லேபிள்கள்

புதன், 13 பிப்ரவரி, 2019

மார்க்கத்தின் பெயரால் எல்லை கடந்த பெண்களும் அழைப்பாளர்களும்

இயங்கங்களில் பாலியல் வாடை வீசுவதற்கு என்ன காரணம்?

பெண்களிடம் இருந்த வெட்க உணர்வை போக்கியது.
1. மார்க்கத்தை அறிந்துகொள்ள வெட்கப்படக்கூடாது என தண்ணி தெளிச்சுவிட்டு, சகஜமாக ஆண் தாஃயிகளிடம் உரையாட வழி ஏற்படுத்தி தந்தது.
2. மார்க்க சந்தேகம் என ஆரம்பித்த பேச்சு, மணிக்கணக்கில் ஆகி, குடும்ப விவகாரங்கள் வரை பரஸ்பரம் பறிமாறி, பிறகு ஷைத்தானின் சூழ்ச்சிக்கு இரையாவது.
3.நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு தனி இட வசதி என்று அறிவிக்கப்பட்டாலும் திரைமறைவின்றி பெண்களை நேருக்கு நேராக பார்த்து மார்க்கம் பேசுவது.
4. ஆர்ப்பாட்டம் போராட்டம் என பெண்களை களமிறக்கி கத்த வைத்து வெட்க உணர்வை எடுபட செய்தது.
5. நடிகர்களுக்கு ரசிகைகள் போல் சில பேச்சாளருக்காக எதையும்(!) செய்யும் அளவுக்கு வெறி கொண்ட ரசிகைகளாக மாறுவது.
6. பேச்சாளரின் நடை-உடை பாவனைகளை கூர்ந்து ரசித்து மறுநாள் அவரிடம் போனில் கமென்ட் பன்னுவது. குறிப்பாக உங்களுக்கு அந்த நீல கலர் சட்டை சூப்பரா இருக்கு என ரசிகை சொன்னவுடன் அந்த பேச்சாளர் தொடர்ந்து நீல கலர் சட்டையை அணிந்த வரலாறு உண்டு.
7. பேச்சாளரை சந்திப்பதை பெரும்பாக்கியமாக கருதுவது. அவருடன் உள்ள போன் தொடர்பை வைத்து பெருமையடிப்பது.
8. முத்தாய்ப்பாக ஒரே ஒருநாள் உங்கள் மனைவியாக வாழ்ந்தால் போதும். எனக்கு அந்த அங்கீகாரம் மட்டும் கொடுங்கள் என்ற அளவுக்கு வெறியோடு விரும்புவது.
இன்னும் பல
இப்படி மார்க்கத்தின் பெயரால் மார்க்க எல்லை தாண்டியதால் சில பெண்கள், அழைப்பாளர்களின் வலையில் விழுகிறார்கள். இன்னும் சிலர் அவர்களை வீழ்த்துகிறார்கள்.
அல்லாஹ் பாதுகாப்பானாக!
குறிப்பு: விதிவிலக்கானோர் தவிர.

தகவல்: இப்னு ஹசன்
http://www.islamkalvi.com/?p=115878

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உங்கள் பைக்கை நீங்களே பராமரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள்.

  மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு அதை பற்றிய அனைத்து விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்ற அவ...

Popular Posts