லேபிள்கள்

புதன், 6 டிசம்பர், 2023

பகலில் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்.

 

தூங்குவதால் உடலுக்கு ஓய்வு கிடைத்து சோர்வு நீங்குகிறது. சிலருக்கு படுத்தவுடன் தூக் கம் கண்களை தழுவும்.

இன்னும் சிலர் புரண்டு புரண்டு படுத்து தான் தூக்கத்தை வரவ ழைத்து கொள்வார்கள்.இன்னும் சிலர் உண்டு. அவர்கள் தலைகீழாக நின்று குட்டிகரணம் போட்டாலும் கூட தூக்கம் வருவது பெரிய பாடாகவே இருக்கும். இதெல்லாம் இன்றைய காலத்தின் கொடுமை என்று கூட சொல்லலாம்.

தூக்கத்தின் நிலையை மூன்றாக பிரித்துவைத்திருக்கிறார்கள் ஒன்று மந்தமான தூக்கம். சின்ன சத்தம் கேட்டால் கூட விழித்துவிடுவார்கள். இரண்டாவது கும்பகர்ணன் தூக்கம் என்று சொல்லகூடிய அளவு இடியே விழுந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் விழிப்பு வராது. இவர்களை தட்டிஉலுக்கி எழுப்பினாலும் அந்த கலக்கத்திலிருந்து வெளியே வர அதிக நேரம் பிடிக்கும். மூன்றாவது நிலை தூக்கமானது ஆழமான தூக்கத்தில் இருந்தாலும் சிறு அசைவு அல்லது எழுப்பினால் உடனடியாக எழுந்துவிடுவது. இதில் நீங்கள் எந்த ரகம் என்பது உங்களுக்கு தெரியும்.

தினமும் வாடிக்கையாக அதிக நேரம் பகல் தூக்கம் என்பது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடிய ஒரு விஷயமாகும். பகல் முழுவதும் உடல் உறுப்புகள் உற்சாகமாக செயல்பட்டு கொண்டிருக்கும். இப்படி இருக்கும் பொழுது திடீரென உடலுக்கு ஓய்வு அளிக்கும் பொழுது உடலானது குழம்பிப் போய்விடும். இந்த குழப்ப நிலை புற்று நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுத்து விடும். - இதைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆய்வாளர்களுக்கு மற்றவர்களை விட வயது முதிர்ந்தவர்கள் பகல் நேர தூக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று கருத்து கூறியுள்ளனர். பகல் நேர தூக்கத்தை விட தூக்கமின்மை பிரச்சனை 2.3% அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இரவில் சரியான தூக்கமும், பகலில் சரியான உடல் உழைப்பும் இருப்பவர்களுக்கு தேவையற்ற நோய்களும் அவ்வளவு சீக்கிரம் நெருங்குவதில்லை. மதிய உணவை சாப்பிட்ட உடன் பலருக்கு தூக்கம் வருவது உண்டு. இதனை உண்ட மயக்கமா? என்று கிண்டல் செய்வது உண்டு. இப்படி சாப்பிட்டவுடன் படுத்து உறங்குபவர்களுக்கு உடல் எடை கணிசமாக உயர்ந்து விடுகிறது. இதனால் நீரிழிவு, இதயநோய் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பகலில் அதிக நேரம் தூங்குபவர்களுக்கு, இரவில் சரியான தூக்கம் வருவது இல்லை. இப்படி மாறுபட்ட முறையில் தூக்கம் என்கிற நிகழ்வு நிகழ்வதால் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது எனவே ஆரோக்கியமான உணவு முறை பழக்கத்தையும், தூங்கும் முறையையும் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக 45 வயதை கடந்தவர்கள் பகலில் அதிக நேரம் உறங்குவதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

பெண்கள் சமையலறையில் கேஸ் அடுப்பு பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்.


கேஸ் அடுப்பை பயன் படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமானது. கேஸ் அடுப்பை கையாளும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி 4 டிப்ஸ் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

காலையில் எழுந்ததும் நாம் செய்யும் முதல் வேலை அடுப்பை பற்ற வைத்து பால் காய்ச்சுவது. இப்போது, கிராமத்தில் கூட அதிக அளவில், விறகு அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு, பயன்பாடு குறைய துவங்கியுள்ளது. பொங்கல் திருவிழா காலங்களில் மட்டுமே விறகு அடுப்பு பயன்பாட்டில் உள்ளது. அதிக அளவிலான வீட்டில் கேஸ் அடுப்புகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. மற்றவை மலையேறிவிட்டன என்று தான் சொல்ல முடியும். ஏனெனில், கேஸ் அடுப்புகள் உபயோகப்படுத்துவது எளிதானது, விரைவாக சமைக்க முடியும் என பல நன்மைகள் இதில் இருக்கின்றன.

குறிப்பாக, காலையில் எழுந்து ஆஃபீஸ் ஃபோன் கால்ஸ், குழந்தைகள், குடும்ப வேலை இடையே சமையலறை என பிஸியாக இருக்கும் பெண்கள், கேஸ் அடுப்பை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமானது. நம்மை அறியாமல் செய்யும் தவறுகளால் விபத்துகள் நேரும் வாய்ப்புகள் உள்ளன. கேஸ் அடுப்பை கையாளும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்களைப் பற்றி கீழே பார்ப்போம்.

1. சிறு தீயில் வைப்பது:

கேஸ் அடுப்பின் தீயை அதிகம், மிதமானது, குறைவானது என நமது தேவைக்கேற்ப வைத்து கொள்ளலாம். சமைக்கும்போது, தேவை ஏற்பட்டால் தவிர, மற்ற நேரங்களில் குறைவான தீயில் சமைப்பதையே பின்பற்றுங்கள். அடுப்பை 'ஆன்' செய்துவிட்டு, லைட்டர் அல்லது பர்னரை உடனே பற்ற வைக்க வேண்டும். ஒருவேளை பற்றவில்லை என்றால் தொடர்ந்து பற்ற வைக்க வேண்டாம் உடனே உடனே அதை அணைத்து விட்டு, சிறிது நேரம் கழித்து ஆன் செய்து பற்ற வைப்பது பாதுகாப்பானது.

2. சுத்தம் முக்கியமானது:

சமைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு அடுப்பையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பதும் முக்கியமானது. தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒரு முறையோ அடுப்பை சுத்தம் செய்வதற்கு மறவாதீர்கள். அடுப்பின் மீது எண்ணெய் கறை இருந்தால், எலுமிச்சம்பழச்சாறு, பேக்கிங் சோடா கொண்டு சுத்தம் செய்யுங்கள். இல்லையெனில் சுத்தம் செய்வதற்காகவே சந்தைகளில் கிடைக்கும் பிரத்யேகமான திரவங்களைப் பயன்படுத்தலாம்.

3. அதிக கவனம் தேவை:

கேஸ் அடுப்பில் சமையல் செய்யும்போது கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும்போது தவிர்க்க முடியாத காரணங்களால், அங்கிருந்து நகர்வதற்கு நேரிட்டால், அடுப்பை அணைத்துவிட்டோ அல்லது குறைவான தீயில் வைத்துவிட்டோ செல்லலாம். எண்ணெய், தண்ணீர் உபயோகிக்கும்போதும் கவனமாக இருங்கள். அடுப்பைச் சுற்றி எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வைப்பதை தவிர்க்கவும். குளிர்சாதனப்பெட்டியை முடிந்த அளவிற்கு சமையல் அறையில் இருந்து வெளியே வைப்பது சிறந்தது.

4. நவீன காலத்து ஸ்மோக் அலாரம்:

சமைப்பதற்குத் தேவையான பொருட்கள், சமையல் அறை சாதனங்கள் போன்றவற்றைத் தவிர, சில அத்தியாவசியமான பொருட்களும் சமையல் அறையில் இருப்பது அவசியம். தீப்பிடிக்கும் அபாயம் ஏற்பட்டாலோ அல்லது தீப்பிடித்தாலோ, சத்தம் எழுப்பும் 'ஸ்மோக் அலாரம்' எனப்படும் கருவியை சமையல் அறையில் பொருத்துவது உதவி கரமானதாக இருக்கும். தற்போது பெரும்பாலான நவீன சமையல் அறையில் இது பொருத்தப்படுகிறது.

அடுத்ததாக சமையல் அறையில் அவசியமாக இருக்க வேண்டியது 'சிம்னி'. அடுப்பிற்கு ஏற்றவாறு சரியான சிம்னியை தேர்ந்தெடுக்க வேண்டும். இது புகை வெளியே போவதற்கு மட்டுமல்லாமல், சமைக்கும்போது வெளியாகும் எண்ணெய் பிசுக்கு சுவரில் படிவதையும் தடுக்கும்.

ஞாயிறு, 26 நவம்பர், 2023

ஆணுருப்பின் அதிசயம்

ஆணுறுப்பின் மேல‌திக‌ தோலை வைக்காம‌லேயே இறைவ‌ன் ம‌னித‌னை ப‌டைத்திருக்க‌லாமேஎன‌ ஒரு மாற்று மத ச‌கோத‌ர‌ர் கேட்டார்.

அன்ப‌ரே…! அல்லாஹ் உங்க‌ளை ப‌டைத்த‌ போது நிர்வாண‌மாக‌த்தானே ப‌டைத்தான். அப்ப‌டியென்றால் ஏன் உட‌லை ம‌றைத்து ஆடை அணிகிறீர்க‌ள்? உங்க‌ளுக்கு அந்த‌ அறிவை கொடுத்த‌து யார்…?? அது போன்றே த‌லை, அக்குள், மீசை, ம‌ர்ம‌ முடி என்ப‌து வ‌ள‌ரும் த‌ன்மை கொண்ட‌து. அத‌னை ஏன் வெட்டுகிறீர்க‌ள்? அதை வ‌ள‌ராம‌ல் இறைவ‌ன் விட்டு விட‌லாமே என‌ நீங்க‌ள் ஏன் கேட்ப‌தில்லை?

ஆணுறுப்பிலும், பெண்ணுறுப்பிலும் மேல‌திக‌ தோலொன்றை வைத்து அல்லாஹ் ப‌டைத்த‌மைக்குரிய‌ கார‌ண‌ காரிய‌த்தை ம‌னித‌ அறிவால் அறிந்து கொள்ள‌ முடியாதுஇறைவ‌ன் ம‌கா ப‌டைப்பாள‌ன்.

ம‌னித‌ன‌து இத‌ய‌த்தில் ஏற்ப‌டும் அடைப்புக்கு பைபாஸ் செய்வ‌த‌ற்குரிய‌ மேல‌திக‌ ந‌ர‌ம்பை ந‌ம‌து காலில் இருந்தே வைத்திய‌ர்க‌ள் பெறுகிறார்க‌ள். ப‌ல‌ கால‌த்தின் முன்பு இவ்வெலும்பு அனாவ‌சிய‌மான‌தாக‌வே ம‌னித‌னுக்கு தெரிந்த‌து

ஆக‌வே, இறைவ‌ன் ப‌டைப்பில் எதுவும் வீண் இல்லை. ஆனாலும் அவ‌ற்றிலும் சில‌ க‌ட்ட‌த்துக்கு ந‌ன்மையை வைத்துள்ளான்.

ஆண் உறுப்பின் மேல‌திக‌ தோலை வைத்து இறைவ‌ன் ப‌டைத்த‌மைக்கு நாம் சில‌ கார‌ண‌ங்க‌ளை கூற‌ முடியும்.

ம‌னித‌ உட‌லில் வெளியே உள்ள‌ மிக‌வும் மெல்லிய‌ ப‌குதி அதுவாகும். குழ‌ந்தையாக‌ இருக்கும் போது அக்குழ‌ந்தை தாயின் க‌ருவ‌றையில் பாதுகாப்பாக‌ இருப்ப‌த‌ற்காக‌ அத‌ன் உறுப்புக்க‌ளை மூடி வைத்துள்ளான். க‌ண்ணுக்கு இமை கொடுத்து க‌ண்க‌ளை மூட‌வைத்தான். குழ‌ந்தை பிற‌ந்த‌ பின் தான் க‌ண் திற‌க்கிற‌து. க‌ண்ணை திற‌ந்து கொண்டே பிற‌ந்தால் என்ன‌ ந‌ட‌க்கும்…? அழுக்குக‌ள் க‌ண்க‌ளுக்குள் செல்லும் என்ப‌தால் குழ‌ந்தையின் க‌ண்ணை மூடிய‌ப‌டி பிற‌க்க‌ வைத்த‌ இறைவ‌ன் மிக‌ப்பெரும் அறிவுடைய‌வ‌ன்.

வாய்க்குள் எதுவும் செல்ல‌ முடியாம‌ல் வாயையும் மூடிய‌வாறு ப‌டைத்தான். அடுத்த‌தாக‌ ம‌னித‌ உட‌லுக்குள் ஏதும் செல்லும் வ‌ழி ஆணுறுப்பாகும். அத‌னை தோலைக் கொண்டு மூட‌ வைத்தான்.

அந்த‌ தோல் இன்றி ப‌டைக்க‌ப்ப‌ட்டிருந்தால் இன்றைய‌ அவ‌ச‌ர‌ யுக‌த்தில் வைத்திய‌ர், தாயின் வ‌யிற்றை கீறி குழ‌ந்தையை எடுக்கும் போது வைத்திய‌ரின் அல்ல‌து ந‌ர்சின் ந‌க‌ம் அதில் கீறினால் அக்குழ‌ந்தையின் ஆணுறுப்பின் நிலை என்ன‌…? இத‌னால் தான் அத‌னை மூடி வைத்து பிற‌க்க‌ வைத்தான்….

அத்துட‌ன் வைத்திய‌ர் ஒருவ‌ரின் க‌ருத்துப்ப‌டி கருப்பை உள்ளே குழந்தைக்குப் பாதுகாப்பாக இருக்கும் Amniotic fluid என்ற திரவம் காரமானது. அது சிசுவின் மிகவும் மென்மையான ஆண்குறியின் முற்பாகத்தைக் காயப்படுத்தி விடும். ஆகவே தான் அந்தப் பகுதி தோலினால் மூடப்பட்டு உள்ளது. குழந்தை பிறந்த பின்னர் அந்த முன் தோல் தேவைப்படுவதில்லை. ஆகவே அது அகற்றப்படுகின்றது.

குழ‌ந்தை பிற‌ந்த‌தும் அத‌ற்குரிய‌ ஆப‌த்துக்க‌ள் நீங்கி அக்குழ‌ந்தை இல‌குவாக‌ சிறு நீர் க‌ழித்து சுத்த‌மாக‌ இருக்கும் வ‌கையில் ஆணுறுப்பின் மெல்லிய‌ மூடு தோலை நீக்கும்ப‌டி இறைவ‌ன் வ‌ழி காட்டியுள்ளான்.

அல்லாஹ்வும் அவ‌னது தூத‌ரும் சொன்ன‌த‌ற்காக‌ ஏன்..?? எத‌ற்கு..?? என்ற‌ கேள்வி கேட்காம‌ல் நாம் அத‌னை செய்கின்றோம். கார‌ண‌ம் அல்லாஹ் சொன்ன‌தில் 100 வீத‌ம் உண்மை இருக்கும் என்ப‌தை ந‌ம்புப‌வ‌ன் தான் முஸ்லிம்.

மேற்ப‌டி தோலை நீக்குவ‌த‌ன் மூல‌ம் சிறு நீர் பிர‌ச்சினை வ‌ராம‌ல் இருப்ப‌தாக‌ வைத்திய‌ர்க‌ள் சொல்கின்ற‌ன‌ர்.

ஒருவ‌னின் ஆணுறுப்பின் மேல் தோல் நீக்க‌ப்ப‌ட்டால், அவ‌ன் சிறுநீர் க‌ழிக்கும் போது மிக‌ இல‌குவாக‌ க‌ழித்து விடுவான். அத்துட‌ன் சிறு நீர் அங்கு தேங்கி நிற்காது.

ஆனால் தோல் நீக்காத‌ ஆணுறுப்பினால் சிறுநீர் க‌ழிப்ப‌தாயின் அத‌னை இழுத்து மேலே சுருட்டி சிறுநீர் க‌ழிக்க‌ வேண்டும். சிறுநீர் க‌ழித்து முடிந்த‌தும் அது தானாக‌ மூடிக்கொள்ளும். உள்ளே மிஞ்சிய‌ அசுத்த‌ சிறுநீர் உள்ளே இருந்து கொண்டிருக்கும். வ‌ய‌து வ‌ந்த‌ ஒருவ‌ரால் அத‌னை மேலே உருவி ஓர‌ள‌வு சுத்த‌ம் செய்ய‌ முடியும். ஆனால் குழ‌ந்தையால் சிறுவ‌ர்க‌ளால் முடியாது. இத‌னால் தான் குழ‌ந்தை ப‌ருவ‌த்திலேயே அத‌னை எடுத்து விடுகிறோம்.

இத்த‌கைய‌ ப‌ல‌ சிர‌ம‌ங்க‌ளையும் அசுத்த‌த்தையும் க‌ருத்திற்கொண்டு இறைவ‌ன் சுன்ன‌த்து செய்து கொள்ளும்ப‌டி சொல்லியுள்ளான்..

சுன்ன‌த்து செய்யாத‌ பெரிய‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் சிறுநீர் பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ வைத்திய‌சாலைக்கு சென்றால் முத‌லில் அந்த‌ மேல‌திக‌ தோலை வெட்டும்ப‌டியே வைத்திய‌ர்க‌ள் சொல்கிறார்க‌ள். ப‌ல‌ருக்கு இது ந‌ட‌ந்துள்ள‌து..

இன்னும் சில‌ருக்கு சிறு நீர் வெளியேற‌ பைப் போடுவ‌தாயின் தோலை நீக்காம‌ல் அத‌னை போடுவ‌து க‌ஷ்ட‌ம்.

வைத்திய‌சாலைக‌ளுக்கு சென்று பார்த்தால் இந்த‌ உண்மை புரியும்.

ஆக‌வே, ப‌ல‌ ந‌ன்மைக‌ள் உள்ள‌ சுன்ன‌த்து செய்து கொள்வ‌தை ம‌னித‌னுக்கு வ‌ழி காட்டிய‌ ஒரேயொரு மார்க்கம் இஸ்லாமாகும்.

https://www.nidur.info/2022/02/04/%e0%ae%86%e0%ae%a3%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/

வியாழன், 23 நவம்பர், 2023

*இரத்தம் குடிக்கும் மூட்டை பூச்சிகளை ஒரேயடியாக ஒழிக்க இந்த சமையலறை பொருட்களே போதுமாம்.*

மூட்டைப்பூச்சிகள் உண்மையில் மிகவும் பொதுவானவை, ஆனால் பெரும்பாலான மக்கள் அதனை நினைத்து பீதி அடைகிறார்கள் மற்றும் மூட்டை பூச்சிகளை விரட்டுவதற்கான வீட்டு வைத்தியங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது மக்களுக்கு தெரியாமல் உள்ளது. அவை விரைவாக மறைந்து விடும்.

மூட்டைப்பூச்சிகள் சிறிய ஓவல் வடிவ, தட்டையான மற்றும் துருப்பிடித்த பழுப்பு நிறத்தில் சுமார் 5 மிமீ அளவுள்ள பூச்சிகள் ஆகும். அவை பொதுவாக இரவில் தோன்றும், அவை இரவில் தங்கள் இருண்ட பிளவுகளில் இருந்து வெளிவந்து, முக்கியமாக மனித இரத்தத்தை உண்கின்றன, இதன் விளைவாக படுக்கைப் பூச்சிகள் கடிக்கும். இந்த மூட்டைப்பூச்சிகளை விரட்டும் எளிய வழிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மூட்டைப்பூச்சிகளை பட்டினியாக விடுவது

உங்கள் படுக்கையை வெற்றிடமாக்கி, சில ஜிப்லாக் பைகளின் உதவியுடன் மெத்தையை சீல் வைக்கவும். சுமார் ஒரு வாரத்திற்கு அட்டையை வைத்திருங்கள். இதையொட்டி மூட்டைப்பூச்சிகள் வெளிவந்து இரத்தத்தை உறிஞ்சாமல் இது தடுக்கும், இது இறுதியில் அவை பட்டினி கிடக்கும் மற்றும் இறுதியில் இறக்கும்.

சுற்றுப்புறங்களில் இருந்து பொருட்களை அகற்றவும்

 மூட்டைப்பூச்சிகள் படுக்கை விரிப்புகளில் மட்டும் வசிப்பதில்லை, ஆனால் படுக்கைக்கு அடியில் உள்ள மரச்சாமான்கள், திரைச்சீலைகள் மற்றும் அட்டைப் பெட்டிகள் அல்லது சலவை கூடையில் கிடக்கும் துணிகள் ஆகியவற்றில் மறைந்திருக்கக்கூடும்.மூட்டைப் பூச்சிகளுக்கு குட்பை சொல்ல ஒரு சிறந்த வழி, முடிந்தவரை அறையை ஒழுங்கீனம் இல்லாமல் வைத்திருப்பது. அட்டைப் பெட்டிகளை பிளாஸ்டிக் பெட்டிகளால் மாற்றவும். சலவை துணிகளை சீல் செய்யப்பட்ட பின் லைனர்களில் வைக்கவும். முழு அறையையும் சீரான இடைவெளியில் வெற்றிடமாக்கிக் கொண்டே இருங்கள்.

தேயிலை மர எண்ணெய்

தேயிலை மர எண்ணெய் தொற்றுநோய்க்கான ஒரு மலிவான தீர்வாகும். இயற்கையான, தூய தேயிலை மர எண்ணெயில் இருபது சொட்டுகளை எடுத்து 200 மில்லி தண்ணீரில் கலந்து, பின்னர் இந்த கலவையை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தெளிக்கவும். இந்த எண்ணெய் அவற்றைக் கொல்வது மட்டுமல்லாமல், பொதுவாக பூச்சிகளை ஈர்க்கும் மனித வாசனையை மறைக்கவும் உதவுகிறது. குறைந்தது 10 நாட்களுக்கு இந்த செயல்முறையை தொடர்ந்து செய்யவும்.

பேக்கிங் சோடா

சமையலறையில் சமையல் சோடாவை வைத்திருப்பது எப்போதும் எளிது. இது மூட்டைப் பூச்சிகளைக் கொல்லும். ஒரு நல்ல அளவு பேக்கிங் சோடாவை எடுத்து, பூச்சிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தெளிக்கவும். சில நாட்கள் அப்படியே வைத்திருங்கள், தேவைப்பட்டால், ஒவ்வொரு நாளும் மீண்டும் தெளிக்கவும். பேக்கிங் சோடா அவற்றின் சருமத்தை உடல்ரீதியில் நீரிழப்பு செய்ய உதவுகிறது, இது மூட்டைப்பூச்சிகளின் மரணத்திற்கு வழிவகுக்கிறது.

வினிகர்

வினிகரின் கடுமையான வாசனை பூச்சிகளை முற்றிலுமாக விரட்டுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். வெள்ளை காய்ச்சி வடிகட்டிய வினிகர் கொண்டு மரச்சாமான்களுக்கு அடியில் மற்றும் சுற்றி போன்ற பாதிக்கப்பட்ட பகுதியின் விளிம்புகளில் தெளிப்பதே சிறந்த வழி. இந்த வழியில் பூச்சிகள் வெளியேறும் போது அவை வாசனையை எடுத்துக்கொள்கின்றன, இறுதியில் அவை வினிகரின் வாசனையைத் தாங்க முடியாமல் திரும்பி வருவதில்லை. குறைந்தபட்சம் ஒரு வாரமாவது இதை முயற்சி செய்து, உகந்த முடிவுகளுக்கு வாரத்திற்குப் பிறகு மீண்டும் செயல்முறை செய்யவும்.

ஆல்கஹால்

ஆல்கஹால் மூட்டைப்பூச்சிகளுக்கு ஒரு பிரபலமான வீட்டு வைத்தியம். உங்கள் படுக்கையின் விளிம்புகள், மரச்சாமான்களுக்கு அடியில் மற்றும் சுற்றிலும் ஆல்கஹால் கொண்டு நன்றாக மசாஜ் செய்யவும். மூட்டைப்பூச்சிகள் மதுவின் காரமான நறுமணத்தை வீசும்போது அவை இறக்கின்றன.

உப்பு

உப்பு மூட்டைப்பூச்சிகளுக்கான இயற்கையான விரட்டியாகும். உங்களைச் சுற்றி தவழும் பூச்சிகள் மீது சிறிது கடல் உப்பைத் தெளித்த சிறிது நேரத்தில் பூச்சிகள் அழிந்து போவதைக் காண முடியாது. பிழைகளை வெளியேற்றுவதற்கு உப்பு உடனடி தீர்வாகும்.

வெங்காயச்சாறு

வெங்காயத்தில் இருந்து சிறிது சாறு தயாரித்து, பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் பரப்பவும். வெங்காய சாற்றின் வலுவான வாசனை பூச்சிகளின் சுவாச மண்டலத்தை பாதிக்கிறது, இதனால் அவை மரணமடைகிறது.

ஞாயிறு, 19 நவம்பர், 2023

இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!

  1. وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ‏

நாம் மனிதனைப் படைத்தோம். அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் அவனின் பிடரி நரம்பை விட, நாம் அவனுக்கு அருகில் இருக்கிறோம்குர்ஆன் (50:16)

இறைவன் நமக்கு அருகில் நம்முடன் நெருங்கி இருப்பதை இயம்பும் இறைமறை குர்ஆனின் பிற வசனங்கள். ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை. (அல்குர்ஆன் : 56:85)

நீங்கள் எங்கிருப்பினும் அல்லாஹ் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான்” (57:04).

நீங்கள் செய்யும் மறைவான அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான்” (2:271)

அல்லாஹ் அவனின் அடியார்களை உற்று நோக்கியவனாக இருக்கிறான்” (3:20).

“(நபியே) உங்களிடம் என் அடியார்கள் என்னைப் பற்றி கேட்டால், நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடை அளிப்பேன்குர்ஆன் (2:186).

சிரமத்தில் சிக்கிய மனிதனின் அபயக்குரலைக் கேட்டு அல்லாஹ் அவனின் சிரமத்தை நீக்குவான்” (27: 62).

இப்படி நிறைய குர்ஆன் வசனங்கள் அல்லாஹ் நம்மோடு மிக மிக நெருக்கமாக இருப்பதை சொல்லிக் காட்டுகிறது. தன் நெருக்கம் பற்றி அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களிடம் பேசிய உரையாடலை ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது (நண்பர்கள் இந்த ஹதீஸ் கிதாபின் பெயரை தேடி சொன்னால், மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்)

மூஸாவே நான் உம்மோடு நெருக்கமாக இருக்க வேண்டுமா ?” என்று அல்லாஹ் கேட்பான்.

என்ன நாயனே, இப்படி ஒரு கேள்வியா ? நீ என்னோடு நெருக்கமாக இருந்தால் எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று சொல்வார்கள் மூஸா (அலை) அவர்கள்

அல்லாஹ் மீண்டும் கேட்பான், ” உம்முடைய நாக்கிற்கும் பேச்சுக்கும் உள்ள தொடர்பை விட நான் உனக்கு நெருக்கமாக இருக்க வேண்டுமா ?” (நாவு அசைந்தால் பேச்சு வந்து விடும். அவ்வளவு நெருக்கம் இருக்கிறது நாவுக்கும் பேச்சுக்குமிடையில் )

அதற்கு முஸா (அலை) கண்டிப்பாக நாவுக்கும் பேச்சுக்குமிடையில் ), அதற்கு மூஸா (அலை) கண்டிப்பாக நாவுக்கும் பேச்சுக்குமிடையே உள்ள நெருக்கத்தைக் காட்டிலும் நான் உனதுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்என்று சொல்வார்கள்.

இன்னும் ரூஹுக்கும், உடலுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தை காட்டிலும் நான் உமக்கு நெருக்கமாக வேண்டுமா ? ” எனக் கேட்பான் அல்லாஹ். ( ரூஹு இருந்தால் அங்கே உடல் இருந்தாக வேண்டும். உடல் இருந்தால் அதில் ரூஹு இருந்தாக வேண்டும். இல்லையெனில் மையத்தாகி விடும் )

ஆம்..! ரூஹுக்கும் உடலுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தை காட்டிலும் நான் உனக்கு நெருக்கமாக இருக்க வேண்டும்என்பார்கள் மூஸா (அலை) அவர்கள் .

அல்லாஹ் அடுத்துக் கேட்பான்.கண்ணுக்கும் பார்வைக்கு மத்தியில் உள்ள நெருக்கத்தை காட்டிலும், நான் உமக்கு நெருக்கமாக இருக்க வேண்டுமா ? “என்று கேட்பான்

கண் இருந்தால் அதிலேயே பார்வையில் இருக்கும் அல்லவா ? இவ்வளவு நெருக்கம் வேண்டுமா எனக் கேட்பான் அல்லாஹ்.

அப்போது என்ன அல்லாஹ் ? கேள்விக்கு மேல் கேள்வி கேட்டுக் கொண்டே போகிறாயே ,விஷயத்தைச் சொல்

நாயனே ! என்று மூஸா (அலை) அவர்கள் கேட்கிற போது,

அல்லாஹ் சொல்வான் : எனது ஹபீப் நாயகம் (ஸல்) அவர்கள் மீது, இனி உமக்குப் பின்னால் வரை இருக்கிற அஹ்மதின் மீது நீர் அதிகம் ஸலவாத்து ஓதிக்கொள். என்னை நீர் , நான்

சொன்னது போல் உள்ள நெருக்கத்தில் பெற்றுக் கொள்வாய் என்று.

மூஸா (அலை) அவர்கள் மட்டுமல்ல எல்லா நபிமார்களும் ஸலவாத்து ஓதி இருக்கிறார்கள். அதனால் நாம் தான் ஸலவாத்து ஓதுவதில் பின்தங்கி இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ரஹ்மத் ராஜகுமாரன்

https://www.nidur.info/2022/02/05/%e0%ae%87%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%87/

பகலில் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்.

  தூங்குவதால் உடலுக்கு ஓய்வு கிடைத்து சோர்வு நீங்குகிறது. சிலருக்கு படுத்தவுடன் தூக் கம் கண்களை தழுவும். இன்னும் சிலர் புரண்டு புரண்டு...

Popular Posts