அலுவகத்தில் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்து பணியாற்றுவது கழுத்து வலியை உண்டாக்கும். தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒருபக்க கழுத்து வலியால் அவதியுற்று வருவோர் சிலருக்கு வலது அல்லது இடது புறம் தலையைத் திருப்பினால் மயக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படும்.
இது எதனால் ஏற்படுகிறது எனத் தெரிந்துகொள்வோம்.எதனால் ஏற்படுகிறது?இதயத்தில் இருந்து கழுத்து வழியாக மூளைக்குச் செல்லும் ரத்த குழாய்கள் மூளைக்கு ரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை கொண்டு சேர்க்கும். தொடர்ந்து கணினி திரையைப் பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் தங்களை அறியாமல் கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்து பல மணிநேரமாக வேலை செய்வர். இவ்வாறு செய்யும்போது மூளைக்குச் செல்லும் ரத்த குழாய்கள் அழுத்தப்படும். இதனால் போதுமான அளவு ரத்தம் மூளைக்குச் செல்லாமல் ரத்தக் குழாயில் தேங்கும்.
இதனால் வலது அல்லது இடது பின்னங்கழுத்தில் உள்ள குழாய்கள் விரிவடையும். இதன்காரணமாக வலி ஏற்படும். மூளைக்கு போதுமான ரத்தம் செல்லாமல் இருந்தால் கழுத்தை வலது அல்லது இடப்புறம் திருப்பினால் மயக்கம் வருவது போன்ற உணர்வு அல்லது தலை சுற்றல் ஏற்படும்.தீர்வுஇதற்கு நரம்பியல் மருத்துவர்கள் எளிதான தீர்வைக் கூறுகின்றனர். பணிக்கு இடையே அவ்வப்போது கழுத்தை அசைத்தல், எழுந்து உட்காருதல், கை, கால்களை நீட்டுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் ரத்தக் குழாயில் ரத்தம் சீராகப் பாயும்.
இதனால் மூளை சுறுசுறுப்படையும். நாம் நீண்ட நேரம் அசையாமல் அமர்ந்து எழுந்தால் சோம்பல் முறிக்க உடல் ஏங்குவதை நாம் உணர்ந்து இருப்போம். இதனால் ரத்த குழாய்களுக்குள் ரத்த ஓட்டம் சீராகும். அதேபோல கழுத்துக்கு அவ்வப்போது அசைவு கொடுப்பது எதிர்காலத்தில் வெர்டிகோ உள்ளிட்ட எலும்பு நோய்கள் வருவதைத் தவிர்க்கும்.
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக