லேபிள்கள்

ஞாயிறு, 29 ஜூன், 2025

வஜ்ராசனத்தின் செயல் முறையும்நன்மைகளும்.


செயல்முறை:

யோகா விரிப்பில் முழங்கால்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து,இரு குதி கால்களையும் ஒன்று சேர்த்து பிட்டங்களை குதிகால்கள் மீது வைத்து அமரவேண்டும்.[ படத்தை கவனிக்கவும்]

கைகள் முழங்கால்கள் மீது வைத்திருக்க வேண்டும்.

ஆசன நிலையில் முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்

எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் ஆசன நிலையில் ஆழ்ந்த சுவாசத்தை எடுக்க வேண்டும்

குதிகால்கள் மீது அமர முடியாதவர்கள்,குதிகால்களின் பக்கவாட்டில் அமரலாம் .

வஜ்ராசனத்தின் நன்மைகள்:

செரிமானத்தை மேம்படுத்துகிறது. மற்றும் வழக்கமான பயிற்சி நடைமுறையில், இது மலச்சிக்கலை நீக்குகிறது.

வயிற்று புண்கள் மற்றும் அமிலத்தன்மையைத் தடுக்கிறது.

முதுகை பலப்படுத்துகிறது மற்றும் முதுகு பிரச்சினைகள் மற்றும் சியாட்டிகா பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.

இடுப்பு தசைகளையும் பலப்படுத்துகிறது. பிரசவ வலியை குறைக்க உதவுகிறது மற்றும் மாதவிடாய் பிடிப்பைக் குறைக்கிறது.

தியான நிலைக்கு மிகச் சிறந்த ஆசனங்களில் இதுவும் ஒன்றாகும்.

வஜ்ராசனம் நிலையான, உறுதியான முதுகெலும்பை தரும் .

இந்த ஆசன நிலையில்உட்கார்ந்துகொள்வது மிகவும் சவாலானது.

வஜ்ஜிராசனத்தில் தேர்ச்சி பெற்று, தியான நிலையில் நுழைய பயிற்சியாளர் கால்களில் உள்ள வலியையும் மனதில், அமைதியின்மையையும் வெல்ல வேண்டும்.

தங்களைத் தாங்களே பயிற்றுவிக்க வேண்டும், அதில் தங்கள் மனதை முதலீடு செய்ய தயாராக இருக்க வேண்டும்.

வஜ்ராசனம் கீழ் இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது.

கால்களில் உட்கார்ந்திருப்பது கால்களில் இரத்த ஓட்டத்தை குறைத்து செரிமான பகுதியில் அதிகரிக்கிறது, எனவே செரிமான அமைப்பின் செயல்திறனை அதிகரிக்கும்.



--

வியாழன், 26 ஜூன், 2025

காண்டாக்ட் லென்ஸ் யாரெல்லாம் அணியலாம்? கவனிக்க வேண்டியவை என்னென்ன?

``பார்வை என்பது கண்களின் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டது. ஆனால் அதைப் பெரிதாக நினைக்காமல் பலரும் பார்வையில் பிரச்னைகள் இருந்து, கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்பட்ட பிறகும் தோற்றத்தின் மீது கொண்ட அக்கறையால் கண்ணாடியைத் தவிர்க்கிறார்கள்.

40 ப்ளஸ்ஸில் உள்ள பலரையும் கவனித்துப் பாருங்கள். செல்போனிலோ, புத்தகத்திலோ உள்ள எழுத்துகளைப் படிக்கும்போது கண்களைச் சுருக்கியோ அல்லது அவற்றைத் தள்ளிவைத்துப் பிடித்தபடியோ வாசிப்பதைப் பார்க்கலாம். கண்ணாடி அணிவதைத் தவிர்ப்பது சாமர்த்தியமான முடிவல்ல, உங்களுக்கு நீங்களே சங்கடங்களை அதிகப்படுத்திக்கொள்கிற விஷயம்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்.

 சிறப்பு மருத்துவர் வசுமதி

கண்ணாடி அணிய வேண்டிய கட்டாயம் வந்தால் அதைத் தவிர்க்கக் கூடாது என்று வலியுறுத்துகிற டாக்டர், கண்ணாடிக்கு பதில் கான்டாக்ட் லென்ஸ் அணிவது சிறந்த முடிவாக இருக்கும் என்பதையும் சொல்கிறார். கான்டாக்ட் லென்ஸ் அணியும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களையும் அவர் விளக்குகிறார்.

``கண்களில் ஏதோ பிரச்னை காரணமாக கண்ணாடி போட வேண்டிய நிலை வரலாம். இப்போதெல்லாம் கண்ணாடிக்கு பதிலாக கான்டாக்ட் லென்ஸ் அணிவதையே பலரும் விரும்ப ஆரம்பித்து இருக்கிறார்கள். உங்களில் பலருக்கும் கான்டாக்ட் லென்ஸ் எப்படி இருக்கும் என்று தெரிந்திருக்கும். கருவிழியின் வடிவத்திலேயே ட்ரான்ஸ்பரன்ட்டாக இருக்கும் லென்ஸை அதற்கான பிரத்யேக திரவத்தை உபயோகித்து சுத்தப்படுத்திய பிறகு விரலால் கண்களுக்குள் சுலபமாகப் பொருத்திக் கொள்ளலாம்.

ஒரு காலத்தில் சினிமா நடிகர் நடிகைகளும், மாடல்களும் அழகுக்காக கான்டாக்ட் லென்ஸ் உபயோகித்து வந்தார்கள். இப்போது சாமானிய மக்களுக்கான பயன்பாடாக அது மாறி இருக்கிறது. முன்பெல்லாம் ஹார்டு லென்ஸாக வந்துகொண்டிருந்தது, பிறகு செமி சாஃப்ட் லென்ஸாக வந்தது. இப்போது சாஃப்ட் லென்ஸ் கிடைக்கிறது. கான்டாக்ட் லென்ஸில் யூனிஃபோக்கல் மற்றும் மல்டி ஃபோக்கல் என இரண்டு வகை உள்ளது. இதில் யூனிஃபோக்கல் வகை லென்ஸ் குறிப்பிட்ட ஒரு பார்வையை, அதாவது தூரத்துப் பார்வையை மட்டும்தான் சரி செய்யும். அதுவே மல்டி ஃபோக்கல் லென்ஸானது தூரப்பார்வை, கிட்டப்பார்வை, நடுப்பார்வை என எல்லாவற்றையுமே சரிசெய்யும். 40 வயதுக்கு மேலானவர்கள் இதைப் பயன் படுத்தலாம்.

கண்ணாடி அணிவதில் உள்ள சிரமங்கள் இதில் இருக்காது கண்ணாடி அணிவதால் தன் தோற்றம் மாறிப் போகுமோ என்ற கவலை இருப்பவர்கள் கான்டாக்ட் லென்ஸை தேர்வு செய்யலாம். கான்டாக்ட் லென்ஸ் உபயோகிக்கும்போது பார்வையின் தரமும் நன்றாக இருக்கும். சிலர் வெறும் அழகுக்காக மட்டும் கான்டாக்ட் லென்ஸ் உபயோகிப்பதுண்டு. அப்படி உபயோகிக்கும்போது அதைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

உதாரணத்துக்கு கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பதை மறந்துவிட்டு அப்படியே தூங்கி விட்டாலோ அல்லது லென்ஸ் போடுவதற்கு முன்பே கண்களுக்கு மஸ்காரா உள்ளிட்ட மேக்கப் சாதனங்களை உபயோகித்தாலோ அது கண்களில் இன்பெக்ஷனை ஏற்படுத்தலாம். கான்டாக்ட் லென்ஸில் புரதச்சத்து சேர்ந்து, இன்ஃபெக்ஷனாகி லென்ஸ் போட்டாலே கண்களில் எரிச்சல், கண்களைக் கசக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு ஏற்படலாம். லென்ஸை கழற்றிய பிறகும் கண்களில் அரிப்பும் எரிச்சலும் இருப்பதாக உணர்வார்கள். இதை Giant Papillary Conjuntivitis - GPC என்று சொல்வோம். எனவே கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் அதை முறையாக அதற்கான திரவம் கொண்டு சுத்தம் செய்துவிட்டு பயன்படுத்த வேண்டும். மிக முக்கியமாக லென்ஸ் அணிந்து கொண்டே தூங்கக்கூடாது. லென்ஸ் வைப்பதற்கென கொடுக்கப்படும் பெட்டிக்குள் அதை ஃப்ரெஷ்ஷான திரவத்தில் ஊறவைக்க வேண்டும்.

