லேபிள்கள்

ஞாயிறு, 8 மே, 2011

குழந்தைகளுக்கு வரும் காது வலி :

 காது வலி வர  முக்கியமான  காரணம்  சளி பிடிப்பதும் , பாட்டில்  பால் தருவதும் ஆகும் .  வலி  வந்தால்  குழந்தை விடாமல் அழுது  கொண்டே  இருக்கும் . காது மடலை  தொட்டால்  வலி அதிகமாகும் . 

மூக்கை   சிந்துவதால்  காதின் உள்ளே  அழுத்தம்  அதிகரிப்பதால்  காது வலி  அதிகமாகும் . எனவே  சிந்தாமல்  துடைத்துவிட  வேண்டும் .

காதுக்கு  பட்ஸ்  போடவே  கூடாது . அப்படி செய்தால்  வெளியே உள்ள  அழுக்கு  உள்ளே தள்ள படுமே  தவிர  வெளியே  வராது. பஞ்சை  கொண்டு  விளக்கு திரி போல திரித்து  துடைத்து  எடுக்க வேண்டும் .


தாய்ப்பால் படுத்து கொண்டு   தரக்கூடாது , குழந்தையின்   தொண்டைக்கும்  நடு காதிற்கும் (middle ear ) உள்ள இணைப்பு(Eustachian  tube ) வழியே பால் உள்ளே சென்று  சீழ்  பிடிக்கும் . அதே போல் புட்டி பால் கொடுத்தாலும்  காதில்  சீழ்  பிடிக்கும் .

மூக்கு அடைப்பு  இருந்தாலும் காது வலி வரலாம் , எனவே மூக்கு சொட்டு மருந்து  போட்டு கொள்ள வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கண்களில் பாதிப்பு உள்ளது. கண்ணாடி அவசியம் அணிய வேண்டுமா? கண்கள் பத்திரம்.

கண்களில் ஏற்படும் கிட்டப்பார்வை , தூரப்பார்வை , கோணல் பார்வை மற்றும் வெள்ளெழுத்து ஆகிய பிரச்னைகளை பற்றி அடிக்கடி கேள்விப் படுகிறோம். ...

Popular Posts