் சமைப்பதற்குப் பயன்படுத்தும் கேஸ் அடுப்புக்கு அருகிலேயே எண்ணெய்களை வைத்திருப்பார்கள். ஆனால், அப்படி வைத்திருக்கக் கூடாது. எண்ணெய் வைத்திருக்கும் பாட்டில்கள் அல்லது பாத்திரங்களைப் பயன்படுத்தி முடித்தவுடன் காற்றும் புகாத வகையில் மூடி வைக்க வேண்டும். அதோடு காற்றோட்டமான இடங்களிலும் எண்ணெய்யை வைக்க வேண்டும். நேரடியாகச் சூரிய ஒளியில் படும்படி அல்லது சூடான இடங்களிலோ எண்ணெய்யை வைத்திருக்கக் கூடாது. இவ்வாறு சரியான முறையில் வைத்திருந்தால், நீண்ட நாட்களுக்கு எண்ணெய்யை நம்மால் பயன்படுத்த முடியும்.

சனி, 23 டிசம்பர், 2023

வைட்டமின் டி மாத்திரைகளால் ஏற்படும் ஆபத்து.

 

இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமானோருக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. உலகெங்கிலும் இதே நிலை தான்.

வைட்டமின் டி குறைபாடு காரணமாக எலும்புகள் பலவீனமடைதல், மூட்டு வலி, முதுகு வலி மற்றும் தசை வலி ஆகியவை ஏற்படும் என்பதோடு, கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான நோய்களும் ஏற்படலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிகின்றனர். எனவே, உடலில் வைட்டமின் டி குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதனால், விட்டமின் டி (Vitamin D) குறைபாட்டை போக்க மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது. தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வைட்டமின் டி இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உடலில் வைட்டமின் டி அளவு 30 முதல் 60 ng/ml வரை இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அது தீவிர உடல் பிரச்சனையாக மாறும். வைட்டமின் டி குறைபாட்டால் (Vitamin D Deficiency) ஏற்படும் பாதிப்பை பற்றி மருத்துவர்களிடம் பலமுறை கேட்டிருப்பீர்கள். ஆனால் உடலில் வைட்டமின் டி அளவு அதிகமாக இருந்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை டாக்டர் ரேணு சாவ்லா தெரிவித்தார்.

வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் சோர்வு:

வைட்டமின் டி நம் உணவில் இருக்கும் கால்சியத்தை உடல் கிரகித்து கொள்ள உதவுகிறது. உடலுக்கு 8.5 முதல் 10.8 mg/dL கால்சியம் மட்டுமே தேவை. கால்சியம் அதிகமானால், நமது செரிமான அமைப்பு பாதிக்கப்படும். வயிற்றில் வலி, மலச்சிக்கல், சோர்வு போன்றவை ஏற்படும். அதிக அளவில் சிறுநீர் கழித்தல், பசியின்மை, சிறுநீரக கற்கள், உயர் இரத்த அழுத்தம், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் இதயம் தொடர்பான நோய்களூம் ஏற்படும். அதிகப்படியான கால்சியம் வாழ்க்கையை பாதிக்கலாம்.

மனச்சோர்வு மற்றும் மன நோய்:

உடலில் வைட்டமின் டி அதிகமாக இருப்பதால், கால்சியமும் அதிகமாக உள்ளது. இது மூளையின் செயல்பாட்டை பாதிக்கிறது. மனச்சோர்வு, குழப்பம் மற்றும் மனநோய் போன்றவை ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. வழக்கத்திற்கு மாறாக மன உளைச்சல் இருந்தாலோ, தேவையில்லாத கலக்க ஏற்பட்டாலோ, அல்லது சிறிய விஷயம் கூட உங்களை மனச்சோர்வடையச் செய்து குழப்பத்தில் ஆழ்த்தினாலோ, உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுகி பரிசோதித்து, விட்டமின் டி அதிகம் உள்ளதா என்பதை அறிய வேண்டும்.

சிறுநீரக செயலிழப்பு:

அதிகப்படியான வைட்டமின் டி காரணமாக, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுவதால், உடலில் நீர் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. சிறுநீரகத்தில் இருக்கும் இரத்த நாளங்கள் சுருங்கி, சிறுநீரகத்தின் செயல்பாடும் பாதிக்கப்படும்.

பசியின்மை மற்றும் வாந்தி:

வைட்டமின் டி அளவு அதிகமாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும். பசியின்மை ஏற்படுவதோடு, வாந்தி, மயக்கம் வருவது போன்ற உணர்வும் பல சமயங்களில் ஏற்படும்.

செவ்வாய், 19 டிசம்பர், 2023

காஃபி பழக்கத்தை கைவிட நினைக்திறீர்களா? உங்களுக்கான 5 ஆரோக்கியமான மாற்று பானங்கள்.

 


காஃபி சிலரை அடிமையாக்கிவிடும்.

அது சிலருக்கு உடல் நல பாதிப்புகளையும் உண்டாக்கலாம். கஃபைன் அதிகரிக்கும்போது உண்டாகும் பக்கவிளைவுகள் ஏராளம் உள்ளன. அதுமட்டுமன்றி சிலர் உடல் எடையை குறைக்க வேண்டி காஃபி பழக்கத்தை கைவிட நினைக்கலாம். உங்களுடைய காரணம் எதுவாக இருந்தாலும் காஃபி பழக்கத்தை கைவிட இந்த 5 பானங்கள் உதவலாம். டிரை பண்ணி பாருங்க.

ஆப்பிள் சைடர் வினிகர் : ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு குறைந்த கலோரி பானம். இது எடையைக் குறைக்கவும் உதவும். இது சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும். இதில் அசிட்டிக் அமிலம் என்ற கலவை உள்ளது கூடுதல் சிறப்பு. வெதுவெதுப்பான ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து மெதுவாக பருகவும். பானத்தை இனிமையாக்க ½ தேக்கரண்டி தேனையும் சேர்க்கலாம்.

மட்சா டீ : இதுதான் இப்போது ஃபிட்னஸ் பிரியர்களின் டிரெண்டாக உள்ளது. மட்சா டீ என்பது ஒரு பச்சை நிற பானமாகும். ஜப்பானியர்களின் ஆரோக்கிய ரகசியத்திற்கு காரணம் இதுதான் என்றும் கூறப்படுகிறது. மட்சா டீயில் காஃபின் உள்ளது. ஆனால் காபி அளவுக்கு இல்லை. இது ஒரு வேர் செடியாகும். வெந்நீரில் 1-2 டீஸ்பூன் மட்சா பவுடரை கலந்து நன்றாக கிளறி குடிக்க வேண்டும்.

ஹாட் சாக்லெட் : குளிர்கால இரவில் சூடான ஒரு கப் ஹாட் சாக்லேட் பானம் என்றால் யார்தான் விரும்ப மாட்டார்கள்? கோகோ மற்றும் பால் கலவையான இது காஃபின் இல்லாத மாற்றாகும். சூடான சாக்லேட் காபிக்கு உங்கள் காலையையும் சுருசுருப்பாக மாற்றும்.

ஸ்மூதி : ஸ்மூத்தி என்பது ஒரு முழுமையான உணவு போன்றது. இரவு அதிகமாக உணவு சாப்பிட விரும்பவில்லை எனில் ஒரு கிளாஸ் ஸ்மூத்தி சாப்பிடுங்கள். உங்கள் விருப்பம்போல் பால் அல்லது தயிர் கலந்து ஸ்மூத்திகளை செய்யலாம். பால், வாழைப்பழம் மற்றும் பீனட் பட்டர் ஆகியவற்றின் கலவை குடித்தால் கூடுதல் ஆற்றல் கிடைக்கும் , இதனால் நீங்கள் நீண்ட நேரம் உற்சாகமாக இருப்பீர்கள். ஸ்மூத்தியில் பெர்ரி, ஆப்பிள் அல்லது உங்களுக்குப் பிடித்த பழங்களையும் சேர்க்கலாம்.

மஞ்சள் பால் : மஞ்சள் பால் என்பது ஒரு பாரம்பரிய இந்திய பானமாகும். இது உடனடி ஆற்றலை வழங்க பயன்படுகிறது. இது உங்களை மேலும் நீண்ட நேரம் ஆற்றலுடன் வைக்க உதவுகிறது. இதில் பயன்படுத்தப்படும் மஞ்சள் அற்புதமான ஆக்ஸிஜனேற்றியாகும். மஞ்சள் பாலை இரவில் உட்கொள்வதால் கூடுதல் நன்மை கிடைக்கும். ஏனெனில் இது செரிமானம் மற்றும் உடலின் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. பாலில் இலவங்கப்பட்டை, இஞ்சி, வெல்லம் மற்றும் கருப்பு மிளகுத் தூள் கூட சேர்க்கலாம், சுவையாகவும் இருக்கும்.

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts