லேபிள்கள்

வியாழன், 16 ஜூலை, 2026

சிறுநீரக கல்பிரச்சினையால் அவதியா? அதைக் கரைக்க எளிய வழிகள்.


பொதுவாக சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது பெரும் வலியை தரக்கூடிய உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாகும்.

மிகச் சிறிய படிவங்கள் தேங்கி, கற்களாக உருவாகி சிறுநீரகத்தில் தங்கிவிடுகின்றன. இது வலியை ஏற்படுத்தாதவரை யாரும் இதை கண்டுபிடிப்பது இல்லை.

சிறுநீரகத்தில் கல் இருந்து, அது சிறுநீர்ப்பாதை வழியாக நகர்ந்து வெளியேறும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. இது சிறுநீர் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதுதான் வலி கடுமையாகும்.

சிறுநீரக கற்கள் தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும் என்றாலும், வீட்டு முறை சிகிச்சைகளில் இதை கரைக்க முடியும். தற்போது அவை எப்படி என பார்ப்போம்.

நாள் ஒன்றுக்கு 2 லிட்டர் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் உருவாகுவதை தடுக்க முடியும்.

நாம் போதுமான அளவு தண்ணீர் குடித்தால் தான் நமது சிறுநீரகங்கள் அசுத்தங்களை வெளியேற்ற முடியும். ஆகவே, சராசரியாக ஒரு ஆண் நாளொன்றுக்கு 3.7 லிட்டர் தண்ணீரும், ஒரு பெண் 2.7 லிட்டர் தண்ணீரும் அருந்துவது அவசியமாகும்.

மாதுளம் பழச்சாறு எடுத்துக் கொள்ளும்போது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவது தடுக்கப்படுகிறது. சிறுநீரின் அசிடிட்டி அளவையும் இது குறைக்கிறது.

நமது சிறுநீரகத்தில் உள்ள கற்களை வெளியேற்றி, சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் தன்மை ராஜ்மா விதைகளில் இருக்கிறது.

சீமை காட்டு முள்ளங்கி ஜூஸ் அருந்துவதும் சிறுநீரக கற்களை வெளியேற்றுவதற்கு உதவும்.

கோதுமைப்புல் ஜூஸ் என்பது நம் உடலுக்கு நன்மை அளிப்பதாகவும். சிறுநீரை இது பெருக்கும். ஆகவே சிறுநீரக கற்கள் வெளியேற உதவியாக இருக்கும்.

கிரீன் டீ என்பதும் கால்சியம் ஆக்ஸலேட் கொண்டது என்றாலும் இதன் மூலமாக சிறுநீரக கற்கள் உருவாகாது. ஆகவே, தினசரி கிரீன் டீ அருந்தினால் சிறுநீரக கற்களை வெளியேற்ற முடியும்.



--

திங்கள், 13 ஜூலை, 2026

கடுகைக் கொண்டுவிஷக்கடி மற்றும் பூச்சிகடியை சரி செய்வது எப்படி?


பொதுவாக நா‌ம் கடுகை சமைய‌லி‌ல் தா‌ளி‌ப்பத‌ற்கு பய‌ன் படு‌த்து‌கிறோ‌ம். அதாவது, நா‌ம் சமை‌க்கு‌ம் சமைய‌ல் ‌ஜீரணமாக அடி‌ப்படையான கடுகை முத‌லி‌ல் போடு‌கிறோ‌ம்.

ஏ‌ன் எ‌ன்றா‌ல் கடுகு ‌ஜீரண‌த்‌தி‌ற்கு உதவு‌கிறது.

‌தினமு‌ம் காலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் கடுகு, ‌மிளகு, உ‌ப்பு மூ‌ன்றையு‌ம் ஒரே அளவு சே‌ர்‌த்து சா‌ப்‌பி‌ட்டு‌வி‌ட்டு அத‌ன்‌பிறகு வெ‌ந்‌நீ‌ர் குடி‌க்க வே‌ண்டு‌ம். இ‌ப்படி செ‌ய்வதா‌ல் ‌பி‌த்த‌ம், கப‌ம் போ‌ன்ற‌ற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் உட‌ல் உபாதைக‌ள் ‌நீ‌ங்கு‌ம்.‌ விஷ‌ம், பூ‌ச்‌சி மரு‌ந்து, தூ‌க்க மா‌த்‌திரை போ‌ன்றவ‌ற்றை சா‌ப்‌பி‌ட்டவ‌ர்களு‌க்கு‌ம், 2 ‌கிரா‌ம் கடுகை ‌நீ‌ர்‌வி‌ட்டு அரை‌த்து ‌நீ‌ரி‌ல் கல‌க்‌கி உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌த்தா‌ல் உடனடியாக வா‌ந்‌தி எடு‌த்து ‌விஷ‌ம் வெ‌ளியேறு‌ம்.

கடுகு, பூ‌ண்டு, வச‌ம்பு, கருவா‌ப்ப‌ட்டை, கழ‌ற்‌சி‌க்கா‌ய், கடுகு, ரோ‌கி‌ணி ஆ‌கியவ‌ற்றை சம அளவு ‌எடு‌த்து ‌நீ‌ர்‌வி‌ட்டு கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி இருவேளை ‌வீத‌ம் ஒரு வார‌ம் குடி‌த்து வர வாத‌ம், வா‌ய்‌வு, கு‌த்த‌ல் ‌பிர‌ச்‌சினை குணமாகு‌ம். கடுகு, ‌ம‌ஞ்ச‌ள் சம அளவு எடு‌த்து ந‌ல்லெ‌ண்ணெ‌யி‌ல் கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கா‌தி‌ல் ‌சில சொ‌ட்டுக‌ள் இட தலைவ‌லி‌க்கு ‌நிவாரண‌ம் ‌கி‌ட்டு‌ம்

சமையல் கடுகு மளிகைக் கடைகளில் சாதாரணமாகக் கிடைப்பதாகும். நம் அனைவருக்கும் நன்கு பழக்கமானதாகும். கடுகு எண்ணெய் மற்றும் வெள்ளைக் கடுகு ஆகியவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். தேவையான அளவு கடுகை, தேனுடன் சேர்த்து அரைத்து, பசையாகச் செய்து, கட்டிகளின் மீது பூச கட்டிகள் உடையும்.

தே‌னி‌ல் கடுகை அரை‌த்து‌ உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌க்க இரும‌ல், கப‌ம், ஆ‌ஸ்துமா குணமாகு‌ம். கடுகை தூ‌ள் செ‌ய்து வெ‌ந்‌நீ‌ரி‌ல் ஊற வை‌த்து வடி‌த்து கொடு‌க்க ‌வி‌க்கலை குணமா‌க்கு‌ம். கடுகை அரை‌த்து ப‌ற்‌றிட ர‌த்த‌க்க‌ட்டு, மூ‌ட்டு வ‌லி த‌ணியு‌ம். கை, கா‌ல்க‌ள் ‌சி‌ல்‌லி‌ட்டு ‌விரை‌த்து‌க் காண‌ப்ப‌ட்டா‌ல் கடுகை அரை‌த்து து‌ணி‌யி‌ல் தட‌வி கை, கா‌ல்க‌ளி‌ல் சு‌ற்‌றி வை‌க்க வெ‌ப்ப‌த்தை உ‌ண்டா‌க்கு‌ம். ‌உடனடியாக ‌விரை‌ப்பு ‌சீராகு‌ம்.


--

வியாழன், 9 ஜூலை, 2026

படுத்தவுடன் தூங்கசில வழி முறைகள்.


தூக்கமின்மை குறைய:

தூக்கமின்மை குறைய பேரீட்சை, முருங்கை, ஆப்பிள்‌, எலுமிச்சை, கேரட்‌, திராட்சை, தேங்காய்‌ பால்‌, கொத்த மல்லி, நெல்லி இவைகளை சாப்பிட தூக்கமின்மை குறையும்‌.

தூக்கமின்மை குறைய வெள்ளரி விதைகளை அரைத்து பாலில்‌ குடித்து வர தூக்கமின்மை குறையும்‌.

தூக்கமின்மை குறைய கொல்லங்கோவைச்‌ செடியினை பருக்கை அறையில்‌ கட்டித்‌ தொங்கவிட்டால்‌ தூக்கமின்மை குறையும்‌.

தூக்கமின்மை குறைய ஜாதிக்காய்‌ பொழுயுடன்‌ நெல்லிக்காய்‌ சாறு கலந்து சாப்பிட்டால்‌ தூக்கமின்மை குறையும்‌.

தூக்கம்‌ வர:

தூக்கம்‌ வர சீரகத்தை வாழைபழத்துடன்‌ சாப்பிட்டால்‌ சுகமான தூக்கம்‌ வரும்‌.

தாக்கம்‌ வர சப்போட்டா பழம்‌ உண்டு வர இரவில்‌ நன்றாக தூக்கம்‌ வரும்‌.

தாக்கம்‌ வர கசகசாவை பொன்னிறமாக வறுத்து பொழியாக்கி 1 கிராம்‌ பொடியை எருத்து 1 டீஸ்பூன்‌ கற்கண்ருடன்‌ பால்‌ சேர்த்து குடித்து வந்தால்‌ நன்றாக தூக்கம்‌ வரும்‌.

தூக்கம்‌ வர அத்திக்காயை நெய்யில்‌ வதக்கி இரவு சாப்பிட்டி வந்தால்‌ நன்றாக தூக்கம்‌ வரும்‌.

தூக்கம்‌ வர ஆரஞ்சு பழச்சாற்றில்‌ தேனை கலக்கி சாப்பிட தூக்கம்‌ வரும்‌.

தூக்கம்‌ வர மருதாணிப்‌ பூவை தலையில்‌ வைத்துப்‌ பருத்தால்‌ தூக்கம்‌ வரும்‌.

தூக்கம்‌ வர மருதாணிப்‌ பூவையும்‌, உலர்ந்த காயையும்‌ தூள்‌ செய்து சாம்பிராணியுடன்‌ கலந்து புகை பிடித்தால்‌ தூக்கம்‌ வரும்‌.

தாக்கம்‌ வர ரோஜாப்பூ வெள்ளை மிளகு, சுக்கு அரைத்து சாப்பிட்ரு வந்தால்‌ தூக்கம்‌ வரும்‌.

தாக்கம்‌ வர தர்ப்பை புல்லை தலையணை கீழ்‌ வைத்து படுத்தால்‌ நன்றாக தூக்கம்‌ வரும்‌.



--

திங்கள், 6 ஜூலை, 2026

வெள்ளிப் பொருட்களைபளிச்சென்று சுத்தம் செய்வது எப்படி?

வெள்ளியிலான ஆபரணம், குத்துவிளக்கு, தட்டு, தம்ளர் எனப் பல பொருள்களும் சிறிது காலத்தில் மங்கி விடும். நிறம் கறுத்துக் காணப்படும்.

வெள்ளி உலோகத்தில் ஏற்படும் வேதியியல் வினைகளே இதற்குக் காரணம்.

படிந்த கறுமை நீங்கி வெள்ளிப் பொருள்களை எப்படி எளிய முறையில், வீட்டிலேயே இருக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு பளிச் என சுத்தப் படுத்துவது என்று பார்க்கலாம்.

எலுமிச்சை மற்றும் உப்பு

சாப்பாட்டு தட்டு போன்ற தினமும் சுத்தம் செய்ய வேண்டிய வெள்ளிப் பொருள்களை பராமரிக்க, எலுமிச்சை மற்றும் உப்பை பயன்படுத்தலாம். ஓர் அகன்ற பாத்திரத்தில் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும். அதில் சிறிதளவு உப்பு சேர்த்து, அதனுடன் வெந்நீர் சேர்த்துக் கலந்து வைக்கவும். அதில் வெள்ளிப் பொருள்களை ஊறவைத்து 5 நிமிடங்கள் கழித்து எடுத்து, வெள்ளை துணி கொண்டு துடைக்கவும். அழுக்குகள் நீங்கும்.

சோப் பவுடர்

பல காலமாக நடைமுறையில் இருக்கும் பராமரிப்பு இது. ஒரு சிறிய கிண்ணத்தில்சோப் பவுடர் சேர்த்து, அதில் வெந்நீர் ஊற்றி கலந்து வைக்கவும். இதில் வெள்ளிப் பொருள்களை ஊறவைக்கவும். இதனை 5 - 7 நிமிடங்களுக்குப் பின் எடுத்து பிரஷ் கொண்டு தேய்த்து, மிருதுவான காட்டன் துணியால் துடைத்தால் பளிச்சென இருக்கும்.

வினிகர்

வினிகர், தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவை சேர்ந்த கலவை வெள்ளிப் பொருள்களுக்கு மிகச் சிறந்த பராமரிப்பு முறை. ஒரு கிண்ணத்தில், வெதுவெதுப்பான நீரில் 1/2 கப் வெள்ளை வினிகர், 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா எனக் கலக்க வேண்டும். மிகவும் ஒளி மங்கிய வெள்ளிப் பொருள்களை, இரண்டு முதல் மூன்று மணி நேரம் அதில் ஊற வைக்கவும். பின் அவற்றை எடுத்து குளிர்ந்த நீரில் அலசி உலர்த்தவும்.

கார்ன்ஃப்ளார்

வெள்ளி பொருள்கள் பிரகாசம் இழந்திருந்தால், அதை தண்ணீர் மற்றும் கார்ன்ஃப்ளார் பயன்படுத்தியும் சரி செய்யலாம். கார்ன்ஃப்ளார் மற்றும் தண்ணீர் கலந்து ஒரு கெட்டியான பேஸ்ட்டை செய்து, அதை வெள்ளிப் பொருள்களில் அப்ளை செய்து வைக்கவும். பின்னர் அதனை மெல்லிய துணி கொண்டு துடைத்து எடுக்கவும். பிரகாசம் மீளும்.

கெட்ச் அப்

சிறிதளவு கெட்ச் அப் எடுத்துக் கொள்ளவும். இதனை பேப்பர் டவல் கொண்டு வெள்ளிப் பொருள்களில் தேய்த்துத் துடைக்கவும். கறைகள் அகலும். ஒருவேளை நீண்டநாள் கரைகள், அகலவில்லை எனில் கெட்ச் அப்-ஐ வெள்ளிப் பொருள்களில் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்குப் பின் அழுத்தித் துடைக்க... பளிச் என்றாகும்.



--

திங்கள், 29 ஜூன், 2026

தண்ணீரைத் தூய்மைசெய்யும் தேற்றாங்கொட்டையைப் பற்றி தெரியுமா?

கலங்கல் நீரினைத் தூய்மைப் படுத்தும் திறன் தேற்றா எனப்படும் தேற்றாங் கொட்டைக்கு உண்டு என்பதே ஆகும்.

தேற்றான் கொட்டை உடலை தேற்றும் குணம் கொண்டதாலும், இந்நீரைத் தெளிய வைப்பதாலும் தேற்றான் என்று சொல்லப்படுகிறது.

தேற்றாங் கொட்டை என்பதைப் பொடி செய்து கலங்கிய நீரில் போட்டால் அது தெளிந்துவிடும் என்பது சங்க காலம் முதல் இன்றுவரை பின்பற்றப் படுகிறது. பாட்டிலில் தண்ணீர் விற்பனைக்கு வரும் காலத்துக்கு முன்னரே சுத்தமான நீரைப் பெற இதைப் பயன்படுத்தினர். (இதற்கு கதகப் பொடி என்ற பொடியை வடமொழி நூல்கள் குறிப்பிடப்படுகிறது.)

ஆப்பிரிக்க நாடுகளில் முருங்கைக் காய்க்குள் இருக்கும் விதைகளைப் பயன்படுத்தி தண்ணீரை தூய்மை செய்தனர்.

பொற்கொல்லர்கள் பழைய அணிகலன்களில் படிந்துள்ள அழுக்கினைப் போக்கத் தேத்தாங்கொட்டையை ஊறிய நீரில் நுரை பொங்கத் தேய்த்துத் தூய்மை செய்வர்.

பத்து லிட்டர் தண்ணீரில் இரண்டு தேற்றாங்கொட்டைகளைப்போட்டு வைத்தால் 2 மணி நேரத்தில் நீர் சுத்தமானதாகி விடும். இது தவிர இது மருந்தாகவும் பயன்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் லேகியம் பசியைத்தூண்டும். இதை சாப்பிட்டால் உடல் மெலிந்தவர்கள் தேறி விடுவார்கள்.

கண்மாய்களில் தேக்கிய நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் இடங்களில் நீரைத் தெளியவைக்க சட்டியிலேயே தேற்றான்கொட்டையைத் தேய்ப்பது வழக்கம். சில நிமிடங்களில் நீர் தெளிந்துவிடும்.

நீரில் மிதக்கும் கரித்துகள்கள் படிந்துவிடும். நிலக்கரிச் சுரங்கங்களில் நீரில் கலந்த நிலக்கரித் துகள்களைத் தனித்துப் பிரித்திட படிகாரத்துடன் சிறிது தேற்றாங் கொட்டைப் பொடியினையும் சேர்த்திடுவர். உடனடியாக துகள்களெல்லாம் படிந்திடும். நீரைத் தெளியவைக்கும் பண்பு இக்கொட்டையில் நச்சில்லா பொருட்கள் இருப்பதால் ஏற்படுகிறது.

இத்தேற்றான் கொட்டையின் மருத்துவ குணமாக வெட்டை, உட்சூடு, வயிற்றுக்கடுப்பு, மூத்திர எரிச்சல் போன்ற நோய்களைக் குணமாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கோடையில் தண்ணீரில் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்கவும் இதை முயற்சி செய்யலாம்: இதை செய்வதற்கு மிளகு 25 கிராம், சீரகம் 25 கிராம், தேத்தாங்கொட்டை 1, வெட்டி வேர் சிறிது, வெந்தயம் 20 கிராம், இவைகளை துணியில் வைத்து கட்டி 15 லிட்டர் தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம். மண் பானையை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இந்த குடிநீர், உயிர் சத்துக்கள் நிறைந்த உயிரோட்டமுள்ள நீராக மாறி பயன்கள் தரும்.



--

வெள்ளி, 26 ஜூன், 2026

புகைப் பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பார்க்கலாம்.

புகைபிடிப்பதை நிறுத்தினால் ஏற்படும் மாற்றங்கள்?

புகைபிடிப்பதை நிறுத்திய 20 நிமிடத்தில் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இயங்க ஆரம்பிக்கிறது.

12 மணி நேரத்தில் ரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு அளவு படிப்படியாக குறைந்து சீராகிறது. 2- 12 வாரங்களில் உடல் இயக்கம் சீராகிறது, நுரையீரல் செயல்பாடுகள் அதிகரிக்கிறது.

1-9 மாதங்களில் இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் குறைகிறது. 1 வருடத்தில் இதய நோய் வருவதற்கான ஆபத்து பாதியாகக் குறைகிறது.5 வருடங்களில் பக்கவாதம் வருவதற்கான ஆபத்துகள் குறைகின்றன.

10 ஆண்டுகளில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து பாதியாகக் குறைகிறது. வாய், தொண்டை, சிறுநீர்பை புற்றுநோய், கணைய நோய்கள் வருவதற்கான ஆபத்துகள் குறைகிறது.

15 ஆண்டுகளில் இதய நோய் வருவதற்கான ஆபத்து முற்றிலும் குறைகிறது.

புகைப்பிடிப்பதை கைவிடுவதால் ஏற்படும் நன்மைகள்

30 வயதில் புகைபிடிப்பதை நிறுத்தினால் 10 வருடங்கள் வரை உயிர் வாழலாம். 40 வயதில் நிறுத்தினால் 9 வருடங்கள் உயிர் வாழலாம். 50 வயதில் நிறுத்தினால் 6 வருடங்கள் உயிர் வாழலாம். 60 வயதில் நிறுத்தினால் 3 வருடங்கள் வரை உயிர் வாழலாம்.

மாரடைப்பு வந்தவர் புகைபிடிப்பதை நிறுத்தினால், இன்னொரு முறை மாரடைப்பு வருதற்கான வாய்ப்புகள் 50 சதவிகிதமாக குறைகிறது.

மற்ற நன்மைகள் புகைபிடிப்பதை நிறுத்தினால் ஆண்மைக் குறைவு, கருத்தரித்தல் பிரச்சினை, குறை பிரசவம், குறைந்த எடையில் குழந்தை பிறப்பது, கருச்சிதைவு ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

இன்றே புகைப்பதை நிறுத்திப்பாருங்கள், உங்கள் உடலிலும் இத்தகைய மாற்றங்களை கண்டு நீண்ட நாட்கள் உயிரோடு வாழலாம்.



--

செவ்வாய், 23 ஜூன், 2026

எட்டு வடிவநடைப்பயிற்சி மேற் கொள்வதால் ஏற்படும் பலன்கள்.

எட்டு நடைப்பயிற்சியின் போது எந்த வகையான காலணிகளும் இல்லாமல் வெறும் கால்களில் இந்த நடைபயிற்சியை மேற்கொள்வதே முழுமையான பலன்களை கொடுக்கும்.

கால்களில் காயம் மற்றும் இன்ன பிற பிரச்சனைகள் உள்ளவர்கள் மட்டும் காலணி, ஷூ போன்றவற்றை அணிந்து இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

8 வடிவ நடைப்பயிற்சி எப்போதுமே வடக்கு, தெற்கு திசைகளில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். முதலில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 15 நிமிட நேரம் எட்டு வடிவ நடை பயிற்சியை செய்ய வேண்டும். பிறகு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி எட்டு வடிவில் 15 நிமிட நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இந்த எட்டு வடிவ நடை பயிற்சி செய்வதற்கு மொத்தம் 30 நிமிடங்கள் மட்டுமே போதுமானதாகும்.

உடல் வலி, தலைவலி, செரிமான பிரச்சனைகள், தைராய்டு, உடல் பருமன், மலச்சிக்கல், ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் முழங்கால் வலி, போன்ற பல நோய்கள், பிரச்சனைகளால் அவதிப்பட்டவர்கள் 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொண்ட சில காலத்திலேயே அவை அனைத்தும் நீங்குவதை அனுபவபூர்வமாக உணரலாம். மேலும் 8 வடிவ நடை பயிற்சி மேற்கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வெகுவாக குறையும்.

முக்கியமாக இந்த பயிற்சியை தினமும் தவறாமல் செய்து வந்தால் இளமையான தோற்றத்தையும், இளைய வயதினரை போன்ற மன உற்சாகத்தையும் தக்க வைத்துக்கொள்ளலாம். 8

வடிவ நடைப்பயிற்சி மனிதர்களின் கண்களின் பார்வை திறனை மேம்படுத்தும். 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது, அந்த கோடுகளை கூர்ந்து கவனித்து நடைப்பயிற்சி மேற்கொள்வதால், கருவிழி அங்கும் இங்கும் அசைந்து, கண்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து கண்பார்வை மங்குதல், கண் அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அறவே நீங்கும்.



--

வெள்ளி, 19 ஜூன், 2026

இரத்தக்கொதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் என்னென்ன?

மருந்து உட்கொள்வது மட்டுமின்றி நமது வாழ்க்கை முறையில் சில நல்ல மாற்றங்களை செய்து கொள்வதினாலும் நாம் இரத்தக் கொதிப்பிலிருந்து விடுபடலாம்.

1) உணவில் உப்பு சேர்ப்பதைக் குறைத்துக் கொள்ளல்:உப்பு அதிகமாக இருக்கும் பண்டங்களான ஊறுகாய், அப்பளம், கருவாடு, மற்றும் அதிக உப்பு சேர்க்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் முந்தரி, சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

2) பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் உணவில்அதிக அளவில் சேர்த்துக் கொள்வது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும்.

3) மனதை ரிலாக்ஸ் செய்யும் முறைகள்:யோகா மற்றும் தியானம் ஆகியவற்றை எந்த பரபரப்பும் இன்றி தவறாமல் செய்தால் இரத்தக் கொதிப்பு பெருமளவு குறையும்.

4) உடற்பயிற்சி:தினமும் தவறாமல் மிதமான உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும் 30 நிமிடங்கள் வாக்கிங் போவதோ, 20 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதோ அல்லது நீச்சல் அடிப்பதோ சரியான உடற்பயிற்சி முறைகள். இவை உடற்பருமனையும் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறையும்.

5) புகை பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் முதலிய பழக்கங்களை அறவே நீக்குவதால்இரத்தக் கொதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

6) தவறாமல் குடும்ப டாக்டரிடம் சென்று இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ளுதல்

நம் நாட்டில் சமீபகாலமாக 30 வயதுக்குக் குறைவான இளைஞர்களுக்குக் கூட இரத்தக் கொதிப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே 20 லிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் வருடத்துக்குக் இரண்டு முறையாவது பா¢சோதனை செய்து கொள்வது அவசியம்.40 வயதைக் கடந்தவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்வது அவசியம். குறிப்பாக, குடும்பரிதியாக உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக தங்களை மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்வது மிக மிக அவசியம்.

உயர் இரத்த அழுத்தம் (இரத்த கொதிப்பு) என்பது சமீபகாலமாக மக்களில் அநேகம் பேரை பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. பலருக்கு எந்த விளைவுகளும் ஏற்படுத்தாமல், எந்த அறிகுறியும் காட்டாமல், ஆபத்தான கட்டத்தை நோக்கி உள்ளே அது பூதாகாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான மனிதராகவே நாம் நடமாடிக் கொண்டிருக்க ஒரு நிலையில் திடீரென்று இரத்தக் கொதிப்பு தன் கோர முகத்தைக் காட்டும் போது, நாம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். இதன் வெளிப்படையான அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம் என்பதாலும், மெதுவாக எல்லா முக்கிய உறுப்பு மண்டலங்களையும் பாதிப்பதாலும் இதனை ஒரு அமைதிக் கொலையாளி என்று அழைத்தால் அது மிகையாகாது.



--

செவ்வாய், 16 ஜூன், 2026

எலுமிச்சை வேக வைத்த நீருக்குள் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள்.

எலுமிச்சை நமக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு பழமாகும்.

உலகம் முழுவதும் பிரபலமான ஒரு பானமாக எலுமிச்சை தேநீர் உள்ளது. இது ஒரு சுவையான புத்துணர்ச்சி பானமாகும், மேலும் நமது ஆரோக்கியத்திற்கும் இது நன்மை பயக்கிறது. கடந்த சில வருடங்களாக மக்கள் பரவலாக எலுமிச்சையை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

இப்போது எலுமிச்சையை மக்கள் பல்வேறு வழிகளில் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். பத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு வழிகளில் எலுமிச்சையை கொண்டு பானம் செய்ய முடியும், அவை ஒவ்வொன்றும் ஆரோக்கியமானதாகவும் சுவையானதாகவும் இருக்கும். அதில் வேக வைத்த எலுமிச்சை நீரும் ஒன்று. இந்த பானமானது நமக்கு என்ன வகையான நன்மைகளை செய்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

எலுமிச்சையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் ஃபோலேட் அமிலம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன ஒரு அற்புத பழமாகும்.

இது சமையலுக்கு மட்டுமின்றி சரும அழகு, ஆரோக்கிய பிரச்சினைகள் போன்ற பலவகை நன்மைகளை தருகின்றது.

எலுமிச்சையின் சாற்றில் மட்டும் சத்துக்கள் இருப்பதில்லை, அதன் தோலிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளன. எலுமிச்சையின் தோலில் உள்ள சத்துக்களைப் பெற, எலுமிச்சையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்நீரைக் குடிக்க வேண்டும்.

எலுமிச்சை வேக வைத்த நீர் பல நோய்களை எதிர்த்துப் போராடுகின்றது. அந்தவகையில் நாம் எலுமிச்சை வேக வைத்த நீரை குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து காண்போம்.

எப்போது, எப்படி குடிப்பது?

எலுமிச்சை நீரை தயாரிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அதில் பாதி எலுமிச்சையை வெட்டி போட்டு, சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்த பிறகு இறக்கி குளிர வைத்து, தேன் கலந்து குடிக்க வேண்டும்.

இந்த எலுமிச்சை நீரை காலையில் எழுந்ததும் காபி, டீ-க்கு பதிலாக குடிக்கலாம்.

தினமும் இந்த நேரத்தில் எலுமிச்சை வேக வைத்த நீரை குடிச்சு பாருங்க!

எலுமிச்சை வேக வைத்த நீரைக் குடிப்பதால் சருமத்தில் உள்ள பாக்டீயாக்களின் அளவு குறையும். இதன் விளைவாக சருமம் சுத்தமாக இருக்கும். குறிப்பாக எலுமிச்சை வேக வைத்த நீர் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக செயல்பட்டு, சருமத்தில் ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கிறது.

எலுமிச்சை வேக வைத்த நீரைக் குடிப்பது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. இது உயர் இரத்த அழுத்தத்தை சாதாரண நிலைக்கு கொண்டு வர உதவுகிறது.

எலுமிச்சை வேக வைத்த நீர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குறிப்பாக இது வைரஸ் தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது உடலை சுத்தப்படுத்தி, நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

எலுமிச்சை நீரில் தேன் கலந்து குடிப்பதன் மூலம், உடலில் உள்ள கொழுப்புக்கள் விரைவாக குறையத் தொடங்கும் மற்றும் உடலும் நீரேற்றத்துடன் இருக்கும்.

எலுமிச்சை வேக வைத்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், செரிமான மண்டலம் வலுவாகும்.

எலுமிச்சை வேக வைத்த நீரைக் குடிப்பது சிறுநீரக கற்களில் உள்ள கால்சியம் ஆக்சலேட்டின் விளைவைக் குறைக்கும்.



--

சிறுநீரக கல்பிரச்சினையால் அவதியா? அதைக் கரைக்க எளிய வழிகள்.

பொதுவாக சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது பெரும் வலியை தரக்கூடிய உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாகு...

Popular Posts