லேபிள்கள்

புதன், 19 நவம்பர், 2014

என்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்?

என்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்?


வங்கிகள் இணையதளம் வழி சேவைகளைத் தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.  வங்கிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே இன்டர்நெட் மூலம் வங்கி மற்றும் நுகர்வோர் துறைகள் சார்ந்த பலவகைப் பரிமாற்றங்களைச் செய்ய இயலும். அனைத்து வங்கிகளும் இன்றைக்குப் பல்வேறு வகையான இணைய தளச் சேவைகளை அளிக்கின்றன.
ஆனாலும்கூட, டிராக்டர் வந்தாலும் உழுவதற்கு எருதுகளையே பயன்படுத்துவேன் என்று அடம் பிடிக்கும் விவசாயிகளைப் போல பல வாடிக்கையாளர்கள் அதிலும் குறிப்பாக நடுத்தர மற்றும் முதியவர்கள் சிறு தொகைக்கான பரிமாற்றங்களுக்கும் வங்கிக்குச் செல்வதற்கே விரும்புகிறார்கள். ஒருபுறம் வங்கிக்குச் செல்வதையே பழக்கமாக்கிக் கொண்ட மனம்.  மற்றொருபுறம் அறிவியல் சார்ந்த புதிய உத்திகளைக் கையாளுவதில் உள்ள பயம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில விவரங்களும் பாதுகாப்புக் கவசங்களும் உங்கள் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தும்.

என்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்?

வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இன்றைய இணையதளச் சேவைகளைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை விவரம் பெறுவதற்கான சேவைகள் மற்றும் பணப் பரிமாற்றச் சேவைகள்.
Ø    தனது கணக்கிலுள்ள இருப்புத் தொகைகள், வைப்பு நிதிகளின் முதிர்வு தேதிகள், கடன் கணக்குகளில் உள்ள நிலுவைத் தொகைகள், கணக்கு விவரங்கள் (Account Statement), காசோலைப் புத்தகம் பெறுவதற்கான விண்ணப்பம், காசோலைத் தடுப்பிற்கான விண்ணப்பம் (Cheque Stop Payment Request), பல்வேறு வங்கிச் சேவைகளுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் போன்றவை முதல் வகைச் சேவையிலே அடங்கும்.
Ø
    தனது கணக்கிலிருந்து அதே வங்கியில் தான் அல்லது மற்றவர்கள் வைத்திருக்கும் கணக்கில் செலுத்துவதற்கான பணப்பரிமாற்றம்; மற்ற வங்கிகளில் உள்ள கணக்குகளில் வரவு வைப்பதற்கான பரிமாற்றங்கள்; ரயில் முன்பதிவு, மின்வணிகம், தொலைபேசி, மின்கட்டணம், சொத்துவரி போன்றவற்றிற்கான தொகைகளைச் செலுத்துதல் போன்றவற்றிற்கு இன்டர்நெட் பேங்கிங் பேருதவியாக அமைகிறது.  வங்கிக்குச் செல்ல வேண்டாம், எங்கும் வரிசையில் நிற்க வேண்டாம், பணத்தைப் பாதுகாக்க வேண்டாம். அனைத்துச் சேவைகளும் 24 மணி நேரமும் கிடைக்கும். (வங்கிகளுக்கிடையிலான பணப் பரிமாற்றத்திற்கு (NEFT அல்லது RTGS) மட்டும் குறிப்பிட்ட கால வரையறை உண்டு).

ரயில் முன்பதிவு, மின்வணிகம் மற்றும் நுகர்வோர் கட்டணங்களை ஏடிஎம் அட்டை மற்றும் கிரெடிட் கார்டு மூலமும் செலுத்த இயலும்
முதலாவதாக நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலே விண்ணப்பத்தைக் கொடுத்து  இன்டர்நெட் பேங்கிங் வசதியைப் பெற வேண்டும்.  விண்ணப்பத்திலேயே மேற்கண்ட வசதி, விவரம் பெறுவதற்கு மட்டுமா அல்லது பணப்  பரிமாற்றத்திற்கும் தேவையா என்பதைக் குறிப்பிட வேண்டும். தங்கள் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டபின்னர் வங்கியானது அந்த வசதிக்கான கடவுச் சொல்லை (Pass Word) தங்கள் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தங்களது வங்கிக் கிளையின் மூலமாகவோ அனுப்பி வைக்கும். குறிப்பிட்ட வங்கியின் இணைய தளத்தில் நுழைந்து வங்கியால் கொடுக்கப்பட்ட தங்கள் நுகர்வோர் அடையாளச் சொல்லையும் (User ID) மற்றும் கடவுச் சொல்லையும் உபயோகித்து தாங்கள் விண்ணப்பித்திருந்த சேவைகளைப் பெறலாம்.
பெரும்பாலானவர்கள் இன்டர்நெட் பேங்கிங் வசதியைச் சொந்தக் கம்ப்யூட்டர் மூலமே அணுகுகின்றார்கள். அதுவே நல்லதும் கூட. அதனோடு பி.எஸ்.என்.எல், டாடா, ஏர்டெல், ரிலையன்ஸ், வோடபோன் போன்ற இன்டர்நெட் சேவை தருவோரின் மூலம் பெறப்பட்ட இன்டர்நெட் வசதியும் (Internet Connection) தேவை.
பாதுகாப்பு அடுக்குகள்
இன்டர்நெட் சேவைக்கென உள்ள கடவுச் சொல்லைத் தவிர, பணப் பரிமாற்றத்திற்கெனத் தனியாக ஒரு கடவுச் சொல்லும் தரப்படும். பணப் பரிமாற்றத்திற்கு அந்தக் கடவுச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.  பரிமாற்றத்தின் போது பெரும்பாலான வங்கிகள் ஒருமுறைக் கடவுச் சொல்லாகக் (One time Pass Word) குறிப்பிட்ட எண்ணை முன்னரே பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளரின் அலைபேசிக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பும்.  பணப்பரிமாற்றத்திற்கு அந்தக் கடவுச் சொல்லும் பயன்படுத்தப்பட வேண்டும். இது ஒருவகையிலே வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மூன்றடுக்குப் பாதுகாப்பாகும்.
இணையதளம் மூலமாகக் கோடிக்கணக்கான ரூபாய்கள் வங்கிக் கணக்குகளிலிருந்து திருடப்படுவதும், பொய்யான இணைய தளங்களை உருவாக்கிக் கணக்கு விவரங்கள் பெறப்படுவதும் பாதுகாப்பு அடுக்குகளை மேலும் மேலும் வலுப்படுத்துவதற்கான காரணங்களாக அமைகின்றன.
கடைப்பிடிக்க வேண்டிய எச்சரிக்கைகள்.
வங்கியிலிருந்து பெறப்பட்ட கடவுச் சொல்லை உபயோகித்து உடனடியாக வேறு கடவுச் சொல்லைத் தேர்ந்தெடுங்கள். புதிய கடவுச் சொல் எண், எழுத்து மற்றும் குறியீடுகளை உள்ளடக்கியதாக இருக்கட்டும்.            (Ex.: LTvn#45a) அவ்வப்பொழுது கடவுச் சொல்லை மாற்றிக் கொள்ளுங்கள்.
குறிப்பிட்ட வங்கியின் இணையதளத்தில் நுழைவதற்குத் தங்களுக்கு வந்த மின்னஞ்சலை உபயோகித்தோ அல்லது தங்கள் செயல்பாடின்றித் தாமாகவே உதயமான இணையதளங்கள் வழியோ முயல வேண்டாம்.
வங்கியின் இணையதள முகவரியை நேரடியாக டைப் செய்தல் நலம். தங்கள் வங்கியின் இணைய தள முகவரி "https://" என்று துவங்க வேண்டும் ("http://" என்று அல்ல), முன்குறிப்பிட்ட முகவரித் துவக்கத்தில் உள்ள 's' இணையதளம் பாதுகாப்பானது (secured) என்பதைக் குறிப்பிடுகிறது. முகவரிப் பட்டை (Address Bar) பூட்டுக் குறியுடன் துவங்கிப் பச்சை நிறமாக மாறினால் குறிப்பிட்ட இணையதளம் பாதுகாப்புச் சான்று உடையது என்று பொருள்.
எந்த வங்கியும் இணைய தளம் அல்லது தொலைபேசி மூலமாக உங்கள் தனிப்பட்ட மற்றும் கணக்கு விவரங்களைக் கேட்பதில்லை. ஆகவே தங்கள் கணக்கு விவரங்களைப் புதுப்பிக்கச் சொல்லிக் கேட்கும் யாருக்கும் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வழி பதில் கொடுக்க வேண்டாம். அத்தகைய மின்னஞ்சல்களின் இணைப்புகளையும் திறக்க வேண்டாம். தேவைப்பட்டால் குறிப்பிட்ட வங்கியின் கிளைக்கு நேரடியாகச் சென்று விவரங்கள் கேட்கலாம்.
இன்டர்நெட் சென்டர் மற்றும் நெட்ஒர்க் மூலம் இணைந்துள்ள கம்ப்யூட்டர்களை உபயோகப் படுத்திப் பணமாற்றம் செய்தல் தவிர்க்கப்பட வேண்டும்.  கம்ப்யூட்டர் மூலம் தாங்கள் செய்த நடவடிக்கைகள் மற்றும் தாங்கள் தட்டச்சு செய்த எண்களையும் எழுத்துக்களையும் அப்படியே மீட்டெடுப்பதற்குச் சில மென்பொருள்கள் (Key Logger) உதவிபுரியும். ஆகவே பொது இடங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள நெட்வொர்க்கில் இணைக்கப்பட்ட  கம்ப்யூட்டர்கள் மூலம் பணமாற்றம் செய்தல் கூடாது.
அறிவியல் வழங்கிய கொடைகளான மின்சாரம், போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றால் விபத்துக்களும் நிகழ்கின்றனதான். ஆனாலும் அவற்றின் உபயோகம் ஒவ்வொருநாளும் அதிகரிக்கின்றனவே. தக்க பாதுகாப்புக் கவசங்களும் முன்னெச்சரிக்கைகளும் இணைந்தால் இன்டர்நெட் பேங்கிங் வங்கிச் சேவையை லகுவாக்கித் தரும்.  அது இன்றைக்கு மனிதனுக்குக் கிடைத்த சாபமல்ல வரம்தான் என்பதும் உணரப்படும்.
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts