லேபிள்கள்

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

தினமும் இன்ஸ்டண்ட்இட்லி மாவு பயன் படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்.


உலக ஆராய்ச்சியாளர்களால் காலை உணவுக்கு சிறந்த உணவு என கூறப்பட்டுள்ள ஆரோக்கிய உணவு இட்லி. இதற்கு காரணம் இதில் எண்ணெய் கலப்பு இல்லை மற்றும் நீராவி மூலம் சமைக்கும் முறை தான்.

இதனால் செரிமான கோளாறோ, கொலஸ்ட்ரால் பிரச்சனையோ ஏற்படாது என்பதால் தான் இட்லி சிறந்த காலை உணவு என கூறப்படுகிறது.

ஆனால், இன்று நேரமின்மை மற்றும் சோம்பேறித்தனம் போன்ற காரணத்தால் நாம் இட்லி, தோசைக்கு பயன்படுத்தும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு நமது ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கிறது என்பதை அறியாமலேயே நாம் அதை தினந்தோறும் பயன்படுத்தி வருகிறோம்..

சுகாதாரமின்மை!

முன்பெல்லாம் ஆட்டாங்கல்லில் தான் மாவு ஆட்டும் பழக்கம் இருந்து வந்தது. கிரைண்டர் வந்த பின் ஆட்டாங்கல் வீட்டில் காட்சி பொருளாகி போனது. பல வீடுகளில் அது வீட்டின் பின்புறத்தில் குப்பையாக தான் கிடைக்கிறது.

காணாமல் போன ஆட்டாங்கல்!

ஆட்டாங்கல்லில் மாவாட்டும் முன்னரும், மாவாட்டிய பிறகும் சுத்தமாக கழுவும் பழக்கம் நம் வீட்டு ஆட்களுக்கு இருந்தது. ஆனால், கடைகளில் விற்க அவர்கள் பயன்படுத்தும் பெரிய கிரைண்டர்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பது யாருக்கு தெரியும்?

ஈகோலி பாக்டீரியா:

மாவு ஆட்டும் போது, அதன் பிறகு கிரைண்டரை கழுவும் போதும் சுத்தமான நீரை பயன்படுத்த வேண்டும். இல்லையேல் ஈகோலி எனும் பாக்டீரியா தாக்கம் அதிகளவில் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இது மாவாட்டும் போது இட்லி, தோசை மாவில் அடைக்கலம் புகுந்து விடுகிறது.

உடல்நலக் குறைபாடுகள்:

இந்த ஈகோலி பாக்டீரியா தாக்கத்தால் நாள்ப்பட வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, உடல் வறட்சி, வாந்தி, மயக்கம், இரைப்பை நோய், தலைசுற்றல் போன்ற உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

வேக வைத்தாலும் அழிவதில்லை:

நீங்கள் எண்ணலாம், தினமும் இட்லி, தோசை தான் சாப்பிடுகிறோம்? பிறகு எப்படி உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று. இதற்கு எல்லாம் காரணம் நீங்கள் வெளி கடைகளில்வாங்கும் இட்லி மாவு தான்.

ஈகோலி எனும் பாக்டீரியா நீங்கள் மாவை வேக வைத்தாலும் கூட முழுமையாக அழிவதில்லை என்பது தான் சோகமே.

இன்ஸ்டன்ட் இட்லி மாவு:

கடைகளில் வாங்கும் மாவினால் தான் இந்த பிரச்சனைகள் என்றால், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு நாம் வாங்கும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு அதுக்கும் மேல ராகம்.

கால்சியம் சிலிகேட்:

இன்ஸ்டன்ட் இட்லி மாவு சீக்கிரம் கேட்டுவிடக் கூடாது என கால்சியம் சிலிகேட் சேர்க்கின்றனர். இதனால் மாவு சீக்கிரம் கெடாது, புளித்து போகாது. ஆனால், இதன் காரணத்தால் உங்கள் செரிமான மண்டலம் பாதிக்கப்படும். இதை தொடர்ந்து அஜீரண கோளாறுகள், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்றவை ஏற்படும்.

சிந்தியுங்கள்:

காசுக் கொடுத்து உடல்நலக் கோளாறுகள், ஆரோக்கியமின்மை போன்றவற்றை விலைக்கு வாங்க வேண்டுமா? அரை மணிநேரம் செலவிட்டால் இட்லி மாவு வீட்டிலேயே அரைக்கலாம். ஆனால், 20 - 30 ரூபாய்க்கு கிடைக்கிறது என கடைகளில் வாங்கி சாப்பிடுகிறோம்.

இது மட்டுமா?

இரண்டு நிமிடம் தட்டி போட்டால் இஞ்சி பூண்டு பேஸ்ட் ரெடி. ஆனால் அதைக் கூட நாம் அஞ்சு, பத்து கொடுத்து பாக்கெட்டில் தான் வாங்குகிறோம். நீங்கள் பாக்கெட்டில் வாங்கும் அனைத்துமே உடல் நலத்திற்கு கேடு தான் விளைவிக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.



--

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

ஞாபக மறதியை உண்டாக்கும் உணவுகள்.

உடல் உழைப்பு மட்டுமன்றி நாம் சாப்பிடும் உணவுகளும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்த வகையில் உடலையும், மனதையும் இணைக்கும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம். எனவே ஞாபக மறதியை அதிகரிக்கும் இந்த உணவுகளை தவிர்த்தல் நல்லது. இதனால் மூளையின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

சுத்தீகரிக்கப்பட்ட உணவுகளான பாஸ்தா, பிரெட் போன்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளாதது நல்லது. கார்போஹட்ரேட் உணவுகளை அதிகம் உட்கொள்ளும் பழக்கமும் ஆபத்து. அப்படி வெள்ளை அரிசி சாதம் குறைந்த அளவு எடுத்துக்கொண்டு காய்கறி, பழ வகைகளை அதிகமாக உட்கொள்ளலாம். இதனால் குழந்தையிலிருந்தே மூளை ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

சுத்தீகரிக்கப்பட்ட உணவு : சுத்தீகரிக்கப்பட்ட உணவுகளான பாஸ்தா, பிரெட் போன்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளாதது நல்லது. கார்போஹட்ரேட் உணவுகளை அதிகம் உட்கொள்ளும் பழக்கமும் ஆபத்து. அப்படி வெள்ளை அரிசி சாதம் குறைந்த அளவு எடுத்துக்கொண்டு காய்கறி, பழ வகைகளை அதிகமாக உட்கொள்ளலாம். இதனால் குழந்தையிலிருந்தே மூளை ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

சூரை மீன் ஊட்டச்சத்து மிக்க உணவு என்றாலும் அதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது ஞாபக மறதியை அதிகரிக்கும். அதில் உள்ள மெர்க்குரி மூளையின் செயல் திறனை பாதிக்கும்.

அதிகப்படியான சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உணவில் அதிகப்படியான சர்க்கரை சேர்ப்பதனால் அறிவாற்றல் மற்றும் மூளை குறைபாடுகள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சர்க்கரை பானங்களை குடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது. அதிக இனிப்பு பானங்களை உட்கொள்பவர்களுக்கு நினைவாற்றல் குறைவு மற்றும் ஒட்டுமொத்த மூளையின் அளவு குறைகிறது.

நீங்கள் வயதாகும்போது உங்கள் மூளையை கூர்மையாக வைத்திருக்க விரும்பினால், அதிக ஸ்வீட் பானங்களைத் தவிர்க்கவும். சோடா, இனிப்பு தேநீர் மற்றும் பிற சர்க்கரை பானங்களை அதிகம் குடிப்பவர்களுக்கு நினைவாற்றல் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

பொரித்த உணவுகள்

வறுத்த உணவு வகைகளில் சுவைக்காக செயற்கை பொருட்கள், ரசாயனம், உணவுக்கு நிறமேற்ற சாயப்பொருட்கள் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்களுக்கு பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள நரம்பு செல்களை மெதுவாக பாதித்து அழிக்கிறது. வறுப்பதற்காக பயன்படுத்தப்படும் சில எண்ணெய் வகைகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. இதனால் சிறந்த எண்ணெய் வகைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

வறுத்த கோழி மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் உங்கள் மூளைக்கும் தீங்கு விளைவிக்கும். பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நினைவகம் மற்றும் மூளை செயல்பாடு போன்றவை பாதிக்க வாய்ப்புள்ளது.

அதிக கார்போஹைட்ரேட் உணவுகள்

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், இனிப்பு சுவை இல்லாதவை கூட உங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கலாம். அதைத் தொடர்ந்து அடிக்கடி உணவில் சேர்க்கும் போது மனரீதியான பிரட்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்க்கு பதிலாக முழு தானிய ரொட்டிகள், பழுப்பு அரிசி மற்றும் முழு கோதுமை உணவுகளை சாப்பிடலாம்.

வெள்ளை அரிசியில் முற்றிலும் அதிகளவு கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் அரிசி உணவை அதிகமாக உட்கொள்ளும்போது மூளையின் செயல்பாட்டில் பிரச்சினைகளை உண்டாக்கும். மனஅழுத்தத்தில் கொண்டு போய்விடும் அபாயங்களையும் அதிகரிக்கும்.

மது

ஆல்கஹால் அருந்துவது உங்கள் மூளையில் நீண்ட காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆல்கஹால் நேரடியாக மூளையின் தொடர்புப் பாதைகளை பாதிக்கிறது. நீங்கள் எவ்வளவு அதிகமாக குடிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு புதிய தகவலைச் அல்லது விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது பாதிக்கிறது . மது உங்களை குழப்பி அல்லது மனச்சோர்வடையச் செய்கிறது.

அதிகப்படியான மது அருந்துதல் மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும், அது மூளையின் செயல்திறனை குறைப்பது மட்டுமல்லாமல் மனரீதியான பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆல்கஹால் மூளை செல்களை அழித்து மூளை திசுக்களை சுருங்கச் செய்கிறது. அதிகப்படியான மது அருந்துபவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் உருவாகி மூளையின் செயல்பாட்டை மேலும் சேதப்படுத்தும்.



--

வியாழன், 29 ஜனவரி, 2026

தவறுதலாகக் கூட இந்த பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம்.. உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்து..

காலை உணவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்..

காலை உணவில் கவனம் செலுத்தாமல், இதன் விளைவாக, அவர்களின் உடல்நிலை சரியாகிவிடாமல் மோசமடையத் தொடங்குகிறது. இதனுடன், பல வகையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன. உண்மையில், காலையில் வெறும் வயிற்றில், ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும், ஆனால் சிலர் அமிலத்தன்மை கொண்ட பொருட்களை சாப்பிடுகிறார்கள், இதனால் அவர்களின் செரிமான அமைப்பு தொந்தரவு செய்யப்படுகிறது.

உங்கள் செரிமான அமைப்பு தனது வேலையைச் சிறப்பாகச் செய்து, நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதற்காக வெறும் வயிற்றில் கூட சாப்பிடக்கூடாத சில உணவுகளை பார்க்கலாம்..

இனிப்பு : நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் சில இனிப்புகளை சாப்பிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். உண்மையில், காலையில் வெறும் வயிற்றில் இனிப்புகளை சாப்பிடுவது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது மற்றும் நாள் முழுவதும் சோர்வாக இருக்கும்.

இனிப்பு உருளைக்கிழங்கு : இனிப்பு உருளைக்கிழங்கு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஆனால் நீங்கள் அதை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், அது நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். உண்மையில், இனிப்பு உருளைக்கிழங்கை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், அதில் உள்ள டானின் மற்றும் பெக்டின் காரணமாக, உங்களுக்கு இரைப்பை, அமில பிரச்சனைகள் ஏற்படலாம். இது தவிர, இது உங்களுக்கு நெஞ்செரிச்சல் மற்றும் வாயு பிரச்சனைகளையும் தரும்.

பால் மற்றும் வாழைப்பழம் : எடை குறைவாக இருப்பவர்கள் காலை வேளையில் பால், வாழைப்பழம் சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்கலாம் ஆனால் வாழைப்பழம் மற்றும் பால் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அஜீரணம், வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளும் வரலாம்..

மது : காலையில் வெறும் வயிற்றில் மது அருந்தினால், அது உங்களுக்கு விஷத்திற்கு சமமான தாக்கத்தை ஏற்படுத்தும். உண்மையில், வெறும் வயிற்றில் மது அருந்துவது விரைவாக போதைக்கு வழிவகுக்கிறது மற்றும் அது வயிற்று குடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது.

தக்காளி : நிச்சயமாக, தக்காளி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், ஆனால் பச்சையாக தக்காளியை உட்கொள்வதை காலையில் வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டும். உண்மையில், இதில் இருக்கும் புளிப்பு அமிலம் வயிற்றில் இருக்கும் இரைப்பை குடல் அமிலத்துடன் இணைந்து வயிற்று வலி, வாயு மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை அதிகரிக்கும். மேலும், இது கற்களைப் பெறுவதற்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது.

மருந்துகள் : பெரும்பாலும் மருத்துவர்கள் தங்கள் நோயாளிக்கு உணவு உண்ட பிறகு மருந்து எடுத்துக் கொள்ள அறிவுறுத்துகிறார்கள், ஆனால் நீங்கள் வெறும் வயிற்றில் மருந்துகளை உட்கொண்டால், அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும். வெறும் வயிற்றில் மருந்துகளை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும், எனவே மருத்துவரை அணுகிய பின்னரே மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

கிரீன் டீ : ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கிரீன் டீ ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதை நினைத்து, காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்தால், அது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதில் உள்ள காஃபின் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளை உங்களுக்கு ஏற்படுத்தும்.



--

திங்கள், 26 ஜனவரி, 2026

கோடை காலத்தில்முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடக் கூடாதா?

ஆரோக்கியமான, சரிவிகித உணவை உட்கொள்ள எண்ணும் அனைவருக்கும் முட்டையில் உள்ள பொதுவான சத்துக்கள் பற்றி நன்கு தெரியும்.

வைட்டமின் டி, வைட்டமின் பி, துத்தநாகம், கால்சியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களின் சங்கமமான முட்டை மலிவு விலையில் கிடைப்பது மற்றொரு சிறப்பாகும். இதன் ஊட்டச்சத்து மதிப்பைத் தவிர சல்பர் மற்றும் அமினோ அமில உள்ளடக்கம் காரணமாக முடி மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது, இது ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

ஆனால் முட்டை சாப்பிடுவதால் உடல் வெப்ப நிலை மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் கோடை காலத்தில் அதனை சாப்பிடக்கூடாது என்ற தவறான கருத்தும் உலவி வருகிறது. மேலும் முட்டை இது நெஞ்செரிச்சல், அஜீரணம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்ற மற்றொரு கட்டுக்கதையும் உள்ளது. மற்றொரு கட்டுக்கதை என்னவென்றால், முட்டைகளை உட்கொள்வது இதய நோய்களுக்கு வழிவகுக்கும், குறிப்பாக கோடை காலத்தில் முட்டைகளை சாப்பிடுவது அல்லது தவிர்ப்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது உண்மையான விஷயங்களை நாங்கள் உங்களுக்கு விளக்கியுள்ளோம்.

நிபுணர்கள் சொல்வது என்ன?

கோடை காலத்தில் மிதமான அளவிற்கு முட்டைகளை உட்கொள்வது பாதுகாப்பானது என ஆராய்ச்சியாளர்களும் உணவியல் நிபுணர்களும் உறுதியாக தெரிவித்துள்ளனர். முட்டைகள் உடலில் வெப்பத்தை உருவாக்கும் தன்மை கொண்டவை என்பது உண்மைதான் என்றாலும், மிதமான அளவு உட்கொள்வது ஆரோக்கியமானது மற்றும் இந்த சூப்பர் ஃபுட் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும்.

ஒரு ஆய்வின் படி, கோடை காலத்தில் முட்டைகளை சாப்பிடுவது, சாதாரண நீரிழிவு நோய் அல்லது டைப் 2 நீரழிவு நோய்களைக் கொண்டவர்களுக்கு இதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவது பாதுகாப்பானதா?

எடை பராமரிப்பாளர்கள் இடையே உள்ள மற்றொரு மிகப்பெரிய சந்தேகம் முட்டையின் மஞ்சள் கருவோடு சேர்த்து முழு முட்டையையும் சாப்பிடலாமா என்பது தான். முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் முட்டையின் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து 90 சதவீதம் உள்ளது, அதே சமயம் வெள்ளைப் பகுதியில் முட்டையின் புரதத்தில் பாதி உள்ளது. பல உடற்பயிற்சி ஆர்வலர்கள் முட்டையின் மஞ்சள் கருவை விட வெள்ளைப் பகுதியை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று கருதுகின்றனர்.

ஆனால் கோடை காலத்தில் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவது நல்லது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் நிறைந்துள்ளது, முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் உடலுக்குத் தேவையான பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மஞ்சள் கருவில் இரும்பு, ஃபோலேட் மற்றும் வைட்டமின்கள் போன்ற முட்டைகளின் பெரும்பாலான நல்ல பொருட்கள் உள்ளன. இதில் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் உள்ளது - இவை ஆரோக்கியமான கண்கள் மற்றும் மூளைக்கு நல்லது.

கோடையில் முட்டையின் மஞ்சள் கருவை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்கும் என்று நிரூபிக்கப்பட்ட அறிவியல் தரவு எதுவும் இல்லை. மேலும், சுகாதார ஆர்வலர்களின் கவனம் ஆரோக்கியமான உணவு முறைகளில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட உணவு அல்லது ஊட்டச்சத்துக்கள் இருக்க கூடாது என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முட்டையின் மஞ்சள் கருக்களின் விளைவுகள் குறித்து கவலைகள் இருந்தாலும், ஒரு சில ஆய்வுகள் முட்டையின் மஞ்சள் கருவை அதிக அளவில் உட்கொள்வது டைட் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே இதய நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளன. எனவே, எப்போதும் ஆரோக்கியமான அளவோடு இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.



--

திங்கள், 19 ஜனவரி, 2026

வீட்டில் வைத்திருக்கும் கல் பதித்த கவரிங் நகைகளில் உள்ள அழுக்குகளை எளிமையாக நீக்க வழி முறைகள்.

பொதுவாகவே வீட்டில் கல் பதித்த மோதிரங்கள், நெக்லஸ், வளையல், கம்மல் என நகைகள் இருக்கும். இந்த நகைகள் தங்கம் மற்றும் கவரிங் என வைத்திருப்பார்கள். இப்பொழுது தங்கம் மற்றும் கவரிங் நகைகளில் கல் பதித்து வைத்திருக்கக்கூடிய நகைகளை எப்படி பளிச்சென புத்தம்புதிதாக மாற்றுவது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். இந்தப் பதிவு வெள்ளைக்கல் பதித்து இருக்கக்கூடிய நகைகளுக்கு பொருந்தாது. அதனால் வேறு நிறக்கல் வைத்திருக்கக்கூடிய நகைகள் இருந்தால் இந்த முறையினை கொண்டு பளிச்சென தங்கம் போல மின்ன வைக்கமுடியும்.

முதலில் இதற்கு அவசியமான ஒரு பொருள் பூந்திக்கொட்டை. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய பொருளான பூந்திக்கொட்டைகளை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் இரண்டை எடுத்துக் கொண்டு உடைத்து அதில் இருக்கும் கொட்டைகளை நீக்கி விட்டு மேல் உள்ள தோலை மட்டும் நல்ல தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். இது ஊறிய பிறகு அந்தத் தண்ணீரை அடுப்பில் வைத்து சூடு செய்யவும். நன்றாக நுரை பொங்க ஆரம்பிக்கும். பின்னர் இதனை அடுப்பை அணைத்து விட்டு கீழே இறக்கி விடலாம். இது ஆறிய பிறகு உள்ளே இருக்கும் பூந்திக்கொட்டகளையும் நன்கு நசுக்கி விட்டு நுரைகளை அதிகப்படுத்திய பிறகு இந்த விழுதை வெளியேற்றிவிடலாம்.

பிறகு இதனுடன் உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய எந்த பல் துலக்கும் பேஸ்ட் ஆக இருந்தாலும் சரி அதில் இருந்து அரை ஸ்பூன் எடுத்து அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை நன்றாக கலக்கி விடவும். இதில் நீங்கள் வைத்திருக்கும் கல் பதித்த நகைகளை சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் வெளியே எடுத்து மென்மையான பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அழுத்தமாக சுத்தம் செய்யக்கூடாது. கல் பதித்த நகைகள் என்பதால் அழுத்தம் கொடுத்தால் கல் கொட்டி விடும் அபாயம் உண்டு. அதனால் மெதுவாக துடைக்க வேண்டும், பின்னர் ஒரு காட்டன் துணியை கொண்டு நன்கு துடைத்து விடவும். அவ்வளவுதான் உங்களது நகை பொலிவோடு தங்கம் போல பளபளவென மின்னத் தொடங்கும்.



--

வெள்ளி, 16 ஜனவரி, 2026

சளிபிடித்திருக்கும்போது பால் குடிக்கக்கூடாது என்பது எந்தளவுக்கு உண்மையானது?

சளி பிடித்திருந்தால் வேறு என்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

சாதாரண ஜலதோஷம் என்றால் பாலைக் காய்ச்சி அதில் மஞ்சள்தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு, குங்குமப்பூ எல்லாம் சேர்த்து சூடாகக் குடிப்பது மிகவும் நல்லது. அதுவே நெஞ்சு சளியாக இருந்தால், பால் குடிப்பதன் மூலம் சளி சுரப்பது அதிகரிக்கலாம் என்பதால் பாலைத் தவிர்க்கும்படி ஆயுர்வேதத்தில் சொல்லப் படுகிறது.

சளி பிடித்திருக்கும் போது முடிந்தளவுக்கு திரவ உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. ரசத்தையே சூப் மாதிரி குடிக்கலாம். காய்கறிகளை வேகவைத்த நீர் குடிக்கலாம். சூப் நல்லது, ஆனால் பாக்கெட்டுகளில் வரும் இன்ஸ்டன்ட் சூப் மிக்ஸில் தயாரித்த சூப்பை தவிர்க்கவும். காய்கறிகளை வேகவைத்து அரைத்து, கெட்டியான சூப்பாக குடிக்கலாம். எந்த உணவாக இருந்தாலும் நன்கு கொதிக்கவைத்தும், சூடாகவும் சாப்பிடுவது நல்லது.

சளி பிடித்திருக்கும் போது சிலருக்கு இருமலும் சேர்ந்துகொள்ளும். குறிப்பாக படுத்திருக்கும் நிலையில் அது தொண்டைப் பகுதியை மிகவும் எரிச்சலடையச் செய்யவும். வாய் வறண்டு, இருமல் அதிகரிக்கும். அப்படிப்பட்ட நிலையில் இரவு தூங்கச் செல்வதற்கு முன் மஞ்சள்தூள், வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சிய பால் குடிக்கலாம்.



--

செவ்வாய், 13 ஜனவரி, 2026

நரைமுடி, பொடுகு மற்றும்தலைப்பேன் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு!

சீகைக்காயில் நிறைந்துள்ள சத்து பொருட்கள் நம் தலைமுடியின் வேர்களுக்கு வேண்டிய அனைத்து நுண்ணுயிர் சத்துக்களை வழங்கி, முடியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, அதன் அடர்த்தியையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

அதுமட்டுமின்றி இது முடியில் உள்ள எண்ணெய் பசையை போக்கவும், முடிக்கு போஷாக்கு அளிக்கவும் உதவுகிறது.

இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. முடி உதிர்தலை தடுக்கிறது. கூந்தலுக்கு பளபளப்பை தருகிறது. ஆயுர்வேத ஷாம்புகள் மற்றும் சோப்புகள் தயாரிப்பில் சீகைக்காய் முக்கியமானது.

இதனை ஒரு சில பொருட்களுடன் பயன்படுத்தினால் நல்ல பலனை பெற முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

சீகைக்காய் பேஸ்ட்டை உருவாக்க, 2-3 டீஸ்பூன் சீகைக்காய் பொடியை 2 கப் தண்ணீருடன் கலக்க வேண்டும். கூடுதல் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த கலவையை கூந்தலில் தடவி பிறகு நீரில் அலசுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை இதை பயன்படுத்தி வர பளபளப்பான கூந்தலை பெற முடியும்.

சீகைக்காய் தூளுடன் தயிர் சேர்த்து குழைத்து உச்சந்தலை மற்றும் கூந்தலுக்கு அப்ளை செய்து வாருங்கள். 20-30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். . இது முடியை வேர்களில் இருந்து பலப்படுத்துகிறது மற்றும் முடி உதிர்தல், முடி சேதம் இவற்றை தடுக்கிறது.

சீகைக்காய் காய்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் லெமன் சேர்த்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரை கூந்தலில் அலசி வர பொடுகு மற்றும் பேன்களில் இருந்து விடுபட முடியும்.

சீகைக்காய் தூள் மற்றும் தயிரை சேர்த்து உச்சந்தலையில் தடவி வாருங்கள். 20-30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது பிளவுபட்ட முடிகள், முடி உதிர்தலை தடுக்கிறது. சீகைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வையுங்கள். அந்த தண்ணீரை கொதிக்க வைத்து காலையில் எழுந்ததும் அதைக் கொண்டு கூந்தலை அலசுங்கள்.இது கூந்தலுக்கு இயற்கையாகவும், கருமையாகவும், அடர்த்தியாகவும் மேலும் பளபளப்பான தோற்றத்தை அளிக்க உதவுகிறது.

அரை கப் கற்பூர எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டீஸ்பூன் வேப்பிலை தூள், 1 டீஸ்பூன் நல்லெண்ணெய், 1 டீஸ்பூன் சீகைக்காய் தூள் அனைத்தையும் ஒன்றாக கலந்து, மிகவும் கெட்டியாக இருந்தால், மேலும் இரண்டு துளிகள் எள் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தி வாருங்கள் . இதை அப்ளை செய்த பிறகு 20-30 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். பிறகு ஷாம்பு கொண்டு தலையை அலசி வாருங்கள். இது தலையில் பேன் உருவாகுவதை தடுக்கிறது.

2-3 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பிறகு இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் சீகைக்காய் பொடி சேர்த்து குழைத்து உச்சந்தலையில் அப்ளை செய்து மசாஜ் செய்து வாருங்கள். பிறகு 40 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசிட வேண்டும். வாரத்திற்கு 1-2 முறை இதை செய்து வாருங்கள்.



--

வெள்ளி, 9 ஜனவரி, 2026

வேப்பங்குச்சியில் பல் துலக்குவதால் கிடைக்கும் நன்மைகள்.

 பல் சுகாதாரம் என்பது ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும். அதனால்தான், ஏதேனும் பல் பிரச்சனைகள் ஏற்பட்டால், மூல காரணத்தைக் கண்டறிந்து தீர்வு காண்பது முக்கியம்.

ஆனால் சில நேரங்களில், எளிமையான விஷயங்களைச் செய்வது நிறைய வித்தியாசங்களை ஏற்படுத்தும் - அவற்றில் ஒன்று, வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடும் வேப்பங்குச்சியால் பல் துலக்குவது.

ப்ரெஷ்னர்களை நம் வாயில் தெளிப்பது முதல் சுயிங்-கம் வரை, வாய் புத்துணர்ச்சிக்காக நாம் அனைத்தையும் செய்கிறோம். ஆனால் இந்த விரைவான தீர்வுகள்' மூல காரணத்தை தீர்க்காது.

பல நன்மைகளைக் கொண்ட வேப்பங்குச்சி அல்லது வேம்பு பேஸ்ட் பயன்படுத்துங்கள்' என்று ஊட்டச்சத்து நிபுணர் நிதி குப்தா இன்ஸ்டாகிராமில் கூறினார்.

வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்கும் போது, அது வேப்ப எண்ணெயை வெளியிடுகிறது, இது வலுவான நுண்ணுயிர் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது,

அது எப்படி உதவுகிறது ?

* பிளேக் உருவாவதைத் தடுக்கிறது

*ஈறுகளை வலுவாக்கும்

* துர்நாற்றத்தை நீக்குகிறது

* பற்களை வெண்மையாக்கும்

சமீபத்தில், நான் இதை என் வாய்வழி சுகாதாரத்திற்காக பயன்படுத்த ஆரம்பித்தேன். நான் தினமும் இதைப் பயன்படுத்துவதில்லை, ஆனால் அதன் பலனைப் பெற வாரத்திற்கு இரண்டு முறையாவது, வேப்பங்குச்சியால் பல் துலக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறேன், 'என்று அவர் குறிப்பிட்டார்.

அதை எப்படி பயன்படுத்துவது ?

*வேப்ப மரத்திலிருந்து சிறிய குச்சியை உடைக்கவும்.

*பயன்படுத்துவதற்கு முன்பு அதை நன்கு கழுவவும். இப்போது அதை மெல்லத் தொடங்குங்கள்.

'வேப்பங்குச்சியில் பல் துலக்கும் முன், அதில் உப்பு மற்றும் கடுகு எண்ணெயைக் கலந்து தடவலாம். இப்படி செய்வதால் பற்கள் மற்றும் ஈறுகள் வலுவாகும், 'என்று குப்தா கூறினார்.



--

செவ்வாய், 6 ஜனவரி, 2026

கால்களுக்கான பயிற்சி.

ஒரு சில பெண்களுக்கு கால் பகுதிகளில் குறிப்பாக தொடையில் அதிகளவில் சதை காணப்படும். இதில் அவர்கள் எந்த உடை போட்டாலும் பார்க்க நன்றாக இருக்காது. இவர்கள் நடைப்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் கால் பகுதிகளில் உள்ள அதிகப்படியாக சதை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

அவ்வாறு நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடி ஒரு சில பயிற்சிகளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அவை முறையே.... தரையில் ஒருக்களித்துப் படுத்துக்கொள்ளுங்கள். வலது கையை தலையின் அடியில் வைத்துக்கொண்டு இடது கையை மார்புக்கு நேரே தரையில் ஊன்றிக் கொள்ளுங்கள்.

வலது காலை 'எல்' வடிவத்தில் மடித்து வையுங்கள். மூச்சுக் காற்றை உள் இழுத்தபடி இடதுகாலை மேலே உயர்த்துங்கள். மூச்சுக் காற்றை வெளியே விட்டபடி காலைத் தரையோடு தரையாக இறக்கி விடுங்கள். இதேபோல் 10 தடவை செய்யுங்கள். நன்கு பழகிய பிறகு 25 முறை செய்யலாம். இதை ஒரு பக்கமாகச் செய்தால் மட்டும் போதும்.

இடது காலை உயர்த்தி இந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டியது இல்லை. இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் உங்கள் கால்களில் உள்ள அதிகப்படியான சதை குறைவதை காணலாம்.

பலன்: இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியை பலப்படுத்தும். பிரசவ நேரத்தில் முதுகு இடுப்புப் பகுதிகளில் ஏற்படும் சிறு வலிகளை தடுக்கும். தொடை இடுப்புத் தசைகளை இலகுவாக்கும். கர்ப்ப நேரத்தில் பாதங்களில் ஏற்படும் வீக்கத்தை விரட்டும்.



--

தினமும் இன்ஸ்டண்ட்இட்லி மாவு பயன் படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்.

உலக ஆராய்ச்சியாளர்களால் காலை உணவுக்கு சிறந்த உணவு என கூறப்பட்டுள்ள ஆரோக்கிய உணவு இட்லி. இதற்க...

Popular Posts