நம்மில் பலருக்கு டீயில் பிஸ்கட்டை தொட்டு சாப்பிடும் பழக்கம் இருக்கும். இனி இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.
டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
1) பிஸ்கட்டில் ஹைட்ரோஜினேட்டட் கொழுப்பு அதிகமாக இருக்கும். நீங்கள் பிஸ்கட்டை நீண்ட காலமாக டீயில் தொட்டு சாப்பிடுபவராயின், அது உடல் பருமன் மற்றும் சரும பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
2) சர்க்கரை நிறைந்த பிஸ்கட்டை டீயில் தொட்டு நீண்ட காலமாக சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும்.
3)பொதுவாக சர்க்கரை நிறைந்த உணவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும்.
4) பிஸ்கட்டில் சர்க்கரை அதிகம் உள்ளது. எனவே பிஸ்கட்டை நீண்ட காலமாக டீயில் தொட்டு சாப்பிட்டால், அது நோயெதிர்ப்பு சக்தியைக் குறைத்து பலவீனமாக்கிவிடும்.
5) பிஸ்கட்டுகளானது சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
இதில் நார்ச்சத்து சுத்தமாக இல்லை. ஆகவே பிஸ்கட்டை டீயில் தொட்டு சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
6) பிஸ்கட்டில் சர்க்கரை அதிகம் உள்ளது. தினமும் பிஸ்கட்டை சாப்பிட்டால், அது பற்களின் எனாமலை சேதப்படுத்தும். இதன் விளைவாக பற்களில் துவாரங்கள் உருவாகி, பல் சொத்தையை உண்டாக்கும்.
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக