லேபிள்கள்

செவ்வாய், 11 நவம்பர், 2014

தியானம்" செய்யும் முறை

தியானம்" செய்யும் முறை
தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது.

எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம்.

நமக்கு சௌகரியமான முறையில்.
அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கொள்வது முக்கியம்.

தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கோள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம்.

வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.

கால்களை சம்மண மிட்டுக்கோள்ளுங்கள்.

இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கோள்ளுங்கள்.

கண்களை மேதுவாக மூடுங்கள்.

அமைதியாக சகஜ நிலைக்கு வாருங்கள்.

உங்கள்க முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.

மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.

கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.

கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம்.

மந்திர்ங்களை ஒதும பொழுதோ அல்லது முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது.

ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும்.

நம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும்பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும்.

மனம் மறுற்ம் அறிவு நிலைக்கு.
மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.

மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன.

நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும்.

மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்லவேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் தூவங்க வேண்டும்.

கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம்.

இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்கத் தூவங்கவேண்டும்.

மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் சேய்யக்கூடாது.

காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தேரிந்து நடந்திடக்கூடாது.

மூச்சுக்காற்றை சுவாசிப்பதும்,வெளியனுப்புவதும்தண்னிச்சையாக நடைபெற வேண்டும்.

நம்முடைய இயற்கையான சுவாசத்தைக் கவனித்தல் மட்டுமே போதுமானது.

இதுதான் முக்கியம்.
இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறங்த வழி.

எண்ணங்களுக்குப் பின் ஓடாதீர்கள்.

கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.

எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.

இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.

சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.

அப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.

இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும்.

இந்நிலையில்
ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.

எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்.

இந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது "எண்ணங்கள் அற்ற நிலை" என்றோ கூறுகிறோம்.

இதுதான் தியான நிலை.

http://iminder.blogspot.in/2013/10/blog-post_4098.html


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

கண்களில் பாதிப்பு உள்ளது. கண்ணாடி அவசியம் அணிய வேண்டுமா? கண்கள் பத்திரம்.

கண்களில் ஏற்படும் கிட்டப்பார்வை , தூரப்பார்வை , கோணல் பார்வை மற்றும் வெள்ளெழுத்து ஆகிய பிரச்னைகளை பற்றி அடிக்கடி கேள்விப் படுகிறோம். ...

Popular Posts