லேபிள்கள்

செவ்வாய், 29 ஜனவரி, 2019

தோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…!


உங்களுக்கு பிடித்தமானவரை பாராட்ட விரும்பினால், அவரது உடலின் எந்த பகுதியில் தட்டிக் கொடுப்பீர்கள்?
அன்பானவரை அணைத்துக் கொள்ளும்போது உங்கள் உடலின் எந்தப்பகுதி அதிக முக்கியத்துவம் பெறும்?
சச்சின் தெண்டுல்கர், செஞ்சுரியைத் தாண்டி அடித்து விளாசும் போதும், சானியா மிர்சா நாலாபுறமும் டென்னிஸ் பந்தோடுபந்தாக சுழலும் போதும், அவர்களது உடலில் அதி நுட்பமாக வேலை செய்யும் உறுப்பு எது தெரியுமா?
இவை அனைத்திற்கும் ஒரே பதில்தான் ! அது தோள்பட்டை மூட்டு. அதனோடு இணைந்த எலும்பு, தசைகள்.
சரி, இன்னொரு கேள்வி!. மனித உடம்பில் அவ்வப்போது தொந்தரவு தரும் உறுப்புகளில் குறிப்பிட்ட ஒன்றைச் சொல்லுங்கள் என்றால் என்ன சொல்வீர்கள் ?
இந்தக் கேள்விக்கும் மேலே சொன்ன அந்த உறுப்புதான் பதில். அதாவது தோள்பட்டை மூட்டு, எலும்பு, தசை, அவை சார்ந்த கழுத்துப் பகுதி ஆகியவை மனிதர்களுக்கு அவ்வப்போது தொந்தரவு தருகிறது.
`சரி ரொம்ப உழைக்கிற உறுப்பு அடிக்கடி, மக்கர் பண்ணுவது இயல்புதானே' என்று யாராலும் ஆறுதல்பட்டுக் கொள்ள முடியாது. ஏனென்றால் தோள்பட்டை வலி வந்தவர்களுக்குதான் அது தரும் வேதனை புரியும். அது மட்டுமன்றி இடது பக்க தோள்பட்டை மற்றும் புஜ பகுதியில் வலி வந்தாலே.. `அய்யோ உடனே ஆஸ்பத்திரிக்கு போயிடுங்க.. இதயத்தில் பிரச்சினை வந்தால்தான், இடது புற தோள்பட்டை வலி ஏற்படும்.' என்று சொல்லி பயப்படும் மனிதர்களும், – அந்த பயத்திற்கு பச்சை கொடி காட்டி, `ஆமாங்க,.. அது சரிதாங்க.. என்று கூறி, `ஐ.சி.யூ' வில் சேர்ந்து, 2,3 நாட்கள் கழித்து, அதே தோள் பட்டை வலியுடன் நொந்துபோய் மருத்துவமனையைவிட்டு வெளியேறியவர்கள் பலர் உண்டு. இதனால் இத்தோள் மூட்டு வலி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
மனித உடலில் உள்ள மூட்டுகளில், அதிக அளவில் பல திசைகளிலும் அசைந்து, முக்கியமாக, நம் கைகளை தலைக்கு மேலே உயர்த்தி "தமிழன் என்று சொல்லடா? தலை நிமிர்ந்து நில்லடா" என்று நம்மை உசுப்பி விடுவதற்கு இந்த தோள்பட்டை மூட்டு தேவை.
பல வகைகளில் இந்த மூட்டை செயல்படுத்த முடியும் என்பதால்தான், ஸ்கிப்பிங் விளையாடவும், சமையல் கட்டின் மேலே உள்ள கடுகு டப்பாவை கரெக்டாக எடுக்கவும், காபி, டீ பருகவும், தெரியாமல் தப்பு செய்து விட்டால் தலையை சொரியவும், நினைவில் இல்லாததை நினைவுபடுத்த நெற்றியை தடவவும், பெண்கள் முதுகுப்பகுதி பிரா ஹூக்கை சுயமாக மாட்டிக் கொள்ளவும், பேனா பிடித்து எழுதவும், கம்ப்யூட்டரில் எழுத்துக்களை டைப் செய்யவும் நம்மால் முடிகிறது.
தோள்பட்டை மூட்டை, `பந்துக்கிண்ண மூட்டு' என்று நாம் படித்திருப்போம். இந்த தோள்பட்டை மூட்டு இத்தனை வேலைகளையும் சிறப்பாக செய்ய, புஜ எலும்பின் தலைப் பாகமும்(பந்து), அது பொருந்தி இருக்கும் தோள்பட்டை எலும்பின் கிண்ணமும் சீரான அமைப்பில் இருப்பது முக்கியம். இது போலவே அவசியமானது, இந்த மூட்டை பல திசைகளில் திருப்ப உதவும் தசைகளின் ஒருங்கிணைந்த சேவை.
தோள் மூட்டில் பல திசைகளில் அசைவுகள் ஏற்படும்போது, அதிலுள்ள பந்து போன்ற புஜ எலும்பின் தலைப்பாகத்தை கிண்ணம் போன்ற எலும்புப் பகுதியில் ஒழுங்காக பொருந்தி உள் பக்கமும் வெளிப்பக்கமும் நம் கையைச் சுழலச் செய்ய, சுழல் தசைகளின் கோர்வை (தச்ஞ்ஹஞ்ச்சு இஞிகிகி) எனும் தசை நாண்களின் சேவை மிக அவசியமாகிறது. இந்த தசைகளின் கோர்வை புஜ எலும்பின் தலைப்பாகத்தை தோள்பட்டை பந்து மூட்டை, கிண்ணத்தில் சரியாகப் பொருந்தி வைத்து, முறையாக இயங்க வைக்கும் வேலையைச் சரியாகப் பார்த்துக் கொள்கிறது.
மனித உழைப்பில், நுட்பமான செயல்பாடுகளில் மூட்டுப்பகுதிக்கு பெரும் பங்களிப்பு இருப்பதால், அதில் எப்போது வேண்டுமானாலும், பிரச்சினை ஏற்படலாம். திடீரென்று ஏற்படும் சாதாரண வலிகூட அதிக தொந்தரவும், கவலையும் தரலாம்.
இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள், கம்ப்யூட்டர்களில் அமர்ந்து அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள், இருக்கைகளில் சரியான முறையில் அமராதவர்கள், எக்கி பொருட்களை தூக்குகிறவர்கள் கையைத் தலைக்கு கீழே மடக்கி வைத்து தூங்குகிறவர்கள், உடற்பயிற்சியில் தோள் மூட்டுக்கு அதிக வேலை கொடுப்பவர்கள்இப்படி யாருக்கு வேண்டுமானாலும், தோள்பட்டை வலி, புஜப் பகுதி வலி, கழுத்து எலும்புப் பகுதி வலி போன்றவை ஏற்படலாம்.
இந்த வலியை பெரும்பாலானவர்கள் சீரியசாக எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கு காரணம், தேவையற்ற பயம். இதய நோயின் அறிகுறியாக, 100 பேரில் ஒருவருக்கு நெஞ்சுபகுதியில் வலி உருவாகி, அது கழுத்துக்குப்போய் இடது பக்க தோளுக்குப் பரவ வாய்ப்புண்டு. மீதமுள்ள 99 பேருக்கு ஏற்படுவது, தோள்பட்டை அல்லது கழுத்து பாதிப்பால் ஏற்பட்ட வலிதான். ஆனால் பலரும் மேற்கண்ட வலியை அனுபவிக்கும் போது, தனக்கு இதய நோய் பாதிப்பு வந்துவிட்டதாக மிரண்டு விடுகிறார்கள்.
தோள்பட்டை வலிக்கும், இதய நோயின் அறிகுறியான இடது புறத்தில் பரவும் வலிக்கும் உள்ள வித்தியாசத்தை சாதாரண மக்களால், துல்லியமாக கண்டுபிடிக்க இயலாது என்பது உண்மையாக இருந்தாலும், அவர்கள் வலி ஏற்பட்ட உடனே, பயந்து அது இதய நோயின் அறிகுறி என்று நினைத்து அச்சம் கொள்ள வேண்டாம் என்று கூற விரும்புகிறேன்.
மேலே கையை தூக்கி வேலை பார்ப்பவர்களுக்கு, 45 வயதுக்கு மேல் தோள்பட்டை மூட்டு தசை, இணையும் இடத்தில் தசைகளுக்கு மேல் அழுத்தம் ஏற்படுகிறது. எலும்பின் அடர்த்தி குறைந்து, ரத்த ஓட்டத்திறன் மந்தப்படவும் வாய்ப்பிருக்கிறது. அப்போது வலி தோன்றும். தோள்பட்டை பகுதியில் வலி ஏற்படும் போது, கையைத் தூக்கினாலும், கழுத்தை அசைத்தாலும், வலி அதிகரிக்கும். (இதய நோயின் அறிகுறியாக தோள்பட்டைப் பகுதியில் பரவும் வலியாக இருந்தால், கையைத் தூக்கினாலும், தலையை அசைத்தாலும் வலிக்காது.)
