லேபிள்கள்

புதன், 5 அக்டோபர், 2011

மாடிப்படி ஆபத்து



வீட்டை கட்டும் போதே அது குழந்தைகளுக்கு எல்லாவகையிலும் பாதுகாப்பு தரும் விதத்தில் வடிவமைக்க வேண்டும். எவ்வாறு வீட்டை அமைத்துக் கொண்டால் குழந்தை களுக்கு ஆபத்து இல்லாமல் இருக்கும்?
* குழந்தைகள் மாடிப்படிகளில் ஏறுவதை தவிர்க்க, மாடிப்படியின் கீழ் பகுதியில் சேப்டிகேட் அமை யுங்கள். அந்த கேட் 80 செ.மீட்டர் உயரம் இருந்தால் போதும். அலுமினியத்தால் அதை உருவாக்கினால் செலவு குறையும்.
* மாடிப்படிகளில் கைப்பிடி சுவர் அல்லது கைப்பிடி பலகைகள் அமைக்கும் போது அவை 1.2 மீட்டர் உயரம் இருக்கவேண்டும். அதைவிட உயரம் குறை வாக இருந்தால் குழந்தை கள் அதில் ஏறி- இறங்கி குதித்து விளையாடும்.
* மாடிப்படிகளுக்கு வளவளப்பான டைல் பதிக்கக் கூடாது. கிரானெட், மார்பிள் போன்றவை வழுக்கு தன்மை கொண்டது. கால்களுக்கு நன்றாக பிடிப் புள்ள ஓடுகளை பதியுங்கள்.
* குழந்தைகளுக்கு எட்டும் தூரத்தில் கண்ணாடி யால் ஆன ஷோகேஸ் எதுவும் அமைக்கவேண் டாம். அவைகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகம்.
* மேஜைகளில் பதிக்கும் கண்ணாடிகள் மிக பலமானதாக இருக்கவேண்டும். பலம் குறைந்தவைகளாக அவைகள் இருந்தால் ஆபத்திற்கு வழிவகுக்கும்.
* குழந்தைகளின் மேஜைப்பகுதிகள் கூர்மையாக இருக்கக்கூடாது. அவைகளின் மூலை யில் குழந்தைகளின் தலையோ, உடலோ பட்டாலும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்கவேண்டும்.
* குழந்தைகள் படுக்கும் கட்டில் அதிக உயரமாக இருக்கக்கூடாது. கட்டிலின் ஓரத்தில் தடுப்பு கம்புகள் வைத்திருந்தால், குழந்தை தூக்கத்தில் புரண்டு கீழே விழுவதை தவிர்த்துவிடலாம்.
* குழந்தைகளுக்கு எப்போதுமே தண்ணீர் மீது ஈர்ப்பு அதிகம். அவர்கள் தண்ணீர் மூலம் ஏற்படும் ஆபத்துக்களைப் பற்றி அறியாமல் அதைத் தொட்டு விளையாட முன்வருவார்கள். அது குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக ஆகிவிடுகிறது. குழந்தைகள் செல்லும் இடங்களில் அல்லது அவர்களால் சென்றுவிட முடியும் என்று நம்பப்படுகிற இடங்களில் தண்ணீரை வைக்காமல் இருக்க வேண்டும். தொட்டி, பாத்திரங்களில் இருக்கும் தண்ணீரையும் சரியாக மூடிவைக்கவேண்டும். குழந்தைகள், சிறுவர்கள் இருக்கும் வீடு களில் உள்ள கிணறுகளுக்கு மூடி அல்லது வலை போட்டு வைப்பது நல்லது. தண்ணீர் மட்டுமின்றி கொதி நீராலும், சுடுநீராலும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும். அவை களாலும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படாத அளவிற்கு பார்த்துக் கொள்ளவேண்டும்.
* கூர்மையான முனைகளைக் கொண்ட வீட்டு உபயோகப் பொருட்களையும், பொம்மைகளையும் குழந்தைகள் பயன்படுத்தாத அளவிற்கு கவனித்துக் கொள்ள வேண்டும். மூன்று மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு ஈறு பலம் இருக்காது. அவர் களுக்குரிய பொம்மைகளை தேர்ந்தெடுக்கவேண்டும். பாட்டரி மூலம் செயல்படும் பொம் மைகளை மூன்று வயதான பின்பே விளையாட கொடுக்கவேண்டும். துள்ளும் பந்துகளை மூன்று வயதிற்கு பிறகே விளையாட கொடுக்கவேண்டும். அதற்கு பதில் மென்மையான பந்துகளை விளையாட கொடுப்பது நல்லது. ரோமங்கள், துரும்புகளாலான பொம்மைகளை குழந்தைகளுக்கு விளையாட கொடுக்காமல் இருப்பது நல்லது.

கருத்துகள் இல்லை:

உங்கள் பைக்கை நீங்களே பராமரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள்.

  மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு அதை பற்றிய அனைத்து விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்ற அவ...

Popular Posts