லேபிள்கள்

திங்கள், 17 பிப்ரவரி, 2020

முகத்தில் உள்ள அழுக்களை நீக்கி பொலிவாக்கும் அழகு குறிப்புகள்.:

அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஒரு சூப்பரான அழகு பராமரிப்பு பொருள் என்றால், அது தேன் தான். ஏனெனில் தேனை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவினால், சருமம் நன்கு அழகாக மாறும். வேண்டுமெனில், தேனுடன் சிறிது தயிர் மற்றும் சந்தனப் பொடியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதனை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமம் ஜொலிக்கும்.
வேப்பிலையை அரைத்து, அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
பப்பாளியைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்துளைகள் அடைக்கப்பட்டு பருக்கள் வராமல் தடுக்கும். அதற்கு பப்பாளியை அரைத்து, அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 5-10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
பால் சருமத்தை இறுக்கமடையச் செய்வதோடு, வறட்சியின்றி வைத்துக் கொள்ளும். அதற்கு பாலை பஞ்சில் நனைத்து, முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், முகம் பொலிவோடு காணப்படும்.
தக்காளியில் லைகோபைன் என்னும் சருமத்தைப் பாதுகாக்கும் பொருள் உள்ளது. எனவே தக்காளியைக் கொண்டு, தினமும் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் உள்ள அழுக்கள் அனைத்தும் நீங்கிவிடும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 15 பிப்ரவரி, 2020

மூட்டு வலி குறைய இய‌ற்கை வைத்திய குறிப்புக்கள். . .

சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும்.
பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்வு குறையும்.
முடக்கற்றான் இலைகளை எடுத்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.
குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மூட்டு வலி குறையும்.
கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால் மூட்டு வலி குறையும்.
முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங்களில் பூசி வந்தால் மூட்டு வலி குறையும்.
வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை முதலியவற்றை நன்கு சுத்தம் செய்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டுவர மூட்டுவலி குறையும்.
வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து சூடாக்கி மூட்டுவலியுள்ள இடத்தில் தடவ வலி குறையும்.
நொச்சி இலைச் சாறை கட்டியாக எடுத்து மூட்டுவலி உள்ள இடத்தில் பூசினால் மூட்டு வலி குறையும்.
நொச்சி இலைச் சாறை,மிளகு தூள் ,நெய் சேர்த்து சாப்பிட்டால் மூட்டு வலி குறையும்.
நொச்சி இலை, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால் மூட்டுவலி குறையும்.
கருநொச்சி இலைகளை நறுக்கி, உப்பு சேர்த்து வதக்கி மூட்டு வலி மற்றும் வாதவலி மேல் கட்டி வந்தால் வலி குறையும்.
கைப்பிடி உடைமர இலைகளோடு, மூன்று மிளகு சேர்த்து அரைத்து மூட்டு வலி மேல் பூசி வந்தால் மூட்டு வலி குறையும்.
அழிஞ்சில் இலைகளைத் துண்டுகளாக நறுக்கி, வதக்கி இளஞ்சூடாக மூட்டு வலி மேல் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.
காரட் இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள் குறையும்.
வில்வ மர இளந்தளிரை வதக்கி இளம் சூட்டோடு மூட்டுகளின் மீது ஒத்தடம் கொடுக்கலாம்.
கடுகு எண்ணெயில் வெங்காய சாற்றை சிறிதளவு கலந்து வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டுவலி குறையும்.
பருத்தி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.
புங்கன் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி ,இந்நீரால் மூட்டுவலி ஏற்பட்ட இடத்தைக் கழுவி வந்தால் மூட்டுவலி குறையும்.
அவுரி இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூடாக மூட்டுவலி மேல் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.
குப்பைமேனி இலைகளை எடுத்து நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன்,எலுமிச்சைச் சாறு கலந்து மூட்டு வலி மேல் பூசினால் மூட்டுவலி குறையும்.
குங்கிலியம் இலையின் சாறை இஞ்சி சாறு போல இந்த சாறை குடித்தால் மூட்டு வலி குறையும்.
செந்நாயுருவி இலையை பொடியாக நறுக்கி 1 தேக்கரண்டியளவு வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி கட்கட்டினால் மூட்டு வலி குறையும்.
மூக்கிரட்டை வேரை எடுத்து நைத்து தண்ணீர் விட்டு காய்ச்சி சாப்பிட்டு வர மூட்டுவலி குறையும்.
அத்தி இலையை அரைத்து மூட்டில் வைத்து தினமும் கட்ட மூட்டு வலி குறையும்.
கடலை இலையை அவித்து இளஞ்சூட்டோடு தினமும் மூட்டில் வைத்து கட்ட மூட்டு வலி குறையும்.
எள் எண்ணெய், வேப்ப எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய், சுக்குபொடி, மிளகுபொடி ஆகியவற்றை தைலம் பதம் வரும் வரை காய்க்கவும். ஆறியதும் வலி உள்ள இடத்தில் தடவி வெந்நீரில் குளிக்க வலி குறையும்.
சுக்கு, தனியா, வெல்லம், சீரகம் ஆகியவற்றை இடித்து சாப்பிட்டு வர மூட்டு வலி குணமாகும்.
கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.
சுக்கு, ஆவாரம் பட்டை இரண்டும் சம அளவு எடுத்து சிறிதளவு நீர் விட்டு காய்ச்சி ஆற வைத்து சாப்பிட்டால் கைகால் வலி குணமாகும்.
காலையில் சிறுதளவு தேனும் அதே அளவு இஞ்சி சாறும் கலந்து சாப்பிடவும் கைகால் வலி குணமாகும்.
தூதுவளை இலையை மைபோல் அரைத்து சிறிதளவு எடுத்து பசும்பாலில் கலந்து காலை மாலை சாப்பிடவும் கைகால் வலி குணமாகும்.
சர்க்கரை வள்ளி கிழங்கை தண்ணீர் விட்டு அரைத்து வலி உள்ள இடத்தில் பூசவும்.
வாழைப்பூவை இடித்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வலி & எரிச்சல் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும்.
சிறிதளவு மருதாணி இலையை எடுத்து அதனுடன் நல்லெண்ணைய் சேர்த்து நன்றாக காய்ச்சி வலி உள்ள இடங்களில் தடவினால் குணமாகும்.
சரக்கொன்றை மர விதையை நன்றாக அரைத்து வலி உள்ள இடத்தில் பற்று போட வேண்டும்
அத்தி மரத்திலிருந்து பாலை எடுத்து வலி உள்ள இடத்தில் பத்து போடவும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 13 பிப்ரவரி, 2020

வழக்குகளில் சமரசம் செய்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

ஏதோ ஒரு செயலினால் பாதிக்கப்பட்டவர், ஏதோ ஒரு வேகத்தில் எதிரி மீது குற்றம் சாட்டி, "ஒன்ன என்ன செய்றேன் பார்!" என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விடுவார். ஆனால், வழக்கின் போக்கு, அதற்கு ஆகின்ற செலவு, வீண் அலைச்சல் மற்றும் அதனால் ஏற்படுகின்ற மன உளைச்சல் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு, "சமாதானமாக போய்விட்டால் என்ன?" என்று வாதி மற்றும் பிரதிவாதி ஆகிய இருவருமே ஒரு காலகட்டத்தில் நினைப்பதுண்டு. ஆனால், எல்லா வழக்கிலும் சமரசம் செய்துகொள்ள நீதிமன்றங்கள் அனுமதிப்பதில்லை. சில வழக்குகளில் குற்றவாளிக்கு தண்டணை வழங்கியே தீர வேண்டும்! என்று சட்டம் சொல்கிறது. சமரசம் செய்து கொள்ளும் குற்றங்கள் எந்த சட்டப்பிரிவுக்குட்பட்டவை? அதற்கு வழக்குத்தொடுத்தவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் என்ன செய்ய வேண்டும்? என்பதை கீழே காண்போம் வாருங்கள்.
சமரசம் செய்து கொள்ளும் குற்றங்கள்
சமரசம் செய்து கொள்ளும் குற்றங்களைப் (Compounding of Offences) பற்றி இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 298, 323, 324, 341, 342, 352, 355, 358, 426, 427, 447, 448, 491, 497, 498, 500, 501, 502, 504, 506 மற்றும் 508 ஆகியவற்றின் கீழ் அடங்கிய குற்றங்களின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த தரப்பினர்கள் சமாதானம் செய்து கொள்வதற்கு நீதிமன்றத்தில் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. பாதிக்கப்பட்டவரும் எதிரிகளும் உள்ளூர் பெரியவர்களின் முன்னிலையில் ஆஜராகி, வழக்கை மேற்கொண்டு நடத்த வேண்டாமென்று முடிவு மேற்கொண்டு, எழுத்து மூலமாக ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தி, அதனைக் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 320(1)ன் கீழ்மனுத்தாக்கல் செய்தாலே போதுமானதாகும். அந்த மனுவில் கண்டிப்பாக பாதிக்கப்பட்டவரும், அனைத்து எதிரிகளும் கையொப்பம் செய்திருக்க வேண்டும்.
நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்னர் சமரசம்
இந்திய தண்டணைச் சட்டத்தின் பிரிவுகள் 324, 325, 335, 337, 338, 343, 344, 346, 354, 357, 379, 381, 403, 406, 407, 408, 411, 414, 417, 418, 419, 420, 421, 422, 423, 424, 428, 429, 430, 451, 482, 483, 486, 494, 500 மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் சமரசம் செய்து கொள்வதாக இருந்தால் எந்த நீதிமன்றத்தில் வழக்கு நடக்கின்றதோ அந்த நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும்.
எந்த ஒரு வழக்கிலும் தீர்ப்பு சொன்ன பின்னரோ அல்லது ஒரு வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட பின்னரோ சமரசம் செய்து கொள்ள முடியாது.
நீதிமன்றம் என்ன செய்யும்?
சமரசத்தின் பொருட்டு மனுத்தாக்கல் செய்த பின்னர் நீதிபதி பாதிக்கப்பட்டவரை விசாரித்து அவர் வழக்கில் சமாதானமாக போக விரும்புவதை பதிவு செய்து கொண்டு எதிரிகளை அந்த வழக்கிலிருந்து விடுவிப்பார். பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்கு உட்பட்டவராக அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தால் வழக்கை சமரசம் செய்து கொள்ள முடியாது.
அது போன்ற சூழ்நிலையில் அவர் சார்பில் தந்தை அல்லது தாய் அல்லது காப்பாளர் சமரசம் செய்து கொள்ளலாம்.
சமரசம் செய்ய முடியாத குற்றங்களில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் மூலம் உயர்நீதிமன்றமோ அல்லது அமர்வு நீதிமன்றமோ சமரசம் செய்து கொள்ள சம்பந்தப்பட்ட நபருக்கு குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 401ன் கீழ் அனுமதி வழங்கலாம்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

குளிர்காலத்தில் சளிக்கு இயற்கை மருத்துவம்

*அலர்ஜியால் திடீரென சளி பிடிக்கும். நாள்பட்ட சளியானது காசநோயாக மாறும். காய்ச்சலை உண்டாக்கும். அதிக சளியால் மூச்சு திணறல் உள்ளிட்ட* *பிரச்சினைகள் ஏற்படும். தூதுவளையை பயன்படுத்தி சளி பிரச்சினையை தீர்க்கும் மருந்து தயாரிக்கலாம். 10 தூதுவளை இலைகளை எடுக்கவும். இதனுடன், சிறிது முசுமுசுக்கை இலை* *பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சளி, இருமல் இல்லாமல் போகும்*
*சளி பிரச்சினைக்கு தூதுவளை மருந்தாகிறது. இது, உஷ்ணத்தை கொடுக்க கூடியது. உடலுக்கு பலத்தை தருகிறது. முசுமுசுக்கை சளியை போக்குகிறது. ஆயுளை அதிகரிக்கும் தன்மை* *கொண்டது. தூதுவளை, முசுமுசுக்கை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வெள்ளெருக்கம் பூவை பயன்படுத்தி ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து யாரிக்கலாம்*
*வெள்ளெருக்கம் பூவின் இதழ்களை நீர்விடாமல் பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் மிளகுப்பொடி சேர்க்கவும். 4 பங்கு பூவுக்கு ஒரு பங்கு மிளகு என்ற அளவில் எடுக்கவும். இதை நன்றாக கலந்து சுண்டைக்காய் அளவில் உருண்டைகளாக பிடிக்கவும். இது காய்ந்தவுடன் மிளகு அளவுக்கு கிடைக்கும். அன்றாடம் இருவேளை மிளகு அளவுக்கு சாப்பிடும்போது ஆஸ்மா சரியாகும்* *ஆஸ்துமாவுக்கு மிகவும் பாதுகாப்பான மருந்தாக வெள்ளெருக்கம் பூ விளங்குகிறது. ஒரு வெள்ளெருக்கம் பூவுடன் 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் ஆஸ்துமா பிரச்சினை தீரும்*
*கடுகை பயன்படுத்தி வறட்டு இருமலுக்கான தேநீர் தயாரிக்கலாம். கால் ஸ்பூன் கடுகு எடுத்து லேசாக வறுக்கவும். இதை இடித்து எடுக்கவும். இந்த பொடியில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி தேன் சேர்த்து குடிப்பதால் சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி, கண்களில் நீர் வழிதல் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் போகும். இந்த தேநீரை 50 முதல் 100 மில்லி வரை குடிக்கலாம்*
*இருமலுக்கு கடுகு உன்னதமான மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட கடுகு காரம் மிக்கது, உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. காய்ச்சலை தணிப்பதுடன் வலியை குறைக்கும்* *வீக்கத்தை கரைக்கிறது*

*ஆடாதொடை இலை முசுமுசுக்கை தூதுவளை கண்டங்கத்திரி துளசி இவை அளவும் சம அளவு சாறு எடுத்து சுக்கு மிளகு திப்பிலி அக்கிரகாரம் தாளிசபத்திரி குரோசானி ஓமம் வால் மிளகு வகைக்கு 10 கிராம் முறைப்படி கஷாயம் இட்டு கலந்து தயார் செய்து காலை இரவு 10 மில்லி சாப்பிட சளி இருமல் தும்மல் மூக்கடைப்பு இவைகள் அனைத்தும் தீரும் தாழ்மையுடன் அரும் நாகலிங்கம்*
*அருள் ஹெர்பல்ஸ் தயாரிப்பில்* *தீராத சளி இருமல் தும்மல் மூக்கடைப்பு சைனஸ் பிரச்சினையை தீர்க்கும் கசாயம்*
*தீராத சளி இருமல் அடுக்கு தும்மல் மூக்கடைப்பு சைனஸ் அலர்ஜி ஆஸ்த்துமா மிகவும் அதிசயமாக குணமாகிறது நுரையீரலில் சேர்ந்துள்ள* *கபத்தை வெளியேற்றும் அதிசய மூலிகை மருந்து . பரிபூரணமாக குணம் கிடைத்தது மூன்றே மாதத்தில் பத்தாண்டு கால நோய்* *குணமானது தேவைப்படுவோருக்கு கூரியரும் அனுப்பப்படும் யாம் பெற்ற நண்மை உலகம்* *பெற பகிர்வோம் நமக்கு பயன்படாவிட்டாலும் பிறருக்காக பயன்படும்*


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

லஞ்ச_ஒழிப்புப்_புகார்_அளிப்பது_ #எப்படி.?

லஞ்ச ஒழிப்பு துறை அமைப்பானது, முற்றிலும், சென்னையில் தலைமைச்செயலகத்தில் இயங்கி வரும் CHIEF SECRETARY அந்தஸ்த்தில் உள்ள VIGILANCE COMMISSIONER- அவர்களின் கட்டுப்பாட்டிலும்,
சென்னை ஆலந்தூரில் உள்ள DGP அல்லது ADDL.DGP அந்தஸ்த்தில் உள்ள,ஒரு மூத்த IPS அதிகாரியின் தலைமையில் இயங்கிவரும்,DVAC என்றழைக்கப்படும் *Directorate of Vigilance and Anti-Corruption* என்ற இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டிலும் மட்டும்தான் செயல்படுகின்றனர்.
லஞ்ச ஒழிப்புச்சட்டம்-என்று அழைக்கப்படும் PREVENTION OF CORRUPTION ACT 1988- பிரிவு-2 பிரகாரம், அரசுப்பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, மக்களால் பொதுப்பணிக்கென தேர்ந்தெடுக்கப்படும், பஞ்சாயத்துப் போர்டு தலைவர், வார்டு உறுப்பினர்கள், நகரம், மாவட்டம் மற்றும் முனிசிபல் கவுன்சிலர்கள், சேர்மேன் மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளும்- PUBLIC SERVANTS என்ற வரையரறைக்கு, உட்பட்டவர்கள்தான்.
*லஞ்சத்தில் பலவகைகள் உண்டு*
*#எப்படி_புகார்_அளிப்பது*
லஞ்சம்கொடுத்தால்தான் வாயையே தொறப்பேன் என்று செயல் படும் சில Corruptive Officials மீது பொறிவைப்பு நடவடிக்கை வேண்டுவோர், அந்தந்த மாவட்ட தலைநகரில் ஒரு டி.எஸ்.பி தலைமையில் செயல் படும் லஞ்ச ஒழிப்பு பிரிவிற்கு நேரில் சென்று விபரம் கூறினால் போதும். பொறி வைத்து முடித்து, அந்த லஞ்ச அதிகாரிகளை கைதுசெய்யும் வரை அவர்களே உடனிருந்து செயல் படுவார்கள்.
பொதுமக்கள் தாங்கள் அவ்வாறு புகார் அளித்தால், நம் அரசு வேலையை முடித்துக் கொடுக்க மாட்டார்களே என்று கவலைப்பட வேண்டாம். பொறிவைப்பு நடவடிக்கை முடிந்ததும், அந்த வேலையை செய்து கொடுக்க, லஞ்ச ஒழிப்பு போலீஸாரே உரிய உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு,ஆவன செய்து கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில், பொறிவைப்பு நடவடிக்கை போல உடனடி கைது இல்லாவிட்டாலும், சம்பந்தப்பட்ட லஞ்சப்பேர்வழி காலப்போக்கில் சட்னியாகிவிடுவார்.
*விஜிலன்ஸ் கமிஷனர் மற்றும் DVAC- முகவரிகள்*
1) Vigilance Commissioner
Personnel and Administrative Reforms Department Secretariat, Chennai 600 009 PBX No. 044-25665566
(2)The Director,
Vigilance and Anti-Corruption,
293,MKN Road, Collectors Nagar, Alandur,Chennai,Tamil Nadu-600016.
Chennai – 600 028.
Phone-044-22321090/22321085/ 22310989/
22342142
E-mail: dvac@nic.in
மத்திய அரசுப்பணியில் உள்ளவர்கள் மீது லஞ்சப்புகார்களை அளிக்கும்பட்சத்தில், மாநில அரசுகட்டுப்பட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை எடுக்க முன்வர மாட்டார்கள்.
அப்புகார்களை கீழே அளிக்கப்பட்டுள்ள CBI-Anti-Corruption பிரிவிற்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்தாலே போதும். அவர்களேஉங்கள் இடத்திற்கு, உங்களைத்தேடி வந்து புகாரைப்பெற்று சம்பந்தப்பட்ட Corrupt Officer-மீது பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
Joint Director and Head of Zone,
III Floor, E.V.K., Sampath Building, College Road, Chennai 600006.
044-28232756 (Direct),
044-28272358(General),
044-28232755 (FAX)
09444446240
State of Tamil Nadu, Kerala & Pondicherry.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts