லேபிள்கள்

ஞாயிறு, 1 அக்டோபர், 2023

காடி நீர் – Vinegar வினிகர்

 


ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது கையைப் பிடித்துத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், (அங்குள்ள ஒருவர்) ரொட்டித் துண்டைக் கொடுத்தார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “குழம்பேதும் இல்லையா?” என்று கேட்டார்கள்.

வீட்டார், “இல்லை, சிறிது காடியைத் தவிர வேறெதுவுமில்லைஎன்று கூறினர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “காடிதான் குழம்புகளில் அருமையானதுஎன்று கூறினார்கள்.

ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு கூறியதைக் கேட்டதிலிருந்து நான் காடியை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டிருக்கிறேன்என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 4170)

காடி செய்யும் விதம்:

ஒரு பெரிய பாத்திரத்தில் கால் படி கருங்குருவை அரிசியை சமைத்து கஞ்சியும் சாதமும் இரண்டையும் கொட்டி 6 படி சுத்தநீர் விட்டு துணியால் வாய்கட்டி சூரிய புடத்தில் வைத்துவர வேண்டும்.

வாரத்திற்கு ஒரு முறை வேறு பாத்திரத்தில் மாற்றி விட வேண்டும் இப்படி ஒரு மாதம் கழிந்தபின் பார்க்க முதலில் போட்ட அன்னமானது காணப்படாது அந்த சமயம் மறுபடியும் கால் படி அன்னம் சமைத்து அதில் கலந்துவிட வேண்டும்.

கலந்தபின் நாள் தவறாமல் சூரிய புடத்தில் வைப்பதுவும் வாரத்திற்கு ஒரு முறை பானை மாற்றுவதுவும் முக்கியமாய் கவனித்தல் வேண்டும்.

இதன்படி மாதம் ஒருமுறை அன்னம் சமைத்து கலந்து கொண்டு வரவேண்டும் இப்படி செய்துகொண்டு வருங்காலத்தில் மூன்று மாதத்திற்கு மேல் அந்த காடியை உபயோகித்து வரலாம்.

எவ்வளவு காடி எடுத்து கொள்ளுகின்றோமோ அவ்வளவு நீரை அதில் கலந்துவிட வேண்டும் இப்படி கலந்து வருவதால் எத்தனை ஆயிரம் பேருக்கு நாம் கொடுத்தாலும் காடி குறைந்துவிடாது ஆறு மாதத்திற்கு பின் காடியில் அதிக புளிப்பு ஏறிவிடும். ஆகையால் 4 நாளைக்கு ஒரு முறை பானை மாற்றுதல் வேண்டும்.

மழைக்காலங்களில் சூரிய புடத்தில் வைக்க இயலாத காரணத்தால் காடியில் பூசணம் பிடிக்காதபடி தடுக்க சமையல் செய்த பிறகு அடுப்பில் உள்ள நெருப்பை எடுத்து விட்டு அடுப்பின் மேல் காடியை வைத்து விட வேண்டும் இப்படி செய்ய காடி கெடாமல் இருக்கும்.

காடிக்கு அதிக நாள் ஏற ஏற புளிப்பு அதிகரிக்கும்.புளிப்பு அதிகரிக்க அதிகரிக்க கொடுக்க வேண்டிய அளவை குறைத்தல் வேண்டும் ஆறு மாதத்திற்கு மேற்பட்ட காடியானது பௌர்ணமி தினத்தில் இரவில் ஒருவித சப்தத்தை உண்டு பண்ணும்.

காடியால் தீரும் வியாதி:

வயிற்று வலி, நீர் கடுப்பு, மார்வலி, உஷ்ண பேதி, அஜீரண பேதி, விஷ பேதி முதலிய வியாதிகள் நீங்கும் சரீரத்திலுள்ள வெக்கையை போக்கும்.

காடி நீர் என்பது நம் நாட்டில் பழமையான ஒரு பெரிய மருந்து
.
கடையில் விற்கும் காடியானது சர்க்கரையை வாணலில் போட்டு வறுக்க வறுக்க ஒருவித கருநிறமாக மாறிவிடும். அப்பொழுது அசிட்டிக் ஆசிட் வேண்டிய அளவிற்கு சேர்த்து நீரைக் கொட்டி வடிகட்டி புட்டியில் பதனம் பண்ணி விற்கப்படுவதே காடி ஆகும்.

இந்த காடியும் புளிப்புள்ளதாக காணப்படும். இந்த காடியை வாங்கி ஊர்காய்களுக்கும் மற்றும் மருந்தின் பிரயோகங்களுக்கும் உபயோகப்படுத்தி வருகின்றார்கள். எனவே கடையில் விற்கும் காடியானது முன்னோர்கள் சொல்லி வைத்த காடி அன்று ஆனால் இது உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.

ரஹ்மத் ராஜகுமாரன் 

https://www.nidur.info/2021/11/05/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-vinegar-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

ஒரு எறும்பு உங்களைக் கடித்தால் அதற்கு நன்றி சொல்லுங்கள்! ஏன்?

 


ஒரு எறும்பு உங்களைக் கடித்தால் அதற்கு நன்றி சொல்லுங்கள்! ஏன்?

ஒரு எறும்பு உங்களைக் கடித்தால், அதைக் கொல்லாதே, ஆனால் அதற்கு நன்றி சொல்,லுங்கள் ஆனால் ஏன்?!!!

முதலில், குரானில் எறும்பு குறிப்பிடப்பட்டு, ஒரு முழு சூராவும் அதற்குப் பிறகு பெயர் வைக்கப்பட்டு இருப்பது அவதிப்படுகிறது (சூரத் அன்-நாம்ல்).

நபி ( صل ى الله عليه وسلم) நான்கு  வகையான விலங்குகளை கொல்வதைத் தடுக்கிறார்: எறும்புகள், தேனீக்கள், ஹுத்(பறவைகள்), மற்றும் சூரடி (பருந்து போன்ற குருவி).

(ஹதித் அஹ்மத் 3066, அபு தாவுத் 5267 மற்றும் ஸைஐப் அல்-அர்னாவூத்தால் சரிபார்க்கப்பட்டது)
முஸ்லிம்களாகிய எங்களுக்கு அல்ஹம்துலில்லாஹ் ஹதீஸ்கள் போதுமானது மற்றும் அது அல்லா மற்றும் அவரது தூதர் முகமதுவின் கட்டளை (
صل ى الله عليه وسلم) ஆனால் வாழும் இந்த உயிரினத்துடன் நாம் ஒரு அறிவியல் சுற்றுலா போகலாம்.

எறும்பு கிள்ளலின் நன்மைகள்:

அங்கும் இங்கும் பலரை எறும்பு கடிக்கிறது. ஆனால் அவர்கள் உடனடியாக ஆக்ரோஷமான எறும்பைக் கொன்றுவிட்டார்கள். இங்கே பிழை வருகிறது.

ஒரு எறும்பை கொல்வது தடைசெய்யப்பட்டுள்ளது, அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அது ஒரு உயிருள்ள உயிரினம் என்பதால். ஆனால் எறும்புக்கு ஏன் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க கூடாது, குறிப்பாக அதன் பலன்கள் பல என்பதால்.

இந்த நன்மைகள் பின்வருமாறு:

1. ஒரு எறும்பின் கிள்ளி இரத்த ஓட்டத்தைத் தூண்டி, சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கிறது, இது உடலின் செயல்பாடு மற்றும் உயிர்த்தன்மையை பிரதிபலிக்கும்.
2. ஒரு எறும்பின் கிள்ளல் மூளையின் அடிப்பாகத்தில் உள்ள உணர்ச்சி உயிரணுக்களுக்கு பரவக்கூடிய உணர்ச்சி சமிக்ஞைகள் மூலம் மூளையில் உள்ள நரம்புகளை செயல்படுத்துகிறது.

3. மனித உடல் அதே இடத்தில் கிள்ளியை விட அதிகமாக வெளிப்படும் போது அதே நேரத்தில் தோலின் வட்ட நோய் வெளிப்படும்.

தோலில் இருந்து சருமத்தின் உள்நோக்கமான சுழல் பாக்டீரியாவை அதிகமாக எதிர்க்கிறது, ஏனெனில் தோல் அதிக வெப்பநிலைக்கு சகிப்புத்தன்மை அடைகிறது.

மேலும் உடலில் வெவ்வேறு இடங்களில் கிள்ளிகளால் பாதிக்கப்பட்ட பலருக்கு உடல் விஷயத்தில் இரத்தத்தை சுரக்கச் செய்யும், மற்றும் இரத்தம் உறைவதற்கு உத்தேசம்: இரத்த அடுக்கு ஓரளவு இரத்தத்தில் இருக்க ஆடம்மா இரத்த நாளங்களின் திறனை கொடுக்கிறது மிகக் கடினமான விஷத்தை கொடுக்கிறது. இதனால் கல்லீரலுக்கு உதவுங்கள் மற்றும் அவருடன் இருக்கும் சுமையைக் குறைக்கவும்.

4. உணவுக்கட்டுப்பாட்டின் சிறந்த அர்த்தமாக எறும்பை கிள்ளி எறியுங்கள். எறும்பு (பெண்) விரும்பிய கோலுக்கு கிள்ளிக் கொடுக்கும் போது.

இயோனிக் உமிழ்நீரின் அளவு இரகசியமானது, மேலும் விசித்திரமான விஷயம் என்னவென்றால் இந்த உமிழ்நீர் கிள்ளப்பட்ட உறுப்பில் உள்ள அனைத்து கொழுப்புக்களையும் எரிக்கிறது.

எடுத்துக்காட்டாக, கிள்ளப்பட்ட உறுப்பு கை, உமிழ்நீராக இருந்தால் அது படிப்படியாக கை முழுவதும் பரவும்.. இது கைகளில் காணப்படும் 99% கொழுப்புகளைக் கரைத்துவிடும்.
அல்லாவுக்கே பெருமை உண்டாகட்டும்.

நபி [ صل ى الله عليه وسلم] எறும்புகளையும் ஹதீஸ்களையும் கொல்ல தடை செய்துள்ளார் என்று முஸ்லிம் நம்புகிறார்.

அல்லாஹ் நன்கு அறிவான்

https://www.nidur.info/2021/12/27/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf/


சனி, 26 ஆகஸ்ட், 2023

தொழுகையாளிகளைத் தவிர…!

 


மனிதனின் என்னென்ன கீழ்த்தரமான குணங்களைக் கொண்டவன் அவன் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவனாக படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதை படைத்த இறைவன் விவரிக்கின்றான்.

اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًا ۙ‏ ✳️اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوْعًا ۙ‏ ✳️وَاِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوْعًا ✳️اِلَّا الْمُصَلِّيْنَۙ ✳️

நிச்சயமாக மனிதன் பேராசையும் பதற்றமும் நிறைந்தவனாக படைக்கப்பட்டிருக்கின்றான். ஏதேனும் துன்பம் அவனுக்கு வந்தால் பொறுமை இழந்தவனாக அவன் ஆகின்றான். ஆனால் அவனுக்கு வளம் (வசதி) வந்துவிட்டால் கடும் கஞ்சனாக ஆகிவிடுகின்றான். ஆனால் தொழுகையாளிகளைத் தவிர! (அல்குர்ஆன்: 70:19 – 22)

மனிதனின் இயல்பான மோசமான கெட்ட குணங்களை உபதேசங்கள் மூலமாகவும் இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் மூலமாகத்தான் மாற்றமுடியும்.

ஆசை பேராசை இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு பொருளை அடைவதற்காக அதைப் பெறுவதற்காக நியாயமாக முயற்சி செய்வது ஆசையாகும்.

ஆனால் எள்ளளவு கீழ்த்தரமான காரியங்களைச் செய்தேனும் அப்பொருளை அடையவேண்டும் என்று முயற்சிப்பதும், இறைவன் வகுத்த வரம்புகளை மீறி அதை அடைய முயற்சி செய்வதும் பேராசையாகும்.

உதாரணமாக ஒருவருக்கு மருத்துவ சிகிச்சைக்காகப் பத்து லட்சம் ருபாய் தேவை, இவர் சுயமரியாதையோடு அதை அடைய முயற்சிக்கின்றார், இது ஆசை. ஆனால் இன்னொருவர் பத்து ருபாய் பெறுவதற்கும் கூனிக்குறுகி சுயமரியாதையை இழந்து பெறுகின்றார் இது பேராசையாகும்!

ஒருவன் தொழில் செய்து பொருளாதாரத்தை திரட்டுவதை இஸ்லாமை அங்கீகரித்துள்ளது. தனது கையால் உழைத்து பொருளீட்டுபவனை விட சிறந்தவன் யாருமில்லை என்ற அளவுக்கு சிறந்த உழைப்பாளர்களை இஸ்லாம் அடையாளப்படுத்துகின்றது. தொழில் செய்து பணம் சேர்ப்பது ஆசையாகும்.

ஆனால் நியாயமாகவும், நேர்மையாகவும் தொழில் செய்யும் ஒருவன் தொழுகை நேரத்தில் அதைக் கண்டுகொள்வதே இல்லை! அவனது கவனம் முழுவதும் பொருளீட்டுவதிலேயே இருக்கிறது, அல்லாஹுவை வணங்குவதை தொழுவதை விட்டும் பொருளாதாரம் ஈட்டுவதிலேயே மூழ்கிப்போய் இருக்கின்றான் இவன் பேராசைக்காரனாவான்!

தொழுகையை விட்டுவிட்டு ஒரு காரியத்தில் ஈடுபடுவதால் ஒருவனுக்குப் பணம் கிடைக்கும் என்றால் தொழுகையை விட்டுவிட்டு அந்தப் பணத்திற்கு ஆசைப்படுவது பேராசை. தொகை சிறிதாக இருந்தாலும் அது பேராசைதான். காரணம் பணத்தை அடைவதற்காக அதைவிட முக்கியமானதை அவன் விட்டு விட்டான்.

அவன் சேமித்த சொத்துக்கு ஏதாவது சேதாரம் வந்துவிட்டால், அல்லது அதற்கு ஏதாவது அழிவு வந்துவிட்டால் அவனால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பதறி துடிதுடித்துப் பலஹீனமாகி விரைவாகவே நோயாளியாகிப் போகின்றான். அல்லாஹுவின் நாட்டப்படி அது நடந்துவிட்டது என்ற முடிவுக்கு வர மறுக்கின்றான் ஆனால் தொழுகையாளிகளைத் தவிர!

அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதனிடம் உள்ள குணங்களில் மிகவும் கெட்ட குணம் என்னவெனில் அவனைப் பதற்றத்திற்கு உள்ளாகும் கஞ்சத்தனமும், இதயம் நொடிந்துபோகச் செய்யும் கோழைத்தனமும் ஆகும். (நூல்: அபூ தாவூத்)

அடுத்ததாக மனிதனுக்கு இன்னொரு கெட்டப் பழக்கம் உண்டு! ஒன்றுமே இல்லாதவனாக இருந்தவன் பேராசைக்காரனாக இருந்தவன், அவனுக்கு செல்வம் கொழிக்கும்போது, அவன் செல்வச் செழிப்பானவனாக ஆகும்போது அவனிடம் கஞ்சத்தனமும், கருமித்தனமும் குடி கொண்டுவிடுகின்றது. தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் எவ்வளவுதான் சிரமப்பட்டாலும், எப்படிக் கஷ்டப்பட்டாலும் அதைக் கண்டு கொள்ள மறுக்கின்றான். அல்லாஹுவின் பாதையில் சிலவு செய்ய மறுக்கின்றான், தர்மம் செய்ய மறுக்கின்றான். ஆனால் தொழுகையாளிகளைத் தவிர!

ஆக கெட்ட குணங்களிலிருந்தும், இழிவான செயல்களிலிருந்தும், கருமித்தனத்திலிருந்தும் ஒருவனை தொழுகை பாதுகாக்கின்றது. தொழுகை நற்காரியங்களின் பக்கம் தூண்டுகிறது. தொழுகை விசாலமான, தாரளான உள்ளத்தை ஏற்படுத்துகிறது.

http://www.islamkalvi.com/?p=126747


புதன், 23 ஆகஸ்ட், 2023

தொழுகையாளிகளைத் தவிர..!

 


தொழுகை, ஒருவனைப் பக்குவப்படுத்துகின்றது! தொழுகை, ஒருவனின் கெட்ட குணத்தையும் நற்குணமாக மாற்றி அமைக்கின்றது! தொழுகை, தீய செயல்கள் நிறைந்தவனையும் நற்செயலாற்ற வைக்கின்றது! என்ற விஷயங்களைச் சென்ற தொடரில் கண்டோம்.

அது எவ்வாறான தொழுகை? அந்த தொழுகையின் மாண்புகள் என்ன என்ற செய்திகளை இப்போது பார்ப்போம்.

நிரந்தரமாக நிறைவேற்றுதல்:🔵

அவர்கள் எப்படிப்பட்ட தொழுகையாளிகள்? என்பதை الَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ دَائِمُونَ அவர்கள் தொழுகையை விடாமல் நிரந்தரமாக நிறைவேற்றுவார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். دَآٮِٕمٌ (தாயிம்) என்றால் நிலையான, நிரந்தரமான என்று பொருள். دَائِمُونَ (தாயின்மூன்) என்றால் அந்த காரியத்தை நிலையாக நிரந்தரமாகச் செய்பவன் என்று பொருள்.

நாலடியார்களுக்கு சுவனத்தின் உணவும் அதன் நிழலும் நிலையான, நிரந்தரமானது என்பதைக் குறிப்பிடும்போது دَائِمُ என்ற சொல்லைத்தான் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். (அல்குர்ஆன்: 13:35)

ஒருவன் ஒரு காரியத்தை தற்காலிகமாகச் செய்வதற்கும், அதே காரியத்தை நிரந்தரமாகச் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. இஸ்லாத்தில் எந்த ஒரு அமலாக இருந்தாலும் அதை விடாமல் நிரந்தரமாகத் தொடர்ந்து செய்யவேண்டும். உலகக் காரியங்களில்கூட விடாமல் தொடர்ந்து செய்பவனுக்குத்தான் மதிப்பும், சலுகையும் அதிகம்.

மக்களே! உங்களால் இயன்ற (நற்) செயல்களையே செய்துவாருங்கள். ஏனெனில், நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ்வும் சலிப்படைய மாட்டான். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் யாதெனில், குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆயிஷா (ரலி) (ஸஹீஹுல் புகாரி:5861)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நேர்மையோடு (நடுநிலையாக) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்) அறிந்து கொள்ளுங்கள். உங்களில் யாரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் நுழைவிக்காது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புகமுடியும். நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, (எண்ணிக்கையில்) மிகவும் குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும். ஆயிஷா(ரலி) (ஸஹீஹுல் புகாரி: 6464).

குறித்த நேரத்தில் தொழுதல்

தொழுகையின் நேரத்தை பற்றி அல்லாஹ் கூறும்போது اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتٰبًا مَّوْقُوْتًا‏ தொழுகையானது இறைநம்பிக்கையானார்கள் மீது குறித்த நேரத்தில் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும். (அல்குர்ஆன்: 04:103)

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்என்று பதில் கூறினார்கள். (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) (ஸஹீஹுல் புகாரி: 527).

நோன்பு ஹஜ் போன்ற வணக்கங்களை நிறைவேற்றுவதற்குக் காலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று ஒவ்வொரு தொழுகைக்கும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தந்த தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே நிறைவேற்றுவது இறைநம்பிக்கையாளர்கள்மீது கடமையாகும் அதுதான் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான காரியமாகும்.

இறையச்சத்தோடு தொழுதல்

நிலையாக, நிரந்தரமாக, அந்த நேரத்தோடு நிறைவேற்றப்படும் தொழுகையை நிதானமாகவும், இறையச்சத்தோடும், நிறைவேற்றவேண்டும். தொழுகையில் நிற்பவர் அல்லாஹ்வைப் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் அவரைப் பார்க்கின்றான் என்ற உள்ளச்சத்தோடு தொழவேண்டும். அடியான் தொழும்போது தன் இரட்சகனோடு (அல்லாஹ்வோடு) உரையாடுகின்றார், அல்லாஹுவும் அடியானுக்கு பதிலளிக்கின்றான் என்பதை நினைவில் கொண்டு தொழவேண்டும்.

அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்கள் மத்தியிலிருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (மனிதரின் தோற்றத்தில் வந்து நபி -ஸல்-) அவர்களிடம் ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவன் தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது எனக் கூறினார்கள். இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை மட்டுமே நீர் வணங்குவதும் தொழுகையை நிலைநிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஜகாதை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதத்தில் நீர் நோன்பு நோற்பதுமாகும் என்று கூறினார்கள்.

இஹ்ஸான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், (இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்கா விட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்றார்கள்.., (ஹதீஸ் சுருக்கம்)
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரீ 50,)

தொழுகையில் இறைவனோடு உரையாடுதல்!

தொழுகையில் ஓதுவதை எனக்கும் எனது அடியானுக்கும் மத்தியில் பங்கிட்டுள்ளேன். என் அடியான் கேட்டவை அவனுக்கு உண்டு. அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்என்று ஒருவன் கூறும் போது என்னை என் அடியான் புகழ்ந்துவிட்டான்என்று அல்லாஹ் கூறுகிறான். அவன் அர்ரஹ்மானிர் ரஹீம்என்று கூறும் போது என் அடியான் என்னைப் பாராட்ட வேண்டிய விதத்தில் பாராட்டிவிட்டான்என்று அல்லாஹ் கூறுகிறான். மாலிக்கி யவ்மித்தீன்என்று கூறும் போது என் அடியான் என்னைக் கௌரவப்படுத்த வேண்டிய விதத்தில் கௌரவப்படுத்தி விட்டான்என்று அல்லாஹ் கூறுகிறான். இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தயீன்என்று கூறும் போது இதுதான் எனக்கும் எனது அடியானுக்கும் இடையே உள்ள உறவாகும்என்று அல்லாஹ் கூறுகிறான். இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம்என்று கூறும் போது என் அடியானின் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும்என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 655)

தொழுகை, ஒருவனைப் பக்குவப்படுத்துகின்றது! தொழுகை, கெட்ட குணத்தையும் நற்குணமாக மாற்றி அமைக்கின்றது! தொழுகை, தீய செயல்கள் நிறைந்தவனையும் நற்செயலாற்ற வைக்கின்றது! என்றால் அது எப்படியான தொழுகையாக இருக்கவேண்டும்

http://www.islamkalvi.com/?p=126751


சனி, 19 ஆகஸ்ட், 2023

பணம் வந்தால் படைத்தவனை மறக்கலாமா?

 


[ ஒரு மனிதர் தன் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கம் கற்பித்து அவளுக்கு ஒழுக்கம் கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, அவளுக்குக் கல்வி கற்பித்து, அவளுக்குக் கல்வி கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, பிறகு அவளுக்கு விடுதலை அத்து அவளை (தானே) மணமும் முடித்துக் கொண்டார் எனில் அவருக்கு இரு நற்பலன்கள் கிடைக்கும்.

ஒருவர் ஈசாவின் மீது நம்பிக்கை கொண்டு, பிறகு என் மீதும் நம்பிக்கை கொண்டால் அவருக்கு இரு நற்பலன்கள் கிடைக்கும்.

ஓர் அடிமை தன் இறைவனுக்கு அஞ்சி, தன் எஜமானர்களுக்குக் கீழ்ப்படிந்தும் நடப்பானாயின் அவனுக்கும் இரு நற்பலன்கள் கிடைக்கும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி 3446)]

மனிதர்களில் ஒரு கூட்டம், காசு, பணம் இல்லாத போது பள்ளிவாசலே கதி என்று கிடப்பார்கள். பணம் வந்துவிட்டால், படைத்தவனை மறக்கும் மக்களாக மாறிவிடுவார்கள்.

ஏழ்மையான நிலையில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இருந்த அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளார் காலத்திற்குப் பிறகு செல்வந்தராகவும் மற்றவர்களுக்கு விருந்தளிக்கவும் நல்ல ஆடைகளை அணிந்து வலம் வருபவராகவும் இருந்தார்கள். அவர்களின் வாழ்வு நமக்கு ஒரு படிப்பினை.

நான் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஏழு இரவுகள் விருந்தாயாகத் தங்கியிருந்தேன். அவர்களும் அவர்களுடைய துணைவியாரும் அவர்களுடைய பணியாளும் இரவை மூன்று பங்குகளாகப் பிரித்துக் கொண்டு முறை வைத்து எழுந்து தொழுது வந்தார்கள். முதலில் ஒருவர் தொழுவார்; பிறகு அவர் மற்றொருவரை எழுப்பி விடுவார். (அவர் தொழுது முடித்தவுடன்) இன்னொருவரை தொழுகைக்கு எழுப்புவார். (அறி : அபூஉஸ்மான், நூல் : புகாரி (5441)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தோழமை கொண்டவர்களில் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முக்கியத்துவம் பெற்றவர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்பான பெரும்பாலான செய்திகளை அறிவித்தவர்கள் இவர்கள் தாம்.

திண்ணைத் தோழராக இருந்து பசியும் பட்டினியுமாக நபிகளார் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் காலத்தைத் தள்ளி, நபிகளாருடன் அதிகமாகத் தொடர்புடன் இருந்ததால் அதிகமான செய்திகளை அவர்களால் அறிவிக்க முடிந்தது.

மேலும் ஏழ்மையான நிலையில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்த அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளார் காலத்திற்குப் பிறகு செல்வந்தராகவும் மற்றவர்களுக்கு விருந்தளிக்கவும் நல்ல ஆடைகளை அணிந்து வலம் வருபவராகவும் இருந்தார்கள்.

முஹம்மத் பின் சீரீன் அவர்கள் கூறியதாவது: நாங்கள் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் சிவப்புக் கமண் சாயம் இடப்பட்ட, கத்தான் வகையிலான இரண்டு ஆடைகளை அணிந்திருந்தார்கள். அவர்கள் அப்போது மூக்குச் சிந்திவிட்டு அடடா! அபூஹுரைரா! கத்தான் வகையைச் சார்ந்த துணியிலேயே மூக்குச் சிந்துகிறாயே! (ஒரு காலத்தில்) நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சொற்பொழிவு மேடைக்கும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களது அறைக்குமிடையே (பசியால்) மயக்கமடைந்து விழுந்து கிடப்பேன். அங்கு வருபவர் எவரேனும் வந்து நான் பைத்தியக்காரன் என்று நினைத்து என் கழுத்தின் மீது கால் வைப்பார். ஆனால், எனக்குப் பசி தான் (மேட்டு) இருக்கும்; பைத்தியம் எதுவும் இருக்காது (அந்த அளவிற்கு வறுமையில் இருந்தேன்.) என்று சொன்னார்கள். (நூல் : புகாரி 73240

வசதியான நிலையை அடைந்த பிறகும்….

சாப்பாட்டிற்கே வழியில்லாமல் பசி மயக்கத்தால் தரையில் உருண்டு கிடந்த அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பிற்காலத்தில் நல்ல நிலைஏற்பட்டு, திருமணம் கூடச் செய்து கொண்டார்கள். பஸராவின் ஆளுநராக இருந்த உத்பா பின் கஸ்வான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சகோதரி புஸ்ரா அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். (பத்ஹுல்பாரி)

ஏழ்மை நிலையில் இருந்து நல்ல நிலைக்கு வந்த அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மனைவி மற்றும் பணிவிடை செய்ய வேலையாளும் கிடைத்தது. வசதியான நிலையை அடைந்தவுடன் படைத்தவனை மறந்து விடாமல் படைத்தவனுக்கு நன்றி செலுத்தும் நல்லடியாராக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு இருந்தார்கள்.

மேற்கூறப்பட்ட (5441) செய்தியில், கடமையான தொழுகையல்லாத இரவுத் தொழுகையை தாமும் தொழுததுடன் தம் மனைவியையும் வேலைக்காரரையும் தொழச் செய்துள்ளார்கள். இந்த நல்ல பண்பு எல்லோரிடம் இருக்க வேண்டும்.

கஷ்டப்பட்ட நிலையில் காலம் தவறாமல் பள்ளிக்கு வந்து சென்றவர், அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்தவுடன் கார், பங்களா என்று வாங்கிய பின்னர் ஏ.சி.யில் சூரியன் உதித்தது கூடத் தெரியாமல் உறங்குபவர்கள் ஏராளம்.

துன்பத்தை நீக்கி வசதி வாய்ப்புகளைத் தந்த அல்லாஹ்வுக்கு அதிகமதிகம் நன்றி செலுத்த வேண்டியவர் இருந்ததையும் விட்டுவிடும் துர்பாக்கிய நிலையில் இருக்கிறார். ஆனால் கடுமையான கஷ்டங்களில் மூழ்கியிருந்த அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நல்ல நிலை வந்த பின்னர் படைத்தவனை அதிகமதிகம் நினைவு கூரத் தொடங்கினார்கள்.

”நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.” (அல்குர்ஆன் 66:6)

என்ற வசனத்தின் அடிப்படையில் தம் குடும்பத்தாரையும் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நல்லறங்கள் செய்பவர்களாக மாற்றியுள்ளார்கள். மேலும் வேலைக்காரரைக் கூட இறை வணக்கத்தில் ஈடுபடச் செய்துள்ளார்கள்.

இரு நற்பலன்கள்

ஒரு மனிதர் தன் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கம் கற்பித்து அவளுக்கு ஒழுக்கம் கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, அவளுக்குக் கல்வி கற்பித்து, அவளுக்குக் கல்வி கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, பிறகு அவளுக்கு விடுதலை அத்து அவளை (தானே) மணமும் முடித்துக் கொண்டார் எனில் அவருக்கு இரு நற்பலன்கள் கிடைக்கும்.

ஒருவர் ஈசாவின் மீது நம்பிக்கை கொண்டு, பிறகு என் மீதும் நம்பிக்கை கொண்டால் அவருக்கு இரு நற்பலன்கள் கிடைக்கும்.

ஓர் அடிமை தன் இறைவனுக்கு அஞ்சி, தன் எஜமானர்களுக்குக் கீழ்ப்படிந்தும் நடப்பானாயின் அவனுக்கும் இரு நற்பலன்கள் கிடைக்கும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி 3446)

அடிமையாக இருப்பவருக்குக் கல்வியும் நல்லொழுக்கமும் கற்பிக்கும் போது இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என்ற நபிமொழியை அடிப்படையாகக் கொண்டு, தன் வேலையாளுக்கும் வணக்க வழிபாடு முறையைக் கற்றுக் கொடுத்து, அவர்களையும் உபரியான வணக்கம் செய்பவராக மாற்றியுள்ளார்கள்.

ஆனால் இன்று முதலாளியாக இருப்பவர்கள், தொழிலாளி தொழுகைக்குச் செல்ல அனுமதி கேட்டால் கூட மறுப்பவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். தொழிலாளி நம்மிடம் வந்து சேர்ந்த பின்னர் அவரைக் கடமையான மற்றும் உபரியான தொழுகையைப் பேணுபவராகவும் நல்லொழுக்கம் மிக்கவராகவும் மாற்றுவது முதலாளிகள் செய்யும் நற்காரியம் என்பதை மறக்கக் கூடாது.

– அபூஸமீஹா

https://www.nidur.info/2021/10/05/%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae-2/


புதன், 16 ஆகஸ்ட், 2023

கொடுங்கள்; பெறுவீர்கள்!

 


[ எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள்.

செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள்.

கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.]

ஸுப்ஹானல்லாஹ்!

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான்.

இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். “ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்.”அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான்.

அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.

எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்

https://www.nidur.info/2021/10/13/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-4/


ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்?

 

படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்?

உண்டாகும் தீய விளைவுகள்!

திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இடைவெளி குறையும். ஏதே சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே தூங்குவார்கள். இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி காணலாம்.

1. நெருக்கம் குறைகிறது
கணவன் மனைவி இருவருக்கும் கொஞ்ச நேரம் ரிலாக்ஸாக பேச மற்றும் காதலிக்க கிடைக்கும் நேரமே படுக்கை அறை நேரம் தான். இந்த நேரத்தை உறவை வழுப்படுத்த பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இங்கு இருவேறு துருவங்கள் போல பிரிந்து படுப்பது கணவன் மனைவி உறவுக்கு நல்லதல்ல என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

2. எளிதில் போர் அடித்து விடும்
படுக்கை அறையில் இருவரும் நெருக்கமின்றி படுத்து உறங்கவில்லை என்றால் உங்களது உறவு எளிதில் போரடித்து விடும். உங்கள் மனைவி உங்களை தொடும் போது கூட உங்களுக்கு பெரிதாக எந்த உணர்ச்சியும் வராது.

3. உடலுறவில் நாட்டமின்மை
நீங்கள் தனித்தனியாக படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால், நாளடைவில் உங்களுக்கு உடலுறவில் கூட பெரிதாக நாட்டமில்லாமல் போகும்.

4. வேறு ஒருவர் மீது காதல்
நீங்கள் எப்போதும் நெருக்கமில்லாமல் இருந்தால், நீங்கள் படிப்படியாக வேறு ஒருவர் மீது காதல்வயப்பட வாய்ப்புகள் அதிகமாகும். மேலும் உங்கள் மனைவியுடன் படுத்து உறங்குவது உங்களுக்கு யாரோ ஒரு தெரியாத நபருடன் படுத்து உறங்குவது போன்ற அனுபவத்தை தரும். அவர் மீது நாட்டமில்லாமல் போகும்.

5. சண்டைகள்
உடலுறவு மற்றும் காதல் தீண்டல்கள் உறவில் இல்லாமல் போகும் போது அடிக்கடி சண்டை கணவன் மனைவிக்குள் சண்டை வரும்.

6. வெறுப்பு
உங்களது கவனம் வேறு ஒரு நபர் மீது திசை திரும்பிவிட்டால், உங்களது துணையை வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

ஆகவே நண்பர்களே

துணையை அணைத்து துயரம் தவிர்ப்போம்…

https://www.nidur.info/2021/10/30/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf/


புதன், 9 ஆகஸ்ட், 2023

மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டால்….

 


உங்களில் எவர்கள் தமது மனைவியரைத் தாய்க்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்களோ, அவர்கள் இவர்களது தாய்மார்கள் இல்லை. இவர்களின் தாய்மார்கள் இவர்களைப் பெற்றெடுத்தவர்களே, நிச்சயமாக இவர்கள் வெறுக்கத்தக்க பேச்சையும், பொய்யையுமே கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவன்ளூ மிக்க மன்னிப்பவன்.

எவர்கள் தமது மனைவியரைத் தாய்க்கு ஒப்பிட்டு, பின்னர் (தாம்) கூறியதிலிருந்து மீண்டு விடுகின்றார்களோ அவர்கள், (கணவன், மனைவியாகிய இருவரும்) ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள். மேலும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.

எவர் (அடிமையைப்) பெற்றுக் கொள்ள வில்லையோ அவர், ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் தொடராக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்கவேண்டும். (இதற்கு) எவர் சக்திபெறவில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இது நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வதற்காகவே (விதியாக்கப்பட்டுள்ளது.) இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். நிராகரிப்பாளர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.’ (58:2-4)

ஜாஹிலிய்யாக் காலத்தில் மனைவியை தாய்க்கு ஒப்பிட்டால் அவர்கள் பின்னர் கணவன்-மனைவியாகச் சேர்ந்து வாழ முடியாது என்ற விதி இருந்தது. இஸ்லாம் மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுவதைக் கண்டிக்கின்றது. அப்படி ஒருவர் ஒப்பிட்டால் மீண்டும் மனைவியுடன் சேர்வதற்கு முன்னர் பரிகாரம் காண வேண்டும். தகுந்த பரிகாரம் கண்ட பின்னர் அவர்கள் கணவன்-மனைவியாக இணைந்து இல்லறம் நடாத்தலாம் என்று கூறுகின்றது.

இந்த வசனத்தில் இதற்கான பரிகாரம் பற்றி விபரிக்கப்படுகின்றது. மனைவியைத் தாயிற்கு ஒப்பிட்டால் அவர்கள் மீண்டும் இணைவதற்கு முன்னர் பின்வருவனவற்றை செய்ய வேண்டும் என இந்த வசனம் கூறுகின்றது.

1. ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.
2. அதற்கு முடியாவிட்டால் இரண்டு மாதங்கள் தொடராக நோன்பு நோற்க வேண்டும்.

3. அதற்கும் முடியாவிட்டால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

இஃதல்லாமல் பல குற்றச் செயல்களுக்கு நோன்பு பரிகாரமாக அமையும் என நபிமொழிகளும் கூறுகின்றன. இந்த சட்டங்களிலிருந்து, நோன்பு பாவங்களுக்குப் பரிகாரமாக அமையத்தக்க அற்புத வழிபாடாக இருப்பதை அறியலாம். அத்துடன், இஸ்லாம் அடிமைகளை விடுதலை செய்தல், ஏழைகளுக்கு உணவளித்தல் போன்ற பண்புகளைப் போற்றுவதையும் உணரலாம்.

எனவே, நோன்பு என்பது எமது பாவங்களை அழிக்கும் முக்கியமானதொரு இபாதத் என்பதை உணர்ந்து அதன் மூலம் எமது பாவக் கறைகளை அகற்றிப் பரிசுத்தமாக முயல்வோமாக!

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

https://www.nidur.info/2021/11/09/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/


காடி நீர் – Vinegar வினிகர்

  ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது கையைப் ப...

Popular Posts