லேபிள்கள்

வியாழன், 11 நவம்பர், 2010

ஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன.


ஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன.

 
1.      நீஅவனைச் சந்திக்கும்போது ஸலாம் சொல்வது.
2.      அவன் உன்னை விருந்திற்கு அழைத்தால் அதற்கு பதிலளிப்பது (ஏற்றுக் கொள்வது)
3.      அவன் உன்னிடம் அறிவுரை கேட்டால் சரியான அறிவுரை கூறுவது
4.      அவன் தும்மி ''அல்ஹம்துலில்லாஹ்'' என்றுகூறினால்அதற்கு(யர்ஹமுக்கல்லாஹ்என்று) பதிலளிப்பது.
5.      அவன்நோய்வாய்ப்பட்டால்அவனை நலம் விசாரிப்பது.
6.      அவன்மரணித்து விட்டால் அவனைப் பின் தொடர்ந்து (அடக்கம் செய்யச்) செல்வது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

வாழ்க்கைத்தரத்தில்) உங்களுக்குக் கீழிருப்போரை நீங்கள் பாருங்கள். உங்களுக்கு மேலிருப்போரை பார்க்காதீர்கள். ஏனெனில்அல்லாஹ் உங்கள் மீது புரிந்துள்ள அருட்கொடைகளை நீங்கள் சாதாரணமாகக் கருதாமலிருக்க அதுவே சரியானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நல்லவை மற்றும் பாவத்தைப் பற்றி நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, ''நற்குணமேநற்செலும் நன்மையுமாகும். எது உன் உள்ளத்தில் நெருடலை ஏற்படுத்துமோ எதை மக்கள் அறிந்து கொள்வதை நீ விரும்ப மாட்டாயோ அதுவே பாவமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நீங்கள்மூன்றுபேர் (ஒன்றாக) இருக்கும் போது மக்களுடன் கலந்து விடும் வரை மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் ரகசியமாக எதையும் பேச வேண்டாம். ஏனெனில் அது அவருக்கு வருத்தத்தை(கவலையை) ஏற்படுத்தும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஒரு மனிதர் அமர்ந்திருக்கும் இடத்தில் நீங்கள் அமர்வதற்காக அவரை அந்த இடத்தை விட்டு எழுப்பாதீர்கள். மாறாகசிறிது இடம் விட்டு விசாலமாக்கிக் கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களுடன் எவரேனும் உணவு உண்டால் கை விரல்களைச் சுவைக்காத அல்லது சுவைக்கச் செய்யாதவரை தனது கையைக் கழுவ வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சிறியவர்பெரியவருக்கும்நடந்துசெல்பவர் அமர்ந்திருப்பவருக்கும்,குறைந்தஎண்ணிக்கையிலுள்ளவர்கள் அதிகமான எண்ணிக்கையிலுள்ளவர்களுக்கும் ஸலாம் சொல்லட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிமுடைய மற்றோர்அறிவிப்பில் ''சவாரியில்செல்பவர் நடந்து செல்பவருக்கு (ஸலாம் சொல்லட்டும்)'' என்று உள்ளது.

(
ஒருகூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரைக் கடந்து செல்லும் போது) கூட்டத்தார் அனைவரின் சார்பாகவும் அவர்களில் ஒருவர் சலாம் சொல்வதும் மற்றொரு கூட்டத்தாரின் சார்பாக அவர்களில் ஒருவர் பதில் சொல்வதும் போதுமானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நீங்கள்கிறிஸ்தவர்களையும், åதர்களையும்சந்தித்தால் (முதலில்)நீங்கள் ஸலாம் சொல்லாதீர்கள். மேலும்குறுகிய பாதையில் அவர்களைச் செல்லச் செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
உங்களில் ஒருவர் தும்மினால் அவர் அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்)'' என்று கூறட்டும். அவருடைய சகோதரர் அவருக்காக ''யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உன்மீது கிருபை செய்யட்டும்)'' என்று கூறட்டும். தும்மியவர் அதைக் கேட்டு, ''யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹ் பாலகும்...... (அல்லாஹ் உமக்கு நேர்வழியைத் தந்து உமது நிலையை சீராக்கட்டும்) என்று கூறட்டும்''என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களில் எவரும் நின்று கொண்டு குடிக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களில் ஒருவர் காலணியை அணிந்தால் தமது வலக் காலில் முதலில் அணியட்டும்.'' பின்னர் அதைக் கழற்றும் போது இடக் காலிலிருந்து முதலில் கழற்றட்டும். மேலும் அணியும் போது வலக் காலை முதலில் நுழைந்துஅதைக் கழற்றும் போது இடக்காலிலிருந்து முதலில் கழற்றட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களில் ஒரு காலில் மட்டும் செருப்பணிந்து நடக்க வேண்டாம். இரு கால்களிலுமே அணிந்து கொள்ளட்டும். அல்லது இரண்டையும் கழற்றி விடட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
பெருமையடித்தவனாக தன்னுடைய ஆடையை பூமியில் பரவவிட்டு நடப்பவனை அல்லாஹ (மறுமையில்) ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்''என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்.
நீங்கள் புசிக்கும்போது வலக்கரத்தால் புசியுங்கள். பருகும் போது வலக் கரத்தால் பருகுங்கள். ஏனெனில்நிச்சயமாக ஷைத்தான் தனது இடக் கரத்தால் புசிக்கிறான். மேலும் தனது இடக் கரத்தால் குடிக்கின்றான்''என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
வீண்விரயம்மற்றும் பெருமையின்றி புசிபருகு! உடுத்து!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

கருத்துகள் இல்லை:

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts