லேபிள்கள்

வெள்ளி, 7 நவம்பர், 2014

விபத்தைத் தவிர்ப்போம்

விபத்தைத் தவிர்ப்போம்
வாகனம் ஓட்டும்போது எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை அவ்வப்போது ஸ்பீடாமீட்டரைப் பார்த்து கண்காணிக்க வேண்டும். உங்களுக்கான வேகம் எவ்வளவு என்பதில் தெளிவாக இருங்கள். இதனால், அதிவேகத்தில் செல்வதைத் தவிர்க்கலாம்.
 வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் அல்லது ஹேண்ட்ஸ் ஃப்ரீ பயன்படுத்த வேண்டாம்.
சாலை விபத்து பற்றிய விழிப்பு உணர்வு குழந்தைப் பருவத்திலேயே ஏற்படுத்தப்பட வேண்டும்.
மோட்டார் சைக்கிள் ரேஸ் போன்ற வீடியோ, கம்ப்யூட்டர் விளையாட்டுக்களைத் தவிர்க்க வேண்டும். இது குழந்தைகள் மனதில் வேகமாக வண்டி ஓட்டும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
குறிப்பிட்ட கால இடைவெளியில் பார்வைத் திறனைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
நன்கு ஓய்வு எடுத்தபின்பு, ஆரோக்கியமான நிலையில் வாகனம் ஓட்டுங்கள். தூக்கத்தைத் தரும் மாத்திரை மருந்துகளை உட்கொண்டுவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்.
நீண்ட பயணத்தின்போது, இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை 15 நிமிடங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும்.
 வாகனம் ஓட்டும்போது தூக்கம் வந்தால், பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி ஓய்வெடுங்கள். அல்லது காபி போன்ற தூக்கத்தை விரட்டும் பானங்கள் அருந்தலாம்.
அதிகாலை 2 முதல் 6 மணி வரை மிகுந்த கவனத்துடன் வாகனம் ஓட்டுங்கள்.
மதிய உணவுக்குப் பிறகு 2 முதல் 4 மணி வரையில் வாகனம் ஓட்டும்போதும் கவனம் தேவை.
 சட்டத்தின் பார்வையில்...
 டிரைவிங் லைசென்ஸ் இன்றி வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். ரூ.500 அல்லது மூன்று மாதங்கள் சிறை அல்லது இவை இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.  
வாகனக் காப்பீடு இன்றி வாகனம் ஓட்டினால், ரூ.1000 அல்லது மூன்று மாதங்கள் சிறை தண்டனை கிடைக்கும்.
சிறுவர்கள் மோட்டார் வாகனம் ஓட்டினால், ரூ.500 அல்லது மூன்று மாதம் சிறை அல்லது இவை இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
ஹெல்மெட் இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் ரூ.100 அபராதம்.
 வேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம்.
 மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், ரூ.2,000 அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
 மது அருந்திவிட்டு விபத்து ஏற்படுத்தினால், காப்பீடு பலன் எதுவும் கிடைக்காது.
 வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தினால், ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும்.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

கண்களில் பாதிப்பு உள்ளது. கண்ணாடி அவசியம் அணிய வேண்டுமா? கண்கள் பத்திரம்.

கண்களில் ஏற்படும் கிட்டப்பார்வை , தூரப்பார்வை , கோணல் பார்வை மற்றும் வெள்ளெழுத்து ஆகிய பிரச்னைகளை பற்றி அடிக்கடி கேள்விப் படுகிறோம். ...

Popular Posts