லேபிள்கள்

திங்கள், 30 ஏப்ரல், 2012

விண்டோஸ் 7 இரகசியங்கள்...!!!


அநேகமாக அனைவரும் விண்டோஸ் 7க்கு மாறியிருப்பீர்கள் என்றே கருதுகிறேன். இதுவரை வெளிவந்துள்ள மைக்ரோசாப்டின் தயாரிப்புகளிலேயே மிகவும் தரமானது விண்டோஸ் 7 தான் என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் இருக்க முடியாது. விண்டோஸ் 7 ல் இல்லாத வசதிகளே இல்லை எனலாம். விண்டோஸ் 7ன் கீபோர்டு இயங்கமைவானது உங்களால் மவுஸ் இல்லாமலே அனைத்து பணிகளையும் செய்திடும் அளவுக்கு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் சில குறுக்குவிசை(shortcut keys) இந்த பதிவில் பார்ப்போம். இதில் பல குறுக்கு விசைகளை அனைவரும் அறிந்திருந்தாலும் சில மிகவும் புதியனவாக இருக்கும்..

1)Ctrl + Shift + Click- ஏதேனும் ஒரு புரோகிராமை அட்மினிஸ்ட்ரேட்டராக ஓப்பன் செய்ய:
நாம் பலநேரங்களில் சில புரோகிராம்களை அட்மினிஸ்ட்ரேட்டராக திறக்க வேண்டியிருக்கும் அதற்கு அந்த புரோகிராமின் மீது ரைட் க்ளிக் செய்து தேர்வு செய்வதற்கு Ctrl + Shiftஅழுத்திக்கொண்டு அந்த புரோகிராமின் மீது க்ளிக் செய்தால் அது தானாக அட்மினிஸ்ட்ரேட்டர் அதிகாரத்துடன் திறக்கும்.

2)Shift + Right-Click-ரைட் க்ளிக்கில் வரும் ஆப்ஷன்களை அதிகரிக்க செய்ய:
நீங்கள் ஷிப்ட் பட்டனை அழுத்திக்கொண்டு ஏதேனும் ஒரு கோப்பின் மீது ரைட் க்ளிக் செய்தால் தோன்றும் மெனுவானது சாதாரண மெனுவில் உள்ளதை விட சில அதிக ஆப்ஷன்களை கொண்டிருக்கும்.
இதில் சிகப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளவை புதிதாக வந்த ஆப்ஷன்கள்.

3)Windows-button + Number-டாஸ்க்பாரில் உள்ள புரோகிராம்களை திறக்க:
நாம் டாஸ்க்பாரில் உள்ள புரோகிராம்களை திறக்க அவற்றின் மீது க்ளிக் செய்வதை விட நமது விண்டோவ் கீயை அழுத்திக்கொண்டு அந்த புரோகிராம் டாஸ்க்பாரில் உள்ள வரிசை எண்ணை அழுத்தினால் அது தானாக திறந்து கொள்ளும். 1ல் ஆரம்பித்து 0 இறுதியாக வரும்.

4. Ctrl + Shift + N-ஆக்டிவ் விண்டோவில் புதிதாக ஒரு ஃபோல்டரை உருவாக்க:
நாம் ஒரு புதிய ஃபோல்டரை ஏதேனும் ஒரு இடத்தில் உருவாக்குவதற்கு மவுசை ரைட் க்ளிக் செய்து புதிய ஃபோல்டரை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக மேலே குறிப்பிட்டுள்ள விசைகளை அழுத்தினால் ஒரு புதிய ஃபோல்டர் திறக்கப்படும்.
5. Shift + Right-Click-ரைட் க்ளிக்கில் வரும் SEND TOமெனுவில் வரும் ஆப்ஷன்களை அதிகரிக்க:
நாம் ஏதேனும் ஒரு கோப்பின் மீது ரைட் க்ளிக் செய்யும்போது அதில் சென்ட் டூ என்ற ஒரு வசதி இருக்கும் அதில் குறிப்பிட்ட சில ஃபோல்டர்கள் மட்டுமே காட்டப்படும் மற்ற இடங்களுக்கு நகர்த்த நாம் கட் அல்லது காப்பி ஆப்ஷனை உபயோகிக்க வேண்டும்.. ஆனால் ஷிப்ட் கீயை அழுத்திக்கொண்டு அந்த ஆப்ஷனின் மீது ரைட் க்ளிக் செய்வதன் மூலம் சென்ட் டூ ஆப்ஷனில் வரும் இடங்கள் அதிகரிக்கும், இதனால் அந்த கோப்பினை வேறு இடத்திற்கு மாற்றுவது எளிதாக இருக்கும்.
6. Ctrl + Shift + Escape-விண்டோஸ் டாஸ்க் மேனேஜரை திறக்க:
வழக்கமாக நாம் டாஸ்க் மேனேஜரை திறக்க CTRL+ALT+DELETE விசைகளை உபயோகிப்போம், அதற்கு பதிலாக மேலே உள்ள விசைகளையும் உபயோகிக்கலாம்.

7. Windows-botton + Pause-உங்கள் கணினியின் System Propertiesவிண்டோவை திறக்க:
நாம் பல நேரங்களில் சிஸ்டம் புராபர்டீஸ் விண்டோவை திறக்க வேண்டியிருக்கும், ஏனெனில் இங்குதான் நமது கணினியின் பல்வேறு அளவீடுகள் இருக்கும் மற்றும் டிவைஸ் மேனேஜருக்கும் இங்கிருந்துதான் செல்வோம். இதனை திறக்க
 My Computer ஐகான் மீது ரைட் க்ளிக் செய்வதற்கு பதிலாக மேலே உள்ள விசைகளை அழுத்தினால் போதுமானது, இந்த Pause பட்டனானது பிரிண்ட் ஸ்கிரீன் பட்டன் வரிசையில், ஸ்க்ரோல் லாக்  பட்டனுக்கு பக்கத்தில் இருக்கும்.
8. Windows-button+B- வேறு இடங்களில் இருந்து சிஸ்டம் ட்ரேவிற்கு வருவதற்கு:
நாம் பல நேரங்களில் கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும்போது சிஸ்டம் ட்ரேவில் உள்ள ஐகான்களில் ஏதேனும் ஒன்றினை பயன்படுத்த வேண்டியிருக்கும், இதற்கு மவுசினை பயன்படுத்துவதை விட மேலே குறிப்பிட்டுள்ள விசைகளை அழுத்தினால் சிஸ்டம் ட்ரே ஆக்டிவ்வாக இருக்கும் இப்போது அம்புக்குறி விசைகளின் மூலம் உங்களுக்கு தேவையான ஐகானை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

9. Shift+Click on Taskbar Item-இரண்டாவது முறை அதே புரோகிராமினை திறக்க:
நாம் ஏதேனும் ஒரு புரோகிராம் உதாரணத்திற்கு கூகுள் க்ரோமில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அதில் இன்னொரு விண்டோவை திறக்க விரும்பினால் மவுசில் ரைட் க்ளிக் செய்து புது விண்டோவை திறப்பதற்கு பதிலாக ஷிப்ட் கீயினை அழுத்திக்கொண்டு அந்த புரோகிராமின் மீது க்ளிக் செய்தால் இன்னொரு விண்டோவ் ஓப்பன் ஆகிவிடும்.

10. Windows-button+D-எல்லா விண்டோக்களையும் மினிமைஸ் செய்து டெஸ்க்டாப்பினை காட்ட:
நாம் டெஸ்க்டாப்பிற்கு செல்வதற்கு எல்லா புரோகிராம்களையும் மினிமைஸ் செய்வதோ அல்லது அதற்கு பதில் டாஸ்க்பாரின் இறுதியில் உள்ள டெஸ்க்டாப் பட்டனை அழுத்துவோம். அதற்கு பதிலாக மேலே குறிப்பிட்டுள்ள பட்டன்களை அழுத்தினால் டெஸ்க்டாப் காட்டப்படும்.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

செப்டம்பர், 11, 2001 சம்பவங்கள்- அமெரிக்க சதித்திட்டம்!


செப்டம்பர் 11, அமெரிக்காவில் நியுயார்க் மாநிலத்தில் நியுயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக் மையத்தை தகர்த்த பொழுது, இறந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்திய நாள்! உலகின் மறுபக்கமான இந்த அமெரிக்க கண்டம் என்றமட்டுமில்லாது, உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இந்த நினைவு நாளில், இந்த சம்பவங்களில் இறந்த மக்களை நினைத்து பார்த்து இரங்கல் தெரிவித்தது! இந்த கொடூர சம்பவத்தின் போது இறந்தவர்கள் வெறும் அமெரிக்க நாட்டவர் மட்டுமில்லை, மொத்தம் 115 மற்ற நாட்டை சேர்ந்தவர்களும் தான்! இதில் நம் இந்தியர் ஒருவரும் உண்டு, அது போல் இந்தியாவிலிருந்து வந்து அமெரிக்க குடியுரிமைப்பெற்ற நம் தமிழ் நெஞ்சங்களும் உண்டு! அவர்கள் அனைவருக்கும் முதலில் அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்! 

இந்த செபடம்பர் 11,2001 சம்பவம், தீவிரவாதத்தின் உச்சமாய், அல்கொய்தா தீவிரவாதிகளால் திட்டமிட்டு செயல்படுத்த பட்ட ஒன்று என்று உலகிற்கு பறை சாற்றப்பட்டது. ஆனால் இந்த மொத்த சம்பவங்களும் அமெரிக்கா சதி திட்டமிட்டு, மிகவும் சரியான முறையில் நடந்தேறிய ஒன்று என்று இப்பொழுது புதிய தகவல்கள் வர ஆரம்பித்துள்ளன! அதுவும் இந்த சதி திட்டத்தின் நோக்கம், எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகளை ஆக்கிரமித்து, தன் ஆட்சி செலுத்தவே, இதை அமெரிக்க தொலை நோக்குத்திட்டத்துடன் செயல்படுத்தப்பட்ட ஒன்று என்றும், அது மட்டுமில்லாமல், மிகப்பெரிய காப்பு மேசடி ஊழல் செய்யவும், நிலுவையில் நிற்கும் முக்கியமான சில மோசடி வழக்குகளின் தாஸ்த்திவேஜாக்களை அழிக்கவும், அமெரிக்க அரசாங்கத்தில் செல்வாக்குடன் உள்ள ஒரு சில பேரால், இப்பொழுதைய அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள சில முக்கியமானவர்களுடன்,திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த அதிரடி தாக்குதல், நம் தமிழ் படங்களில் அரசியல்வாதிகளால் தூண்டபட்டு அப்பாவி பொது மக்களை அழிக்கும் சம்பங்கள் போல! (குறிப்பாக ஷங்கரின், இந்தியன் படத்தை ஞாபகம் படுத்திக் கொள்ளுங்கள், அதாவது வேண்டுமென்றே முதலமைச்சர் கலவரைத்தை தூண்டிவிட்டு, அப்பாவி மாணவர், மற்றும் பொது மக்களை கொல்லும் காட்சியை மனதில் கொள்ளுங்கள்!) இப்பொழுது இணையத்திலே, இன்றைய தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் வலம் வந்து கொண்டிருக்கிறது! இணையத்திலேயே சஞ்சரிக்கும் என் நண்பர்களே, உங்களில் எத்தனை பேருக்கு இது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு என எனக்குத்தெரியாது! ஆனால் அதை பற்றி என்ன என்று விளக்கவே இந்தப் பதிவு!

"Loose Change" என்கிற டாக்குமெண்டரி படம், இணையத்திலேயே கிடைக்கக்கூடிய வீடியோ கிளிப்புகளை கொண்டு, நடந்த ஒவ்வொரு சம்பங்களின் பின்னனனியையும் ஆராய்ந்து, அலசி, நடக்கப்பட்ட அத்தனை சம்பங்களும் சதித்திட்டத்தின் கீழ் நடக்கப்பெற்ற ஒன்று என்று கூறுகிறது இந்த திரைப்படம்! இந்த படத்தை இயக்கியவர் 'டைலன் ஏவரி'( Dylan Avery) என்ற 22 வயது நிரம்பிய ஒரு மாணவர்! இந்தப்படம் நடந்த அத்தனைச் சம்பவங்களுக்கும் ஒரு மாற்று நோக்கத்தையும், சதியின் ஆழத்தையும் திறம்பட விளக்குகிறது! அதாவது நம் நாட்டிலே அமைக்கப்படும் விசாரணை கமிஷன்ங்கள் போல், இந்த 9/11 சம்பங்களை ஆராய்ந்து உண்மையை வெளிக்கொணற இங்கும் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் அந்த கமிஷன் ஆராய்ந்து கண்டறியாத சில உண்மைகளை மாற்று விளக்கத்துடன் இது விளக்குகிறது! இந்த தாக்குதல், தீவிரவாதத் தால் உண்டான ஒன்றல்ல! இந்த தாக்குதலின் நோக்கமே வேறு என்றும், அதை மிக சாமர்த்தியமாக அமெரிக்க அரசாங்கம் நடத்தி முடித்திருக்கிறது என்று எடுத்துரைக்கிறது!

முதலில் என்னவோ டைலன் ஏவரி ஒரு ஃபிக்ஸன் படம் போல இந்த செப்டம்பர் 11 சம்பவங்களை கொண்டு படம் எடுக்க தீர்மானித்தார். ஆனால் உள்ளே தோண்டி தோண்டி அராய்ச்சி செய்ய இறங்கிய போது பல உண்மைகள் புலப்பட்டன. அதாவது இந்த சம்பங்களின் உள் நோக்கம் தீவிரவாதமில்லை! இது முழுதும் அமெரிக்க அராசாங்கத்தின் சதித்திட்டமே என்று! அதாவது எந்த காரணமின்றி எண்ணைய் வளம் கொண்ட அரபு நாடுகளான ஈராக் மீதோ, மற்ற நாடுகள் மீது போர் தொடுக்க முடியாது! சரியான, வலுவான காரணமின்றி அந்நாடுகள் மீது படையெடுக்க உலக நாடுகளின் ஆதரவு வேண்டுமென்றால் தம் நாட்டு மக்கள் சிலரைக் கொன்று தான் அக்காரியத்தை நிறைவேற்ற முடியும் என்ற திட்டமிட்ட சதியால் விளைந்தது தான் இந்த செப்டம்பர் 11ல் நடந்தேறிய நிகழ்ச்சிகள்! ஆனால் தம் நாட்டினரை மற்றும் பலி கொள்ளாமல், பல உலக நாட்டு குடிமகன்களையும் கொன்று குவித்து இக்காரியத்தை நிறைவேற்றி இருக்கிறது அமெரிக்கா என்று இத்திரைப்படம் அறைகூவல் விடுக்கிறது!

இப்படம் அந்த காலகட்டத்தில் அமெரிக்கா க்யூபா மீது போர் தொடுக்க கையாண்ட ராஜதந்திர சதி திட்டங்களை விளக்கும் ஆரம்பத்தோடு தொடர்கிறது! பிறகு ஏற்பட்ட தாக்குதல் சம்பவங்களை ஒவ்வொன்றாக ஆராய்கிறது. முதலில் அமெரிக்க ராணுவ தலைமை பீடமான பெண்டகனை தாக்கிய விமானத்தை ஆராய்ந்து, அது உண்மையிலேயே பயணிகள் சென்ற போயிங் விமானம் தானா, இல்லை அமெரிக்கா தன் மீது ஏவிக்கொண்ட ஏவுகனைகளா என்பதை ஆராய்கிறது! அதை விஞ்ஞான பூர்வமாகவும், சிதலமைடந்த விமான பாகங்கள் அனத்தும் போயிங் விமானத்துடன் ஒன்றாத தன்மையும் விளக்குகிறது. ஆக இது திட்ட மிட்ட சதியே என்று கூறுகிறது!
 

இரண்டாவதாக "World Trade Center" என்கிற உலக வர்த்தக மைய கட்டிடங்கள், விமானத் தாக்குதலால் எப்படி அடுக்கிவைத்த சீட்டு கட்டுகள் கீழ் (அவர்கள் சொல்லும் உதாரணம், அடுக்கி வைத்த 'பேன் கேக்' போல என்று) விழுவது போல் விழும், அதை முறையாக வெடி வைத்து தகர்க்காவிடில் என சர்ச்சையை கிளப்பி இருக்கிறது! இடிந்து விழுந்த WTC டவர்கள் 1, 2, மற்றும் 7 (இந்த WTC கட்டிட வளாகம் பற்றி என்னுடய முந்தைய பதிவான'World Trade Center-சமீபத்தில் பார்த்த படங்கள்!'
 என்ற பதிவை படிக்கவும்!) ஆகியவை முறையாக இடித்து தள்ளிய நிகழ்ச்சி போல் தான் இருக்கிறதே தவிர, தீவிரவாதிகளால் ஓட்டி சென்ற விமானம் மோதி தீப்பிடித்ததால் அவைகள், வெப்பம் தாங்காமல் விழவில்லை என கர்ஜிக்கிறது! இந்த கட்டிடம் கட்டுவதற்கான பொருட்களுக்கு சான்று வழங்கிய தரகட்டுப்பாட்டு நிறுவனங்களை அதிலும் துணைக்கழைத்து, விஞ்ஞான, பொறியல் தொழில்நுட்ப காரணங்களோடு விளக்குகிறது( நான் பெரிய எண்ணைய் சுத்திகரிப்பு ஆலை கட்டுமான தொழில் துறையில் இருப்பதால், இந்த அமெரிக்காவில் இருக்கும் தரக்கட்டுபாட்டு நிறுவனங்களின் நிர்ணயம், அங்கீகாரம் பற்றி தெரியும். இது மிகவும் பிரசித்து பெற்ற ஒன்று, கட்டுமான பொருட்கள் தயாரிப்பாளர்கள், உலக அளவில் அனைவராலும் பின்பற்றி வரப்படுவது, உதாரணத்துக்கு ASTM, ASME, API, NIST, ISA போன்றவற்றின் தரக்கட்டுபாடுகளின் நெறிமுறைகள் தெரியவில்லை என்றால் நீங்கள் இந்த கட்டுமான பொறியல் துறையில் காலம் தள்ள முடியாது, ஆதாலால், இப்படம் எடுத்துரைக்கும் சில உண்மைகள் நம்ப மறுக்க இயலாது!)

அடுத்து யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானம் 93 வின் விபத்து பற்றி கூறுகிறது!(இது பற்றி ஒரு ஆங்கில படமும் வந்துள்ளது, வேண்டுமானால் அப்படம் பார்க்கவும், இச்சம்பவம் அனைத்தும் நீங்கள் அழகாக திரைப்படத்தில் பார்க்கலாம்!) அந்த விமானம் 93வால் விபத்தே நிகழவில்லை என சாதிக்கிறது! இது அமெரிக்க ராணுவத்தினரால் நடத்தப்பட்ட திட்டமிட்ட சதி. இந்த விமான விபத்தில் சிதிலமடைந்த பாகங்கள் எதுவும் மிஞ்சவில்லை என்பது ஆச்சிர்யத்திற்குண்டான ஒன்று என கேள்வி எழுப்புகிறது! விபத்துகளை பற்றி காண்பிக்கப்பட்ட அத்தனை புகைப்படங்களும் ஜோடிக்கப்பட்டவை, விமானத்திலிருந்து, அதுவும் முப்பதாயிரம் அடிக்கு மேல் பறக்கும் பொழுது செல் போனால் பேசுவது சாத்தியமில்லை! ஆக இந்த விமானம் தாக்குதலுக்குள்ளனா போது பயணம் செய்து பயணியர் செல்போன் கொண்டு தத்தம் உறவினர்களை அழைத்து விமானம் கடத்தப்படுவதை சொன்னதாக கூறியது எல்லாம் ஜோடிக்கப் பட்ட கதை என்று கூறுகிறது! (அவர்கள் கூறுவதோ என்னவோ வாஸ்தவமே, நானும் முப்பதாயிரம் அடிக்கு மேலே பறக்கும் பொழுது என் செல் போனை நோண்டி பார்த்திருக்கிறேன், சிக்னல் இருக்கிறது என காண்பிக்கும், ஆனால் பேச முற்பட்டு தொடர்பு கொள்ள முயன்று பலமுறை தோல்வியுற்றிருக்கிறேன்!)

அடுத்து இச்சம்பவங்களால் அடிக்கப்பட்ட கொள்ளைகள், அதாவது முன்பே கூறியது போல காப்பு மோசடி ஊழல்கள் போன்றவற்றால் அடித்த கொள்ளைகள்! அதாவது இச்சம்பவம் நடைபெற சில ஆறு வாரங்களுக்கு முன்னே தான் 'Larry A. Silverstein' என்கிற ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யும் தொழிலதிபர் இந்த "World Trade Center" கட்டிடங்களை குத்தகைக்கு எடுத்து, இது போன்ற தீவிர வாத கட்டிட விமான தாக்குதலுக்கு எதிரான காப்புரிமை எடுத்தார். ஆக முன்கூட்டியே திட்டமிட்டு குத்தகை எடுத்து காப்புரிமை அதன் பேரில் எடுத்து, இச்சம்பவத்தின் மூலம் பல பில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டினார் என்ற குற்றச்சாட்டுடன் திரைப்படம், இச்சம்பவத்துடன் இணைந்த அத்தனை ஊழல்களையும் காண்பிக்கிறது!
 

ஆக இவை அனைத்தும், சுமார் ஒன்றாரை மணி நேரம் ஓடக்கூடிய இத்திரைப்படத்தில் நீங்கள் காணலாம். இந்த டாக்குமெண்டரி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விமரிசனம் செய்தும் கண்டன வெப்சைட்களும், இந்த டாக்குமெண்டரி படத்தில் கூறப்பட்ட ஒவ்வொரு விளக்கத்திற்கும் எதிர் விளக்க பதில்களும் சொல்லி தரநிர்ணய கட்டுபாட்டு துறையும் விளக்கி இருக்கும் பக்கங்களையும் நீங்கள் இணையத்தில் காணலாம்! ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த விளக்க உண்மைகளை அமெரிக்க மற்றும் கனடா வாழ் மக்கள் நம்ம ஆரம்பித்துள்ளனர். ஆக மாறி வரும் உலக அரசியலில் நடந்து முடிந்த இந்த சம்பவங்களினால் நம் கண்ணதாசன் பாடியது போல 'யாரைத்தான் நம்புவதோ இந்த புண்ணிய பூமியிலே என புலம்பத்தான் வேண்டும்! இங்கு நடந்து முடிந்த அனைத்து சதித்திட்ட அரசியலும் நமக்கொன்றும் புதிதல்ல! நம் நாட்டில் அன்றாடம் நடப்பது தான்! படிப்பறியா நம் மக்களுக்கு இது போன்ற கண்டுபிடிப்பு விளக்கத் திரைப்படங்கள் ஒன்றும் ஆச்சிரியமில்லை! ஆனால் படித்து முன்னேறிய இந்த பக்க பூமியில், இது போன்ற விளக்க திரைப்படங்கள் பெரும் சர்ச்சையுடன் மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது! ஆனால் நான் கூறியது போல வளர்ந்த தொழில்நுடபத்தினால், சராசரி மனிதனும் திரைப்படமெடுத்து கலக்கலாம்! வார்னர் பிரதர்ஸ், யுனிவர்சல், ஏவிஎம் போன்ற பெரும் திரைப்பட நிறுவனங்கள் தேவையில்லை!

சனி, 28 ஏப்ரல், 2012

வெற்றிக்கு ஒரு புத்தகம் – சந்தோஷ வழி…உபயோகமான தகவல்கள்!


வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா?
இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் தி வே டு ஹேப்பினெஸ்இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது. 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
தி வே டு ஹேப்பினஸ்புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள். இவற்றை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம்என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடித்துச் சொல்கிறார்.
சந்தோஷத்தின் வழியாக அவர் முன்வைக்கும் அந்த எளிய சூத்திரங்கள், இங்கே சுருக்கமாக:
1. முதலில், உடம்பைப் பார்த்துக்கோங்க, சுவர் இருந்தால்தான் சித்திரம்.
2. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.
3. உங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, பிஸினஸ் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள்.
4. உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்.
5. பெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.
6. “அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள்.
7. உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளுங்கள்.
8. யாரையும் கொல்லாதீர்கள், வார்த்தைகளால்கூட!
9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி!
10. பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள்.
11. ஒருவர் நல்லது செய்யும் போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்துவிடாதீர்கள்.
12. உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு.
13. திருடாதீர்கள்.
14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள்.
15. சொன்ன வாக்கை மீறாதீர்கள்.
16. “சும்மா இருப்பதே சுகம்என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.
17. கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழவேண்டும்!
18. அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள்.
19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.
20. அதேபோல், அவர்கள் உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்ள் அவர்களை நடத்துங்கள்.
21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது, அள்ளி எடுத்துக்கொண்டு முன்னேறுங்கள்.
Pettagum

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

கார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்


வேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில் சாலை விதிமுறைகளையும், டிரைவிங்கையும் முழுமையாக கற்றுக்கொண்டு புது காரில் ஏறி உட்காருவது நல்லது.

டிரைவிங் ஸ்கூலுக்கு போய் குறைந்தது 10 மணிநேரமாவது பயிற்சி பெற்று பின்னர் காரை வாங்குவது உத்தமம்.

தற்போது இருக்கும் போக்குவரத்து நெரிசலில் கார் ஓட்டுவது பெரிய சவாலான காரியமாகவே உள்ளது. குறிப்பாக, நகர சாலைகளில் நன்றாக கார் ஓட்டத் தெரிந்தவர்களே படாத பாடு படுகின்றனர்.

இந்த நிலையில், புதிதாக கார் ஓட்ட கற்றுக்கொள்பவர்கள் சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் விரும்ப தகாத சம்பவங்களை தவிர்த்து ஒரு முழுமையான டிரைவராக மாறிவிடலாம்.

புதிதாக கார் ஓட்ட கற்றுக்கொள்பவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்களை காணலாம்.

சீட் பெல்ட்:

கார் இருக்கையில் அமர்ந்தவுடன் முதலில் விரட்ட வேண்டியது தேவையில்லாத பதட்டத்தைத்தான். கார் இருக்கையில் ஏறி அமர்ந்தவுடனேயே ரிலாக்ஸ்டாக முதலில் செய்ய வேண்டியது சீட் பெல்ட்டை கட்டாயம் அணிய வேண்டும்.

கார் ஏபிசி தெரிஞ்சிக்கலாம்...

அதாவது, ஆக்சிலேட்டர், பிரேக், கிளட்ச் என்ற காரின் 3 கன்ட்ரோல் மும்மூர்த்திகளைத்தான் சுருக்கமாக ஏபிசி என்று குறிப்பிடுகின்றனர். கிளட்சில் இடது காலையும், ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக்குகளுக்கு வலது காலையும் பயன்படுத்தவும்.

கியர் மாற்றும் முறை...

எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கு முன் கியர்கள் எந்த முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு கார்களிலும் கியர் மாற்றும் அமைப்பு மாறுபடலாம். இதை தெரிந்து வைத்துக்கொள்வது மட்டுமின்றி நினைவில் வைத்துக்கொள்வதும் அவசியம்.

எஞ்சினை ஸ்டார்ட் செய்யும்போது...

எஞ்சினை ஸ்டார்ட் செய்யும் முன் ஹேண்ட் பிரேக்கை ரிலீஸ் செய்துவிட்டு நியூட்ரல் கியரில் கார் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.

கிளட்ச்சையும் பிரேக்கையும் மிதித்துக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்யவும். முன்பக்கம் வாகனங்கள் எதுவும் இல்லையென்றால் முதல் கியரை மாற்றி கிளட்சை மெது மெதுவாக ரிலீஸ் செய்யவும். ஆக்ஸிலேட்டரை மிதிக்க அவசியமில்லை.
கிளட்ச் பைட்டிங் பாயிண்ட்:
பைட்டிங் பாயிண்ட் என்று டிரைவிங் ஸ்கூல் டிரைவர்கள் கூறுவார்கள். அதாவது கிளட்சை குறிப்பிட்ட தூரம் வரை விட்டாலும் கார் மூவ் ஆகாது. ஆனால், இந்த பைட்டிங் பாயிண்ட் என்று சொல்லும்
இடத்திற்கு கிளட்ச் ரிலீஸ் ஆகும்போதும் கார் மெதுவாக நகரும். இந்த கிளட்ச் கன்ட்ரோலை தெரிந்துகொண்டால் கால் டிரைவர் ஆகிவிடலாம்.

மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் இஞ்ச் இஞ்ச்சாக காரை நகர்த்துவதற்கு இந்த பைட்டிங் பாயிண்ட் கிளட்ச் கன்ட்ரோலிலேயே காரை செலுத்துவார்கள் . ஆக்சிலேட்டரை மிதிக்க வேண்டிய அவசியமில்லை. வேகமெடுக்கும்போது மட்டும் ஆக்சிலேட்டர் பக்கம் வலது கால் செல்ல வேண்டும்.

ஸ்டீயரிங் கன்ட்ரோல்:

அடுத்து இப்போது கவனிக்க வேண்டியது ஸ்டீயரிங் கன்ட்ரோல். கிளட்ச் கன்ட்ரோலுடன் ஸ்டீயரிங் கன்ட்ரோலும் மிக அவசியம். மேலும், காரின் ஸ்டீயரிங் வீல் ஒன்றரை ரவுண்டு சுற்றும் அளவுக்கு ப்ளே இருக்கும்.

இப்போது வரும் புதிய கார்கள் அனைத்தும் கிளட்சை சரியாக ரிலீஸ் செய்தாலே 10 கிமீ வேகம் வரை செல்லும். பைட்டிங் பாயிண்ட் கிளட்ச் கன்ட்ரோலை முதலில் தெரிந்துகொண்டு ஒவ்வொரு முறையும் நிதானமாக காரை மூவ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

15 கிமீ வேகத்தை கார் எட்டியவுடன் கிளட்சை மிதித்து இரண்டாவது கியரை மாற்றுங்கள். கிளட்சை முழுவதுமாக ரிலீ்ஸ் செய்துவிட்டு ஆக்சிலேட்டரை கொடுக்க வேண்டும்.

வளைவுகளில் திரும்பும்போது...

பொதுவாக இடதுபுறத்தில் காரை செலுத்த பழகிக்கொள்ளுங்கள். வளைவுகளில் திரும்பும்போது எந்த பக்கம் திரும்ப வேண்டுமோ அதற்கான இன்டிகேட்டரை ஆன் செய்து கொள்வது மிக அவசியம்.

பின்னர் காரின் வேகத்தை முழுவதுமாக குறைத்துக்கொண்டு இருபுறமும் வளைவில் பார்த்துக்கொண்டு உங்கள் கார் செல்வதற்கு போதிய இடம் இருந்தால் ஆக்சிலேட்டரை மிதித்து காரின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

குறுகிய சந்துகளில் திருப்பும்போது காரை உடனடியாக திருப்ப வேண்டாம். பாதியளவுக்கு காரின் முன்பகுதியை தெருவிற்குள் நுழைத்துக்கொண்டு அதன் பின் திருப்பினால் எளிதாக திரும்பும்.
யு டர்ன் போடும்போது ... 

ஸ்டீயரிங் வீலில் ஒன்றரை ரவுண்டு சுற்றும் அளவுக்கு ப்ளே இருக்கும் என்று முன்பு கூறினோம் அல்லவா. அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பெரிய வளைவாக இருந்தால் ஸ்டீயரிங் வீலில் பாதி ரவுண்டு திருப்பினாலே கார் பெரிய வளைவுகளில் அட்டகாசமாக திரும்பும்.

சிறிய வளைவுகளில் திரும்பும்போது ஒரு ரவுண்டு ஸ்டீயரிங்கை திருப்பிக்கொண்டால் கனக்கச்சிதமாக திரும்பும். இதேபோன்று, யு டர்ன் போடும்போது முழு ரவுண்டு அதாவது ஒன்றரை ரவுண்டும் திருப்பினால் அழகாக யு டர்ன் போட்டுவிடலாம்.

வேகத்தடையில் ஏறி இறங்கும்போது...


வழியில் சிறிய வேகத்தடை இருந்தால் வேகத்தை முழுவதுமாக குறைத்துக்கொண்டு முதல் கியரை மாற்றி சிறிது தூரத்துக்கு முன்னரே கிளட்சையும், பிரேக்கையும் ரீலிஸ் செய்துவிடவும்.

கார் தானாகவே அழகாக தவழ்ந்து எந்த வித பாதிப்பு இல்லாமல் வேகத்தடையை கடந்துவிடும். இப்போது ஆக்சிலேட்டரை கொடுத்து வேகத்துக்கு தகுந்தாற்போல் கியரை அடுத்தடுத்து மாற்றுங்கள்.

அகலமான அல்லது பெரிய வேகத்தடை இருந்தால் இரண்டாவது கியரில் வைத்து காரை மேற்சொன்னது போல் மூவ் செய்யவும். தேவையான இடங்களில் கண்டிப்பாக ஹாரன் அடிக்க மறக்காதீர்.

பிரேக் பிடிக்கும்போது...

தற்போது வரும் கார்கள் அனைத்தும் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டவை. எனவே, பிரேக்கை லேசாக அழுத்தினால் போதுமானது. புதிதாக கார் ஓட்ட கற்றுக்கொள்ளும்போதே பிரேக்கை அழுத்தும் முறையையும், கன்ட்ரோலையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
Pettagum

வியாழன், 26 ஏப்ரல், 2012

காரில் கியர் மாற்றுவது எப்படி?- டிப்ஸ்!


கார் ஓட்டும் கலைக்கு அடிப்படையானது கியர் மாற்றும் தந்திரம். எரிபொருள் சிக்கனத்திற்கு கியர் மாற்றும் முறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வேகத்திற்கு தகுந்தாற்போல் காரில் கியர் மாற்ற தெரிந்துகொண்டால், எரிபொருள் சிக்கனம் கிடைக்கும் என்பதோடு, கார் ஸ்மூத்தாக செல்லும்.

இல்லாவிட்டால், எவ்வளவு காஸ்ட்லியான காரை வாங்கி ஓட்டினாலும், கட்டை வண்டியில் போவதற்கு சமமான அனுபவத்தையே பெற முடியும். மேலும், ஸ்மூத்தாககவும், வேகத்திற்கு சரியான கியரிலும் ஓட்ட பழகிக்கொண்டால் கியர்பாக்ஸ் மற்றும் எஞ்சின் தீர்க்க ஆயுளை பெறும்.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்களில் முதல் கியர் போட்டவுடன் கார் 10 முதல் 15 கி.மீ வேகம் எடுக்கும் வரை அடுத்த கியரை மாற்ற வேண்டாம். 10கி.மீ வேகத்திற்கு மேலும் 15 கி.மீ வேகத்திற்குள்ளும் இரண்டாவது கியரை மாற்றவும்.

இரண்டாவது கியருக்கு ஒரு சில கூடுதல் சிறப்புகள் உண்டு. அவசர காலத்தில் இரண்டாவது கியரை பிரேக் போன்று பயன்படுத்தலாம். அவசர நேரத்தில் கிளட்ச் பிடிக்காமல் இரண்டாவது கியரை மாற்றினால், கார் உடனடியாக சடன் பிரேக் அடித்தது போன்று நின்றுவிடும். இது விபத்துக்களிலிருந்து தப்பிக்க உதவும். இதற்கு எஞ்சின் பிரேக்கிங் என்று கூறுவார்கள்.

தவிர, வளைவுகளில் திரும்பும்போது இரண்டாவது கியரில் திரும்ப வேண்டும். இது மிகவும் பாதுகாப்பானதும், சரியானதும் கூட. முதல் இரண்டு கியரை மாற்றுவதில் நீங்கள் திறமைசாலிகளாகிவிட்டாலே போதும். வேகத்தை கூட்ட வேண்டும் எனும்போது அடுத்தடுத்த கியர்களை மாற்றிக்கொள்ளலாம்.

மேலும், ஒரு குறிப்பிட்ட கியரிலிருந்து அடுத்த கியரை மாற்ற வேண்டும் என்பதை எஞ்சினிலிருந்து சப்தத்தை வைத்தும் அறிந்துகொண்டு அதற்கேற்ப கியரை மாற்றலாம். மூன்றாவது கியர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மிதமான வேகத்தில் ஓட்டுவதற்கு சிறந்தது.

தவிர, கார் கேஜில் இருக்கும் ஆர்பிஎம் மீட்டரில் காண்பிக்கும் எஞ்சி்ன் வேகத்தை வைத்தும் சரியான கியரில் காரை இயக்கமுடியும். டாப் கியரில் செல்லும்போது பொதுவாக ஆர்பிஎம் மீட்டரில் எஞ்சின் வேகம் 3,000 முதல் 3,500 ஆர்பிஎம்மாக இருக்கும்.

தொடர்ந்து நாம் வேகமாக செல்லப்போகிறோம் என்று தெரிந்தவுடன் டாப் கியரை மாற்றலாம். இது காருக்கு கார் மாறும். பொதுவாக வேகத்தை குறைத்து ஓட்ட வேண்டும் எனும்போது இரண்டாவது கியரை மாற்றவும். முதல் கியருக்கு மாற்ற வேண்டாம். முதல் கியர் காரை கிளப்பும்போது மூவ் செய்யும்போது மட்டும் பயன்படுத்தவும்.

ரிவர்ஸ் கியரை மாற்றும்போது கிளட்ச் மற்றும் ஆக்சிலேட்டரை சரியான அளவிலும், கவனமாகவும் கொடுக்கவேண்டும்.

சரியான வேகத்தில் கியரை மாற்ற பழகிக்கொண்டால், கார் ஓட்டுவதில் நீங்கள் பாதி எக்ஸ்பர்ட் என்பது மட்டுமல்ல, உங்களது ஒவ்வொரு பயணமும் இனிதாக அமையும்.
pettagum

புதன், 25 ஏப்ரல், 2012

நபி மருத்துவம் திராட்சை---உணவே மருந்து


திருக்குர் ஆனில் திராட்சையைப்பற்றி பதினோரு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நபி பெருமானார் திராட்சையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் என்று முஆவியா (ரலி) கூறியதாக அபூநயீம் தமது நூலில் எழுதியுள்ளார்கள்.

உலர்ந்த திராட்சையை சாப்பிடுங்கள். இது மிகச் சிறந்த உணவாகும். அசதியைப் போக்கும். கோபத்தைத் தணிக்கும். நரம்புகளுக்கு வலுவூட்டும். இதை சமையலில் சேர்த்தால் நல்ல மணம் தரும். இது சளியை வெளியேற்றும். முகத்தை கவர்ச்சிகர மாக்கும்.

சிவப்பு நிற உலர்ந்த திராட்சையின் 21 விதைகளை தினசரி சாப்பிடுபவர்களுக்கு கொடிய வியாதிகள் வராது. (அபூநயீம்)

உங்கள் நலனுக்காக உலர்ந்த திராட்சைப் பழங்கள் உள்ளன. இது உடலை கவர்ச்சிகரமாக்கும். சளியை வெளியேற்றும். நரம்புகளுக்கு சக்தி தரும். பலவீனத்தைப் போக்கும். கவலையை மறக்கச் செய்து மனதில் சந்தோஷத்தை உண்டாக்கும். சுவாசத்தில் நல்ல வாசனையை உண்டாக்கும்.

எங்கள் நாட்டில் திராட்சை இருக்கின்றது. அதன் சாற்றை பிழிந்து நாம் குடிக்கலாமா? என்று நபி பெருமானிடம் ஹஷ்ரத் தாரிக்பின் சுவேத் ஹஜிரி (ரலி) என்பவர் கேட்டார். குடிக்க வேண்டாம்என்று அதற்கு பதில் கிடைத்தது.

திராட்சை சாற்றை நாம் நோயாளிகளுக்கு சிகிச்சைக்காகத் தருகிறோம் என்று அவர் மீண்டும் கூறியதற்கு, பதில் அளிக்கையில், இதில் வியாதியை குணமாக்கும் மருத்துவத்தன்மை ஏதுமில்லை. இது ஒரு வியாதியே ஆகும் என்று நபி பெருமானார் கூறினார். (முஸ்லிம்-அபூதாவத்திர்மிதீ)

சாராயத்தை மருந்தாகப் பயன்படுத்துபவர்களுக்கு இறைவன் சுகம் அளிப்ப தில்லை. (அபூநவீம் பதஹுல் கபீர்)

திராட்சைப் பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்று அண்ணல் நபி நாயகம் தெளிவாகக் கூறியுள்ளார். அதைப் பின்பற்றினால் திராட்சையால் பல நன்மைகளைப் பெறலாம். 100 கிராம் திராட்சைப் பழங்களில் 1.9 கிராம் புரோட்டீன், 1.05 கிராம் கொழுப்புச் சத்து, 83 மில்லி கிராம் கார்போ ஹைட்ரேட். 84 மில்லி கராம் கால்ஷியம், 18 மில்லி கிராம் பாஸ்பரஸ், 5 மில்லி கிராம் வைட்டமின் சி, 150 யூனிட் வைட்டமின் ஏ, அதன் அளவில் வைட்டமின் பி2, பி1 ஆகியவை கிடைப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தினசரி ஒருவர் 125 கிராம் முதல் 250 கிராம் வரை கிஷ்மிஷ் பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு வலிமை கிடைக்கும்.

இந்திய அரசின் அக்ரிகல்ச்சுரல் கெமிஸ்ட் நிறுவனம் உலர்ந்த திராட்சையை ஆய்வு செய்தது. இதில் மனிதனுக்கு தேவைப்படும் 90 சதவீதம் ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. உடலுக்குத் தேவையான தாது உப்புக்களைத் தவிர, அனைத்து வைட்டமின், குளுக்கோஸ், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்ஷியம், அக்சாலிக் மற்றும் டார்டாரிக் ஆசிட் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. இதன் இலைகளிலும், தோலிலும் ஒருவிதமான எண்ணெய் கொழுப்புச்சத்தும், 18% டேனிக் ஆசிட்டும் இருக்கின்றது. இது உடலுக்குத் தீங்கு விளை விப்பதில்லை. இதை சர்க்கரை வியாதியினரும் பயன்படுத்தினாலும், இரத்தத்தில் சர்க்கரை சத்து அதிகரிக்காது என்று கூறுகிறார்கள்.

திராட்சையைப் பதமாக உலர வைத்து விற்பனை செய்யப்படும் பெரிய திராட்சைக்கு மவீஜி முனேகா என்றும், சிறிய பழத்தை கிஷ்மிஷ் பழம் என்றும் அழைப்பார்கள். இது ஒரு நல்ல இரத்தச் சுத்தி மருந்தாகும். யுனானி மருத்துவக் களஞ்சியத்தில் உலர்ந்த திராட்சை, ஆகாஷவல்லி இரண்டை யும் சமஅளவில் கொதிக்க வைத்து குடித்தால் குடிப் பழக்கம் நீங்கும், அசுத்தமான இரத்தமும் சுத்தமாகும். குடியால் ஏற்பட்ட சகல பிரச்சினைகளும் குணமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

9 உலர்ந்த திராட்சைப் பழத்தையும், ஆகாஷ வல்லி 6 கிராமும் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை மதுவைக் குடிக்க ஆர்வம் ஏற்படும் போது கொடுத்தால் மதுவின் மீதுள்ள தாகம் வெறுப்பாகும். இதையே தினசரி இரண்டு வேளை குடித்து வந்தால் இரத் தத்தில் உள்ள சாராயச்சத்து வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.
Pettagum

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய்!---உணவே மருந்து

நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.
பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.

இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.
இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஜீரண சக்தியைத் தூண்ட
நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.

நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.
நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.
அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
இது மூளைக்கு சிறந்த டானிக்.
நெய்யில் Saturated fat - 65%

Mono - unsaturated fat - 32%

Linoleic - unsaturated fat -3%
இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.
நெய் உருக்கி மோர் பெருக்கி....

அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.

தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.
மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
* ஞாபக சக்தியை தூண்டும்
* சரும பளபளப்பைக் கொடுக்கும்

* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.
உடல் வலுவடைய
சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே...
இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
குடற்புண் குணமாக

குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.
இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன்டும்.
Pettagum

திங்கள், 23 ஏப்ரல், 2012

தொலைக்காட்சியை பராமரிக்கும் முறைகள்---உபயோகமான தகவல்கள்,


தொலைக்காட்சிக்கு வோல்டெஜ் ஸ்டெபிலைசர் மிக அவசியம்.
தொலைக்காட்சியை நிறுத்தும்போது முதலில் தொலைக்காட்சியில் உள்ள சுவிட்சை அணைத்து விட்டுப் பிறகு மின் இணைப்பைத் துண்டிக்கும் சுவிட்சை அணைக்க வேண்டும். தொலைக்காட்சியை இயக்க விரும்பும்போது முதலில் மின் சப்ளை சுவிட்சைப் போட்டு விட்டுப் பிறகு தொலைக்காட்சி. சுவிட்சைப் போட வேண்டும்.
அதிக வெளிச்சம் உள்ள இடத்திலும் வெளிச்சம் மிகவும் குறைவாக உள்ள இடத்திலும் தொலைக்காட்சி பார்க்கக் கூடாது. அறையிலுள்ள விளக்கு 40 முதல் 60 வாட் பல்புகளுக்கு மேற்பட்டதாக இருக்கக் கூடாது.
சுவற்றை ஒட்டினாற் போல் தொலைக்காட்சியை வைக்கக் கூடாது. அரை அடி இடைவெளியாவது அவசியம். அப்போது தான் செட்டுக்குள் காற்றோட்டம் இருக்கும். அழகான காபினட்களில் சிலர் தொலைக்காட்சியை வைத்திருப்பார்கள். அதன் பின்புறம் திறந்தபடி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
தண்ணீர் டம்பளர் போன்றவற்றை தொலைக்காட்சி மேல் வைக்கக் கூடாது. ஷார்ட் சர்க்யூட் ஆகிவிடும்.
ரேடியோ, டேப்ரிகார்டரை கலர் டி,வி மீது வைக்கக் கூடாது. ஸ்பீக்கரின் காந்தம் தொலைக்காட்சியில் கலர்ப்புள்ளிகள் தோன்றச் செய்யும்.
ஆன் செய்த நிலையில் தொலைக்காட்சியை நகர்த்தக் கூடாது.
தொலைக்காட்சி மேல் நட், ஸ்குரூ போன்றவற்றை வைக்கக் கூடாது. அவை தவறிப் பின் துளைகள் வழியாக உள்ளே விழுந்தால் தொலைக்காட்சி பழுதடையும்.

ரிமோட் கன்ட்ரோல் வைத்திருப்போர் அதையே பயன்படுத்தவும்.
புயல், மின்னல் ஏற்படும்போது தொலைக்காட்சி ஒயரின் இணைப்பை துண்டித்து விட வேண்டும்.
மின்சாரம் தடைபடும்போது உடனடியாக தொலைக்காட்சியை அணைத்து விட வேண்டும்.
தொலைக்காட்சியை துணி அல்லது அதற்குரிய கவரால் மூடும்போது தொலைக்காட்சியின் பின்பகுதி திறந்தபடி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத உயரத்தில் தொலைக்காட்சியை வைக்க வேண்டும்.
எப்போதும் தொலைக்காட்சி பார்க்கும்போதும் 10 அடிகள் விலகி அமர்ந்து பார்ப்பது கண்களுக்குப் பாதுகாப்பானது.
தொலைக்காட்சியை ஜன்னல் அருகில் வைப்பதை தவிர்ப்பதன் மூலம் மழை, இடி, மின்னல் ஆகியவற்றிலிருந்து தொலைக்காட்சியை காக்கலாம். தொலைக்காட்சியின் பிரதானப் பகுதியே பிக்சர் டியூப் தான். முறையாக பராமரிக்கும் பட்சத்தில் பிக்சர் டியூப் நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கும். தொலைக்காட்சியும் அடிக்கடி பழுதாகாது.
Pettagum

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

குக்கர் பராமரிப்பு---வீட்டுக்குறிப்புக்கள்


1. குக்கரின் கொள்ளளவில் 3ல் 2 பங்கு அதாவது குக்கரின் முக்கால் பகுதிக்கு மட்டும் அரிசி மற்றும் காய்கறி வகைகளைச் சமைக்க வேண்டும்.
2. குக்கரில் உள் தட்டு வைத்து பாத்திரம் வைத்து சமைத்ததினால் அடியில் உப்புக் கறை போல் ஏற்பட்டு விடக் கூடும். அதைத் தவிர்க்கப் புளித் துண்டு அல்லது பிழிந்த எலுமிச்சம் பழத் தோல் போட்டு பாத்திரம் வைத்து சமைத்தால் கறை ஏற்படாது.
3. குக்கரில் வேக வைக்க வேண்டிய பொருட்களை அடுப்பில் வைத்தவுடன் குக்கர் குண்டை போடக் கூடாது. சிறிது நேரம் கழித்து குக்கர் மூடியில் உள்ள வெண்ட் பைப் வழியாக நீராவி வருவதைப் பார்த்த பிறகே குண்டு போட வேண்டும். நீராவி வரவில்லையென்றால் அடுப்பைச் சிறிய அளவில் வைத்து விட்டு குக்கர் மூடியில் உள்ள வெண்ட் பைப்பில் பொருள்கள் அடைத்து இருந்தால் சுத்தம் செய்துவிட்டு குண்டு போட வேண்டும்.
4. குக்கரில் கைப்பிடி உடைந்து விட்டால் உடனடியாகப் புதியது மாற்றி விட வேண்டும். ஏனென்றால் குக்கரில் பொருள்களை வைத்து மூடுவதற்கும் திறப்பதற்கும் கஷ்டமாக குக்இருக்கும். அதோடு அழுத்தத்தில் இருக்கும் நீராவி நம் உடம்பின் மீது படுவதற்கும் வழியாக இருக்கும்.
5. பிரஷர் குக்கரில் உள்ள காஸ்கெட்டை சமையல் முடிந்ததும் தொட்டி நீரில் போட்டுவிட்டு எப்போது தேவையோ அப்போது எடுத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.
6. புதிய காஸ்கெட் வாங்கிய உடன் பழைய காஸ்கெட்டை எறிந்து விட வேண்டும். இல்லையென்றால் மாற்றி பயன்படுத்த வாய்ப்புள்ளது.
7. குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஆணிக்கு மாதம் ஒரு முறை எண்ணெய் விட வேண்டும். அப்போது தான் துருப் பிடிக்காமல் இருக்கும்.
8. குக்கரின் வெயிட்டை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் போதும் தூசி, அடைப்புகள் முதலியன இல்லாமல் இருக்கிறதா என் பார்த்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
9. குக்கர் மூடியில் பொங்கி வருவது ஒன்றும் குறையல்ல. பருப்பு வேக வைத்தால் உடன் பொங்கி வென்ட் பைப் வழியாகத் தண்ணீர் வெளிவரும். பருப்பு வேக வைக்கும் போது ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றினால் பொங்காது.
10. குக்கரில் காய்கறி வேகும் போது அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
11. குக்கரின் உள்பாகத்தில் கறை படிந்து கறுப்பாகக் காணப்பட்டால் கவலைப்படத் தேவையில்லை. புளித்த மோரைக் கறையுள்ள அளவு ஊற்றி 2,3 நாட்கள் ஊற வைத்தால் அந்தக் கறை நீங்கி குக்கர் பளிச்சென்று இருக்கும்.
Pettagum

சனி, 21 ஏப்ரல், 2012

காஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள்--வீட்டுக்குறிப்புக்கள்,

சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைக்க வேண்டும்.
ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ள அடுப்புச் சாதனங்களையும், இரப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அடுப்பை அணைக்கும்போது முதலில் ரெகுலேட்டர் வால்வை மூடிவீட்டுப் பிறகு அடுப்பின் வால்வை மூடுவது நல்லது.
 

அடுப்பு எப்போதும் தரை மட்டத்திலிருந்து ஏறத்தாழ இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும்.

அடுப்பு எரிந்து கொண்டிருக்கும்போது கவனக் குறைவாக இருக்கக்கூடாது. கவனிக்காமல் இருந்தால் பொங்கி வழியும் பால் போன்ற பொருள்கள், அடுப்பை அணைத்து வெளி வரும் எரிவாயுவினால் வாயுக் கசிவு ஏற்பட்டுத் தீ விபத்து ஏற்படலாம்.

காஸ் ஸ்டவ் வைத்திருப்பவர்கள் வீட்டில் உள்ளக் குழந்தைகள் காஸ் குழாயைத் திருப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காஸ் குழாயில் குழந்தைகள் விஷமம் செய்வதால் பல ஆபத்துக்கள் ஏற்படுகின்றன.

அடுப்பின் வால்வையும், சிலிண்டர் வால்வையும் மூடிய பிறகு சிலிண்டரை மாற்ற வேண்டும்.

சுய ரிப்ப்பேர் வேலை ஆபத்தானது. யாரையும் காஸ் உபகரணங்களைப் பழுது பார்க்க அனுமதுக்கக் கூடாது. விறபனையாளர்களிடமே இந்த பொறுப்பை விட்டுவிட வேண்டும்.

மாற்று சிலிண்டர் இணைக்கும்போது பூஜை விளக்குகள், ஊதுவத்தி அனைத்தையும் அணைத்து விட வேண்டும். மின்சார இணைப்புகள் இயங்க கூடாது.

ரப்பர் குழாயில் வெடிப்பு, துளை இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.

காஸ் அடுப்பின் பர்னரை 10 நிமிடம் மண்ணெயில் ஊற வைத்துப் பிறகு பழைய டூத் பிரஷ் மூலம் சுத்தம் செய்யலாம்.

அடுப்பின் பர்னர்களை சலவை சோடா சேர்ந்த வெது வெதுப்பான் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து சுத்தப்படுத்தி உலரச் செய்த பிறகே பொருத்த வேண்டும்.

குரோமிய காஸ் அடுப்பு, ஸ்டவ் போன்றவற்றைச் சூடாக இருக்கும்போது துடைத்தால் பளிச்சென்று இருக்கும்.

பெயிண்ட் அடுப்பாக இருந்தால் சூடாக இருக்கும் போது நனைந்த துணியால் துடைக்கக் கூடாது. திடீர் வெப்ப மாறுதலால் வண்ணம் மாறலாம்.

காஸ் சிலிண்டரிலோ, ரப்பர் குழாயிலோ கசிவு இருப்பதாக சந்தேகம் தோன்றினால் உடனடியாகக் கதவுகள், ஜன்னல்கள் அனைத்தையும் திறந்துவிட வேண்டும். எரிந்து கொண்டிருக்கும் அடுப்பு, விளக்கு முதலியவற்றை அணைக்க வேண்டும். சிலிண்டருடன் இணைந்திருக்கும் சேப்பு கேப்பினால் சிலிண்டர் வால்வை அழுத்தி மூட வேண்டும். இது வால்விலிருந்து காஸ் கசிதைத் தடுக்கும்.

மண்ணெண்ணெய் ஸ்டவ்களைப் பயன்படுத்துபவர் அது எரிந்துக் கொண்டிருக்கும் போது அதற்கு எண்ணெய் ஊற்ற முயலக்கூடாது. ஸ்டவ்வின் எல்லாப் பகுதிகளும் சூடேறி இருப்பதால் எண்ணெய் பட்டவுடன் திடீரென அது பற்றிக் கொள்ள வாய்ப்பு உண்டு.

டாங்கில் எவ்வளவு மண்ணெண்ணெய் நிரப்ப வேண்டும் என்றா குறியீடு எல்லா ஸ்டவ்களுலும் இருக்கும். அதற்கு மேல் மண்ணெண்ணெய் ஊற்றக்கூடாது.

இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஸ்டவ் திரிகளைச் சமன்படுத்தி உயரமாக இருக்கும் திரிகளை மட்டும் நறுக்கி விடவும். டாங்கில் மண்ணெண்ணெய் ஊற்றி ஒரு மணி நேரம் ஆனப் பின்பே புதிய ஸ்டவ்வை முதல் முறையாகப் பயன்படுத்த முடியும்.

நீரைத் தெளித்து அடுப்பை அணைப்பது தவறு. அப்போது வெளிப்படும் வாயு உடலுக்கு கேடு செய்யும்.
Pettagum

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts