லேபிள்கள்

ஞாயிறு, 8 மே, 2011

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள்

கண்களின்  வெளி சவ்வு  அழற்சியே  - சிவந்த  கண் அல்லது  மெட்ராஸ் ஐ  எனபடுகிறது .அடினோ  வைரஸ் (ADENO VIRUS -CONJUNCTIVITIS)என்ற வைரஸ் இதற்க்கு  பெரும்பாலும் காரணம் .

இது பருவநிலை  மாறுபாடல் வரும் ஒரு வியாதி .இந்த வைரஸ் சூடான  , ஈரபதமான சூழ்நிலையில்  மிக வேகமாக  பரவக்கூடியது .

இது காற்று  மற்றும் உடைமைகள்(fomites) ( கர்சிப் , துண்டு ,பேனா ,பென்சில் ,அழிப்பான் ,பேப்பர்  ) கை குலுக்குதல்  மூலம் பரவும்  ஒரு வைரஸ்  வியாதி  ஆகும் .

கருப்பு  கண்ணாடி போடுவதால்  பிறருக்கு  பரவாது என்பது  தவறு . கண்ணாடி போடுவதால் அதிகபடியான  சூரிய வெளிச்சம் மூலம்  வரும்  எரிச்சலை மட்டுமே தடுக்க மூடியும் .

ஒருவர் பயன்படுத்திய  கண்ணாடியை  மற்றவர் பயன் படுத்த கூடாது 

கண் சொட்டு  மருந்தை  ஒரு நாளைக்கு  ஆறு முதல்  எட்டு  முறை  மருத்துவர் ஆலோசனை படி  போடவேண்டும் .

கண்களை கசக்க  கூடாது .

தும்மல் , இருமல் மூலமும் இந்த  வைரஸ் பரவும் , எனவே வாயில் துணி  வைத்து இருமவும் .

கண்களை  குளிர்ந்த நீரில்  அடிக்கடி கழுவவும் ,ஆதற்கு முன்பு கைகளை  நன்கு சோப்பு போட்டு  கழுவவும் .

மிதமான  வெந்நீரில்  துண்டை  நனைத்து  ஒத்தடம் கொடுக்கவும் .

நேருக்கு  நேர் பார்த்தால்  வராது . ஆனால்  எதிர்ப்பு சக்தி குறைவனவர்களுக்கும்   , குழந்தைகளுக்கும்   அருகில் வந்தாலே மூச்சு  காற்று மூலம்  தொற்று  ஏற்படும் .

மருத்துவர் ஆலோசனை இன்றி  steroid  சொட்டு  மருந்துகளை கடையில் வாங்கி போட்டால் கண் பார்வை இழப்பு ஏற்படலாம் . எனவே  சுய  மருத்துவம்  செய்வதற்கு  சும்மா இருப்பதே மேல். ஏனெனில்  இது தானாகவே  சரி ஆகிவிடும்  (self limiting ).

உடலின் எதிர்ப்பு சக்தியை பொருத்து 5  முதல் 7  நாட்களில்  இது குணமடையும் .

கருத்துகள் இல்லை:

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.

இரத்த சோகை காரணமாக உடல் மிகவும் பலவீனமாக தோன்றும். எப்போதும் சோர்வாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்படும். உடலில் ரத்தம் குறைவாக இருக்கும்ப...

Popular Posts