லேபிள்கள்

வியாழன், 23 ஜூலை, 2026

மாத்திரைகள்சாப்பிட்டிற்கு முன் / பின் பரிந்துரைக்கப்படுவது ஏன் தெரியுமா?


மாத்திரைகள் சாப்பிட்டிற்கு முன் / பின் பரிந்துரைக்கப்படுவது ஏன் தெரியுமா?

உடல்நலமின்றி மருத்துவரை நாம் அணுகும் போது, மருத்துவர்கள் சில மருந்துகளை உணவுக்கு முன்னரும், சில மருந்துகளை உணவுக்குப் பின்னரும் உட்கொள்ள பரிந்துரைப்பார்கள்.

எல்லா மருந்துகளும் நோயைக் குணப்படுத்தத்தானே, பின் ஏன் இதுபோன்று பரிந்துரைக்கிறார்கள் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கக்கூடும்.

இந்தக் குழப்பத்துக்குத் தீர்வு என்ன?

"முதலில் நமது செரிமான அமைப்பு பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். உணவை, உமிழ்நீருடன் சேர்ந்து நன்கு மென்று சாப்பிடும்போது உணவுக்குழாய் மூலமாக அந்த உணவு இரைப்பைக்குச் செல்கிறது. அங்கு உணவானது ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் சில செரிமான நொதிகளுடன் சேர்ந்து, கூழ் போன்று மாற்றப்பட்டு சிறுகுடலுக்குள் செலுத்தப்படும்.

அங்குள்ள செரிமான நொதிகளின் செயல்பாட்டின் மூலம் உணவு செரிமானமடைந்து, அதில் இருக்கும் குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் ரத்த நாளங்களுக்குள் கலந்து உணவானது முழு ஆற்றலாக மாற்றப்படுகிறது.

இதே செரிமான முறைதான் மாத்திரைகளுக்கும். மாத்திரைகளும் நன்கு செரித்து, ரத்தத்துடன் கலந்த பின்புதான் அவற்றின் பயன் நமக்குக் கிடைக்கும். உணவு வயிற்றுக்குள் இருக்கும்போது எளிதில் மாத்திரை செரிமானம் அடையாது என்பதால், சில மாத்திரைகளை உணவுக்கு முன்பே எடுக்க வேண்டும். காசநோய், தைராய்டு மாத்திரைகள் எளிதில் செரிமானம் அடையாதவை என்பதால் அவற்றை உணவுக்கு முன்பே எடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைக்கப்படும்.

சர்க்கரை நோய்க்கான மாத்திரையும் உணவுக்கு முன்பே சாப்பிட்டால்தான், இன்சுலின் சுரந்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். வயிற்றுப்புண்ணுக்கு (அல்சர்) மருந்து எடுத்துக்கொள்ளும் போதும் அமிலத்தன்மை குறைவதற்காக உணவுக்கு முன்பே மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் மாத்திரை, வலி நிவாரணி, எதிர்ப்புச் சக்தி மருந்துகள் போன்றவை வயிற்றில் அல்சர், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும் என்பதால் உணவுக்குப் பின்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.

எந்த வேளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுச் சொல்லாத மாத்திரைகளை உணவு சாப்பிட்டு, அரை மணி நேரத்துக்குப் பின்பு சாப்பிட வேண்டும். அந்த நேரத்தில் நாம் சாப்பிடும் உணவும் எளிதில் செரிமானம் அடைவதாக இருக்க வேண்டும்.

பாலும் தயிரும் செரிமானத்தைத் தாமதமாக்கும் என்பதால் இவற்றை சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். மாத்திரை சாப்பிட்டவுடன், அல்லது 5 நிமிடங்களுக்குள் வாந்தி எடுத்துவிட்டால், மாத்திரை முழுவதுமாக வெளியே வந்துவிட்டால், மீண்டும் 15 – 20 நிமிடங்களுக்குள் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம்.

மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள் சரியாக இருக்கின்றனவா எனவும், மாத்திரை காலாவதி தேதி எப்போது எனவும் சரிபார்த்து மாத்திரைகளை வாங்க வேண்டும். காலை, மாலை என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டபடி சரியாகப் பார்த்து வாங்க வேண்டும்" என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.



--

ஞாயிறு, 19 ஜூலை, 2026

திருமணத்திற்கு முன்பு செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்.

திருமண பந்தத்தில் இணையபோகும் முன் ஜாதகம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கும் பெரும்பாலானோர், தம்பதிகளாக போகும் இளம் ஜோடிகளின் உடல் பிரச்சனைகள் குறித்து அக்கறை கொள்வதில்லை.

இன்னும் சொல்லப்போனால், உடல் பரிசோதனைக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். திருமண பந்தத்தில் இணைவதற்கு முன்பு, இளம் ஜோடிகள் இருவரும் 9 மருத்துவ பரிசோதனைகள் கட்டாயம் செய்ய வேண்டும்.

1. சிபிசி டெஸ்ட்

ஒருவரின் உடல்நிலையை அறிய முழுமையான இரத்த பரிசோதனை செய்ய வேண்டும். இந்த சோதனை மூலம் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிந்து, அதன் மூலம் இரத்த சோகை, தொற்று, வீக்கம், இரத்தப்போக்கு கோளாறுகள் அல்லது லுகேமியா போன்ற பல்வேறு நோய்களைக் கண்டறிய முடியும்.

2. ரத்த வகை:

ரத்த வகை பரிசோதனையும் அவசியம். சில இரத்தக் குழுக்கள் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவதில்லை என்பதால் இந்தப் பரிசோதனை முக்கியமானது. இது கர்ப்ப காலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

3. கருவுறுதல் சோதனை

திருமண பந்தத்தில் குழந்தைபேறு முக்கியமாக பார்க்கப்படுகிறது என்பதால், குழந்தை பேறுக்கான விந்தணு சோதனைகளை செய்து கொள்வது அவசியம். இதன் மூலம் உங்களின் ஆற்றலை அறிந்து முன்கூட்டியே சிகிச்சை எடுக்கவும் உதவியாக இருக்கும்.

4. மரபியல் மருத்துவ வரலாறு

நீரிழிவு அல்லது இதய நோய் இப்போதெல்லாம் பொதுவானது. எனவே, திருமணத்திற்கு முன் தம்பதிகள் ஒருவருக்கொருவர் குடும்ப மருத்துவ வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இது குழந்தை மற்றும் தம்பதியரின் எதிர்கால ஆரோக்கியத்தை பாதிக்கும்.

5. எச்.ஐ.வி மற்றும் எஸ்.டி.டி சோதனை

எச்.ஐ.வி மற்றும் பிற பால்வினை நோய்கள் (எஸ்.டி.டி) ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும். எனவே, ஆண் - பெண் இருவரும் இவற்றில் எந்த தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

6. தலசீமியா சோதனை

தலசீமியா உங்கள் எதிர்கால குழந்தைகளில் பிறவி குறைபாடுகளை ஏற்படுத்தும். எனவே, திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

7. மனநல நிலை

மகிழ்ச்சியான திருமணத்திற்கு இருவரின் மன ஆரோக்கியம் அவசியம். இதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியம்.

8. நாள்பட்ட நோய்

எந்தவொரு நாள்பட்ட நோயும் கர்ப்ப காலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். திருமணமான தம்பதிகள் தங்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நிலையை ஏற்கனவே அறிந்திருக்க வேண்டும். எனவே, இந்த சோதனையை எடுக்க வேண்டியது அவசியம்.

9. கர்ப்பப்பை சோதனை

கர்ப்பப்பை சோதனை அவசியம். இதன்மூலம் கருப்பைகள் மற்றும் ஃபலோபியன் குழாய்களின் நிலையை அறிந்து கொள்ள முடியும். இது கருவுறுதல் பிரச்சனைக்கு தீர்வு காண வழிவகுக்கும்.



--

வியாழன், 16 ஜூலை, 2026

சிறுநீரக கல்பிரச்சினையால் அவதியா? அதைக் கரைக்க எளிய வழிகள்.


பொதுவாக சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது பெரும் வலியை தரக்கூடிய உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாகும்.

மிகச் சிறிய படிவங்கள் தேங்கி, கற்களாக உருவாகி சிறுநீரகத்தில் தங்கிவிடுகின்றன. இது வலியை ஏற்படுத்தாதவரை யாரும் இதை கண்டுபிடிப்பது இல்லை.

சிறுநீரகத்தில் கல் இருந்து, அது சிறுநீர்ப்பாதை வழியாக நகர்ந்து வெளியேறும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. இது சிறுநீர் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதுதான் வலி கடுமையாகும்.

சிறுநீரக கற்கள் தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும் என்றாலும், வீட்டு முறை சிகிச்சைகளில் இதை கரைக்க முடியும். தற்போது அவை எப்படி என பார்ப்போம்.

நாள் ஒன்றுக்கு 2 லிட்டர் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் உருவாகுவதை தடுக்க முடியும்.

நாம் போதுமான அளவு தண்ணீர் குடித்தால் தான் நமது சிறுநீரகங்கள் அசுத்தங்களை வெளியேற்ற முடியும். ஆகவே, சராசரியாக ஒரு ஆண் நாளொன்றுக்கு 3.7 லிட்டர் தண்ணீரும், ஒரு பெண் 2.7 லிட்டர் தண்ணீரும் அருந்துவது அவசியமாகும்.

மாதுளம் பழச்சாறு எடுத்துக் கொள்ளும்போது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவது தடுக்கப்படுகிறது. சிறுநீரின் அசிடிட்டி அளவையும் இது குறைக்கிறது.

நமது சிறுநீரகத்தில் உள்ள கற்களை வெளியேற்றி, சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் தன்மை ராஜ்மா விதைகளில் இருக்கிறது.

சீமை காட்டு முள்ளங்கி ஜூஸ் அருந்துவதும் சிறுநீரக கற்களை வெளியேற்றுவதற்கு உதவும்.

கோதுமைப்புல் ஜூஸ் என்பது நம் உடலுக்கு நன்மை அளிப்பதாகவும். சிறுநீரை இது பெருக்கும். ஆகவே சிறுநீரக கற்கள் வெளியேற உதவியாக இருக்கும்.

கிரீன் டீ என்பதும் கால்சியம் ஆக்ஸலேட் கொண்டது என்றாலும் இதன் மூலமாக சிறுநீரக கற்கள் உருவாகாது. ஆகவே, தினசரி கிரீன் டீ அருந்தினால் சிறுநீரக கற்களை வெளியேற்ற முடியும்.



--

திங்கள், 13 ஜூலை, 2026

கடுகைக் கொண்டுவிஷக்கடி மற்றும் பூச்சிகடியை சரி செய்வது எப்படி?


பொதுவாக நா‌ம் கடுகை சமைய‌லி‌ல் தா‌ளி‌ப்பத‌ற்கு பய‌ன் படு‌த்து‌கிறோ‌ம். அதாவது, நா‌ம் சமை‌க்கு‌ம் சமைய‌ல் ‌ஜீரணமாக அடி‌ப்படையான கடுகை முத‌லி‌ல் போடு‌கிறோ‌ம்.

ஏ‌ன் எ‌ன்றா‌ல் கடுகு ‌ஜீரண‌த்‌தி‌ற்கு உதவு‌கிறது.

‌தினமு‌ம் காலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் கடுகு, ‌மிளகு, உ‌ப்பு மூ‌ன்றையு‌ம் ஒரே அளவு சே‌ர்‌த்து சா‌ப்‌பி‌ட்டு‌வி‌ட்டு அத‌ன்‌பிறகு வெ‌ந்‌நீ‌ர் குடி‌க்க வே‌ண்டு‌ம். இ‌ப்படி செ‌ய்வதா‌ல் ‌பி‌த்த‌ம், கப‌ம் போ‌ன்ற‌ற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் உட‌ல் உபாதைக‌ள் ‌நீ‌ங்கு‌ம்.‌ விஷ‌ம், பூ‌ச்‌சி மரு‌ந்து, தூ‌க்க மா‌த்‌திரை போ‌ன்றவ‌ற்றை சா‌ப்‌பி‌ட்டவ‌ர்களு‌க்கு‌ம், 2 ‌கிரா‌ம் கடுகை ‌நீ‌ர்‌வி‌ட்டு அரை‌த்து ‌நீ‌ரி‌ல் கல‌க்‌கி உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌த்தா‌ல் உடனடியாக வா‌ந்‌தி எடு‌த்து ‌விஷ‌ம் வெ‌ளியேறு‌ம்.

கடுகு, பூ‌ண்டு, வச‌ம்பு, கருவா‌ப்ப‌ட்டை, கழ‌ற்‌சி‌க்கா‌ய், கடுகு, ரோ‌கி‌ணி ஆ‌கியவ‌ற்றை சம அளவு ‌எடு‌த்து ‌நீ‌ர்‌வி‌ட்டு கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி இருவேளை ‌வீத‌ம் ஒரு வார‌ம் குடி‌த்து வர வாத‌ம், வா‌ய்‌வு, கு‌த்த‌ல் ‌பிர‌ச்‌சினை குணமாகு‌ம். கடுகு, ‌ம‌ஞ்ச‌ள் சம அளவு எடு‌த்து ந‌ல்லெ‌ண்ணெ‌யி‌ல் கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கா‌தி‌ல் ‌சில சொ‌ட்டுக‌ள் இட தலைவ‌லி‌க்கு ‌நிவாரண‌ம் ‌கி‌ட்டு‌ம்

சமையல் கடுகு மளிகைக் கடைகளில் சாதாரணமாகக் கிடைப்பதாகும். நம் அனைவருக்கும் நன்கு பழக்கமானதாகும். கடுகு எண்ணெய் மற்றும் வெள்ளைக் கடுகு ஆகியவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். தேவையான அளவு கடுகை, தேனுடன் சேர்த்து அரைத்து, பசையாகச் செய்து, கட்டிகளின் மீது பூச கட்டிகள் உடையும்.

தே‌னி‌ல் கடுகை அரை‌த்து‌ உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌க்க இரும‌ல், கப‌ம், ஆ‌ஸ்துமா குணமாகு‌ம். கடுகை தூ‌ள் செ‌ய்து வெ‌ந்‌நீ‌ரி‌ல் ஊற வை‌த்து வடி‌த்து கொடு‌க்க ‌வி‌க்கலை குணமா‌க்கு‌ம். கடுகை அரை‌த்து ப‌ற்‌றிட ர‌த்த‌க்க‌ட்டு, மூ‌ட்டு வ‌லி த‌ணியு‌ம். கை, கா‌ல்க‌ள் ‌சி‌ல்‌லி‌ட்டு ‌விரை‌த்து‌க் காண‌ப்ப‌ட்டா‌ல் கடுகை அரை‌த்து து‌ணி‌யி‌ல் தட‌வி கை, கா‌ல்க‌ளி‌ல் சு‌ற்‌றி வை‌க்க வெ‌ப்ப‌த்தை உ‌ண்டா‌க்கு‌ம். ‌உடனடியாக ‌விரை‌ப்பு ‌சீராகு‌ம்.


--

வியாழன், 9 ஜூலை, 2026

படுத்தவுடன் தூங்கசில வழி முறைகள்.


தூக்கமின்மை குறைய:

தூக்கமின்மை குறைய பேரீட்சை, முருங்கை, ஆப்பிள்‌, எலுமிச்சை, கேரட்‌, திராட்சை, தேங்காய்‌ பால்‌, கொத்த மல்லி, நெல்லி இவைகளை சாப்பிட தூக்கமின்மை குறையும்‌.

தூக்கமின்மை குறைய வெள்ளரி விதைகளை அரைத்து பாலில்‌ குடித்து வர தூக்கமின்மை குறையும்‌.

தூக்கமின்மை குறைய கொல்லங்கோவைச்‌ செடியினை பருக்கை அறையில்‌ கட்டித்‌ தொங்கவிட்டால்‌ தூக்கமின்மை குறையும்‌.

தூக்கமின்மை குறைய ஜாதிக்காய்‌ பொழுயுடன்‌ நெல்லிக்காய்‌ சாறு கலந்து சாப்பிட்டால்‌ தூக்கமின்மை குறையும்‌.

தூக்கம்‌ வர:

தூக்கம்‌ வர சீரகத்தை வாழைபழத்துடன்‌ சாப்பிட்டால்‌ சுகமான தூக்கம்‌ வரும்‌.

தாக்கம்‌ வர சப்போட்டா பழம்‌ உண்டு வர இரவில்‌ நன்றாக தூக்கம்‌ வரும்‌.

தாக்கம்‌ வர கசகசாவை பொன்னிறமாக வறுத்து பொழியாக்கி 1 கிராம்‌ பொடியை எருத்து 1 டீஸ்பூன்‌ கற்கண்ருடன்‌ பால்‌ சேர்த்து குடித்து வந்தால்‌ நன்றாக தூக்கம்‌ வரும்‌.

தூக்கம்‌ வர அத்திக்காயை நெய்யில்‌ வதக்கி இரவு சாப்பிட்டி வந்தால்‌ நன்றாக தூக்கம்‌ வரும்‌.

தூக்கம்‌ வர ஆரஞ்சு பழச்சாற்றில்‌ தேனை கலக்கி சாப்பிட தூக்கம்‌ வரும்‌.

தூக்கம்‌ வர மருதாணிப்‌ பூவை தலையில்‌ வைத்துப்‌ பருத்தால்‌ தூக்கம்‌ வரும்‌.

தூக்கம்‌ வர மருதாணிப்‌ பூவையும்‌, உலர்ந்த காயையும்‌ தூள்‌ செய்து சாம்பிராணியுடன்‌ கலந்து புகை பிடித்தால்‌ தூக்கம்‌ வரும்‌.

தாக்கம்‌ வர ரோஜாப்பூ வெள்ளை மிளகு, சுக்கு அரைத்து சாப்பிட்ரு வந்தால்‌ தூக்கம்‌ வரும்‌.

தாக்கம்‌ வர தர்ப்பை புல்லை தலையணை கீழ்‌ வைத்து படுத்தால்‌ நன்றாக தூக்கம்‌ வரும்‌.



--

திங்கள், 6 ஜூலை, 2026

வெள்ளிப் பொருட்களைபளிச்சென்று சுத்தம் செய்வது எப்படி?

வெள்ளியிலான ஆபரணம், குத்துவிளக்கு, தட்டு, தம்ளர் எனப் பல பொருள்களும் சிறிது காலத்தில் மங்கி விடும். நிறம் கறுத்துக் காணப்படும்.

வெள்ளி உலோகத்தில் ஏற்படும் வேதியியல் வினைகளே இதற்குக் காரணம்.

படிந்த கறுமை நீங்கி வெள்ளிப் பொருள்களை எப்படி எளிய முறையில், வீட்டிலேயே இருக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு பளிச் என சுத்தப் படுத்துவது என்று பார்க்கலாம்.

எலுமிச்சை மற்றும் உப்பு

சாப்பாட்டு தட்டு போன்ற தினமும் சுத்தம் செய்ய வேண்டிய வெள்ளிப் பொருள்களை பராமரிக்க, எலுமிச்சை மற்றும் உப்பை பயன்படுத்தலாம். ஓர் அகன்ற பாத்திரத்தில் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும். அதில் சிறிதளவு உப்பு சேர்த்து, அதனுடன் வெந்நீர் சேர்த்துக் கலந்து வைக்கவும். அதில் வெள்ளிப் பொருள்களை ஊறவைத்து 5 நிமிடங்கள் கழித்து எடுத்து, வெள்ளை துணி கொண்டு துடைக்கவும். அழுக்குகள் நீங்கும்.

சோப் பவுடர்

பல காலமாக நடைமுறையில் இருக்கும் பராமரிப்பு இது. ஒரு சிறிய கிண்ணத்தில்சோப் பவுடர் சேர்த்து, அதில் வெந்நீர் ஊற்றி கலந்து வைக்கவும். இதில் வெள்ளிப் பொருள்களை ஊறவைக்கவும். இதனை 5 - 7 நிமிடங்களுக்குப் பின் எடுத்து பிரஷ் கொண்டு தேய்த்து, மிருதுவான காட்டன் துணியால் துடைத்தால் பளிச்சென இருக்கும்.

வினிகர்

வினிகர், தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவை சேர்ந்த கலவை வெள்ளிப் பொருள்களுக்கு மிகச் சிறந்த பராமரிப்பு முறை. ஒரு கிண்ணத்தில், வெதுவெதுப்பான நீரில் 1/2 கப் வெள்ளை வினிகர், 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா எனக் கலக்க வேண்டும். மிகவும் ஒளி மங்கிய வெள்ளிப் பொருள்களை, இரண்டு முதல் மூன்று மணி நேரம் அதில் ஊற வைக்கவும். பின் அவற்றை எடுத்து குளிர்ந்த நீரில் அலசி உலர்த்தவும்.

கார்ன்ஃப்ளார்

வெள்ளி பொருள்கள் பிரகாசம் இழந்திருந்தால், அதை தண்ணீர் மற்றும் கார்ன்ஃப்ளார் பயன்படுத்தியும் சரி செய்யலாம். கார்ன்ஃப்ளார் மற்றும் தண்ணீர் கலந்து ஒரு கெட்டியான பேஸ்ட்டை செய்து, அதை வெள்ளிப் பொருள்களில் அப்ளை செய்து வைக்கவும். பின்னர் அதனை மெல்லிய துணி கொண்டு துடைத்து எடுக்கவும். பிரகாசம் மீளும்.

கெட்ச் அப்

சிறிதளவு கெட்ச் அப் எடுத்துக் கொள்ளவும். இதனை பேப்பர் டவல் கொண்டு வெள்ளிப் பொருள்களில் தேய்த்துத் துடைக்கவும். கறைகள் அகலும். ஒருவேளை நீண்டநாள் கரைகள், அகலவில்லை எனில் கெட்ச் அப்-ஐ வெள்ளிப் பொருள்களில் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்குப் பின் அழுத்தித் துடைக்க... பளிச் என்றாகும்.



--

திங்கள், 29 ஜூன், 2026

தண்ணீரைத் தூய்மைசெய்யும் தேற்றாங்கொட்டையைப் பற்றி தெரியுமா?

கலங்கல் நீரினைத் தூய்மைப் படுத்தும் திறன் தேற்றா எனப்படும் தேற்றாங் கொட்டைக்கு உண்டு என்பதே ஆகும்.

தேற்றான் கொட்டை உடலை தேற்றும் குணம் கொண்டதாலும், இந்நீரைத் தெளிய வைப்பதாலும் தேற்றான் என்று சொல்லப்படுகிறது.

தேற்றாங் கொட்டை என்பதைப் பொடி செய்து கலங்கிய நீரில் போட்டால் அது தெளிந்துவிடும் என்பது சங்க காலம் முதல் இன்றுவரை பின்பற்றப் படுகிறது. பாட்டிலில் தண்ணீர் விற்பனைக்கு வரும் காலத்துக்கு முன்னரே சுத்தமான நீரைப் பெற இதைப் பயன்படுத்தினர். (இதற்கு கதகப் பொடி என்ற பொடியை வடமொழி நூல்கள் குறிப்பிடப்படுகிறது.)

ஆப்பிரிக்க நாடுகளில் முருங்கைக் காய்க்குள் இருக்கும் விதைகளைப் பயன்படுத்தி தண்ணீரை தூய்மை செய்தனர்.

பொற்கொல்லர்கள் பழைய அணிகலன்களில் படிந்துள்ள அழுக்கினைப் போக்கத் தேத்தாங்கொட்டையை ஊறிய நீரில் நுரை பொங்கத் தேய்த்துத் தூய்மை செய்வர்.

பத்து லிட்டர் தண்ணீரில் இரண்டு தேற்றாங்கொட்டைகளைப்போட்டு வைத்தால் 2 மணி நேரத்தில் நீர் சுத்தமானதாகி விடும். இது தவிர இது மருந்தாகவும் பயன்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் லேகியம் பசியைத்தூண்டும். இதை சாப்பிட்டால் உடல் மெலிந்தவர்கள் தேறி விடுவார்கள்.

கண்மாய்களில் தேக்கிய நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் இடங்களில் நீரைத் தெளியவைக்க சட்டியிலேயே தேற்றான்கொட்டையைத் தேய்ப்பது வழக்கம். சில நிமிடங்களில் நீர் தெளிந்துவிடும்.

நீரில் மிதக்கும் கரித்துகள்கள் படிந்துவிடும். நிலக்கரிச் சுரங்கங்களில் நீரில் கலந்த நிலக்கரித் துகள்களைத் தனித்துப் பிரித்திட படிகாரத்துடன் சிறிது தேற்றாங் கொட்டைப் பொடியினையும் சேர்த்திடுவர். உடனடியாக துகள்களெல்லாம் படிந்திடும். நீரைத் தெளியவைக்கும் பண்பு இக்கொட்டையில் நச்சில்லா பொருட்கள் இருப்பதால் ஏற்படுகிறது.

இத்தேற்றான் கொட்டையின் மருத்துவ குணமாக வெட்டை, உட்சூடு, வயிற்றுக்கடுப்பு, மூத்திர எரிச்சல் போன்ற நோய்களைக் குணமாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கோடையில் தண்ணீரில் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்கவும் இதை முயற்சி செய்யலாம்: இதை செய்வதற்கு மிளகு 25 கிராம், சீரகம் 25 கிராம், தேத்தாங்கொட்டை 1, வெட்டி வேர் சிறிது, வெந்தயம் 20 கிராம், இவைகளை துணியில் வைத்து கட்டி 15 லிட்டர் தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம். மண் பானையை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இந்த குடிநீர், உயிர் சத்துக்கள் நிறைந்த உயிரோட்டமுள்ள நீராக மாறி பயன்கள் தரும்.



--

வெள்ளி, 26 ஜூன், 2026

புகைப் பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பார்க்கலாம்.

புகைபிடிப்பதை நிறுத்தினால் ஏற்படும் மாற்றங்கள்?

புகைபிடிப்பதை நிறுத்திய 20 நிமிடத்தில் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இயங்க ஆரம்பிக்கிறது.

12 மணி நேரத்தில் ரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு அளவு படிப்படியாக குறைந்து சீராகிறது. 2- 12 வாரங்களில் உடல் இயக்கம் சீராகிறது, நுரையீரல் செயல்பாடுகள் அதிகரிக்கிறது.

1-9 மாதங்களில் இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் குறைகிறது. 1 வருடத்தில் இதய நோய் வருவதற்கான ஆபத்து பாதியாகக் குறைகிறது.5 வருடங்களில் பக்கவாதம் வருவதற்கான ஆபத்துகள் குறைகின்றன.

10 ஆண்டுகளில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து பாதியாகக் குறைகிறது. வாய், தொண்டை, சிறுநீர்பை புற்றுநோய், கணைய நோய்கள் வருவதற்கான ஆபத்துகள் குறைகிறது.

15 ஆண்டுகளில் இதய நோய் வருவதற்கான ஆபத்து முற்றிலும் குறைகிறது.

புகைப்பிடிப்பதை கைவிடுவதால் ஏற்படும் நன்மைகள்

30 வயதில் புகைபிடிப்பதை நிறுத்தினால் 10 வருடங்கள் வரை உயிர் வாழலாம். 40 வயதில் நிறுத்தினால் 9 வருடங்கள் உயிர் வாழலாம். 50 வயதில் நிறுத்தினால் 6 வருடங்கள் உயிர் வாழலாம். 60 வயதில் நிறுத்தினால் 3 வருடங்கள் வரை உயிர் வாழலாம்.

மாரடைப்பு வந்தவர் புகைபிடிப்பதை நிறுத்தினால், இன்னொரு முறை மாரடைப்பு வருதற்கான வாய்ப்புகள் 50 சதவிகிதமாக குறைகிறது.

மற்ற நன்மைகள் புகைபிடிப்பதை நிறுத்தினால் ஆண்மைக் குறைவு, கருத்தரித்தல் பிரச்சினை, குறை பிரசவம், குறைந்த எடையில் குழந்தை பிறப்பது, கருச்சிதைவு ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

இன்றே புகைப்பதை நிறுத்திப்பாருங்கள், உங்கள் உடலிலும் இத்தகைய மாற்றங்களை கண்டு நீண்ட நாட்கள் உயிரோடு வாழலாம்.



--

செவ்வாய், 23 ஜூன், 2026

எட்டு வடிவநடைப்பயிற்சி மேற் கொள்வதால் ஏற்படும் பலன்கள்.

எட்டு நடைப்பயிற்சியின் போது எந்த வகையான காலணிகளும் இல்லாமல் வெறும் கால்களில் இந்த நடைபயிற்சியை மேற்கொள்வதே முழுமையான பலன்களை கொடுக்கும்.

கால்களில் காயம் மற்றும் இன்ன பிற பிரச்சனைகள் உள்ளவர்கள் மட்டும் காலணி, ஷூ போன்றவற்றை அணிந்து இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

8 வடிவ நடைப்பயிற்சி எப்போதுமே வடக்கு, தெற்கு திசைகளில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். முதலில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 15 நிமிட நேரம் எட்டு வடிவ நடை பயிற்சியை செய்ய வேண்டும். பிறகு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி எட்டு வடிவில் 15 நிமிட நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இந்த எட்டு வடிவ நடை பயிற்சி செய்வதற்கு மொத்தம் 30 நிமிடங்கள் மட்டுமே போதுமானதாகும்.

உடல் வலி, தலைவலி, செரிமான பிரச்சனைகள், தைராய்டு, உடல் பருமன், மலச்சிக்கல், ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் முழங்கால் வலி, போன்ற பல நோய்கள், பிரச்சனைகளால் அவதிப்பட்டவர்கள் 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொண்ட சில காலத்திலேயே அவை அனைத்தும் நீங்குவதை அனுபவபூர்வமாக உணரலாம். மேலும் 8 வடிவ நடை பயிற்சி மேற்கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வெகுவாக குறையும்.

முக்கியமாக இந்த பயிற்சியை தினமும் தவறாமல் செய்து வந்தால் இளமையான தோற்றத்தையும், இளைய வயதினரை போன்ற மன உற்சாகத்தையும் தக்க வைத்துக்கொள்ளலாம். 8

வடிவ நடைப்பயிற்சி மனிதர்களின் கண்களின் பார்வை திறனை மேம்படுத்தும். 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது, அந்த கோடுகளை கூர்ந்து கவனித்து நடைப்பயிற்சி மேற்கொள்வதால், கருவிழி அங்கும் இங்கும் அசைந்து, கண்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து கண்பார்வை மங்குதல், கண் அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அறவே நீங்கும்.



--

மாத்திரைகள்சாப்பிட்டிற்கு முன் / பின் பரிந்துரைக்கப்படுவது ஏன் தெரியுமா?

மாத்திரைகள் சாப்பிட்டிற்கு முன் / பின் பரிந்துரைக்கப்படுவது ஏன் தெரியுமா ? உடல்நலமின்றி மருத்...

Popular Posts