லேபிள்கள்

சனி, 13 ஜூன், 2026

அதிக நேரம் ஹெட்போன் பயன்படுத்துபவரா நீங்கள்?

செல்போன் வந்த பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சுற்றுப்புறமே மறந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

அதிலும் இரவு முழுவதும் ப்ளூடூத் இயர்போன்கள், ஹெட்போன்கள் மற்றும் இயர்பட்ஸ் ஆகியவை மூலம் பாட்டு கேட்டால் உலகமே மறந்து தான் போகிறது. ஆனால் இவை தரும் விளைவுகள் எண்ணற்றவை.

ஆனால் இந்த வயர்லெஸ் சாதனங்களிலிருந்து வெளிப்படும் ரேடியோ அதிர்வெண் கதிர்வீச்சுகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இன்று நம்மில் பலருக்கும் இருக்கும் பழக்கங்களில் ஒன்று ஹெட்போன் பயன்படுத்துவது. பயணம் செய்யும்போதும், உடற்பயிற்சி செய்யும்போதும், வாகனங்கள் ஓட்டும்போதும் இப்படி பல்வேறு நேரங்களில் ஹெட்போன் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றோம். மேலும், தொலைபேசியின் கதிர் வீச்சில் இருந்து தப்பிக்க தொலைபேசி பேசும்போதும் ஹெட்போன் பயன்படுத்துகிறோம்.

இப்படி அதிகமாக ஹெட்போன் பயன்படுத்துவது சரியா? இதனால் என்னென்ன பிரச்சனைகள் வரும்? இதற்கான தீர்வு என்ன? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பின்விளைவுகள் என்ன?

அதிக நேரம் ஹெட்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு காது கேட்கும் திறனில் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக அதிகமாக ஹெட்போன் பயன்படுத்துபவர்களுக்கு 'சென்ஸரி நியூரல் லாஸ்" எனப்படும் பாதிப்பு ஏற்பட்டு இதனால் காதுக்குள் இரைச்சல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.

மேலும் ஹெட்போன் பயன்படுத்துவதால் இளம் வயதிலையே கேட்கும் திறன் பாதிக்கப்பட்டு காது நன்றாக கேட்பதற்கான மெஷின்களை பயன்படுத்த நேரிடும்.

தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற வியாதிகள் வர அதிக நேரம் ஹெட்போன் பயன்படுத்துவதும் ஒரு காரணம் ஆகும். மேலும் அதிகம் நேரம் ஹெட்போன் பயன்படுத்துவதால் சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி குறையும்.

வண்டி ஓட்டும்போது ஹெட்போன் பயன்படுத்துவதால் அதிகமாக விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது.

அதிக நேரம் ஹெட்போன் பயன்படுத்துவதால் காதில் இருந்து வெளியேறும் அழுக்குகள் சரியாக வெளியேறாமல் காதிலையே தங்கி சீல், காது அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் இசை அதிர்வினால் செவி மடலும் பாதிப்படைந்து காரணமே இல்லாமல் காது வலி ஏற்படும்.

நீண்ட நேர ஹெட்போன் உபயோகிப்பதினால் உருவாகும் மின்காந்த அலைகள் உங்கள் மூளையின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

பயணத்தின் போது ஹெட்போன்கள் உபயோகிப்பது உங்களுக்கு பயணத்தை எளிதாக்க ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. மற்ற நேரங்களை காட்டிலும் பயணத்தின்போது ஹெட்போன் உபயோகிப்பது இருமடங்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தீர்வு :

காதுகளின் ஓட்டைக்குள் செல்லும் ஹெட்போன்களை தவிர்க்க வேண்டும். காதுகளுக்கு வெளியே இருக்கும் படியான பெரிய ஹெட்போன்களை பயன்படுத்துவது நல்லது.

முக்கியமாக சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களை கடக்கும்போது ஹெட்போனை தவிர்த்திடுங்கள் அல்லது ஒலி அளவை குறைத்து கேளுங்கள்.

சாதாரண ஹெட்போன் தானே என்று அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். உங்கள் ஹெட்போனை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்.

சார்ஜ் ஏற்றிக்கொண்டு போன் பேசுவது, இன்டர்நெட் பயன்படுத்துவது, ஹெட்போனில் பாடல் கேட்பது போன்ற பழக்கங்களை தவிர்ப்பது நல்லது.



--

செவ்வாய், 9 ஜூன், 2026

பசி எடுக்கும் போதுஎன்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?

பசி என்பது எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளால் அறியப் படுகிறது. நாம் உணவு உண்ணும் போது, அந்த உணவை ரசித்து ருசித்து மனதார உண்ண வேண்டும்.

இதனால் எந்த ஒரு கவனச்சிதறல் இல்லாமல், உணவின் மீது முழு கவனம் செலுத்தி நம்மால் உணவினை நன்றாக உண்ண முடிகிறது. சரி வாங்க பசியின் வகைகளை பற்றி பார்க்கலாம்..

பசி நமது உணர்வுடன் தொடர்புடையது. என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்ற வடிவத்தில் மன பசி தோன்றுகிறது. நாம் சந்தோஷமாக இருக்கும் தினங்களில் சிக்கன் பிரியாணி போன்ற உணவுகளையும், நாம் சோகமாக இருக்கும் தினங்களில் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுவது இந்த மன பசி தான். மேலும் நாம் குறைவான கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது அதிக புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், அல்லது தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் போன்ற எண்ணங்களை தூண்டுவது இந்த மன பசி.

இந்த மன பசியில் உள்ள ஒரு தீங்கு என்னவென்றால், நேரத்திற்குத் தகுந்தாற்போல் நாம் உணவுகளை தேர்ந்தெடுக்கும் படி இது செய்கிறது. ஊட்டச்சத்தினை அதிகரிக்க பல்வேறு குறிப்புகள், அழகு நிபுணர்களின் ஆலோசனை போன்ற நம் மன எண்ணப்படி உணவுகளைமாற்றிக் கொள்கிறோம். இதனால் ஆரோக்கியமான ஊட்டத்சத்து நம் உடலுக்கு கிடைப்பதில்லை. நீங்கள் உணவினை உட்கொள்வதற்கு முன் சில கேள்விகளை தன்னைத்தானே கேட்டுக் கொள்ளவேண்டும். அதாவது பசிக்காக சாப்பிடுகிறீர்களா அல்லது ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்த காரணத்தால் சாப்பிடுகிறீர்களா போன்ற கேள்விகளை கேட்டுக் கொள்ளலாம். மேலும் இந்த உணவு உங்களுக்கு ஊட்டச்சத்தினை வழங்குமா? அல்லது இது உங்களுக்கு பசியை தீர்க்குமா? போன்ற கேள்விகளை நீங்கள் கேட்டு கொள்வது நல்லது.

மனரீதியான பசி:- நாம் சந்தோஷமாக இருக்கும் தினங்களில் சிக்கன் பிரியாணி போன்ற உணவுகளையும், நாம் சோகமாக இருக்கும் தினங்களில் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுவது இந்த மன பசி தான். இந்த மன பசியில் உள்ள ஒரு தீங்கு என்னவென்றால், நேரத்திற்குத் தகுந்தாற்போல் நாம் உணவுகளை தேர்ந்தெடுக்கும் படி இது செய்கிறது. ஊட்டச்சத்தினை அதிகரிக்க பல்வேறு குறிப்புகள், அழகு நிபுணர்களின் ஆலோசனை போன்ற நம் மன எண்ணப்படி உணவுகளைமாற்றிக் கொள்கிறோம்.

கண் பசி:- பசிக்காக சாப்பிடாமல் பிடித்ததை சாப்பிடுவதற்கு இது நம்மை தூண்டுகிறது. சிலருக்கு சில பிடித்தமான ஹோட்டல்களில் சமைக்கும் உணவை பார்த்தால் உடனே சாப்பிட வேண்டுமென்று தோன்றும். இந்த நேரங்களிலும் நீங்கள் உங்கள் கவனத்தை வேறு திசையில் திருப்புவது சாலச் சிறந்தது.

வாய் பசி:- ஏதேனும் உணவை சுவைக்க வேண்டும் என்று விரும்பினால், அந்த உணவு ஆரோக்கியமானதா என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் அது உங்கள் பசியை பூர்த்தி செய்ய உதவுமா என்றும் பாருங்கள். திடீரென குளிர்பானம் குடிக்க வேண்டும் அல்லது சுவையான உணவு உண்ண வேண்டும் அல்லது சூடாக ஏதாவது ருசிக்க வேண்டும் போன்ற எண்ணங்களை நமக்கு ஏற்படுத்தும்..



--

சனி, 6 ஜூன், 2026

மழை நீரில் குளிப்பது சருமம் மற்றும் கூந்தலுக்கு நல்லதா?

பருவமழையானது உயர்ந்து வரும் வெப்பநிலையைக் குறைத்து, நமது திருப்தியின் அளவை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு முறையும் மழை நம்மை மகிழ்விக்கிறது.

ஒரு சிலருக்கு மழையை ரசிப்பது பிடிக்கும். ஒரு சிலருக்கு மழையில் குளிப்பது பிடிக்கும். ஆனால் மழையில் குளிப்பது உங்கள் சருமத்திற்கு நல்லதா?

முதலில் மழையானது கொளுத்தும் வெப்பத்திலிருந்து ஆறுதல் அளிக்க உதவும். மழை பெய்யும்போது நாம் நனைந்துவிடுகிறோம் என்பதால் உளவியல் ரீதியாக மிகவும் நிம்மதியாக இருக்கிறோம். எவ்வாறாயினும், மாசுபாடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு (H2S) போன்ற நச்சு இரசாயனங்கள், வாகன உமிழ்வுகள் மற்றும் தொழில்துறை பகுதிகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பகுதியில் நாம் வசிக்கிறோம். எனவே, மழைத்துளிகள் ஆபத்தான பொருட்களுடன் இணைந்து உங்கள் தோலை சேதப்படுத்தும் சாத்தியம் உள்ளது. எனவே, மழைக்காலத்தில் நாம் பெறும் மழைநீரில் பெரும்பாலானவை அமிலத்தன்மை, அழுக்கு மற்றும் அசுத்தமானவை. இது அனைவருக்கும் மோசமானது.

பருவ மழையில் குளிப்பது சருமத்திற்கும் கூந்தலுக்கும் தீமை விளைவிக்குமா?

உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால், அமில மழை உங்கள் சருமத்தை சேதப்படுத்தும் என்பதால், மழைக்காலத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழையில் குளிப்பது பொடுகு, வெப்பம் அல்லது முகப்பரு போன்றவற்றுக்கு உதவும் என்று பலர் நம்புகிறார்கள். உண்மையில், இந்த நீரில் அதிக அளவு மாசுக்கள் இருப்பதால், உங்களுக்கு கடுமையான முகப்பரு, தோல் தொற்று மற்றும் தோல் வெடிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன. மழையில் நனைந்த பிறகு, உங்கள் தோல் மற்றும் தலைமுடியில் அரிப்பு ஏற்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். மழைநீர் சிலருக்கு தோல் வெடிப்புகளைத் தணிக்கும்.

இந்த பருவமழையில், நீங்கள் மழையில் நனைய நினைத்தாலோ அல்லது மழையில் குளிப்பதை விரும்பினாலோ, வீட்டிற்கு வந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் குளிக்க மறக்காதீர்கள். உங்கள் சருமத்தின் மேற்பரப்பில் உள்ள அசுத்தங்களை அகற்ற லேசான ஃபேஸ் வாஷ் பயன்படுத்தவும். ஷாம்பூவைத் தொடர்ந்து கண்டிஷனரைப் பயன்படுத்த மறக்காதீர்கள். இது கூந்தலில் ஈரப்பதத்தைப் பாதுகாத்து, அதனை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைக்கிறது. நோய்த்தொற்றுகளைத் தவிர்க்க ஆடைகளை அணிவதற்கு முன் உடலை நன்கு உலர்த்தி வைத்துக் கொள்ளுங்கள்.



--

புதன், 3 ஜூன், 2026

சொத்தைப் பல் வராமல்தடுக்கும் எளிய வழி முறைகள்.

கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான்.

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! இதனால் பாக்டீரியாக்கள் பற்களை சொத்தையாக்கிவிடும். இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். அதற்காக சொத்தைப் பற்களை பிடுங்கி எடுக்க வேண்டும் என்பதில்லை. பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!! உண்ணும் உணவில் ஒருசில மாற்றங்களுடன், அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், சொத்தைத் தடுக்கலாம்.

ஆயில்புல்லிங்

ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி, வாயின் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் உருவாவதைத் தடுக்கலாம்

கிராம்பு

2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டனில் அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டானை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும்

உப்புதண்ணீர்

அன்றாடம் காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, பற்களை துலக்கம் முன் அதனை வாயில் ஊற்றி 1 நிமிடம் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன் செய்து வந்தால், பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்.

பூண்டு

3-4 பற்கள் பூண்டை தட்டை, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அக்கலவையை பாதிக்கப்பட்ட பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து, அக்கலவையை சொத்தைப் பல்லின் மீது அழுத்தவும், இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், சொத்தைப் பற்களை உருவாக்கிய பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்.

மஞ்சள்

மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும்.

வேப்பிலை

வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தைப் பற்களைப் போக்கலாம் .

உணவுமுறைகளில்மாற்றம்

சொத்தைப் பற்கள் உருவாவதற்கு போதிய கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது மற்றும் கொழுப்பில் கரையாத வைட்டமின்களான ஏ, டி, , கே போன்றவற்றின் குறைபாடு மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது தான் காரணம். இதற்கு சரியான தீர்வு, நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாடம் உட்கொண்டு வர வேண்டும்.



--

வெள்ளி, 29 மே, 2026

ஸ்கூட்டர்களில்பிரேக் பக்கத்துல ஒரு லிவர் இருக்கும்… இந்த சின்ன கம்பிஇவ்ளோ பெரிய விஷயத்தை செய்யுமா?

நாம் எல்லோரும் நாள் தோறும் ஏதோ ஒரு வாகனத்தை ஓட்டிக்கொண்டே தான் இருக்கிறோம். நாம் அன்றாடம் சாலையில் பார்க்கும் வாகனங்களில் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு அம்சங்கள் இருக்கும், ஒவ்வொரு வாகனத்தின் திறனும் மேம்படும். நாம் நமது தேவை மற்றும் பொருளாதார சூழ்நிலைகளை மனிதில் வைத்து நமக்கு தேவையான வாகனம் எது என்பத்தைத்தேர்வு செய்து வாங்குகிறோம்.

பொதுவாக நாம் வாங்கும் வாகனத்தில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கிறது. அதை எப்படி எப்படிப் பயன்படுத்த வேண்டும், எந்தெந்த சூழ்நிலைகளில் எல்லாம் இது உதவும் என்பதை நாம் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள விரும்புவோம்.

நம் வாகனத்தில் பெரும்பாலான அம்சங்களை நாம் தெரிந்து வைத்துக்கொண்டிருப்போம். ஆனால் பலருக்கு அவர்கள் பயன்படுத்தும் வாகனத்தில் உள்ள ஒரு தனித்துவமான அம்சம் அல்லது பெரிய அளவில் தெரியவராத அம்சங்கள் பற்றித் தெரியாமல் இருக்கும். எல்லா வாகனங்களில் பொதுவாக இருக்கும் அம்சங்களைப் பற்றி எல்லாம் நாம் நன்கு அறிந்திருப்போம் அதை நாம் அன்றாடம் வாகனம் ஓட்டும் விஷயங்களில் பயன்படுத்துவோம்

ஆனால் சில வாகனங்களில் மட்டும் இருக்கும் அம்சங்கள் பற்றி பெரிய அளவில் தெரிந்து வைத்திருக்க மாட்டோம். அப்படியான ஒரு அம்சத்தைப் பற்றித் தான் இந்த பதிவில் நாம் காணப்போகிறோம். நம்மில் பலர் தினமும ஸ்கூட்டரை பயன்படுத்துவோம். இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் மிக அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டரில் உள்ள ஒரு முக்கியமான அம்சம் என்னவென்று அதைப் பயன்படுத்தும் பலருக்குத் தெரியாது. ஹோண்டா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டும் தான் தங்கள் ஸ்கூட்டர்களில் இப்படியான ஒரு அம்சத்தை வழங்குகின்றனர். இந்த நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் ஸ்கூட்டரில் இடது பக்க பிரேக்கிற்கு அருகே சிறியதாக ஒரு லிவர் ஒன்றை கொடுத்திருப்பார்கள். இது என்ன? எதற்காக இதை பயன்படுத்துவது? எப்படிப் பயன்படுத்துவது என்ற தகவல்கள் எல்லாம் பலருக்கும் தெரியாது.

சிலர் இதை ஸ்கூட்டரின் சோக் என நினைத்துக்கொண்டிருக்கின்றனர். நீண்ட நாட்களாக ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யாமல் வைத்திருந்தால் இதைப் பிடித்தால் இது பெட்ரோலை அதிகமாக இன்ஜினிற்குள் அனுப்பும் என நம்பி வருகின்றனர்.

ஆனால் அது உண்மை அல்ல இந்த அம்சத்திற்குப் பெயர் பிரேக் லாக்கர் இது பொதுவாக ஸ்கூட்டரின் இடது பக்க பிரேக் அருகே தான் கொடுக்கப்பட்டிருக்கும். இதை நாம் ஸ்கூட்டரை ஒரு இடத்தில் பார்க் செய்து விட்டு ஸ்கூட்டரின் வீல் நகராமால் இருக்க வேண்டும் என்றால் ஸ்கூட்டரின் பின் பக்க பிரேக்கை பிடித்துவிட்டு இந்த லாக்கரை போட்டால் பின்பக்க பிரேக் ரிலீஸ் ஆகாமல் ஸ்கூட்டர் அப்படியே நிற்கும் அதற்காகத் தான் இந்த பிரேக் லாக்கர் வழங்கப்படுகிறது. இதன் பெயரில் உள்ளதைப் போல பிரேக்கை லாக் செய்யத்தான் இது பயன்படுகிறது

உதாரணமாக நாம் இப்பொழுது சமமாக இல்லாத ஒரு சருக்கலான இடத்தில் ஸ்கூட்டரை நிறுத்துகிறோம் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது ஸ்கூட்டரின் எடை காரணமாக நாம் என்ன தான் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினாலும் ஸ்கூட்டர் முன்னோக்கியோ பின் நோக்கியோ இழுத்துக்கொண்டு செல்லும். இப்படியான சூழ்நிலைகளில் பலர் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அதன் பின் வீல் நகராதபடி ஒரு கல்லை வைத்துச் செல்வார்கள். ஆனால் இந்த அம்சம் இருக்கும் ஸ்கூட்டரில் அப்படி நிறுத்த வேண்டிய சூழ்நிலை இல்லை.

சற்று இறக்கமான இடத்தில் இந்த ஸ்கூட்டரை நிறுத்தும் போது பின்பக்க பிரேக்கை பிடித்துவிட்டு இந்த பிரேக் லாக்கரை வைத்து லாக் செய்துவிட்டால் பின்பக்க பிரேக் நாம் கையை எடுத்தாலும் ரிலீஸ் ஆகாமல் இருக்கும். அதனால் நாம் இந்த இடத்தில் பைக்கை நிறுத்தினாலும் அது முன் பின் நகராமல் அதே இடத்தில் அப்படியே இருக்கும். இதை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால் மீண்டும் பின்பிரேக்கை லேசாகப் பிடித்துவிட்டால் இந்த பிரேக் லாக்கர் ரிலீஸ் ஆகி பிரேக்கும் ரிலீஸ் ஆகும்.



--

செவ்வாய், 26 மே, 2026

தேளைப் பற்றிபலரும் அறிந்திறாத சில சுவாரசிய உண்மைகள்!!

தேள்,பாம்பு போன்ற பல விஷத்தன்மை வாய்ந்த உயிர்களின் பல சுவாரசியமான அறிவியல் சார்ந்த உண்மையை பற்றி நாம் பலரும் அறிந்திருப்பதில்லை.காரணம் இது மனித உயிருக்கு கேடு விளைவிப்பதால் இவற்றைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.இந்த பதிவில் நாம் தேளைப் பற்றி பலரும் அறிந்திடாத சில சுவாரசிய உண்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பெண் தேள் ஆண் தேள் உடனான இனப்பெருக்கத்தை முடித்தவுடன் ஆண் தேளை, பெண் தேள் கொன்றுவிடும்.

பெண் தேள்கள் அதன் குட்டிகளை பெற்றெடுப்பதில்லை.

மாறாக அதன்முதுகு வெடித்து குட்டிகள் வெளிவரும்.இந்த பிரசவ செயலானது சுமார் இரண்டு நாட்கள் வரை நடைபெறும்.

