சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் அன்றாட பணிகளை பாதிக்கக் கூடிய வகையில் மிகவும் வேதனை கொடுக்கக் கூடியது.
சிறுநீரக பிரச்சனைகளில் ஒன்று சிறுநீரக கற்கள் பிரச்சனை. சிறுநீரக கற்கள் வந்தால், பாதிக்கப்பட்ட நபர் மிகவும் வேதனையான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் தனது டயட் பிளானை மிகவும் கவனத்துடன் திட்டமிட வேண்டும்.
உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை இருந்தால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில சாறுகளின் உதவியுடன் இந்த பிரச்சனையை சமாளிக்கலாம். இந்த ஜூஸ்கள் எவை, எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
சிறுநீரக கற்களை போக்கும் சாறு
சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்கள் , இந்த 3 வகையான ஜூஸ்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் வலி உட்பட பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
1. தக்காளி சாறு
சிறுநீரக கற்களை அகற்ற தக்காளி சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தக்காளி ஜூஸ் தயாரிக்க இரண்டு தக்காளியை நன்கு கழுவி, அவற்றை அரைக்கவும். சாற்றில் இந்துப்பு மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிட வேண்டும், நீங்கள் விரும்பினால், சாறு வடிவில் தயாரிக்கப்பட்ட கலவையை குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் உட்கொள்ளலாம். இருந்தாலும் அவ்வபோது பிரெஷ்ஷாக தயாரித்து அருந்துவது மிகவும் நல்லது.
2. எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை சாற்றை உட்கொண்டால், பிரச்சனையையும் சமாளிக்க முடியும். ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து, இப்போது சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து, கலவையை நன்றாகக் கலக்கி, சாப்பிட்டால், சிறுநீரக கற்கள் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.
3. துளசி சாறு
சிறுநீரக கற்கள் பிரச்சனையை நீக்கவும் துளசியில் இருந்து தயாரிக்கப்படும் சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், துளசி இலைகளை சாறு எடுத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து, காலை மற்றும் மாலையில் தயாரித்த கலவையை சாப்பிடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் சிறுநீரக பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக