லேபிள்கள்

திங்கள், 21 மே, 2018

மழைக்கால டிப்ஸ்...!

மழைக்கால டிப்ஸ்...!
மழை மற்றும் பனிக்காலங்களில் அனைவருக்கும் ஜலதோஷம் பிடித்து வாட்டும். குழந்தைகளுக்கோ மூக்கில், நீர் வடிந்தவாறு இருக்கும். இதனால், இரவில், தூங்காமல் அழுவர். இதற்கு, கோதுமை தவிட்டை ஒரு மணல் சட்டியில் வறுத்து, ஒரு துணியில் கட்டி, உடல் பொறுக்கும் சூட்டில், குழந்தையின் தலை, முதுகு, நெஞ்சுப்பகுதி மற்றும் நெற்றி என, மாறி மாறி, மென்மையாக ஒத்தடம் கொடுக்க, சளித் தொந்தரவிலிருந்து விடுபட்டு, உடனே, தூங்க ஆரம்பித்து விடுவர்.

கோதுமை தவிடு இல்லாவிட்டால், வெறும் சட்டியை சூடு செய்து, அதை துணியால் ஒற்றி, ஒத்தடம் கொடுக்கலாம்.
* ஜலதோஷம் வருவதற்கான அறிகுறி தெரிந்தால், சில பூண்டுகளை பச்சையாக சாப்பிட, தொண்டையில் ஏற்படும், 'கிச் கிச்' மட்டுமின்றி, ஜலதோஷமும் பறந்து போகும்.
* மழை நீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து, அதை நன்றாக காய்ச்சி, ஆற வைத்து முகம் கழுவினால், பட்டு போல, மிருதுவாக மாறும்.
* குளிர் காலத்தில், 'டார்க்' நிற ஆடைகளை அணியலாம்; கறுப்பு நிற ஆடை, குளிருக்கு இதமாக இருக்கும்.


* மழையின் காரணமாக, ஜன்னலை திறக்க முடியவில்லை என்றால், கோல மாவுடன், உப்பு தூள் கலந்து, ஜன்னல் விளிம்பில் தூவுங்கள்; எளிதாக திறக்கலாம்.
* மழை மற்றும் குளிர் காலத்தில் வீட்டில் உள்ள மிதியடியின் கீழ், நியூஸ் பேப்பரை விரித்து வைத்தால், மிதியடிகள் சில்லிட்டு போகாமல் இருக்கும். மேலும், தரை குளிர்ச்சியாய் இருந்தால், தரையில், நியூஸ் பேப்பரை விரித்து, அதன் மேல் பாயை விரித்து படுத்தால், குளிரோ அல்லது தரையின் குளிர்ச்சியோ தெரியாது.
* மழை காலத்தில், உப்பு ஜாடியில் இரண்டு மூன்று பச்சை மிளகாய்களை போட்டு வைத்தால், ஜாடியில் ஈரம் கசியாது.
* நனைந்த மழைக்கோட்டுக்குள், நியூஸ் பேப்பர்களை போட்டு, மடித்து வையுங்கள்; விரைவில், உலர்ந்து விடும்.
* ஆடைகளில் சேறு படிந்தால், உருளைக்கிழங்கை நறுக்கி, சேறு உள்ள இடத்தில் தேய்த்து, பின், துவைத்தால், கறை போயே போச்சு!
* மழைக்காலத்தில், அலுவலகத்திற்கு எடுத்து செல்லும் உணவு விரைவில் குளிர்ந்து விடும். இதைத் தவிர்க்க, டிபன் டப்பாவை மப்ளர் அல்லது கம்பளி துணியில் நன்றாக சுற்றி, காற்று புகாத, 'ஜிப்' வைத்த பையில் போட்டு, எடுத்து செல்லுங்கள்; மதியம் வரை, உணவு சூடாக இருக்கும்.
* மழைக்காலத்தில், பீரோவுக்குள் ஈரக்காற்று இருப்பதால், துணிகள் மற்றும் பட்டுப்புடவைகள் மொர மொரப்பை இழந்து, தொய்வாக காணப்படும். இதை தவிர்க்க, 10 சாக்பீஸ்களை நூலில் கட்டி, பீரோவின் உட்பகுதியில் தொங்க விடுங்கள். இது, உள்ளே இருக்கும் காற்றின் ஈரப்பதத்தை எடுத்து விடும்.
* ஜில்லென்று இருக்கும் துணிகளை மடித்து, கம்பளியில் சுருட்டி, நான்கு மணி நேரம் கழித்து எடுத்தால், வெயிலில் காய வைத்தது போன்று மொட மொடப்பாக இருக்கும்.
* ஸ்கூட்டரிலோ அல்லது சைக்கிளிலோ செல்லும் போது, ஈரக் காற்று மார்பில் பலமாக அடிக்கும். இதை தவிர்க்க, நியூஸ் பேப்பரை நான்காக மடித்து, பனியனுக்குள் வைத்து, பனியனை, 'இன்' செய்து, சட்டை அணிந்தால், குளிர் காற்றின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். ஸ்வெட்டரை தூக்கிக் கொண்டு அலைய வேண்டாம்.
* தீப்பெட்டி நமத்து போயிருந்தால், அரிசி மாவை அதன்மீது பூசி, பின், தீக்குச்சியை உரசினால், 'சட்' என்று பற்றிக் கொள்ளும்.
* இடி மற்றும் மின்னல் அடிக்கும் போது, சிலநேரங்கில், 'டிவி' பாதிப்படையும். இதைத் தவிர்க்க, பவர் பிளக் மற்றும் ஆன்டெனா பிளக் இரண்டையும், கழற்றி விடுங்கள்.
* மழைக்காலம் ஆரம்பித்தாலே, கொசுக்களின் ஆதிக்கமும் துவங்கி விடும். இதிலிருந்து தப்பிக்க, நெருப்பில், வேப்பிலை போட்டு, புகை போடலாம் அல்லது 'ஆல் அவுட்' காலி பாட்டிலில், வேப்பெண்ணையை நிரப்பி, 'ப்ளக்'கில் சொருகி விட்டால், கொசுக்கள், வெகுதூரம் பறந்தோடி விடும். வேப்பெண்ணெய் வாடை பிடிக்காதவர்கள், அதில் இரண்டு அல்லது மூன்று சொட்டு, 'சென்ட்' கலந்து, பாட்டிலில் நிரப்பி விட்டால், வீடு கமகமக்கும்; கொசு தொல்லையும் இருக்காது.

மழைக்காலத்தில் பெரும்பாலும், வாகனங்கள் அடிக்கடி பழுதாவது வழக்கம். அவற்றை தவிர்க்க...
* மழையில் வாகனங்கள் நனைவதை முதலில் தவிர்க்க வேண்டும். மழைக்காலம் மட்டுமல்லாது, எல்லா காலங்களிலும் வாகனங்களை மூடி வைப்பது, அனைத்து சேதங்களிலிருந்தும் வாகனங்களை பாதுகாக்கும்.
* தண்ணீர் அதிகமாக இருக்கும் இடங்களில், வாகனங்களை செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், ஏதாவது சிறு கற்கள் மற்றும் பள்ளங்களால், டயர் பஞ்சர் ஆகலாம். மேலும், அலாய் வீல் வளைய, வாய்ப்புகள் உண்டு.
* 'சைலன்சர்' நீரில் மூழ்கி விட்டாலும், வண்டி உடனே நின்று விடும். இச்சமயத்தில், 'ஸ்டார்ட்' செய்யக்கூடாது. மெக்கானிக் உதவியுடன், இன்ஜினை நன்றாக, உலர வைத்து, பின் உபயோகிக்கலாம்.
* மழைக்காலங்களில் மட்டுமில்லாமல், மற்ற நாட்களிலும், 'ஸ்பார்க் ப்ளக்'கை அடிக்கடி பரிசோதித்து மாற்றுவது நல்லது. இது பழுதடைந்தால், வாகனம் உடனே நின்று விடும்.
* வாகனங்கள் அதிக நேரம் மழையில் நனைந்தால், ப்ரேக் மற்றும் க்ளட்ச் போன்றவற்றின் அடிப்பாகங்கள், இறுக்கமாவதுடன், துருப்பிடிக்கும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts