லேபிள்கள்

வெள்ளி, 13 மார்ச், 2026

பிராய்லர் கோழி முட்டை, நாட்டுக் கோழி முட்டை. எது நல்லது?

நம் தினசரி நமது உடம்புக்கு மிகவும் நல்லது என்று பல உணவுகளை உட்கொண்டு வருகிறோம். ஆனால் அது உண்மையா என்பது நமது யாருக்கும் தெரியாது.

அந்த உணவுகளில் மிகவும் முக்கியமான ஆபத்தான உணவு எது என்றால் அது பிராய்லர் கோழி போடும் முட்டை தான்.

அந்த முட்டையில் இயற்கையாக பெண் கோழி ஆன் கோழி யிடம் சேர்ந்து போடுவது இல்லை. அதற்கு ஊசி போட்டு போட வைக்கிறார்கள். இதனால் மனிதர்கள் ஆகியாக நாம் அதனை உண்ணும் பொழுது நமக்கு பல நோய்கள் வருகிறது.

ஆனால் நாட்டு கோழி முட்டை என்பது அதில் முழுக்க முழுக்க சத்து மட்டுமே. .

உடம்புக்கு மிகவும் நல்லது.

நாட்டு கோழி முட்டை பயன்கள்

உடல் வலிமை:

உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்ள நினைப்பவர்கள், விளையாட்டு வீரர்கள், உடலுழைப்பு அதிகம் கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகிய அனைவருக்குமே உடலில் மிகுந்த பலம் தேவைப்படுகிறது. தினமும் இரண்டு நாட்டு கோழி முட்டைகள் அல்லது குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு நாட்டு கோழி முட்டையாவது சாப்பிட்டு வருபவர்களுக்கு உடல் மிகுந்த பலம் பெரும். நீண்ட நேரம் உழைக்கும் சக்தியையும் கொடுக்கும்.

கண்கள்:

கண்களில் கண்பார்வை குறைபாடு, கண்புரை, கண் அழுத்தம் போன்ற நோய்கள் உடலில் புரத சத்தின் குறைபாடு, ஏற்ற தாழ்வுகளாலேயே ஏற்படுகிறது. நாட்டு கோழி முட்டையில் புரதச்சத்து அதிகமுள்ளதால் அதை தினமும் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு புரத சத்து குறைபாடு நீங்கி கண்கள் சம்பந்தமான அத்தனை குறைபாடுகளும் ஏற்படாமல் காக்கிறது.

எலும்புகள்:

உடலின் அஸ்திவாரமாக இருப்பதே எலும்புகள் தான். அந்த எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையானதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். நாட்டு கோழி முட்டையில் எலும்புகளை வலிமையாகும் கால்சியம் சத்து அதிகமுள்ளது. இந்த முட்டையை சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் உறுதியாகும். எலும்புகள் உடைந்து வைத்தியம் மேற்கொண்டு வருபவர்கள் நாட்டு முட்டையை சாப்பிட்டு வந்தால் உடைந்த எலும்புகள் சீக்கிரத்திலேயே கூடும்.

நோய் கால உணவு:

பல வகையான நோய்கள், விபத்துகள் போன்றவற்றில் உடல் நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஓய்வில் இருப்பவர்களுக்கு நாட்டு கோழி முட்டை சிறந்த நோய் கால உணவாக இருக்கிறது. சூடான பசும்பாலில் நாட்டு கோழி முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு கலக்கி அக்காலத்தில் நீண்ட நாட்களாக நோய் பாதிப்பில் இருந்தவர்கள் உடல் நலம் தேறவும், உடலில் பலம் ஏற்படவும் நோயாளிகளுக்கு மருத்துவ உணவாக தரப்பட்டது

கொலஸ்ட்ரால்:

உடலின் தேவைக்கு ஏற்ப கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பின் அளவு உடலில் சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். நாட்டு கோழி முட்டையில் கொழுப்பு சத்து அதிகம் இருந்தாலும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தாது. எனவே உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் நாட்டு முட்டையை உடலில் கொலஸ்ட்ரால் அளவு சரியான அளவில் இருக்க விரும்புவார்கள் தாராளமாக சாப்பிடலாம்.

ஆண்மைகுறைபாடுகள்:

நரம்பு தளர்ச்சி பாதிப்பு கொண்டவர்களுக்கு உடலின் பெரும்பாலான நரம்புகள் தளர்ந்து விடுவதால் அவர்களால் உடலுறவு கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது . நாட்டு கோழி முட்டை ஆண்களின் தளர்ந்து போயிருக்கும் நரம்புகளை முருகேற்றி நரம்பு தளர்ச்சியை போக்கும். உடலுறவு சார்ந்த பிரச்சனைகளை போக்கும். மலட்டு தன்மையையும் நீக்கி ஆரோக்கியமான குழந்தை பெற உதவும்.

தலைமுடி, நகம்:

உடலில் தலைமுடி மற்றும் நகங்கள் உணவில் இருந்து பெறப்படும் புரதத்தில் மெலனின் எனும் புரத பொருளை அதிகம் பயன்படுத்தியே வளருகிறது. நாட்டு கோழி முட்டையில் மெலனின் புரத சத்து அதிகம் உள்ளது. அடிக்கடி நாட்டு முட்டை சாப்பிட்டு வருபவர்களுக்கு தலைமுடி மற்றும் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும். தலைமுடி உதிர்வு, நகங்கள் உடைவது போன்ற புரத சத்து குறைப்பாட்டால் ஏற்படும் பிரச்சனை நீங்கும்.

கர்ப்பிணிபெண்கள்:

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். நாட்டு கோழி முட்டை கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் அனைத்து வகையான சத்துக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. இம்முட்டையில் இருக்கும் புரதம், கால்சியம் போன்ற சத்துகள் கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்கள் கருவில் வளரும் குழந்தைகளுக்கும் தேவையான ஊட்டங்களை அளிக்கிறது.

புற்றுநோய்:

இயற்கையான உணவுகள் மற்றும் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ள பயிர்களை சாப்பிடும் நாட்டு கோழி இடும் முட்டைகளில் பல விதமான நோய்களை எதிர்த்து செயல் புரியும் திறன் அதிகம் உள்ளது. நாட்டு கோழி முட்டை தொடர்ந்து சாப்பிட்டு வரும் நபர்களுக்கு எந்த வகையான புற்று நோய்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.



--

திங்கள், 9 மார்ச், 2026

மாம்பழங்களைதண்ணீரில் ஊறவைப்பது ஏன்?

மாம்பழங்களை உட்கொள்வதற்கு முன்பு தண்ணீரில் கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதை விட தண்ணீரில் அரை மணி நேரமாவது மாம்பழங்களை ஊற வைத்துவிட்டு பின்பு கழுவி உண்பதே சிறந்தது என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

பெண்கள் மாம்பழங்களை உட்கொள்வது முகப்பரு போன்ற சில தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இவற்றை தவிர்க்க மாம்பழங்களை தண்ணீரில் ஊறவைத்து உட்கொள்வதுதான் சரியானது. இந்த நடைமுறையின்போது மாம்பழங்களின் தோல் பகுதிகளில் படிந்திருக்கும் அழுக்குகள், ரசாயனங்கள் அகற்றப்படுவதை தவிர அறிவியல் ரீதியாக வேறு சில நன்மைகளும் கிடைக்கின்றன.

மாம்பழங்கள் இயற்கையாகவே உடலின் வெப்ப நிலையை உயர்த்தும் தன்மை கொண்டது. உடலில் வெப்பத்தை உருவாக்குவதற்கு வித்திடும் தெர்மோஜெனீசிஸ் உற்பத்திக்கு மாம்பழங்கள் வழிவகுக்கும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, சாப்பிடுவதற்கு முன்பு மாம்பழத்தை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைப்பது தெர்மோஜெனீசிஸ் வீரியத்தை குறைக்க உதவும்.

மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைக்கும்போது அவற்றின் ரசாயனங்களின் வீரியம் குறைந்துவிடும். மேலும் மாம்பழத்தின் தண்டு பகுதியில் வெளிப்படும் பாலின் தன்மையையும் கட்டுப்படுத்திவிடும். தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும் ஒருவகை ரசாயன கலவையான பைட்டோ கெமிக்கல்கள் மாம்பழங்களில் வலுவாக அமைந்திருக்கும். 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் அவற்றின் செறிவு அளவை குறைக்கலாம். மேலும் அதிகப்படியான கொழுப்பையும் நீக்கிவிடலாம். மாம்பழங்களை தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் அதிகப்படியான அமிலத்தை அகற்றிவிட முடியும்.



--

வெள்ளி, 6 மார்ச், 2026

காய்கறிகள் மற்றும் பழங்களை எப்படி சேகரித்தால் நீண்ட நாட்கள் பிரெஷ்ஷாக இருக்கும் என்று பார்ப்போம்.

நம் தினமும் பயன்படுத்தும் முக்கிய பொருட்களுள் காய்கறி மற்றும் பழங்கள் மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் அது நம்முடைய ஆரோக்கியம் மற்றும் உடல் நலத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதனால் காய்கறி பழத்தை பார்த்து பார்த்து வாங்கினால் மட்டும் போதாது, அதை நன்றாக பராமரிக்க வேண்டும். அப்பொழுது தான் நமக்கு கிடைக்க வேண்டிய ஆரோக்கியம் கிடைக்கும் மற்றும் ருசியாகவும் இருக்கும். இப்பொழுது எல்லா வீட்டிலையும் பிரிட்ஜ் இருப்பதால் மக்கள் சுகாதாரத்தை கண்டுகொள்ளாமல் பழங்களையும் காய்கறிகளையும் அப்படி அப்படியே வைத்து விடுகின்றனர்.

அது நம்முடைய ஆரோகியத்திற்கு எவ்ளோ தீங்கானது என்று இன்னும் தெரியவில்லை. வாருங்கள் காய்கறி மற்றும் பழங்களை எப்படி பராமரித்தால் நீண்ட நாட்கள் பிரெஷ்ஷாக இருக்கும் என்று காண்போம்.

வினிகர் பயன்படுத்தலாம்

விவசாயம் செய்து வரும் காய்கறிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு நீங்கள் வாங்கினால் அதில் பூஞ்சை (அதாவது Fungus) உருவாகும் வாய்ப்புகள் உள்ளது. அதனை சுத்தம் செய்ய, மூன்று பங்கு தண்ணீரில் ஒரு பங்கு வினிகர் ஊற்றி பழம் மற்றும் அகிகாரிகளை நன்கு கழுவவும்.

பிறகு அதை வெயில் அல்லது துணியின் மீது வைத்து உலர வைக்க வேண்டும். இது ஒரே கல்லுல மூன்று மாங்கா, எப்படி என்றால் நீங்கள் இவ்வாறு செய்வதன் மூலம் காய்கறிகளின் மீள் உள்ள கிருமிகள் இறந்து விடும், அதனை விளையவைக்க பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள் அகன்று விடும், பூஞ்சை படருவதை தடுக்கலாம்.

இது உங்களுக்கு பழக்கம் இல்லையென்றால், வினிகரில் முக்கிய பிறகு சுத்தமான தண்ணீரில் அந்த பலன்களை அலசி அதனை துணியால் துடைத்தும் பராமரிக்கலாம்.

கீரையை இப்படி பராமரிகலாம்

காய்கறிகளை விட வேகமாக அழிகிப்போவது இந்த கீரை வகைகள். ஏனெனில் அவற்றை மண்ணில் இருந்து எடுத்து இரண்டு மூன்று நாட்களில் உபயோகப்படுத்தாமல் விட்டுவிட்டால், அவை காற்று பட பட அழிகிப்போய்விடும். ஆனால் புதினா, கொத்தமல்லி, கீரை வகைகளின் தண்டு பகுதியை தண்ணீரில் முக்கி வையுங்கள். அப்புறம் பாருங்க ஆச்சர்யத்தை, அது வாடியே போகாது. உங்களுக்கு பாதுகாப்பாகவும் வைக்கணும், பாக்குறதுக்கு அழகாவும் இருக்கணும்னா, தாராளமா கண்ணாடி பாட்டில தண்ணீர் நிரப்பி அதில் கீரைகளை பராமரியுங்கள்.

ஒன்றாக வைக்காதீர்கள்

காய்கறிகள் நீண்ட நாட்களுக்கு பிறகு தான் பழுக்கும். ஆனால் பழங்கள் சீக்கிரம் பழுத்துவிடும். எனவே காய்கறிகளையும் பழங்களையும் ஒன்றாக வைக்காதீர்கள். பழங்களில் எத்திலீன் கேஸ் இருப்பதால் அவற்றை மற்றவர்களுடன் வைக்கும் பொழுது சீக்கிரம் கெட்டுப்போக வைக்கும். வாழைப்பழத்தில் எத்திலீன் கேஸ் அதிகமாக இருப்பதால் அதை மற்ற பழங்கள் அல்லது காய்கறிகளுடன் வைக்கும் பொழுது அவற்றை விரைவாக பழுக்க வைக்கும், கெட்டும் போய்விடும். இருப்பினும் இதில் ஒரு சில நல்ல விசியுங்கள் இருக்கிறது, என்னவென்றால் ஆப்பிளையும் உருளைக்கிழங்கையும் ஒன்றாக வைத்தால் உருளைக்கிழங்கு நீண்ட நாட்கள் பிரெஷ்ஷாக இருக்கும்.

வெப்பத்திற்கு நோ

காய்கறி மற்றும் பழங்களை வெப்பம் அதிகமாக இருக்கும் இடத்தில வைத்திருந்தால் சீக்கிரம் பழுக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே, அவற்றை அடுப்படியில், சமையல் அறையில் வைப்பதை தடுக்கவும்.

பிரிட்ஜ் சுத்தமாக வைக்கவும்

நாம் பிரிட்ஜ் அதிகமாக பயன்படுத்துகிறோம். அவற்றில் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், மாவு என்று அனைத்தையும் அதில் வைக்கிறோம். அவற்றை எடுக்கும் பொழுது கீழே சிந்தினால், நாம் அவசர வேளையில் இருக்கும் பொழுது அதை சுத்தம் செய்ய முடியாது. அதை அப்படியே விட்டு விடுவோம். அது ஒருமாறி நீண்ட நாட்களாக துர்நாற்றம் வீசும். எனவே, மாதம் ஒரு முறையாவது உங்களின் பிரிட்ஜை சுத்தம் செய்யுங்கள்.

இருபின்னும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சிறு துண்டுகளாக வெட்டி, அதை காற்று போக முடியாத அளவுக்கு இறுக்கமாக கட்டி வைக்கவும். அல்லது ஏர் டைட் கண்டைனர்களில் வைக்கவும். இதன் மூலம் பழங்கள் மற்றும் காய்கறிகள் கெடாது.



--

செவ்வாய், 3 மார்ச், 2026

ஆரா என்றால் என்ன?

 இந்த பிரபஞ்சத்தில் எத்தனையோ அதிசயங்கள் இன்னும் மறைந்து தான் இருக்கின்றன. ரகசியங்களை அறிவதில் மனிதனுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும் காரணத்தால் தான் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பல ரகசியங்ளின் உண்மைகளை அறிந்து கொள்கிறான். இந்த ரகசியத்தின் தேடல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இவ்வாறு மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று தான் 'ஆரா'. ஆரா என்றால் என்ன? அதை நம்மால் உணர முடியுமா? இந்த கேள்விகளுக்கான விடைதான் இன்று பார்க்கப் போகின்றோம்.   

அனைத்து ஜீவராசிகளிடமும் உள்ள ஒன்றுதான் ஆரா. இதில் மனிதர்களின் அராவைப் பற்றி மட்டும் தான் இங்கு காணப் போகின்றோம். இது நம் உடலை சுற்றி ஒளி கவசம் போல் தோன்றும். மனிதனின் ஆற்றலில் இருந்து வெளிப்படும் ஒன்றுதான் 'ஆரா'. இதனை நாம் கண்களால் பார்க்கவும் முடியும். உணரவும் முடியும். விஞ்ஞானத்தில் இது நேர்த்திசை, எதிர்த்திசை இரண்டையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஞான மார்க்கத்தில் உள்ளவர்கள் அஷ்ட சக்கரத்தின் வெளிப்பாடு என்றும், சூட்சம சக்தியின் வெளிப்பாடு என்றும் கூறுகின்றனர். இந்த சக்தியானது நம் உடம்பிற்கு உள்ளேயும், வெளியேயும் ஊடுருவி செல்லும் தன்மையை கொண்டது. நம் மூளையில் ஏற்படும் மாற்றங்களை வைத்து நம்மைச் சுற்றியுள்ள ஆராவின் தன்மையும் மாறிவிடுமாம். நம்முடைய உடம்பு முழுவதும் நம் உள் உறுப்புகளின் துணைகொண்டு இந்த ஆரா சக்தி செயல்படுவதாக நம் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆரா சக்திக்கு பல பெயர்கள் உண்டு.

மின்காந்த சக்தி, மின்சார சக்தி என்று சித்தர்களும், ஞானிகளும் இதனை குறிப்பிடுகின்றனர். பொதுவாக சித்தர்களால் ஆரா சக்தியை உணரவும் முடியும், காணவும் முடியும். இதற்கு அவர்களது தவவலிமையே காரணம். சித்தர்களின் ஆரா சக்தியானது பல ஆயிரம் தூரம் பயணிக்க கூடிய சக்தியாக இருக்கின்றது. இதனால் தான் சித்தர்கள் முன்கூட்டியே பல விஷயங்களை அறிந்து கொள்ளும் சக்தியை பெற்றுள்ளனர். சித்தர்கள் ஜீவசமாதி அடைய ஆரா சக்தி மிகவும் உதவியாக இருந்தது. அவர்கள் ஜீவசமாதி அடைந்த பின்பும் அவர்களது நல்ல ஆரா சக்தி இன்னும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஞான மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு இது தெரியும்.  சித்தர்களுக்கு மட்டும் அல்லாமல், கலியுகம்மான இந்த காலத்திலும் கூட ஆரா சக்தியை நம்மால் உணர முடியும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரா சக்தியானது நம் உடலைச் சுற்றி ஒரு முட்டை வடிவம் போல் தோற்றத்தை அளிக்கும்.  இது சாதாரண மனிதர்களுக்கு இரண்டு அல்லது மூன்று மீட்டர் வரை உருவாகும். இந்த ஆரா சக்தி பல நிறங்களை கொண்டுள்ளது.

நம் குணத்தை வைத்து இந்த ஆரா சக்தியின் நிறம் மாறுபடும். பொதுவாக ஆரா சக்தி நிறமானது சிவப்பு, பச்சை, மஞ்சள், ஊதா, கருப்பு மற்றும் வெள்ளையாக இருக்கும். சில பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் நம்மால் ஆரா ஒளியைக் காண முடியும். உணரவும் முடியும். பயிற்சிகள் இல்லாமல் பார்ப்பதற்கு சில பொருட்களும் உண்டு.

"ஆரா ஸ்கேனர்" என்ற கருவியின் மூலம் நம் உடலில் ஆரா சக்தி எந்த அளவிற்கு உள்ளது என்பதை கண்டறிய முடியும். இதை இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு நம் மனதை ஆரா சக்தியில் ஈடுபடுத்தும் போது எந்த அளவிற்கு இது விரிவடைகின்றதோ அந்த அளவிற்கு நம் உடம்பில் ஆரா சக்தி உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். Aura மனிதனின் உடம்பில் ஆரா சக்தியானது அவனது கண்கள், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் இருந்து வெளியாகின்றது.

இந்த ஆராய்ச்சியை கொண்டு நம்மால் நோய்களை குணமாக்க முடியும். ஆரா சக்தி குறையும்போது பலவிதமான நோய்கள் உண்டாகும். பயிற்சியின் மூலம் சக்தியை நாம் அதிகப்படுத்துவதன் மூலம் கேன்சர் போன்ற நோய்கள் கூட குணப்படும் என்று ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.

இந்த உலகத்தில் உள்ள எந்த சக்திகளாக ஆனாலும் சரி, அதனை அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காக மட்டும் பயன்படுத்துவது நல்லது. நமக்கு தெரிந்த சக்திகளை தவறான செயல்களில் ஈடுபடுத்த கூடாது.



--

சனி, 28 பிப்ரவரி, 2026

சிறுநீரகக் கற்கள் தடுக்க... தவிர்க்க!

எலுமிச்சையில், பொட்டாசியம் சிட்ரேட் நிறைந்துள்ளது. எலுமிச்சையை, தொடர்ந்து ஜூஸ் போன்ற ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால், சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்புக் குறையும்.

ரெட் மீட் எனப்படும் ஆடு, மாட்டிறைச்சி சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

சீஸ், பனீர் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து அதிக அளவு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கேரட், பாகற்காய் போன்றவற்றைச் சாப்பிடுவது, சிறுநீரகக் கற்களைத் தடுக்கும்

உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

தினமும் சராசரியாக இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும்.



--

வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

பிரியாணி இலையில்உள்ள மருத்துவக்குணம்!!

பிரியாணி இலையை நம் மக்கள் அதிகம் பயன்படுத்துவது வாசனைப் பொருளாகத் தான். ஆனால் மருத்துவக்குணங்கள் இதில் அடங்கி உள்ளது தெரியுங்களா.

நாம் அனைவருமே பொதுவாக பிரியாணி இலையை சமையலுக்காகத்தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்த பிரியாணி இலை வீட்டில் உள்ள காற்றை சுத்தப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாத உண்மை ஆகும்.

தினமும் நம் வீட்டில் பிரியாணி இலையை எரித்தால் அதில் உள்ள ஆண்டி ஆக்சிடண்டுகள் நமக்கு பல நன்மைகளை தருகிறது .

முதலில் பாத்திரம் ஒன்றில் காய்ந்த பிரியாணி 2 அல்லது 3 இலைகளை எடுத்து கொள்ளவும். பிறகு படுக்கையறைக்கு சென்று ஜன்னல் மற்றும் கதவுகளை மூடிவிட்டு, பிரியாணி இலையில் நெருப்பை பற்றிவிட்டு கதவை மூடிவிட்டு வெளியே வர வேண்டும்.

அதனை அடுத்து 10 நிமிடத்திற்கு பிறகு அறைக்குள் சென்று அந்த புகையை சுவாசிக்க வேண்டும். தொடர்ந்து 5 முதல் 7 முறை அறைக்குள் சென்று அந்த புகையை சுவாசிக்க வேண்டும்.

இந்த முறையில் தினமும் செய்து வர பல்வேறு நன்மைகள் உண்டாகும். என்ன நன்மைகள் என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.

பிரியாணி இலையை எரிப்பதால் ஏற்படும் புகையை சுவாசித்தால் மூளையின் நரம்புகளின் செயல்பாட்டை சீராக்கும். மூக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் ஏற்படும் வீக்கத்தை சரிசெய்யும். அதேப்போல் வீட்டினுள் உள்ள காற்றை சுத்தப்படுத்தும். இவ்வாறு இந்த முறையில் தொடர்ந்து செய்து வந்தால் நன்மைகள் உண்டாகும்.



--

வியாழன், 26 பிப்ரவரி, 2026

சிறுநீரகக் கற்கள் உருவாக 8 காரணங்கள்

 

1. போதுமான அளவு தண்ணீர் அருந்தாமை. குறிப்பாக, கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் நீர் இழப்பு.

2. உடலில் கால்சியம் அளவு அதிகமாக இருப்பது. உணவு, மாத்திரைகள் மூலம் அதிகப்படியான கால்சியம் எடுத்துக்கொள்வது.

3. உடலில் கால்சியம் அளவுகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பாராதைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் இருப்பது.

4. உடல் உழைப்பே இல்லாமல் இருப்பது. குறிப்பாக, படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள்.

5. கர்ப்பக் காலங்களில் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அதிகமான தாதுஉப்புகள், உடலில் தேங்குதல்.

6. உடல்பருமனாக இருப்பவர்களுக்கு, உடலில் சீரம் மற்றும் ஆக்ஸலேட் அளவுகள் அதிகமாக இருப்பது.

7. சிறுநீரகப் பாதையில் ஏற்படும் அடைப்புகள்.

8. வயதான ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி வீங்குதல்



--



திங்கள், 23 பிப்ரவரி, 2026

தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

 

சாதாரணமாக வெயில் காலத்தில் உணவு செரிமானமாவதில் சிக்கலிருக்கும். தயிர்சாதம் சாப்பிட்டால் அது மந்தத்தை ஏற்படுத்தி, செரிமானக் கோளாறை இன்னும் அதிகப்படுத்திவிடும்.

அதனால் உடலில் சூடு அதிகமாகிவிடும். வெயில் காலத்தில் உடல் குளிர்ச்சிக்குத் தயிரைவிட மோரைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

தயிரினால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 'நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்கள், முழு தானியங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து தயிரை எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது தனியாக எடுத்தாலும் சரி இதயம் ஆரோக்கியமாக இயங்கும் என ஆய்வில் தெரியவந்தது.

தயிர் என்பது புளிக்கவைக்கப்பட்ட, ஆரோக்கியமான மற்றும் புரோபயாடிக் கொண்ட ஒரு பாலில் இருந்து பிரிக்கப்படும் ஒரு உணவு பொருள் ஆகும்.

தயிர் வடை, தயிர் சாதம், தயிர் பச்சடி, சாஸ் இன்னும் பல இனிப்பு, காரம் மற்றும் சைவம், அசைவம் போன்ற பல உணவு வகைகளில் இதை முக்கிய பொருளாக பயன்படுத்தி அல்லது சேர்த்து பயன்படுத்தப் படுகிறது.

தயிர் நன்மைகள் :

தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தயிர் நன்மைகள்

செரிமானத்தை மேம்படுத்துகிறது :

தயிர் புரோபயாடிக் நுண்ணுயிரிகள் இருப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது வயிறு உப்புசத்தை குறைக்கிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது :

தயிர் சாப்பிடுவது எடை இழப்புக்கு உதவுகிறது. இது ஸ்டீராய்டு ஹார்மோன்கள் அல்லது கார்டிசோலின் வளர்ச்சியைத் குறைப்பதன் மூலம் உடல் பருமன் ஏற்படும் வாய்ப்புகளை கட்டுப்படுத்துகிறது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது :

தயிரில் உள்ள மெக்னீசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

ஆயுர்வேத நிபுணர் டாக்டர் தன்வந்திரி தியாகியின் கூற்றுப்படி, தயிர் மற்றும் சர்க்கரை கலந்து சாப்பிடுவது மூளைக்கு அளிக்கப்படும் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது. மேலும், இது ஆற்றலை மேம்படுத்தி நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

மன அழுத்தத்தை குறைக்கிறது :

தயிரில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், நல்ல கொழுப்புகள் மற்றும் புரோபயாடிக்குகள் மன அழுத்தத்தை சமாளிப்பதில் அல்லது குறைப்பதில் உதவுகிறது.

நுண்ணுயிர் சமநிலை :

தயிரில் ஆக்ஸிஜனேற்றிகளுடன் புரோபயாடிக் நுண்ணுயிரிகளும் இருப்பதன் காரணமாக உடலில் நுண்ணுயிர் சமநிலையை மேம்படுத்துகிறது. மேம்படுத்தப்பட்ட நுண்ணுயிர் சமநிலை செரிமான ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.

தயிர் சாப்பிடுவதால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் :

தயிர் உட்கொள்வது சரும வரட்சியைத்தை தடுத்து ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் தோல் அரிப்பு குணப்படுத்தப் படுகிறது. தோல் ஆரோக்கித்திற்கு அவசிமான ஊட்டச்சத்தை உறுதி செய்கிறது. இதில் உள்ள துத்தநாகம், வைட்டமின் சி மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு நன்மை பயக்கிறது மற்றும் ஊட்டமளிக்கிறது.

எலும்பு, பற்கள் ஆரோக்கியம் :

தயிரில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால் தினமும் உணவில் சேர்த்து கொள்வது பற்களை பலப்படுத்து கிறது. எலும்புகளை வலிமையாக்கி கீல்வாதத்தைத் தடுக்க உதவுகிறது.

இதயத்திற்கு நல்லது :

தினமும் உணவில் தயிரை சேர்த்துக்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தையும் பராமரிப்பதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது :

தயிரில் உள்ள சத்துக்கள் மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கிரேக்க தயிர் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதாகவும், நீரிழிவு நோயாளிகளின் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

தயிர் பயன்கள் :

தயிர் என்பது ஒரு பல்துறை உணவாகும். இதை உணவு பொருட்களிலும், பானங்களிலும், சிற்றுண்டிகளிலும் மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

தயிரை சர்க்கரை அல்லது உப்புடன் சேர்ந்தோ அல்லது தனியாகவோ உட்கொள்ளலாம்.

பல்வேறு வகையான இனிப்பு உணவுகளை தயாரிக்க தயிரை பயன்படுத்தப் படுகிறது.

தயிரில் தாதுச் சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இது பல்வேறு அழகு சாதனப் பொருட்களின் முக்கிய அங்கமாக பயன்படுத்தப் படுகிறது.


--

வியாழன், 19 பிப்ரவரி, 2026

வாட்டி வதைக்கும்தலைவலியைப் போக்க சில எளிய வழி முறைகள்.


தலைப் பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் சீரற்று இருப்பதன் காரணமாகவே, தலைவலி ஏற்படுகிறது.

நமது அன்றாட வேலைகளாலும், மன அழுத்தம் காரணமாகவும் நமக்கு உடல் வலி மற்றும் தலைவலி ஏற்படலாம்.

இது நம்மை மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளிவிடும். சிலருக்கு டென்ஷன் ஆனாலே தலைவலி வந்து விடும்...

இதனை போக்க கண்ட கண்ட மருந்துகளை வாங்கி போட வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சில இயற்கை வழிகளே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

கிராம்பை நன்கு அரைத்து பசை போல் மாற்றி அதை லேசாக சூடேற்றி பின் வலியுள்ள நெற்றியில் தடவினால் தலைவலி உடனே குணமாகும். கல் உப்பிற்கு நீரை உறிஞ்சிக்கொள்ளும் திறன் உள்ளது. மேலும் சிறிது கிராம்பு சிறிது கல் உப்பை பால் கலந்து அரைத்து சாப்பிட்டால் தலைவலி குணமாகும்.

30 கிராம் சீரகப் பொடியை 1 லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து பின் அதை வாரத்திற்கு இருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குணமாகும்.

குங்குமப்பூவை சிறிது பால் சேர்த்து பசையாக்கி நெற்றியில் தடவினால் தலைவலி மறையும். வெற்றிலையை இதமாக சூடேற்றி நெற்றியில் சிறிது நேரம் வைத்தால் தலைவலி குணமாகும்

பட்டையினை பொடியாக்கி நீர் சேர்த்து பசையாக்கி கொள்ள வேண்டும், பின்பு நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.

1-2 இஞ்சியை எடுத்து கொதிக்க வைத்து அந்த நீரில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட தலைவலியை வராமல் தடுக்கலாம்.

சிறிது எலுமிச்சை சாற்றை ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் கலந்து அருந்தினால் தலைவலி குணமாகும், இந்த சாறு வாயு உற்பத்தியை குறைத்து தலைவலியை சரி செய்கிறது.

யூகலிப்டஸ் தைலம் தலைவலிக்கு நல்ல மருந்து ஆகும், இதனைக் கொண்டு மாசாஜ் செய்தால் தலைவலிக்கு உடனே நல்ல தீர்வு கிடைக்கும்.

தலைவலி இருக்கும் போது கொஞ்சம் சூடான பால் குடித்தால் தலைவலி விரைவாக குறையும். சாப்பாட்டில் கொஞ்சம் நெய் சேர்த்து உண்டாலும் தலைவலி குறையும்.

சந்தனத்தை சிறிது தண்ணீர் விட்டு மைபோல மென்மையாக அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி சரியாகும்.


--

பிராய்லர் கோழி முட்டை, நாட்டுக் கோழி முட்டை. எது நல்லது?

நம் தினசரி நமது உடம்புக்கு மிகவும் நல்லது என்று பல உணவுகளை உட்கொண்டு வருகிறோம். ஆனால் அது உண்மையா என்பது நமது யாருக்கும் தெரியாது. ...

Popular Posts