லேபிள்கள்

திங்கள், 29 மே, 2023

ஓர் இறை நம்பிக்கையாளரின் அன்றாட வாழ்கை


ஒரு முஃமினின் வாழ்க்கையில் எல்லா நாட்களும் சந்தோசமாகவும் இருக்காது, கவலையான நாட்களாகவுமிருக்காது.

ஒவ்வொரு நாள் சூரிய உதயத்தின் போதும் மனிதன் பல எதிர்பாப்புக்களுடன் காலை நேரத்தை அடைகிறான்.

அவன் மாலைப் பொழுதை அடையும் போது..

சில வேலை அவனின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறிய நாளாக அந்நாள் இருந்திருக்கும்.

பல சந்தர்ப்பங்களில் அவனின் எதிர்பார்ப்புக்கள் நிறை வேறாத நாளாக அன்றைய நாள் கடந்திருக்கும்.

இந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் எப்படி இருப்பான்?

நபி (ஸல்) அவர்கள் முஃமின்களுக்குக் கூறிய உதாரணம்.

இறைநம்பிக்கையாளரின் நிலையானது,

"?இளம் பயிர் போன்றதாகும்."

காற்றடிக்கும்போது அதைக் காற்று (தன் திசையில்) சாய்த்துவிடும்.

"காற்று நின்றுவிட்டால், அது நேராக நிற்கும்."

(காற்று, மழை, வெயில், கோடை என அனைத்தையும் சகித்து, வளைந்து கொடுத்து அது காலத்தை வெல்லும் )

சோதனையின்போது (இறை நம்பிக்கையாளரின் நிலையும் அவ்வாறே).

தீயவனின் நிலையானது :

உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு ( pine wood) மரத்தைப் போன்றவன்?.

(காற்றடிக்கும் போதும் அது நிமிர்ந்து நிக்கும்)

அல்லாஹ், தான் நாடும்போது (பெரிய காற்றொன்டு வரும்) அதை (ஒரேடியாக) உடைத்து (சாய்த்து) விடுகிறான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(ஸஹீஹ் புகாரி 5644 அத்தியாயம் : 75. நோயாளிகள்.)

இங்கே இரண்டு விடயங்களை நபி ஸல் அவர்கள் சுற்றிக் காண்பிக்கின்றார்கள் .

1: சோதனைகளை ஏற்று அதற்க்கேற்ப நடந்துகொள்ள முயற்சிப்பது முஃமின்களின் பண்பாகும்.

2: சோதனைகளை ஏற்காமல் பெருமை பிடித்தவனாக இருக்க முயல்வது தீயவர்களின் பண்பாகும்.

சோதனைகளின் போது முலுமையாக சரிந்து உடைந்து போவதும், சந்தோசங்களின் போது அளவு கடந்து செயல்படுவதும் ஒரு முஃமினின் பண்பு கிடையாது.

சந்தோஷம் ஒரு முஃமினை மாற்றி விடாது சோதனைகள் ஒரு முஃமினை வீழ்த்தி விடாது.

வாழ்கையில் இன்பம், துன்பம் இண்டும் நிரந்தரமானதில்லை. இரண்டிலும் நடுநிலை பேணுகின்றவனே முஃமின்.

✍️நட்புடன்:
அல் ஹாபில் இன்திகாப் உமரீ
இலங்கை

http://www.islamkalvi.com/?p=126604

--

வெள்ளி, 26 மே, 2023

பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகளை நீக்கும் எலுமிச்சை !!


எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் சி சத்து மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தடுத்து, ஷெமிக் வாத நோய் ஏற்படாமல் காப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளன. இந்த சத்துக்கள் நமது ரத்தத்தில் உருவாகும் ஃப்ரீ ரேடிக்கல்களை அணுக்களை உருவாகாமல் தடுத்து, புற்றுநோய் ஏற்படாமல் காக்கிறது என மேலை நாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்திருக்கின்றன.

குறிப்பாக பற்கள் மற்றும் ஈறுகளில் சொத்தை மற்றும் கிருமிகளின் தாக்கத்தால் அவதிப்படுபவர்கள். இளம் சூடான நீரில் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தினமும் காலை மற்றும் மாலை வேளையில் வாய் கொப்பளித்து வருவதால் பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். வாய் துர்நாற்றத்தை போக்கி ஒட்டுமொத்தமான வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும்.

இரண்டு நாட்களுக்கொரு முறை அல்லது குறைந்த பட்சம் வாரத்திற்கொரு முறை எலுமிச்சம் சாறு அருந்துபவர்களுக்கு கல்லீரலில் தங்கியிருக்கும் அத்தனை நச்சுக்களும் நீங்கி, கல்லீரல் தூய்மையாகி உடல் நலத்தை மேம்படுத்துகிறது.

தினமும் எலுமிச்சம் பழ சாற்றை காலையில் அருந்தி வந்தால் வெகு விரைவில் அவர்கள் சிறுநீரகத்தில் உருவாகியிருக்கும் சிறுநீரகக் கற்களைக் கரைத்து, அவற்றை சிறுநீர் வழியாக வெளியேற்றி சிறுநீரக அறுவை சிகிச்சை நோய் ஏற்படாமல் செய்கிறது.

எலுமிச்சம் பழ சாற்றை எடுத்து தலையில் விட்டு தலைமுடியின் வேர்களில் நன்கு தடவ வேண்டும். சிறிது நேரம் ஊறவைத்து பின் தலைக்கு ஊற்றிக் குளிக்க வேண்டும். இந்த முறையில் வாரம் தோறும் செய்பவர்களுக்கு தலையில் இருக்கும் ஈறு, பொடுகு, பேன் ஆகியவற்றின் தொல்லைகள் நீங்குகிறது. தலைமுடிக்கும் இயற்கையான பளபளப்பை உண்டாக்குகிறது. அதிக அளவில் முடி கொட்டுவதையும் தடுக்கிறது

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/lemon-removes-teeth-and-gum-related-defects-121073100071_1.html


--

செவ்வாய், 23 மே, 2023

இரண்டு வகை மனிதர்கள்


இவ்வுலகில் இரண்டு வகையான மனிதர்கள் உண்டு! ஒன்று நற்காரியங்களுக்கு (நன்மைக்கு) முன்னோடியாகவும், கெட்ட காரியங்களுக்கு (தீயவைகளுக்கு) தடையாகவும் இருப்பவர்கள்.

இன்னொன்று கெட்ட காரியங்களுக்கு (தீமைக்கு) முன்னோடியாகவும், நன்மையான காரியங்களுக்கு தடையாகவும் இருப்பவர்கள்.

"மனிதர்களில் சிலர் நலவுக்கு திறவுகோலாகவும், தீமைகளுக்கு தடையாகவும் உள்ளனர், வேறு சிலர் தீமைகளுக்கு திறவுகோலாகவும் நலவுக்கு தடையாகவும் உள்ளனர், அல்லாஹ் எவரின் கரத்தினால் நலவின் வாயில்களை திறந்து விடுகிறானோ, அவருக்கு சுவசோபனம் உண்டாகட்டும், மேலும் எவன் மூலம் தீமைகளின் வாயில்கள் திறக்கப்படுகிறதோ அவன் மீது நாசம் உண்டாகட்டும் என்று அல்லாஹுவின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), (இப்னு மாஜாஹ்).

((عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ مِنَ النَّاسِ نَاسًا مَفَاتِيحَ لِلْخَيْرِ مَغَالِيقَ لِلشَّرِّ ، وَمِنَ النَّاسِ مَفَاتِيحَ لِلشَّرِّ مَغَالِيقَ لِلْخَيْرِ ، فَطُوبَى لِمَنْ جَعَلَ اللَّهُ مِفْتَاحَ الْخَيْرِ عَلَى يَدَيْهِ ، وَوَيْلٌ لِمَنْ جَعَلَ مِفْتَاحَ الشَّرِّ عَلَى يَدَيْهِ ". أخرجه ابن ماجة ، وابن أبي عاصم في السنة))

நன்மையான காரியமோ அல்லது தீமையான காரியமோ எதுவாகினும் அது மனிதனால்தான் உருவாக்கப்படுகின்றது, எந்த காரியமும் மனிதன் துவங்காமல் அது தானாக உருவாகுவது இல்லை!

இந்த உலகில் நடைமுறையில் இருக்கும் எல்லாக் காரியங்களும் அது இஸ்லாம் அனுமதித்த காரியமாகட்டும் அனுமதிக்காத காரியமாகட்டும் அனைத்தும் துவக்கத்தில் ஒருவரால் துவங்கப்பட்டதுதான். அது சட்டமியற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களிலிருந்து காரியங்களை வடிவமைப்பவர் (Designer) வரை அது ஒருவரால் துவங்கப்பட்டதுதான்.

முதல் வகை
உதாரணமாக: ஏக இறைவனுக்கு (அல்லாஹுவுக்கு) இணைவைத்தலை ஏற்படுத்தியது, அல்லாஹுவின் தூதர் (ஸல்) காட்டாத செயல்களை மார்க்கத்தின் பெயரால் உருவாக்கியது, மதிமயக்கும் மது பழக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தியது, பெண்களின் அரைகுறை ஆடை கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது, விபச்சாரம் பரவுவதற்கு காரணமான காரியங்களை துவங்கியது, விரும்பினால் ஆணும் ஆணும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கொடுமையை (மேலை நாடுகளில்) சட்டமாக்கியது, ஜாதிகளை உருவாக்கி மனிதர்களுக்குள் பல ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியது, இதுபோன்ற கெட்ட காரியங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.., இந்த அனைத்து தீமைகளும் முதலில் ஒருவனால் துவங்கப்பட்டது. இதற்கு திறவுகோல் அவன்தான். ஒரு கட்டிடத்தின் திறவுகோலை சாவியைக்கொண்டு முதலில் ஒருவன் திறந்த பிறகுதான் அனைவரும் அதன் உள்ளே போகமுடியும். அதற்குத்தான் அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் திறவுகோல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்கள்.

இந்த கொடுமைகளை அவன் துவங்கியது மட்டுமில்லாமல் நன்மையான காரியங்களுக்கு அவன் தடையாகவும் இருக்கின்றான். எது வரை…? அவன் தவ்பா (பாவமன்னிப்பு) தேடி இஸ்லாமிய வழிகாட்டுதலுக்குள் வரும்வரை நற்காரியங்களுக்கு அவன் தடையாக இருக்கின்றான்.

இரண்டாம் வகை:
நன்மையான காரியங்களுக்கு திறவுகோலாகவும் நற்செயல்களுக்கு முன்மாதிரியாகவும் இருப்பது. இதுதான் மிகவும் சிரமமான கஷ்டமான காரியம்.

கெட்ட காரியங்களுக்கு திறவுகோலாக இருப்பதற்கு இந்த உலகில் பலவகையிலும் அங்கீகாரமும் ஆதரவும் எளிதில் கிடைத்துவிடும். நற்செயல்களுக்கு அங்கீகாரமும் ஆதரவும் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. அவர் பல சிரமங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும், பல துன்பங்களை சந்திக்கவேண்டிவரும். சிலசமயம் பலவிதமான இழப்புகளையும் சந்திக்கநேரிடும் அதனால்தான் அவருக்கு நற்செய்தி என்பதாக அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். என்ன நற்செய்தி:

مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا‌ ۚ وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُوْنَ

நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு உண்டு. தீமை செய்தவர், தீமையின் அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 6:160)

நற்காரியங்களுக்கு திறவுகோலாக இருப்பவருக்கு பத்து மடங்கு நற்கூலியும், தீமைகளுக்கு திறவுகோலாக இருப்பவருக்கு அதே அளவுக்கு தண்டனை (நாசம்) உண்டாகும் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.

இவ்வுலகில் செய்யும் நன்மையான காரியங்கள் அனைத்திற்கும் மறுமையில் கூலியை அடைவதற்கு அவர் இறைநம்பிக்கை அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டவராக இருக்கவேண்டும். ஒருவன் அல்லாஹுவை ஏற்றுக்கொள்ளாமல் முஹம்மத் (ஸல்) அவர்களை ஏற்றுக்கொல்லாமல் மக்களுக்கு பலவிதமான நல்லறங்களைச் செய்து சலுகைகளை வாரிவாரி வழங்கி அவன் இமயமலை அளவு நற்செயல்களை கொண்டுவந்தாலும் அதனால் மறுமையில் அவருக்கு எவ்வித பலனும் இல்லை!
oOo

http://www.islamkalvi.com/?p=126571


--

வெள்ளி, 19 மே, 2023

வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் போக்கும் வைத்திய குறிப்புகள்...!!


தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு வேப்பிலையை சாப்பிட்டு வர, அல்சரை சரி செய்வதுடன், வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்ய உதவுகிறது.

அல்சர் நோய் வருவதற்கு முதல் காரணம் என்னவென்றால் காலதாமதமாக உணவருந்துதல், முறையற்ற உணவு முறை, கடைகளில் விற்கப்படும் ரெடிமேட்  உணவுகளை அதிகளவு உட்கொள்வது போன்ற காரணங்களால் இந்த அல்சர் பிரச்சனை ஏற்படுகிறது.

மணத்தக்காளி கீரையை சூப்பாகவோ அல்லது பொறியலாகவோ உட்கொண்டு வந்தால் குடல் புண், வயிற்று புண், அல்சர் மற்றும் வாய்புண் போன்றவற்றை சரி  செய்யும்.

பச்சை வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டு வர, வயிற்று குடல்களில் பழுதுபட்ட மெல்லிய ஜவ்வு தோள்களை வளர செய்யும், இதனால் அல்சர் நோயை சரிசெய்ய உதவுகிறது.

அல்சர் குணமாக வீட்டு வைத்தியம் தினமும் தேங்காய் பாலை உணவில் சேர்த்து கொள்ளலாம் அல்லது தேங்காய் பாலை மட்டும் அருந்தி வர வயிற்று புண்குடல் புண், வாய் புண் மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய மிகவும் உதவுகிறது.

தினமும் சிறிதளவு கொப்பரை தேங்காயை மட்டும் உட்கொண்டு வந்தால் போதும், அல்சர் பிரச்சனை சரியாகும்.

ஆப்பிள் ஜூஸை தினமும் அருந்தி வந்தால், அல்சரினால் ஏற்படும் வயிற்று வலியை சரி செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். பழுத்த பாகற்காயை தினமும்  சமைத்து உண்டு வர, வயிற்றில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்வதுடன், குடலுக்கு வலிமை அளிக்கிறது. மேலும் பித்தத்தையும் தணிக்கிறது

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/medical-tips-to-cure-all-stomach-problems-121060300031_1.html


--

செவ்வாய், 16 மே, 2023

தொழிலாளர்களின்உரிமைகளைப் பேணுவோம்

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏

நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜுமுஆ தொழுகைக்காக (பாங்கு சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதனை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!
(
அல்குர்ஆன் : 62:9)

فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏

(ஜுமுஆ) தொழுகை முடிவு பெற்றால், (பள்ளியிலிருந்து புறப்பட்டுப்) பூமியில் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி அடைவதற்காக அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவுகூருங்கள்.
(
அல்குர்ஆன் : 62:10)

1) உழைப்பின் சிறப்பு:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'
ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்.'
என மிக்தாம்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2072.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துச் சென்று விறகுக் கட்டு ஒன்றை (கட்டி) எடுத்து வந்து விற்(று சம்பாதிக்)க, அதன் காரணத்தால் அல்லாஹ், அவரின் முகத்தை (இழிவிலிருந்து) காப்பாற்று வதானது, அவர் மக்களிடம் சென்று யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். (ஏனெனில், அவ்விதம் அவர்களிடம் கேட்கும்போது) அவருக்குக் கிடைக்கவும் செய்யலாம்; கிடைக்காமலும் போகலாம்.
என ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2373.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துக்கொண்டு காலைப் பொழுதில் மலைக்குச் சென்று (மலையேறி) விறகு வெட்டி விற்று, தாமும் சாப்பிட்டுப் பிறருக்கும் தருமம் செய்வது மக்களிடத்தில் யாசிப்பதைவிடச் சிறந்ததாகும்.'
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 1480.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.

'அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; அப்போது நபித்தோழர்கள், 'நீங்களுமா?' என்று கேட்டார்கள். 'ஆம்! மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்!' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 2262.

நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே 'நீங்கள் குளிக்கக் கூடாதா?' என்றுஅவர்களிடம் கூறப்பட்டது. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
புகாரி: 2071

2) தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் சிறப்பு:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தை மனப்பூர்வமாக நிறைவேற்றக் கூடிய, நம்பகமான கருவூலக் காப்பாளர் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார்!'
என அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2260.

ஒரு பெண் வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும் அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்துவிட முடியாது' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி: 1425.

3) தொழிலாளர்களின் ஊதியத்தை நேரத்துக்கு வழங்குவோம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'
மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்; சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!' என்று அல்லாஹ் கூறினான்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.

ஸஹீஹ் புகாரி : 2270.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.
'
நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி, எடுத்தார்கள்; இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தவருக்கு அதற்கான கூலியைக் கொடுத்தார்கள்!'

ஸஹீஹ் புகாரி : 2278.

அனஸ்(ரலி) அறிவித்தார்கள்.
'
நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வார்கள்; எவருடைய கூலியிலும் நபி (ஸல்), அவர்கள் அநீதி இழைக்க மாட்டார்கள்!'
ஸஹீஹ் புகாரி : 2280.

4) உழைப்பாளிகளின் கண்ணியம் காப்போம்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக்கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக்கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக்கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு 'ஒரு பிடி அல்லது இருபிடிகள்' அல்லது 'ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள்' உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்.
என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்.

ஸஹீஹ் புகாரி : 5460.

(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)
உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும்,. அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்" என அபூதர் கூறினார்கள்" என மஃரூர் கூறினார்.
புகாரி: 30.

அனஸ்(ரலி) அறிவிக்கிறார்.

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை 'ச்சீ" என்றோ, '(இதை) ஏன் செய்தாய்" என்றோ, 'நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?' என்றோ அவர்கள் சொன்னதில்லை.
புகாரி: 6038.

5) உழைக்காமல் யாசகம் கேட்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

" (தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூட சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'.
புகாரி: 1474,

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறியதாவது. நபி (ஸல்) அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, 'உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும்; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது' என்றும் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 1429.
அத்தியாயம் : 24

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.'
ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அறிவித்தார்.
அபூஹுரைரா(ரலி) இவ்வாறே அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 1427 1428

http://www.islamkalvi.com/?p=126509


--

Hiccups: விக்கல் என்னும் சிக்கலைத் தீர்க்க டிப்ஸ்

Hiccups: விக்கல் வருவதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. பொதுவாக யாராவது உங்களை நினைத்தால் ...

Popular Posts