லேபிள்கள்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

எவ்வளவு தண்ணீர் அருந்தினால் நல்லது?

கோடை காலத்தில் தண்ணீரின் அவசியம் குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதே சமயம், மொத்த பூமியில் 70 சதவீத அளவுக்கு தண்ணீரால் நிரம்பியது என்றாலும் கூட, அவை அனைத்துமே குடிப்பதற்கு உகந்த நீர் அல்ல.

இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் குடிநீரை கொதிக்க வைத்து குடிக்கும் நிலையே காணப்படுகிறது. நமது உடலில் ஏறத்தாழ 70 சதவீதம் அளவுக்கு நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. நம் உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாகவும், வியர்வை மூலமாகவும் வெளியேற்றுவதற்கு இந்த நீர்ச்சத்து உதவிகரமாக இருக்கிறது.நமது மூட்டுகளில் லூப்ரிகேஷன் அளிக்கவும், உடலில் உணர்வுகளை அதிகரிக்கவும் தண்ணீர் உதவிகரமாக இருக்கிறது. நாளொன்றுக்கு சராசரியாக 8 கிளாஸ் தண்ணீர் அருந்துவது உடலுக்கு போதுமானதாக இருக்கும் என்று ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகிறது. போதுமான அளவுக்கு நீங்கள் தண்ணீர் அருந்தவில்லை என்றால் உடல் உஷ்ணம் கட்டுப்பாடான அளவில் இருக்காது.

நாம் நலமாக வாழ நம்முடைய உள்ளுறுப்புக்கள் மற்றும் புறஉறுப்புக்கள் ஆரோக்கியான நிலையில் இருப்பது மிகவும் அவசியமானது.

நாம் சில செயல்பாடுகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளும்போது, அவை நம்முடைய உடல் உறுப்புகளைப் பாதிப்படையச் செய்வதோடு நம்முடைய ஆரோக்கியத்தையும் பெரிதும் பாதிக்கிறது.

உடல் உறுப்புகளைப் பாதிக்கும் செயல்பாடுகள் எவை? அவை எவ்விதம் உடல்உறுப்புகளைப் பாதிக்கின்றன என்பது பற்றிப் பார்ப்போம்.

உடல்உறுப்புகளைப் பாதிக்கும் செயல்பாடுகள் மற்றும் பாதிப்புகள்

காலை உணவினை புறக்கணிக்கும்போது வயிறு சேதாரமடைகிறது.

ஒரு நாளைக்கு 10 டம்ளர் தண்ணீர் அருந்தவில்லை எனில் நம்முடைய சிறுநீரகங்கள் பாதிப்படைகின்றன.

இரவு 11 மணிவரை விழிந்திருந்து சூரியோதயத்தைப் பார்க்காமல் நாம் உறங்கும் போது நம்முடைய பித்தப்பை சேதாரமடைகிறது.

குளிர்ந்த பழைய உணவினை உண்ணும் போது நம்முடைய சிறுகுடல் பாதிக்கப்படுகிறது.

எண்ணெயில் பொரித்த, கார மசாலா உணவுகளை உண்ணும் போது பெருங்குடல் பாதிக்கப்படுகிறது.

சிகரெட் புகையால் மாசுபடுத்தப்பட்ட காற்றினை சுவாசிக்கும் போது நம்முடைய நுரையீரல்கள் பாதிக்கப்படுகின்றன.

வறுக்கப்பட்ட துரித வகையான உணவுகளை உண்ணும் போது கல்லீரல் பாதிக்கப்படுகிறது.

அதிகப்படியான உப்பு மற்றும் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவினை உண்ணும் போது நம்முடைய இதயம் பாதிக்கப்படுகிறது.

அளவுக்கு அதிகமான இனிப்புப் பொருட்களை உண்ணும் போது கணையம் பெரும் பாதிப்பைச் சந்திக்கிறது.

இருளில் மொமைல் போன் மற்றும் கணினியை இயக்கும் போது கண்கள் பெருமளவு பாதிப்படைகின்றன.

எதிர்மறையான எண்ணங்களை அதிகளவு சிந்திக்கும் போது மூளை பாதிப்படைகிறது.

இவ்வாறான பாதிப்புகளைச் சந்திக்கும் நம்முடைய உறுப்புகளை சந்தையில் மாற்றுப் பொருளாக வாங்கி உபயோகிக்க இயலாது.

ஆதலால் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பாதுகாக்க விரும்புவோர் நல்ல உணவுப் பழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான செயல்முறைகளை கடைப்பிடிப்பது அவசியம்.

தண்ணீரை அருந்தும் முறை

தண்ணீர் எல்லோருக்கும் அத்தியவசியமான ஒன்று. அந்த தண்ணீரை எந்த வேளைகளில் எவ்வளவு குடிப்பதால் பயன் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.

உடல் உள்உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்க தினமும் தூங்கிய எழுந்த பின்பு 1 டம்ளர் தண்ணீரைக் கட்டாயம் அருந்த வேண்டும்.

ஒவ்வொரு வேளை உணவிற்கும் அரைமணி நேரத்திற்கு முன்பாக 1 டம்ளர் தண்ணீர் அருந்த செரிமானம் நன்கு நடைபெறும்.

உணவு அருந்தும் போதும், உணவு அருந்திய அரை மணி நேரத்திற்கும் தண்ணீரைக் கண்டிப்பாக அருந்தக் கூடாது.

நாம் குளிப்பதற்கு முன்பு 1 டம்ளர் தண்ணீரை அருந்துவதால், உடலில் இரத்த அழுத்தம் சீராக்கப்படுகிறது.

நாம் தூங்குவதற்கு முன்பு 1 டம்ளர் தண்ணீரை அருந்துவதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பினைக் குறைக்கலாம்.

சரியான அளவு தண்ணீரை சரியான நேரத்தில் குடித்து உடல் ஆரோக்கியம் பேணுவோம்.



--

புதன், 19 ஆகஸ்ட், 2026

சிக்கன் சாப்பிட்டு விட்டு பால் அருந்தலாமா? ஆயுர்வேதம் சொல்வது என்ன?

பால்... குழந்தையின் முதல் உணவு. தாய்ப்பாலில் தொடங்கும் மனித உணவு வயதிற்கும் வாயின் ருசிக்கும் ஏற்ப மாறிக் கொண்டே இருக்கலாம்.

ஆனால் திரவ உணவு என்று வரும்போது பெரும்பாலானோரின் முதல் பால் அல்லது பால் சார்ந்த பானங்கள் தான்.

பாலில் கால்சியம், வைட்டமின்கள், மினரல்கள் இருக்கின்றன. குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் பாலை பரிந்துரைக்கும் நிபுணர்கள் அசைவ உணவுடன் பால் உட்கொள்வதை பெரும்பாலும் யாரும் பரிந்துரைப்பதில்லை.

ஆயுர்வேத நிபுணர் சொல்வதென்ன?

இது குறித்து ஆயுர்வேத நிபுணர் டாக்டர் நிகிதா கோலி கூறுவது என்னவென்று பார்ப்போம். சில உணவுகளை சேர்த்து உண்பதால் ஜீரண மண்டலத்தில் அசவுகரியம் ஏற்படும் என்பது உணவு அறிவியலில் நிரூபிக்கப்பட்ட உண்மை எனக் கூறுகிறார் நிகிதா.

அசைவ உணவை உண்ட பின்னர் பால் அருந்தினால் அது ஜீரண மண்டலத்தில் உபாதைகள் ஏற்படுத்துவதுடன் சொரியாஸிஸ், விடிலிகோ போன்ற சரும பாதிப்புகளையும் ஏற்படுத்துமாம். ஆகையால் அசைவ உணவுடன் பால் அருந்துவதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார் ஆயுர்வேத நிபுணர் டாக்டர் நிகிதா கோலி.

வெவ்வேறு ஜீரண சக்தி தேவைப்படும் உணவுகளை நாம் வெவ்வேறு நேரத்தில் தான் உண்ண வேண்டும். அதேபோல் பகலில், இரவில் உண்ணத்தக்க உணவு எவை என்பது பகுப்பாய்ந்து உண்ண வேண்டும். அப்படிச் செய்தால் உணவால் வரும் ஒவ்வாமை, அரிப்பு, வயிற்று உபாதைகள் என பலவற்றிலும் இருந்து தப்பிக்கலாம் என அவர் கூறுகிறார். கபம், வாதம், பித்தம் ஆகிய மூன்று தோஷங்களின் அளவு மிகுந்தாலும், குறைந்தாலும் தொந்தரவே. இவை சரிசமமாக இருக்கும் அளவில் வகையில் தான் நம் உணவுப் பழக்கவழக்கமும் இருக்க வேண்டும்.

சிக்கனும் பாலும் ஓகேவா?

இவ்வளவு சொல்லியும் கூட சிலர் சிக்கனும் பாலும் சேர்த்து சாப்பிடலாமா? எனக் கேட்கக் கூடும். கோழி இறைச்சியில் அதிகப்படியான புரதம் உள்ளது. பாலில் அதிகப்படியான கால்சியம் உள்ளது. இவை இரண்டையும் ஒன்றாக உட்கொண்டால் உடலில் நச்சு உருவாகும். அது உடலில் நீண்ட காலம் தங்கலாம். இவை இரண்டு ஜீரணம் ஆகாமல் இருக்கலாம். இதனால் வயிற்றுவலி, குமட்டல், உப்புசம், வாயுத் தொல்லை, வாய் துர்நாற்றம், மலச்சிக்கல் ஆகியன ஏற்படலாம். ஒருவேளை நான் அசைவம் சாப்பிட்டுவிட்டேன் ஆனால் இரவில் நான் பால் அருந்தாமல் இருக்க முடியாது என்று நினைப்பவர்கள் குறைந்தது 2 மணி நேர இடைவெளிக்குப் பின்னர் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.



--

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

இரவு நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் மாற்றங்கள்.

சாப்பிட்ட பிறகு செய்யும் வாக்கிங் இதய பாதிப்புகளை குறைக்கும் என்றும் ஆய்வு ஒன்று கூறுகிறது. 10 நிமிட நடை பயிற்சியில் வளர்ச்சிதை மாற்றத்திலும் முன்னேற்றம் இருக்கும்.

கலோரிகளும் குறையும். சர்க்கரை நோய் வருவதையும் தடுக்க முடியும்.

சாப்பிட்ட பிறகு நிச்சயம் பலருக்கும் உடலில் அணுவும் அசையாது என்பதுபோல தான் இருக்கும். அப்படியே கொஞ்சம் படுக்கலாமா என சோம்பேறித்தனமும் ஒட்டிக்கொள்ளும். ஆனால் அவ்வாறு படுத்தால் நெஞ்சு எரிச்சல், வாயு பிரச்னை ஆகியவை வரும். இவற்றையெல்லாம் தவிர்க்க சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் வாக்கிங் செல்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். அதோடு சாப்பிட்ட பிறகு செய்யும் வாக்கிங் இதய பாதிப்புகளை குறைக்கும் என்றும் ஆய்வு ஒன்று கூறுகிறது.

இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செல்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

பொதுவாக இரவு உணவுக்குப் பிறகு நடை பயிற்சி செல்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல பயனை தரும்.

குறிப்பாக, உடல் நலன் மட்டுமல்லாமல் மனநலனை மேம்படுத்தவும் இது உதவிகரமாக இருக்கும்.

அந்தவகையில் இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செல்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

இரவு நேரத்தில் நடந்து செல்வதால் சாப்பிட்ட உணவு எளிமையாக ஜீரணம் அடையும். இது வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

சாப்பிட்ட பிறகு நடை பயிற்சி செய்வதால் நமது மெட்டபாலிசம் மேம்பாடு அடைகிறது.

நடை பயிற்சியை தொடர்ந்து உணவுகள் வேகமாக செரிமானம் அடைவதால் நமது உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறுகின்றன. இதனால், உடல் உள் உறுப்புகளின் நலன் மேம்பாடு அடையும். அதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்

தினசரி நடை பயிற்சி செய்வதன் மூலமாக இதை கட்டுப்படுத்த முடியும். 15 நிமிடங்கள் அதிவேகமாக நடந்தீர்கள் என்றால் பசி உணர்வை கட்டுப்படுத்த முடியும்.

இரவில் நீங்கள் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுபவர் என்றால், உணவு சாப்பிட்ட பிறகு நடந்து செல்வது நல்ல பலனை தரும். உங்கள் ஸ்ட்ரெஸ் அளவை குறைத்து நன்றாக தூக்கம் வரும்.

மன அழுத்தம் அல்லது ஸ்ட்ரெஸ் போன்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வருபவர் என்றால், இரவு நேரத்தில் நடப்பது உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். உங்கள் உடலுக்கு ரிலாக்ஸ் உணர்வு கிடைக்கும்.



--

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

கண் அடிக்கடி துடிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?

சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது, ஒருசில மூடநம்பிக் கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது.

அது என்னவென்றால், ஆண்களுக்கு வலது கண் துடித் தால், நல்லது நடக்கும், அதுவே பெண்களுக்கென்றால் தீமை ஏற் படும் என்றும், ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப்போகிறது, அதுவே பெண்களுக்கானால் நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர்.

உண்மையில் இது மிகப்பெரிய முட்டாள்தனமான ஒரு மூடநம்பிக்கை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆம், நல்லது கெட்டது நடப்பதற் கும், கண்களுக்கும் எப்படி தொடர் பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சிந்திக்காமல், குருட்டுத்தனமாக பலர் நம்பிக் கொண் டிருக்கிறார் கள்.

ஆனால் உண்மையில் இந்த மாதிரி கண்கள் துடிப்பதற்கு, உட லில் ஒருசில பிரச்சனைகள் உள்ள து என்பதற்கான அறிகுறியாகும்.

அதுமட்டுமல்லாமல், கண்கள் துடிப் பதற்கு "மயோகிமியா" (myokymia) என்று பெயர்.

இத்தகைய கண் துடிப்பு அல்லது தசைச் சுருக்கம் ஏற்படுவதற்கு அதிகப்படியான மன அழுத்தம், தூக்க மின்மை, அதிகமாக காப்ஃபைன் உட் கொள்ளுதல் மற்றும் பல காரணங்களா கும். சிலருக்கு கண் துடிப்பான து ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கூட இருக்கலாம். சரி, இப்போது இந்த கண் துடிப்பு ஏற்படு வதற்கான காரணங்கள் .

மனஅழுத்தம்:

மன அழுத்தமானது அதிகம் இரு ந்தாலும் கண்கள் துடிக்க ஆரம்பி க்கும். எனவே மன அழுத்ததைக் குறைக்கும் செயல்களில் ஈடுபட் டால், அடிக்கடி கண்கள் துடிப்பதை தவிர்க்கலாம்.

தூக்கமின்மை:

மன அழுத்தம் அதிகம் இருந்தால், தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்க நேரிடும். இவ்வாறு சரியான தூக்கம் இல்லாவிட்டால், கண்களானது துடிக்கும்.

கண்களுக்குசிரமம்:

கண்களுக்கு அதிகப்படியான சிரமத்தைக் கொடுத்தாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். உதார ணமாக, படிக்கும் போது சரியாக தெரியாவிட்டால், அப்போது கண் களை பரிசோதித்து, அதற்கு கண் ணாடிகளை போடாமல், சிரமப் படுத்தி அப்படியே படித்து கண்க ளுக்கு சிரமம் கொடுத்தாலும், கண்கள் துடிக்கும். மேலும் நீண் ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல்களை பார்த்துக் கொண்டே இருந்தால், கண்கள் களைப் படைந்துவிடும். இதனால் கண்களு க்கு அழுத்தம் ஏற்பட்டு துடிக்கஆரம்பிக்கும்.

ஆகவே கம்ப்யூட்டர் அல்லது மொபைல் பயன்படுத்தும் போது, சரியான கண்ணாடிக ளை அணிந்து கொண்டு பயன்படுத்தினால், கண் துடிப்பில் இருந்து விடுபடலாம்.

காப்ஃபைன்:

அதிகமாக காப்ஃபைன் உள்ள பொரு ட்களான காபி, டீ போன்றவற்றை அருந்தினாலும், கண்கள் துடிக்க ஆர ம்பிக்கும். எனவே இத்தகைய பொருட்களை அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது.

ஆல்கஹால்:

ஆல்கஹாலை அதிகம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, கண் கள் துடிக்கும். ஆகவே ஆல்கஹா லை அதிகம் பருகாமல், மருந்து போன்று எடுத்துக் கொள்வது நல்லது.

கண்வறட்சி:

கண் வறட்சியினாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். போதிய தண்ணீர் பருகாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் இருப் பது, காப்ஃபைன் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள் வது, மன அழுத்தம், சோர்வு போன்றவற் றால் கண்களானது வறட்சிய டைகிறது. ஆகவே இத்தகைய செயல்களை தவிர்த் தால், கண் வறட்சியில் இருந்து விடுபட லாம்.

ஊட்டச்சத்துகுறைபாடு:

சில ஆய்வுகள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் கண்க ளில் உள்ள தசைகள் துடிக்க ஆரம்பிக்கும் என்று சொல்கிறது. அதிலும் மக்னீசியம் குறை பாடு இருந்தால், கண்கள் துடிக்கும் என்று கூறுகிறது. ஆகவே சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவு முறைக ளை மேற்கொண்டால், கண்கள் துடிப்பதை தவிர்க்கலாம்.

அலர்ஜி:

சிலருக்கு கண் அலர்ஜிகள் ஏற்படும். கண் அலர்ஜிகளான கண்களில் அரிப்பு, வீக்கம், கண்கள் சிவப் பாகி கண்ணீர் வடிதல் போன்றவற் றின் போது, கண்களை தேய்த்தால் வெளிவரும் ஹிஸ்டமைன் கண் திசுக்களில் நுழைந்து, கண்களை துடிக்க வைக்கும். ஆகவே கண் அலர்ஜி இருந்தால், அப்போது தேய்க்காமல், கண் மருத்துவரை அணுகி, சரியான மருந்துகளை எடுத்துக் கொண்டால், கண் துடிப்பில் இருந்து விடுபடலாம்.



--

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

ஹேண்ட்பேக் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நல பிரச்சனைகள்.


பெண்கள் வெளியே செல்லும் போது ஹேண்ட்பேக் அவசியமானது.

ஏற்கனவே எடுத்து செல்லும் பொருட்களின் எடை அதிகமாக இருக்கும்பட்சத்தில் ஹேண்ட்பேக்கை வாங்கும்போதே அதன் எடையைக் கவனிக்க வேண்டும். இல்லையெனில் பல உடல்நல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

வேலைக்குச் செல்லும் பெண்கள், தங்களுக்குத் தேவையான குடை, வாட்டர் பாட்டில், லஞ்ச் பாக்ஸ், முக்கியமான பேப்பர்கள், மேக்கப் பொருட்களை ஹேண்ட் பேக்கில் வைத்துக்கொள்கிறார்கள். குறைந்தபட்சம் நான்கு கிலோ பொருள்களுடன் ஒரு பக்கமாக மட்டுமே மாட்டிக்கொண்டு செல்வார்கள். இப்படித் தொடர்ந்து பயன்படுத்துவதால், பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.

எலும்புகளில் பாதிப்பு ஏற்படும் தோள்பட்டையில் உள்ள நரம்புகள் நசுங்கி, கையில் வலியை ஏற்படுத்தும். அந்தப் பகுதியின் தசைகளும் பாதிப்படையும். பலரும் ஹேண்ட்பேக்கை வாங்குவதோடு சரி, அதனை பயன்படுத்திவிட்டு குப்பை தொட்டியில் தூக்கி வீசும் வரை அவற்றை துவைத்து சுத்தம் செய்வதே இல்லை. ஹேண்ட்பேக் தேர்வு அன்றாடம் பயன்படுத்தும் பேக் எனில், அது எடை குறைவானதாக இருக்கட்டும். அடிக்கடி துவைத்துச் சுத்தம் செய்ய எளிதாக இருக்கும் வகையிலும் அமைந்திருக்கவேண்டும்.

தோள் பகுதியில் வரும் ஸ்ட்ராப், பட்டையாக இருக்க வேண்டும். இரண்டுத் தோள்களிலும் மாட்டிக்கொள்ளும்படியான பின்பக்க பேக்கைப் பயன்படுத்தலாம். ஷோல்டர் பேக்கை பயன்படுத்தும்போது வலது கை, இடது கை என அடிக்கடி பையை மாற்றி அணியுங்கள். அனைத்துப் பொருள்களையும் ஹேண்ட்பேக்கில் அடைக்காமல், உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றுக்கு லஞ்ச் பேக்கைப் பயன்படுத்துங்கள். அடிக்கடி ஹேண்ட்பேக்கை சுத்தம்செய்து தேவையற்ற காகிதங்கள், பயன்பாடில்லாத பொருள்களை அப்புறப்படுத்தவும். மொத்தத்தில் ஹேண்ட்பேக்கை லக்கேஜ் ஏற்றும் லாரியாக பயன்படுத்தாமல் மயிலிறகாக மென்மையாக கையாள வேண்டும்.



--

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

புதிதாக குழந்தைபெற்ற தாய்மார்களின் தூக்கமில்லா இரவுகளுக்கான சில தீர்வுகள்.


உங்கள் வீட்டில் புதிதாகப் பிறந்த குழந்தை இருக்கும் போது சரியான நேரத்தில் தூங்குவது சாத்தியமில்லை.

நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கான போராட்டம் உங்களை கவலையுடனும் மன அழுத்தத்துடனும் ஆக்குகிறது. நீங்கள் நன்றாக தூங்க உதவும் சில குறிப்புகள் இங்கே உள்ளன.

குழந்தையின் வருகைக்குப் பிறகு, தூங்குவது கடந்த காலத்தின் ஒரு விஷயமாகிவிடும். உங்கள் தூக்கத்தை தியாகம் செய்வது பல்வேறு மன மற்றும் உடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அவை ஏற்படுவதைத் தவிர்க்க, நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில எளிய உத்திகள் இங்கே உள்ளன.

*குழந்தைகள் சிறுநீர் கழித்த பிறகு அவ்வப்போது எழுந்திருக்கும். இந்த வழக்கில், உங்களுக்கு தேவையான பொருட்கள் அருகில் இருந்தால், உங்கள் குழந்தையின் டயப்பரை எளிதாக மாற்றிவிட்டு மீண்டும் தூங்கலாம்.

*தூக்கத்தின் தரம் கால அளவை விட முக்கியமானது என்பதால் நல்ல தரமான மெத்தையை வாங்கவும்.

*ஒரு அசௌகரியமான தலையணையை வைத்திருப்பது, நீங்கள் குழந்தையைக் கையாளும் போது கூடுதல் சிக்கல்களைத் தரலாம். மேலும், இது உங்கள் தூக்கத்தையும் பாதிக்கும்.

*ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்கள் தூங்குவதில் சிக்கல்களை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. எனவே, பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவற்றைத் தேர்வு செய்யவும்.

*வீட்டினுள் ஏகப்பட்ட வேலைகள் இருக்கும் போது உங்களுக்காக நேரம் ஒதுக்குவது கடினம் தான். இருப்பினும் தினமும் உடற்பயிற்சி செய்வது சிறந்த தூக்கத்திற்கு உதவுகிறது.



--

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

நீண்ட நேரம் கணினியில் வேலை செய்பவர்களுக்கு கழுத்து வலி மற்றும் தலை சுற்றல் வருவது ஏன்?

அலுவகத்தில் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்து பணியாற்றுவது கழுத்து வலியை உண்டாக்கும். தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒருபக்க கழுத்து வலியால் அவதியுற்று வருவோர் சிலருக்கு வலது அல்லது இடது புறம் தலையைத் திருப்பினால் மயக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படும்.

இது எதனால் ஏற்படுகிறது எனத் தெரிந்துகொள்வோம்.எதனால் ஏற்படுகிறது?இதயத்தில் இருந்து கழுத்து வழியாக மூளைக்குச் செல்லும் ரத்த குழாய்கள் மூளைக்கு ரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை கொண்டு சேர்க்கும். தொடர்ந்து கணினி திரையைப் பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் தங்களை அறியாமல் கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்து பல மணிநேரமாக வேலை செய்வர். இவ்வாறு செய்யும்போது மூளைக்குச் செல்லும் ரத்த குழாய்கள் அழுத்தப்படும். இதனால் போதுமான அளவு ரத்தம் மூளைக்குச் செல்லாமல் ரத்தக் குழாயில் தேங்கும்.

இதனால் வலது அல்லது இடது பின்னங்கழுத்தில் உள்ள குழாய்கள் விரிவடையும். இதன்காரணமாக வலி ஏற்படும். மூளைக்கு போதுமான ரத்தம் செல்லாமல் இருந்தால் கழுத்தை வலது அல்லது இடப்புறம் திருப்பினால் மயக்கம் வருவது போன்ற உணர்வு அல்லது தலை சுற்றல் ஏற்படும்.தீர்வுஇதற்கு நரம்பியல் மருத்துவர்கள் எளிதான தீர்வைக் கூறுகின்றனர். பணிக்கு இடையே அவ்வப்போது கழுத்தை அசைத்தல், எழுந்து உட்காருதல், கை, கால்களை நீட்டுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் ரத்தக் குழாயில் ரத்தம் சீராகப் பாயும்.

இதனால் மூளை சுறுசுறுப்படையும். நாம் நீண்ட நேரம் அசையாமல் அமர்ந்து எழுந்தால் சோம்பல் முறிக்க உடல் ஏங்குவதை நாம் உணர்ந்து இருப்போம். இதனால் ரத்த குழாய்களுக்குள் ரத்த ஓட்டம் சீராகும். அதேபோல கழுத்துக்கு அவ்வப்போது அசைவு கொடுப்பது எதிர்காலத்தில் வெர்டிகோ உள்ளிட்ட எலும்பு நோய்கள் வருவதைத் தவிர்க்கும்.



--

புதன், 29 ஜூலை, 2026

பிறந்தகுழந்தைகளுக்கு டயாப்பர் அணிவிப்பது சரியானதா?


 டயாப்பர் அணிவிக்காமல் இன்றைய சூழ்நிலையில் சமாளிக்க முடிவதில்லை.

டயாப்பர் அணிவிக்கக் கூடாது என்கிறார்கள் சிலர். தெளிவான விளக்கம் தேவை.

பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ்.ஸ்ரீநிவாஸ்.

பிறந்த குழந்தைகளுக்கு சரியான அளவுள்ள, தரமான டயாப்பர்களை முறையாகப் பயன் படுத்தலாம். தற்போது கிடைக்கும் டயாப்பர்கள் சிறுநீர் மற்றும் கழிவுகளை நன்கு உறிஞ்சும் திறன் உடையவாக இருக்கின்றன.

ஈரத்தால் ஏற்படும் அவதிகளைத் தவிர்த்து, குழந்தைகள் சிரமமின்றி நன்கு உறங்குவதற்கு இந்த டயாப்பர்கள் நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமில்லை. குழந்தைக்கு ஒருமுறை டயாப்பர் அணிவித்தால் அதை அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மாற்றத் தேவையில்லை.

பெற்றோருக்கும் அடிக்கடி துணி மாற்றுவது, துவைப்பது போன்ற சிரமங்கள் இதனால் தவிர்க்கப்ஸபடுகின்றன.

தரமான, நல்ல மெட்டீரியலில் செய்யப்பட்ட டயாப்பர்களை குழந்தை தூங்கும் போதும், பயணத்தின்போதும், தவிர்க்க இயலாத நேரத்திலும் பயன் படுத்தலாம். ஆனால் ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கு ஒருமுறையும் டயாப்பரை மாற்ற வேண்டியது அவசியம்.

பெற்றோர் தங்கள் வசதிக்காக 24 மணி நேரமும் குழந்தையை டயாப்பருடன் இருக்க விடுவது மிகவும் தவறு.



--

ஞாயிறு, 26 ஜூலை, 2026

மட்டனா?சிக்கனா? நீரிழிவுநோயாளிகளுக்கு எது நல்லது?



நீரிழிவு நோய் இன்று மக்களிடையே மிகவும் பொதுவானதாகி விட்டது. இந்த கோளாறில், இரத்தத்தில் சர்க்கரை அளவு அசாதாரணமாக அதிகரிக்கிறது.

உடல் இன்சுலின் ஹார்மோனை போதுமான அளவு உற்பத்தி செய்ய முடியாததால் இது ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் தேவை.

நீரிழிவு நோயாளிகள் குறைந்தபட்சம் கார்போஹைட்ரேட் மற்றும் நிறைவுற்ற கொழுப்பை உட்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் எந்த உணவை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்ற குழப்பம் எப்போதும் இருப்பதுண்டு.

முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் மட்டன் சாப்பிடுவது நல்லதா அல்லது சிக்கன் சாப்பிடுவது நல்லதா என்ற பெரிய சந்தேகம் பலருக்கு உள்ளது. இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் தினசரி டயட்டில் கண்டிப்பாக சேர்க்க வேண்டிய உணவுகள்!

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ள நோயாளிகள் சிவப்பு இறைச்சியின் நுகர்வை குறைக்க வேண்டும். ஏனெனில் அதில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்பு இதய நோய்களை ஏற்படுத்தும். சிவப்பு இறைச்சியில் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, ஆடு மற்றும் ஆட்டுக்குட்டி இறைச்சி ஆகியவை அடங்கும்.

இவற்றில், இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் சிவப்பு இறைச்சி ஆட்டிறைச்சி ஆகும். ஆட்டிறைச்சி என்று சொன்னால், இந்தியாவில் ஆட்டின் இறைச்சி என்று அர்த்தம், செம்மறி அல்ல. இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ், ரிபோஃப்ளேவின், தயாமின், வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் சிவப்பு இறைச்சியை மக்கள் மிகவும் விரும்புகிறார்கள்.

சிவப்பு இறைச்சியில் உள்ள சோடியம் மற்றும் நைட்ரைட்டுகள் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழிவு நோயை ஏற்படுத்துகின்றன. இது உடலில் வீக்கத்தையும் ஏற்படுத்தும். இது சில வகையான புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.

இருப்பினும், ஆட்டிறைச்சி விஷயத்தில் இந்த அபாயங்கள் குறைவாக இருக்கலாம். ஆட்டு இறைச்சியில் அதிக சத்துக்கள் இருக்கலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் சோடியத்தை விட அதிக பொட்டாசியம் உள்ளது. எனவே நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இருப்பினும், உங்களுக்கு இரத்த சர்க்கரை பிரச்சனை இருந்தால், சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை அணுகி தேவையான அறிவுரைகளை பெறுவது நல்லது.

ஆராய்ச்சியின் படி, கோழிக்கு குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மதிப்பு உள்ளது. கோழிக்கறி சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்று நம்பப்படுகிறது. கோழி இறைச்சியில் புரதம் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது. மேலும் இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் மற்றும் பி, ஏ மற்றும் டி போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

ஆகையால், நீரிழிவு நோயாளிகளுக்கு கோழி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். கோழி இறைச்சியில் மிகக் குறைந்த கொழுப்பு கொண்ட புரதச்சத்து அதிகம். கோழியை ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிட்டால், அது ஆரோக்கியமான உணவாக மாறும்.



--

எவ்வளவு தண்ணீர் அருந்தினால் நல்லது?

கோடை காலத்தில் தண்ணீரின் அவசியம் குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதே சமயம் , மொத்த பூமியில் 70 சதவீத அளவுக்கு தண்ணீரால் நிரம்ப...

Popular Posts