தோள்பட்டை மூட்டு பாதிப்பால் ஏற்படும் வலி என்றால், அது முழங்கை மூட்டுக்கும், தோள்பட்டைக்கும் நடுவில் (அசுஙுசூ) வலிக்கும். இரவில் படுக்கும் போது சிலருக்கு, இந்த வலி அதிகரிக்கும். கழுத்து எலும்புகளின் இடையே உள்ள ஜவ்வுகள் போன்றவை தேய்ந்தாலும், தோள்பட்டை வலி தெரியும். சில சமயங்களில் ஊசியால் குத்துவது போன்று `சுருக்` என வலிக்கும். கழுத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து, கைவிரல் நுனி வரை இழுத்துப் பிடிப்பது போன்று வலி வரும்.
தோள்மூட்டை உள்பக்கமும், வெளிப்பக்கமும் அசைக்கும் தசைநாரில் கால்சியம் உப்பு படிந்தாலும், வலி உருவாகும். இப்படி வலி ஏற்பட்டால், பயமில்லாமல், டாக்டரை அணுக வேண்டும். அது கழுத்து வலியா? தோள்பட்டை வலியா? `ரொட்டேட்டர் கப்' தசை அழுத்தத்தால் ஏற்பட்ட வலியா? மூட்டு இணைப்பில் காச நோய் உருவானதால் ஏற்படும் வலியா? தோள் மூட்டின் மேல் உள்ள தசைகளில் கால்சியம் படிந்ததால், ஏற்படும் வலியா? என்பதை எக்ஸ்ரே மூலம் கண்டறிந்து விடலாம். மிக நுண்ணிய அளவில், தசை சிதைந்து போயிருந்தால், அதனை எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.
பிசியோதெரபி, மருந்து மாத்திரைகளால் பெரும் பாலான தோள்பட்டை வலிக்கு நிவாரணம் கிடைத்து விடும்.
மூட்டு அசைவு குறைந்து, வலி ஓரளவுக்கு மேல் அதிகமாகி, அதனால் இரவில் தனது தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு சிறப்பு வைத்தியம் அவசியமாகிறது. குறிப்பாக, தோள்பட்டை மூட்டிலுள்ள வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, சின்ன வேலை செய்யக்கூட கையை சற்று தூக்கினாலே வலிக்கும். இது போன்றவர்களுக்கு தொடர்ந்து தேவையான மருந்து மாத்திரைகள், பிசியோதெரப்பி கொடுத்த பின்னும் வலி இருந்தால், எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் தோள்பட்டை மூட்டு எலும்பில் பிரச்சினையா?, சுழல் தசைகளின் கோர்வையில் (தச்ஞ்ஹஞ்ச்சு இஞிகிகி) உள்ள தசை நார்கள் நைந்து, பிய்ந்துள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும் அறுந்து போகாதபடி அறுவைச் சிகிச்சை செய்வது அவசியமாகிறது.
இதனால் தோள்பட்டை வலி நன்றாக குறைந்து, தொலைந்து போன அசைவை மீண்டும் வலியின்றி பெறலாம்.
"தோள்பட்டை எலும்பு வலுவாக, ஒரு நல்ல சாப்பாடு இருந்தா சொல்லுங்க டாக்டர்" என்று பலரும் கேட்பார்கள். நமது உடலில் எலும்பும் தசையும் ஒன்றை ஒன்று சார்ந்து செயல்படுகிறது. நாம் தசைக்கு முறையான உடற்பயிற்சி கொடுத்தால், அது எலும்புக்கு கொடுக்கப்படும் டானிக் போல அமைந்து, வலியின்றி வாழ வழிவகுக்கும்.
விளக்கம் : டாக்டர் எம். பார்த்தசாரதி
M.B., D.Orth, M.S., F.R.C.S



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (31 – 40)


31) சூரது லுக்மான்
அத்தியாயம் 31
வசனங்கள் 34
லுக்மானுல் ஹகீம் அவர்கள் தனது மகனுக்கு செய்த பொன் எழுத்துக்களில் பதிய வேண்டிய உபதேசங்களை இவ்வத்தியாயத்தின் 12 வது வசனம் தொடக்கம் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; 'என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,' என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக). (31:13)
32) சூரதுஸ் ஸஜதா -சிரம் பணிதல்
அத்தியாயம் 32
வசனங்கள் 30
இவ்வத்தியாயத்தின் 15வது வசனத்தில் இறை வசனங்கள் நினைவூட்டப்பட்டால் சிரம் தாழ்தி சுஜுது செய்யும் நல்லடியார்களை பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
மேலும் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள். (32:15)
33) சூரதுல் அஹ்ஸாப் கூட்டுப் படை
அத்தியாயம் 33
வசனங்கள் 73
மதீனாவை நோக்கி எதிரிகள் கூட்டாக படையெடுத்த அந்த வரலாற்றை அல்லாஹ் இவ்வத்தியாயத்தில் சுட்டிக் காட்டுகின்றான்.
அன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, 'இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்' என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை. (அதிகரிக்கவே செய்தது) (33:22)
34) சூரது ஸபா ஸபா நகரம்
அத்தியாயம் 34
வசனங்கள் 54
யமன் நாட்டின் லபா எனும் ஊர் மக்களுக்கு செய்த அருற்கொடைகளை பற்றியும் அம்மக்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாததனால் அவர்கள் மீது இறை தண்டனை அனுப்பப்பட்டதை இவ்வத்தியாயத்தின் 15 முதல் 21 வது வசனம் வரை குறிப்பிடுகின்றான்.
மேலும் அவர்கள் மறுமையை பொய்யாக்கினர்.
நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன 'உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்' (என்று அவர்களுக்குக் கூறப்பட்டது). (34:15)
35) சூரது பாதிர் படைப்பவன்
அத்தியாயம் 35
வசனங்கள் 45
அல்லாஹ் தான் இரட்சகன் என்பதனை பறை சாற்றும் படைக்கும் அதிகாரம் தனக்கே உரியது என்பதனை இவ்வத்தியாயத்தின் முதல் வசனத்தில் சுட்டிக்காட்டுகின்றான்.
அல்ஹம்து லில்லாஹ் எல்லாப் புகழ் அல்லாஹ்வுக்கே வானங்களையும், பூமியையும் படைத்தவன்; இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்போராக ஆக்கினான்; தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன். (35:01)
36) சூரது யாஸீன்
அத்தியாயம் 36
வசனங்கள் 83
அல்லாஹ்வின் வல்லமைகள் மற்றும் அவனது வசனங்களை பற்றியும் பேசும் இந்த அத்தியாயத்தின் 70வது வசனம் அல்குர்ஆன் உயிரோடு இருப்பவர்களுக்கே அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாக கூறுகின்றான். ஆனால் நமது சமுதாயத்தில் ஒரு சிலர் இன்னும் இந்த அத்தியாயத்தை மரணித்தவர்களுக்கு ஓதிக்கொண்டு இருக்கின்றமை கவலைக்குறியது.
(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை அது அவருக்குத் தேவையானதும் அல்ல. இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.
(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது. (36:69,70)
37) சூரதுஸ் ஸாப்பாத் அணிவகுத்து நிற்போர்
அத்தியாயம் 37
வசனங்கள் 182
அணிவகுத்து நிற்க்கக் கூடிய, மறுமையில் விரட்டும் மலக்குமார்கள் மீதும், வேதத்தை ஓதுவோர் மீதும் சத்தியம் செய்து வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் ஒருவனே என இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் ஏகத்துவ கொள்கையை குறிப்பிடுகின்றான்.
"அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?"
'அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன?' (37: 86,87)
38) சூரது ஸாத்
அத்தியாயம் 38
வசனங்கள் 88
இப்லீஸ் நபி ஆதம் அவர்களுக்கு சிரம்பணிய மறுத்து அல்லாஹ்வுக்கு மாற்றம் செய்த சம்பவத்தை இந்த அத்தியாயத்தின் கடைசியில் குறிப்பிடுகின்றான். தனக்கு மறுமை நாள் வரை அவகாசம் தருமாறு கேட்ட இப்லீஸ் மனிதர்கள் அனைவரையும் வழிகெடுப்பதாக சத்தியம் செய்தான்.
'இறைவனே! அவர்கள் (இறந்து) எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக' என்று அவன் கேட்டான். (38:79)
அப்பொழுது 'உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்' என்று (இப்லீஸ்) கூறினான். (38:82)
39) சூரதுஸ் ஸுமர் கூட்டங்கள்
அத்தியாயம் 39
வசனங்கள் 75
நாளை மறுமையில் கூட்டங்கூட்டமாக நரகத்திற்கும், சுவர்கத்திற்கும் மக்கள் கொண்டு வரப்படுவது தொடர்பாக இந்த அத்தியாயத்தின் கடைசிப் பகுதியில் அல்லாஹ் எடுத்தியம்புகின்றான்.
(அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள்; அவர்கள் அங்கே வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி 'உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?' என்று கேட்பார்கள்; (இதற்கு அவர்கள்) 'ஆம் (வந்தார்கள்)' என்று கூறுவார்கள்; எனினும் காஃபிர்களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டது. (39:71)
40) சூரதுல் காஃபிர் மன்னிப்பவன்
அத்தியாயம் 40
வசனங்கள் 85
முஃமின் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ் எமது பாவங்களை மன்னித்து எமது தவ்பாவை (பாவமன்னிப்பு கேட்பதை) அங்கிகரிப்பதாக மேலும் முன் சென்ற சமுதாயங்கள் அழிக்கப்பட்ட வரலாறுகளையும் எமக்கு படிப்பினைக்காக குறிப்பிடுகின்றான். மேலும் பிரார்தனையின் முக்கியத்துவத்தை பின்வருமாறு சுட்டிக்காட்டுகின்றான்.
உங்கள் இறைவன் கூறுகிறான்; 'என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.' (40:60)



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 25 ஜனவரி, 2019

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (21 – 30)


21) சூரதுல் அன்பியா நபிமார்கள்
112 வசனங்களைக் கொண்ட அல்குர்ஆனின் 21-வது அத்தியாயமாகும். அல்லாஹ் பல நபிமார்களின் வரலாற்றை இந்த அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான். இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக) அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே! (21:85)
யூனுஸ், ஸகரிய்யா, இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் என பல நபிமார்களை குறிப்பிடுகின்றான்.
22) சூரதுல் ஹஜ் ஹஜ் கிரியை
22-வது அத்தியாயம் 78 வசனங்ளைக் கொண்டது. நபி இப்ராஹீம் அவர்களுக்கு புனித ஆலயத்தை சுத்தம் செய்துவிட்டு பின்வருமாறு கட்டளை இடுமாறு ஏவுகின்றான்.
ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்). (22:27)
23) சூரதுல் முஃமினூன் நம்பிக்கையாளர்கள்
118 வசனங்களை கொண்டுள்ள 23-வது அத்தியாயத்தின் ஆரம்பத்தில் நம்பிக்கையாளர்களின் பண்புகளை பட்டியலிடுகின்றான். தொழுகை, வீணான பேச்சுக்களை தவிர்த்தல், ஜக்காத், கற்பை பாதுகாத்தல், அமானிதங்களை பேனுதல், இருதியாக மீண்டும் தொழுகையை ஞாபகப்படுத்துகின்றான்.
இப்படிப்பட்டவர்களுக்கு அல்லாஹ்வின் பரிசை பின்வருமாறு சொல்லுகின்றான்.
"இத்தகையோர் தாம் (சவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்.  இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்". (23:10,11)
24) சூரதுன் நூர் வெளிச்சம்
64 வசனங்களை கொண்ட 24 அத்தியாயம் ஆயிஷா (ரழி) அவர்கள் மீது சுமத்தப்பட்ட இட்டுக் கட்டு சம்பவத்தை குறிப்பிட்டு ஆயிஷா தூய்மையானவர்கள் என்பதனை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முகமாக 11-26 வசனம் வரை அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேல் இருந்து வஹியின் மூலம் அறிவித்து நயவஞ்கர்களின் முகத்திரையை கிழித்தான்.
25) சூரதுல் புர்கான்- பிரித்தறிவிக்கும் வேதம்
அத்தியாயம் 25 – வசனங்கள் 77
அர்ரஹ்மானின் அடிமைகளின் பண்புகளை இவ்வத்தியாயத்தின் 64 வது வசனம் தொடக்கம் 76 வது வசனம் வரை குறிப்பிடுகின்றான்.
உலகத்தாரை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தை, அசத்தியத்தை) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். (25:01)
26) சூரதுஸ் ஷுஅரா கவிஞர்கள்
அத்தியாயம்: 26 – வசனங்கள்: 227
நபி மூஸா (அலை), இப்றாஹீம் (அலை) ஆகியோரின் வரலாற்றை குறிப்பிடும் இந்த அத்தியாயத்தின் இறுதியில் "இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்". என 224 வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
27) சூரதுன் நம்ல் எறும்பு
அத்தியாயம் 27 – வசனங்கள் 93
ஸுலைமான் நபியவர்களுக்கு அல்லாஹ் மிகப் பெரிய அருற்கொடைகளை வழங்கியிருந்தான். உலகில் உள்ள ஜீவராசிகளை வசப்படுத்திக் கொடுத்து அவை பேசும் மொழியையும் கற்றுக் கொடுத்தான். ஓர் எறும்பு பேசிய சம்பவத்தை இவ்வத்தியாயத்தின் 18-வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
"எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) 'எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)' என்று கூறிற்று".
28) சூரதுல் கஸஸ் வரலாறு
அத்தியாயம் 28 – வசனங்கள் 88
அல்குர்ஆனின் பல இடங்களில் நபி மூஸா (அலை), அவர்களது சமுதாயத்தை பற்றிய வரலாற்றை அல்லாஹ் எமக்கு அதிகமதிகம் ஞாபகப்படுத்துவதன் மூலம் அந்த சமுதாயத்தை போன்று நாமும் நன்றி கெட்டவர்களாக மாறிவிடக் கூடாது என்பதனை சுட்டிக் காட்டுகின்றான்.
நம்பிக்கை கொள்ளும் மக்களுக்காக நாம் மூஸாவுடையவும் ஃபிர்அவ்னுடையவும் வரலாற்றிலிருந்து உண்மையைக் கொண்டு, உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம். (28:03)
29) சூரதுல் அன்கபூத் சிலந்தி
அத்தியாயம் 29 – வசனங்கள் 69
அல்லாஹ் அல்லாதோரை அழைத்து தமது வணக்கங்களை திருப்பிக் கொண்டிருப்பவர்களுக்கு உதாரணமாக சிலந்தியின் வீட்டை (வலையை) குறிப்பிடுகின்றான்.
அல்லாஹ் அல்லாதவற்றை (த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் (29:41)
30) சூரதுர் ரூம் ரோம் தேசம்
அத்தியாயம் 30 – வசனங்கள் 60
உலக வல்லரசாக இருந்த ரோம் தேசம் தோல்வியுருவது தொடர்பாகவும் இறை நம்பிக்கையாளர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்றும் முன்னறிவிப்பு இவ்வத்தியாயத்தின் ஆரம்பத்தில் இடம் பெருகின்றது. இச்செய்தி முஸ்லிம்களுக்கு மகிழ்சியளித்தது.
"ரோம் தோல்வியடைந்து விட்டது.  அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள்". (30:2,3)



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 23 ஜனவரி, 2019

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (11 – 20)


11) சூரதுல் ஹுத் ஹுத் நபி
அல்குர்ஆனின் 11-வது அத்தியாயம் நபி ஹுத் அவர்களின் சமுதாயமாகிய ஆத் கூட்டத்தை பற்றி இவ்வத்தியாயத்தின் 50 – 60 வது வசனம் வரை குறிப்பிட்டு அவர்கள் அல்லாஹ்வை மாத்திரம் வணங்காது பெருமையடித்ததால் அவர்கள் எப்படி அழிந்து நாசமானார்கள் என்பதை பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
ஆது' சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்; "என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை.
12) சூரது யூசுப் யூசுப் நபி
12-வது அத்தியாயம் யூசுப் நபியின் வாழ்கை வரலாறு மிக அழகான வரலாறு என்று அல்லாஹ் சிறப்பித்துச் சொல்கின்றான். 111 வசனங்களை கொண்ட இவ்வத்தியாயதின் ஆரம்பம் தொடக்கம் பால்கினற்றில் இருந்து அரச சிம்மானம் வரை யூசுப் நபி தமது வாழ்கையில் சந்தித்த நிலைகளை எடுத்துக்காட்டுகின்றான்.
13) சூரதுர் ரஃத் இடி
அல்குர்ஆனின் 13-வது அத்தியாயம் இடி அல்லாஹ்வை துதி செய்வதாக இவ்வத்தியாயத்தின் 13-வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
14) சூரது இப்ராஹீம் இப்றாஹீம் நபி
அல்குர்ஆனின் 14-வது அத்தியாயம் தியாகச் செம்மல், ஏகத்துவத்தின் தந்தை என போற்றப்படும் அல்லாஹ்வின் நண்பன் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பெயரில் இறக்கப்பட்டுள்ளது. 35-வது வசனம் தொடக்கம் 41வது வசனம் வரை இப்றாஹீம் நபி செய்த பிரார்த்தனைகளை அல்லாஹ் எமக்கு ஞாபகப்படுத்துகின்றான்.
(என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!' (14:40)
15) சூரதுல் ஹிஜ்ர் கற்பாறைகள் நிறைந்த பகுதி
அல்குர்ஆனின் 15-வது அத்தியாயம் நபி ஸாலிஹ் (அலை) யின் ஸமூது கூட்டம் வாழ்ந்த "ஹிஜ்ர்" பகுதி கற்பாறைகள் நிறைந்த இப்பகுதி மதீனாவிற்கும், தபூகிற்கும் இடையில் அமைந்துள்ளது. தற்காலத்தில் மதாயின் ஸாலிஹ், அல் உலா என அழைக்கப்படும். இந்த சமூகம் அவர்களுக்கு அனுப்பட்ட நபியை பொய்பித்தமை பற்றி இவ்வத்தியாயத்தின் 80-84 வது வசனம் வரை குறிப்பிடுகின்றான்.
16) சூரதுன் நஹ்ல் தேனீ
அல்குர்ஆனின் 16-வது அத்தியாயத்தின் 68,69 ஆகிய வசனங்களில் தேனி பற்றி குறிப்பிடும் போதுஅதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்கும்) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
17) சூரதுல் இஸ்ரா இரவுப் பயணம்
அல்குர்ஆனின் 17-வது அத்தியாயம் இதற்கு பனீ இஸ்ராயீல் (நபி யஃகூப் அவர்களின் சந்ததிகள்) என்று ஒரு பெயரும் உள்ளது. அல்லாஹ் நபியவர்களை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்ற பின்னர் ஏழு வானங்களை தாண்டி மிஃராஜ் பயணம் இடம் பெற்ற சம்பவத்தை இவ்வத்தியாயத்தின் முதலாவது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
18) சூரதுல் கஹ்ப் குகை
அல்குர்ஆனின் 18-வது அத்தியாயம் குகைவாசிகள் தொடர்பாக அல்லாஹ் இவ்வத்தியாயத்தின் 9 -26 வது வசனம் வரை குறிப்பிடுகின்றான்.
அந்த இளைஞர்கள் குகையினுள் புகுந்த போது "எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை ( பலனுள்ளதாக) சீர்திருத்தித் தருவாயாக!" என்று கூறினார்கள். (18:10)
19) சூரது மர்யம் நபி ஈஸா (அலை) அவர்களின் தாயாரான மர்யம்
98 வசனங்களைக் கொண்ட இவ்வத்தியாயம் அல்குர்ஆனின் 19-வது அத்தியாயமாகும். நபி ஈஸா (அலை) அவர்களின் தாயாரான மர்யம் அம்மையாரைப் பற்றி கிரிஸ்தவ உலகம் கொண்டுள்ள பிழையான கொள்கையில் இருந்து தெளிவுபெருவதற்காக நபி ஈஸா மற்றும் அவர்களது தயார் தொடர்பாக அல்குர்ஆனின் பல இடங்களில் அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்.
(நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது..(19:16)

20) சூரது தாஹா இவ்வத்தியாயத்தின் ஆரம்ப எழுத்துக்களை கொண்டு இப்பெயர் வைக்கப்பட்டது
மூஸா நபியின் வரலாற்றை எடுத்துக்காட்டும் 20-வது அத்தியாயம் 135 வசனங்களைக் கொண்டது. அல்லாஹ்வோடு பேசியதை குறிப்பிடுகின்றான்
'நிச்சயமாக நான் தான் உம்முடைய இறைவன், நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர் 'துவா' என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர். (20:14)



