லேபிள்கள்

வெள்ளி, 29 மே, 2026

ஸ்கூட்டர்களில்பிரேக் பக்கத்துல ஒரு லிவர் இருக்கும்… இந்த சின்ன கம்பிஇவ்ளோ பெரிய விஷயத்தை செய்யுமா?

நாம் எல்லோரும் நாள் தோறும் ஏதோ ஒரு வாகனத்தை ஓட்டிக்கொண்டே தான் இருக்கிறோம். நாம் அன்றாடம் சாலையில் பார்க்கும் வாகனங்களில் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு அம்சங்கள் இருக்கும், ஒவ்வொரு வாகனத்தின் திறனும் மேம்படும். நாம் நமது தேவை மற்றும் பொருளாதார சூழ்நிலைகளை மனிதில் வைத்து நமக்கு தேவையான வாகனம் எது என்பத்தைத்தேர்வு செய்து வாங்குகிறோம்.

பொதுவாக நாம் வாங்கும் வாகனத்தில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கிறது. அதை எப்படி எப்படிப் பயன்படுத்த வேண்டும், எந்தெந்த சூழ்நிலைகளில் எல்லாம் இது உதவும் என்பதை நாம் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள விரும்புவோம்.

நம் வாகனத்தில் பெரும்பாலான அம்சங்களை நாம் தெரிந்து வைத்துக்கொண்டிருப்போம். ஆனால் பலருக்கு அவர்கள் பயன்படுத்தும் வாகனத்தில் உள்ள ஒரு தனித்துவமான அம்சம் அல்லது பெரிய அளவில் தெரியவராத அம்சங்கள் பற்றித் தெரியாமல் இருக்கும். எல்லா வாகனங்களில் பொதுவாக இருக்கும் அம்சங்களைப் பற்றி எல்லாம் நாம் நன்கு அறிந்திருப்போம் அதை நாம் அன்றாடம் வாகனம் ஓட்டும் விஷயங்களில் பயன்படுத்துவோம்

ஆனால் சில வாகனங்களில் மட்டும் இருக்கும் அம்சங்கள் பற்றி பெரிய அளவில் தெரிந்து வைத்திருக்க மாட்டோம். அப்படியான ஒரு அம்சத்தைப் பற்றித் தான் இந்த பதிவில் நாம் காணப்போகிறோம். நம்மில் பலர் தினமும ஸ்கூட்டரை பயன்படுத்துவோம். இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் மிக அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டரில் உள்ள ஒரு முக்கியமான அம்சம் என்னவென்று அதைப் பயன்படுத்தும் பலருக்குத் தெரியாது. ஹோண்டா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டும் தான் தங்கள் ஸ்கூட்டர்களில் இப்படியான ஒரு அம்சத்தை வழங்குகின்றனர். இந்த நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் ஸ்கூட்டரில் இடது பக்க பிரேக்கிற்கு அருகே சிறியதாக ஒரு லிவர் ஒன்றை கொடுத்திருப்பார்கள். இது என்ன? எதற்காக இதை பயன்படுத்துவது? எப்படிப் பயன்படுத்துவது என்ற தகவல்கள் எல்லாம் பலருக்கும் தெரியாது.

சிலர் இதை ஸ்கூட்டரின் சோக் என நினைத்துக்கொண்டிருக்கின்றனர். நீண்ட நாட்களாக ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யாமல் வைத்திருந்தால் இதைப் பிடித்தால் இது பெட்ரோலை அதிகமாக இன்ஜினிற்குள் அனுப்பும் என நம்பி வருகின்றனர்.

ஆனால் அது உண்மை அல்ல இந்த அம்சத்திற்குப் பெயர் பிரேக் லாக்கர் இது பொதுவாக ஸ்கூட்டரின் இடது பக்க பிரேக் அருகே தான் கொடுக்கப்பட்டிருக்கும். இதை நாம் ஸ்கூட்டரை ஒரு இடத்தில் பார்க் செய்து விட்டு ஸ்கூட்டரின் வீல் நகராமால் இருக்க வேண்டும் என்றால் ஸ்கூட்டரின் பின் பக்க பிரேக்கை பிடித்துவிட்டு இந்த லாக்கரை போட்டால் பின்பக்க பிரேக் ரிலீஸ் ஆகாமல் ஸ்கூட்டர் அப்படியே நிற்கும் அதற்காகத் தான் இந்த பிரேக் லாக்கர் வழங்கப்படுகிறது. இதன் பெயரில் உள்ளதைப் போல பிரேக்கை லாக் செய்யத்தான் இது பயன்படுகிறது

உதாரணமாக நாம் இப்பொழுது சமமாக இல்லாத ஒரு சருக்கலான இடத்தில் ஸ்கூட்டரை நிறுத்துகிறோம் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது ஸ்கூட்டரின் எடை காரணமாக நாம் என்ன தான் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினாலும் ஸ்கூட்டர் முன்னோக்கியோ பின் நோக்கியோ இழுத்துக்கொண்டு செல்லும். இப்படியான சூழ்நிலைகளில் பலர் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அதன் பின் வீல் நகராதபடி ஒரு கல்லை வைத்துச் செல்வார்கள். ஆனால் இந்த அம்சம் இருக்கும் ஸ்கூட்டரில் அப்படி நிறுத்த வேண்டிய சூழ்நிலை இல்லை.

சற்று இறக்கமான இடத்தில் இந்த ஸ்கூட்டரை நிறுத்தும் போது பின்பக்க பிரேக்கை பிடித்துவிட்டு இந்த பிரேக் லாக்கரை வைத்து லாக் செய்துவிட்டால் பின்பக்க பிரேக் நாம் கையை எடுத்தாலும் ரிலீஸ் ஆகாமல் இருக்கும். அதனால் நாம் இந்த இடத்தில் பைக்கை நிறுத்தினாலும் அது முன் பின் நகராமல் அதே இடத்தில் அப்படியே இருக்கும். இதை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால் மீண்டும் பின்பிரேக்கை லேசாகப் பிடித்துவிட்டால் இந்த பிரேக் லாக்கர் ரிலீஸ் ஆகி பிரேக்கும் ரிலீஸ் ஆகும்.



--

செவ்வாய், 26 மே, 2026

தேளைப் பற்றிபலரும் அறிந்திறாத சில சுவாரசிய உண்மைகள்!!

தேள்,பாம்பு போன்ற பல விஷத்தன்மை வாய்ந்த உயிர்களின் பல சுவாரசியமான அறிவியல் சார்ந்த உண்மையை பற்றி நாம் பலரும் அறிந்திருப்பதில்லை.காரணம் இது மனித உயிருக்கு கேடு விளைவிப்பதால் இவற்றைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.இந்த பதிவில் நாம் தேளைப் பற்றி பலரும் அறிந்திடாத சில சுவாரசிய உண்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பெண் தேள் ஆண் தேள் உடனான இனப்பெருக்கத்தை முடித்தவுடன் ஆண் தேளை, பெண் தேள் கொன்றுவிடும்.

பெண் தேள்கள் அதன் குட்டிகளை பெற்றெடுப்பதில்லை.

மாறாக அதன்முதுகு வெடித்து குட்டிகள் வெளிவரும்.இந்த பிரசவ செயலானது சுமார் இரண்டு நாட்கள் வரை நடைபெறும்.

இதன் பிறகு இந்த தேள் குட்டிகள் தனது தாயின் உடலை மூன்று நாட்கள் வரை உட்கொண்டு உயிர் வாழும்.

பொதுவாகவே ஆண்டவன் படைத்த எல்லா உயிர்களும் தனது குழந்தைகளை அல்லது குட்டிகளை பெற்றெடுத்து மகிழ்ச்சியோடு அதனுடன் வாழும் பாக்கியத்தை பெற்றதுள்ளது.ஆனால் பெண் தேளோ இதற்கு விதிவிலக்காக அமைகிறது.தேள் மட்டும் பிரசவித்த உடனே இறந்து விடும்.தாய் என்றாலே பிள்ளைகளுக்காக உயிரையே கொடுக்க துணிந்தவள் ஆச்சே!!பூச்சியாக இருந்தாலும் தேளும் ஒரு தாய் தானே!!



--

சனி, 23 மே, 2026

பொடுகைப் போக்கும் வழிகள்.

நன்றி குங்குமம் டாக்டர்

1. தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு மசாஜ்.

எலுமிச்சைப் பழச்சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டிலும் தலா இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையைத் தலைமுடியில் மசாஜ் செய்வதுபோலத் தேய்த்து, 20 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும். பிறகு ஷாம்பூ தேய்த்து, தலையை அலசவும். தேங்காய் எண்ணெய், முடிக்கு ஊட்டமளிக்கும். எலுமிச்சைச்சாறு பொடுகுத் தொல்லையை நீக்கி, முடி வளர்ச்சிக்கு உதவும்.

2. தயிர் குளியல்

தயிரைத் தலையில் நன்றாகத் தேய்த்துக்கொள்ளவும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, சிறிது ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம். தயிர், உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடிக்கு பளபளப்பையும் தரும். சைனஸ், ஒற்றைத் தலைவலி பிரச்னை இருப்பவர்கள், இதைத் தவிர்க்கவும்.

3. வெந்தயம் பேக்

இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைக்கவும். மறுநாள் அதை அரைத்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவைத்து தலைக்குக் குளிக்கவும். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடி வளர்ச்சிக்கு உதவும்.

4. ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல்களை நன்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து, 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.

5. வெங்காயம் மற்றும் வேப்பிலை

வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி, 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். பிறகு, தலைக்குக் குளித்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். அதேபோன்று, கைப்பிடி வேப்பிலைகளை பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து ஊறவைத்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இதன் கசப்புத் தன்மை, தலையில் உள்ள பாக்டீரியா போன்ற தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகளை அழித்துவிடும்.

6. மருதாணி இலை

கைப்பிடி மருதாணி இலைகளை அரைத்து, அதில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலைமுடியில் நன்றாகத் தேய்க்கவும். இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் கூந்தலை அலசி, குளிக்கலாம். இதனால் பொடுகுத் தொல்லை நீங்கும்; நரை முடி பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். சைனஸ், ஒற்றைத் தலைவலி, சளி பிடிக்கும் பிரச்னை உள்ளோர் தவிர்க்கவும்.



--

செவ்வாய், 19 மே, 2026

தலை வலியால்அடிக்கடி அவஸ்தையா? இதனைப் போக்க சில அசத்தலான எளிய வழிமுறைகள்.

இன்றைய காலத்தில் பலரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினை தான் தலைவலி . இது பல காரணங்களால் ஏற்படுகின்றது.

வேலைச்சுமை, கோடைக்கால வெயில், மன அழுத்தம் போன்ற பல காரணங்கள் சொல்லப்படுகின்றது.

தலைவலி வந்தால், சரியானால் போதும் என்று பக்க விளைவுகளை அறிந்தும் பெரும்பாலோனோர் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதுண்டு. இதனை தவிர்த்து ஒரு சில எளியமுறைகளில் கூட தலைவலியை போக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

கொதிக்கும் தண்ணீரில் காபி கொட்டையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைவலி குணமாகும்.

வெற்றிலை சாறு எடுத்து அதில் கற்பூரம் போட்டு நன்றாக குழைத்து நெற்றியில் பூசவும் தலைவலி குணமாகும்

கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி குடித்தால், சூட்டினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.

கிராம்பை எடுத்து சிறிது தண்ணீரில் போட்டு ஊற வைத்து பின்பு, மை போன்று அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குணமாகும்

2மிளகை எடுத்து விளக்கில் எரித்து, இந்த புகையை சுவாசித்தால் தலைவலி மற்றும் சளி தொல்லையில் இருந்து விடுபெறலாம்.

தலைவலி குறைய கடுகுத்தூள், அரசி மாவு இவற்றை சரிப்பாதி எடுத்து ஒரு களிபோல் கிளறி அதை நெற்றியில் பற்று போட்டு வந்தால் விரைவில் தலைவலி குணமாகும்.

புதினா இலையை எடுத்து நன்றாக இடித்து சாறு எடுத்து நெற்றியில் பூசினால் தலைவலி குணமாகும்.

டீ அல்லது காபியில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குணமாகு முள்ளங்கி சாறு எடுத்து தினமும் குடித்து வந்தால் தலைவலி குணமாகும்.

தலைவலியால் அடிக்கடி அவஸ்தைபடுபவர்கள் தினமும் காலை உணவு அருந்துவதற்க்கு முன் 2 டேபிள் ஸ்பூன் தேனை மிதமான வெப்ப நிலையில் உள்ள தண்ணீரில் கலந்து குடிந்தால் தலைவலி குணமாகும்.

துளசி தலைவலியை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது, அதனால் தினமும் ஒரு கோப்பை தண்ணீரில் 4 துளசியை போட்டு நன்கு கொதிக்க வைத்த பின் 1 ஸ்பூன் தேன் கலந்து அருந்தவும்.

இலவங்கம் பட்டையை கொஞ்சம் தண்ணீரில் ஊற வைத்து நன்றாக அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குணமாகும்.

சம அளவு இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு எடுத்து நன்றாக கலந்து குடித்தால் தலைவலி குணமாகும்.



--

சனி, 16 மே, 2026

சிறுநீரக கற்களை நீக்கும் மூன்று மேஜிக் ஜூஸ்கள்.

சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் அன்றாட பணிகளை பாதிக்கக் கூடிய வகையில் மிகவும் வேதனை கொடுக்கக் கூடியது.

சிறுநீரக பிரச்சனைகளில் ஒன்று சிறுநீரக கற்கள் பிரச்சனை. சிறுநீரக கற்கள் வந்தால், பாதிக்கப்பட்ட நபர் மிகவும் வேதனையான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் தனது டயட் பிளானை மிகவும் கவனத்துடன் திட்டமிட வேண்டும்.

உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை இருந்தால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில சாறுகளின் உதவியுடன் இந்த பிரச்சனையை சமாளிக்கலாம். இந்த ஜூஸ்கள் எவை, எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சிறுநீரக கற்களை போக்கும் சாறு

சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்கள் , இந்த 3 வகையான ஜூஸ்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் வலி உட்பட பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

1. தக்காளி சாறு

சிறுநீரக கற்களை அகற்ற தக்காளி சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தக்காளி ஜூஸ் தயாரிக்க இரண்டு தக்காளியை நன்கு கழுவி, அவற்றை அரைக்கவும். சாற்றில் இந்துப்பு மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிட வேண்டும், நீங்கள் விரும்பினால், சாறு வடிவில் தயாரிக்கப்பட்ட கலவையை குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் உட்கொள்ளலாம். இருந்தாலும் அவ்வபோது பிரெஷ்ஷாக தயாரித்து அருந்துவது மிகவும் நல்லது.

2. எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை சாற்றை உட்கொண்டால், பிரச்சனையையும் சமாளிக்க முடியும். ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து, இப்போது சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து, கலவையை நன்றாகக் கலக்கி, சாப்பிட்டால், சிறுநீரக கற்கள் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.

3. துளசி சாறு

சிறுநீரக கற்கள் பிரச்சனையை நீக்கவும் துளசியில் இருந்து தயாரிக்கப்படும் சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், துளசி இலைகளை சாறு எடுத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து, காலை மற்றும் மாலையில் தயாரித்த கலவையை சாப்பிடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் சிறுநீரக பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.



--

புதன், 13 மே, 2026

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய கால் புண் விரைவில் குணம் பெற உதவும் குறிப்புகள்.

சர்க்கரை நோயாளிகளுக்கு கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு, பாரம்பரியம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

சர்க்கரை நோய் உள்ள சிலருக்கு புண் ஏற்பட்டால் அது விரைவில் ஆறாது. ஒரு சிலருக்கு புண் மேலும் பெரிதாகி பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

மா இலை மற்றும் அத்தி இலை ஆகிய இரண்டையும் எடுத்து அரைத்து கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு மண் பாத்திரம் வைத்து அதில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் இந்த அரைத்த இலைகளை போட்டு அது பாதியாக வரும் வரை காய்ச்ச வேண்டும்.

பின்பு இதை ஒரு வெள்ளை துணியில் ஊற்றி வடிகட்டி அந்த சாறை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். இந்த சாற்றை தினமும் காலை உணவுக்கு முன்பு 50 மில்லி குடிக்க வேண்டும். அதேப்போல் இரவு உணவுக்கு பிறகு 50 மில்லி குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வர உடலில் ஏற்பட்ட புண் விரைவில் சரியாகும்.

அத்தி இலை, வேப்பிலை, மஞ்சள் தூள் ஆகிய மூன்றையும் எண்ணெய்யில் போட்டு கலந்து புண் ஏற்பட்ட இடத்தில் இரவில் தூங்கும் முன்பு தடவி வந்தால் தீராத புண்களும் சரியாகிவிடும். அதேப்போல் பகலில் உணவிற்கு முன்பு பப்பாளி பழம் சாப்பிடலாம். உடல் ஆரோக்கியத்திற்கும், புண் சரியாவதற்கும் மிகவும் நல்லது.

சர்க்கரை நோயாலியின் கால்களை பாதுகாப்பது மிக முக்கியம். சர்க்கரை நோயாளிகளுக்கு கால் நரம்புகள், ரத்தக்குழாய்கள் பாதிப்புக்குள்ளாகும்.

ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பால் ரத்தம் தடைபட்டு, கால்களில் உணர்வு குறையும். காயங்கள் ஏற்பட்டால் எளிதில் குணமாகாது. வலி தெரியாது என்பதால், காயத்தை நாம் பொருட்படுத்த மாட்டோம். நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடுவதால், புண் ஆறாமல் சீழ் கோர்க்கும்.

ரத்த ஓட்டம் குறைவதால் கால்கள், விரல்கள் கறுத்து போய் அழுகிப் போவதால் விரலை அல்லது காலையே வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே, சர்க்கரை நோயாளிகள் கால்களில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.



--

சனி, 9 மே, 2026

எளிதாகக்கிடைக்கும் ரோஜாப்பூவில் உள்ள நன்மைகள்.

ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு காயவைத்த சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4, 5 பூலாங் கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரைமணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.

ரோஜா மலரின் இதழ்களை வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

ரோஜாப்பூ மொக்கு மற்றும் சதகுப்பை ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்து விட வேண்டும். மூன்று மணிநேரம் குறையாமல் வைத்திருந்து பிறகு வடிகட்டி கொள்ள வேண்டும். குழந்தைகளாக இருந்தால் கால் டீஸ்பூனும், பெரியவர்களாக இருந்தால் ஒரு டீஸ்பூனும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்துவர உஷ்ண வயிற்று வலி போகும்.

ரோஜா இதழ்களைக்கொண்டு சர்பத் தயார் செய்து வைத்துக்கொண்டால் ருசிக்கு ருசியாகவும் இருக்கும் மருந்துக்காகவும் பயன்படும்.. நாள்தோறும் ரோஜா மலர் இதழ்களைக் கொண்டு செய்த சர்பத் அருந்தி வந்தால் முலச்சூடு தணியும். நீர்கட்டு மலக்கட்டு விலகும்.

உடற்சூடு தணிந்து உடல் இதமான குளிர்ச்சியைப் பெறும். ரோஜா மலர் மொட்டை துவையல் செய்து சாப்பிட்டால் சீதபோதி அகலும். காதில் கட்டி ஏற்பட்டு கடுமையான வலியுடன் சீழ் வந்தால் மின்மினிப் பூச்சியென்றை பிடித்து ரோஜா இதழ்களுடன் சேர்த்து அரைத்து இலேசாக சுடவைத்து காதில் இரண்டிரண்டு சொட்டுக்கள் வீதம் விட்டு வந்தால் விரைவில் உடைந்து சிரியாகிவிடும்.

பித்த நீர் அதிகமாகும் காரணத்தால் தோன்றும் மயக்கம், வாய்க்கசப்பு, நெஞ்செரிச்சல் போன்ற கோளாறுகளைத் தீர்க்க ரோஜாப் பூவைக் கஷாயம் செய்து பசுவின் பாலுடன் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்துப் பருகினால் குணம் தெரியும்.

ரோஜா பூவினால் தயார் செய்யப்பட்ட குல்கந்து மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வைத்து காலையிலும், மாலையிலும், சாப்பிட்டு வந்தால் இரத்த பேதி, பித்தக்கோளாறுகள் வெள்ளை முதலிய பிணிகள் விலகிவிடும்.

ரோஜாப்பூ கஷாயத்துடன் காட்டுச்சீரகத்தை சேர்த்து அரைத்து மெல்லிய துணியால் நனைத்து முகரச் செய்தால் மூக்கடைப்பு, ஜலதோஷத்தினால், ஏற்படக்கூடிய பல்வேறு வகைக்கோளாறுகள் அகலும்.

வாய் நாற்றம் இருந்தால் வெற்றிலை பாக்குடன் ரோஜா இதழ்களைப்போட்டுக் கொள்வதனால் நாற்றம் நீங்கி நலம் பெறலாம்.



--

புதன், 6 மே, 2026

குளியலறை மற்றும்உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராவைக் கண்டு பிடிப்பது எப்படி?

ரகசிய கெமரா மூலம் பெண்களை படம்பிடிக்கும் சம்பவங்கள் உலகளவில் அதிகரித்துள்ளன. அந்த பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை வைத்துக் கொண்டு மிரட்டும் பகீர் சம்பவங்களியும் அவ்வப்போது நடப்பதை கேள்விப் படுகிறோம்.

முக்கியமாக ஹொட்டல் அறைகள், துணிக்கடைகளில் ஆடைகள் மாற்றும் அறை, பொதுகழிப்பறை, குளியலைறை ஷவர், அறையின் கூரை பகுதி, கதவு துளைகள் போன்ற இடங்களில் ரகசிய கெமரா வைக்கப்படுகிறது.

இது போன்ற இடங்களில் ரகசிய கெமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவது எப்படி?

இருட்டாக்கவும்

ரகசிய கெமராவில் பச்சை அல்லது சிவப்பு LED விளக்குகள் உள்ளன. இந்த விளக்குகள் தொடர்ந்து ஒளிரும். அவற்றைக் கண்காணிக்க, சந்தேகம் இருக்கும் அறையை முற்றிலும் இருட்டாக மாற்ற வேண்டும். இப்போது அங்கு ரகசிய கெமரா இருந்தால் அது இருட்டில் ஒளிரும்.

செல்போன்

செல்போனில் இருந்து ரேடியோ அலைவரிசைகள் தொடர்ந்து வெளிவருகின்றன. கெமரா பொருத்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில், ஏதேனும் ஒரு எண்ணை டயல் செய்யவும். அங்கு கெமரா இருந்தால், ரேடியோ அலைவரிசை காரணமாக அழைப்பில் சிக்கல் ஏற்படும்.

செயலிகள்

ரகசிய கெமராவை கண்டறிய ப்ளே ஸ்டோரில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகள் உள்ளன. அதை பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்.



--

ஞாயிறு, 3 மே, 2026

ஆர்கானிக் அறிவது எப்படி?

நன்றி குங்குமம் டாக்டர்

'எங்க வீட்டுல எல்லாமே ஆர்கானிக்தான்' என்று சொல்வது இப்போதைய ட்ரெண்டாகி விட்டது.

காலையில் எழுந்ததும் பல் துலக்கும் பேஸ்ட்டில் இருந்து படுக்கப்போகும் போது ஏற்றும் கொசுவத்தி வரை சகலமும் ஆர்கானிக்கில் வந்துவிட்டது. வாடிக்கையாளர்களின் இந்த ஆர்கானிக் மோகத்தைப் புரிந்துகொண்ட நிறுவனங்கள் விதவிதமான ஆர்கானிக் பொருட்களை சந்தையில் இறக்கி கல்லா கட்டுகின்றன. ரேப்பரில் விதவிதமான வகையில் எழுதப்பட்டிருக்கும் ஆர்கானிக் பொருட்களுக்கு என்ன அர்த்தம்?

எதுவெல்லாம் அசல் ஆர்கானிக். வாங்க பார்க்கலாம்!

100% ஆர்கானிக்

இப்படி அச்சிடப்பட்டிருந்தால் இவை முழுமையான ஆர்கானிக் பொருட்கள். இவற்றில் இந்திய ஆர்கானிக் லோகோ, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆர்கானிக் ஏஜென்சிகளின் லோகோக்கள் இடம்பெற்று இருக்கும். இவற்றை நம்பி வாங்கலாம்.

ஆர்கானிக்

இவற்றில், 95 சதவிகிதம் ஆர்கானிக் பொருட்களாக இருக்க வேண்டும். எஞ்சி உள்ள 5 சதவிகிதத்தில் (உப்பையும் நீரையும் தவிர) குளோரின் (பாக்கிங் பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதால்), நிறமூட்டிகள் போன்ற ஆர்கானிக் அல்லாத பிராஸசிங் எய்டுகள் இருக்கலாம். ஆனால், அவை அங்கீகரிக்கப்பட்ட பொருட்களாக இருக்க வேண்டும். இதற்கென சர்வதேச தரச் சான்று நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்கள் இதனை அங்கீகரித்து இருக்க வேண்டும்.

மேட் வித் ஆர்கானிக்

இவற்றில் 70 சதவிகிதம் ஆர்கானிக் பொருட்களால் ஆனவையாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஊறுகாய் என்றால் அதில் உள்ள மாங்காய் இயற்கை முறையில் விளைந்ததாக இருக்க வேண்டும். ஆனால், இவற்றில் சில சுவையூட்டிகளும் உப்புகளும் செயற்கையானவையாக இருக்கக்கூடும் என்பதால் கவனம். இவை ஆர்கானிக்கால் தயாரானவையே தவிரவும் முழு ஆர்கானிக்காக இருக்க வேண்டியதில்லை.

ஆர்கானிக் இன்கிரிடெண்ட்ஸ்

இவற்றில் 70 சதவிகிதத்துக்கும் குறைவான ஆர்கானிக் பொருட்கள் இருக்கும். இவற்றை ஆர்கானிக் உணவு என்று சொல்ல முடியாது. ஆனால், இவற்றின் லேபிளில் ஆர்கானிக் பொருட்களால் ஆன இன்கிரிடெண்ட்ஸ் உள்ளதென குறிப்பிட்டுக்கொள்ளலாம். உதாரணம் ஜாம்கள், சாஸ்கள் மற்றும் சப்ளிமென்டுகள். இதுவும் ஆர்கானிக்கால் தயாராவையே தவிரவும் முழுமையான ஆர்கானிக் பண்புடையவை அல்ல.

நேச்சுரல்

இந்தியாவில் நேச்சுரல், ஹெர்பல் போன்றவைகளுக்கு எந்தவிதமான முறைசார்ந்த அங்கீகார சான்றிதழ்களும், கண்காணிப்புகளும் கிடையாது. இவற்றில் குறைந்த அளவு பிராசஸ்டு பொருட்கள் இருக்கக்கூடும் அல்லது இவைகள் போலியானவையாகவும் இருக்கக்கூடும். இன்று பலதரப்பட்ட உணவுப் பொருட்கள் முதல் அன்றாடப் பயன்பாட்டு பொருட்கள் வரை ஆர்கானிக் நேச்சுரல் போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை வரன்முறைப்படுத்த வேண்டியது அவசியம்.

ஃபேர் டிரேடு

என்.ஜி.ஓ-க்கள் மூலமாகச் சந்தைப்படுத்தப்படும் பொருட்கள். உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்டு, சந்தைப்படுத்தப்படும் பொருட்கள் இவை. சில குறிப்பிட்ட ஊர்கள் சூழல்களில் மட்டும் இவற்றைக் காணலாம். உதாரணம், ஊட்டி டீத்தூள், காபிக்கொட்டை, காபி தூள்.

ஆர்கானிக் பை டிரஸ்ட்

சிறிய விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழ் பெறுவது பெரிய அளவில் சந்தைப்படுத்துவது சாத்தியமில்லை. எனவே, அவர்கள் சந்தைப்படுத்தும் பொருட்கள் அல்லது அவர்களால் சில என்.ஜி.ஓ க்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்களில், 'ஆர்கானிக் பை டிரஸ்ட்' எனக் குறிப்பிட்டுக்கொள்வார்கள். இது ஒருவகை சுயசான்றிதழ் என்பதால் இவற்றின் தரத்தை நிர்ணயிப்பது கடினம். வாடிக்கையாளர்கள்தான் இவற்றின் நம்பகத்தன்மையை சோதித்து அறிந்து கொள்ள வேண்டும்.

கேஜ் ஃப்ரீ

இந்தியாவில் கேஜ் ஃப்ரீ, நியர் ஆர்கானிக் போன்ற பதங்கள் மாறி மாறி குறிப்பிடப்படுகின்றன. கூண்டில் அடைக்கப்படாமல், ஒரு பெரிய கட்டடத்தில் சுதந்திரமாக இருக்கவிடப்பட்ட பறவைகளின் இறைச்சிகளை கேஜ் ஃப்ரீ என்பார்கள். இதுவும் முறையான அங்கீகாரம் பெறப்பட்ட சான்று அல்ல.

கிராஸ் ஃபெட்

தானியங்கள், புற்கள், இலை தழைகள் போன்ற இயற்கை உணவுகள் தந்து வளர்க்கப்பட்ட கால்நடைகள் மற்றும் பறவைகளின் இறைச்சி மற்றும் அவற்றில் இருந்து பெறப்படும் பால் பொருட்களில் கிராஸ் ஃபெட் என குறிப்பிடப்பட்டிருக்கும்.

நோ ஏடட் ஹார்மோன்ஸ்

ஹார்மோன் ஊசிகள் போடப்படாத கால்நடைகளில் இருந்து பெறப்பட்ட பால்பொருட்கள் மற்றும் இறைச்சிகள் மேல் நோ ஏடட் ஹார்மோன்ஸ் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தியாவில் முறையாக இந்த சான்றிதழ் பெற்றுள்ள நிறுவனங்கள் உள்ளன.



--

புதன், 29 ஏப்ரல், 2026

திங்கள் சோம்பலை வெல்ல ஐந்து வழிகள்.

நன்றி குங்குமம் டாக்டர்

திங்கள் கிழமை வந்துவிட்டாலே பலருக்கும் பதற்றமாகி விடுகிறது.

சொல்லப்போனால் திங்கள் வருகிறதே என்ற கவலை சிலருக்கு ஞாயிறு மாலையே உருவாகிவிடுகிறது. இதனை ஆங்கிலத்தில் 'Monday Morning Blue' என்கிறார்கள்.

இதனை வெல்வது எப்படி?

1.நேரமே படுக்கைக்குச் செல்லுங்கள்

ஞாயிற்றுக் கிழமை நேரமே படுக்கைக்குச் செல்வது அவசியம். இதனால், நல்ல உறக்கம் கிடைக்கும். உடலில் உற்சாகம் பிறக்கும். மனமும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

2. அதிக வேலைப் பளுவைத் தவிர்த்திடுங்கள்

திங்கள் கிழமைகள் மனச்சோர்வை அளிப்பவையாக இருந்தால், எல்லா வேலையையும் திங்களே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். திட்டமிட்டு வேலையை ஞாயிறு மதியம் செவ்வாய் காலை என முன்பே பிரித்து வைத்துவிடுங்கள்.

3. உடற்பயிற்சி அவசியம்!

ஏதேனும் ஓர் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். நடைப்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல், ஜாகிங் போன்ற கார்டியோ பயிற்சிகள், யோகா போன்றவை உடலையும் மனதையும் உற்சாகமாக வைத்திருக்க உதவும்.

4. பொழுதுபோக்கை வைத்திருங்கள்

உங்களுக்கு என ஏதேனும் ஒரு ஆரோக்கியமான பொழுது போக்கை வைத்திருங்கள். புத்தகம் வாசிப்பது, இசை கேட்பது, இசைக் கருவிகள் இசைப்பது போன்றவை உங்களை மன அழுத்தத்திலிருந்து விடுபடச் செய்யும்.

5. பணியை நேசியுங்கள்

உங்கள் வேலையை நேசியுங்கள். உங்கள் பணியை அதன் இயல்பை புரிந்துகொள்ளுங்கள். எப்போதும் மகிழ்ச்சி என்பது நமது தேர்வுதான். அது நமக்கு இன்னொருவர் தருவதல்ல. மனதைக் கரைத்து பணியாற்றும்போது உங்களுக்கு சுமை தெரியாது. செய்யும் பணியில் நிறைவை உணரவில்லை என்றால் உங்களுக்கான பணியைத் தேடிக் கண்டடையுங்கள்.



--

ஸ்கூட்டர்களில்பிரேக் பக்கத்துல ஒரு லிவர் இருக்கும்… இந்த சின்ன கம்பிஇவ்ளோ பெரிய விஷயத்தை செய்யுமா?

நாம் எல்லோரும் நாள் தோறும் ஏதோ ஒரு வாகனத்தை ஓட்டிக்கொண்டே தான் இருக்கிறோம். நாம் அன்றாடம் சால...

Popular Posts