லேபிள்கள்

வியாழன், 24 செப்டம்பர், 2015

நன்றாக தூங்குவதற்கு சிறந்த வழிகள்

நன்றாக தூங்குவதற்கு சிறந்த வழிகள்

தூக்கமின்மை காரணமாக மனிதனுக்கு 80 வகையான பிரச்சினைகள் ஏற்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கார் விபத்துக்களில் 33 சதவீதமான விபத்துக்கள் சரியான தூக்கம் இல்லாததால் தான் ஏற்படுகின்றன. இன்றைய காலத்தில் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

குறிப்பாக சாக்லெட், இனிப்புகள் மற்றும் ஐஸ்க்ரீம் போன்றவற்றை சாப்பிட்டால், மனம் சந்தோஷம் அடைகிறதே தவிர, சரியான தூக்கம் மட்டும் வருவதில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா- அவைகளில் கார்போ ஹைட்ரேட் அதிகமாக உள்ளது. கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், அவை தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

எனவே தான் இரவில் தூங்கச் செல்லும் முன், இந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று கூறுகின்றனர். மேலும் தூக்கமின்மை அதிக வேலைப் பளு மற்றும் குடும்பப் பிரச்சனைகளால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாகவும் தடைபடும். எனவே என்னதான் பிரச்சினை இருந்தாலும், உடலைப் பாதுகாக்க வேண்டியது நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்.

எனவே அதனை உணர்ந்து, பிரச்சனையைக் கண்டு அஞ்சாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தது 8 மணிநேர தூக்கம் மிகவும் இன்றியமையாதது என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். இருந்தாலும் சில நாட்களில் இந்த 8 மணிநேரத் தூக்கம் நமக்கு இல்லாமல் போய்விடும். அப்படிப்பட்ட நாட்களுக்கு மறுநாள் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாமல், ஒருவித வருத் தத்துடனேயே மனம் மற்றும் உடல் இருக்கும்.

ஆகவே தூக்கமின்மை எதற்கு வருகின்றது என்று ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டு, அதனை சரிசெய்ய முயல வேண்டும். ஆரோக்கிய மற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுகளால் கூட தூக்கமின்மை ஏற்படும். அத்தகைய உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை தவிர்த்து வந்தால், சரியான தூக்கத்தைப் பெறலாம். முதலில் தூக்கத்திற்கும் தண்ணீருக்கும் உள்ள தொடர்பைத் தெரிந்து கொள்ளலாம்.

அதிகமான தண்ணீர் குடிப்பது நல்லது தான். ஆனால் காலை மற்றும் மதிய வேளையில் தான் தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். மாலை மற்றும் இரவு வந்தால், தண்ணீர் குடிக்கும் அளவு குறைவாக இருக்க வேண்டும். இல்லையெனில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரும். அதனால் நமது உறக்கம் தடைபடும். அடுத்து காப்பைன் உணவுகள் எப்படி நமது உறக்கத்தை பாதிக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம்..

ஒவ்வொருவரும் தினமும் ஏதாவது ஒரு வடிவில் காப்பைன் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வோம். அதிலும் டீ, காப்பி, சாக்லேட் மற்றும் ஊக்க பானங்கள் போன்றவற்றை நிச்சயம் சேர்ப்போம். இத்தகைய உணவுப் பொருட்களில் தான் காப்பைன் அதிகம் உள்ளது. இவை நம்முடைய நரம்புகளைத் தூண்டி மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பது போல் ஒரு உணர்வை ஏற்படுத்தும்.

ஆனால் உண்மையில் அந்த சுறுசுறுப்பு சோர்வின் வெளிப்பாடு தானே தவிர உண்மையான புத்துணர்ச்சி அல்ல. அதனால் காப்பைன் அதிகமாக இருக்கும் பானங்களை அளவோடு அருந்துவது நமது உறக்கத்திற்கு நல்லது. மது அருந்தினால் உடலில் வறட்சி ஏற்பட்டு, தூக்கத்தை ஏற்படுத்தும் செரோட்டின் அளவு குறையும். அதனால் சரியான தூக்கம் இல்லாமல், அடிக்கடி நடு இரவில் எழுவது போன்றவை ஏற்படும்.

புரோட்டீன் உணவுகள்..........

 புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளான மாட்டு இறைச்சியை, இரவில் படுக்கும் போது சாப்பிட்டால், அவை செரிமானம் ஆவது கடினமாகிவிடும். அதனால், செரிமான செயல்பாடுகளால், செரோட்டின் உற்பத்தியானது தடைபட்டு, தூக்கம் தடைபடும். வாயு மற்றும் நெஞ்செரிச் சலை ஏற்படுத்தும் உணவுகளைச் சாப்பிட்டு தூங்கினால், வயிறு உப்புசத்துடன் இருப்பதோடு, நல்ல தூக்கம் வருவது நின்றுவிடும்.

எனவே தூக்கம் நன்கு வரவேண்டுமெனில் கார உணவுகள் மற்றும் வாயுவை ஏற்படுத்தும் உணவுகளான பட்டாணி, பீன்ஸ் மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் குழந்தை பருவம் மகிழ்ச்சி யாக அமையாதவர்களுக்கு, நடுத் தர வயதில், இதயநோய் வர வாய்ப்பு அதிகம் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், சமீபத்தில், 377 பேரிடம் நடத்திய ஆய்வில், குழந்தை பருவத்தில் அதிகமான மன அழுத்தத்துக்கு ஆளாகுபவர்களுக்கு, அவர்கள் நடுத்தர வயதாகும் போது, இதயநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஏழு வயதில், அதிகமான மனச்சுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு, அவர்களின் நடுத்தர வயதில், இதயநோய் வருவதற்கு, 31 சதவீதம் வாய்ப்பு உள்ளது, என்கிறது அந்த ஆய்வு. அதே சமயம், ஆண்களுக்கு, 17 சதவீதமே வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குழந்தை பருவத்தில், நல்ல கவனிப்பும், மகிழ்ச்சியான சூழலும் அமைபவர்களுக்கு, இதயநோய் வர வாய்ப்பு குறைவு என்கிறது இந்த ஆய்வு.

முறையான தூக்கமின்மையானது மனித உடலின் செயற்பாட்டை கடுமையாக பாதிக்கவல்லது என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், தொடர்ந்து ஒருவார காலத்திற்கு ஒரு நாளைக்கு ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும்படி செய்யப்பட்டபோது சம்பந்தப்பட்டவர்களின் மரபணுக்களில் நூற்றுக்கணக்கானவற்றில் கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டதாக இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

 இந்த ஆய்வுக்காக 26 பேரை ஒரு வார காலம் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் தூங்கவைத்து அவர் களின் ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்தனர். அடுத்து இவர்களை ஒருவார காலத்துக்கு ஆறுமணிக்கும் குறைவாக தூங்கவைத்து அதன்பிறகு அவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்தனர்.

இதில் எழுநூற்றுக்கும் அதிகமான மரபணுக்கள் மாற்றமடைந்திருப்பதை இவர்கள் கண்டறிந்தனர். குறிப்பாக மனிதர்களின் அன்றாட செயற்பாட்டுக்கு பெரிதும் தேவைப்படும் மரபணுக்களில் இந்த மாற்றங்கள் கூடுதலாக இருப்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே போதுமான தூக்கமின்மையானது, மனிதர்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக தூக்கமின்மை காரணமாக, இதயநோய்கள், சர்க்கரை நோய், கூடுதல் உடல் பருமன், குறைவான மூளைச் செயற்பாடு ஆகியவை உருவாகலாம் என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே ஆரோக்கியமான வாழ்வை விரும்புபவர்கள் அவசியம் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்கவேண்டும் என்பது இவர்களின் அறிவுரை..
நன்றி: www.muruganandam.in

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts