லேபிள்கள்

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

நரக நெருப்பை அஞ்சிக் கொள்வோம்


மனிதன் இந்த உலகில் எத்தனையோ விதமான போட்டிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றுவிட்டால் அவனது நிலை மறக்குமளவுக்கு சந்தோஷப்படுகிறான். ஆனால் இவன் சந்தோஷப்பட காரணமாக அமைந்த இந்த வெற்றி தற்காலிகமான சந்தோஷத்தை தரக்கூடிய வெற்றியேயாகும்.
ஒருவர் ஒரு வருடத்திற்கு முன் ஒரு போட்டியொன்றில் பங்குபற்றி அதில் வெற்றி பெற்றிருந்தால் அவருக்கு இந்த வருடம் அவ்வெற்றி அதனுடைய மகிழ்ச்சியைக் காட்டாது. ஆகக்கூடினால் அந்த வெற்றியின் சந்தோஷம் ஒரு மாதத்துக்குத்தான் இருந்து கொண்டிருக்கும். ஆகவே இந்த வெற்றி உண்மையான வெற்றி கிடையாது.
மனிதனுக்கு ஒரு வெற்றி இருக்கிறது. அவ்வெற்றிதான் உண்மையானதும் நிலையானதுமாகும். அந்த வெற்றி எதுவென்பதை அல்லாஹ் சொல்லும் போது,
"
எவர் நகரிலிருந்து தூரமாக்கப்பட்டு சுவர்க்கத்தில் நுழைவிக்கப்பட்டாரோ அவரே நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டார்"
(
ஆலுஇம்ரான்: 185)
என்று கூறியிருக்கிறான்.
அல்லாஹ் எனக்கு இந்த வெற்றியை தராமல் நரகத்தை மறுமையில் தந்தால் என்னுடைய நிலை எப்படி இருக்குமென்பதை நாம் சிந்திக்க வேண்டும். அல்லாஹ் எம்மையெல்லாம் நரகிலிருந்து பாதுகாப்பானாக.
இங்கே சொல்லப்படுகின்ற விடயங்களை நாம் உணர்பு பூர்வமாக சிந்திக்க வேண்டும். சில கட்டங்களில் வழிகேடர்களது சில தவறான வழிகாட்டல்களினால் அல்லாஹ்வுக்கு இணை வைப்பர்களாக சில மக்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய வணக்கங்களை மக்களின் பக்கம் அவைகளை திருப்பி விட்டால் அது எந்த சந்தேகமுமின்றி இணைவைப்பாக மாறிவிடுகின்றது. அந்தடிப்படையில் ஒரு மனிதன் தன்னை நரகத்துக்கு இட்டு செல்லக்கூடிய காரியங்களை செய்து விட்டு மறுமையில் நரகில் நுழைந்தால் அவனுடைய நிலை எப்படி இருக்கும் என்பதை இங்கு சொல்லப்பட இருக்கின்ற எனக்கு நடந்தால் எப்படி இருக்கும் என்று உணர்பு ரீதியாக சிந்திக்க வேண்டும்.
அந்தடிப்படையில் அல்லாஹ் நரகத்தைப் பற்றி,
"
அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் உங்களால் செய்யவே முடியாது. எனவே தீய மனிதர்களும், கற்களும் எரிபொருட்களாக இருக்கின்ற அந்த நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள்" (2:24)
என்று எச்சரிக்கையாக சொல்லி இருக்கிறான். ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள், சாதாரணமாக சமைக்கும் போது நெருப்பை எறிய வைப்பதற்காக எத்தனையோ விறகு கட்டைகளை வைத்து எறிக்கிறோம். சாதாரண நெருப்புக்கே மிக வேகமாக எறியக்கூடியதான் விறகு. நாம் பயன்படுத்துகின்ற நெருப்பை விடவும் 69 மடங்கு பலமானதுதான் நரக நெருப்பு. அந்த நரக நெருப்பில் மனிதன் ஒரு தடவை மாத்திரம்தான் விறகாக பயன்படுத்தப்படமாட்டான்.
இந்த உலகில் ஏதாவது ஒன்றை எறிப்பதற்கு ஒரு விறகை ஒரு தடவை மாத்திரம்தான் பயன் படுத்த முடியும். ஆனால் 69 மடங்கு பலமான அந்த நெருப்பிற்கு விறகாக காணப்படுகின்ற மனிதன் ஒரு தடவை மாத்திரம் எறிக்கப்படமாட்டான். அல்லாஹ் மனிதனை நரக நெருப்பில் போட்டு எறித்து விட்டு மீண்டும் பழைய தோற்றத்திற்கு நல்ல தோல்களையெல்லாம் வழங்கி விட்டு மீண்டும் நரக நெருப்பில் போட்டு வேதனை செய்வான். எரிந்து சாம்பலாகி கறியானதற்கு பின் மீண்டும் புதிய தோலை வழங்கி நரகில் போட்டு வேதனை செய்வான். இப்படி மாறி மாறி தொடர்ந்து கொண்டே இருக்கும். அல்லாஹ் இந்த பயங்கரமான நிலையைப் பற்றி சொல்லும் போது,
"நிச்சயமாக எவர்கள் எமது வசனங்களை நிராகரித்தார்களோ அவர்களை நாம் நரகில் நுழைவிப்போம். வேதனையை அவர்கள் சுவைப்பதற்காக அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு வேறு தோல்களை மாற்றுவோம்" (4:56)
என்று முடிவே இல்லாத வேதனையையின் வர்ணணையை சொல்லிக் காட்டுகிறான்.
மனிதன் உலகில் பெரும்பாவம் செய்தவனாக இருந்தால் குறிப்பிட்ட காலத்திற்கு இந்த வேதனையை எல்லாம் அனுபவித்து விட்டு அல்லாஹ் எப்போது நாடுகிறானோ அப்போது அந்நரகை விட்டும் அம்மனிதனை அல்லாஹ் விடுவித்து விடுவான்.
ஆனால் அல்லாஹ்வுக்கு இணைவைத்த மனிதனாக இருந்தால் அவனுக்கு முடிவே இல்லாத வேதனையாக இவ்வேதனை தொடர்ந்து கொண்டே இருக்கும். 60 வயது 70 வயது என மனித வாழ்வு வரையரை செய்யப்பட்ட அழியக்கூடிய இந்த உலகில் சுயகெளரவத்துக்காக மனிதன் அல்லாஹ்வுக்கு பகிரங்கமாகவே இணைவைக்கின்றானே! அவனுக்கு முடிவே இல்லாத வேதனையைப் பற்றி பயம் கிடையாதா? அவ்வேதனையையின் விபரீதத்தைப் பற்றி சிந்திக்க கூடாதா?
இப்படி பயங்கரமான முறையில் நரகில் வேதனை செய்யப்படுகின்ற அம்மனிதன் தொடர்ச்சியான அந்த வேதனையை தாங்க முடியாததனால் நரகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கும் மாலிக் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்து,
"மாலிகே உமதிரட்சகன் எங்களுக்கு (மரணத்தைக்) கொண்டு தீர்ப்பளிக்கட்டும் என்று சப்தமிடுவார்கள்; நிச்சயமாக நீங்கள் (இதே நிலையில் மரணிக்காது) தங்கியிருக்க வேண்டியவர்களே என்று கூறுவார்.
நிச்சயமாக நாம் உங்களிடம் உண்மையைக் கொண்டு வந்தோம். எனினும் உங்களில் அதிகமானவர்கள் அவ்வுண்மையை வெறுக்கின்றவர்களாக இருந்தீர்கள்" (43:78,79)
என்று நரகவாதிகளது கதறளையும் அவர்கள் நரகில் நுழைந்ததற்கான காரணத்தினையும் அல்லாஹ் சுருக்கமாக சொல்லிக் காட்டுகிறான்.
அல்லாஹ் அல்குர்ஆனில் இன்னுமொரு வசனத்தில் நரகவாதிகள் கிடைத்திருக்கின்ற வேதனை தாங்க முடியாமல்,
"நரகத்தில் உள்ளோர் நரகத்தின் காவலர்களிடம் ஒரு நாளைக்கேனும் வேதனையை எங்களை விட்டும் இலகுபடுத்துமாறு உங்களது இரட்சகனிடம் வேண்டுங்கள் எனக் கேட்பார்கள்.
(
அதற்கு அக்காவலாளிகள்) உங்களது தூதர்கள் உங்களிடம் தெளிவான சான்றுகளுடன் வரவில்லையா? எனக் கேட்பார்கள். இவர்கள் ஆம் என்று சொல்வார்கள். (அதற்கு அந்த காவலாளிகளான) அவர்கள் (நாங்கள் அல்லாஹ்விடம் கேட்கமாட்டோம்) நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிடுவார்கள்" (40:49,50) என்று நரகவாதிகளது வேதனை ஒரு நாளுமே குறைக்கப்படாது என ஆணித்தரமாக எச்சரித்துக் காட்டியிருக்கிறான்.
எனவே அந்த நரகவாதிகள் தங்கள் வேதனையிலிருந்து தப்ப வேண்டுமென்பதற்காக முதலாவது காவலாளிகளிடம் மன்றாடி விட்டு அது எந்த பலனையும் அளிக்காததனால் நரகத்திலிருந்து வெளியேற முயற்சி செய்வார்கள். இந்த சந்தர்ப்பத்தில் என்ன நடக்குமென்பதை அல்லாஹ் கூறும் போது,
"மேலும் பாவம் செய்தார்களே அத்தகையோர் தங்குமிடம் நரக நெருப்பாகும். அதிலிருந்து அவர்கள் வெளியேற நாடும் போதெல்லாம் மீண்டும் அதிலேயே மீட்டப்படுவார்கள். மேலும் நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களே அந்த (நரக) நெருப்பின் வேதனையை சுவைத்துப் பாருங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்படும்" (32:20)
என்று நரகவாதிகள் நரகிலிருந்து தப்பவே முடியாதென எச்சரிக்கையாக சொல்லியிருக்கிறான்.
சாதாரண நெருப்பை விடவும் 69 மடங்கு கடுமையான அந்த நெருப்பில் எரிந்து வேதனையை தாங்கவே முடியாமல் இருக்கும் போது அந்நரகவாசிக்கு பசி, தாகம் ஏற்படும். இந்த நேரத்தில் இவர்களது தாகத்தை இல்லாமலாக்க அல்லாஹ் எந்த சூடு சூட்டினுடைய கடைசி எல்லையில் இருக்குமோ அந்தளவுக்கு சூடாக்கப்பட்ட நீரைத்தான் பருகக் கொடுப்பான்.
சாதாரணமாக இந்த உலகில் தேநீர் அருந்துகின்ற போது சாதாரண ,இலேசான சூட்டையே குடிக்கமாட்டோம். காரணம் அந்த சூடு எம்முடைய நாக்கை எறித்து விடுமென பயப்படுகின்றோமே முடிவுற சூடாக்கப்பட்ட அந்த நீரைக் குடிக்கும் போது நரகவாதியினுடைய குடல் சூட்டின் விபரீதத்தினால் சிதைந்து விடுமென்ற செய்தியை அல்குர்ஆனில் படிக்க முடிகின்றது. அப்படியானால் எப்படி எம்மால் அந்த நீரைக்குடிக்க முடியும் என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
நரகவாதிகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அல்லாஹ் அந்நீரை குடிக்கவே வைப்பான் என்பதில் எந்த சந்தேகமுமே கிடையாது.
அது மட்டுமல்லாமல் நரகவாதிகளுக்கு பசி வருகின்ற போது அவர்களுக்கு முற்கள் நிறைந்த ஸக்கூம் என்று சொல்லப்படக்கூடிய மரத்திலிருந்து உணவு வழங்கப்படுவதுடன் நரகவாதிகளது சீழ் கடுமையாக சூடாக்கப்பட்டு அவைகள் தான் உணவாகவும் வழங்கப்படுமென அல்லாஹ் எச்சரிக்கையாக சொல்லி இருக்கிறான். (பார்க்க 56:51-55 வரையுள்ள வசனங்களை)
இப்படி நரகவாதிகளது தண்டனைகளை அல்லாஹ் எமக்கு சொல்லிக் காட்டிருப்பதன் மூலம் மனிதன் சத்தியத்தை படித்து சத்தியத்தில் முழுமையாக நுழைய வேண்டுமென அல்லாஹ் எதிர்பார்க்கிறான். இது மட்டுமல்லாமல் அதிகமான வசனங்களில் நரகவாதிகள் படுகின்ற வேதனைகளை அவதானிக்க முடிகின்றது. சிந்தனையுள்ள மக்களுக்கு இவைகள் பிரயோசனம் தரும் என்று நினைத்தவனாக இத்துடன் இத்தகவல்களை சுருக்கிக் கொள்கிறேன்.
இறுதியாக அல்லாஹ் கூறக்கூடிய சில வசனங்களை முன்வைத்து விட்டு என்னுடைய ஆக்கத்தை முடிக்கலாமென நினைக்கிறேன்.
"நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரை சபித்துவிட்டான். கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்குத் தயார் செய்தும் வைத்திருக்கின்றான்.
அவர்கள் என்றென்றும் அதில் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள் (அவர்களைக்) காப்பவரையும் (அவர்களுக்கு) உதவி செய்பவரையும் அவர்கள் (அங்கு) காணமாட்டார்கள்.
அவர்களுடைய முகங்கள் ( நரக) நெருப்பில் புரட்டப்படும் நாளில் 'நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டிருக்க வேண்டுமே! (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே' என்று கூறுவார்கள்.
மேலும் 'எங்கள் இரட்சகனே நிச்சயமாக நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும் எங்கள் பெரியோர்களுக்கும் கீழ்ப்படிந்தோம் ஆகவே, அவர்கள் எங்களை வழிதவறச் செய்து விட்டார்கள்' ஆகவே 'எங்கள் இரட்சகனே நீ அவர்களுக்கு வேதனையில் இருமடங்கை கொடுப்பாயாக. இன்னும், பெரும் சாபமாக அவர்களைச் சபிப்பாயாக' (என்றும் கூறுவார்கள்) (33:64-68)
இந்த வசனம் 5 வசனங்களாக மாத்திரம் இருந்தாலும் அதிகமான விடயங்களை சொல்லித் தருகின்றன.
இந்த உலகில் சில வழிகேடர்கள் அவர்களும் வழிகெட்டு வேண்டுமென்று எம்மையும் வழிகெடுக்க முனைந்து அல்லாஹ்வுக்கு இணைவைக்கக்கூடிய காரியங்களை சத்தியத்தை சொல்வது போன்று சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கின்றார்கள்.
நாம் இந்த உலகில் வேண்டுமானால் அவ்வழிகேடர்களை நேசர்களாக ஆக்கி அவர்களை பின்பற்றலாம். ஆனால் மறுமையில், நீங்கள் அவர்கள் மீது நேசம் வைத்ததன் காரணமாக கைசேதப்படுவீர்கள். மறுமையில் நீங்கள் அவர்களை அல்லாஹ்விடத்தில் காட்டிக் கொடுத்தாலும் அதுவும் உமக்கு எந்த பிரயோசனத்தையும் தரமாட்டாது.
எனவே எல்லாம் வல்ல இறைவன் எம் ஒவ்வொருவரையும் நேர்வழியில் வாழ்ந்து நேர்வழியில் மரணிக்க அருள்புரிவானாக.
தொகுப்பு
பர்ஹான் அஹமட் ஸலபி

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

அழகாகப் பேசுங்கள், அழகானதைப் பேசுங்கள்


இறை விசுவாசிகளின் பேச்சில் உண்மையும் அழகும் இருக்க வேண்டும், இதயங்களின் ஆழத்திலிருந்து வரும் நேர்மையான வார்த்தைகளாகவும் அவை இருக்க வேண்டும், ஏனெனில்  உண்மையும் நம்பகத்தன்மையும் அழகான பேச்சுக்களும் ஓர் இறைவிசுவாசிக்கான சிறந்த அடையாளமாகும்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!அல்குர்ஆன் (33 : 70)
(முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான். அல்குர்ஆன் (17 : 53)
யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும்.அல்குர்ஆன் (35 : 10)
அளவற்ற அருளாளனின் அடியார்களின் பண்புகள் குறித்து குர்ஆன் பேசும் போது பின்வரும் சில முக்கிய பண்புகளை அது எமக்கு சுட்டிக்காட்டுகிறது.
வீணானதைப் புறக்கணிப்பார்கள். அல்குர்ஆன் (23 : 3)
வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். "எங்கள் செயல்கள் எங்களுக்கு உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்" எனவும் கூறுகின்றனர். அல்குர்ஆன் (28 : 55)
அவர்கள் பொய் சாட்சி கூறமாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள். அல்குர்ஆன் (25 : 72)
உண்மை பேசுதல், அழகிய வார்த்தைகளால் மக்களோடு உரையாடுதல் என்ற அம்சத்தை அளவற்ற அருளாளனின் அடியார்கள் கடைப்பிடிக்கும் அதே வேளை உண்மைக்குப் புறம்பான வார்த்தைகள், அறிவீனமான செயல்களை அவர்கள் அலட்சியம் செய்துவிடுவார்கள் என்பதனையும் மேலுள்ள வசனங்கள் எமக்கு தெளிவு படுத்துகின்றன.
உண்மை உரைத்தல், அழகிய வார்த்தைகளை உபயோகித்தல் நீதி, நேர்மையாகப் பேசுதல் என்ற உயர்ந்த குணங்களின் சொந்தக்காரராக எமது தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள், அறியாமைக்கால மக்கள் கூட அதற்கான சாட்சியத்தை வழங்கியுள்ளார்கள்.
"(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்" எனும் (26:214ஆவது) இறை வசனம் அருளப் பெற்ற போது நபி (ஸல்) அவர்கள் ஸஃபா' மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, "பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!" என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வர முடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் வந்தனர். நபி (ஸல்) அவர்கள், "சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப் போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?" என்று கேட்க, மக்கள் "ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை" என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன்" என்று (தமது மார்க்கக் கொள்கையைச்) சொன்னார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், "நாளெல்லாம் (என்றென்றும்) நீ நாசமாகுவாயாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?" என்று கூறினான். அப்போது தான் "அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்……" என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) | நூல்: புகாரி 4770
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த வேளையில் நபி (ஸல்) அவர்கள் வந்து விட்டார்கள், நபி (ஸல்) அவர்கள் வந்து விட்டார்கள்' என்று சொல்லப்பட்டது. அப்போது மக்களெல்லாம் அவர்களை நோக்கி விரைந்தார்கள். நானும் மக்களுடன் அவர்களைப் பார்க்கச் சென்றேன். அவர்களை அடையாளம் கண்டு கொண்டேன். அவர்களின் முகம் பொய் சொல்லும் முகமாகத் தெரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். ஸலாத்தை பரப்புங்கள், (பசித்தவருக்கு) உணவளியுங்கள், மக்கள் உறங்கும் வேளையில் தொழுங்கள், மன அமைதியுடன் சொர்க்கம் செல்வீர்கள்' என்பது தான் அவர்களின் பேசிய முதல் பேச்சாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) | நூல்: திர்மிதீ 2409, இப்னுமாஜா 1323
அபூஸுப்யான் அவர்களிடம் ஹிரக்ல் மன்னர் நபிகளாரைப் பற்றி விசாரித்த போது அவர்களின் நேர்மைக்கும் உண்மைக்கும் அவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பே சான்று பகர்ந்தார்கள்.
"அவர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன் அவர் (மக்களிடம்) பொய் சொன்னார் என்று (எப்போதேனும்) நீங்கள் அவரைச் சந்தேகித்திருக்கின்றீர்களா?" என்று கேட்டார். நான் இல்லை' என்றேன்
"நான் உம்மிடம் அவர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன்பு (அவர் மக்களிடம்) பொய் பேசினார் என்று எப்போதேனும் நீங்கள் சந்தேகித்ததுண்டா' என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை' என்று பதிலளித்தீர். இதிலிருந்து மக்களிடம் பொய் பேசாத அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்ல மாட்டார் என்று நான் புரிந்துகொண்டேன்" என்று ஹிரக்ல் மன்னர் கூறினார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) | நூல்: புகாரி 7.
மிகச் சிறந்த உண்மையாளராக திகழ்ந்த நபிகளார் உண்மை பேசுதல், அழகானதைப் பேசுதல் போன்றவற்றை இறை விசுவாசத்தோடு தொடர்பு படுத்தி கூறியுள்ளார்கள், அதனால் தான் யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்கிறாரோ (ஒன்று) அவர் நல்லதைப் பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும் என்று இதனை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்கு தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) | நூல் : புகாரி (6018)
உண்மையையும் நல்லதையும் பேசுதல் இறை விசுவாசியின் உயர்ந்த பண்பு என்பது போல அது அல்லாஹ்வுக்காக அவன் செய்கின்ற மிகப்பெரும் தர்மம் என்றும் நபிகளார் எமக்கு கற்றுத்தந்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மக்கள் தமது மூட்டுக்கள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையி­ருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­ழி) | நூல் : புகாரி (2989)
சுவனத்தை அடைந்து கொள்ள ஆசை வைக்கும் ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையை இறையச்சத்தின் மூலம் அலங்கரித்துக் கொள்வது எவ்வாறு அத்திய அவசியமானதோ அது போன்று தமது வார்த்தைகளையும் உண்மையைக் கொண்டும் அழகான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டும் அலங்கரித்தக் கொள்வது அவசியமாகும், அதனையே பின்வரும் நபிமொழி எமக்கு விளக்குகின்றது.
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள் என்றேன். அதற்கு அவர்கள் அனைத்தும் நீரி­லிருந்து படைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள். எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக்கொடுங்கள் என்று கூறினேன். ஸலாத்தைப் பரப்பு, நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ர­ழி) | நூல் : அஹ்மத் (9996)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திலி­ருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் அழகான வார்த்தையைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்) என்றார்கள்.
அறிவிப்பவர் : அதீ பின் ஹாதிம் (ர­ழி) | நூல் : புகாரி (6023)
உண்மையும் நல்ல அழகான வார்த்தைப் பிரயோகங்களும் இறைவிசுவாசியின் அடையாளம், மிகச் சிறந்த தர்மம், சுவனம் செல்வதற்கான வழி என்பதனையும் தாண்டி அவை எங்களை நரகத்திலிருந்து பாதுகாக்கும் பாதுகாப்புக் கேடயங்களாகும், சாதாரண மனிதர்கள் இதனை தமது வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்களது இம்மை மறுமை வெற்றிக்கு அது மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும், எனினும் அழைப்பாளர்கள் அறிவைச் சுமந்தவர்கள் இதனை கடைப்பிடிப்பது மிக மிக அவசியமான ஒன்றாகும் இதன் மூலமே இம்மை மறுமை வெற்றியுடன் மனிதர்களின் உள்ளங்களைக் கவர்ந்து அவர்களை அல்லாஹ்வை நோக்கி மிக இலகுவாக அழைக்க முடியும், அழைப்பாளர்கள் தமது அழைப்புப் பணியில் வெற்றிபெறுவதற்கான அடிப்படைபைப் பண்புகளுள் இதுவும் முக்கிய ஒன்றாகும்.
அஷ்ஷெய்க். TM முபாரிஸ் ரஷாதிவிரிவுரையாளர், அல்மனார் இஸ்லாமிய நிலையம், துபாய், அமீரகம்.
xx   

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடும் போது ஏனையவர்கள் உணவருந்தி முடிக்கும் முன் எழுந்து செல்லலாமா?


இந்தக் கேள்வி எம்மில் அதிகமானவர்களிடம் இருந்து வருவதையும் இவ்வாறு ஒன்றாக உணவு உற்கொள்ளும் போது இடையில் எழுந்து செல்வது நபி வழிக்கு மாற்றமானது என்ற சந்தேகம் பொதுவாக நிகழ்வதைப் பரவலாக காணமுடிகின்றது. இதற்கு ஒரு அடிப்படை இருக்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: உணவுத் தட்டு வைக்கப்பட்டால், அந்த உணவுத்தட்டு உயர்த்தப்படும் வரை (உண்டு முடிக்கும் வரை) எந்த மனிதரும் எழுந்துவிட வேண்டாம். மேலும் மற்றவர்கள் சாப்பிட்டு முடிப்பதற்குள் கையை உயர்த்த வேண்டாம். நீங்கள் அவ்வாறு செய்வதனால் உங்கள் பக்கத்தில் இருப்பவரும் அவருக்கு இன்னும் சாப்பிட வேண்டும் என்ற தேவை இருந்தும் வெட்கப்பட்டு கையை எடுத்துவிடலாம்.
ஆதாரம்: இப்னு மாஜா 3295, ஹுல்யதுல் அவ்லியா 3/74, பைஹகி ஷுஅபுல் ஈமான் 5478
இந்தச் செய்தியை அப்துல் அஃலா இப்னு அஃயன் என்பர் யஹ்யா இப்னு கஸீரை தொட்டும் அறிவிக்கின்றார்.
இந்தச் செய்தி மிகக் கடுமையான பலவீனமான செய்தியாகும். காரணம் அப்துல் அஃலா என்பவர் யஹ்யா இப்னு கஸீரைத் தொட்டும் அவர் சொல்லாதவற்றை அறிவிப்பதாகவும், இந்த அப்துல் அஃலா என்பவரை ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும் இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் தனது 'அல் மஜ்ரூஹீன்" என்ற புத்தகத்தின் 773 பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
மேலும் இந்தச் செய்தியை இமாம் இப்னுல் கைஸரானி மற்றும் இமாம் அல்பானி ஆகியோர் கடுமையான பலவீனமான செய்தி என தீர்ப்பளித்துள்ளார்கள். (ஸில்ஸிலதுல் அஹாதீஸுல் லஈபாஃ 238)
இதே கருத்தை வழியுறுத்தும் வகையில் இன்னுமொரு செய்தி பதியப்பட்டுள்ளது. அந்த செய்தியும் பலவீனமான செய்தியாகும். ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: (உணவு உற்கொண்டு முடிந்து) உணவுத்தட்டு உயர்த்தப்படும் வரை எழுந்திடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம் இப்னு மாஜா 3294
இந்த செய்தியும் மிகப் பலவீனமான செய்தியாகும் என்று இமாம் அல்பானி அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள். (ஸில்ஸிலதுல் அஹாதீஸுல் லஈபாஃ 239)
இது தொடர்பாக வந்திருக்கும் இரண்டு செய்திகளும் மிகப் பலவீனமான செய்தி என்பதனால் இந்த நடைமுறையை நபியவர்களோடு இணைத்து அவர்களது வழிமுறையாக காண்பிக் கூடாது.
என்றாலும் பொதுவாக இந்த நடைமுறை ஒன்றாகச் சாப்பிடுவதன் ஒழுங்குகளில் பேணப்பட வேண்டிய ஒரு நல்ல நடைமுறையாகும் என பல அறிஞர்கள் விளக்கியுள்ளனர். இமாம் இப்னு ஹஜர் அல் ஹைஸமி, இமாம் ஸன்ஆனி போன்றோர் சாப்பிடுவதன் ஒழுங்கு முறையைக் குறிப்பிடுகையில் ஒன்றாகச் சாப்பிடும் போது இடை நடுவே எழுந்திடுவது மற்றவர்களுக்குச் சஞ்சலத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே இந்த ஒழுங்கு முறையை பொதுவான ஒழுங்கு முறையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, நபிவழியாக நினைத்து ஒருவருக்கு எழுந்து செல்ல வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கும் போதும் நபிவழிக்கு மாற்றம் செய்யாதீர்கள் என்று அவரைக் கட்டாயப்படுத்தி உட்கார வைக்கக் கூடாது என்பதனை விளங்கிக் கொள்ளவேண்டும். அல்லாஹ் மிக அறிந்தவன்.
அரபு மூலம்: https://islamqa.info
எம். றிஸ்கான் முஸ்தீன்

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

கடமையான தொழுகைக்குப் பின் உபரியான தொழுகையை இடமாற்றித் தொழுதல்


பர்ழான தொழுகைக்கும், சுன்னத்தான தொழுகைக்கும் மத்தியில் ஒரு பேச்சைக் கொண்டோ அல்லது இடத்தை மாற்றுவதைக் கொண்டோ இடைவெளி இருப்பது விரும்பத்தக்கது.
கேள்வி : பூமியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்கள் சாட்சிசொல்ல வேண்டும் என்ற ரீதியில், நான் பர்ழான தொழுகையை தொழுத பின்னர் உபரியான சுன்னத்தான தொழுகையை தொழுவதற்காக வேண்டி இடத்தை மாற்றித்தொழுவது விரும்பத்தக்கதா?
பதில் : எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே,
ஆமாம், பர்ழான தொழுகைக்கும், சுன்னத்தான தொழுகைக்கும் மத்தியில் ஒரு பேச்சைக்கொண்டோ அல்லது இன்னொரு இடத்தை மாற்றுவதைக் கொண்டோ இடைவெளி விடுவது விரும்பத்தக்கது.
(இதிலே) மாற்றுதலில் மிகவும் சிறந்தது வீட்டிலிருந்தே தொழுகைக்காக செல்வதாகும். ஏனெனில், ஒரு மனிதனுக்கு கடமையான பர்ழான தொழுகைகளைத் தவிர மற்ற தொழுகைகளை வீட்டிலே தொழுவதுதான் சிறந்தது.
عن معاوية رضي الله عنه قال : (إِذَا صَلَّيْتَ الْجُمُعَةَ فَلَا تَصِلْهَا بِصَلَاةٍ حَتَّى تَكَلَّمَ أَوْ تَخْرُجَ ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَنَا بِذَلِكَ ، أَنْ لَا تُوصَلَ صَلَاةٌ بِصَلَاةٍ حَتَّى نَتَكَلَّمَ أَوْ نَخْرُجَ) . رواه مسلم في صحيحه (1463)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக முஆவியா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : "நீ ஜும்ஆ தொழுததும் (ஏதேனும் வெளிப்பேச்சு) பேசாதவரை அல்லது பள்ளிவாயலிலிருந்து புறப்பட்டுச் செல்லாத வரை தொழாதீர்! இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். அதாவது, (கடமையான) ஒரு தொழுகைக்கும் (கூடுதலான) மற்றொரு தொழுகைக்குமிடையே ஏதேனும் பேச்சுக்கள் பேசாதவரை, அல்லது (பள்ளிவாசலில் இருந்து) புறப்பட்டுச் செல்லாதவரை அவ்விரு தொழுகைகளையும் (சேர்ந்தாற்போல்) அடுத்தடுத்து தொழக்கூடாது" என்று கூறினார்கள். (ஆதாரம் முஸ்லிம் -1463)
இமாம் அந்நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் முஸ்லிம் கிரந்தத்திற்கான தனது விளக்க நூலிலே கூறினார்கள் ; "இதிலே ஷாபிஃ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்களின் கூற்றுக்கு ஆதாரம் உள்ளது. அதாவது பர்ழான தொழுகை தொழுத இடத்தை விட்டும் வேறு இடத்தில் உபரியான தொழுகைகளை தொழுவது விரும்பத்தக்கதாகும். இன்னும் ஸுஜுது செய்யும் இடங்களை அதிகப்படுத்திக்கொள்வதற்காகவும், உபரியான தொழுகையின் வடிவம் பர்ழான தொழுகையின் வடிவத்திலிருந்து வேறுபடுவதற்காகவும். உபரியானதை வீட்டில் தொழுவதே மிகவும் சிறந்தது, அப்படி இல்லை என்றால் அதே பள்ளிவாயிலிலோ அல்லது வேறு இடத்திலோ தொழுவது ஏற்றதாகும்.
அத்துடன் "கதைக்கின்ற வரை" என்ற வாசகத்தின் மூலம் இரண்டுக்கும் மத்தியிலான பிரிவு பேச்சின் மூலமும் அமையலாம் என்பதற்கான ஆதாரமாகவுள்ளது. என்றாலும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுவதே மிகவும் சிறந்ததாகும்." அல்லாஹ்வே அறிந்தவன்.
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : (أَيَعْجِزُ أَحَدُكُمْ إِذَا صَلَّى أَنْ يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ أَوْ عَنْ يَمِينِهِ أَوْ عَنْ شِمَالِهِ ، يَعْنِي : السُّبْحَةَ) أي : صلاة النافلة بعد الفريضة.  أبو داود (854) وابن ماجه (1417) وصححه الألباني في صحيح سنن ابن ماجه .
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டும் அபூஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : "உங்களில் ஒருவர் பர்ழான தொழுகையை தொழுதால் முன்னால் சென்றோ அல்லது பின்னால் வந்தோ அல்லது வலதோ அல்லது இடதோ நோக்கிவந்து உபரியான தொழுகையை தொழுவதற்கு முடியாதா?" (ஆதாரம் : அபூதாவூத்-854, இப்னு மாஜா-1417) இமாம் அல்பானீ அவர்கள் இதனை ஆதாரபூர்வமானது என தனது "ஸஹீஹ் இப்னு மாஜா"வில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமியா றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் : "பர்ழான தொழுகை, ஜும்ஆத் தொழுகை போன்றவைகளின் பின்னரான உபரியான தொழுகைகளுக்கும் கடமையான தொழுகைகளுக்கும் மத்தியில் ஒரு இடைவெளி இருப்பது நபிவழியாகும்.
மாறாக, ஒரு தொழுகைக்கும் மற்ற தொழுகைக்கும் மத்தியில் எழுவதைக் கொண்டோ அல்லது பேசுவதைக் கொண்டோ பிரிக்காமால் தற்பொழுது அதிகமான மனிதர்கள் செய்வதைப்போன்று பர்ழான தொழுகையில் ஸலாம் கொடுத்த பின் சுன்னத்தான இரண்டு ரக்ஆத்துக்களை எந்தவித இடைவெளியுமில்லாமல் உடனே தொழக்கூடாது. இச்செயற்பாடு நபியவர்களால் தடைசெய்யப்பட்ட ஆதாரபூர்வமான ஒரு விடயமாகும். ஏனெனில் இபாதத்திற்கும் இபாதத் அல்லாததிற்கும் மத்தியில் வேறுபடுத்துவதைப்போன்று பர்ழுக்கும் சுன்னாவிற்கும் மத்தியில் வேறுபடுத்துவது இதன் ஹிக்மத்தாக இருக்கின்றது. எனவேதான் நோன்பு திறப்பதை விரைவுபடுத்துவதுடன், நோன்பு பிடிப்பதினை (ஸஹர் நேரத்தை) பிற்படுத்துவதும் விரும்பத்தக்க செயற்பாடாக உள்ளது.
அத்துடன் நோன்புப் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகைக்கு முன்னர் சாப்பிடுமாரும், ரமழான் மாதத்தை ஓர் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னர் நோன்பு நோற்று ரமழானை வரவேற்பதையும் தடுத்தார்கள். ஏனெனில், இவைகளெல்லாம் மார்க்கத்தில் ஏவப்பட்ட நோன்பிற்கும் மற்ற நோன்பிற்கும் மத்தியில் ஒரு பிரிவு இருக்கவேண்டும் என்பதுடன் இபாதத்திற்கும் இபாதத் அல்லாத காரியங்களுக்கு மத்தியிலும் ஒரு பிரிவு இருக்க வேண்டும் என்பதனாலாகும். இவ்வாறே அல்லாஹுத்தஆவால் கடமையாக்கிய ஜும்ஆ மற்றவைகளிலிருந்து வேறுபாடுகின்றது." (அல்பதாவா அல்குப்ரா 2-359)
"எனவே, பர்ழான மற்றும் சுன்னத்தான தொழுகைக்கு மத்தியில் ஒரு பிரிவு இருப்பதற்கான காரணி என்னவென்றால் ஒன்றை மற்றையதிலிருந்து வேறுபடுத்தி காட்டுவதாகும்.
இன்னும் சில அறிஞர்கள் அதற்கான மற்றுமொரு காரணியை குறிப்பிடுகின்றார்கள் : நாளை மறுமையில் அவனுக்காக ஸுஜுது செய்த இடங்கள் சாட்சிசொல்லும் என்பதனாலுமாகும்." (முன்னர் கூறப்பட்ட இமாம் நவவீ அவர்களின் கருத்தை போன்ற கருத்தாகும்)
அர்ரம்லி அவர்கள் கூறினார்கள் : "ஸுஜுது செய்யுமிடங்களை அதிகப்படுத்திக் கொள்வதற்காக வேண்டி ஒரு பர்ழான தொழுகைக்குப் பின் இன்னொரு பர்ழான தொழுகையை தொழுவதற்கோ அல்லது சுன்னத்தான தொழுகையை தொழுவதற்கோ ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்தில் தொழுமிடத்தை மாற்றிக் கொள்வது சுன்னத்தான வழிமுறையாகும். ஏனெனில் இச்செயலின் மூலம் பூமியை இபாதத்தைக் கொண்டு உயிர்ப்பித்தான் என்பதால் அவனுக்காக வேண்டி அந்த இடங்கள் நாளை மறுமையில் சாட்சி சொல்லும். அப்படி ஒரு இடத்திலிருந்து மற்றுமொரு இடத்தில் மாற்ற முடியவில்லை என்றால் ஒருவருடன் பேசுவதின் மூலமாவது இரண்டு தொழுகைகளையும் பிரித்துக்காட்டுவாயாக." (நிஹாயதுல் முஹ்தாஜ் 1-552)
யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே.
அரபியில் : https://islamqa.info/ar/116064
தமிழில் : றஸீன் அக்பர் (மதனி)
அழைப்பாளன் : தபூக் அழைப்பு நிலையம் சவுதி அரேபியா.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Paneer Health Benefits: ஆரோக்கியமான பால் உணவான பன்னீர் , அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவாக உள்ளது. ஆனால் , பன்னீர் சாப்பிடும் சரியான ம...

Popular Posts