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 21 ஜனவரி, 2019

தஹஜ்ஜத் நேரத்தில் ஓதும் துஆ

 

தஹஜ்ஜத் நேரத்தில் ஓதும் துஆ
சென்ற முதலாவது துஆக்கள் அறிமுகத்தில் தூங்கும் முன் சொல்ல வேண்டிய பல துஆகளை உங்களுக்கு நினைவுப் படுத்தி இருந்தேன். இம் முறை தஹஜ்ஜத் தொழுகைக்கு எழும்பியவுடன் ஓதும் துஆவும், மேலும் காலை தூக்கத்தில் இருந்து எழுந்த உடன் ஓதும் துஆவையும் தருகிறேன், பாடமாக்கி வாழ்க்கையில் நடை முறைப்படுத்தி இறை அன்பைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
தஹஜ்ஜத் தொழுகைக்காக எழுந்தவுடன் பிரார்த்தனை
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தஹ்ஜ்ஜுத் (எனும் இரவுத் தொழுகை) தொழுவதற்காக இரவில் எழுந்ததும் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்வார்கள்:
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ، أَنْتَ نُورُ السَّمَأوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الْحَمْدُ، أَنْتَ قَيِّمُ السَّمَأوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الْحَمْدُ، أَنْتَ الْحَقُّ، وَوَعْدُكَ حَقٌّ، وَقَوْلُكَ حَقٌّ، وَلِقَاؤُكَ حَقٌّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، وَالنَّبِيُّونَ حَقٌّ،وَمُحَمَّدٌ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَبِكَ آمَنْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ
(அல்லாஹும்ம! லக்கல் ஹம்து, அன்த்த நூருஸ் ஸமாவாத்தி, வல் அர்ளி, வமன் ஃபீஹின்ன. வ லக்கல் ஹம்து. அன்த்த கய்யிமுஸ் ஸமாவாத்தி வல் அர்ளி வ மன்ஃபீஹின்ன வ லக்கல் ஹம்து. அன்த்தல் ஹக்கு. வ வஅதுக்க ஹக்குன். வ வல்ஜன்னத்து ஹக்குன். வந்நாரு ஹக்குன். வஸ்ஸாஅத்து ஹக்குன். வந் நபிய்யூன ஹக்குன். வ முஹம்மதுன் ஹக்குன். அல்லாஹும்ம! லக்க அஸ்ஸகித்து. வ அலைக்க தவக்கல்த்து. வபிக்க ஆமன்த்து. வ இலைக்க அனப்த்து. வ பிக்க காஸகித்து. வ இலைக்க ஹாக்ககித்து. ஃபஃபக்ஃபிர்லீ மா கத்தகித்து, வமா அக்கர்த்து, வமா அஸ்ரர்த்து, வமா அஃலன்த்து, அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு. 'லா இலாஹ இல்லா அன்த்த' அல்லது 'லா இலாஹ ஃகைருக்க.)
பொருள்: இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றி உள்ளவர்களின் ஒளி ஆவாய். உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களை நிர்வம்ப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும், நீ உண்மையானவன். உன் வாக்கு உண்மையானது. உன்னுடைய கூற்று உண்மை. உன்னுடைய தரிசனம் உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. மறுமைநாள் உண்மை நரகம் உண்மை. நபிமார்கள் உண்மையானவர்கள். முஹம்மத்(ஸல்) அவர்கள் உண்மையானவர்கள். இறைவா! உனக்கே அடிபணிந்தேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன் சான்றுகளைக் கொண்டே வழக்காடுவேன். உன்னிடம் நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பம்ரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக. நீயே (என்னை மறுமையில்) முதலில் எழுப்புகிறவன். நீயே (என்னை இம்மையில்) இறுதியில் அனுப்பியவன். 'உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை' அல்லது 'உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.
 புகாரி: 6317



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Paneer Health Benefits: ஆரோக்கியமான பால் உணவான பன்னீர் , அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவாக உள்ளது. ஆனால் , பன்னீர் சாப்பிடும் சரியான ம...

Popular Posts