இதன் பிறகு இந்த தேள் குட்டிகள் தனது தாயின் உடலை மூன்று நாட்கள் வரை உட்கொண்டு உயிர் வாழும்.

பொதுவாகவே ஆண்டவன் படைத்த எல்லா உயிர்களும் தனது குழந்தைகளை அல்லது குட்டிகளை பெற்றெடுத்து மகிழ்ச்சியோடு அதனுடன் வாழும் பாக்கியத்தை பெற்றதுள்ளது.ஆனால் பெண் தேளோ இதற்கு விதிவிலக்காக அமைகிறது.தேள் மட்டும் பிரசவித்த உடனே இறந்து விடும்.தாய் என்றாலே பிள்ளைகளுக்காக உயிரையே கொடுக்க துணிந்தவள் ஆச்சே!!பூச்சியாக இருந்தாலும் தேளும் ஒரு தாய் தானே!!



--

சனி, 23 மே, 2026

பொடுகைப் போக்கும் வழிகள்.

நன்றி குங்குமம் டாக்டர்

1. தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு மசாஜ்.

எலுமிச்சைப் பழச்சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டிலும் தலா இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையைத் தலைமுடியில் மசாஜ் செய்வதுபோலத் தேய்த்து, 20 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும். பிறகு ஷாம்பூ தேய்த்து, தலையை அலசவும். தேங்காய் எண்ணெய், முடிக்கு ஊட்டமளிக்கும். எலுமிச்சைச்சாறு பொடுகுத் தொல்லையை நீக்கி, முடி வளர்ச்சிக்கு உதவும்.

2. தயிர் குளியல்

தயிரைத் தலையில் நன்றாகத் தேய்த்துக்கொள்ளவும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, சிறிது ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம். தயிர், உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடிக்கு பளபளப்பையும் தரும். சைனஸ், ஒற்றைத் தலைவலி பிரச்னை இருப்பவர்கள், இதைத் தவிர்க்கவும்.

3. வெந்தயம் பேக்

இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைக்கவும். மறுநாள் அதை அரைத்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவைத்து தலைக்குக் குளிக்கவும். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடி வளர்ச்சிக்கு உதவும்.

4. ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல்களை நன்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து, 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.

5. வெங்காயம் மற்றும் வேப்பிலை

வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி, 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். பிறகு, தலைக்குக் குளித்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். அதேபோன்று, கைப்பிடி வேப்பிலைகளை பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து ஊறவைத்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இதன் கசப்புத் தன்மை, தலையில் உள்ள பாக்டீரியா போன்ற தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகளை அழித்துவிடும்.

6. மருதாணி இலை

கைப்பிடி மருதாணி இலைகளை அரைத்து, அதில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலைமுடியில் நன்றாகத் தேய்க்கவும். இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் கூந்தலை அலசி, குளிக்கலாம். இதனால் பொடுகுத் தொல்லை நீங்கும்; நரை முடி பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். சைனஸ், ஒற்றைத் தலைவலி, சளி பிடிக்கும் பிரச்னை உள்ளோர் தவிர்க்கவும்.



--

செவ்வாய், 19 மே, 2026

தலை வலியால்அடிக்கடி அவஸ்தையா? இதனைப் போக்க சில அசத்தலான எளிய வழிமுறைகள்.

இன்றைய காலத்தில் பலரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினை தான் தலைவலி . இது பல காரணங்களால் ஏற்படுகின்றது.

வேலைச்சுமை, கோடைக்கால வெயில், மன அழுத்தம் போன்ற பல காரணங்கள் சொல்லப்படுகின்றது.

தலைவலி வந்தால், சரியானால் போதும் என்று பக்க விளைவுகளை அறிந்தும் பெரும்பாலோனோர் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதுண்டு. இதனை தவிர்த்து ஒரு சில எளியமுறைகளில் கூட தலைவலியை போக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

கொதிக்கும் தண்ணீரில் காபி கொட்டையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைவலி குணமாகும்.

வெற்றிலை சாறு எடுத்து அதில் கற்பூரம் போட்டு நன்றாக குழைத்து நெற்றியில் பூசவும் தலைவலி குணமாகும்

கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி குடித்தால், சூட்டினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.

கிராம்பை எடுத்து சிறிது தண்ணீரில் போட்டு ஊற வைத்து பின்பு, மை போன்று அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குணமாகும்

2மிளகை எடுத்து விளக்கில் எரித்து, இந்த புகையை சுவாசித்தால் தலைவலி மற்றும் சளி தொல்லையில் இருந்து விடுபெறலாம்.

தலைவலி குறைய கடுகுத்தூள், அரசி மாவு இவற்றை சரிப்பாதி எடுத்து ஒரு களிபோல் கிளறி அதை நெற்றியில் பற்று போட்டு வந்தால் விரைவில் தலைவலி குணமாகும்.

புதினா இலையை எடுத்து நன்றாக இடித்து சாறு எடுத்து நெற்றியில் பூசினால் தலைவலி குணமாகும்.

டீ அல்லது காபியில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குணமாகு முள்ளங்கி சாறு எடுத்து தினமும் குடித்து வந்தால் தலைவலி குணமாகும்.

தலைவலியால் அடிக்கடி அவஸ்தைபடுபவர்கள் தினமும் காலை உணவு அருந்துவதற்க்கு முன் 2 டேபிள் ஸ்பூன் தேனை மிதமான வெப்ப நிலையில் உள்ள தண்ணீரில் கலந்து குடிந்தால் தலைவலி குணமாகும்.

துளசி தலைவலியை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது, அதனால் தினமும் ஒரு கோப்பை தண்ணீரில் 4 துளசியை போட்டு நன்கு கொதிக்க வைத்த பின் 1 ஸ்பூன் தேன் கலந்து அருந்தவும்.

இலவங்கம் பட்டையை கொஞ்சம் தண்ணீரில் ஊற வைத்து நன்றாக அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குணமாகும்.

சம அளவு இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு எடுத்து நன்றாக கலந்து குடித்தால் தலைவலி குணமாகும்.



--

சனி, 16 மே, 2026

சிறுநீரக கற்களை நீக்கும் மூன்று மேஜிக் ஜூஸ்கள்.

சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் அன்றாட பணிகளை பாதிக்கக் கூடிய வகையில் மிகவும் வேதனை கொடுக்கக் கூடியது.

சிறுநீரக பிரச்சனைகளில் ஒன்று சிறுநீரக கற்கள் பிரச்சனை. சிறுநீரக கற்கள் வந்தால், பாதிக்கப்பட்ட நபர் மிகவும் வேதனையான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் தனது டயட் பிளானை மிகவும் கவனத்துடன் திட்டமிட வேண்டும்.

உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை இருந்தால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில சாறுகளின் உதவியுடன் இந்த பிரச்சனையை சமாளிக்கலாம். இந்த ஜூஸ்கள் எவை, எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சிறுநீரக கற்களை போக்கும் சாறு

சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்கள் , இந்த 3 வகையான ஜூஸ்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் வலி உட்பட பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

1. தக்காளி சாறு

சிறுநீரக கற்களை அகற்ற தக்காளி சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தக்காளி ஜூஸ் தயாரிக்க இரண்டு தக்காளியை நன்கு கழுவி, அவற்றை அரைக்கவும். சாற்றில் இந்துப்பு மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிட வேண்டும், நீங்கள் விரும்பினால், சாறு வடிவில் தயாரிக்கப்பட்ட கலவையை குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் உட்கொள்ளலாம். இருந்தாலும் அவ்வபோது பிரெஷ்ஷாக தயாரித்து அருந்துவது மிகவும் நல்லது.

2. எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை சாற்றை உட்கொண்டால், பிரச்சனையையும் சமாளிக்க முடியும். ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து, இப்போது சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து, கலவையை நன்றாகக் கலக்கி, சாப்பிட்டால், சிறுநீரக கற்கள் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.

3. துளசி சாறு

சிறுநீரக கற்கள் பிரச்சனையை நீக்கவும் துளசியில் இருந்து தயாரிக்கப்படும் சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், துளசி இலைகளை சாறு எடுத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து, காலை மற்றும் மாலையில் தயாரித்த கலவையை சாப்பிடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் சிறுநீரக பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.



--

அதிக நேரம் ஹெட்போன் பயன்படுத்துபவரா நீங்கள்?

செல்போன் வந்த பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சுற்றுப்புறமே மறந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் இ...

Popular Posts