லேபிள்கள்

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

ஒரு எறும்பு உங்களைக் கடித்தால் அதற்கு நன்றி சொல்லுங்கள்! ஏன்?

 


ஒரு எறும்பு உங்களைக் கடித்தால் அதற்கு நன்றி சொல்லுங்கள்! ஏன்?

ஒரு எறும்பு உங்களைக் கடித்தால், அதைக் கொல்லாதே, ஆனால் அதற்கு நன்றி சொல்,லுங்கள் ஆனால் ஏன்?!!!

முதலில், குரானில் எறும்பு குறிப்பிடப்பட்டு, ஒரு முழு சூராவும் அதற்குப் பிறகு பெயர் வைக்கப்பட்டு இருப்பது அவதிப்படுகிறது (சூரத் அன்-நாம்ல்).

நபி ( صل ى الله عليه وسلم) நான்கு  வகையான விலங்குகளை கொல்வதைத் தடுக்கிறார்: எறும்புகள், தேனீக்கள், ஹுத்(பறவைகள்), மற்றும் சூரடி (பருந்து போன்ற குருவி).

(ஹதித் அஹ்மத் 3066, அபு தாவுத் 5267 மற்றும் ஸைஐப் அல்-அர்னாவூத்தால் சரிபார்க்கப்பட்டது)
முஸ்லிம்களாகிய எங்களுக்கு அல்ஹம்துலில்லாஹ் ஹதீஸ்கள் போதுமானது மற்றும் அது அல்லா மற்றும் அவரது தூதர் முகமதுவின் கட்டளை (
صل ى الله عليه وسلم) ஆனால் வாழும் இந்த உயிரினத்துடன் நாம் ஒரு அறிவியல் சுற்றுலா போகலாம்.

எறும்பு கிள்ளலின் நன்மைகள்:

அங்கும் இங்கும் பலரை எறும்பு கடிக்கிறது. ஆனால் அவர்கள் உடனடியாக ஆக்ரோஷமான எறும்பைக் கொன்றுவிட்டார்கள். இங்கே பிழை வருகிறது.

ஒரு எறும்பை கொல்வது தடைசெய்யப்பட்டுள்ளது, அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அது ஒரு உயிருள்ள உயிரினம் என்பதால். ஆனால் எறும்புக்கு ஏன் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க கூடாது, குறிப்பாக அதன் பலன்கள் பல என்பதால்.

இந்த நன்மைகள் பின்வருமாறு:

1. ஒரு எறும்பின் கிள்ளி இரத்த ஓட்டத்தைத் தூண்டி, சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கிறது, இது உடலின் செயல்பாடு மற்றும் உயிர்த்தன்மையை பிரதிபலிக்கும்.
2. ஒரு எறும்பின் கிள்ளல் மூளையின் அடிப்பாகத்தில் உள்ள உணர்ச்சி உயிரணுக்களுக்கு பரவக்கூடிய உணர்ச்சி சமிக்ஞைகள் மூலம் மூளையில் உள்ள நரம்புகளை செயல்படுத்துகிறது.

3. மனித உடல் அதே இடத்தில் கிள்ளியை விட அதிகமாக வெளிப்படும் போது அதே நேரத்தில் தோலின் வட்ட நோய் வெளிப்படும்.

தோலில் இருந்து சருமத்தின் உள்நோக்கமான சுழல் பாக்டீரியாவை அதிகமாக எதிர்க்கிறது, ஏனெனில் தோல் அதிக வெப்பநிலைக்கு சகிப்புத்தன்மை அடைகிறது.

மேலும் உடலில் வெவ்வேறு இடங்களில் கிள்ளிகளால் பாதிக்கப்பட்ட பலருக்கு உடல் விஷயத்தில் இரத்தத்தை சுரக்கச் செய்யும், மற்றும் இரத்தம் உறைவதற்கு உத்தேசம்: இரத்த அடுக்கு ஓரளவு இரத்தத்தில் இருக்க ஆடம்மா இரத்த நாளங்களின் திறனை கொடுக்கிறது மிகக் கடினமான விஷத்தை கொடுக்கிறது. இதனால் கல்லீரலுக்கு உதவுங்கள் மற்றும் அவருடன் இருக்கும் சுமையைக் குறைக்கவும்.

4. உணவுக்கட்டுப்பாட்டின் சிறந்த அர்த்தமாக எறும்பை கிள்ளி எறியுங்கள். எறும்பு (பெண்) விரும்பிய கோலுக்கு கிள்ளிக் கொடுக்கும் போது.

இயோனிக் உமிழ்நீரின் அளவு இரகசியமானது, மேலும் விசித்திரமான விஷயம் என்னவென்றால் இந்த உமிழ்நீர் கிள்ளப்பட்ட உறுப்பில் உள்ள அனைத்து கொழுப்புக்களையும் எரிக்கிறது.

எடுத்துக்காட்டாக, கிள்ளப்பட்ட உறுப்பு கை, உமிழ்நீராக இருந்தால் அது படிப்படியாக கை முழுவதும் பரவும்.. இது கைகளில் காணப்படும் 99% கொழுப்புகளைக் கரைத்துவிடும்.
அல்லாவுக்கே பெருமை உண்டாகட்டும்.

நபி [ صل ى الله عليه وسلم] எறும்புகளையும் ஹதீஸ்களையும் கொல்ல தடை செய்துள்ளார் என்று முஸ்லிம் நம்புகிறார்.

அல்லாஹ் நன்கு அறிவான்

https://www.nidur.info/2021/12/27/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf/


சனி, 26 ஆகஸ்ட், 2023

தொழுகையாளிகளைத் தவிர…!

 


மனிதனின் என்னென்ன கீழ்த்தரமான குணங்களைக் கொண்டவன் அவன் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவனாக படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதை படைத்த இறைவன் விவரிக்கின்றான்.

اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًا ۙ‏ ✳️اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوْعًا ۙ‏ ✳️وَاِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوْعًا ✳️اِلَّا الْمُصَلِّيْنَۙ ✳️

நிச்சயமாக மனிதன் பேராசையும் பதற்றமும் நிறைந்தவனாக படைக்கப்பட்டிருக்கின்றான். ஏதேனும் துன்பம் அவனுக்கு வந்தால் பொறுமை இழந்தவனாக அவன் ஆகின்றான். ஆனால் அவனுக்கு வளம் (வசதி) வந்துவிட்டால் கடும் கஞ்சனாக ஆகிவிடுகின்றான். ஆனால் தொழுகையாளிகளைத் தவிர! (அல்குர்ஆன்: 70:19 – 22)

மனிதனின் இயல்பான மோசமான கெட்ட குணங்களை உபதேசங்கள் மூலமாகவும் இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் மூலமாகத்தான் மாற்றமுடியும்.

ஆசை பேராசை இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு பொருளை அடைவதற்காக அதைப் பெறுவதற்காக நியாயமாக முயற்சி செய்வது ஆசையாகும்.

ஆனால் எள்ளளவு கீழ்த்தரமான காரியங்களைச் செய்தேனும் அப்பொருளை அடையவேண்டும் என்று முயற்சிப்பதும், இறைவன் வகுத்த வரம்புகளை மீறி அதை அடைய முயற்சி செய்வதும் பேராசையாகும்.

உதாரணமாக ஒருவருக்கு மருத்துவ சிகிச்சைக்காகப் பத்து லட்சம் ருபாய் தேவை, இவர் சுயமரியாதையோடு அதை அடைய முயற்சிக்கின்றார், இது ஆசை. ஆனால் இன்னொருவர் பத்து ருபாய் பெறுவதற்கும் கூனிக்குறுகி சுயமரியாதையை இழந்து பெறுகின்றார் இது பேராசையாகும்!

ஒருவன் தொழில் செய்து பொருளாதாரத்தை திரட்டுவதை இஸ்லாமை அங்கீகரித்துள்ளது. தனது கையால் உழைத்து பொருளீட்டுபவனை விட சிறந்தவன் யாருமில்லை என்ற அளவுக்கு சிறந்த உழைப்பாளர்களை இஸ்லாம் அடையாளப்படுத்துகின்றது. தொழில் செய்து பணம் சேர்ப்பது ஆசையாகும்.

ஆனால் நியாயமாகவும், நேர்மையாகவும் தொழில் செய்யும் ஒருவன் தொழுகை நேரத்தில் அதைக் கண்டுகொள்வதே இல்லை! அவனது கவனம் முழுவதும் பொருளீட்டுவதிலேயே இருக்கிறது, அல்லாஹுவை வணங்குவதை தொழுவதை விட்டும் பொருளாதாரம் ஈட்டுவதிலேயே மூழ்கிப்போய் இருக்கின்றான் இவன் பேராசைக்காரனாவான்!

தொழுகையை விட்டுவிட்டு ஒரு காரியத்தில் ஈடுபடுவதால் ஒருவனுக்குப் பணம் கிடைக்கும் என்றால் தொழுகையை விட்டுவிட்டு அந்தப் பணத்திற்கு ஆசைப்படுவது பேராசை. தொகை சிறிதாக இருந்தாலும் அது பேராசைதான். காரணம் பணத்தை அடைவதற்காக அதைவிட முக்கியமானதை அவன் விட்டு விட்டான்.

அவன் சேமித்த சொத்துக்கு ஏதாவது சேதாரம் வந்துவிட்டால், அல்லது அதற்கு ஏதாவது அழிவு வந்துவிட்டால் அவனால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பதறி துடிதுடித்துப் பலஹீனமாகி விரைவாகவே நோயாளியாகிப் போகின்றான். அல்லாஹுவின் நாட்டப்படி அது நடந்துவிட்டது என்ற முடிவுக்கு வர மறுக்கின்றான் ஆனால் தொழுகையாளிகளைத் தவிர!

அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதனிடம் உள்ள குணங்களில் மிகவும் கெட்ட குணம் என்னவெனில் அவனைப் பதற்றத்திற்கு உள்ளாகும் கஞ்சத்தனமும், இதயம் நொடிந்துபோகச் செய்யும் கோழைத்தனமும் ஆகும். (நூல்: அபூ தாவூத்)

அடுத்ததாக மனிதனுக்கு இன்னொரு கெட்டப் பழக்கம் உண்டு! ஒன்றுமே இல்லாதவனாக இருந்தவன் பேராசைக்காரனாக இருந்தவன், அவனுக்கு செல்வம் கொழிக்கும்போது, அவன் செல்வச் செழிப்பானவனாக ஆகும்போது அவனிடம் கஞ்சத்தனமும், கருமித்தனமும் குடி கொண்டுவிடுகின்றது. தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் எவ்வளவுதான் சிரமப்பட்டாலும், எப்படிக் கஷ்டப்பட்டாலும் அதைக் கண்டு கொள்ள மறுக்கின்றான். அல்லாஹுவின் பாதையில் சிலவு செய்ய மறுக்கின்றான், தர்மம் செய்ய மறுக்கின்றான். ஆனால் தொழுகையாளிகளைத் தவிர!

ஆக கெட்ட குணங்களிலிருந்தும், இழிவான செயல்களிலிருந்தும், கருமித்தனத்திலிருந்தும் ஒருவனை தொழுகை பாதுகாக்கின்றது. தொழுகை நற்காரியங்களின் பக்கம் தூண்டுகிறது. தொழுகை விசாலமான, தாரளான உள்ளத்தை ஏற்படுத்துகிறது.

http://www.islamkalvi.com/?p=126747


புதன், 23 ஆகஸ்ட், 2023

தொழுகையாளிகளைத் தவிர..!

 


தொழுகை, ஒருவனைப் பக்குவப்படுத்துகின்றது! தொழுகை, ஒருவனின் கெட்ட குணத்தையும் நற்குணமாக மாற்றி அமைக்கின்றது! தொழுகை, தீய செயல்கள் நிறைந்தவனையும் நற்செயலாற்ற வைக்கின்றது! என்ற விஷயங்களைச் சென்ற தொடரில் கண்டோம்.

அது எவ்வாறான தொழுகை? அந்த தொழுகையின் மாண்புகள் என்ன என்ற செய்திகளை இப்போது பார்ப்போம்.

நிரந்தரமாக நிறைவேற்றுதல்:🔵

அவர்கள் எப்படிப்பட்ட தொழுகையாளிகள்? என்பதை الَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ دَائِمُونَ அவர்கள் தொழுகையை விடாமல் நிரந்தரமாக நிறைவேற்றுவார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். دَآٮِٕمٌ (தாயிம்) என்றால் நிலையான, நிரந்தரமான என்று பொருள். دَائِمُونَ (தாயின்மூன்) என்றால் அந்த காரியத்தை நிலையாக நிரந்தரமாகச் செய்பவன் என்று பொருள்.

நாலடியார்களுக்கு சுவனத்தின் உணவும் அதன் நிழலும் நிலையான, நிரந்தரமானது என்பதைக் குறிப்பிடும்போது دَائِمُ என்ற சொல்லைத்தான் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். (அல்குர்ஆன்: 13:35)

ஒருவன் ஒரு காரியத்தை தற்காலிகமாகச் செய்வதற்கும், அதே காரியத்தை நிரந்தரமாகச் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. இஸ்லாத்தில் எந்த ஒரு அமலாக இருந்தாலும் அதை விடாமல் நிரந்தரமாகத் தொடர்ந்து செய்யவேண்டும். உலகக் காரியங்களில்கூட விடாமல் தொடர்ந்து செய்பவனுக்குத்தான் மதிப்பும், சலுகையும் அதிகம்.

மக்களே! உங்களால் இயன்ற (நற்) செயல்களையே செய்துவாருங்கள். ஏனெனில், நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ்வும் சலிப்படைய மாட்டான். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் யாதெனில், குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆயிஷா (ரலி) (ஸஹீஹுல் புகாரி:5861)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நேர்மையோடு (நடுநிலையாக) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்) அறிந்து கொள்ளுங்கள். உங்களில் யாரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் நுழைவிக்காது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புகமுடியும். நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, (எண்ணிக்கையில்) மிகவும் குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும். ஆயிஷா(ரலி) (ஸஹீஹுல் புகாரி: 6464).

குறித்த நேரத்தில் தொழுதல்

தொழுகையின் நேரத்தை பற்றி அல்லாஹ் கூறும்போது اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتٰبًا مَّوْقُوْتًا‏ தொழுகையானது இறைநம்பிக்கையானார்கள் மீது குறித்த நேரத்தில் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும். (அல்குர்ஆன்: 04:103)

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்என்று பதில் கூறினார்கள். (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) (ஸஹீஹுல் புகாரி: 527).

நோன்பு ஹஜ் போன்ற வணக்கங்களை நிறைவேற்றுவதற்குக் காலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று ஒவ்வொரு தொழுகைக்கும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தந்த தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே நிறைவேற்றுவது இறைநம்பிக்கையாளர்கள்மீது கடமையாகும் அதுதான் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான காரியமாகும்.

இறையச்சத்தோடு தொழுதல்

நிலையாக, நிரந்தரமாக, அந்த நேரத்தோடு நிறைவேற்றப்படும் தொழுகையை நிதானமாகவும், இறையச்சத்தோடும், நிறைவேற்றவேண்டும். தொழுகையில் நிற்பவர் அல்லாஹ்வைப் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் அவரைப் பார்க்கின்றான் என்ற உள்ளச்சத்தோடு தொழவேண்டும். அடியான் தொழும்போது தன் இரட்சகனோடு (அல்லாஹ்வோடு) உரையாடுகின்றார், அல்லாஹுவும் அடியானுக்கு பதிலளிக்கின்றான் என்பதை நினைவில் கொண்டு தொழவேண்டும்.

அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்கள் மத்தியிலிருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (மனிதரின் தோற்றத்தில் வந்து நபி -ஸல்-) அவர்களிடம் ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவன் தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது எனக் கூறினார்கள். இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை மட்டுமே நீர் வணங்குவதும் தொழுகையை நிலைநிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஜகாதை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதத்தில் நீர் நோன்பு நோற்பதுமாகும் என்று கூறினார்கள்.

இஹ்ஸான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், (இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்கா விட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்றார்கள்.., (ஹதீஸ் சுருக்கம்)
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரீ 50,)

தொழுகையில் இறைவனோடு உரையாடுதல்!

தொழுகையில் ஓதுவதை எனக்கும் எனது அடியானுக்கும் மத்தியில் பங்கிட்டுள்ளேன். என் அடியான் கேட்டவை அவனுக்கு உண்டு. அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்என்று ஒருவன் கூறும் போது என்னை என் அடியான் புகழ்ந்துவிட்டான்என்று அல்லாஹ் கூறுகிறான். அவன் அர்ரஹ்மானிர் ரஹீம்என்று கூறும் போது என் அடியான் என்னைப் பாராட்ட வேண்டிய விதத்தில் பாராட்டிவிட்டான்என்று அல்லாஹ் கூறுகிறான். மாலிக்கி யவ்மித்தீன்என்று கூறும் போது என் அடியான் என்னைக் கௌரவப்படுத்த வேண்டிய விதத்தில் கௌரவப்படுத்தி விட்டான்என்று அல்லாஹ் கூறுகிறான். இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தயீன்என்று கூறும் போது இதுதான் எனக்கும் எனது அடியானுக்கும் இடையே உள்ள உறவாகும்என்று அல்லாஹ் கூறுகிறான். இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம்என்று கூறும் போது என் அடியானின் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும்என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 655)

தொழுகை, ஒருவனைப் பக்குவப்படுத்துகின்றது! தொழுகை, கெட்ட குணத்தையும் நற்குணமாக மாற்றி அமைக்கின்றது! தொழுகை, தீய செயல்கள் நிறைந்தவனையும் நற்செயலாற்ற வைக்கின்றது! என்றால் அது எப்படியான தொழுகையாக இருக்கவேண்டும்

http://www.islamkalvi.com/?p=126751


சனி, 19 ஆகஸ்ட், 2023

பணம் வந்தால் படைத்தவனை மறக்கலாமா?

 


[ ஒரு மனிதர் தன் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கம் கற்பித்து அவளுக்கு ஒழுக்கம் கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, அவளுக்குக் கல்வி கற்பித்து, அவளுக்குக் கல்வி கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, பிறகு அவளுக்கு விடுதலை அத்து அவளை (தானே) மணமும் முடித்துக் கொண்டார் எனில் அவருக்கு இரு நற்பலன்கள் கிடைக்கும்.

ஒருவர் ஈசாவின் மீது நம்பிக்கை கொண்டு, பிறகு என் மீதும் நம்பிக்கை கொண்டால் அவருக்கு இரு நற்பலன்கள் கிடைக்கும்.

ஓர் அடிமை தன் இறைவனுக்கு அஞ்சி, தன் எஜமானர்களுக்குக் கீழ்ப்படிந்தும் நடப்பானாயின் அவனுக்கும் இரு நற்பலன்கள் கிடைக்கும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி 3446)]

மனிதர்களில் ஒரு கூட்டம், காசு, பணம் இல்லாத போது பள்ளிவாசலே கதி என்று கிடப்பார்கள். பணம் வந்துவிட்டால், படைத்தவனை மறக்கும் மக்களாக மாறிவிடுவார்கள்.

ஏழ்மையான நிலையில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இருந்த அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளார் காலத்திற்குப் பிறகு செல்வந்தராகவும் மற்றவர்களுக்கு விருந்தளிக்கவும் நல்ல ஆடைகளை அணிந்து வலம் வருபவராகவும் இருந்தார்கள். அவர்களின் வாழ்வு நமக்கு ஒரு படிப்பினை.

நான் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஏழு இரவுகள் விருந்தாயாகத் தங்கியிருந்தேன். அவர்களும் அவர்களுடைய துணைவியாரும் அவர்களுடைய பணியாளும் இரவை மூன்று பங்குகளாகப் பிரித்துக் கொண்டு முறை வைத்து எழுந்து தொழுது வந்தார்கள். முதலில் ஒருவர் தொழுவார்; பிறகு அவர் மற்றொருவரை எழுப்பி விடுவார். (அவர் தொழுது முடித்தவுடன்) இன்னொருவரை தொழுகைக்கு எழுப்புவார். (அறி : அபூஉஸ்மான், நூல் : புகாரி (5441)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தோழமை கொண்டவர்களில் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முக்கியத்துவம் பெற்றவர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்பான பெரும்பாலான செய்திகளை அறிவித்தவர்கள் இவர்கள் தாம்.

திண்ணைத் தோழராக இருந்து பசியும் பட்டினியுமாக நபிகளார் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் காலத்தைத் தள்ளி, நபிகளாருடன் அதிகமாகத் தொடர்புடன் இருந்ததால் அதிகமான செய்திகளை அவர்களால் அறிவிக்க முடிந்தது.

மேலும் ஏழ்மையான நிலையில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்த அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளார் காலத்திற்குப் பிறகு செல்வந்தராகவும் மற்றவர்களுக்கு விருந்தளிக்கவும் நல்ல ஆடைகளை அணிந்து வலம் வருபவராகவும் இருந்தார்கள்.

முஹம்மத் பின் சீரீன் அவர்கள் கூறியதாவது: நாங்கள் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் சிவப்புக் கமண் சாயம் இடப்பட்ட, கத்தான் வகையிலான இரண்டு ஆடைகளை அணிந்திருந்தார்கள். அவர்கள் அப்போது மூக்குச் சிந்திவிட்டு அடடா! அபூஹுரைரா! கத்தான் வகையைச் சார்ந்த துணியிலேயே மூக்குச் சிந்துகிறாயே! (ஒரு காலத்தில்) நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சொற்பொழிவு மேடைக்கும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களது அறைக்குமிடையே (பசியால்) மயக்கமடைந்து விழுந்து கிடப்பேன். அங்கு வருபவர் எவரேனும் வந்து நான் பைத்தியக்காரன் என்று நினைத்து என் கழுத்தின் மீது கால் வைப்பார். ஆனால், எனக்குப் பசி தான் (மேட்டு) இருக்கும்; பைத்தியம் எதுவும் இருக்காது (அந்த அளவிற்கு வறுமையில் இருந்தேன்.) என்று சொன்னார்கள். (நூல் : புகாரி 73240

வசதியான நிலையை அடைந்த பிறகும்….

சாப்பாட்டிற்கே வழியில்லாமல் பசி மயக்கத்தால் தரையில் உருண்டு கிடந்த அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பிற்காலத்தில் நல்ல நிலைஏற்பட்டு, திருமணம் கூடச் செய்து கொண்டார்கள். பஸராவின் ஆளுநராக இருந்த உத்பா பின் கஸ்வான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சகோதரி புஸ்ரா அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். (பத்ஹுல்பாரி)

ஏழ்மை நிலையில் இருந்து நல்ல நிலைக்கு வந்த அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மனைவி மற்றும் பணிவிடை செய்ய வேலையாளும் கிடைத்தது. வசதியான நிலையை அடைந்தவுடன் படைத்தவனை மறந்து விடாமல் படைத்தவனுக்கு நன்றி செலுத்தும் நல்லடியாராக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு இருந்தார்கள்.

மேற்கூறப்பட்ட (5441) செய்தியில், கடமையான தொழுகையல்லாத இரவுத் தொழுகையை தாமும் தொழுததுடன் தம் மனைவியையும் வேலைக்காரரையும் தொழச் செய்துள்ளார்கள். இந்த நல்ல பண்பு எல்லோரிடம் இருக்க வேண்டும்.

கஷ்டப்பட்ட நிலையில் காலம் தவறாமல் பள்ளிக்கு வந்து சென்றவர், அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்தவுடன் கார், பங்களா என்று வாங்கிய பின்னர் ஏ.சி.யில் சூரியன் உதித்தது கூடத் தெரியாமல் உறங்குபவர்கள் ஏராளம்.

துன்பத்தை நீக்கி வசதி வாய்ப்புகளைத் தந்த அல்லாஹ்வுக்கு அதிகமதிகம் நன்றி செலுத்த வேண்டியவர் இருந்ததையும் விட்டுவிடும் துர்பாக்கிய நிலையில் இருக்கிறார். ஆனால் கடுமையான கஷ்டங்களில் மூழ்கியிருந்த அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நல்ல நிலை வந்த பின்னர் படைத்தவனை அதிகமதிகம் நினைவு கூரத் தொடங்கினார்கள்.

”நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.” (அல்குர்ஆன் 66:6)

என்ற வசனத்தின் அடிப்படையில் தம் குடும்பத்தாரையும் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நல்லறங்கள் செய்பவர்களாக மாற்றியுள்ளார்கள். மேலும் வேலைக்காரரைக் கூட இறை வணக்கத்தில் ஈடுபடச் செய்துள்ளார்கள்.

இரு நற்பலன்கள்

ஒரு மனிதர் தன் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கம் கற்பித்து அவளுக்கு ஒழுக்கம் கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, அவளுக்குக் கல்வி கற்பித்து, அவளுக்குக் கல்வி கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, பிறகு அவளுக்கு விடுதலை அத்து அவளை (தானே) மணமும் முடித்துக் கொண்டார் எனில் அவருக்கு இரு நற்பலன்கள் கிடைக்கும்.

ஒருவர் ஈசாவின் மீது நம்பிக்கை கொண்டு, பிறகு என் மீதும் நம்பிக்கை கொண்டால் அவருக்கு இரு நற்பலன்கள் கிடைக்கும்.

ஓர் அடிமை தன் இறைவனுக்கு அஞ்சி, தன் எஜமானர்களுக்குக் கீழ்ப்படிந்தும் நடப்பானாயின் அவனுக்கும் இரு நற்பலன்கள் கிடைக்கும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி 3446)

அடிமையாக இருப்பவருக்குக் கல்வியும் நல்லொழுக்கமும் கற்பிக்கும் போது இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என்ற நபிமொழியை அடிப்படையாகக் கொண்டு, தன் வேலையாளுக்கும் வணக்க வழிபாடு முறையைக் கற்றுக் கொடுத்து, அவர்களையும் உபரியான வணக்கம் செய்பவராக மாற்றியுள்ளார்கள்.

ஆனால் இன்று முதலாளியாக இருப்பவர்கள், தொழிலாளி தொழுகைக்குச் செல்ல அனுமதி கேட்டால் கூட மறுப்பவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். தொழிலாளி நம்மிடம் வந்து சேர்ந்த பின்னர் அவரைக் கடமையான மற்றும் உபரியான தொழுகையைப் பேணுபவராகவும் நல்லொழுக்கம் மிக்கவராகவும் மாற்றுவது முதலாளிகள் செய்யும் நற்காரியம் என்பதை மறக்கக் கூடாது.

– அபூஸமீஹா

https://www.nidur.info/2021/10/05/%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae-2/


புதன், 16 ஆகஸ்ட், 2023

கொடுங்கள்; பெறுவீர்கள்!

 


[ எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள்.

செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள்.

கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.]

ஸுப்ஹானல்லாஹ்!

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான்.

இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். “ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்.”அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான்.

அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.

எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்

https://www.nidur.info/2021/10/13/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-4/


ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்?

 

படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்?

உண்டாகும் தீய விளைவுகள்!

திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இடைவெளி குறையும். ஏதே சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே தூங்குவார்கள். இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி காணலாம்.

1. நெருக்கம் குறைகிறது
கணவன் மனைவி இருவருக்கும் கொஞ்ச நேரம் ரிலாக்ஸாக பேச மற்றும் காதலிக்க கிடைக்கும் நேரமே படுக்கை அறை நேரம் தான். இந்த நேரத்தை உறவை வழுப்படுத்த பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இங்கு இருவேறு துருவங்கள் போல பிரிந்து படுப்பது கணவன் மனைவி உறவுக்கு நல்லதல்ல என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

2. எளிதில் போர் அடித்து விடும்
படுக்கை அறையில் இருவரும் நெருக்கமின்றி படுத்து உறங்கவில்லை என்றால் உங்களது உறவு எளிதில் போரடித்து விடும். உங்கள் மனைவி உங்களை தொடும் போது கூட உங்களுக்கு பெரிதாக எந்த உணர்ச்சியும் வராது.

3. உடலுறவில் நாட்டமின்மை
நீங்கள் தனித்தனியாக படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால், நாளடைவில் உங்களுக்கு உடலுறவில் கூட பெரிதாக நாட்டமில்லாமல் போகும்.

4. வேறு ஒருவர் மீது காதல்
நீங்கள் எப்போதும் நெருக்கமில்லாமல் இருந்தால், நீங்கள் படிப்படியாக வேறு ஒருவர் மீது காதல்வயப்பட வாய்ப்புகள் அதிகமாகும். மேலும் உங்கள் மனைவியுடன் படுத்து உறங்குவது உங்களுக்கு யாரோ ஒரு தெரியாத நபருடன் படுத்து உறங்குவது போன்ற அனுபவத்தை தரும். அவர் மீது நாட்டமில்லாமல் போகும்.

5. சண்டைகள்
உடலுறவு மற்றும் காதல் தீண்டல்கள் உறவில் இல்லாமல் போகும் போது அடிக்கடி சண்டை கணவன் மனைவிக்குள் சண்டை வரும்.

6. வெறுப்பு
உங்களது கவனம் வேறு ஒரு நபர் மீது திசை திரும்பிவிட்டால், உங்களது துணையை வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

ஆகவே நண்பர்களே

துணையை அணைத்து துயரம் தவிர்ப்போம்…

https://www.nidur.info/2021/10/30/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf/


புதன், 9 ஆகஸ்ட், 2023

மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டால்….

 


உங்களில் எவர்கள் தமது மனைவியரைத் தாய்க்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்களோ, அவர்கள் இவர்களது தாய்மார்கள் இல்லை. இவர்களின் தாய்மார்கள் இவர்களைப் பெற்றெடுத்தவர்களே, நிச்சயமாக இவர்கள் வெறுக்கத்தக்க பேச்சையும், பொய்யையுமே கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவன்ளூ மிக்க மன்னிப்பவன்.

எவர்கள் தமது மனைவியரைத் தாய்க்கு ஒப்பிட்டு, பின்னர் (தாம்) கூறியதிலிருந்து மீண்டு விடுகின்றார்களோ அவர்கள், (கணவன், மனைவியாகிய இருவரும்) ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள். மேலும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.

எவர் (அடிமையைப்) பெற்றுக் கொள்ள வில்லையோ அவர், ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் தொடராக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்கவேண்டும். (இதற்கு) எவர் சக்திபெறவில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இது நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வதற்காகவே (விதியாக்கப்பட்டுள்ளது.) இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். நிராகரிப்பாளர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.’ (58:2-4)

ஜாஹிலிய்யாக் காலத்தில் மனைவியை தாய்க்கு ஒப்பிட்டால் அவர்கள் பின்னர் கணவன்-மனைவியாகச் சேர்ந்து வாழ முடியாது என்ற விதி இருந்தது. இஸ்லாம் மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுவதைக் கண்டிக்கின்றது. அப்படி ஒருவர் ஒப்பிட்டால் மீண்டும் மனைவியுடன் சேர்வதற்கு முன்னர் பரிகாரம் காண வேண்டும். தகுந்த பரிகாரம் கண்ட பின்னர் அவர்கள் கணவன்-மனைவியாக இணைந்து இல்லறம் நடாத்தலாம் என்று கூறுகின்றது.

இந்த வசனத்தில் இதற்கான பரிகாரம் பற்றி விபரிக்கப்படுகின்றது. மனைவியைத் தாயிற்கு ஒப்பிட்டால் அவர்கள் மீண்டும் இணைவதற்கு முன்னர் பின்வருவனவற்றை செய்ய வேண்டும் என இந்த வசனம் கூறுகின்றது.

1. ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.
2. அதற்கு முடியாவிட்டால் இரண்டு மாதங்கள் தொடராக நோன்பு நோற்க வேண்டும்.

3. அதற்கும் முடியாவிட்டால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

இஃதல்லாமல் பல குற்றச் செயல்களுக்கு நோன்பு பரிகாரமாக அமையும் என நபிமொழிகளும் கூறுகின்றன. இந்த சட்டங்களிலிருந்து, நோன்பு பாவங்களுக்குப் பரிகாரமாக அமையத்தக்க அற்புத வழிபாடாக இருப்பதை அறியலாம். அத்துடன், இஸ்லாம் அடிமைகளை விடுதலை செய்தல், ஏழைகளுக்கு உணவளித்தல் போன்ற பண்புகளைப் போற்றுவதையும் உணரலாம்.

எனவே, நோன்பு என்பது எமது பாவங்களை அழிக்கும் முக்கியமானதொரு இபாதத் என்பதை உணர்ந்து அதன் மூலம் எமது பாவக் கறைகளை அகற்றிப் பரிசுத்தமாக முயல்வோமாக!

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

https://www.nidur.info/2021/11/09/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/


ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

காதில் உள்ள அழுக்குகளை நீக்குவதிலும் இப்படியொரு ஆபத்தா? ஒரு அ தி ர் ச் சி ரிப்போர்ட்!

 


காதில் அழுக்கு சேராத மனிதர்களே இல்லை. இதற்கென்று கடையில் பட்ஸ் கிடைக்கிறது. அதைவாங்கி காதை சுத்தம் செய்பவர்கள் ஒருபக்கம் என்றால், கையில் கிடைக்கும் பொருளையெல்லாம் காதில்விடுபவர்களும் இருக்கிறார்கள். ஊக்கு, கேர்பின் என இதன் பட்டியல் நீளம். ஆனால் காதில் உள்ள அழுக்கை எடுப்பதிலும் சில நுபங்கள் இருக்கிறது.முறையாக நீக்காவிட்டால் அதுவே ஆபத்தாகிவிடும்.

அமிலங்கள் மற்றும் கொலஸ்டிராலால் தான் காதில் அழுக்கு உருவாகிறது. நாம் அழுக்கு என அகற்றிவிடும் இந்த பொருள்கள் தான் மெழுகு போன்று நம் காதை பாதுகாக்கும் பாதுகாவலன். பொதுவாக அதிக சத்ததில் பாடலைக் கேட்பது காதை ரொம்பவே பாதிக்கும். அதிக சப்தம், பாக்டீரியா போன்றவற்றிடம் இருந்தும் இந்த மெழுகு போன்ற பொருள் காதைக் காப்பாற்றும் தடுப்பு அரணாக இருக்கும். அடிக்கடி காதில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்துகொண்டே இருப்பது செவித்திறனை பாதிக்கச் செய்வதோடு, நோய் தொற்றுக்கும் வழிவகுக்கும்.

தூசு போன்றவற்றில் இருந்தும் காதில் இருக்கும் மெழுகுப் படலம் பாதுகாக்கிறது. அதேபோல் காட்டன் பட்ஸ்ம் கூட ஆபத்தானதுதான். நாம் பட்ஸ் வழியே காதில் கொடுக்கும் அழுத்தம் நோய் தொற்றை உருவாக்கும்.

சரி இதற்கு என்னதான் தீர்வு? கடதில் இருக்கும் மெழுகு படலம் அதிகளவில் சேர்ந்து காதின் மேல்புறத்தில் வரும்போது மட்டுமே காதை சுத்தம் செய்யவேண்டும். என்ன? இனிமேல் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருப்பீர்கள் தானே?

https://www.tamizstar.com/?p=33676

www.sahabudeen.com

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

ஜின்களைப் பற்றி அறிந்துகொள்வோம்

 


• ஜின் என்றாலே நம்மில் பலருக்கு பேய்கள் அல்லது பயம் என்ற உணர்வு தான் உள்ளத்தில் ஏற்படும்!

• நம்முடைய முஸ்லீம் சமூகத்தில் இதை பற்றி தெளிவு இல்லாத காரணத்தில் ஜின்களை போய்களை விட அதிகமான கதைகளை கூறி பயம் படுத்தி வைத்து உள்ளார்கள்!

• ஜின் என்ற அரபு சொல்லுக்கு மறைவானது அல்லது கண்ணுக்கு தெரியாது என்று பொருள் ஆகும்!

• ஷைத்தானும் ஜின்களின் இணைத்தை சேர்ந்தவன் தான்! ஜின்களும் யாரின் கண்களுக்கும் தெரிய மாட்டார்கள் ஆனால் நாம் அவர்களின் கண்களுக்கு தெரிவோம்!

• ஜின்களும் நம்மை போன்ற ஒரு படைப்பே! அவர்களும் நம்மை போன்றவர்கள் தான் ஆனால் அவர்கள் நம்மை போன்று உருவ அமைப்பு இருக்காது மற்றும் நம்மை விட சற்று ஆற்றல் மிக்கவர்கள்!

• நம்மை போன்று அவர்களுக்கும் குடும்பம் உண்டு நல்லவர்கள் கேட்டவர்கள் உண்டு அவர்களுக்கும் வாழ்வு மரணம் மறுமை நாளில் கேள்வி கணக்கு என்று அனைத்தும் உண்டு!

ஜின் படைப்பு :

• இந்த உலகில் அல்லாஹ் மனிதர்களை படைக்கும் முன்பே ஜின் இனத்தை அல்லாஹ் படைத்துவிட்டான்!

• மனிதர்களை அல்லாஹ் மண்ணால் படைத்தான் என்றால் ! ஷைத்தானும் ஜின் இனத்தை சேர்த்தவன் தான்! ஜின் இனத்தை அல்லாஹ் நெருப்பால் படைத்தான் ! (அல்குர்ஆன் :15 : 27 | 55 : 15 | 18 : 50)

ஜின் படைப்பின் நோக்கம் :

ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை. (அல் குர்ஆன் : 51 : 56)

• அல்லாஹ் மனிதனை எந்த நோக்கத்திற்கு படைத்தானோ அதே நோக்கத்திற்கு தான் ஜின்ககளையும் அல்லாஹ் படைத்தான்!

• ஜின்களும் இஸ்லாம் தான் மார்க்கம் அல்லாஹ் தான் இறைவன் நபி (ஸல்) அவர்கள் தான் இறைத்தூதர்கள் ஜின்கள் இதை ஏற்று பின் பற்ற வேண்டும்!

ஜின்களில் முஸ்லீம்களும் உண்டு காஃபிர்களும் உண்டு :

• மனிதர்களில் எப்படி நல்லவர்கள் கெட்டவர்கள் உள்ளார்களோ அதே போன்று ஜின்களிலும் நல்லவர்கள் தீயவர்கள்,காபிர்கள், முஸ்லிம்களும் உள்ளனர்!

நம்மில் முஸ்லிம்களும் உள்ளனர். அநீதி இழைத்தோரும் உள்ளனர். இஸ்லாத்தை ஏற்போர் நேர் வழியைத் தேடிக்கொண்டனர். (அல் குர்ஆன் : 72 : 14)

ஜின்களிளும் ஆண் பெண் உள்ளனர் :

• மனிதர்களில் நாம் எப்படி ஆண்கள்,பெண்கள் என்ற இரு இணத்தவர்கள் இருக்கின்றோமோ அதே போல ஜின்களிலும் ஆண்,பெண் என்ற இரு இணத்தவர்கள் உள்ளனர் (அல்குர்ஆன் : 72 : 6)

• ஜின்களும் மனிதர்களை போன்று ஒருவருக்கு ஒருவர் நேசித்து கொள்ளுவார்கள் ! அவைகளும் நம்மை போன்று குழந்தைகளை பெற்று கொள்ளும்! (அல்குர்ஆன் : 18 : 50) (நூல் : முஸ்லீம் : 5312)

• ஜின்களில் உள்ள ஆண் ஜின்களிடம் தான் சூனியகாரர்கள் உதவி தேடுகிறார்கள் நம்மில் சில ஆண்கள் எப்படி இந்த உலகத்திற்கோ அல்லது மறுமை உலகத்திற்கோ எந்த பயனும் இல்லாமல் உள்ளார்களே அதே போன்று ஜின்களிலும் சிலர் உள்ளார்கள்!

• இது போன்ற ஜின்களிடம் சூனியக்காரர்கள் அடிபணித்து அவர்களை வணங்க ஆரம்பம் செய்கிறார்கள் இன்னும் அவர்களுக்கு குர்பானி போன்றவை கொடுக்கிறார்கள்!

• இதனால் கெட்ட ஜின்கள் இவர்களுக்கு உதவி செய்ய முன் வருகிறது!

ஜின்களை விலங்குகளால் காண முடியம் :

• நம்முடைய கண்களுக்கு ஜின்கள் ஒரு போதும் தெரியாது ஆனால் விலங்குகள் கண்களுக்கு தெரியும்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் இரவில் நாய் உளையிடுவதையும் கழுதை கத்துவதையும் செவியுற்றால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடுங்கள். ஏனென்றால் அவைகள் உங்களால் பார்க்க முடியாத (தீய)வற்றை பார்க்கின்றன! (நூல் : அபூதாவுத் : 4439)

ஜின்களின் உருவ அமைப்பு :

• ஜின்களின் உருவம் பற்றி ஆதாரப்பூர்வமான விரிவான செய்திகள் எதுவும் இல்லை!

• ஹதீஸ்களில் உள்ள செய்திகளை வைத்து ஜின்களில் மொத்தம் மூன்று வகையினர் உள்ளனர் !

1 ) நாய் மற்றும் பாம்பு வடிவில் உள்ளவைகள்!

2 ) (கண்ணுக்கு புலப்படாமல்) பூமியில் வாழும் ஜின்கள்!

3 ) ஆகாயத்தில் பறக்கக்கூடிய ஜின்கள்! (நூல் : முஷ்கிலுல் ஆஸார் : 2473)

• அனைத்து நாய் மற்றும் பாம்புகளும் ஜின்கள் கிடையாது! அதில் ஒரு சிலவைகள் மட்டும் தான் ஜின்கள் ஆகும் ஆனால் அவைகள் ஜின்கள் என்று உறுதியாக கூற எந்த அறிகுறியோ அல்லது அடையாளமோ கிடையாது!

• மதினாவில் வாழும் பாம்புகளுக்கு மட்டும் நபி (ஸல்) அவர்கள் உடனே கொல்ல வேண்டாம் என்று கூறி உள்ளார்கள் அதற்கு மூன்று நாட்கள் அவகாசம் அளிக்க சொல்லி உள்ளார்கள் நான்காம் நாள் அவை நம்மை விட்டு செல்ல வில்லை என்றால் கொல்ல அனுமதி கொடுத்து உள்ளார்கள்!

• ஆனால் நமது ஊர்களில் உள்ள விஷ பாம்புகள் நமக்கு தீங்கு கொடுத்தால் அவைகளை கொல்ல வேண்டும்! (நூல் : முஸ்லீம் : 4503)

பாம்பு பழி வாங்குமா?

:அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
பாம்புகள் பலிவாங்கிவிடும் என்று பயந்து யார் அவைகளை கொல்லாமல் விட்டுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. (நூல் : அபூதாவுத் : 4570)

• இன்று நமது நாட்டில் பல ஊர்களில் பாம்புகளை கொல்ல தயக்கம் காட்டுகிறார்கள் பாம்புகளை கொன்றால் அவை நம்மை பழி வாங்கும் என்று ஆனால் இது அறியாமையே!

• இஸ்லாத்தில் பாம்புகளை அடித்து கொல்ல அனுமதி உண்டு ஆனால் அதற்கு என்று அவைகளை எரித்து விட கூடாது!

ஜின்களின் வசிக்கும் இடங்கள் :

• நம்மை போன்று தான் ஜின்களும் பூமியில் வாழுகின்றன! ஆனாலும் ஜின்களின் வாழ்க்கை முறை மாறுபடும் !

• ஜின்கள் பின்வரும் இடங்களில் வாழ்வதை வழக்கமாக்கிக் கொள்கின்றனர்.

1) இருட்டான இடங்கள்

2) பாழடைந்த இடங்கள்

3) பராமரிப்பில்லாத கட்டிடங்கள்

4) பராமரிப்பில்லாத மைதானங்கள்

5) பாலை வனங்கள்

6) அடர்ந்த காடுகள்

7) மலைகள்

8) ஓடைகள்

9) மையவாடிகள்

10) பாழடைந்த பள்ளிவாசல்கள்

11) கிணறுகள்

12) சமுத்திரங்கள்

13) வயல் வெளிகள்

14) சுரங்கங்கள்

15) பொந்துகள்

16) வீட்டின் முகடுகள்

17) மரங்கள்

18) குகைகள்

19) ஒட்டகம் போன்ற விலங்குகள் அடைக்கப்படும் இடங்கள்

20) அசுத்தமான (நஜீஸ்) இடங்கள்

• மேற் கூறிய இடங்களில் ஜின்கள் தனது வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன. (நூல் : மஜ்முஉல் பதாவா : பாகம் 19 : பக்கம் 40 : 41)

ஜின்களின் உணவுகள் :

• ஜின்களும் மனிதர்களை போன்று உண்ணும் ஆனால் அவைகளின் உணவுகள் மாறுபடும்!

1) அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணியின் எலும்புகள் !

2) கெட்டியான சாணம்!

3) இது அல்லாமல் சில ஜின்கள் நம்மை போன்று நெருப்பு மூட்டி பாத்திரங்களை வைத்து சமைத்து சாப்பிட கூடியவைகளும் உண்டு! (நூல் : புகாரி : 3860 | முஸ்லீம் : 762 |திர்மிதி : 3311)

• இவைகள் தான் ஜின்களின் உணவுகள் ஆகும் நமக்கு இவை சாதாரணமான ஒன்றாக தெரியலாம் ஆனால் ஜின்களுக்கு இவைகள் மாமிசத்தை விட நிறைவான உணவுகள் ஆகும்!

 ஜின்களுக்கும் நபிமார்கள் அனுப்பப்பட்டுள்ளனர் :

• மனிதர்களுக்கும் மற்றும் ஜின் படைப்புகளுக்கும் நேர் வழி படுத்த அல்லாஹ் நபிமார்களை அனுப்பி உள்ளான்!

• ஜின்களில் நபிமார்களின் பேச்சை கேட்டு கட்டுப்பட்டவர்களும் உண்டு அவர்களை மறுத்துவர்களும் உண்டு! (அல்குர்ஆன் : 6 : 130)

ஜின்களுக்கும் வணக்க வழிபாடுகள் உண்டு :

• நமக்கு எப்படி தொழுகை இன்னும் சில அமல்கள் செய்வது கடமையோ அதே போன்று அல்லாஹ்வை வணங்குவது ஜின்கள் மீதும் கடமையாகும்! ஜின்களும் தொழுகும் அல்லாஹ்விடம் துஆ செய்யும்!

• அதே போன்று நாம் எப்படி பிறருக்கு தாவாஹ் செய்கிறோமோ அதே போன்று ஜின்களும் மற்ற ஜின்களுக்கு தாவாஹ் செய்கின்றன! (அல்குர்ஆன் : 51 : 56 | 46:30) (நூல் : புகாரி : 1071 | முஸ்லிம் : 5033)

ஜின்களுக்கும் மறுமை நாளில் விசாரணை உண்டு :

• மனிதர்களை போன்று ஜின்களும் பாவங்கள் செய்யும் இதை பற்றி மறுமையில் அல்லாஹ் ஜின்களையும் விசாரனை செய்வான்! (அல்குர்ஆன் 37 : 158 | : 55 : 39)

ஜின்களுக்கும் சொர்க்கம் & நரகம் உண்டு :

• மனிதர்களுக்கு எப்படி அவர்களின் செயலுக்கு ஏற்றால் போல் சொர்க்கம் நரகம் உள்ளதோ அதே போன்று ஜின்களுக்கும் சொர்க்கம் நரகம் உள்ளது! (அல்குர்ஆன் : 72 : 13 & 15)

ஜின்களிடம் உதவி தேடலாமா?

• ஜின்கள் நம்மை விட அதிகம் ஆற்றல் உள்ளதாக இருந்தால் அவைகளால் நமக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது!

• பாங்கு கூறியவருக்கு மட்டும் மறுமை நாளில் ஜின்கள் சாட்சி கூறும்! (நூல் : புகாரி : 3296)

• அவைகள் நமது கண்களுக்கும் தெரியாது அதனால் நாம் அவர்களிடம் நேரடியாக உதவியும் கேட்க முடியாது!

• நம்முடைய கண்களால் பார்க்காமல் துஆ செய்வதற்கு அல்லாஹ் ஒருவன் மட்டுமே தகுதி வாய்ந்தவன்!

• ஜின்களிடம் சிறியதோ அல்லது பெரியதோ உதவி கேட்பது ஷிர்க் (இணைவைப்பு) ஆகும்!

• ஆரம்ப காலத்து மக்கா காஃபிர்கள் ஜின்களிடம் உதவி கேட்டார்கள் இதை அல்லாஹ் ஷிர்க் வைத்து விட்டார்கள் என்று கூறி உள்ளான்! (அல்குர்ஆன் : 72 : 6)

ஜின்களுக்கு பயப்படலாமா? :

• ஜின்களுக்கு பயப்படுவது அறியாமை செயல் ஆகும்!

• நமக்கு நன்மையோ அல்லது தீங்கோ எந்த ஒன்றும் அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல் நமக்கு ஏற்படாது!

• இதை ஒவ்வொரு முஸ்லிமும் மனதில் ஆழமாக பதிய வைத்துக்கொண்டால் அல்லாஹ்வை தவிர மற்ற எதற்கும் அஞ்ச மாட்டார்கள் !

• நாம் அஞ்ச தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே!

ஷைத்தானே, தனது நேசர்களை (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் எனக்கே அஞ்சுங்கள்! (அல்குர்ஆன் 3 : 175)

 ஜின்கள் மனிதர்களை வழிகெடுப்பார்களா? :

• நம்மில் சில மனிதர்கள் சில மனிதர்களை வழிக்கெடுகிறார்கள் !அதே போன்று சில ஜின்களும் சில ஜின்களை வழிகெடுக்கிறார்கள்!

• ஜின்கள் மனிதர்களை உள்ளம் சார்ந்த விசியக்களை தீய எண்ணங்களை ஏற்படுத்தி வழிகெடுப்ப்பார்கள்!

(அந்நாளில்:) காஃபிர்கள்: “எங்கள் இறைவா! ஜின்களிலிருந்தும் மனிதனிலிருந்தும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டுவாயாக! அவ்விருவரும் தாழ்ந்தவர்களாக ஆவதற்காக நாங்கள் எங்களுடைய கால்களுக்குக் கீழாக்கி (மிதிப்போம்)” எனக் கூறுவார்கள். (அல்குர்ஆன் : 41: 29)

ஜின்கள் மனிதர்களுக்கு செய்யும் தீங்குகள் :

• ஜின்களை பற்றி அறியாமை செய்திகள் சில : மனிதர்களின் உடலில் பலவீனத்தை ஏற்படுத்துதல் மனித உயிர்களை பறித்தல் வறுமையை ஏற்படுத்துதல் போன்ற

செயல்களை ஜின்கள் செய்யும் என்று கூறுகிறார்கள் ஆனால் இதற்கு எல்லாம் எந்த ஆதாரமும் கிடையாது!
• ஜின்களால் மனிதர்களின் உள்ளம் சார்ந்த தீங்குகளை ஏற்படுத்த முடியும் உள்ளத்தில் தீய எண்ணங்களை ஏற்படுத்துதல்! சந்தேகம்! கணவன் மனைவியிடையே சண்டை போன்றவைகளை ஜின்களால் செய்ய முடியும்! (அல்குர்ஆன் : 114 : 5 & 6)

• அதே போன்று நாம் தொழுகையில் இருக்கும் போது வஸ்வாஸ் (வீணான எண்ணங்கள்) ஏற்படுத்த முடியும்!

• அல் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் சொல்லப்பட்டுள்ள இந்த விபரத்தைத் தாண்டி ஜின் பைத்தியத்தையும் நோயையும் ஏற்படுத்தும் என்று நிறைய நபர்கள் கூறுகிறார்கள் ஆனால் இதற்கு எல்லாம் எந்த ஆற்றலும் கிடையாது!

ஜின்களின் சக்தி :

• ஜின்களுக்கு அல்லாஹ் நம்மை விட அதிகம் ஆற்றல் கொடுத்து உள்ளான  ஆனால் அனைத்து ஜின்களுக்கும் இந்த ஆற்றல் கிடையாது!

மின்னல் வேகத்தில் பயணிக்க ஆற்றல் உண்டு :

• நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஒரு பலம் பொருந்திய ஜின் கூறியது : நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் பைத்துல் முகத்திஸில் ராணியின் சிம்மாசனத்தை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன் என்று கூறிய ஒரு பலம் பொருந்திய ஜின் அதையும் செய்தும் முடித்தது! (அல் குர்ஆன்: 27 : 39)

• நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இருந்த ஊர் எமன் ஆகும் அந்த இடத்தில் இருந்து பைத்துல் முகத்திஸ் சுமார் 2000 Km மேல் இருக்ககும்!

• நொடி பொழுதில் ஏமனில் இருந்து பைத்துல் முகத்திஸ் பயணம் செய்து அந்த ஜின் ராணியின் சிம்மாசனத்தை உடனடியாக தூக்கி வந்து சுலைமான் (அலை) அவர்களிடம் ஒப்படைத்தது!

வானத்தில் பயணிக்கும் ஆற்றல் :

• ஆரம்ப காலத்தில் ஜின்கள் வானம் வரை சென்று மலக்கு மார்கள் பேசுவதை மறைத்து இருந்து ஒட்டு கேட்டு வந்து அதை குறி சொல்ல கூடியவர்களிடம் வந்து கூறும் அவர்கள் அதனுடன் பொய்களை சேர்த்து மக்களிடம் கூறி வந்தனர்!

• ஆனால் அல்லாஹ் அதற்கு பின்பு ஜின்களால் வானம் செல்ல முடியாத அளவுக்கு ஒரு பாதுகாப்பை உண்டாகினான் அது தான் நெருப்பு கல் (வால் நட்சத்திரம்) அவர்கள் வானம் பக்கம் சென்றால் அல்லாஹ் அவர்களை நெருப்பு கல் மூலம் விரடி அடிப்பான் அல்லது அதனை கொண்டு நெருப்பில் பொசுக்கி விடுவான்! (அல்குர்ஆன் : 72:9)

ஆழ் கடல் பெரிய கட்டிடம் கட்ட போன்றவை செய்ய ஆற்றல் :

• பெரும் பெரும் கட்டிடங்களை எந்த கருவின் உதவி இல்லாமல் அவைகளை கட்டிமுடிக்க முடியும்!

• பெரும் பெரும் கட்டிடங்களை எந்த கருவின் உதவி இல்லாமல் அவைகளை கட்டி முடிக்க முடியும்! (அல் குர்ஆன் : 38 : 37)

ஜின்களுக்கும் குறைகள் உண்டு :

• ஜின்களுக்கு மனிதர்களை விட அதிக ஆற்றல் இருந்தாலும் அவைகளுக்கும் குறைகளும் உண்டு !

• ஜின்களால் மறைவானதை அறிந்து கொள்ள முடியாது! நபி சுலைமான் (அலை) அவர்கள் தொழுகையில் நிற்கும் நிலையிலயே மரணம் அடைந்து விட்டார்கள் ஆனால் இதை பற்றி அறியாத ஜின்கள் அவர்கள் தொழுகும் முன் கூறிய வேலையை தொடர்ந்து செய்து கொண்டு இருந்தனர்!

• நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கை தடியின் உதவினால் தொழுகையில் நின்று கொண்டு இருந்தார்கள் அவர்கள் மரணம் அடைந்தும் அவர்கள் கிழே விழ வில்லை அந்த கை தடி அவர்களை தாங்கி பிடித்து கொண்டு இருந்தது!

• அந்த கைத்தடியும் கரையான்கள் கடித்து அந்த கைத்தடி கிழே விழ நபி சுலைமான் (அலை) அவர்களும் கிழே விழுந்தார்கள்! அப்போது தான் ஜின்களுக்கு நபி சுலைமான் (அலை) அவர்கள் மௌத் ஆகி விட்டார்கள் என்று தெரிய வந்தது!(அல்குர்ஆன் : 34 : 14)

• அதே போன்று உலகில் ஏதேனும் அல்லது யாருக்கேனும் நன்மையான காரியம் நடைபெற போகிறது அல்லது தீங்கு ஏற்பட போகிறது என்றாலும் இதையும் ஜின்களால் அறிந்து கொள்ள முடியாது! (அல்குர்ஆன் : 72 : 10)

ஜின்கள் மனிதர்கள் உடலில் புகுவார்களா?

• இதை பற்றி அல் குர்ஆனிலோ அல்லது ஸஹீஹான ஹதீஸ்களிலோ எந்த செய்தியும் கிடையாது!

• ஜின்களால் உள்ளம் சார்ந்த சில பிரச்சனைகளை ஏற்படுத்த முடியும்!

• ஜின் பிடித்து உள்ளது என்று சிலர் கூறுவார்கள் அதற்கு ஏற்றால் போல் சில செயல்களையும் செய்வார்கள்!

உதாரணமாக : ஒரு பெண்ணுக்கு மாப்பிளை பார்த்து இருப்பார்கள் ஆனால் அந்த பெண் வேறு ஒருவரை நேசிக்கும் வீட்டில் கூற முடியாது! அதனால் அவள் ஜின் தன் மீது ஏறி விட்டது போன்று நடிப்பார்கள் இதனால் அவர்களை யாரும் நிக்காஹ் செய்ய முன் வர மாட்டார்கள் இது ஒரு காரணம்!

இரண்டாவது : அதிக மன அழுத்தம் அல்லது உள்ளத்தில் ஏற்படும் அதிகபடியான பயம் இதனால் மனம் அளவிலும் சிந்தனை அளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் இவர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்ன பேசுகிறோம் என்று கூட விளக்க முடியாத அளவுக்கு சென்று விடுவார்கள் இதை தான் நாம் போய் பிடித்து உள்ளது அல்லது ஜின் ஏறி விட்டது என்று கூறுகிறோம் ஆனால் இது மருத்துவ சார்ந்த பிரச்சனை ஆகும்!

• ஜின்கள் மனிதர்களின் உடலில் புகுந்து ஏதேனும் தீங்கு செய்ய முடியம் என்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதில் இருந்து பாதுகாப்பு பெற வழிமுறைகளை நமக்கு கூறி இருப்பார்கள் ஆனால் நபி (ஸல்) அவர்கள் இதை பற்றி எந்த செய்தியும் நமக்கு கூற வில்லை!

• ஆனால் ஜின்களை வைத்து பிழைப்பு நடத்த கூடியவர்கள் இவர்களுக்கு ஜின் பிடித்து உள்ளது! ஜின்களை விரட்டுகிறோம் என்று பணத்தை வாங்கி கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள்!

ஜின்களும் & மனிதர்களும் :

• அல்லாஹ் மனிதனை படைக்கும் போதே ஒவ்வொரு மனிதரிடமும் ஒரு மலக்குமார் மற்றும் ஒரு கெட்ட ஷைத்தான் அல்லது கெட்ட ஜின்னை வைத்தே நம்மை படைத்து உள்ளான்!

• மலக்குமார் நல்லதை ஏவுவார்கள் ஷைத்தான் அல்லது கெட்ட ஜின் நமக்கு பாவமான காரியங்களை செய்ய ஏவும்! (நூல் : முஸ்லிம் : 5421)

• இதை தவிர ஒரு ஜின்னால் நமக்கு எந்த தீங்கும் செய்ய முடியாது!

 நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் & ஜின்களும் :

• அல்லாஹ் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மட்டும் ஜின்களை வசப்படுத்தி கொடுத்தான்!

• நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்ன கூறினாலும் ஜின்கள் அதற்கு கட்டுப்பட்டு அவர்கள் கூறும் வேலையை செய்யும்! (அல்குர்ஆன் : 34 : 12)

• நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஜின்களை கொண்டு போர் செய்வதற்கு கட்டிடங்கள் கட்டுவது! கடலில் இருந்து பொக்கிஷங்கள் எடுப்பது போன்ற வேலைகளை ஜின்களை வைத்து செய்தார்கள்! (அல்குர்ஆன் : 21 : 82)

ஜின்களை வசப்படுத்த முடியுமா? (1) :

• ஜின்களை பொறுத்த வரை அவை யாருக்கும் வசப்படாது அதை அல்லாஹ்வை தவிர வேறு யாராலும் ஜின்களை கட்டுப்படுத்தவும் முடியாது!

• ஏன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது கொண்டு இருக்கும் போது அதிகம் சக்தி வாய்ந்த ஜின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையில் தடங்கள் ஏற்படுத்தியது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் கூட அந்த ஜின்னை கட்டுப்படுத்த முடியவில்லை!

• பிறகு அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஜின்களை கட்டுப்படுத்தும் ஆற்றலை வழங்கினான்! அதற்கு பின்பு தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த ஜின்னை பிடித்தார்கள்! (நூல் : புகாரி : 4921)

• நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் கூட ஜின்னை கட்டுப்படுத்த இயலவில்லை அந்த அளவுக்கு ஜின்கள் வலிமை வாய்ந்தது!

• ஆனால் இன்று பலர் அறியாமை காரணமாக ஜின் சூராவை 40 முறை ஓதினால் ஜின் வசப்படும் இரவில் தொடர்ந்து ஓதினால் வசப்படும் என்று எல்லாம் கூறுவார்கள் நவதுபில்லாஹ்!

• நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் அல் குர்ஆனை ஓதுவதை கேட்ட ஜின்கள் தானும் இஸ்லாத்தை ஏற்று கொண்டு தன்னுடைய சமூகத்திற்கு சென்று பிறரையும் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு கொடுத்தது இந்த அழகிய சம்பவத்தை தான் அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூரத்துல் ஜின் மூலம் தெரியப்படுத்தினான்!

• ஆனால் இன்று சூரா ஜின்னையே ஓத கூடாதா அளவுக்கு மக்களின் உள்ளத்தில் பயத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்!

ஜின்களை வசப்படுத்த முடியுமா ? (2):

1) ஜின்களை பொறுத்த வரை அல்லாஹ் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மட்டும் வசப்படுத்தி கொடுத்தான் ! நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கூட ஜின்னை கட்டுப்படுத்தும் ஆற்றல் இல்லை பின்னர் தான் அல்லாஹ் நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அந்த ஆற்றலை கொடுத்தான் !

• இப்படி இருக்க ஒரு சாதாரண மனிதர்களால் ஜின்களை வசப்படுத்தி தங்களுடைய தேவைகளுக்கு பயன் படுத்த முடியுமா? என்றால் ஒரு போதும் முடியாது!

2) அப்படி இருந்தும் இன்று பலர் கூறுகிறார்கள் : என்னுடைய ஹஜ்ரத் ஜின்னை வசப்படுத்தி வைத்து உள்ளார் ! எங்கள் ஊரில் உள்ள பெரிய அவ்லியா ஜின்னை வசப்படுத்தி வைத்து உள்ளார் அதன் மூலம் சில வேலைகள் செய்கிறார்கள்!

இதற்கு விளக்கம் :

• ஜின்களை பொறுத்த வரை அவை யாருக்கும் வசப்படாது நாம் என்ன செய்தாலும் சரியே! ஆனால்

• ஜின்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது ! இந்த தொடர்பை பயன் படுத்தி கொண்டு அல்லாஹ்விற்கு இணைவைத்து ! ஜின்கள் மீது ஈமான் கொண்டால் அவைகள் நமக்கு உதவி செய்ய முன் வரும்!

• உங்களிடம் யாரேனும் வந்து நான் ஜின்னை வசப்படுத்தி உள்ளேன் என்றால் அப்போதே நாம் விளங்கி கொள்ளலாம் அவன் காஃபிர் ஆகி விட்டான் என்று !

• ஜின்களை பொறுத்த வரை அல்லாஹ் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மட்டுமே வசப்படுத்தி கொடுத்தான் ~ மனிதர்களால் என்ன செய்தாலும் சரி ஒரு போதும் ஜின்களை வசப்படுத்த முடியாது!

 

ஜின்களுக்கும் மரணம் உண்டு :

• மனிதர்களைப் போலவே ஜின்களுக்கும் மரணம் உண்டு!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்துவந்தார்கள் :

(இறைவா!) உன் கண்ணியத்தின் பெயரால் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஜின் இனத்தாரும் மனித குலத்தாரும் இறந்துவிடுவார்கள்; (ஆனால்,) நீ இறக்கமாட்டாய். (நூல் : புகாரி : 7383)

ஜின்களின் தீங்குகளில் இருந்து பாதுகாப்பு பெற :

சூரா பகராவின் கடைசி 2 வசனங்கள் :

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
‘அல்பகரா’ அத்தியாயத்தின் இறுதி இரண்டு (திருக்குர்ஆன் : 2 : 285 – 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும்! (நூல் : புகாரி : 4008)

ஆயத்துல் குர்ஸி :

• இரவில் அல்குர்ஆனில் : 2 : 255 | ஆயத்துல் குர்ஸியை ஓதினால் உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்! (நூல் : புகாரி : 3275)

சூரா நாஸ் & சூரா ஃபலக் :

சூரத்துல் : நாஸ் 114 | சூரத்துல் : ஃபலக் : 113 ஆகிய சூராக்களை ஓதி பாதுகாப்பு தேடலாம்! (நூல் : திர்மிதி : 2135)

https://www.nidur.info/2021/09/13/%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95/

www.sahabudeen.com

Hiccups: விக்கல் என்னும் சிக்கலைத் தீர்க்க டிப்ஸ்

Hiccups: விக்கல் வருவதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. பொதுவாக யாராவது உங்களை நினைத்தால் ...

Popular Posts