லேபிள்கள்

திங்கள், 29 ஜனவரி, 2024

வெந்நீரில் குளிப்பவர்களை கண்ணீரில் தள்ளும் உடல் நலப் பிரச்சனைகள்.

மிகவும் சூடான நீரில் குளிப்பது ஆண்களின் பாலின ஆரோக்கியத்தை பாதித்து, அவர்களுக்கு குழந்தையின்மை பிரச்சனையை ஏற்படுத்தும் என்று பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மிகவும் சூடான தண்ணீரில் குளிப்பதால், விந்தணுக்களின் எண்ணிக்கையும், விந்தணுக்களின் தரமும் குறைவதால் பாலின ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக, சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

கூந்தலில் கெரட்டின் புரதம் உள்ளது. இது முடியை வலுவிழக்காமலும் உடையாமலும் பாதுகாக்கிறது. ஆனால் வெந்நீரில் குளித்தால், முடி வலுவிழந்து உடையும். இதன் காரணமாக முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இது ஆண்களுக்கு வழுக்கையையும் உண்டாக்கும்.

வெந்நீரில் குளிப்பதால் தோல் வறட்சி மற்றும் தோலில் அரிப்பு போன்றவை ஏற்படலாம். ஏனெனில், வெந்நீர் அழுக்கு மற்றும் தூசியுடன் சருமத்தை பாதுகாக்கும் ஈரப்பதத்தையும் நீக்குகிறது. இதன் காரணமாக, தோல் வறண்டு போகத் தொடங்குகிறது. மேலும், இதனால் அரிப்பும் ஏற்படலாம்

வெந்நீர் சருமத்தின் ஈரப்பதத்தை மட்டுமின்றி கண்களின் ஈரப்பதத்தையும் பாதிக்கிறது. இதனால் கண்களில் வறட்சி ஏற்பட்டு, கண்களில் அரிப்பு பிரச்னை ஏற்படும். இது தவிர வெந்நீரில் குளித்தால் கண் சிவத்தல் பிரச்சனையும் வரலாம்.

குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பதால் சருமம் வறண்டு போவது மட்டுமின்றி, முகப்பரு பிரச்சனையும் அதிகரிக்கும். அதிகப்படியான வெந்நீர் முகப்பரு பிரச்சனைகளை அதிகரிக்கும்.

குளிர்காலத்தில் சூடான தண்ணீர் குளிக்க விரும்பும் அதே நேரத்தில், பக்க விளைவுகளை தவிர்க்க, நீங்கள் மிதமான சூடு உள்ள அல்லது வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இதன் மூலம் மேலே கூறப்பட்டுள்ளது போன்ற உடல் நல பிரச்சனைகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

குளிர்ந்த நீர் குளியல்:

நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .

காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் விழிப்புஉணர்வு அதிகமாகும். நமது சுவாசம் ஆழமாக, நிதானமாக இருப்பதால், நம் கவனத்திறன், சுறுசுறுப்பு அதிகரிக்கிறது. செயல் வேகம் அதிகரிக்கிறது.

ஜலதோஷம் வராமல் உடலைப் பாதுகாக்கும் . குளிர்ந்த நீரில் குளிக்கும்போது ரத்தத்தில் உள்ள லிம்போசைட்ஸ் (Lymphoctes) எனப்படும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடி அதிகரிக்கும்.

மனஉளைச்சலையும் மனஅழுத்தத்தையும் உருவாக்கும் ஹார்மோன்களின் அளவு குளிர்ந்த நீரில் நீராடும்போது குறைகிறது.

உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகி, நச்சுத்தன்மைகள் வெளியேறுவதற்கு வளர்சிதை மாற்றம் அவசியம். குளிர்ந்த நீரில் குளிப்பதால், இந்தப் பணி சீராக நடக்கிறது.

மூளை, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கும் .

சருமத்தை இறுகச்செய்து, வயோதிகத்தைத் தள்ளிப்போடும் .

தலையில் இயற்கையாகச் சுரக்கும் எண்ணெய் நம் கூந்தலைப் பாதுகாக்கிறது. குளிர்ந்த நீர் அதைத் தலையில் இருந்து முற்றிலும் நீக்காமல் பாதுகாப்பதால், தலை முடி உதிராமல் இருக்கும் .

கோடை காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.

வெள்ளி, 26 ஜனவரி, 2024

துரித உணவை உண்பதின் மூலம் ஏற்படும் ஆபத்துக்கள்...!!

 *தெரிந்ததை மீண்டும் தெரிந்து தெரிந்து கொள்வோம் (பெரிய பதிவு படித்து பயன் பெறுங்க உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கு பகிரவும்*

துரித உணவை உண்பதின் மூலம் உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற வளர்சிதை மாற்றங்கள் உண்டாகலாம்.

துரித(உடனடி) உணவுகள் குளிர்விக்கப்பட்ட அல்லது உறைந்த நிலையில் இருப்பதால், சுவை குறைந்து விடுகிறது. இதைத் தவிர்க்கும்  பொருட்டு உணவுத் தயாரிப்பாளர்கள் அதன் சுவையை தக்க வைக்க சர்க்கரை, உப்பு, கொழுப்பு, நறுமணம் வண்ணங்கள் போன்றவற்றை  சேர்க்கிறார்கள். இது மனித உடலுக்கு ஊறு விளைவிக்கிறது.

துரித உணவில் உள்ள அதிக கொழுப்புகள் கடுமையாக இதயத்தை பாதிக்கும். உடனடி உணவுகல் கெடாமல் இருக்க சேர்க்கப்படும்  பதப்படுத்தும் பொருள் மற்றும் ரசாயனங்கள் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்கி சிறுநீரகம், கல்லீரல் ஆகியவர்றைப் பாதிக்கும்.

வீட்டில் தயாராகும் உணவு வகைகளை விட கடைகளில் விற்கப்படும் உடனடி உணவுகள் ஊட்டச் சத்துக்கள் குறைந்தவையாக உள்ளது. துரித உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் உடல் வளர்ச்சியைக் குறைந்து நோய்  எதிர்ப்பு சக்தியில்லாமல் செய்கிறது.

துரித உணவுகள் சாப்பிடுவதாலும், உடற்பயிற்சி செய்யாததாலும், நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் அலட்சியம் காட்டினால்,  உடலின் மற்ற உறுப்புகள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

ஞாபக சக்தி குறைவு, கவனக் குறைவு திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு என பல பிரச்சனைகள் ஏற்படும். தலைவலி மனச்சோர்வு,  உடல் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு போன்ற வியாதிகளும் உண்டாகும். நொறுக்குத்தீனி துரித உணவுக் கலாசாரத்துக்கு ஆட்பட்ட இளைஞர்களுக்கு உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படுகின்றன என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

செவ்வாய், 23 ஜனவரி, 2024

மதிய நேர குட்டித் தூக்கத்தில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்.

தூக்கம் உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் சிறந்த புத்துணர்வைக் கொடுக்கக் கூடிய ஒன்றாகும். பிற்பகலில் வேலைக்கு இடையே சிறிது நேரம் தூங்குவது மூளை செயல் பாட்டுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நாம் ஒவ்வொருவருக்கும் மூளை எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும். உடலின் மிக முக்கிய உறுப்பு மூளை. அது உங்களின் செயல்களையும் அதனது எதிர்வினைகளையும் ஒன்றிணைத்து கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, உங்களின் சிந்தனைக்கும், எண்ணங்களுக்கும், புத்திக் கூர்மைக்கும் மிகவும் முக்கியமானது மூளை தான் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு முக்கியமான மூளையை புத்துணர்ச்சி பெற வைப்பது நமது தூக்கம் தான்.

 குட்டி தூக்கம்

அந்த தூக்கமானது சரியான நேரத்தில், சரியான அளவில் நமக்கு தினந்தோறும் கிடைக்குமேயானால், உங்களின் மூளையும் சிறந்து விளங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தூக்கம் குறித்த புதிய ஆய்வில், வழக்கமாக நாம் எப்போதும் பிற்பகலில் சிறிது நேரம் தூங்குவதால் நமது மூளையை கூர்மையாகவும், விழிப்புணர்வுடனும் வைத்திருக்க முடியும் என தெரிய வந்துள்ளது. ஆம் நீங்கள் சரியாகத் தான் படித்துள்ளீர்கள். பிற்பகல் தூக்கம் சோம்பேறித்தனம் என்று தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பகலில் தூங்கினால் மூளையின் ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பு அதிகரிக்கிறது என்பது உண்மை தான்.

மதிய நேரத்தில் குட்டி துாக்கம் போடுவது மனிதர்களின் அறிவாற்றல் திறனை அதிகரிப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. மதிய நேரத்தில் துாங்குவது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்ற பொதுவான கருத்து உள்ளது. அதே நேரம் மதியத்தில் குட்டி துாக்கம் போடுவது மனித ஆற்றலை மேம்படுத்துவதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

புதிர் போட்டி

பீஹாரின் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உடலியல் பிரிவைச் சேர்ந்த டாக்டர்கள் குழு, 18 - 24 வயது வரையிலான 68 பேரிடம் ஆய்வு நடத்தியது. அவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, 'சுடோகு' (Sudoku) என்ற கணித புதிர் போட்டி அளிக்கப்பட்டது. அதில் கடுமையான கட்டத்தை அவர்கள் எட்டும் போது, ஒரு குழுவினரை ஒரு மணி நேரம் துாங்க அனுமதிக்கப்பட்டது.

மற்றொரு குழுவை துாங்காமல் ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின், நிறுத்திய இடத்தில் இருந்து இரண்டு குழுக்களையும் புதிர் போட்டியை நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இதில், குட்டி துாக்கம் போட்ட குழுவை சேர்ந்த பலர், புதிர் போட்டியை சரியாக முடித்தனர். அதே நேரம் துாங்காமல் ஓய்வெடுத்த குழுவில் புதிருக்கான விடையை கண்டுபிடிக்க முடியாமல் பலர் திணறினர்.

இது குறித்து பாட்னா எய்ம்ஸ்(AIMS) மருத்துவமனையின் உடலியல் துறை கூடுதல் பேராசிரியர் கமலேஷ் ஜா கூறியதாவது: இந்த ஆய்வு துவக்கக்கட்டத்தில் உள்ளது. அதன் இடைக்கால முடிவுகளை தான் தற்போது வெளியிட்டுள்ளோம். இதில் மேலும் பல தன்னார்வலர்களை ஈடுபடுத்தி ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்க அரசிடம் நிதி கேட்டு கோரிக்கை வைக்க உள்ளோம்

பலமடங்கு

மதிய நேரத்தில் குட்டி துாக்கம் போடுவதால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. அவர்களின் கணித திறன் உட்பட, உடலியல் திறன் பலமடங்கு மேம்படுகிறது என்று அவர் கூறினார். இதற்கிடையே, பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், இரவு, 10:00 - 11:00 மணிக்குள் துாங்குவோருக்கு இருதயம் தொடர்பான பாதிப்பு அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என தெரிவிக்கப் பட்டுள்ளது.

வெள்ளி, 19 ஜனவரி, 2024

பச்சிளம் குழந்தையின் வாயை சுத்தம் செய்வது எப்படி?

ஒவ்வொரு முறை குழந்தைக்கு பால் கொடுத்தப் பின்னரும் ஈரத்துணியால் வாய், ஈறு, நாக்கு ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.

பற்கள் ஒன்று, இரண்டு முளைத்த குழந்தைகள் என்றால், மிகவும் சாஃப்டான பிரஷ் வாங்கி மிதமாக பற்களை சுத்தம் செய்யவும். சர்குலர் மோஷனாக குழந்தையின் பல்லை சுத்தம் செய்யுங்கள்.

பழுப்பு அல்லது வெள்ளை நிற புள்ளிகள் ஏதேனும் வாயில் வந்தால் பல் மருத்துவரிடம் குழந்தையை காண்பிக்கவும். வாய் துர்நாற்றம், பற்சொத்தை இருந்தாலும் கட்டாயம் மருத்துவரிடம் காண்பிக்கவும். 0-1 வயது வரை குழந்தைக்கு இனிப்பு பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டாம். 1-3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, முடிந்தவரை சாக்லேட், கேண்டி போன்றவற்றைக் கொடுக்காமல் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

வெல்லம், பனங்கற்கண்டு, பனை சர்க்கரை தரலாம். பல் முளைக்கும் குழந்தைகளுக்கு, டீத்திங் பொம்மைகள் வாங்கித் தரலாம். ஃபிங்கர் ஃபுட்ஸ் செய்து கொடுக்கலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தை எனில், சொல்வதைப் புரிந்து கொள்ளும் திறன் பெற்ற குழந்தை எனில், வாய் கொப்பளித்து துப்புவதைக் கற்று கொடுங்கள். குழந்தைகளுக்கு எப்போதுமே பட்டாணி அளவு பேஸ்ட் போதுமானது. அதிக அளவு பேஸ்ட் தேவையில்லை.

பல் தேய்த்த பிறகு வாயை நன்றாகத் தண்ணீரால் கழுவி, கொப்பளித்துத் துப்ப வேண்டும் என அறிவுறுத்துங்கள். காலை, இரவு என இரண்டு வேளையும் பல் துலக்க கற்றுக் கொடுக்கவும். ஒவ்வொரு முறை எந்த உணவு சாப்பிட்ட பின்பும், வாய் கொப்பளித்து துப்பும் பழக்கத்தை குழந்தைக்கு ஏற்படுத்துங்கள்.

செவ்வாய், 16 ஜனவரி, 2024

வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் அருந்தலாமா?

வேர்க்கடலை ஒரு மொறு மொறுப்பான கொட்டை. இது குளிர் காலத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த சிற்றுண்டி விருப்பம்.

சுவையாக இருப்பதோடு மட்டும் இல்லாமல் இது அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது மற்றும் ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாகும். ஆனால் வேர்க்கடலையை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று அடிக்கடி அறிவுறுத்தப்படுவது. அது ஏன் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

இதில் ஏதேனும் உண்மை உள்ளதா அல்லது வெறும் செவிவழிச் செய்தி தானா என்பதை கண்டுபிடிப்போம் வாங்க

கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது சரியா?

வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று நம் பெரியவர்கள் சொல்ல நாம் கேட்டிருப்போம். அது தவிர இந்த டயட் டிப்ஸை நாம் ஏன் பின்பற்ற வேண்டும் என்பதற்கு அறிவியல் பூர்வமான காரணமும் இருக்கிறது. ஆம், வேர்க்கடலையை உட்கொண்ட உடனேயே தண்ணீர் குடித்தால், தொண்டையில் இருமல் மற்றும் எரிச்சலைத் தூண்டும் என்று பலர் நம்புகிறார்கள். அது உண்மை என்று கண்டறியப்பட்டுள்ளது.

கொட்டைகள் அல்லது எண்ணெய் சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்ட பிறகு தண்ணீரை உட்கொள்வது உணவுக் குழாயில் கொழுப்பு படிவதற்கு வழிவகுக்கும். இதனால் எரிச்சல் மற்றும் இருமல் ஏற்படும். எனவே, பருப்புகள், கொட்டைகள் சாப்பிட்ட பிறகு தண்ணீரை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கூடுதலாக, வேர்க்கடலை சூடான உணவு மற்றும் அவை நம் உடலில் இருக்கும் வெப்பத்தை அதிகரிக்கலாம். நாம் தண்ணீரைக் குடிக்கும்போது,     தண்ணீர் குளிர்ச்சி விளைவை ஏற்படுத்துவதால், வெப்பநிலையின் சமநிலையில் தொந்தரவு ஏற்படுகிறது. நமது உடலில் ஒரே நேரத்தில் குளிர்ச்சியும், வெப்பமும் ஏற்படுவதால் சளி, இருமல் மற்றும் பல சுவாச பிரச்சனைகள் ஏற்படும். வெயிலில் பொழுதைக் கழித்துவிட்டு வந்து குளிர்ந்த நீரை குடிப்பது போலத்தான்.

எனவே, இது ஒரு கட்டுக்கதை அல்ல! வேர்க்கடலை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது உண்மைதான். மேலும், நீங்கள் நட்ஸ் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு, பருப்புகளை உட்கொண்டால், உடல் ஹிஸ்டமைன் போன்ற ரசாயனங்களை வெளியிடுகிறது. இது தண்ணீர் குடித்த பிறகு மூச்சுத்திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். அதனால்தான் குறைந்தபட்சம் 10 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

வேர்க்கடலை ஏன் தாகத்தை உண்டாக்குகிறது?

நிலக்கடலை இயற்கையில் மிகவும் வறண்டதாக இருப்பதால் அதிகப்படியான ஓய்வைத் தூண்டும் தன்மை கொண்டது. வேர்க்கடலை போன்ற கொட்டைகள் இயற்கையாகவே உலர்ந்ததால், அவை உங்களுக்கு தாகத்தை ஏற்படுத்தும். எண்ணெய் உணவுகள் அல்லது பருப்புகளை உட்கொண்ட பிறகு, உணவுக்குழாயில் கொழுப்புகள் குவிந்து, தொண்டை புண் மற்றும் இருமலை உண்டாக்குகிறது. இதனால் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படும். ஆனால் இனியும் இது நீங்கள் தவிர்க்க வேண்டிய ஒரு நடைமுறை என்பதை இப்போது அறிவீர்கள்.

குளிர்காலத்தில் வேர்க்கடலை நல்லதா?

குளிர்காலம் வரும்போது,   மொறுமொறுப்பான மற்றும் சுவையான வேர்க்கடலை நமக்குப் பிடித்தமான ஸ்நாக்ஸ் வகைகளில் ஒன்றாக மாறும். ஆம், வேர்க்கடலை குளிர்காலத்திற்கு நல்லது:

1. வேர்க்கடலையில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்து, வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.

2. ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இரண்டு மடங்கு அதிகமான மக்கள் எடை இழப்பு உணவில் வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் ஆகியவற்றை உள்ளடக்கிய எடை மேலாண்மை திட்டங்களை கடைபிடித்தனர் என்பதை காட்டியது.

3. நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு கையளவு வேர்க்கடலையை உண்ணும்போது,   உங்கள் உடலுக்குத் தாவரப் புரதம், நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாகக் கொடுக்கிறீர்கள். அவை உங்களை திருப்திப்படுத்தவும், கலோரிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகின்றன.

4. வேர்க்கடலை உங்கள் வளர்சிதை மாற்றத்தை சிறப்பாக வைத்திருக்க உதவும் முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

5. கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதன் மூலம் இதய நோய்களைத் தடுக்க வேர்க்கடலை உதவுகிறது. அவை சிறிய இரத்தக் கட்டிகளை உருவாக்குவதைத் தடுக்கின்றன. இதனால் உங்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.

6. மேலும், வேர்க்கடலை குறைந்த கிளைசெமிக் உணவாகும். அதாவது இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

ஆனால் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் அதிலிருந்து அனைத்து நன்மைகளையும் பெற விரும்பினால், வேர்க்கடலையை மிதமாக உட்கொள்ளுங்கள். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

Hiccups: விக்கல் என்னும் சிக்கலைத் தீர்க்க டிப்ஸ்

Hiccups: விக்கல் வருவதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. பொதுவாக யாராவது உங்களை நினைத்தால் ...

Popular Posts