லேபிள்கள்

வெள்ளி, 26 ஜூன், 2026

புகைப் பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பார்க்கலாம்.

புகைபிடிப்பதை நிறுத்தினால் ஏற்படும் மாற்றங்கள்?

புகைபிடிப்பதை நிறுத்திய 20 நிமிடத்தில் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இயங்க ஆரம்பிக்கிறது.

12 மணி நேரத்தில் ரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு அளவு படிப்படியாக குறைந்து சீராகிறது. 2- 12 வாரங்களில் உடல் இயக்கம் சீராகிறது, நுரையீரல் செயல்பாடுகள் அதிகரிக்கிறது.

1-9 மாதங்களில் இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் குறைகிறது. 1 வருடத்தில் இதய நோய் வருவதற்கான ஆபத்து பாதியாகக் குறைகிறது.5 வருடங்களில் பக்கவாதம் வருவதற்கான ஆபத்துகள் குறைகின்றன.

10 ஆண்டுகளில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து பாதியாகக் குறைகிறது. வாய், தொண்டை, சிறுநீர்பை புற்றுநோய், கணைய நோய்கள் வருவதற்கான ஆபத்துகள் குறைகிறது.

15 ஆண்டுகளில் இதய நோய் வருவதற்கான ஆபத்து முற்றிலும் குறைகிறது.

புகைப்பிடிப்பதை கைவிடுவதால் ஏற்படும் நன்மைகள்

30 வயதில் புகைபிடிப்பதை நிறுத்தினால் 10 வருடங்கள் வரை உயிர் வாழலாம். 40 வயதில் நிறுத்தினால் 9 வருடங்கள் உயிர் வாழலாம். 50 வயதில் நிறுத்தினால் 6 வருடங்கள் உயிர் வாழலாம். 60 வயதில் நிறுத்தினால் 3 வருடங்கள் வரை உயிர் வாழலாம்.

மாரடைப்பு வந்தவர் புகைபிடிப்பதை நிறுத்தினால், இன்னொரு முறை மாரடைப்பு வருதற்கான வாய்ப்புகள் 50 சதவிகிதமாக குறைகிறது.

மற்ற நன்மைகள் புகைபிடிப்பதை நிறுத்தினால் ஆண்மைக் குறைவு, கருத்தரித்தல் பிரச்சினை, குறை பிரசவம், குறைந்த எடையில் குழந்தை பிறப்பது, கருச்சிதைவு ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

இன்றே புகைப்பதை நிறுத்திப்பாருங்கள், உங்கள் உடலிலும் இத்தகைய மாற்றங்களை கண்டு நீண்ட நாட்கள் உயிரோடு வாழலாம்.



--

செவ்வாய், 23 ஜூன், 2026

எட்டு வடிவநடைப்பயிற்சி மேற் கொள்வதால் ஏற்படும் பலன்கள்.

எட்டு நடைப்பயிற்சியின் போது எந்த வகையான காலணிகளும் இல்லாமல் வெறும் கால்களில் இந்த நடைபயிற்சியை மேற்கொள்வதே முழுமையான பலன்களை கொடுக்கும்.

கால்களில் காயம் மற்றும் இன்ன பிற பிரச்சனைகள் உள்ளவர்கள் மட்டும் காலணி, ஷூ போன்றவற்றை அணிந்து இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

8 வடிவ நடைப்பயிற்சி எப்போதுமே வடக்கு, தெற்கு திசைகளில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். முதலில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 15 நிமிட நேரம் எட்டு வடிவ நடை பயிற்சியை செய்ய வேண்டும். பிறகு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி எட்டு வடிவில் 15 நிமிட நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இந்த எட்டு வடிவ நடை பயிற்சி செய்வதற்கு மொத்தம் 30 நிமிடங்கள் மட்டுமே போதுமானதாகும்.

உடல் வலி, தலைவலி, செரிமான பிரச்சனைகள், தைராய்டு, உடல் பருமன், மலச்சிக்கல், ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் முழங்கால் வலி, போன்ற பல நோய்கள், பிரச்சனைகளால் அவதிப்பட்டவர்கள் 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொண்ட சில காலத்திலேயே அவை அனைத்தும் நீங்குவதை அனுபவபூர்வமாக உணரலாம். மேலும் 8 வடிவ நடை பயிற்சி மேற்கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வெகுவாக குறையும்.

முக்கியமாக இந்த பயிற்சியை தினமும் தவறாமல் செய்து வந்தால் இளமையான தோற்றத்தையும், இளைய வயதினரை போன்ற மன உற்சாகத்தையும் தக்க வைத்துக்கொள்ளலாம். 8

வடிவ நடைப்பயிற்சி மனிதர்களின் கண்களின் பார்வை திறனை மேம்படுத்தும். 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது, அந்த கோடுகளை கூர்ந்து கவனித்து நடைப்பயிற்சி மேற்கொள்வதால், கருவிழி அங்கும் இங்கும் அசைந்து, கண்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து கண்பார்வை மங்குதல், கண் அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அறவே நீங்கும்.



--

வெள்ளி, 19 ஜூன், 2026

இரத்தக்கொதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் என்னென்ன?

மருந்து உட்கொள்வது மட்டுமின்றி நமது வாழ்க்கை முறையில் சில நல்ல மாற்றங்களை செய்து கொள்வதினாலும் நாம் இரத்தக் கொதிப்பிலிருந்து விடுபடலாம்.

1) உணவில் உப்பு சேர்ப்பதைக் குறைத்துக் கொள்ளல்:உப்பு அதிகமாக இருக்கும் பண்டங்களான ஊறுகாய், அப்பளம், கருவாடு, மற்றும் அதிக உப்பு சேர்க்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் முந்தரி, சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

2) பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் உணவில்அதிக அளவில் சேர்த்துக் கொள்வது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும்.

3) மனதை ரிலாக்ஸ் செய்யும் முறைகள்:யோகா மற்றும் தியானம் ஆகியவற்றை எந்த பரபரப்பும் இன்றி தவறாமல் செய்தால் இரத்தக் கொதிப்பு பெருமளவு குறையும்.

4) உடற்பயிற்சி:தினமும் தவறாமல் மிதமான உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும் 30 நிமிடங்கள் வாக்கிங் போவதோ, 20 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதோ அல்லது நீச்சல் அடிப்பதோ சரியான உடற்பயிற்சி முறைகள். இவை உடற்பருமனையும் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறையும்.

5) புகை பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் முதலிய பழக்கங்களை அறவே நீக்குவதால்இரத்தக் கொதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

6) தவறாமல் குடும்ப டாக்டரிடம் சென்று இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ளுதல்

நம் நாட்டில் சமீபகாலமாக 30 வயதுக்குக் குறைவான இளைஞர்களுக்குக் கூட இரத்தக் கொதிப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே 20 லிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் வருடத்துக்குக் இரண்டு முறையாவது பா¢சோதனை செய்து கொள்வது அவசியம்.40 வயதைக் கடந்தவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்வது அவசியம். குறிப்பாக, குடும்பரிதியாக உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக தங்களை மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்வது மிக மிக அவசியம்.

உயர் இரத்த அழுத்தம் (இரத்த கொதிப்பு) என்பது சமீபகாலமாக மக்களில் அநேகம் பேரை பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. பலருக்கு எந்த விளைவுகளும் ஏற்படுத்தாமல், எந்த அறிகுறியும் காட்டாமல், ஆபத்தான கட்டத்தை நோக்கி உள்ளே அது பூதாகாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான மனிதராகவே நாம் நடமாடிக் கொண்டிருக்க ஒரு நிலையில் திடீரென்று இரத்தக் கொதிப்பு தன் கோர முகத்தைக் காட்டும் போது, நாம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். இதன் வெளிப்படையான அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம் என்பதாலும், மெதுவாக எல்லா முக்கிய உறுப்பு மண்டலங்களையும் பாதிப்பதாலும் இதனை ஒரு அமைதிக் கொலையாளி என்று அழைத்தால் அது மிகையாகாது.



--

செவ்வாய், 16 ஜூன், 2026

எலுமிச்சை வேக வைத்த நீருக்குள் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள்.

எலுமிச்சை நமக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு பழமாகும்.

உலகம் முழுவதும் பிரபலமான ஒரு பானமாக எலுமிச்சை தேநீர் உள்ளது. இது ஒரு சுவையான புத்துணர்ச்சி பானமாகும், மேலும் நமது ஆரோக்கியத்திற்கும் இது நன்மை பயக்கிறது. கடந்த சில வருடங்களாக மக்கள் பரவலாக எலுமிச்சையை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

இப்போது எலுமிச்சையை மக்கள் பல்வேறு வழிகளில் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். பத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு வழிகளில் எலுமிச்சையை கொண்டு பானம் செய்ய முடியும், அவை ஒவ்வொன்றும் ஆரோக்கியமானதாகவும் சுவையானதாகவும் இருக்கும். அதில் வேக வைத்த எலுமிச்சை நீரும் ஒன்று. இந்த பானமானது நமக்கு என்ன வகையான நன்மைகளை செய்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

எலுமிச்சையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் ஃபோலேட் அமிலம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன ஒரு அற்புத பழமாகும்.

இது சமையலுக்கு மட்டுமின்றி சரும அழகு, ஆரோக்கிய பிரச்சினைகள் போன்ற பலவகை நன்மைகளை தருகின்றது.

எலுமிச்சையின் சாற்றில் மட்டும் சத்துக்கள் இருப்பதில்லை, அதன் தோலிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளன. எலுமிச்சையின் தோலில் உள்ள சத்துக்களைப் பெற, எலுமிச்சையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்நீரைக் குடிக்க வேண்டும்.

எலுமிச்சை வேக வைத்த நீர் பல நோய்களை எதிர்த்துப் போராடுகின்றது. அந்தவகையில் நாம் எலுமிச்சை வேக வைத்த நீரை குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து காண்போம்.

எப்போது, எப்படி குடிப்பது?

எலுமிச்சை நீரை தயாரிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அதில் பாதி எலுமிச்சையை வெட்டி போட்டு, சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்த பிறகு இறக்கி குளிர வைத்து, தேன் கலந்து குடிக்க வேண்டும்.

இந்த எலுமிச்சை நீரை காலையில் எழுந்ததும் காபி, டீ-க்கு பதிலாக குடிக்கலாம்.

தினமும் இந்த நேரத்தில் எலுமிச்சை வேக வைத்த நீரை குடிச்சு பாருங்க!

எலுமிச்சை வேக வைத்த நீரைக் குடிப்பதால் சருமத்தில் உள்ள பாக்டீயாக்களின் அளவு குறையும். இதன் விளைவாக சருமம் சுத்தமாக இருக்கும். குறிப்பாக எலுமிச்சை வேக வைத்த நீர் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக செயல்பட்டு, சருமத்தில் ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கிறது.

எலுமிச்சை வேக வைத்த நீரைக் குடிப்பது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. இது உயர் இரத்த அழுத்தத்தை சாதாரண நிலைக்கு கொண்டு வர உதவுகிறது.

எலுமிச்சை வேக வைத்த நீர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குறிப்பாக இது வைரஸ் தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது உடலை சுத்தப்படுத்தி, நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

எலுமிச்சை நீரில் தேன் கலந்து குடிப்பதன் மூலம், உடலில் உள்ள கொழுப்புக்கள் விரைவாக குறையத் தொடங்கும் மற்றும் உடலும் நீரேற்றத்துடன் இருக்கும்.

எலுமிச்சை வேக வைத்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், செரிமான மண்டலம் வலுவாகும்.

எலுமிச்சை வேக வைத்த நீரைக் குடிப்பது சிறுநீரக கற்களில் உள்ள கால்சியம் ஆக்சலேட்டின் விளைவைக் குறைக்கும்.



--

சனி, 13 ஜூன், 2026

அதிக நேரம் ஹெட்போன் பயன்படுத்துபவரா நீங்கள்?

செல்போன் வந்த பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சுற்றுப்புறமே மறந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

அதிலும் இரவு முழுவதும் ப்ளூடூத் இயர்போன்கள், ஹெட்போன்கள் மற்றும் இயர்பட்ஸ் ஆகியவை மூலம் பாட்டு கேட்டால் உலகமே மறந்து தான் போகிறது. ஆனால் இவை தரும் விளைவுகள் எண்ணற்றவை.

ஆனால் இந்த வயர்லெஸ் சாதனங்களிலிருந்து வெளிப்படும் ரேடியோ அதிர்வெண் கதிர்வீச்சுகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இன்று நம்மில் பலருக்கும் இருக்கும் பழக்கங்களில் ஒன்று ஹெட்போன் பயன்படுத்துவது. பயணம் செய்யும்போதும், உடற்பயிற்சி செய்யும்போதும், வாகனங்கள் ஓட்டும்போதும் இப்படி பல்வேறு நேரங்களில் ஹெட்போன் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றோம். மேலும், தொலைபேசியின் கதிர் வீச்சில் இருந்து தப்பிக்க தொலைபேசி பேசும்போதும் ஹெட்போன் பயன்படுத்துகிறோம்.

இப்படி அதிகமாக ஹெட்போன் பயன்படுத்துவது சரியா? இதனால் என்னென்ன பிரச்சனைகள் வரும்? இதற்கான தீர்வு என்ன? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பின்விளைவுகள் என்ன?

அதிக நேரம் ஹெட்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு காது கேட்கும் திறனில் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக அதிகமாக ஹெட்போன் பயன்படுத்துபவர்களுக்கு 'சென்ஸரி நியூரல் லாஸ்" எனப்படும் பாதிப்பு ஏற்பட்டு இதனால் காதுக்குள் இரைச்சல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.

மேலும் ஹெட்போன் பயன்படுத்துவதால் இளம் வயதிலையே கேட்கும் திறன் பாதிக்கப்பட்டு காது நன்றாக கேட்பதற்கான மெஷின்களை பயன்படுத்த நேரிடும்.

தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற வியாதிகள் வர அதிக நேரம் ஹெட்போன் பயன்படுத்துவதும் ஒரு காரணம் ஆகும். மேலும் அதிகம் நேரம் ஹெட்போன் பயன்படுத்துவதால் சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி குறையும்.

வண்டி ஓட்டும்போது ஹெட்போன் பயன்படுத்துவதால் அதிகமாக விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது.

அதிக நேரம் ஹெட்போன் பயன்படுத்துவதால் காதில் இருந்து வெளியேறும் அழுக்குகள் சரியாக வெளியேறாமல் காதிலையே தங்கி சீல், காது அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் இசை அதிர்வினால் செவி மடலும் பாதிப்படைந்து காரணமே இல்லாமல் காது வலி ஏற்படும்.

நீண்ட நேர ஹெட்போன் உபயோகிப்பதினால் உருவாகும் மின்காந்த அலைகள் உங்கள் மூளையின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

பயணத்தின் போது ஹெட்போன்கள் உபயோகிப்பது உங்களுக்கு பயணத்தை எளிதாக்க ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. மற்ற நேரங்களை காட்டிலும் பயணத்தின்போது ஹெட்போன் உபயோகிப்பது இருமடங்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தீர்வு :

காதுகளின் ஓட்டைக்குள் செல்லும் ஹெட்போன்களை தவிர்க்க வேண்டும். காதுகளுக்கு வெளியே இருக்கும் படியான பெரிய ஹெட்போன்களை பயன்படுத்துவது நல்லது.

முக்கியமாக சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களை கடக்கும்போது ஹெட்போனை தவிர்த்திடுங்கள் அல்லது ஒலி அளவை குறைத்து கேளுங்கள்.

சாதாரண ஹெட்போன் தானே என்று அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். உங்கள் ஹெட்போனை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்.

சார்ஜ் ஏற்றிக்கொண்டு போன் பேசுவது, இன்டர்நெட் பயன்படுத்துவது, ஹெட்போனில் பாடல் கேட்பது போன்ற பழக்கங்களை தவிர்ப்பது நல்லது.



--

செவ்வாய், 9 ஜூன், 2026

பசி எடுக்கும் போதுஎன்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?

பசி என்பது எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளால் அறியப் படுகிறது. நாம் உணவு உண்ணும் போது, அந்த உணவை ரசித்து ருசித்து மனதார உண்ண வேண்டும்.

இதனால் எந்த ஒரு கவனச்சிதறல் இல்லாமல், உணவின் மீது முழு கவனம் செலுத்தி நம்மால் உணவினை நன்றாக உண்ண முடிகிறது. சரி வாங்க பசியின் வகைகளை பற்றி பார்க்கலாம்..

பசி நமது உணர்வுடன் தொடர்புடையது. என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்ற வடிவத்தில் மன பசி தோன்றுகிறது. நாம் சந்தோஷமாக இருக்கும் தினங்களில் சிக்கன் பிரியாணி போன்ற உணவுகளையும், நாம் சோகமாக இருக்கும் தினங்களில் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுவது இந்த மன பசி தான். மேலும் நாம் குறைவான கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது அதிக புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், அல்லது தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் போன்ற எண்ணங்களை தூண்டுவது இந்த மன பசி.

இந்த மன பசியில் உள்ள ஒரு தீங்கு என்னவென்றால், நேரத்திற்குத் தகுந்தாற்போல் நாம் உணவுகளை தேர்ந்தெடுக்கும் படி இது செய்கிறது. ஊட்டச்சத்தினை அதிகரிக்க பல்வேறு குறிப்புகள், அழகு நிபுணர்களின் ஆலோசனை போன்ற நம் மன எண்ணப்படி உணவுகளைமாற்றிக் கொள்கிறோம். இதனால் ஆரோக்கியமான ஊட்டத்சத்து நம் உடலுக்கு கிடைப்பதில்லை. நீங்கள் உணவினை உட்கொள்வதற்கு முன் சில கேள்விகளை தன்னைத்தானே கேட்டுக் கொள்ளவேண்டும். அதாவது பசிக்காக சாப்பிடுகிறீர்களா அல்லது ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்த காரணத்தால் சாப்பிடுகிறீர்களா போன்ற கேள்விகளை கேட்டுக் கொள்ளலாம். மேலும் இந்த உணவு உங்களுக்கு ஊட்டச்சத்தினை வழங்குமா? அல்லது இது உங்களுக்கு பசியை தீர்க்குமா? போன்ற கேள்விகளை நீங்கள் கேட்டு கொள்வது நல்லது.

மனரீதியான பசி:- நாம் சந்தோஷமாக இருக்கும் தினங்களில் சிக்கன் பிரியாணி போன்ற உணவுகளையும், நாம் சோகமாக இருக்கும் தினங்களில் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுவது இந்த மன பசி தான். இந்த மன பசியில் உள்ள ஒரு தீங்கு என்னவென்றால், நேரத்திற்குத் தகுந்தாற்போல் நாம் உணவுகளை தேர்ந்தெடுக்கும் படி இது செய்கிறது. ஊட்டச்சத்தினை அதிகரிக்க பல்வேறு குறிப்புகள், அழகு நிபுணர்களின் ஆலோசனை போன்ற நம் மன எண்ணப்படி உணவுகளைமாற்றிக் கொள்கிறோம்.

கண் பசி:- பசிக்காக சாப்பிடாமல் பிடித்ததை சாப்பிடுவதற்கு இது நம்மை தூண்டுகிறது. சிலருக்கு சில பிடித்தமான ஹோட்டல்களில் சமைக்கும் உணவை பார்த்தால் உடனே சாப்பிட வேண்டுமென்று தோன்றும். இந்த நேரங்களிலும் நீங்கள் உங்கள் கவனத்தை வேறு திசையில் திருப்புவது சாலச் சிறந்தது.

வாய் பசி:- ஏதேனும் உணவை சுவைக்க வேண்டும் என்று விரும்பினால், அந்த உணவு ஆரோக்கியமானதா என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் அது உங்கள் பசியை பூர்த்தி செய்ய உதவுமா என்றும் பாருங்கள். திடீரென குளிர்பானம் குடிக்க வேண்டும் அல்லது சுவையான உணவு உண்ண வேண்டும் அல்லது சூடாக ஏதாவது ருசிக்க வேண்டும் போன்ற எண்ணங்களை நமக்கு ஏற்படுத்தும்..



--

சனி, 6 ஜூன், 2026

மழை நீரில் குளிப்பது சருமம் மற்றும் கூந்தலுக்கு நல்லதா?

பருவமழையானது உயர்ந்து வரும் வெப்பநிலையைக் குறைத்து, நமது திருப்தியின் அளவை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு முறையும் மழை நம்மை மகிழ்விக்கிறது.

ஒரு சிலருக்கு மழையை ரசிப்பது பிடிக்கும். ஒரு சிலருக்கு மழையில் குளிப்பது பிடிக்கும். ஆனால் மழையில் குளிப்பது உங்கள் சருமத்திற்கு நல்லதா?

முதலில் மழையானது கொளுத்தும் வெப்பத்திலிருந்து ஆறுதல் அளிக்க உதவும். மழை பெய்யும்போது நாம் நனைந்துவிடுகிறோம் என்பதால் உளவியல் ரீதியாக மிகவும் நிம்மதியாக இருக்கிறோம். எவ்வாறாயினும், மாசுபாடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு (H2S) போன்ற நச்சு இரசாயனங்கள், வாகன உமிழ்வுகள் மற்றும் தொழில்துறை பகுதிகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பகுதியில் நாம் வசிக்கிறோம். எனவே, மழைத்துளிகள் ஆபத்தான பொருட்களுடன் இணைந்து உங்கள் தோலை சேதப்படுத்தும் சாத்தியம் உள்ளது. எனவே, மழைக்காலத்தில் நாம் பெறும் மழைநீரில் பெரும்பாலானவை அமிலத்தன்மை, அழுக்கு மற்றும் அசுத்தமானவை. இது அனைவருக்கும் மோசமானது.

பருவ மழையில் குளிப்பது சருமத்திற்கும் கூந்தலுக்கும் தீமை விளைவிக்குமா?

உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால், அமில மழை உங்கள் சருமத்தை சேதப்படுத்தும் என்பதால், மழைக்காலத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழையில் குளிப்பது பொடுகு, வெப்பம் அல்லது முகப்பரு போன்றவற்றுக்கு உதவும் என்று பலர் நம்புகிறார்கள். உண்மையில், இந்த நீரில் அதிக அளவு மாசுக்கள் இருப்பதால், உங்களுக்கு கடுமையான முகப்பரு, தோல் தொற்று மற்றும் தோல் வெடிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன. மழையில் நனைந்த பிறகு, உங்கள் தோல் மற்றும் தலைமுடியில் அரிப்பு ஏற்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். மழைநீர் சிலருக்கு தோல் வெடிப்புகளைத் தணிக்கும்.

இந்த பருவமழையில், நீங்கள் மழையில் நனைய நினைத்தாலோ அல்லது மழையில் குளிப்பதை விரும்பினாலோ, வீட்டிற்கு வந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் குளிக்க மறக்காதீர்கள். உங்கள் சருமத்தின் மேற்பரப்பில் உள்ள அசுத்தங்களை அகற்ற லேசான ஃபேஸ் வாஷ் பயன்படுத்தவும். ஷாம்பூவைத் தொடர்ந்து கண்டிஷனரைப் பயன்படுத்த மறக்காதீர்கள். இது கூந்தலில் ஈரப்பதத்தைப் பாதுகாத்து, அதனை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைக்கிறது. நோய்த்தொற்றுகளைத் தவிர்க்க ஆடைகளை அணிவதற்கு முன் உடலை நன்கு உலர்த்தி வைத்துக் கொள்ளுங்கள்.



--

புதன், 3 ஜூன், 2026

சொத்தைப் பல் வராமல்தடுக்கும் எளிய வழி முறைகள்.

கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான்.

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! இதனால் பாக்டீரியாக்கள் பற்களை சொத்தையாக்கிவிடும். இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். அதற்காக சொத்தைப் பற்களை பிடுங்கி எடுக்க வேண்டும் என்பதில்லை. பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!! உண்ணும் உணவில் ஒருசில மாற்றங்களுடன், அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், சொத்தைத் தடுக்கலாம்.

ஆயில்புல்லிங்

ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி, வாயின் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் உருவாவதைத் தடுக்கலாம்

கிராம்பு

2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டனில் அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டானை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும்

உப்புதண்ணீர்

அன்றாடம் காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, பற்களை துலக்கம் முன் அதனை வாயில் ஊற்றி 1 நிமிடம் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன் செய்து வந்தால், பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்.

பூண்டு

3-4 பற்கள் பூண்டை தட்டை, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அக்கலவையை பாதிக்கப்பட்ட பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து, அக்கலவையை சொத்தைப் பல்லின் மீது அழுத்தவும், இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், சொத்தைப் பற்களை உருவாக்கிய பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்.

மஞ்சள்

மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும்.

வேப்பிலை

வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தைப் பற்களைப் போக்கலாம் .

உணவுமுறைகளில்மாற்றம்

சொத்தைப் பற்கள் உருவாவதற்கு போதிய கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது மற்றும் கொழுப்பில் கரையாத வைட்டமின்களான ஏ, டி, , கே போன்றவற்றின் குறைபாடு மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது தான் காரணம். இதற்கு சரியான தீர்வு, நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாடம் உட்கொண்டு வர வேண்டும்.



--

புகைப் பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பார்க்கலாம்.

புகைபிடிப்பதை நிறுத்தினால் ஏற்படும் மாற்றங்கள் ? புகைபிடிப்பதை நிறுத்திய 20 நிமிடத்தில் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீரா...

Popular Posts