வெளியே செல்லும்போது லென்ஸை சுத்தப்படுத்தும் திரவத்தை எடுத்து வர மறந்து விட்டதால் சிலர் எச்சிலைத் தொட்டு சுத்தப்படுத்தி அப்படியே பயன்படுத்துவதை எல்லாம் பார்த்திருக்கிறேன். அதெல்லாம் மிகவும் தவறானது. கான்டாக்ட் லென்ஸ் என்பது கருவிழியின் மேல் பொருத்தப்படுவது. எனவே அதை முறையாகப் பராமரிக்காவிட்டால் இன்ஃபெக்ஷன் ஏற்படுத்துவதோடு மட்டுமன்றி பார்வையையே பறிக்கும் அளவுக்கு ஆபத்தில் முடியலாம். முறையாக பயன்படுத்துவோருக்கு கான்டாக்ட் லென்ஸ் மிகப்பெரிய வரப்பிரசாதம். சிலபேருக்கு 'ஆஸ்டிக்மேட்டிசம்' (Astigmatism) எனப்படும் சிலிண்டர் பவர் இருக்கும். அந்தப் பிரச்னைக்கெனவே பிரத்யேக கான்டாக்ட் லென்ஸ் இருக்கிறது. சாதாரண லென்ஸைவிட சற்றே விலை அதிகம் என்றாலும் இந்த லென்ஸ் மிகுந்த பலனைத் தரக்கூடியது.''



--

திங்கள், 23 ஜூன், 2025

எலுமிச்சை மீது வாகனம் ஏற்றுவது ஏன்? அதன் பின்னர் உள்ள அறிவியல் என்ன?

அதேபோன்று நாம் ஏதாவது ஒரு வண்டி எடுத்தால் அதன் டயர் கீழ் எலுமிச்சை பழத்தை வைத்து ஏற்றுவது வழக்கமான ஒன்று. ஆனால் அவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்று நமக்கு தெரியாத ஒன்றாகும். எலுமிச்சை பழத்தில் பல நற்குணங்கள் இருக்கிறது.

குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் கைகளில் எலுமிச்சைபழத்தை வைத்து கொண்டால் கையுறைகள் போட்டுக் கொண்டதற்கு இணையானது என்று கூறப்படுகிறது. மேலும் அது இயற்கை hand sanitizer ஆக விளங்குகிறது. ஏனென்றால் எலுமிச்சை பழத்தில் அவ்வளவு நன்மைகள் இருக்கிறது. அந்தக் காலத்தில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி உண்டு. இந்த மாடு மற்றும் குதிரை கல், மண், சேறு மேல் எல்லாம் நடந்து செல்கிறது.

அவ்வாறு நடக்கும்போது மாடு மற்றும் குதிரை கால் பாதத்தின் நடுவில் புண் ஏற்படும். அந்த புண் மேல் சேறு, சகதிகள் படும்போது புழு பூச்சிகள் அரிக்கும். அவ்வாறு மாடு, குதிரை காலில் பூச்சிகள் அரித்தால் வண்டி ஓடாது. இதனால் வண்டி நன்றாக ஓடவேண்டும் என்பதற்காக மாடு மற்றும் குதிரையை இந்த எலுமிச்சை பழத்தின் மேல் மிதிக்க வைப்பார்கள். அப்போது இந்த பழத்தில் உள்ள சிட்ரிக் அந்தப் புண்ணில் உள்ள பாக்டீரியாவை கொன்று விடும். நம் பெரியவர்கள் பொதுவாக வண்டியை எலுமிச்சை பழத்தின் மீது ஏற்று என்று கூறினார்கள். நாமும் அதே போன்று இன்று வரைக்கும் அவ்வாறு செய்து வருகிறோம்.



--

வியாழன், 19 ஜூன், 2025

தொண்டை வலியால் அவதிப் படுவோர் ஒரே நாளில் குணமாக சிகிச்சை.

சளி பிரச்சனை இருப்பவர்களுக்கு கூடவே தொண்டையில் அலர்ஜி, புண், எரிச்சல் போன்ற தொந்தரவுகள் வந்து பாடாய் படுத்தி விடும்.

இதற்கான மருந்துகள் நம் சமையலறையிலேயே உள்ளன. அது என்னென்ன? எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். உப்பு நீரில் வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் குணமாகும் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரில் அரை ஸ்பூன் உப்பைப் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். தண்ணீரை தொண்டை குழியில் படும்படி அங்கேயே நிறுத்தி வைத்து குறைந்த பட்சம் பத்து வினாடிகள் வரை கொப்பளிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை செய்து வந்தால் தொண்டை வலியில் இருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

தூதுவாளை:

இது தொண்டைவலிக்கு சிறந்த மருந்தாகும். வீட்டிலே வளர்க்க கூடிய ஒரு செடியாகும். இதனை நன்கு நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் தொண்டை வலிக்கு சிறந்த மருந்தாக இருக்கும். மேலும் தொண்டை கவ்வால் போன்ற பிரச்சனைகளும் இருக்காது.

சாதம் வடித்த நீர்:

நம் வீட்டில் சாதம் வடித்த பின் இருக்கும் நீரை கொண்டு தொண்டை வலிக்கு நிவாரணம் பெற முடியும்(throat pain home remedies in tamil). இதற்க்கு சாதம் வடித்த நீரில் சிறிதளவு பனகற்கண்டு சேர்த்து கொள்ள வேண்டும். ஒயின் இதனுடன் நெய் அல்லது எண்ணெய் கலந்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு தொண்டை வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

சின்ன வெங்காயம்:

இது நம்மில் பலருக்கு தெரிந்த ஒன்றாக தான் இருக்கும். சின்ன வெங்காயத்தை நன்றாக வதக்கி அதில் பனகற்கண்டை சேர்த்து ஸ்பீடா வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நமக்கு தொண்டை வலி இருக்காது.

சீமை ஓடு:

தொண்டை வலி வந்து விட்டால் நமக்கு தலை வலியும் சேர்ந்து வந்து விடுகிறது. இதற்க்கு காரணம் நம் தொண்டை பகுதியுடன் இணைந்துள்ள எலும்புகள் தான். இதற்க்கு சீமை ஓட்டினை சூடு நீரில் கலந்து தலையில் பற்று போட்டால் தல வலி சரியாகும்.

ஒற்றை தலைவலி:

நம்மில் பலருக்கு இந்த பிரச்சனை உண்டு. ஒரு பக்கம் மட்டும் தலையில் வலி ஏற்படும்(throat pain home remedies in tamil). இதற்க்கு சாம்ராணி,மஞ்சள்,மிளகு கலந்த கலவையை எடுத்து தலையில் பத்து போடா வேண்டும். இவ்வாறு செய்தால் இதில் இருந்து உடனடியாக தீர்வு காணலாம்.

பூவரசம் இலை:

தலை வலிக்கு இது ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கும். தொண்டை வலி வந்தால் நமக்கு தலை வாலியும் ஏற்படும்(throat pain home remedies in tamil). இதற்க்கு பூவரசம் மரத்தில் காம்புகளை எடுத்து நம்முடைய தலையின் ஓரத்தில் வைத்து வந்தால் நம்முடைய தலை வலி நீங்கும்.



--

திங்கள், 16 ஜூன், 2025

தண்ணீர் குடிக்கும்போது செய்யக் கூடாதவை.


நம் உடலுக்கு வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை எவ்வளவு தேவையோ, அதே அளவு தண்ணீரும் ஆரோக்கியமான உடலுக்கு முக்கியம்.

இது உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமின்றி உடலைச் சிறப்பாகச் செயல்பட வைக்கிறது. அதனால்தான் ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தண்ணீர் குடிக்கும் போது,   அதன் அளவு மட்டுமல்ல, அது எப்படி குடிக்கப்படுகிறது என்பதையும் அறிந்து கொள்வது அவசியம். நீங்கள் எழுந்து நின்று தண்ணீர் குடித்தால் அல்லது அடிக்கடி தண்ணீர் குடித்தால் இது உடலுக்கு தீங்கை ஏற்படுத்தலாம். தண்ணீர் அருந்தும்போது எந்தத் தீங்கும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பெரும்பாலான மக்கள் ஒரே நேரத்தில் அதிக தண்ணீர் குடிக்கிறார்கள். அதுமட்டுமின்றி, தாகம் எடுத்தால், ஒரே நேரத்தில் தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது சரியான அணுகுமுறை அல்ல. ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. ஆனால் நீங்கள் அதிகமாக தண்ணீர் குடித்தால், சோடியம் அளவு குறைவதால் உடலுக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது...

நீரின் வெப்பநிலையும் மிகவும் முக்கியம். அது சீராக இல்லாவிட்டால் வயிற்றுப் பகுதி பாதிப்புக்குள்ளாகும். அதனால்தான் குளிர்ந்த மற்றும் சூடான நீரைப் பருகக்கூடாது என்று கூறப்படுகிறது. அடிக்கடி தண்ணீர் குடித்தால்.. திடீரென ரத்தத்தில் உள்ள சோடியம், அதிகப்படியான திரவம் சமநிலையை சீர்குலைத்து, உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

நிற்கும் போது வயிற்றில் அதிக அழுத்தம் கொடுக்கிறது. நின்று தண்ணீர் அருந்தும்போது உணவுக்குழாய் வழியாக நீர் நேரடியாக இரைப்பையைச் சென்றடையும். இது செரிமான அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும்.

தண்ணீர் உங்கள் இரைப்பை சாறுகளை நீர்த்துப்போகச் செய்கிறது, உணவை ஜீரணிக்க கடினமாக்குகிறது. எனவே, உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பும், 30 நிமிடங்களுக்குப் பிறகும் எப்போதும் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.



--

வெள்ளி, 13 ஜூன், 2025

கண்களில் பாதிப்பு உள்ளது. கண்ணாடி அவசியம் அணிய வேண்டுமா? கண்கள் பத்திரம்.

கண்களில் ஏற்படும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கோணல் பார்வை மற்றும் வெள்ளெழுத்து ஆகிய பிரச்னைகளை பற்றி அடிக்கடி கேள்விப் படுகிறோம்.

பார்வை தொடர்பான இந்த பாதிப்புகளை ரீஃப்ராக்டிவ் எரர்ஸ் (refractive errors) என்கிறோம். நம் கண்களுக்கு கண்ணாடி பவர் என ஒன்று உண்டு. இந்த கண்ணாடி பவரில் மூன்று வகை உண்டு.

முதலில் மயோபியா (Nearsightedness அல்லது Myopia). அதாவது கிட்டப்பார்வை. மைனஸ் பவர் பாதிப்பான இதில், தூரத்தில் உள்ள காட்சிகள் சரியாகத் தெரியாது. அருகில் உள்ள காட்சிகள் நன்றாகத் தெரியும். இந்தப் பிரச்னை குழந்தைகளை அதிகம் பாதிப்பதைப் பார்க்கிறோம். இதைச் சரியாக கவனித்து சிகிச்சை அளிக்காவிட்டால் அந்தக் குழந்தையால் பள்ளிக்கூடத்தில் கரும்பலகையை சரியாகப் பார்க்க முடியாமல், பாடங்களை கவனிக்க முடியாமல் ஆசிரியர்களிடம் மக்கு என பெயர் வாங்கும். பார்வை தொடர்பான முகாம்கள் நடத்தும்போது ப்ளஸ் டூ படிக்கிற பிள்ளைகளுக்குக்கூட இந்தப் பிரச்னை இருப்பதை நிறையவே பார்க்கிறோம்.

அடுத்தது ஹைபர் மெட்ரோபியா எனப்படும் தூரப்பார்வை.(Hyperopia or Long-sightedness)

ப்ளஸ் பவர் பாதிப்பான இந்தப் பிரச்னையில் தூரத்துப் பார்வை, கிட்டப்பார்வை என இரண்டுமே கொஞ்சம் மங்கலாகவே இருக்கும். நம் கண்களில் அகாமடேஷன் (accomodation) என ஒரு சக்தி இருக்கும். அதைப் பயன்படுத்தி கண்ணானது சம்பந்தப்பட்ட நபருக்கு சக்தியைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் அந்த அகாமடேஷன் விட்டுப்போய் குழந்தையால் சரியாகப் பார்க்க முடியாமல் அதற்கு தலைவலி, கண்களைச் சுருக்கிப் பார்ப்பதால் ஏற்படும் அசௌகர்யம் என எல்லாம் வரும். இந்தப் பிரச்னையை குழந்தையின் எட்டு வயதுக்குள் சரி செய்யாவிட்டால் அது சோம்பேறிக் கண் பிரச்னையில் கொண்டுபோய் விடும். இதுபற்றி முந்தைய அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்திருக்கிறோம்.

இதுதவிர ஆஸ்டிக்மேட்டிசம் (Astigmatism) எனப்படும் சிதறல் பார்வை பாதிப்பும் சிலருக்கு வரலாம். சிலிண்டர் பவர் பிரச்னையான இதில் நேர்க்கோடுகள் எல்லாம் வளைந்ததுபோல தெரியும். இதையும் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை தராவிட்டால் தலைவலி, கண்களைக் குறுக்கிப் பார்ப்பதால் ஏற்படும் அசௌகர்யம் போன்றவை ஏற்படும்.

நாற்பது வயதுக்கு மேலான பலருக்கும் வெள்ளெழுத்து பாதிப்பு ஏற்படுவது ரொம்பவே சகஜம். பிரெஸ்பயோபியா (Presbyopia) எனும் இந்த பாதிப்பு வந்த பிறகும் நிறைய பேர் `நான் கண்ணாடியே போட மாட்டேன்' என பெருமையாகச் சொல்லிக் கொள்வதைப் பார்க்கிறோம். இது மிகவும் தவறானது. 40 வயதுக்கு மேல் அடிக்கடி கண் மருத்துவரை சந்தித்து கண்களில் பிரஷரோ, வேறு பிரச்னைகளோ இருக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற சிகிச்சைகளைப் பின்பற்ற வேண்டும். தவிர மருத்துவர் பரிந்துரைத்தால் கண்ணாடியை அவசியம் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கண்களுக்கு ஸ்ட்ரெயின் அதிகமாகும்.

ஓட்டப்பந்தயத்தில் ஒருவர் ஓடுகிறார் என வைத்துக்கொள்வோம் அவருக்கு மூட்டுவலி இருக்கிறது... ஆனாலும் அதைப் பொறுத்துக் கொண்டு தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார். இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால் பிற்காலத்தில் அந்த நபருக்கு மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீவிரமாகக்கூடும். அதே போன்றதுதான் கண்களும். பார்வை தொடர்பான பிரச்னைகளை அலட்சியம் செய்யாமல் சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அதிலும் குறிப்பாக கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் சரியான பவரில் கண்ணாடி பயன்படுத்திக் கொள்வது நல்லது.

கண்ணாடியில் நிறைய வகைகள் உள்ளன. ஆன்ட்டி ரெஃப்ளெக்டிவ் கோட்டிங் உள்ள கண்ணாடிகளை அணியும்போது வெளியில் போனால் கண்ணாடி கறுப்பாக மாறிவிடும். அதேபோல மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் உபயோகிக்கும் போது வரும் ப்ளூ கதிர்களை தடுக்கும் ப்ளூ பிளாக்கிங் லென்ஸ், குழந்தைகள் கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது உபயோகிக்க ஏதுவான பவர் இல்லாத கம்ப்யூட்டர் கண்ணாடிகள் என நிறைய வகைகள் உள்ளன.

அதேபோல கண்ணாடிக்கான ஃபிரேம்களிலும் நிறைய மாடல்கள் உள்ளன. சில நேரங்களில் பிறந்த குழந்தைக்குக் கூட கேட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்து கண்ணாடி அணிவிக்க வேண்டி வரலாம். பிறந்த குழந்தையால் கண்ணாடியை அணிந்திருக்க முடியாது என்பதால் அவர்களுக்கான கண்ணாடியில் பின்னால் பின்பக்கம் கயிறு வரும்படி பரிந்துரைப்போம். சற்றே வளர்ந்த குழந்தைகளுக்கு அணிவிக்கும்போது பாலிகார்பனேட் ஃபிரேம் பொருத்தமாக இருக்கும். விளையாடும்போது தவறுதலாக விழுந்தாலும் கண்ணாடி உடைந்து காயப்படுத்தாமல் இது தடுக்கும்.



--

திங்கள், 9 ஜூன், 2025

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

உயர் இரத்த அழுத்த நோயாளிகள் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

ஆனால் இரத்த அழுத்த நோயாளிகள் சில உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இல்லையெனில் அவர்களின் இதயத்தில் அழுத்தம் ஏற்பட்டு திடீர் மாரடைப்பு வரலாம். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எந்தெந்தப் பயிற்சிகளைச் செய்யக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

இந்த பயிற்சிகளை தவிர்க்கவும்

உடற்பயிற்சி செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இதற்கு சரியான வழியும் உள்ளது. உண்மையில், மிகக் குறுகிய காலத்தில் மிக வேகமாக பிபியை அதிகரிக்கும் பயிற்சிகளைச் செய்வது, உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு ஆபத்தானது. இந்த பயிற்சிகளில் எடை தூக்குதல், ஸ்பிரிண்டிங், ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங், ஸ்குவாஷ் போன்றவை அடங்கும்.

அதேபோல் இவற்றைத் தவிர வேறு ஏதேனும் உடற்பயிற்சிகளைச் செய்யும்போது உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தலைவலி, உடல் வலி, அதீத சோர்வு அல்லது வாந்தி போன்ற பிரச்சனைகள் மேற்கொண்டால் உடனே உடற்பயிற்சி செய்வதை நிறுத்தி மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த பயிற்சிகள் அனைத்தும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்

- நடைபயிற்சி

- ஜாகிங்

- ஸ்கிப்பிங் செய்வது

- ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி

- டான்ஸ்

உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு உடற்பயிற்சி செய்யும் போது இந்த விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்

* மெதுவான வேகத்தில் உடற்பயிற்சியை செய்யத் தொடங்குங்கள்.

* இரத்த அழுத்தம் அதிகரித்தால், படிப்படியாக உடற்பயிற்சியை நிறுத்துங்கள்.

* உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

* அதிக டென்ஷன் எடுக்காதீர்கள் மற்றும் கனமான உடற்பயிற்சிகளை செய்யாதீர்கள்.

* தேவையானதை விட அதிக நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.

6 விஷயங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்

* காபி: உயர் இரத்த அழுத்த நோயாளிகள் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். காபி மற்றும் சோடா போன்ற பானங்கள் தீங்கு விளைவிக்கும். நீங்களும் தேநீரைத் தவிர்த்தால் நல்லது.

* மசாலா: அதிக காரமான உணவுகள் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். உணவில் பயன்படுத்தப்படும் மசாலாக்கள் இரத்த அழுத்த பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.

* சர்க்கரை: உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் சர்க்கரை அல்லது இனிப்புப் பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். அதிக சர்க்கரை சாப்பிடுவது உடல் பருமனுக்கு வழிவகுக்கும், இது உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

* உப்பு: அதிகப்படியான உப்பு உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். உப்பு அதிகமாக உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

* ஊறுகாய்: எந்த உணவுப் பொருளையும் பாதுகாக்க உப்பு அவசியம். உணவு விரைவில் அழுகுவதை உப்பு தடுக்கிறது. உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு உப்பு சேர்த்து பாதுகாக்கப்பட்ட பொருட்களை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும்.

* பாக்கெட் உணவு: உயர் இரத்த அழுத்தம் நோயாளிகள் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. பேக்கேஜ் செய்யப்பட்ட ஸ்டாக்கில் சோடியம் அதிகமாக உள்ளது. மேலும் உயர் இரத்த அழுத்தத்திற்கு சோடியம் நல்லது இல்லை.



--

வெள்ளி, 6 ஜூன், 2025

வெயில் நாளில் வெளியே சாப்பிடுவோருக்கு வரும் வயிற்று பிரச்சனைகளுக்கு சில வழிகள்.

வயிற்றுவலி நம் மண்டையைப் பிராண்டும் மிக மோசமான வலிகளுள் ஒன்று. வலது விலா எலும்புகளுக்குக் கீழே அவ்வப்போது வலி, சில நேரம் எதுக்களிப்பு, கொஞ்சம் அஜீரணம்...

என இருக்கும். உடனே அது வயிற்றுப் புண்ணா, குடல் புண்ணா இல்லை வேறு ஏதேனுமா என நாம் குழம்புவோம். மருத்துவரிடம் போனால், `எவ்வளவு நாளா வயிற்றுவலி' என ஆரம்பித்து, `நெஞ்சு எலும்புக்குக் கீழேயா, மார்பின் நடுப் பகுதியிலா... எங்கே எரிச்சல்?, கொஞ்சம் சாப்பிட தாமதமானால், பசி வரும்போது வலிக்குதா, சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வலிக்குதா?' என்றெல்லாம் கேள்விகள் எழுப்புவார். ஒருவேளை பித்தப்பைக் கல் இருந்தாலும் இருக்கலாம் என அனுமானித்து, ஸ்கேன் எடுக்கச் சொல்லும் மருத்துவர்களும் உண்டு

பொதுவாக நிறைய பேருக்கு இரவில் நன்றாக சாப்பிட்டு விட்டு தூங்கி எழுந்திருக்கும் போது வயிறு வீங்கியதாக ஒரு உணர்வு தோன்றும்.

இதற்கு முக்கிய காரணம் நம் குடல் மற்றும் வயிற்றில் வாயுக்கள் நிரம்பியதாலே இந்த பிரச்சினை உண்டாகிறது.

இதை நீங்கள் கண்டுக்காமல் விட்டால் வயிற்று வலி, வயிற்றில் போக்கு போன்றவற்றை அனுபவிக்க கூடும்.

இதனை ஒரு சில எளிய முறையில் போக்கலாம். தற்போது அவை எப்படி என பார்ப்போம்.

ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு, அரை டீஸ்பூன் ஏலக்காய் பொடி, ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதில் ஒரு கைப்பிடி அளவு சாதத்தை சேர்த்து இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். கஞ்சி போன்ற பதத்துக்கு வந்ததும் எடுத்து குடிக்கலாம். வாய்வுப் பிடிப்பு ஏற்பட்டிருக்கிற சமயத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த கஞ்சியைக் குடித்தால் போதும் வாய்வுப் பிடிப்பு மற்றும் வயிற்றுக் கோளாறுகள் தீரும்.

இரண்டு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு மற்றும் 2 பல் பூண்டு ஆகியவற்றை தட்டிச் சேர்த்து கொதிக்க விடுங்கள். இது ஒரு கப் அளவுக்கு சுண்டி வந்த பிறகு அதை ஆறவிட்டு வெதுவெதுப்பாக குடியுங்கள். அதேபோல இரவில் தூங்குவதற்கு முன்பாக, பாலில் பூண்டு பற்கள் 10 சேர்த்து நன்கு வேகவிட்டு குடித்து வந்தாலும் வாயுத்தொல்லை தீரும்.

ஓமத்தை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து அதை அப்படியே 5 நிமிடங்கள் மூடி வைத்து விட வேண்டும். பிறகு அதை வடிகட்டி குடிக்கலாம். அல்லது ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து காலை வேளையில் டீயாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு டம்ளர் புளிக்காத மோரில் ஒரு சிட்டிகை கருப்பு உப்பு மற்றும் கால் ஸ்பூன் அளவு பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதை அப்படியே குடித்து வரலாம். குறிப்பாக, வெயில் காலத்துக்கு வயிற்றுக்கு மட்டுமல்லாது, உடலின் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

ஒரு கப் பூசணிக்காயை நறுக்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதில் மஞ்சள் தூள், சிறிது உப்பு மற்றும் சீரகம் கால் ஸ்பூன் சேர்த்து, கால் டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். நன்கு வெந்ததும் சாப்பிடவும்.

வயிறு வீக்கம் மற்றும் வாயுத் தொல்லையால் சிரமப்படுகிறவர்கள் காலை மற்றும் இரவு தூங்குவதற்கு முன் என இரண்டு வேளை, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 ஸ்பூன் அளவுக்கு ஆப்பிள் சிடார் வினிகரைக் கலந்து குடித்து வர வேண்டும். இப்படி குடித்து வரும்போது நான்கு நாட்களில் வாயுத்தொல்லை நீங்கும். வயிறு வீக்கமும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒன்றரை ஸ்பூன் அளவுக்கு எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். இதை அப்படியே கலந்து வெறும் வயிற்றில் குடிக்கவும்.



--

செவ்வாய், 3 ஜூன், 2025

தலைவலியை போக்க எளிமையாக தீர்வுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.


தலைவலி வந்துவிட்டால் எந்த வேலையும் சரியாக ஓடாது. மற்றும் உடல்நிலையையும் மிக சோர்வாக உணர வைக்கும் இந்த தலைவலி.

தலைவலியை வந்துவிட்டாலே போதும் பலர் கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட மருந்துகளை வாங்கி போடுவதுண்டு. இருப்பினும் இதனை சில வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு தீர்க்க முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

வெற்றிலை காம்பு, லவங்கம், ஆலரிசி சமஅளவு பால் கலந்து அரைத்து சூடாக்கி நெற்றி பொட்டில் உச்சந்தலையில் தடவ தலைவலி குணமாகும். எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெய் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றை தலைவலி போகும்.

மரிக்கொழுந்து செடியின் பூவை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி தலைவலி உள்ள இடத்தில் வைத்துக் கட்டுப்போட உடனே தலைவலி நிற்கும். மருதாணி இலையைப் பறித்து சுத்தம் செய்து தாய்ப்பால் விட்டு மைய அரைத்து நெற்றியில் பற்றுப்போட தலைவலி உடனே குணமாகும். மிளகை மைய தேய்த்து எடுத்து அதை எலுமிச்சம் பழச் சாற்றில் நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.

குங்குமப்பூ வாங்கி வந்து தாய்ப்பால் விட்டு மைய உரைத்து நெற்றியில் பற்றுப்போட தலைவலி உடனே நிற்கும். முற்றிய வெற்றிலையின் நுனி பகுதியை சிறிது எடுத்து நெற்றிப்பொட்டின் இருபுறமும் ஒட்டினால் தலைவலி குணமாகும்.


--

வஜ்ராசனத்தின் செயல் முறையும்நன்மைகளும்.

செயல்முறை: யோகா விரிப்பில் முழங்கால்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து , இரு குதி கால்களையும்...

Popular Posts