லேபிள்கள்

திங்கள், 29 ஜனவரி, 2018

அல்லாஹ் அர்ஷிலிருந்து இறங்குகிறானா?

அல்லாஹ் அர்ஷிலிருந்து இறங்குகிறானா?

-மௌலவி அன்சார் (தப்லீகி)-
வினா: அல்லாஹுத்தஆலா அர்ஷிலிருந்து இறங்குகிறான்" என்று வரும் ஹதீஸின் விளக்கம் " அவனுடைய அருள் இறங்குகிறது" என்பது தான் சரியான கருத்து என TNTJ ஜமாஅத்தைச் சேர்ந்த சில பிரச்சாரகர்கள் கூறுகின்றார்கள். இது அல்லாஹ்வை நம்பும் விடயத்தில் சரியான நம்பிக்கைதானா?
விடை : இக் கேள்விக்கு விடையளிப்பதற்கு முன் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். அதாவது எந்தவொரு ஆதாரமான ஹதீஸிலும் " அர்ஷிலிருந்து அல்லாஹ் இறங்குகின்றான்" என்ற வார்த்தை வரவில்லை என்றாலும் " அர்ஷிலிருந்து இறங்குகிறான்" என்ற வார்த்தையை குறிப்பிட்டு இக் கேள்வி கேட்கப்பட்டிருக்கும் காரணத்தை வாசகர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
சகோதரர் பீ. ஜே அவர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சியொன்றில் இந்த ஹதீஸைக் கூறும் போது " அல்லாஹ் அர்ஷிலிருந்து இறங்குகிறான்" என ஹதீஷில் வருவதைப் போல் எடுத்துச் சொல்லி அந்த ஹதீஸிற்கு விளக்கம் கொடுக்கும் வேளையில் மேற்சொன்ன மாதிரி " அருள் இறங்குவதாக" விளக்கம் கொடுத்திருந்தார்.
இதனால் இந்த ஹதீஸின் சரியான வார்த்தைப் பிரயோகத்தை அறியாதவர்கள் இவ்வாறு வருவதாக நம்புகின்றார்கள்.


காரணம் :
ஹதீஸில் வராத வார்த்தைகளை ஹதீஸின் பெயரால் இது போன்ற மௌலவிமார்கள் சொல்லமாட்டார்கள் என்ற மக்களின் நம்பிக்கைதான்.

உண்மையில் இக்கேள்வியில் கூறப்பட்டதைப்போன்று " அர்ஷிலிருந்து அல்லாஹ் இறங்குகிறான்". என அர்ஷையும் குறிப்பிட்டு எந்தவொரு ஆதாரமான ஹதீதும் வரவில்லை.
இவ்வாறு ஹதிஸில் வராததை வந்ததென மக்கள் நம்பக்கூடிய விதத்தில் கூறுவது " நபிகளார் கூறாததை கூறினால் உண்டாகும் பெரும் பாவத்திற்கு காரணமாக ஆகிவிடும்.
ஹதீஸின் சரியான வடிவம்
இந்த ஹதீஸ் பின்வருமாறு வருகின்றது.
"இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி எஞ்சியுள்ள வேளையில் கீழ் வானத்திற்கு ஒவ்வொரு இரவிலும் எங்கள் ரப்பு தபாரகவதஆலா இறங்குகின்றான். என்னிடத்தில் யார் பிரார்த்திப்பாரோ நான் விடையளிப்பேன்…… எனக் கூறுவான்" (ஹதிஸின் இறுதிவரை பார்க்க) அறிவிப்பவர் : அபூஹுரைரா, ஆதாரம் : ஸஹீஹுல் புஹாரி
அல்லாஹ்வின் பண்புகளை நம்புதல்
பொதுவாக அல்லாஹ் தன்னைத்தான் எவ்வாறு வர்ணித்தானோ, அவனது பண்புகளை எவ்வாறு அவனுடைய தூதரும் எடுத்துச் சொன்னார்களோ அதை அவ்வாறே நம்ப வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்
"அவனைப் போன்று எதுவுமே இல்லை: அவன் செவியுறுபவனும் பார்ப்பவனும் ஆவான்" (சூறத்துல் சூரா : 11)
அல்லாஹ் கூறுவதைப் போன்று எந்தவொரு படைப்பின் பண்புக்கும் அல்லாஹ்வின் பண்பை ஒப்பாக்கி விடாமல் நம்புவதுதான் அல்லாஹ்வின் விடயத்தில் சரியான நம்பிக்கையாகும்.
மேற்சொன்ன வசனத்தில் அவன் " பார்ப்பவன், செவியுறுபவன்" என வந்துள்ளது. இதே வேளை அவனது படைப்புகளும் "பார்க்கின்றன, செவியுறுகின்றன" என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இங்கே அவனது படைப்பினங்களும் பார்ப்பவைகள், செவியுறுபவைகள் என்பதற்காக படைப்பினத்தின் பண்புகளுக்கு அல்லாஹ்வின் பண்பு ஒப்பாகி விடுமே எனப் பயந்து " அல்லாஹ் பார்ப்பவனோ, செவியுறுபவனோ இல்லை"யென யாரும் கூறுவதில்லை.
மாறாக மேற்சொன்ன வசனத்தில் முதற்பகுதியில் "அவனைப் போன்று எதுவுமில்லை" என சொல்லப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு கூறுகிறோம்.
"அல்லாஹ் பார்ப்பவன், ஆனால் படைப்பினத்தைப் போன்றல்ல. அல்லாஹ் செவியுறுபவன், ஆனால் படைப்பினத்தைப் போன்றல்ல. அவனின் தகுதிக்கும், கண்ணியத்திற்கும் ஏற்ற விதத்தில் அவனின் படைப்பினத்திற்கு ஒப்பற்ற விதத்தில் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் இருக்கின்றான்" என நம்புகின்றோம். இவ்வாறே தனக்குள்ள பண்புகளாக அல்லாஹ் எதையெல்லாம் எடுத்துக் கூறுகின்றானோ அவைகளை படைப்பினத்திற்கு ஒப்பாக்காமல் அவனுக்கு இருப்பதாக நாம் நம்பிக் கொள்ள வேண்டும்.
தனக்கென அவன் சொன்ன பண்பொன்றை அவனுக்கு இருக்கிறது என நாம் கூறும் போது அது படைப்பினத்தின் பண்புக்கு ஒப்பாகிவிடுமே என கற்பனை பண்ணி அல்லாஹ்வின் அப் பண்புகளை அவனுக்கு இல்லையெனக் கூறுவது தெளிவான வழிகேடாகும்.
இது உலகில் தோன்றிய வழிகேடர்களான முஃதஸிலாக்களின் வழிதவறிய போக்காகும். எனவே மேற்கோளாகக் காட்டிய குர்ஆன் வசனத்திற்கேற்ப இந்த ஹதீஸில் வருகின்ற விடயத்தை நாம் நம்ப வேண்டும்.
அதாவது, எந்தப் படைப்பினத்திற்கும் ஒப்பில்லாதவனாக எங்களின் "ரப்பு" இறங்குகின்றான். அவனின் இப்பண்பை அவர்களின் கற்பனைகளினால் கற்பனை பண்ணவும் முடியாது அதன் வடிவத்தை நாம் சிந்திப்பதும் முடியாது.
இவ்வாறே அவன் தனக்கெனச் சொன்ன பண்பை அவனின் படைப்பினத்திற்கு ஒப்பாகிவடுமோ எனப் பயந்து (அப் பண்பை) அவனுக்கு இல்லையெனக் கூறுவதும் அல்லது அதற்கு வலிந்துரை கொடுப்பதும் "முஃதஸிலாக்கள்" எனும் வழிதவறிய பிரிவினரின் நடைமுறையாகும்.
மாற்றுக் கருத்துடையோரின் ஆதாரம் :
இவ்வாறு வலிந்துரை கொடுப்பவர்களில் ஒரு சாரார் சில ஆதாரங்களை தங்களின் வாதத்திற்காக முன்வைக்கின்றனர்.
அவர்களின் வாதம் :
"அல்லாஹ் அர்ஷின் மேல் உள்ளான்" என நம்புவது நமது கடமை.
எனவே "அல்லாஹ் கீழ் வானத்திற்கு அர்ஷிலிருந்து இரவின் மூன்றாவது பகுதியில் இறங்குகின்றான்" எனக் கூறும் போது "அர்ஷின் மேலுள்ளான்" என்ற நம்பிக்கை பிழைத்துப் போய்விடும்.
அதுமட்டுமன்றி உலகம் உருண்டையாக இருப்பதால் இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இப் பூமியின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து கொண்டே இருக்கும். அவ்வாறாயின் அந்த வேளைகளில் அல்லாஹ்வும் அர்ஷிலிருந்து இறங்கியாக வேண்டும். எந்த நேரமும் இரவின் மூன்றிலொரு பகுதி இருந்து கொண்டே இருப்பதால் அப்போதெல்லாம் அல்லாஹ் "அர்ஷின் மேல் இல்லாதவனாகி விடுகின்றான்" என வந்துவிடும். எனவே இம்முரண்பாட்டைத் தவிர்க்க "அர்ஷின் மேல் உள்ளவன்தான் அல்லாஹ்" என நம்பினால் "அவன் இறங்குகின்றான்" என்ற நம்பிக்கைக்கு வேறுகருத்துக் கொடுத்தாக வேண்டிவரும் அல்லது "அவன் இறங்குகின்றான்" என நம்பினால் "அர்ஷின் மேல் உள்ளான்" என்பதற்கு வேறுகருத்து கொடுத்தாக வேண்டிவரும்.
சுருக்கமாக கூறுவதாயின் ஒன்றை நேரடியான பொருளோடு நம்பினால் மற்றொன்றிற்கு வலிந்துரை கொடுக்க வேண்டியவரும்.
அதனால்தான் "அவன் அர்ஷின் மேலுள்ளான்" என நம்புவது அடிப்டையாகவுள்ளதால், அவன் இறங்குகின்றான் என்பதற்கு வலிந்துரை கொடுக்கிறோம் என்பது இவர்களின் வாதம்.
இவைதான் "அவன் இறங்குவதில்லை, அவனின் அருள் இறங்குகிறது" என இப்பிரிவினர் முன்வைக்கும் முக்கியமான வாதங்களாகும்.
எதிர்வாதமும் பதிலும்
01. ஹதீஸில் வராததை கூறுதல்
குறிக்கப்பட்ட ஹதீஸில் "எங்களின் ரப்பு இறங்குகின்றான்" என்ற வார்த்தைதான் வந்துள்ளது. "அர்ஷில் இருந்து இறங்குகின்றான்" என அர்ஷோடு தொடர்புபடுத்தி எந்த வார்த்தையும் ஹதீஸில் இடம்பெறவில்லை.
எனவே ஹதீஸைக் கூறும் போது "அர்ஷிலிருந்து" என்ற வார்த்தையை இணைத்து ஹதீஸில் வந்தது போன்று வராத ஒரு வார்த்தையைக் கூறுவதும், அதைவைத்து சட்டமேற்ற முயல்வதும் நபி (ஸல்) மீது பொய் கூறுகின்ற ஒரு பெரும் பாவமாக மாறிவிடும். இது முதலாவது தவறாகும்.
02. படைப்பினத்திற்கு ஒப்பாக்கி பேசுதல்:
"அல்லாஹ் இறங்குகின்றான் என்று நம்பினால் அர்ஷ் காலியாகிவிடும்" என்ற வாதம் மிகமிகத் தவறானதாகும்.
இவ்வாறு ஒரு வாதத்தை முன்வைப்பவர் மறைமுகமாக அல்லாஹ்வைப் படைப்பினத்தைப் போன்று கற்பனை பண்ணுகின்றார்.
ஏனென்றால், அல்லாஹ்வின் படைப்புக்களில் ஒரு பகுதி இன்னொரு இடத்திற்கு நகர்ந்தால் அப் படைப்புக்கள் அந்நகர்விற்கு முன் எங்கிருந்ததோ அந்த இடம் காலியாகிவிடும்.
உதாரணம்: "மரத்தின் மேல் இருந்து மனிதன் கீழ் இறங்கினான்" என்று கூறினால் உண்மையில் அவன் கீழே வருவதாயின் முன்பிருந்த இடத்தை விட்டு அவன் வெளியேறுவது அவசியம். அப்போதுதான் அவன் கீழே வருவது சாத்தியமாகும்.
இவ்வாறு உதாரணம் கூறுபவர்கள் "இது அவனின் அனைத்துப் படைப்புக்களின் பண்பு அல்ல" என்பதை புரியாமல் பேசுகின்றார்கள்.
ஏனெனில் இன்னும் சில படைப்புகள் ஓர் இடத்திற்கு வருவதாயின் அது முதல் இருந்த இடத்தை விட்டும் முற்றாக காலியாகத் தேவையில்லை.
உதாரணம் : "ஒளி"
இதை ஓர் உதாரணத்துடன் விளங்குவோம்.
இரண்டு அறைகள் ஒன்றன் மேல் ஒன்று உள்ளது. இவ்வறைக்கு இடையில் மூடப்பட்ட நிலையில் ஒரு கதவு உள்ளது. மின் விளக்கால் மேல் உள்ள அறை வெளிச்சமாகவுள்ளது. மற்ற அறை மின் விளக்கு இல்லாததால் முற்றாக இருளாகவுள்ளது.
இவ்வேளையில் மூடப்பட்ட அக்கதவு திறக்கப்பட்டால் மேல் உள்ள அறையின் ஒளி நகரும். அப்போது அவ்விரு அறைகளும் ஒளிமயமாகிவிடும்.
இவ்வுதாரணத்தில் "மேல் அறையிலிருந்து ஒளி கீழ் அறைக்கு நகரும் போது மேல் அறை ஒளியை விட்டும் காலியாகிவிட்டது" என சுயசிந்தனை உள்ள எவரும் கூறமாட்டார். மாறாக அவ்வொளி முன்பிருந்த அதே இடத்திலிருந்து கொண்டே மறு இடத்திற்கு விரிவடைந்த செல்கிறது.
எனவே அல்லாஹ்வின் படைப்பில் சிலது ஒரு இடத்திலிருந்து காலியாகாமலேயே இன்னோர் இடத்திற்கு நகரக்கூடியதாகவும் உள்ளது.
அல்லாஹ்விற்கு உதாரணம் கூறல்
எனினும் இவ்விருவகைப் படைப்பினங்களில் எதனையும் உதாரணம் கூறி அல்லாஹ்வின் பண்பை அவற்றிற்கு ஒப்பாக்கி கற்பனை பண்ணுவதும் அவற்றிற்கு ஒப்பாக்கி பேசுவதும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்
"நீங்கள் அல்லாஹ்விற்கு உதாரணங்களை கூறாதீர்கள். நிச்சயமாக நீங்களோ அறியாத நிலையில் அல்லாஹ் அறிபவனாக உள்ளான் ( அன்நஹ்ல் : 74)

எனவே அவன் படைத்த படைப்பினங்களின் பண்பைப் போன்று அல்லாஹ்வின் ஒரு பண்பை ஒப்பாக்கி பேசுவது "இணைவைத்தல்" என்ற மாபெரிய பாவத்திற்கு நம்மை அறியாமலேயே வழிவகுத்துவிடும்.
ஏனெனில் "அவனைப் போன்று ஒன்றுமே இல்லை" என்றிருக்கும் வேளையில் "இதைப் போன்றுதான் அல்லாஹ்வும்" என சித்தரிப்பது திருமறை வழிகாட்டலுக்கும் முற்றிலும் மாற்றமானதாகும்.
"அவனைப் போன்று எதுவுமே இல்லை: அவன் செவியுறுபவனும் பார்ப்பவனும் ஆவான்" (சூரத்துல் சூரா : 11)
எனவே, "அல்லாஹ் கீழ் வானம் இறங்குகின்றான்" என வந்துள்ளதால் அதில் கூட்டிக் குறைக்காமலும் வலிந்துரை கூறாமலும், அவனின் படைப்புக்களின் எந்தவொரு பண்பிற்கும் அவனின் பண்பை ஒப்பாக்காமலும் அல்லாஹ் இறங்குகின்றான் என நம்ப வேண்டும். அதுவே நேர்வழியும், ஈடேற்றமான வழியுமாகும்.
எவ்வாறு "படைப்புக்களின் பண்புகளுக்கு ஒப்பற்றவனாக அல்லா1ஹ் அர்ஷின் மேல் ஆகிவிட்டான்" என நம்புகிறோமோ அவ்வாறே இறங்குகிறான் என்பதையும் நம்புவது கடமையாகும்.
மாறாக வலிந்துரையும் விளக்கங்களும் கொடுத்து அல்லாஹ்வின் பண்பை எம் சிறிய சிந்தனையால் புரிய நினைத்தால் மறைமுகமாக அல்லாஹ்வை படைப்பினத்திற்கு ஒப்பாக்கிவிடுகிறோம் என்பதுதான் அதன் பொருளாகும்.
ஏனெனில் எமது சிந்தனைகளால் ஏதாவது உணரப்பட முடியுமாயின் அது அல்லாஹ்வின் படைப்புகளே அன்றி வேறில்லை. அவனோ எம் சிந்தனைக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டவன்.
எனவே அல்லாஹ்விற்கென்றே தனித்துவமான பண்புகளை எமது பகுத்தறிவால் அல்லது சிந்தனைகளால் விளங்க முற்படுவது நாம் வழிகேட்டில் செல்வதற்கு காரணமாக அமைந்துவிடும். அல்லாஹ்வின் பண்புகள் மட்டுமல்ல மார்க்கத்தில் சொல்லப்பட்ட பல விடயங்களுக்கு எமது பகுத்தறிவால் விளக்கம் கொடுத்திட முடியாது.
உதாரணமாக விதியோடு சம்பந்தப்பட்ட விடயங்களை எடுத்துக் கொள்ளலாம்.
"அணுவளவும் அல்லாஹ் அநியாயம் செய்யமாட்டான்" என திருமறையில் கூறும் அதே வேளையில்
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஒருவன் சுவனவாதியின் அமலாக அமல் செய்வான். எதுவரையெனில் அவனுக்கும் சுவர்க்கத்திற்குமிடையில் ஒரு முழமே அன்றி இருக்காது. இவ்வேளையில் விதி அவனை முந்திவிடும். அதனால் நரகவாதிகளின் செயலை செய்து நரகம் நுழைவான் (புகாரி)

வெளிப்படையில் இவ்வசனத்திற்கும் ஹதீஸிற்கும் இடையில் முரண்பாடு உள்ளது. இதனை எமது சிறிய பகுத்தறிவு வாதத்திற்கு உட்படுத்தினால் என்ன விளைவு ஏற்படும் என்பதை நான் கூறத்தேவையில்லை. ஒருசாரார் இதற்கு பகுத்தறிவு ரீதியாக விளக்கம் கொடுக்க முற்பட்டார்கள். அதனால் "பாவங்கள் அல்லாஹ்வின் நாட்டப்படி நடப்பதில்லை. அதற்கும் அல்லாஹ்வின் நாட்டத்திற்கும் சம்பந்தமில்லை" எனக் கூறியது மட்டுமல்லாமல் அது தொடர்பாக வந்த ஹதீஸ்களையும் மறுக்கத் தொடங்கினார்கள். இவ்வாறான கருத்துக் கொண்ட "கத்ரியாக்கள்" என்ற வழிகேடர்கள் இதனால் தான் தோற்றம் பெற்றார்கள்.
அறிவுரை
எனவே இறுதியாக, பகுத்தறிவுவாதத்தின் பெயரால் அல்லது இஸ்லாம் "ஓர் அறிவுபூர்வமான மார்க்கம்" என்ற பெயரில் இஸ்லாத்தில் ஒவ்வொரு விடயங்களையும் நமது இச்சிறிய அறிவின் மூலமாக சிந்தனைக்குப் படக்கூடிய விதத்தில் விளங்க வேண்டும். பிறருக்கு விளங்கப்படுத்த வேண்டும் என்ற முடிவும் அதற்கான முயற்சியும் எல்லா விடயங்களிலும் சரியாகிவிடாது.
அவ்வாறான பகுத்தறிவுவாதம் பேசி தர்க்கம் செய்ததால்தான் முஃதஸிலாக்களும், கத்ரியாக்களும் மற்றும் நவீன பகுத்தறிவு வாதிகள் போன்ற வழிகேடர்களும் தோற்றம் பெற்றனர்.
அல்லாஹ்வின் கட்டளைக்கு முன் முதலாவதாக பகுத்தறிவுவாதம் பேசியவன் இப்லீஸ் "மண்ணால் படைக்கப்பட்ட மனிதனுக்கு நெருப்பால் படைக்கப்பட்ட நான் சுஜூது செய்வதா?" என்று ஒரு வாதத்தை அன்று இப்லீஸ் முன்வைத்து இறை கட்டளைக்கு மாறு செய்தான். அதனால்தான் அவன் சபிக்கப்பட்டான். அதுமட்டுமன்றி அல்லாஹ் பின்வருமாறு ஓர் எச்சரிக்கையும் விடுத்தான்.
"நிச்சயமாக நரகமே (உன்னைப் பின்பற்றும்) அவர்கள் அனைவருக்கும் வாக்களிக்கப்பட்ட இடமாகும்"
எனவே, எவர்களெல்லாம் அவன் வழியில் சென்று பகுத்தறிவு வாதம் பேசி தம் சிந்தனைக்கு பட்டால்தான் நாங்கள் அங்கிகரிப்போம் என்று அல்லாஹ்வின் கட்டளைகளை தம் குறுகிய அறிவுக்கு கொண்டுவர நினைத்து தம் சிந்தனைக்கு புலப்படாததால், அதை மறுப்பார்களோ அவர்களும் இப்லீஸைப் போன்று சபிக்கப்படுவார்கள்.
அல்லாஹ் கூறுவதை இறுதியாக மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன்.
"அல்லாஹ்வுக்கு நீங்கள் உதாரணங்களை கூறாதீர்கள். நிச்சயமாக நீங்களோ அறியாத நிலையில் அல்லாஹ் அறிபவனாக உள்ளான்" (சூறா அந்நஹ்ல் : 74)
http://www.islamkalvi.com/?p=107505

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 27 ஜனவரி, 2018

ஊடகங்கள் ஒரு பார்வை

ஊடகங்கள் ஒரு பார்வை

ஒவ்வொரு காலத்திலும் ஒரு சக்தி மிகவும் செல்வாக்கு வாய்ந்தாக காணப்படும். அந்த விடயம்தான் குறித்த அந்த காலத்தின் மாபெரும் சக்தியாக திகழும். இதனைத்தான் மலேசியாவின் முன்னால் ஜனாதிபதி மஹாதிர் முஹமட் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
'19ஆம் நூற்றாண்டில் யாரிடம் கடற்படை இருந்ததோ அவர்கள்தான் அந்நூற்றாண்டின் சக்திகள், 20 ஆம் நூற்றாண்டில் யாரிடம் விமானங்கள் இருந்ததோ அவர்கள்தான் அந்நூற்றாண்டின் சக்தி, 21 ஆம் நூற்றாண்டில் யாரிடம் ஊடகம் உள்ளதோ அவர்கள்தான் அந்நூற்றாண்டின் சக்தி'
அதே போன்று சமூகவியல் அறிஞர் கோவிந்தநாத் குறிப்பிடும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.


'இன்றைய உலகின் ஜாம்பவாhன்கள் ஊடகத்துறையினரே அவர்கள்தான் இவ்வுலகில் கருத்துருவாக்கத்தை (opinion makers) தீர்மானிக்கிறார்கள்'

ஆக மேலுல்ல இக்கருத்துக்களின் பிரகாரம் பார்க்கின்றபோது நிதர்சனமும் அதுதான் என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது. ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் மாபெரும் சக்திகளாகவும், ஜாம்பவான்களாகவும் ஊடகங்களே திகழ்கின்றன. அதே போன்று சமுதாய கருத்துருவாக்கத்திலும் மாபெரும் பங்கினை வகிக்கின்றது.
இந்தளவு சக்திவாய்ந்த இவ் ஊடகங்களில் பெரும்பான்மையானவை இன்று யாரிடமுள்ளது? யார் அதனை இயக்குகிறார்கள்? என்ற வினாக்களை எழுப்பினால் பெரும்பான்மையான மிகப்பிரதானமான ஊடகங்கள் யூதர்களிடமும் காணப்படுகிறது. இதனால் அவர்களே ஜாம்பவான்களாகவும் கருத்துருவாக்கத்தை தீர்மானிப்பவர்களாகவும் (opinion makers) காணப்படுகிறார்கள்.

இதனால்தான் சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். புனித இஸ்லாமிய மார்க்கம் பயங்கரவாதம் நிறைந்ததாகவும் காட்டுமிரான்டி தனகமானதாகவும் காட்சிப்படுத்தப்படுகிறது. திரைபடங்களையும் நாடகங்களையும் நாசூக்காக இதற்காக பயன்படுத்துகிறார்கள்.
அதே சமயத்தில் முஸ்லிம்களது பண்பாடுகளையும் கலாசாரங்களையும் சிதைக்கவும் அவர்களது யூத கலாசாரங்களையும் பண்பாடுகளையும் விதைக்கவும் ஊடங்களை திட்டமிட்டு பயன்படுத்துகிறார்கள். அன்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் இஸ்லாத்திற்கு எதிராக 10,000 இற்கும் அதிகமான இணையதளங்களை இயக்குகிறார்கள்.
இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்சியினால் இஸ்லாமென்றாலே பிற சமுகத்தார் அஞ்சுமளவு நச்சுக்கருத்துக்களை பரப்புகிறார்கள். இத்தனைக்கும் காரணம் சர்வதேச ஊடகங்கள் அவர்களது கைபொம்மையாகவும்; ஊடகத்துறையில் முஸ்லிம்களது பங்களிப்பு கனிசமாக உள்ளதுவுமேயாகும்.
ஊடகத்துறையில் யூத செல்வாக்கு:
தேசிய, சர்வதேச ரீதியில் வத்திக்கானில் 2000 இற்கும் அதிகமான பத்திரிகைகளை வெளியிடுகிறார்கள். அதே போன்று 154 ஒலிபரப்பு நிலையங்களின் மூலமாக ஒலிபரப்புக்களை வெற்றிகரமாக மேற்கொள்கிறார்கள்; இன்னும் ஒருபடி மேலே சென்று பார்த்தால் தொலைக்காட்சி அலைவரிசைகளையும் தமது வல்லாதிக்கத்தின் கீழ் கொண்டுள்ளார்கள் அந்த வகையில் 49 அலைவரிசைகள் காணப்படுகின்றது. பெரும்பான்மையான தொலைக்காட்சிகள் யூதர்களின் வல்லாதிக்கத்ததின் கீழே உள்ளது.(BBC, ABC, CNN, AFP, FOX NEWS….).

அதுமாத்திரமின்றி கலாச்சார சீரழிவிற்கு காரணகர்த்தாக்களாகவும் திகழ்கிறார்கள். ஒரு நாளுக்கு 250 ஆபாச காணொளிகளை பதிவேற்றம் செய்யப்படுகின்றது. அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படுகின்றவைகளை ஒரு வினாடியில் 28,000 பேர் பர்வையிடுகிறார்கள் குறிப்பாக இளைஞர் யுவதிகளும் சிறார்களுமே பார்வையிடுகிறார்கள்.
உலகின் செய்தி வெளியிடுகின்ற மிகப் பிரபலமான ஊடகங்கள் யூதர்களது கை பொம்மைகள் தாங்கள் விரும்புவதைதான் உலகிற்கு செய்திகளாக காண்பிக்கிறார்கள். பக்கச்சார்பற்ற ஊடகம் என்ற நாமத்தில் ஒரு சாராரை உயர்த்தியும் மற்றைய சாராரை தாழ்த்தியும் உலகில் கருத்து உருவாக்கங்களை மேற் கொள்கின்றனர்.
ஊடகமென்பது மக்களை நேர் வழிப்படுத்தும் மக்களுக்கு நன்மைபயக்கும் நல்ல கருத்துக்களை விதைக்கும் விதமாக செயற்பட வேண்டும். ஆனால் சிறுவர்களையும் இளைஞர், யுவதிகளையும் வழிகெடுக்கும் விதமாக கட்டமைத்து சமூக கட்டமைப்பினை சீர் குழைக்கிறார்கள்.
இவை அனைத்தும் யூதர்களின் சதித்திட்ட வலைகள் பல கோணங்கள் முஸ்லிம்களை கருவறுக்க முயற்சித்து தொடர் தோல்விகளை தழுவியதன் விளைவாக மிகவும் இரகசியமான முறையில் கனகச்சிதமாக ஊடகங்களை வைத்து முஸ்லிம்கள் தீவிரவாதிகள், கொடூரர்கள், பழமைவாதிகள், ஆண் பெண் சமத்துவம் தெரியாதவர்கள் என்று அல்குர்ஆனையும் இறைத்தூதர் அவர்களையும் மிகவும் தரம் குறைவாக காடசிப்படுத்தும் விதமாக திரைப்படங்கள் தயார்செய்யப்பட்டும் உலகிற்கும் எதிர்கால சந்ததியினருக்கும் முஸ்லிம்கள் பற்றிய தவறுதலான புரிதல்களை ஏற்படுத்த விளைகிறார்கள்.
ஏனைய அனைத்து சமூகத்தினரையும் அவர்களது கலாசாரம் பண்பாடுகள் என்பவைகளில் இருந்து தூரப்படுத்தி அவர்களது மேற்கத்தேய சிந்தனைகளையும் கலாசாரங்களையும் உலகலாவிய ரீதியில் விதைத்து யூதர்கள்தான் இவ்வுலகை ஆழ்பவர்கள் என்ற இறுதி நோக்கை அடையும் ஒரு பாதையினை செப்பனிடுகிறார்கள். ஆனால் இலங்கைவாழ் முஸ்லிம்களோ தமக்கான பிரத்தியேக தேசிய ரீதியிலான ஊடகத்தின் தேவையினை உணராமல் இன்னும் மௌனம் காக்கின்றனர்!!!
MSM.ஹில்மி(ஸலாமி) BA (Reading),
DIP.IN.LIBRARY AND INFORMATION SCIENCE



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 25 ஜனவரி, 2018

பேண மறந்த உறவுகள்

பேண மறந்த உறவுகள்

-எம்.எஸ்.எம்.ஹில்மி(ஸலாமி)-
-BA(Reading),Dip.in.Library & information science-

இஸ்லாமிய மார்க்கம் பூரணமானது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப்பணியைப் பரிபூரணப்படுத்தியுள்ளார்கள் என்பதற்கு எத்தனையோ விடயங்கள் எமக்கு சான்று பகர்கின்றன. அந்த வகையில், இஸ்லாம் அயலவர் உறவைப்பற்றிக் கூறவும் தவரவில்லை.


ஒவ்வொரு மனிதனும் தனது அன்றாட செயற்பாடுகளின் போது, பல்வேறு விதமான தொடர்புகளைப் பேணுகிறான். அவ்வாறு பேணப்படுகின்ற உறவுகளில் ஒன்று தான் எம்மை அண்டியுள்ள அண்டை வீட்டாரின் அற்புதமான உறவு. எமக்கு எத்தனையோ கோடான கோடி குடும்ப உறவுகள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் எம்மை அண்டி வாழ்வார்கள். அவசரத் தேவைகளுக்கு உதவுவார்கள். எமது அனைத்து கஸ்ட நஸ்டங்களிலும் இன்ப துன்பங்களிலும் பங்கு கொள்வார்கள் எனக்கூற முடியாது.
ஆனால், அயலவர்கள் மாத்திரம் அயராது முற்பொழுதும் எம் கஸ்ட நஸ்டங்களிலும் இன்ப துன்பங்களிலும் கரங்கொடுப்பர். இவ்வாறான அற்புத அண்டை வீட்டாரைப்பற்றி இஸ்லாம் மிகவும் அழகாகவும் கண்ணியமாகவும் கூறியுள்ளது.
அண்டை வீட்டார் பற்றி அல்குர்ஆன்,

"அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணை வைக்காதீர்கள். பெற்றோருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் நெருங்கிய உறவினரான பக்கத்து வீட்டாருக்கும், உறவினரல்லாத பக்கத்து வீட்டாருக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், வலக்கரம் சொந்தமாக்கியவருக்கும் நல்லுதவி செய்யுங்கள்" (அந்-நிஸா-36)
இவ்விறை வசனம் அண்டை வீட்டாருக்கு நல்லுதவி செய்யுமாறு பணிக்கிறது. அதனை நபி(ஸல) அவர்கள் அழகிய முறையில் எமக்கு செயற்படுத்திக் காட்டியுள்ளார்கள்.
"அபூ ஷுறைஹ் அல் குஷாயி அறிவிக்கிறார்கள்,
யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டுள்ளாரோ அவர் தனது அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளட்டும்" (புஹாரி, முஸ்ஸிம்)
"யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டுள்ளாரோ அவர் அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும்" (அஹமத்)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் கண்ணியமாக நடந்து கொண்டார்கள். அவ்வாறு கண்ணியமாக நடந்து கொள்ளவும் பணித்துள்ளார்கள.
ஆனால், இன்றைய எமது சமூகத்தவர்கள் அன்றைய அறியாமை சமூகம் போல் அற்பமான காரணங்களுக்காக இவ்வற்புத உறவினைக் கொச்சைப்படுத்துகின்றனர். அண்டை வீட்டாருடன் மிகவும் கேவலமாக நடந்து கொள்கின்றனர். அண்டை வீட்டு மரத்திலிந்து இலை தன்னுடைய வாளாகத்தில் விழுந்தால் சண்டை. அண்டை வீட்டு நீர் தனது வீட்டு வளாகத்திற்கு வந்தால் சண்டை, அண்டை வீட்டு மந்தை வந்தால் சண்டை, சிறு பிள்ளை போல் குழந்தைகள் சண்டையிட்டதற்காக சண்டை என எப்படி எப்படியெல்லாம் சண்டையிட முடியுமோ அப்படியெல்லாம் சண்டையிடுகின்றார்கள்.
யாருடன் சண்டையிடுகிறோம்? சகோதரர்களே!
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அண்டை வீட்டார் எனக்கு வாரிசாக ஆகிவிடுவார் என்று நான் எண்ணுமளவு அண்டை வீட்டார் பற்றி ஜிப்ரீல்(அலை) அவர்கள் எனக்கு உபதேசம் செய்து கொண்டே இருந்தார்கள்" (புஹாரி, முஸ்லிம்)

அண்டை வீட்டார் என்றால் யாரென்பதனை உணராது, அவர்களது சிறப்புக்களை உணராது, புனர்நிர்மானம் செய்து புதுப்பிக்க வேண்டிய புனித உறவைப் புறந்தள்ளுகிறோம். எந்தளவு உரிமையினை இஸ்லாம் அவர்களுக்கு வழங்கியுள்ளது என்பதனை மேலுள்ள பொன்மொழி தெளிவுபடுத்துகின்றது.ஆனால், இன்று அதனை உணராததன் விளைவாக அவர்களை கண்ணியப்படுத்தத் தவறிய கைசேதத்தினை சுமந்த சமுதாயம் உருவாகிவருகின்றது.
உலகம் சுருங்கி விட்டது. விஞ்ஞானம் வளர்ந்து விட்டதென்று கூறிக்கொண்டு மடிக்கணணிகளோடும் கையடக்கத் தொலைபேசிகளோடும் நம்மை நாமே சுருக்கிக் கொள்கிறோம். நவீன உலகம் என்ற போர்வையில் Facebook, Twitter, Skype……….. என்று ஏதோ ஓர் தேசத்தின் ஏதோ ஓர் மூலையில் இருப்பவருக்கு நட்பின் அழைப்பு விடுக்கிறோம். நல்ல முறையில் பேசுகிறோம. அவரது சுக துக்கங்களைக் கேட்டறிந்து கொள்கிறோம். இரண்டு நாள் அவர் இணையத்தில் இல்லையென்றால், பதறுகிறோம்.
ஆனால், அண்டை வீட்டாரின் சுக நலம் தெரியாது. இன்று எமது அண்டை வீட்டான் என்ன சமைத்தான் என்று தெரியாது! நல்ல விதமாக அவனுடன் பேசுவது கிடையாது! விட்டுத்கொடுப்பு கிடையாது! சகிப்புத்தன்மை கிடையாது! ஒருவருக்கொருவர் உதவி ஒத்தாசைகள் செய்வதும் கிடையாது!
அன்பின் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! அற்புதமான அண்டை வீட்டு உறவுகளை அற்பகாரணங்களுக்காக புறக்கணித்து விடாமல் இறைத்தூதர் காட்டிய இனிய வழி முறைகளைக் கடைப்பிடிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.

அண்டை வீட்டு உறவைப்பேண சில இலகு வழிகள்
01.கண்ணியப்படுத்துதல்:
"அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஈமான் கொண்ட ஒருவர் தன் அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும்" (புஹாரி, முஸ்லிம்)

02.நல்ல வார்த்தைகளை பேசுதல்
";அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டுள்ளவர் நல்லதைப் பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்" (புஹாரி, முஸ்லிம்)

03.நோவினை, துன்பம் விளைவித்தல் கூடாது:
"அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் தன் அண்டை வீட்டாரை நோவினை செய்ய வேண்டாம்" (புஹாரி, முஸ்லிம்)
"அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அவர் முஃமினல்ல. அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர் முஃமினல்ல. அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அவர் முஃமின் அல்ல" என்று நபி(ஸல்)அவர்கன் கூறினார்கள். அப்போது நபி(ஸல்)அவர்களிடம்: "இறைத்தூதர் அவர்களே! எவர்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு எவனது தீங்கிலிருந்து அவனது அண்டை வீட்டான் பாதுகாக்கப்படவில்லையோ அவன் தான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
முஸ்லிமின் மற்றைய அறிவிப்பில் "தன் தீங்கிலிருந்து அண்டை வீட்டானைப் பாதுகாக்காதிருப்பவன் சுவனம் நுழையமாட்டான்"

04.தனக்கு விருப்பமானதை தனது அண்டைவீட்டாருக்கும் விரும்புதல்
"தனக்கு விருப்பமானதை தனது சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் முஃமினாகமாட்டார்" (புஹாரி, முஸ்லிம்)

05.அயலவர் உரிமைகளைப்பேணி நடத்தல்
நாம் எப்படி அயலவர்களிடம் உரிமைகளை எதிர்பார்க்கிறோமோ அதே போன்று அவர்களது உரிமைகளை நாம் பேணி நடத்தல் வேண்டும். மறுமையில் எம்மைப் பற்றி முதலில் வாதிடுபவர்கள் அயலவர்கள் தான். "மறுமை நாளில் முதலில் வாதிடுபவர்கள் அண்டைவீட்டார் தான்" (அஹ்மத்)

06.அன்பளிப்புக்களை வழங்குதல்
அன்பளிப்புக்களை வழங்குவதன் மூலமாக அண்டைவீட்டு உறவு மாத்திரமல்ல, அனைத்து உறவுகளுமே உறுதியடைகின்றது. அன்பளிப்புக்களை வழங்குவதாயினும், வாங்குவதாயினும் அதற்கென சில ஒழுங்குகளுண்டு.

1.அன்பளிப்பு வழங்குவதாயினும், அதனை இழிவாகக் கருதக்கூடாது.
"முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுப் பெண் மற்றைய அண்டைவீட்டுப் பெண்ணுக்கு ஒரு ஆட்டின் குழம்பை வழங்கினாலும், அதனை இழிவாகக் கருத வேண்டாம்" (புஹாரி, முஸ்லிம்)

2. அன்பளிப்பினை வழங்குகின்ற போது, பிரதிபலனை எதிர்பார்த்து வழங்தல் கூடாது-
அன்பளிப்பினை வழங்குகின்றவர் தான் அதனை வழங்குவதன் மூலம் வேறு எதனையும் எதிர்பார்த்து வழங்கக்கூடாது. ஏனெனில், சில நேரம் அன்பளிப்பை பெறுபவரிடம் கொடுப்பதற்கு எதுவுமில்லாது இருக்கலாம். எனவே, இறைவனின் கூலியை மாத்திரமே எதிர்பார்த்து வழங்குதல் வேண்டும்.

3.நெருக்கமாக உள்ளவருக்கு வழங்குதல்
ஆயிஸா(ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்,
 நபி(ஸல்)அவர்களிடம் இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உண்டு. அவ்விருவரில் எவருக்கு நான் அன்பளிப்பு வழங்குவது? என்று கேட்டேன்." அவ்விருவரில் எவரின் வாசல் உமக்கு நெருக்கமாக உள்ளதோ அவருக்கு" என்று பதில் கூறினார்கள். (புஹாரி)
4.தன்னிடம் இருப்பதில் நல்லதை வழங்குதல்
அன்பளிப்பினை வழங்கும் போது, நல்லதை வழங்க வேண்டும். பாவனைப்பொருட்களாயின் உபயோகிக்கக் கூடியதாகவும், உணவுப்ண்டங்களாயின் உண்ணக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
"அபூதர் அவர்களே! நீர் குழம்பைத் தயார் செய்தால், அதில் தண்ணீரை அதிகமாக்கி, பின்பு உன் பக்கதது வீட்டாரைக் கவனித்து. அதில் நல்லதை அவர்களுக்கு ஊற்றிக்கொடுப்பீராக." (முஸ்லிம்)
"தனக்கு விருப்பமானதை தனது சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் முஃமினாகமாட்டார்" (புஹாரி, முஸ்லிம்)

5.தேவையுள்ளவர்களுக்கு தேவையானதை வழங்குதல்
சில சந்தர்ப்பங்களில் உதவி தேவையுள்ள அண்டை வீட்டார் காணப்படலாம். அவர்களது தேவையை நிவர்த்தி செய்வதன் மூலம் அண்டை வீட்டு உறவும் பலமடையும். அவர்களது தேவைகளும் நிவர்த்தி செய்யப்படும.

6.அன்பளிப்பினை வழங்கி விட்டு சொல்லிக்காட்டுதல் கூடாது
அல்லாஹ் கூறுகிறான்,
 "இறை விசுவாசிகளே! சொல்லிக்காட்டுதல், நோவினை செய்வதன் மூலம் உங்கள் தர்மங்களை வீணாக்கி விடாதீர்கள்" (அல்குர்ஆன் 2:264) "எவர்கள் அல்லாஹ்வின் வழியில் தங்கள் பொருட்களைச் செலவு செய்த பின்னர், அதைத்தொடர்ந்து தாங்கள் செலவு செய்ததைச் சுட்டிக்காட்டி பேசாமலும், (மனம்)புண்படச்செய்யாமலும் இருக்கின்றார்களோ, அவர்களுக்குரிய நற்கூலி அவர்களின் அதிபதியிடம் இருக்கின்றது" (அல்குர்ஆன் 2:264)
அன்பின் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! நன்மையான காரியங்களில் எதையெல்லாம் செய்து அற்புத அண்டை வீட்டு உறவைப் பேண முடியுமோ, அதையெல்லாம் செய்தும் தீமையான காரியங்களில் எதையெல்லாம் தவிர்த்து அண்டை வீட்டு உறவைப் பேணி அல்லாஹ்விடம் சிறந்தவர்களாகப் பிரார்த்திக்கிறேன்.
"தன் அண்டை வீட்டாரிடம் சிறந்தவரே, அல்லாஹ்விடம் சிறந்தவராவார்" (திர்மிதி)
http://www.islamkalvi.com/?p=107633

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 23 ஜனவரி, 2018

ஆன்லைன் ஷொப்பிங்: கவனத்தில் கொள்ள வேண்டியவை

ஆன்லைன் ஷொப்பிங்: கவனத்தில் கொள்ள வேண்டியவை
வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆன்லைன் ஷொப்பிங் என்பது அதிகரித்து வருகிறது.அவ்வாறு ஆன்லைன்மோகத்தில் திளைப்பவர்கள் சில விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்,ஒரு தளத்தில் நீங்கள் பார்க்கும் விலையை, மற்ற தளங்களிலும் விற்பனை செய்யப்படும் அதே போன்ற பொருட்களின் விலைகளுடன் ஒருமுறை ஒப்பிடவும். 


விலையில் குறிப்பிடத்தகுந்த வேறுபாடு இருந்தால் முன்னெச்சரிகையாக இருக்கவும். விற்பனையாளரைப் பற்றி நன்கு விசாரித்துக்கொள்ளவும். பொருளின் நிலையைப் பற்றிய கேள்விகள் கேட்கவும்.

போலியான பொருட்களை விற்பனை செய்யும் சில இணையதளங்கள், பிராண்டு உரிமையாளரது இணையதளத்தின் வடிவமைப் போன்றே தன்னுடைய தளத்தையும் வடிவமைத்திருப்பார்கள்.

அதே போன்ற படங்களைப் பயன்படுத்துதல் அல்லது பிராண்டினை உள்ளடக்கிய டொமைன் பெயரைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் அசல் இணையதளத்தைப் போலவே காட்சியளிக்கலாம். ஒன்றுக்கு நாலு முறை URL பெயரை நன்கு பரிசோதிக்கவும்.

போலியான பொருட்களை விற்பனை செய்யும் இணையதளங்கள் பொதுவாக அதிகாரப்பூர்வ தோற்றத்தைக் கொண்ட URLகளைப் பயன்படுத்தும், அதில் [brand]onsale.com அல்லது official [brand].com போன்ற வாக்கியங்கள் இருக்கலாம்.

இணையதளத்தின் WhoIs பதிவைப் பார்த்தும் அந்த டொமைன் யாருக்குச் சொந்தம் என்பதை அறிந்துகொள்ளலாம்.பொருளைத் திருப்பியளிக்க அல்லது உங்கள் கணக்கில் விதிக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்டணங்களைத் திரும்பப்பெற,பெரிய பரிவர்த்தனைகளின் டிஜிட்டல் அல்லது பேப்பர் நகலைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.பொருட்களை வாங்குவதற்கு முன்னர், நீங்கள் ஆர்டர் செய்த பொருள் சரியாக வந்துள்ளதான என சரிபார்த்துவிட்டு வாங்கவும்.
http://www.anbuthil.com/2016/05/Safe-online-shopping.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

கட்டாயம் செய்ய வேண்டியவை!

கட்டாயம் செய்ய வேண்டியவை! 

ரிசர்வ் வங்கி அல்லது நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் பெயரிலோ ஏதேனும் தகவலோ, அல்லது ஆப், என்கொயரி அல்லது டோல் ஃப்ரீ சர்வீஸ் நெம்பர் போன்ற வசதிகளோ வந்தால் அது உண்மைதானா என்பதை உங்கள் வங்கிக் கிளையில் கேட்டு தெளிவுபடுத்திக்கொண்ட பிறகு முயற்சி செய்யவும். 


உங்கள் மொபைல் போனுக்கு ஸ்க்ரீன் லாக் போட்டு வையுங்கள். அதற்கான பாஸ்வேர்ட் அல்லது பேட்டர்ன் உங்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கட்டும். 

மொபைல் பேங்கிங் வசதிக்காக வங்கிகள் வழங்கும் பிரத்யேக MPIN (Mobile-Personal Identification Number) என்ற எண்ணை, குறித்து வைப்பதோ, யாரிடமும் பகிர்ந்துகொள்வதோ வேண்டாம். வங்கிகளும் மூன்று முறைக்கு மேல் MPIN-ஐ தவறாகப் பதிவு செய்தால் அந்தச் சேவையை நிறுத்தி விடுகின்றன. 

மொபைலோ, சிம் கார்டோ தொலைந்து போனால் உடனடியாக வங்கித் தரப்பில் முறையிட்டு மொபைல் பேங்கிங் சேவையை ரத்து செய்யுங்கள். 

ரகசிய எண்களை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருங்கள். வங்கிக் கணக்கு தொடர்பான புகார்களை முடிந்தவரை நேரடியாக வங்கிக் கிளைக்கே சென்று முறையிடுங்கள். தெளிவாக பதில்களைக் கேட்டுப் பெறுங்கள். 

செல்போன் நிறுவனத்திலிருந்து பேசுவதாகச் சொல்லி உங்கள் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும், சொல்லுங்கள் என்று கேட்டால் உஷாராகிவிடுங்கள். ஏனெனில் உண்மையாகவே செல்போன் நிறுவனங்கள் நம்மைப் பற்றிய விவரங்களை அவர்களே சொல்லி, 'சரியா?' என்றுதான் கேட்பார்கள். எனவே, உங்கள் விவரங்களைச் சொல்லுங்கள் என்று அழைப்பு வந்தால், துண்டித்துவிடுங்கள்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 19 ஜனவரி, 2018

சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் விதம்,

சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் விதம்,
 சமையல் எரிவாயு பாதுகாப்பு...
நாளொரு மேனி பொழுதொரு சாவுமாக சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து மரணங்கள் நாடு முழுதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் விதம்,கையாளும் விதம் மற்றும் பாதுகாப்பு குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது.



கியாஸ் அடுப்பை பயன்படுத்துபவர்கள் நம்பிக்கையான நிறுவனங்களின் பி.ஐ.எஸ். சான்று பெற்ற சாதனங்களை எப்போதும் பயன்படுத்த வேண்டும். அதிகாரப்பூர்வமான கியாஸ் ஏஜென்சிகளிடம் இருந்தே பி.ஐ.எஸ். சான்று பெற்ற கியாஸ் ரெகுலேட்டர் மற்றும் பாதுகாப்பு டியூப்களை வாங்க வேண்டும். சமையல் கியாசை பாதுகாப்பாக பயன்படுத்தும் முறை பற்றி தெரியாவிட்டால் சிலிண்டர் வினியோகிக்கும் நபரிடம் செயல்முறை விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

காற்றோட்டமான பகுதியில், தரையில் இருந்து நின்ற நிலையிலேயே எப்போதும் சிலிண்டரை வைத்திருக்க வேண்டும். சிலிண்டர் மட்டத்தில் இருந்து உயரமான - சமமான இடத்திலேயே கியாஸ் அடுப்பை வைக்கவும் தனிப் பெட்டியிலோ அல்லது தரை மட்டத்தில் இருந்து பள்ளமான குழியிலோ சிலிண்டரை வைக்கக்கூடாது.

வெப்பமான பிற சாதனங்களில் இருந்து சிலிண்டரை தள்ளியே வைத்திருக்க வேண்டும். சிலிண்டரை பயன்படுத்தும் போது அதன் அருகில் மண்எண்ணை அல்லது வேறு வித அடுப்புகளை ஒரு போதும் வைத்திருக்கக்கூடாது. ரப்பர் டியூப், சிலிண்டர் வால்வின் உள்புறத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சிலிண்டரில் கசிவு இருப்பதை சோப்பு நீர் கொண்டே பரிசோதியுங்கள். எரியும் தீக்குச்சி மூலம் பரிசோதிக்கக் கூடாது.

நைலான் கயிற்றுடன் கூடிய பாதுகாப்பு மூடி எப்போதும் சிலிண்டரிலேயே பிணைக்கப்பட்டு இருக்க வேண்டும். கியாஸ் கசிவு தென்பட்டால் பாதுகாப்பு மூடியால் வால்வை மூட வேண்டும். அடுப்பில் பாத்திரங்களை வைத்து விட்டு நீண்ட நேரம் கவனிக்காமல் விட்டு விடாதீர்கள். சமையல் பொருட்கள் கொதித்து வெளியேறி தீயை அணைத்து விடும். இது கியாஸ் கசிவுக்கு வழி வகுக்கும்.

பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களை சமையல் அறைக்குள் வைத்திருக்கக் கூடாது. அதனால் ஏற்படும் மின் அழுத்த ஏற்றத்தாழ்வு, கியாஸ் கசிவு இருக்கும் பட்சத்தில் விபத்தை உண்டாக்கக் கூடும். படுக்கைக்கு செல்லும் முன் சிலிண்டர் ரெகுலேட்டர் "நாப்"பை மூடிவிட்டு அடுத்ததாக அடுப்பின் "நாப்"களையும் மூட வேண்டும். பயன்பாடு இல்லாத நேரத்தில் சிலிண்டரின் "நாப்" எப்போதும் மூடிய நிலையிலேயே இருக்க வேண்டும்.

காற்றை விட கியாஸ் கனமானதாக இருப்பதால் கசிவு ஏற்படும் நேரத்தில் அது தரைமட்டத்தை நோக்கி பாயும். கியாஸ் கசிவு ஏற்பட்டிருப்பது கவனத்துக்கு வந்தால் அவற்றை வெளியேற்ற அத்தனை காற்றோட்ட வசதிகளையும் செய்யவும்.
காலியான சிலிண்டர்களை பாதுகாப்பு மூடியால் மூடி, காற்றோட்டமான குளுமையான இடத்திலேயே வைத்திருக்க வேண்டும். கியாஸ் டியூப்பை எதனாலும் மூடாமல் வெளியே தெரியும்படி வைக்க வேண்டும். டியூப்பை விரிசல் இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்திடுங்கள். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரப்பர் டியூப்பை மாற்ற வேண்டும். சமையல் எரிவாயு சாதனங்களை அவ்வப்போது பரிசோதித்து சரி செய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் சுயமாக ரிப்பேர் செய்வது பாதுகாப்பாற்றது. வினியோகஸ்தர்களின் மெக்கானிக்குகளை பயன்படுத்துங்கள்.

கியாஸ் கசிவு ஏற்பட்டால் பதட்டம் அடையாமல் ரெகுலெட்டர் மற்றும் பர்னர் "நாப்"களை மூட வேண்டும். அந்த அறையில் உள்ள மின் சுவிட்சுகள், மின் சாதனங்களை இயக்கக்கூடாது வெளிப்புறம் இருக்கும் பிரதான மின் இணைப்பில் இருந்து மட்டுமே மின் சப்ளையை துண்டிக்க வேண்டும்.

காற்றோட்டத்துக்காக கதவுகள், ஜன்னல்களை திறந்து வைக்கவும் எரியும் நெருப்பு, எண்ணை விளக்குகள், மெழுகுவர்த்தி போன்றவற்றை அணைத்திட வேண்டும். சிலிண்டரை பாதுகாப்பு மூடியால் மூடிவிடுங்கள். உதவிக்கு உங்களின் வினியோகஸ்தர் அல்லது அவசர சேவை மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

காற்றை விட கியாஸ் கனமானதாக இருப்பதால் கசிவு ஏற்படும் நேரத்தில் அது தரைமட்டத்தை நோக்கி பாயும். கியாஸ் கசிவு ஏற்பட்டிருப்பது கவனத்துக்கு வந்தால் அவற்றை வெளியேற்ற அத்தனை காற்றோட்ட வசதிகளையும் செய்யவும்.

கசிவு ஏற்பட்டால் இந்தியன் ஆயில் நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு (அலுவலக நேரத்தில்) 044-24339236, 24339246 என்ற டெலிபோனில் புகார் தெரிவிக்கலாம். அலுவலக நேரத்திற்கு பின்னர் 9941990909, 9941955111, 9941930303 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். புகார் தெரிவித்த ஒரு மணி நேரத்திற்குள் ஐ.ஓ.சி. மெக்கானிக்குகள் அங்கு வருவார்கள் என்று எண்ணை நிறுவனம் தெரிவித்துள்ளது
http://pettagum.blogspot.com/2016/04/blog-post_96.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 17 ஜனவரி, 2018

வருமான வரி கட்டாமல் சேமிக்க.. சூப்பர் ஐடியா!

வருமான வரி கட்டாமல் சேமிக்க.. சூப்பர் ஐடியா!
ச.ஸ்ரீராம் ரெட்டி, ஆடிட்டர்

மொத்த வருமானத்தில் இருந்து கழிவுகள் (Chapter VI-A Deductions)
1. பிரிவு 80-Cன் கீழ் கழிவுகள்:
தனிநபர் ஒருவருக்கு மிக அதிக சேமிப்பைத் தரக்கூடியது. பிரிவு 80-C ஆகும். இந்தப் பிரிவின் கீழ், பின்வரும் திட்டங்களில் முதலீடு செய்து, ஒரு நிதி ஆண்டில் ரூ.1,50,000 வரை தங்கள் மொத்த வருமானத்தில் கழிவு பெறலாம்.

அ) ஆயுள் காப்பீடு பிரீமியம் (Life Insurance Premium)
பொதுவாக ஆயுள் காப்பீடு என்றாலே எல்.ஐ.சி. தான் நம்முடைய நினைவுக்கு வரும். மாறாக, இந்தப் பிரிவின் கீழ், எந்தவொரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலும் உங்கள் மீதும், உங்கள் குழந்தைகள் மீதும், உங்கள் மனைவி மீதும்
   காப்பீடு செய்து கட்டிய பிரீமியம் தொகைக்கு கழிவு பெறலாம். ஆனால், நீங்கள் கட்டிய பிரீமியம் தொகை, காப்பீட்டு தொகையில் 10% க்கு மிகாமல் இருக்க வேண்டும்.



ஆ) வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் பொது வைப்பு நிதி (PPF)
பொதுவாக
  நிறுவனம் சம்பளத்தில் இருந்து 12% பிடித்தம் செய்தாலும் நீங்கள் இப்பிரிவின் கீழ் கூடுதல் கழிவு பெற்று வரி சேமிக்க விரும்பினால் 12%க்கும் கூடுதலாக பிடித்தம் செய்ய உங்கள் நிறுவனத்தை பணிக்கலாம்.

மேலும் சம்பள வருமானம் பெறுபவர் மட்டுமல்லாமல் இதர வருமானம் உள்ள தனிநபரும் பொது வைப்பு நிதியில் முதலீடு செய்வதின் மூலம் வரி சேமிக்க முடியும்.

நிரந்தர வைப்பு நிதி (fixed Deposit) போல் அல்லாமல் வருங்கால வைப்பு நிதி மற்றும் பொது வைப்பு நிதி மீதான வட்டிக்கு வரி ஏதுமில்லை என்பது கூடுதல் தகவல்.

மேற்கண்ட சேமிப்புகள் தவிர,
இ) வீட்டுக் கடன் அசல் தொகை (Housing loan repayment)
ஈ) வீட்டிற்கான பத்திரப் பதிவு செலவு (Stamp Duty payment)
உ) குழந்தைகள் கல்விக் கட்டணம் (Tuition Fees)
ஊ) தேசிய சேமிப்பு பத்திரம் (National Savings certificate)
எ) வரி விலக்குப் பெற்ற நிரந்தர வைப்பு நிதி (fixed Deposit)

போன்ற சேமிப்பு மற்றும் செலவினங்களுக்கு பிரிவு 80-Cன் கீழ் கழிவு பெற முடியும்.

''குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை."
-வள்ளுவன்

தன் கையில் பொருள் இருக்கும் போதே செய்ய வேண்டிய செயல்களை அல்லது கடமைகளை செய்வது, குன்றின் மேல் ஏறி நின்று யானைப்போர் காண்பதற்கு ஒப்பாகும்" என்பது இதன் பொருள்.

ஆகவே, வள்ளுவன் வாய்மொழிப்படி பிரிவு 80-Cன்
  கீழ் முதலீடு மற்றும் சேமிப்பு செய்து பாதுகாப்பாக வாழ்வோமாக.

2. மருத்துவக் காப்பீடு பிரீமியம் (Medical Insurance Premium) பிரிவு 80-D
"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்."

வள்ளுவன் உரைத்தது குற்றம் கடிதல் குறித்து என்ற போதிலும், வருமுன் காப்பது எதுவாகிலும் நலம் என்கிற பொதுவான பொருள் கொள்வதில் தவறில்லை.
அவ்வகையில், தனிநபர் ஒருவர் தன் மீதும் தன் குழந்தைகள் மற்றும் பெற்றோர் மீதும் மருத்துவக் காப்பீடு செய்வதின் மூலம் தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் ஏற்படக் கூடிய செலவினங்களை எளிதாக எதிர்க்கொள்ள முடியும்.

பிரிவு 80-Dன் கீழ் ரூ.25000 வரை 60 வயதுக்கு உட்பட்ட தனி நபரும் மற்றும் ரூ.30,000 வரை மூத்த குடிமக்களும் கழிவு பெற முடியும்.

மேலும் முழு உடல் பரிசோதனை செய்ய ஆகும் செலவு ரூ.5000 வரை இப்பிரிவின் கீழ் கழிவு பெறலாம்.

குறிப்பு: கழிவு பெற விரும்பும் தனிநபர் காப்பீட்டுத்தொகை காசோலை மூலமோ அல்லது கேட்பு காசோலை மூலமோ கொடுப்பது அவசியம். மாறாக பணமாக செலுத்தப்படும் காப்பீட்டுத்தொகைக்கு கழிவு பெற இயலாது.

3. ஊனமுற்ற குடும்ப உறுப்பினருக்கான மருத்துவச் செலவுகள்: பிரிவு 80DD
தங்களை சார்ந்துள்ள ஊனமுற்ற குடும்ப உறுப்பினருக்கு செலவிடும் மருத்துவச் செலவுகள் இப்பிரிவின் கீழ் கழிவுபெற தகுதி வாய்ந்தது.

இப்பிரிவின் கீழ்

அ) 40% முதல் 80% வரை ஊனமுள்ளவர்கள் - ரூ.75,000

ஆ) 80% மேல் ஊனமுள்ளவர்கள் - கழிவு பெற வழிவகை உள்ளது. - ரூ.1,25,000

தாங்கள், எவ்வித ரசீதும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. மாறாக, அரசு மருத்துவரிடம் மருத்துவ சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். (நோயின் அளவை நிரூபிப்பதற்காக மட்டும்).

4. குறிப்பிட்ட வியாதிகளுக்கான மருத்துவச் செலவுகள் (பிரிவு 80DDB)
இந்திய குடியிருப்பு பெற்ற தனிநபர் மற்றும் அவர்தம் உறவினர்கள் (சார்புடையவர்கள் / dependent on assessee) எய்ட்ஸ், நரம்பு வியாதிகள் போன்ற சில வரையறுக்கப்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டு இருப்பின் ரூ.40,000 வரையும் மூத்த குடிமக்களுக்கு ரூ.60,000 வரையும் மற்றும் மிகவும் மூத்த குடிமக்களுக்கு ரூ.80,000 வரையும் கழிவு அளிக்கப்படுகிறது.

இதற்காக, தாங்கள் படிவம் 10(1) யை பூர்த்தி செய்து அரசு மருத்துவரிடம் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

உடல் ஊனமுற்றோருக்கான வரிச்சலுகை - பிரிவு 80G
பிரிவு 80 - DD ஊனமுற்ற உறவினர்களுக்கு வரிச்சலுகை அளிக்கிறது. மாறாக, பிரிவு 80G ஊனமுற்றவர் தாமே வரிக்கு உட்பட்டவராக இருப்பின் கழிவு பெற அனுமதிக்கிறது.

80 U - வருமான வரி கட்டுபவர் ஊனமுற்றவராக இருப்பின் இந்தப் பிரிவின் கீழ் வரிச் சலுகை பெறலாம்.

இப்பிரிவின் கீழ் தனிநபர் ரூ.75,000 வரையும் மற்றும் மூத்த மற்றும் மிகவும் மூத்த குடிமக்கள் ரூ.1,25,000 வரையும் கழிவு பெறலாம். இதற்காக, அரசு மருத்துவரிடம் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

ஆயினும் 80 - DDன் கீழ் வரிச்சலுகை பெற்றிருப்பின் அதே நபருக்காக பிரிவு 80 Uன்
  கீழ் மீண்டும் ஒருமுறை கழிவு பெற இயலாது.

5. மூலதன பங்குகளில் முதலீடு (Equity Savings Scheme) பிரிவு 80 CCG
ராஜீவ்காந்தி மூலதன பங்கு சேமிப்பு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்திற்கு குறைவாக வருமானம் உள்ளவர்கள் ரூ.50,000 வரை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து வரியைத் தவிர்க்கலாம். நீங்கள் முதலீடு செய்த தொகையில் 50% அல்லது ரூ.25,000 இதில் எது குறைவோ, அத்தொகை உங்கள் வருமானத்தில் இருந்து கழிவாக பெறலாம்.

6. கல்விக் கடனுக்கான வட்டி (பிரிவு 80E)
வரிக்குட்பட்ட தனிநபர் தன்னுடைய, தன் மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோரின் கல்வி கடனுக்கான வட்டியை தன் வரிக்குட்பட்ட வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ளலாம். பின்வரும் நிபந்தனைகளை கருத்தில் கொள்க.

அ) கல்விக் கடன் வரையறுக்கப்பட்ட வங்கிகளில் மட்டுமே எடுத்திருக்க வேண்டும்.

ஆ) 8 ஆண்டுகளுக்கு மட்டுமே இச்சலுகை உண்டு.
இ) இப்பிரிவின் கீழ் சலுகை பெற இந்தியாவில் பயின்றிருக்க வேண்டிய அவசியமில்லை.

மேற்கண்ட கழிவுகள் அல்லாமல்,
அ) பிரிவு 80Gன் கீழ் தாங்கள் அளிக்கும் நன்கொடைக்கு கழிவு பெறலாம். எத்தகைய அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கிறோம் என்பதைப் பொருத்து அது முழுமையாக வரி விலக்கிற்கு உட்பட்டதா அல்லது பகுதியாக வரி விலக்கிற்கு உட்பட்டதா என்பது மாறுபடும்.

ஆ) பிரிவு 80TTA ன் கீழ் வங்கி சேமிப்பு கணக்கில் பெறப்படும் வட்டி ரூ.10,000 வரை வரிவிலக்கிற்கு உகந்ததாகும்.

இ) தங்கள் மொத்த வருமானம் ரூ.5,00,000க்குள் இருப்பின் பிரிவு 87A ன் கீழ் ரூ.2,000யை நீங்கள் கட்ட வேண்டிய வரியில் இருந்து கழித்துக் கொள்ளலாம். இது நடப்பு 2015-16 ம் நிதி ஆண்டுக்கானது.
 

ஆகவே, நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை முறையாக திட்டமிட்டு முதலீடு செய்வதின் மூலமும் வரிக் கணக்கை சமர்ப்பிக்கும் போது அனுமதிக்கப்பட்ட கழிவுகள் மற்றும் வரிவிலக்கை பயன்படுத்திக் கொள்வதின் மூலமும் வரி கட்டாமல் சேமிக்கலாம்.
http://pettagum.blogspot.com/2016/03/blog-post_29.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Paneer Health Benefits: ஆரோக்கியமான பால் உணவான பன்னீர் , அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவாக உள்ளது. ஆனால் , பன்னீர் சாப்பிடும் சரியான ம...

Popular Posts