லேபிள்கள்

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

நம்முடைய தேனீக்கள், நாம்...

உலகம் முழுவதும் இப்போது தேன்கூடுகளின் எண்ணிக்கை வெகு வேகமாகக் குறைந்துவருகிறது. தேனீக்களின் எண்ணிக்கையும் குறைகிறது. ஆண்டுதோறும் தேன்கூடுகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு அழிகிறது.
தேனீக்கள், மலரிலிருந்து தேனைத் திரட்டி மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. மகரந்தச் சேர்க்கையினால்தான் தாவரங்கள் பெருகுகின்றன. இதனாலேயே விவசாயிகள், தேனீயை விரும்புவோர், தேனீயை வளர்ப்போர் என்று அனைவரும் அதைச் சமுதாயத்துக்கு நன்மை தரும் பூச்சியினமாகப் பார்க்கின்றனர்.
நெருக்கடியான தருணங்களில்தான் நாம் சில பாடங் களைப் படிக்கிறோம். இப்போதைய மனித சமூகத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கும் கொடிய ரசாயனங்களின் தீமைகளை அறியவும், அழிவிலிருந்து காத்துக்கொள்ளவும் தேனடைகளின் அழிவு நமக்கு நல்லதொரு பாடமாக இருக்கிறது.
தேன் கூடுகளின் எண்ணிக்கை குறைய ஒன்றல்ல, பல காரணங்கள் இருக்கின்றன.
1. பயிர்களைக் காக்க நாம் தெளிக்கும் பூச்சிக் கொல்லிகள்தான் முக்கிய காரணமாக இருக்கிறது.
2. கரையான்கள், பூஞ்சைகள், பாக்டீரியாக்கள், வைரஸ் பூச்சிகள், இதர நோய்த் தொற்றுகள் தேன் கூட்டை அணுகக் கூடாது என்று தேனீ வளர்க்கும் தொழில்செய்வோர் இந்த ரசாயனங்களைக் கூடுகளுக்குள்ளும் தெளிக்கின்றனர்.
3. ஏக்கர் கணக்கில் ஒரே பயிரைச் சாகுபடி செய்வதால் வெவ்வேறுவிதப் பூக்கள் அந்தப் பகுதிகளில் பூப்பதில்லை. எனவே, தேனீக்கள் மகரந்தச் சேர்க்கை நிகழ்த்தினாலும் அவை சேர்க்கும் தேனில் ஊட்டச் சத்துக்கள் குறைவாகவே இருக்கின்றன.
4. அமெரிக்காவில் தேனீ வளர்ப்போர், தேன் கூடுகளை அடிக்கடி இடம் மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். இதனாலும் தேன்கூடுகள் எண்ணிக்கையும் தேனீ எண்ணிக் கையும் கணிசமாகக் குறைகிறது.
தேனியிடம் பாடம்
உண்மையான பிரச்சினை எதுவென்றால், பிரச்சினைகளின் எண்ணிக்கை அல்ல, ஒவ்வொரு பிரச்சினையும் எப்படி இன்னொரு பிரச்சினை மீது வினைபுரிந்து, நிலைமையை மோசமாக்குகிறது என்பதுதான். தேனீக்களிடம் நாம் கற்க வேண்டிய ஒரு பாடத்தைக் கற்காமல் தவறவிடுகிறோம்.
ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் 3 அல்லது 4 அல்லது அதற்கும் மேல் என்பது தேனீக்களின் வாழ்வியல் விதி. அதாவது, தேனீ சமூகமானது கூட்டு உழைப்பால் பலனை அதிகம் பெறுகிறது. ஒரு தேன் கூட்டை எடுத்து ரசாயன ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அவை சேகரித்த தேனில் 120 வகை பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் கிடைத்தன.
தனித்தனியாக அந்தத் தேன் துளிகளை ஆராய்ந்தால், தீங்கு செய்யாத நல்ல தன்மையுடனேயே இருக்கின்றன. ஆனால், ஒட்டு மொத்தமான தேனோ தீமைதரும் ரசாயனங்களின் கூட்டுக் கலவையாகத் திகழ்கிறது. இந்த அளவானது தேனீக்களின் நோய் எதிர்ப்புத் திறனை அறவே குலைத்துவிடும். அதன் அடுத்த கட்டமாக தேனீக்கள் அழிவும் தொடங்கிவிடும்.
உலகில் உள்ள தேனீ இனம் ஒட்டுமொத்தமாக அழிந்தால், அது மட்டுமல்ல - அதனுடன் சேர்ந்து நாமும் மிகச் சில வருடங்களிலேயே இறந்துபோவோம், அயல் மகரந்தச் சேர்க்கை தடைபடுவதால்!
நம்மை நாமே...
இந்த ஆய்வு முடிவுகள் பல விதங்களில் முக்கியத் துவம் வாய்ந்தவை. பயிர்களுக்குத் தெளிக்கும் பூச்சிக் கொல்லிகள் நாம் கொல்ல நினைக்கும் பூச்சிகளை மட்டும் கொல்வதில்லை. நமக்கு உறுதுணையாக உள்ள பூச்சியினங்களையும் அழிக்கவல்லவை. மறைமுகமாக நம்மை நாமே அழித்துக்கொள்ளக் காரணமாக இருப்பவை.
மனிதர்களுக்கு நோய் வந்தால் வெவ்வேறு மருந்துகள் டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. ஒரு வியாதிக்காக நாம் சாப்பிடும் மருந்து, இன்னொரு வியாதிக்காகச் சாப்பிடும் இன்னொரு மருந்துடன் ரசாயன வினைபுரிந்து நமக்குள்ள நோய்களைத் தீவிரப்படுத்தவோ, புதிய நோயை ஏற்படுத்தவோ காரணமாக வாய்ப்பிருக்கிறது. நாம் சாப்பிடும் மருந்தின் தன்மை என்ன, அது எந்தெந்த ரசாயனங்
களை ஏற்கும், எவற்றை நிராகரிக்கும், எவற்றோடு போராடி கடும் விளைவை ஏற்படுத்தும் என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. பூச்சிக்கொல்லி மருந்துகளும் அதேபோலத்தான். பூச்சிக்கொல்லிகள் பயிர்களைக் காக்கின்றன என்பதுடன் பாதிக்கவும் செய்கின்றன. அவை நேரடியாகவும் மறைமுக மாகவும் மனிதனையும் தாக்குகின்றன. பூச்சிக்கொல்லி தெளிப்புக்குப் பிறகு, சாகுபடியாகும் தாவரம் அல்லது தாவரப்பொருள், மனிதனால் உட்கொள்ளப்படும்போது அவனுடைய நோயையும் தீவிரப்படுத்துகிறது அல்லது பக்கவிளைவுகளைக் கடுமையாக ஏற்படுத்துகிறது.
எச்சரிக்கை மணி
தேன்கூடுகள் எண்ணிக்கை குறைகிறது என்றதும், 'இது ஏதோ தேனீக்களுக்கு வந்த பிரச்சினை' என்று மனிதர்கள் ஒதுங்கிக்கொள்ள முடியாது. 'இன்றைக்கு தேனீ, நாளை நாம்' என்ற எச்சரிக்கை மணி மூளையில் ஒலிக்க வேண்டும். தேனீக்கள் எந்தவித நோய் பாதிப்பையும் தாங்கும் அளவுக்குத் திறன் பெற்றவை.
தேனீக்கள் தோன்றி சுமார் 4 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கும். 4 கோடி ஆண்டுகளாகத் தொடர்ந்து வாழ முடிந்த ஒரு இனம் ரசாயனப் பூச்சிக் கொல்லிகளால் மறையத் தொடங்கியிருப்பது நமக்கு ஒரு எச்சரிக்கையான தகவல். இனி, இத்தகைய ரசாயனக் கலவைகளைப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கும் முன்னர், அவை எப்படி மனிதர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் என்பதையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
இயற்கையான சூழலோடு இணைந்து நாமும் எப்படி ஒரு சமூகத்தைக் கட்டியமைக்கலாம் என்ற பாடத்தைத் தேனீக்களிடமிருந்து நாம் படிக்க வேண்டும். தேனீக்களைப் போலவே வேறு வகை காட்டுத் தேனீ வகைகளும் இருக்கின்றன. அவையும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவக்கூடும். காட்டிலும் பயிர் நிலங் களிலும் வாழும் இயற்கையான தேனீக்களைப் போலவே மனிதர்களால் கூட்டுக்குள் வளர்க்கப்படும் தேனீக்களும் இருக்கின்றன.
தரிசாக நிலத்தை விடாமல், எல்லா நிலத்தையும் சாகுபடிக்குப் பயன்படுத்துவதாலும், ரசாயனப் பயன்பாட்டாலும், மலர்களைத் தவிர வேறு எவற்றிலி ருந்தும் தேன் கிடைக்காததாலும், பூக்கள் இல்லாத பகுதிகளாக நிலங்கள் மாறிவருவதாலும் தேன்கூடுகள் குறைகின்றன, தேனீக்கள் அழிகின்றன. அத்துடன், வீரியம் மிகுந்த களைக்கொல்லிகள் நிலங்களில் தானாகவே வளரும் காட்டுத்தாவர வகைகளை அழித்துவிடுகின்றன. உண்மையில், இந்தத் தாவரங்களில் பூக்கும் பூக்கள்தான் தேனீக்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கின்றன. இயற்கையில் எதுவுமே வீணோ, தீங்குபயப்பதோ அல்ல. உயிர்ச் சங்கிலியில் அவை யாவும் ஒரு கண்ணி.
சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தில் உள்ள எனது ஆய்வுக்கூடம் சமீபத்தில் புதிய ஆய்வு முடிவைத் தெரிந்துகொண்டது. கடுகு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்யும் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கைத் தரிசாக விட்டுவைத்தால், அதில் காட்டுச் செடிகள் போல சில வளர்ந்து அதில் பூக்கும் பூக்களிலிருந்து தேனீக்கள் தேனைச் சேகரிக்கின்றன. அதன் விளைவாக கடுகுச் செடியில் பூக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கடுகு விளைச்சலும் பல மடங்கு பெருகியிருக்கிறது. காட்டுச் செடிகளில் பூக்கள் பூத்ததும் பலவகைத் தேனீக்கள் அந்த மலரை மொய்க்கின்றன. எனவே, மகரந்தச் சேர்க்கை விரைவாகவும் வலுவாகவும் நடக்கிறது.
சிறிதளவு நிலத்தைக்கூடத் தரிசாக விடாமல் சாகுபடி செய்யும் விவசாயிக்கு அமெரிக்காவில் ஒரு பண்ணைக்கு 27,000 டாலர் வீதம் லாபம் கிடைக்கிறது. மூன்றில் ஒரு பங்கு நிலத்தைத் தரிசாக விடும் விவசாயிக்கோ அதே அளவு நிலப்பரப்பில் 65,000 டாலர் லாபம் கிடைக்கிறது. இதுநாள் வரையில், நிலப்பரப்பில் முழுமையாகச் சாகுபடி செய்து, தேனீக்களையும் வளர்த்தால் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்று நம்பிவந்தோம். நாம் வளர்க்கும் தேனீக்கள் மட்டும் போதாது, காட்டுவகை தேனீக்களும் அவசியம். அவை வளர ஒரு பங்கு நிலத்தைத் தரிசாகப் போட்டு, அதில் ஏதாவது காட்டுத்தாவரங்கள் பூக்களுடன் வளர்வது நல்லது என்று புரிகிறது.
இந்த ஆய்வு முடிவு வெறும் பயிர் வேளாண்மை பற்றியது மட்டுமல்ல. தேனீக்களின் எண்ணிக்கை குறைவதால், மனித இனத்துக்கு நேரக்கூடிய ஆபத்தும் சேர்ந்தே வெளிப் படுகிறது. இயற்கையோடு சமநிலையைப் பராமரிப்பதன் மூலமே நாம் வாழ முடியும். காட்டுத்தாவரம், தேனீ, மனிதன் மூவருமே உயிர்ச் சங்கிலியின் பிணைப்பு. ஒன்று அழிவது மற்றவற்றுக்கு நல்லதல்ல என்பதே உண்மை. நாம் நலமாகவும் வளமாகவும் வாழ தேனீக்களும் வாழ்வது அவசியம்.
- தமிழில்: சாரி
தி நியூயார்க் டைம்ஸ்

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 26 செப்டம்பர், 2020

ஒரு நாள் = 24 மணிநேரம் ' : முதலில் சொன்னது யார்..?

ஒரு நாள் என்பது 24 மணிநேரம்...!
ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்...!
ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்...!
.......இதெல்லாம்... எப்படி... யார்... எந்த அடிப்படையில்... எப்போது கண்டுபிடித்து கணக்கிட்டு வகுத்தார்கள்...? ஆச்சர்யம்தானே...?!
ஒரு நாள் என்பது எது என்பதை... சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம் இவற்றைக்கொண்டு மனித சமுதாயம் ஆரம்ப காலத்திலேயே எளிதாக அறிந்திருக்கும். அதனால், 'நாள் எது?' என்ற இந்த கண்டுபிடிப்பு - இதொன்றும் அதிசயம் இல்லைதானே..?
ஒரு மாதம் என்பதற்கு 30 அல்லது 29 நாட்கள் என்று கண்டுபிடிக்க பெரிய சிந்தனை ஒன்றும் தேவை இல்லை. சந்திரனை பின்தொடர்ந்து 12 அமாவாசை அல்லது 12 பெளர்ணமி மூலம் சுலபமாக வகுத்துக்கொள்ளலாம். இதனால், வருடத்திற்கு 354 அல்லது 355 நாட்கள் என்றும் பின்னர் அறிவியல் வளர்ச்சியில் 354 days 8 hrs 48 minutes and 36 seconds என்று கண்டுபிடித்தது ஒன்றும் வியப்பல்லதானே..?
ஒரு ஆண்டு என்பது 12 மாதங்கள் கொண்டது என்பதும் கூட ஆச்சர்யப்படும் அளவுக்கு பெரிய கண்டுபிடிப்பு அல்லதானே..?
இந்த சந்திர ஆண்டு சுழற்சியானது விவசாயம் செய்யும் நாடுகளுக்கு விவசாய காலங்களை அறிய வேண்டுமானால் ஒத்துவராது. இது பருவ காலங்கங்களுக்கு மாற்றமாக உள்ளதால்... நாளடைவில், கோடை, குளிர், மழை மற்றும் வசந்தகாலம் போன்ற (spring autumn summer winter) பருவகாலங்களை அடிப்படையாக வைத்து... 'ஆண்டு என்பது சூரியனின் அடிப்படையில் 365 நாட்கள்' என்று இவர்கள் உருவாக்கியிருக்கலாம்.
ஒரு வருடத்தின் நீண்ட பகல் அல்லது நீண்ட இரவு என்பது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை மாறுவது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு பின்னர் 365-ல் உள்ள தவறு களையப்பட்டு நான்காண்டுகளுக்கு ஒருமுறை 366 நாட்கள் கொண்ட லீப் வருடம் வந்திருக்கலாம். ஆனால், அதுவும் கூட பின்னர் அறிவியல் வளர்ச்சியில் 365 days, 5 hours, 48 minutes, 45 seconds என்று கண்டுபிடித்தது ஒன்றும் வியப்பல்ல.
மேலே உள்ளவற்றில் ஒரு சாராரின் 'சந்திர சுழற்சி ஆண்டை' இன்னொரு சாரார் ஏற்றுக்கொள்ளாமல் 'சூரிய சுழற்சி ஆண்டை' அடிப்படையாக இருத்திக்கொண்டனர். ஆனால், எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி எவ்வித கோட்பாடும் இன்றி... "ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றும் அதில் ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள் என்றும் அந்த ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்" என்றும் உலகம் முழுக்க அனைத்து சித்தாந்த/கொள்கை/சமய/சிந்தனா வாதிகளும் எப்படி ஏற்றுக்கொண்டனர்..?
"ஒரு வாரம் என்பதற்கு ஏழு நாட்கள்" என்றுகூடத்தான் எவ்வித அடிப்படையும் இன்றி ஏற்றுக்கொண்டனர் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது ஓரளவுதான் உண்மை. ஏனெனில், உலகில் பலர், எது வாரத்தின் முதல் நாள் என்று வேறுபடுகின்றனர். பெரும்பாலும், ஞாயிறு முதல் நாள் என்றும், ISO 8601 மற்றும் அதற்கு நிகரான அளவினர் திங்கள்தான் முதல் நாள் என்றும், சிலர் சனிக்கிழமைதான் முதல் நாள் என்றும் கொண்டுள்ளனர்.
வாரநாட்களின் பெயர்கள் கூட பல சமூகத்தில் மாறுபட்டன. அந்தந்த காலகட்டத்தில் மக்கள் தம் கண்ணால் கண்ட அல்லது தொலைநோக்கியால் கண்டு பிடிக்கப்பட்ட கோள்களையும், எண்களையும், அந்தந்த சமுதாய அரசர் பெயர்களையும் வைத்துக்கொண்டனர். இன்னும் சொல்வதென்றால்... Basque, Igbo, Javanesne, Akan, Roman, Baltic, Aztecs, Maya, Bali, Shang dynasty's China, Revolutionary France நாட்காட்டிகள்.. என இவற்றில் எல்லாம் 'ஏழு நாட்கள் ஒரு வாரம்' என்று ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, முறையே... 3, 4, 5, 6, 8, 10, 13, 20 நாட்கள் கொண்டதுதான் ஒரு வாரம் என்று தங்கள் நாட்காட்டிகளை வகுத்தனர்..!
மேலும், என்னைப்போன்று round the clock 3-shift duty யில் 4 குழுவினராக பிரிந்து பணியாற்றும் தொழிலாளர்கள் நிறைந்த தொழிற்சாலைகளில் ஆறு நாட்கள் வேலை பார்த்தவுடன் 7-வது மற்றும் 8-வது நாட்கள் வாரவிடுமுறை..! கடந்த 15 வருடங்களாக இப்படி பணியாற்றும் எனக்கு, ஒரு வாரம் என்றால் அது 8 நாட்கள்..! :-) ஆக, இது எப்படி இருந்தாலும் பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை..! நம் வசதிக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறோம்.
உதாரணமாக, நம் நாட்டில் முன்னர் 16 அனா ஒரு ரூபாய் என்று இருந்து... முன்பு அதற்காகவே 16-ஆம் வாய்ப்பாடு வரை பள்ளி மாணவர்களை மனப்பாடம் செய்யவைக்கப்பட்டது தெரியுமா..? அது தவறு என்றுணர்ந்து பின்னர் நாமாகவே "ஒரு ரூபாய்க்கு 100 காசுகள்" என்று மாறிவிட்டோம். இன்றும் கூட உங்கள் வீட்டில் உள்ள வயதானவர்கள் 50 காசை எட்டணா என்றும் 25 காசை நாலணா என்றும் சொல்லக்கேட்டிருப்பீர்கள்.
இப்படியாக வாரத்தை தம் இஷ்டத்துக்கு மாற்றிக்கொண்டது போல, அது ஏன் 'ஒரு நாள்' என்பது பத்து மணி நேரம் என்று 'ரவுண்டாக' மாற்ற முயலவில்லை..? ஒரு மணிநேரம் என்பது 100 நிமிடம் என்றெல்லாம் முழுநிறைவாக மாற்ற முயலவில்லை..? இந்த 24ஐயும் 60ஐயும் எப்படி உலகம் முழுக்க அப்படியே ஏற்றுக்கொண்டார்கள்..? இவை எந்த அடிப்படையில் உண்டாக்கப்பட்டன..?
நேரம் என்பது ஆக சிறிய அலகுவான நொடியில் ஆரம்பிக்கிறது. இந்த அளவை தீர்மானித்தது எந்த அறிவியல் அடிப்படையில்..? இதன்படி ஒரு நாளைக்கு 86,400 வினாடிகள் வருகின்றது. இந்த வினாடி அளவினை சற்று குறைத்து (அதாவது வேகமாக துடிக்க வைத்து) 100 வினாடி ஒரு நிமிடம்; 100 நிமிடம் ஒரு மணி; 10 மணி நேரம் ஒரு நாள்... அதாவது ஒரு நாளைக்கு 1 லட்சம் வினாடிகள் ...என்று வருமாறு ஏன் முயற்சி செய்யவில்லை..!?!
காலத்தை அளவிடப்பயன்படும் அடிப்படை அலகுவான நொடி அல்லது வினாடி என்பது 60 நொடிகள் சேர்ந்தால் 1 நிமிடம். நொடி என்பது அனைத்துலக முறை அலகில் second என்னும் பெயரால் குறிப்பிடப்படுகின்றது. அறிவியல் வளர்ச்சி பெற்ற பின்னருங்கூட, மிகத்துல்லியமான நிலைநாட்டலின் படி, ஒரு நொடி என்பது அசையாது 0 K (கெல்வின்) வெப்பநிலையில் இருக்கும் ஒரு சீசியம்-133 அணுவின் அடி நிலையில் உள்ள இரு வேறு மிக நுண்ணிய ஆற்றல் இடைவெளிகளுகு இடையே நிகழும் 192 631 770 அலைவு-களின் கால அளவு ஆகும் என்று 'ரிவர்சில்' 1967ஆம் ஆண்டு 'கண்டுபிடிக்கப்பட்டது'..!
(In 1967 the 13th General Conference on Weights and Measures defined the second of atomic time in the International System of Units as the duration of 9,192,631,770 periods of the radiation corresponding to the transition between the two hyperfine levels of the ground state of the caesium-133 atom.)
இதுவும் நாம் தற்போது பயன்படுத்தும் நொடி அளவும் ஆச்சர்யப்படத்தக்க அளவில் ஒன்றுதான்..!
இப்படியாக எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி எவ்வித கோட்பாடும் இன்றி... "ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றும் அதில் ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள் என்றும் அந்த ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்" என்றும் எப்படியோ உலகம் முழுக்க உள்ள அனைத்து சித்தாந்த, கொள்கை, சமய, சிந்தனாவாதிகளும், இந்த நூற்றாண்டு அறிவியலாளர்களும் எதிர்கேள்விகள், மாற்றுக்கண்டுபிடிப்புகள் என ஏதுமின்றி அனைவரும் ஒருசேர ஏற்றுக்கொண்டதும் ஆச்சர்யமானதுதானே..?
அப்படியெனில், 'வினாடி'யை இதுதான்... என துல்லியமாக வகுத்து, "ஒரு நாள் = 24 மணி நேரம்" என்று முதலில் சொன்னது யார்..? வரலாறு எழுதப்படாத அந்தக்காலத்திலேயே ஒரு நாளை 24 பகுதியாக பிரித்த அந்த அதிசய அறிவாளி யார்..?

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

வாழைக்காயில் என்னவெல்லாம் சத்துக்கள் உள்ளது தெரியுமா....?

வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. வாழைக்காய்களில் அதிக அளவு இரும்புச்சத்து, மற்றும் மாவுச்சத்தும் உள்ளது.

பசியை கட்டுபடுத்தக்கூடிய ஆற்றல் வாழைக்காய்க்கு உண்டு. மேலும் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாழைக்காய் சாப்பிட்டால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்ற நோய்கள் சரியாகும்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக்காய்கறி வழங்கப்படுகிறது. வாழைக்காயின் மேற்புறத் தோலை சீவியெடுத்து, துவையலாகச் செய்து சாப்பிடுவதால் இரத்த விருத்தியும், உடல் பலமும் ஏற்படுகிறது. 

வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால், உடல் எடை குறையும். வாழைக்காய் குடலை சுத்தப்படுத்தி, அதிலுள்ள கொழுப்பு செல்களை அழிக்கிறது. இதனால் உடல் எடையை குறைக்கிறது.

வாழைக்காய் ரத்த செல்களில் உள்ள குளுகோஸ் உறிஞ்சுவதை தடுக்கிறது. இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவைக்  கட்டுபடுத்துகிறது.

வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கியுள்ள கழிவுகளையும், நச்சு பொருட்களையும் வெளியேற்றுகிறது. மேலும் பெருங்குடலில் ஏற்படும் புற்று நோய் வராமல் தடுக்கிறது.

வழைக்காயில் விட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவை உள்ளது. இவை எலும்புகளுக்கு போதிய வலிமை தந்து, மூட்டு வலி, ஆஸ்டியோ போரோஸிஸ்  ஆகிய நோய்கள் நம்மை அண்டவிடாமல் தடுக்கிறது.


https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/do-you-know-what-nutrients-are-in-vazhaikai-120080100033_1.html?utm_source=Health_News_And_Articles_In_Tamil_HP&utm_medium=Site_Internal


-- 




இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

புதன், 23 செப்டம்பர், 2020

யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாகஇருக்கக்காரணம்....?

தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம்.
நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஆராயும் எண்ணம் வந்தது.
ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக் கொடுத்தார்? இந்த திறன் தற்செயலாக வந்ததா? அல்லது ஒரு தொழிற்சாலையில் நாம் நமக்கு வேண்டிய வடிவில் ஒரு பொருளை உற்பத்தி செய்கிறோமே, அதுபோல இந்த திறமையை மனித முயற்சியால் சிருஷ்டி பண்ணிக் கொள்ள முடியுமா? இந்தக் கேள்விகள் எனது 2 ஆம் ஆண்டில் அதாவது 1980 டிசம்பரில் நான் கலிபோர்னியா திரும்ப வர இருந்தபோது என் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தன.
எனது ஆய்வறிக்கைக்காக யூதர்கள் உட்கொள்ளும் உணவு, கலாச்சாரம், மதம், கர்ப்பிணி தன்னை தயார் செய்துகொள்ளும் விதம் என்று எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் துல்லியமாக சேர்ப்பதற்கு 8 ஆண்டுகள் பிடித்தன. இந்த விவரங்களை மற்ற இனங்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்தேன்.
தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஒரு மேதாவியாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு கர்ப்பிணி முதலிலிருந்தே தன்னை தயார் செய்து கொள்ளுகிறாள். அவள் எப்போதும் பாடிக்கொண்டும் பியானோ வாசித்துக் கொண்டும் இருப்பாள். கணவனுடன் சேர்ந்து சிக்கலான கணித வினாக்களை விடுவிக்க முயற்சி செய்வாள். தான் போகுமிடமெல்லாம் கணக்குப் புத்தகத்தை எடுத்துச் செல்வாள். சில சமயம் நான் அவளுக்கு கணக்குப் போட உதவி செய்வேன். அப்போது அவளிடம், "இதெல்லாம் உன் குழந்தைக்காகவா?" என்று கேட்பேன். "ஆமாம், கருவிலிருக்கும் போதே பயிற்சி கொடுத்தால் பிற்காலத்தில் மேதையாக ஆகும், இல்லையா?" என்பாள். குழந்தை பிறக்கும் வரை விடாது கணித புதிர்களை விடுவித்துக் கொண்டே இருப்பாள்.
கர்ப்பிணியின் உணவும் விசேஷமானது: பாலில் பாதாம்பருப்பு முதலான கொட்டை வகைகளையும், பேரீச்சையையும் கலந்து உண்கிறாள். மதிய உணவுக்கு தலை துண்டிக்கப்பட்ட மீன், பிரெட், பாதாம்பருப்பும், மற்ற கொட்டை வகைளும் (nuts) சேர்த்த பச்சைக் காய்கறிக் கலவை (salads) ஆகியவற்றை உண்ணுகிறாள்.
மீன் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று நம்புகிறார்கள்; ஆனால் மீனின் தலை மூளைக்கு நல்லதில்லையாம் கர்ப்பிணி பெண் மீன் எண்ணெய் உட்கொள்ளுவது யூத இனத்தின் வழக்கம்.
மீனின் சதைப் பாகத்தையும், எலும்பு இல்லாத பகுதிகளையும் மட்டுமே சாப்பிடுகிறார்கள்; இறைச்சி சாப்பிடுவதில்லை. இறைச்சி மீன் இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது நம் உடலுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என்று நம்புகிறார்கள்..
உணவு உண்ணுவதற்கு முன் பழங்கள் சாப்பிடுகிறார்கள். முதலில் பிரெட், சாதம் போன்றவற்றை சாப்பிட்டால் தூக்கம் வரும்; அதனால் பள்ளியில் சொல்லித் தரும் பாடங்கள் சரிவர புரியாது என்கிறார்கள்.
புகை பிடிப்பவர்களின் கவனத்திற்கு!
சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின் நமது மூளையின் முக்கியமான திசுக்களை அழித்து, மரபணுக்களையும் DNA வையும் பாதிக்கும்; இதன் காரணமாக அடுத்த தலைமுறை அறிவற்றவர்களாகவும் மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும் உருவாகக்கூடும். இதனால் இஸ்ரேல் நாட்டில் சிகரெட் புகைப்பது விலக்கப்பட்ட ஒன்று.
இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? உலகின் மிகப் பெரிய சிகரெட் தயாரிப்பாளர்ஸஸ..யார் என்று உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்!
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உண்ணும் உணவில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். பெற்றோர்களின் மேற்பார்வையிலேயே குழந்தைகளின் உணவும் அமைகிறது.
முதலில் பழங்கள், பாதாம்பருப்பு, பின் மீன் எண்ணெய் என்ற வரிசையில்தான் குழந்தைகள் உணவு உட்கொள்ளுகிரார்கள்.
என் மதிப்பீட்டின் படி ஒவ்வொரு யூதக் குழந்தையும் 3 மொழிகள் - ஹீப்ரூ, அரபிக் மற்றும் ஆங்கிலம் – அறிந்தவர்களாக இருக்கிறார்கள்; குழந்தைப் பருவத்திலிருந்து பியானோ, வயலின் முதலிய இசைக் கருவிகள் இசைக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டியது ஒரு கட்டாயம்
இசைக்கருவி வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் IQ (intelligence quotient) வை அதிகரித்து, அவர்களை மேதைகள் ஆக்கும். இசை அதிர்வுகள் மூளையை தூண்டிவிட்டு அதன் திறன்பாட்டை அதிகரிப்பதால்தான் யூதர்களிடையே மேதைகள் அதிகம் என்கிறார் ஒரு யூத விஞ்ஞானி.
முதல் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்புவரை குழந்தைகள் வணிகக் கணிதவியலை படிக்கிறார்கள். விஞ்ஞானப் பாடம் முன்னுரிமை பெறுகிறது கலிபோர்னியா குழந்தைகளையும் யூதக் குழந்தைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் கலிபோர்னியா குழந்தைகள் 6 வருடம் பின் தங்கி இருக்கிறார்கள் என்று சொல்லலாம்..
யூதக்குழந்தைகள் வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் ஆகிய உடல், மனம் சார்ந்த விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள். இவ்விரண்டு விளையாட்டுக்களும் மனதை ஒருமுகப்படுத்தி துல்லியமான, நுட்பமான முடிவு எடுக்க உதவுகின்றன.
உயர் நிலைப் பள்ளியில் மாணவர்கள் விஞ்ஞானம் படிக்க அதிகம் விழைகிறார்கள்.
போர்த்தடவாளங்கள், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் செயலாக்கங்கள், (projects) புதிதாக பொருட்கள் செய்வது (product creation) என்று பல்வேறு முறைகளில் தாங்கள் படித்தவற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்தத் திட்டங்கள் உயர் கல்வி நிறுவனங்களிலும், பல்தொழில்நுட்ப கழகங்களிலும் அறிமுகப்படுத்தப் படுகின்றன.
வணிகம் சொல்லித்தரும் ஆசிரியருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வணிகவியல் படிக்கும் மாணவர்கள் கடைசி வருடம் ஒரு செயல் முறை திட்டத்தை நடைமுறைப் படுத்தி காட்ட வேண்டும்; 10 பேர்கள் அடங்கிய அவர்களது குழுமத்திற்கு இந்த செயல்முறை திட்டத்தில் 10 மில்லியன் யு.எஸ். டாலர் லாபம் கிடைத்தால் தான் அவர்கள் தேர்வு பெறுவார்கள்.
இந்தக் காரணத்தினாலேயே உலக வர்த்தகத்தில் பாதிக்கும் மேல் யூதர்கள் வசம் இருக்கிறது உலகப் புகழ்பெற்ற லீவாய்ஸ் (Levis) பொருட்கள் இஸ்ரேல் பல்கலைக்கழக வர்த்தகம் மற்றும் புதிய பாணி உடை வடிவமைப்பு (business and fashion) ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டதாகும்.
யூதர்கள் பிரார்த்தனை செய்யும்போது கவனித்து இருக்கிறீர்களா? எப்போதும் தலையை அசைத்து அசைத்துப் பிரார்த்தனை செய்வார்கள். இப்படிச் செய்வதால் மூளை தூண்டிவிடப்பட்டு மூளைக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்குமாம்.
இவர்களைப் போலவே ஜப்பானியர்களும் சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள். சுஷி உணவை (புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன் உணவு) விரும்பி உண்பார்கள். இந்த இரண்டு இனங்களுக்கும் பல ஒற்றுமை இருப்பதை தற்செயல் என்று சொல்லலாமா?
நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனம் அவர்களுக்குப் பலவகையில் உதவுகிறது. யாருக்காவது பயன்தரும் வர்த்தக யோசனை இருந்தால் வட்டி இல்லாக் கடன் கொடுத்து, அவர்களது வர்த்தகம் தழைக்க எல்லா வகையிலும் உதவுகிறது. இதனாலேயே ஸ்டார்பக்ஸ், டெல் கம்ப்யூட்டர்ஸ்,கோகோகோலா, DKNY, ஆரக்கிள், லீவாய்ஸ், டன்கின் டோனட், ஹாலிவுட் படங்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கான வர்த்தகங்கள் இவர்களது ஆதரவில் நடை பெறுகின்றன.
யூத மருத்துவ பட்டதாரிகள் நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனத்தின் வட்டியில்லாக் கடனைப் பெற்று தனியாக டாக்டர் தொழில் நடத்தலாம். இதனால் நியுயார்க், கலிபோர்னியா நகரங்களில் மருத்துவ மனைகளில் போதுமான டாக்டர்கள் இருப்பதில்லை.
2005 இல் சிங்கப்பூர் போயிருந்த போது ஓரு விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இங்கு சிகரெட் பிடிப்பவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாகவே பார்க்கிறார்கள். இஸ்ரேல் நாட்டைப் போலவே இங்கும் சிகரெட் பிடிப்பது தீய பழக்கம் என்று கருதப்படுகிறது. ஒரு சிகரெட் பெட்டியின் விலை 7 யு.எஸ். டாலர்கள்! அரசாங்கமும் இஸ்ரேல் நாட்டு அரசாங்கம் போலவேதான். சிங்கப்பூர் மிகச்சிறிய நாடு; மன்ஹாட்டன் அளவே இருந்தபோதும் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் இங்கு இருக்கின்றன.
இந்தோனேஷியாவைப் பாருங்கள். ஒரு பாக்கெட் சிகரெட்டின் விலை வெறும் 0.70 யு.எஸ். டாலர்தான். எங்கு பார்த்தாலும் மக்கள் சிகரெட் பிடித்துக் கொண்டு இருப்பார்கள். பலன்? லட்சக்கணக்கான மக்கள் தொகை இருந்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பல்கலைக் கழகங்கள்; பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய தொழில் நுட்பமோ, தயாரிக்கும் பொருட்களோ எதுவுமே இல்லை அவர்களிடம்! அவர்களது மொழியைத் தவிர வேறு மொழி தெரியாது. ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ள எத்தனை சிரமப் படுகிறார்கள். இவையெல்லாம் சிகரெட் பிடிப்பதால்தான். சிகரெட் பிடிப்பவர்களின் அடுத்த தலைமுறை அறிவற்றதாகத்தான் இருக்கும்.
சற்று சிந்தித்துப் பாருங்கள். என்னுடைய ஆய்வறிக்கையில் நான் இனத்தையோ, மதத்தையோ குறிப்பிடவில்லை.
நம்மால் யூதர்களைப் போன்ற புத்திசாலி தலைமுறையை உருவாக்க முடியுமா?
(written by Dr. Stephen Carr Leon) – Translated by Ranjani Narayanan
நன்றி: தமிழர்சிந்தனைகளம்

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 19 செப்டம்பர், 2020

கருத்தரிக்கும் எண்ணத்தில் கவனம் கொள்க!

படைத்தவன் தருவதை பலர் சுவைப்பதில்லை! சுவைக்கத் தொடங்கிய சிலர் அதை முடிப்பதில்லை! இந்த மையப் புள்ளியில் சுழல்கிறது மானூட வாழ்வு. இவற்றுக்கு நடுவே தடி கொண்டு ஆடுதலும், அடுப்பு ஊதுதலும் விமரிசையாய் நடக்கின்றன.
பிணக்குவியலினூடாக உயிரோடு உடல்கள் விரல்நீட்ட மாட்டதா? நப்பாசையுடன் வாக்குத்தேடுவோர் அலைவது போல் இதழொன்று பணி செய்கிறது. திருமண அழைப்புக்காக, வலிமா விருந்துக்காக, மௌத்துக்க்£, கத்தத்துக்காக ஊர் நபர்கள் ஒன்று கூடிப் பேசுவதற்காக ஒரு இதழ் பைத்துல்மால் பொதுப் பணத்தில் உலாவந்து குளிர்காய்கிறது.
திருமணம் நடக்கப் போவதாக ஒரு அறிவிப்பு. அடுத்து திருமண அழைப்பிதழ் அப்படியே பதிவு. பின்னர் திருமணப் படங்கள் பதிவு. கலந்து கொண்டமைக்கு நன்றி கூறிப் பதிவு. இதற்காக ஒரு இதழ். மற்ற சமூகத்தவரிடம் மதிப்பு ஈட்டித்தருமா இப்போக்கு?
32 மாவட்டங்களில் ஓரிரு ஊர்களில் மட்டும் ஒன்று கூடிப் பேசியதாகப் படங்களுடன் பதிவு. பின்னர் அவ்வூரின் தேவைக்காக போராட்டம் கூறி ஒரு பதிவு. நாட்டமைகளின் சலிக்காத பதிவுகள்.
விதிமுறையிருந்தும் வீதியோரம் நடந்து செல்லும் பாதசாரி உயிருக்கு உத்தரவாதமில்லை! கூறுவது போன்று பதிவுகள். படித்ததைப் படிப்பதற்காக ஒரு செய்தி ஏடு. வேற்றோர் இட்ட வெக்கையின் சாம்பலை அள்ளி வந்து தணலாக்கும் முயற்சிகள். 2 இலட்சத்து 75,000/& கோடி ரூபாய் மத்திய திட்டக்குழு ஒதுக்கியிருக்கிறது. சமூக நலத்திட்டங்களுக்கு 60,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து தன் சமூகத்தில் நலிந்தோருக்கு எவ்வளவு கிடைக்கும்? கொடுக்கப் போகின்றனர். கண்காணிக்கலாம். பெற்றுத்தரலாம்.
பலர் தரும் பணத்தில் இதழ் நடக்கிறது. இதழ், இயக்கம் சார்ந்திருக்கும் அனைவருக்கும் அதனுள் பங்கிருக்கிறது. 100 பேருடைய பங்குகளை 25 பேர் மட்டும் மீண்டும், மீண்டும் அனுபவிக்கின்றனர். 75 பேர் வெளியே நின்று பொறுமிக்கொண்டு வேடிக்கை பார்க்கின்றனர். அவரவருக்கும் பிரித்து 4 வரி தரலாம். கால்பக்கம் தினம் ஒருவருக்கு ஒதுக்கலாம். தரமறுக்கும் போது தனியமைப்பு காண்கின்றார். தனி இதழ் தருகின்றார். முன்னவர்கள் செய்த தவறை தாமும் செய்கின்றார்.
பொதுப் பணத்தில் தம்மை முன்னிறுத்திக் காட்டுவதைக் கை விட்டு சமூகத்தை முன்னிறுத்தலாம். கல்விக் கடன் கொடுத்து முடித்து விட்டதாக கணக்கு காட்டிவிட்டனர். சொத்து ஜாமீன் இல்லாது தர மறுக்கின்றனர். அலைய வைப்பதன் மூலம் தாமே ஒதுங்கி ஓடும் நிலையை கைக் கொள்கின்றனர். அனுபவித்தோரின் வாக்குமூலம். இறைக்கு அஞ்சி களப்பணி மூலம் உண்மையைப் பதிவு செய்யலாம். ''இதழ் நடத்துவதன் பொருட்டு வலியவருக்கு சாமரம் வீசலாம். சதா நேரமும் வீசினால் அலுப்புத் தட்டும். அநாகரீகமாகக் காட்டும்''.
பின் தங்கிய மக்களின் வாழ்வியலுக்காக பக்கத்தை ஒதுக்கலாம். 300க்கும் மேற்பட்ட சீனப்பொருட்கள் இறக்குமதியால் சிறு உற்பத்தியாளர் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். பெரு முதலாளிகள் சிறு வணிகத்திற்குள் புகுந்ததால் சிறிய கடைகள் தூங்கி வழிகின்றன. இடைநிலை மக்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மாநிலம் தழுவிய ஆய்வு மேற்கொண்டு அவர்கள் குறித்து பதிவு செய்யலாம். சென்னை நகரப் பகுதியில் நடுத்தரமக்கள் வசிக்க வியலா வகையில் வாடகை ஏற்றப்பட்டிருக்கிறது. அசுரத்தனமாக கூடுதலாகியுள்ள மனைவிலை காரணமாகக் காட்டப்படுகிறது. இது குறித்து ஒருவரும் பூரணமாகப் பதிவு செய்யவில்லை.
இவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறது, 28லிருந்து 38 வயது வரை முஸ்லிம் பெண்கள் படித்தவர்கள் முதிர் கண்ணிகளாக முடங்கிக் கிடக்க, செல்வந்தத் திருமணத்தை டமாரம் அடிக்க ஒரு இதழ் நடத்துவோம். பொதுப் பணத்தை தினந்தோறும் மண்ணாக்குவோம், இவ்வாறான இயங்குதலை புரவலர்கள் அனுமதித்தலாகாது. அனுமதித்தால் அப்பணம் நல்ல வழியில் ஈட்டப்பட்டதல்லவெனும் எண்ணம் கருத்தரிக்கச் செய்யும். கருத்தரிக்கும் எண்ணத்தில் கவனம் அவசியம். அவ்வெண்ணமே சுவனத்துக்கு 'துஆ' செய்யும்.
-சதாம், முஸ்லிம் முரசு ஜூலை 2013

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 16 செப்டம்பர், 2020

"ஹிஜாமா" -இரத்தம் குத்திஎடுக்கும் சுன்னத்தான வைத்திய முறை

ஹிஜாமா (حجامة) என்றால் என்ன? ஹிஜாமா ('Hijama' Arabic: حجامة lit. "sucking") என்ற அரபி வார்த்தை hajm '(உறுஞ்சுதல்-Sucking) இருந்து பெறப்படுகிறது.
கப் அல்லது கோப்பையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, பின்னர் நமது தோல் மேற்பரப்பில் வைத்து தூய்மையற்ற அல்லது கெட்ட இரத்த கழிவுகளை உடலின் பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற்றும் மருத்துவ முறை தான் ஹிஜாமா (Hijama).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைப்பற்றி என்ன கூறியுள்ளார்கள்?
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; 'அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை' என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (புகாரி - 5678)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக்கொள்வது ஆகியனவே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமென என் சமுதாயத்தாருக்கு நான் தடை விதித்கிறேன்' என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், 'தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளது' என வந்துள்ளது (புகாரி - 5680)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்; "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள்." (புகாரி - 5694)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்; "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'இஹ்ராம்' கட்டியிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள்." (புகாரி - 5695)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்; ''இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள்." (புகாரி - 5699)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய மிஃராஜ் பயணத்தின் போது மலக்குமார்களின் கூட்டங்களை கடக்கும் போது "ஒ முஹம்மத், ஹிஜாமா செய்யுங்கள்" என்று சொல்லப்படாமல் தவிர கடக்கவில்லை. (நூல்: திர்மிதி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், யாரெல்லாம் பிறை 17, 19, 21 ஆகிய தினங்களில் ஹிஜாமா செய்கிறார்களோ, அது எல்லா நோய்க்கும் நிவாரணம் ஆகும். (நூல்: ஸஹீஹ் ஸுனன், அபூ தாவூத்)
ஹிஜாமா (حجامة)   செய்தால் எற்ப்படும் பயன்கள்:
முதன்மையான பயனும், நன்மை என்னவென்றால் இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறை (சுன்னத்), அதற்கான நன்மைகள் இவ்வுலகத்திலும், மறுமை நாளிலும் கிடைக்கும். இந்த ஹிஜாமா (குருதி (அ) இரத்த உறுஞ்சுதல்மூலம் இரத்த ஓட்டத்தை சமசீர் செய்து Kinetic energy என்ற ஆற்றலை அதிகப்படுத்துகிறது. இது இரத்தத்தில் இருந்து நச்சுகள் மற்றும் பிற கழிவு பொருள் அகற்றுகிறது. இதனால் சில வகையான நோய்கள் துரிதமாக குணமடைய உதவுகிறது.
ஹிஜாமா (حجامة)   செய்வதின் மூலம் சில வகையான நோய்கள் உதாரணமாக இரத்தம் சார்ந்த Metabolic disease வருவதை நாம் முன் எச்சரிக்கையாக தடுக்கலாம். அதாவது வரும் முன் காப்போம் (Prevention better than cure). ஹிஜாமா செய்வதால் சில தீய கெட்ட எண்ணங்களால் உருவாகும் கண்ணோறு, செய்வினை போன்ற நோய்களின் பாதிப்பதை குறைக்கலாம் என கூறப்படுகிறது.
ஹிஜாமா முறையில் எந்தவித பக்க விளைவுகள் இல்லை, இது சுமார் 70% நோய்களையும், உடலின் குறைபாடுகளை குணமாக்க உதவுகிறது. இதை நாம் நவீன மருத்துவத்துடன் செய்தால் நம் உடல் நோய் மிகவேகமாக குணமடையும். நாம் உடல்நிலை சரியில்லாமல் நோய்வாய்ப்பட்டு இருக்கும் சமயத்திலும், நாம் உட்கொள்ளும் மருந்திலிருந்தும், அதிகநச்சுப்பொருட்கள் (Toxins), கழிவுப்பொருட்கள் (Waste metabolic product) உடலிருந்து வெளியோற வழி இல்லாமல் நம் இரத்தத்திலும், தோல் அடிப்புறம் (Subcutaneous area) களிலும் சேகரமாகியுள்ளது. அவற்றை நாம் ஹிஜாமா மூலம் அப்புறப்படுத்தி நம் உடல் நோய்களை குணப்படுத்த துரிதப்படுத்தலாம்.
ஒவ்வோரு வருடத்திற்கு இரண்டு மற்றும் நான்கு முறை ஹிஜாமா சிகிச்சை செய்வதனால் இடைப்பட்ட காலம் காலங்களில் எற்ப்பட்ட, உடலில் சேகரமாகிய கழிவுகளை நீக்கி, இரத்ததை சுத்தப்படுத்தி, இரத்த சுழற்சி மேம்படுத்தலாம், புதிய ஹார்மோன்கள் உற்பத்தியை துண்டுவதின் மூலமும், உடலின் அமைப்புகள் இயற்கை சமநிலை (Natural Biological Balance) மேம்படுத்துவதன் மூலம்பல உடல் சார்ந்த நோய்களை தடுக்கலாம்.
இரத்த மற்றும் நிணநீர் (Lymph) தேங்கி கழிவுகளை அகற்ற உதவுகிறது. இம்முறையால் நல்ல இரத்தங்கள், இரத்த செல்கள் (Blood cells - RBC, WBC ), இரத்தப்புரதங்கள் (Blood Protein) இவைகள் வெளியேறுவதில்லை.எந்த காலங்களில் (நாட்களில்) ஹிஜாமா (حجامة)   செய்யலாம்? இந்த ஹிஜாமா இஸ்லாமிய காலண்டரான சந்திர காலண்டர் படி 'ஒற்றைப்படை' நாட்களில் செய்து சிறந்ததாக பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், குறிப்பாக திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் நாட்களில் செய்து சிறந்தது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஹிஜாமா செய்வதை தவீர்த்துள்ளார்கள். மேலும் புதன்கிழமைகளில் Hijama செய்வதை தடுத்துள்ளார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், யாரெல்லாம் பிறை 17, 19, 21 ஆகிய தினங்களில் ஹிஜாமா செய்கிறார்களோ, அது எல்லா நோய்க்கும் நிவாரணம் ஆகும். (நூல்: ஸஹீஹ் ஸுனன், அபூ தாவூத்)
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறிய அறிவிப்பு இப்னு மாஜா (3487) பதிந்துள்ளது அதன் கருத்தாவது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெறும் வயிற்றில் ஹிஜாமா செய்வது குணப்படுத்தக்கூடியது என்றும், இறை அருள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்கள்.
மேலும் அது அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கிறது. எனவே வியாழக்கிழமை அன்று அல்லாஹ்வின் அருள் மீது ஆதரவு வைத்து ஹிஜாமா செய்யுங்கள். புதன், வெள்ளி தினங்களில் ஹிஜாமா செய்யாதீர்கள். சனி மற்றும் ஞாயிறு தினங்களில் செய்வதை தவீர்பதின் மூலம் பாதுகாப்பாக இருங்கள். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஹிஜாமா செய்யுங்கள்.இந்த நாட்களில் தான் நபி ஐயூப் அலைஹிஸ்ஸலாம் நோய் இருந்து பாதுகாப்பு பெற்றார்கள்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

Hiccups: விக்கல் என்னும் சிக்கலைத் தீர்க்க டிப்ஸ்

Hiccups: விக்கல் வருவதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. பொதுவாக யாராவது உங்களை நினைத்தால் ...

Popular Posts