லேபிள்கள்

செவ்வாய், 16 ஏப்ரல், 2024

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா -1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்படுத்தினால், விரைவாக சோர்வடையும் நிலை ஏற்படும்.

ஐடியா -2 : முட்டை அவிக்கும்போது குறுகிய பாத்திரத்தை பயன்படுத்தலாம். இதனால் முட்டை எளிதில் உடையாது. முட்டை வேகும்போது சிறிது சோடா உப்பை பயன்படுத்தினால் முட்டை பதமாக வேகும்.

ஐடியா -3 :ரசம் வைக்கும்போது புளி கரைசலை ஊற்றுவதற்கு முன்பு மற்ற பொருட்கைளை எல்லாம் கொதிக்கை வைத்து பச்சை வாசனை போன பின்னர் புளி கரைசலை ஊற்றினால், சூப்பரான மற்றும் சூப் போன்ற ரசம் கிடைக்கும்.

ஐடியா -4 : வாணலியில் எண்ணெய்விட்டு வெங்கயம் பச்சை மிளகாய், தக்காளி, ஆகியவற்றை ஒன்றாக போட்டு வதக்கி சூடான சாதத்துடன் ஊறுகாய் வைத்து சாப்பிடலாம். உடனடி சாதம் ரெடி

ஐடியா -5 டீ போடும்போது சிறிது இஞ்சி, ஏலக்காய் மற்றும் புதினா இலைகளை சேர்த்து குடித்தால், தலை சுற்றல் உள்ளிட்ட நோய்களுக்கு தீர்வாக அமையும்

ஐடியா -6 : இட்லி தட்டில் துணியை வைத்து மாவை ஊற்றுவதை விட மாவை இட்லி தட்டில் ஊற்றிவிட்டு அதன்மேல் துணியை வைத்து வேகவைத்தால் இட்லி கொஞ்சம் கூட ஒட்டாமல் வரும் துணி கழுவுவதற்கும் எளிதாக இருக்கும்

ஐடியா -7 : சைவ மற்றும் அசைவ வகை குருமா வகைகளுக்கு தேங்காய் சேர்ப்பது மட்டுமல்லாமல், சீரகம் தேங்காய் மிளகு சேர்த்த அரைத்து சேர்த்தால், அசைவம் சுவையாக இருக்கும்.

ஐடியா -8 : வீட்டில் பள்ளிகள் தொல்லை இருந்தால், பல்லி வரும் இடத்தில் மயில் தோகைகளை வைத்தால், அந்த பக்கம் பல்லிகள் வராது

ஐடியா -9 : மோர் குழம்பு செய்யும்போது அடுப்பை குறைவாக வைத்து கொதிக்க வைத்தால் மோர் திரியாமல் இருக்கும். அரைத்த விழுதினை வதக்காமல் மோரில் ஊற்றினால், மோர் திரியாமல் இருக்கும்.

ஐடியா -10 : கோதுமை மாவுடன் கொஞ்சம் நெய்விட்டு பிசைந்தால், சப்பாத்தி மாவு மிகவும் மிருவாக கிடைக்கும. மேலும் நீண்ட நேரத்திற்கு மிருதுவாகவும், சப்பாத்தி பஞ்சு போலவும் கிடைக்கும்.



--

சனி, 13 ஏப்ரல், 2024

சமையலறைக் குறிப்புகள்.

சர்க்கரை டப்பாவில் எறும்பு மொய்க்காமல் இருக்க

நமது சமையலறையில் 'சர்க்கரை' முக்கிய இடத்தை பிடிக்கும் பொருள். ஆனால், இவை சேர்த்து வைக்கப்பட்டுக்கு உள்ள டப்பாவில் எறும்புகள் அடிக்கடி மொய்ப்பதுண்டு. அவை வராமல் இருக்க, அந்த டப்பாவில் மூன்று அல்லது நான்கு ஏலக்காய்களை போட்டு வைத்தால் எறும்புகள் அண்டாது.

தேங்காய் எண்ணெயில் வாடை வராமல் இருக்க

தேங்காய் எண்ணெயை கடையிலிருந்து வாங்கி வந்த பிறகு, அவற்றில் 10 மிளகு போட்டு வைத்துவிட வேண்டும். இப்படி வைத்துவிட்டால் 6 மாதங்களுக்கு பிறகும் எண்ணெய் பிரஷ்ஷாக இருக்கும். இந்த எண்ணெயை நீங்கள் தாராளமாக தலையில் தேய்த்து வரலாம்.

வெஜிடபிள் கட்டரை சுத்தம் செய்ய

நாள்பட்ட வெஜிடபிள் கட்டரை சுத்தம் செய்ய அவற்றின் மீது சோடா உப்பு தூவி, எலுமிச்சை பழ சாறு பிழிந்து வைத்துக்கொள்ளவும். பிறகு எலுமிச்சம் பழத்தோலைக் கொண்டு அவற்றின் மீது நன்றாக தேய்த்துக்கொள்ளவும். 5 நிமிடங்கள் ஊறவைத்து பின் கழுவினால் இப்போது பளபளப்பாக இருக்கும்.

பிஸ்கட் கெடாமல் இருக்க

பிஸ்கட்டை பாட்டிலில் போட்டு மூடியை டைட்டாக மூடி வைத்தாலும் அவை எளிதில் கெட்டு போய்விடுகிறது அல்லது நமத்துப் போய்கிறது. இதைத் தடுக்க அந்த பாட்டிலில் ஒரு ஸ்பூன் அரிசியை போட்டு வைத்தல் போதுமானது.

எலுமிச்சை சாறு அதிகம் கிடைக்க

எலுமிச்சை பழத்தை சாறு பிழிவதற்கு முன், அவற்றை வெந்நீரில் இட்டு சிறிது நேரம் கழித்து பிழிந்தால் வழக்கத்தைவிட நிறையச் சாறு கிடைக்கும்.

ஃப்ரிட்ஜில் மாவு பொங்காமல் இருக்க

உங்களது ஃப்ரிட்ஜில் உள்ள இட்லி மாவு பொங்கி வழியும் பிரச்சனை இருந்தால், அந்த மாவின் மேல் வாழை இலையை சிறுசிறு துண்டுகளாக வெட்டி கவிழ்த்து போட்டு வைக்கவும். இது மாவு பொங்கி வருவதை தடுக்க உதவும்.

கருணைக் கிழங்கில் உள்ள அரிப்பு நீங்க

கருணைக் கிழங்கை வேக வைக்கும்போதே அதில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், சிறிய நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து வைக்கவும். இப்படி வேக வைக்கும்போது அதில் இருக்கும் அரிப்பு நீங்கும்.



--

செவ்வாய், 9 ஏப்ரல், 2024

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுவது ஏன்?

வெயில் காலத்தில் தான் உடல்சூடு அதிகமாகும் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் குளிர்காலத்தில் தான் சூடு அதிகரிக்கும்.

அதனால் சிறுநீர் கழிக்கும்போது நீர்க்கடுப்பு ஏற்படும். வலி எரிச்சல் உண்டாகும். அதை வீட்டிலேயே சின்ன சின்ன விஷயங்களின் மூலமாக சரிசெய்து கொள்ள முடியும். அது எப்படி என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

UTI என்பது சிறுநீரக பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் ஒரு நோயாகும். சிறுநீரகம், சிறுநீர் வடிகுழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரக குழாய், போன்ற பகுதிகளில் பாக்டீரியாக்கள் நுண்மம் தாக்குவதால் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுகிறது.

சிறுநீர் பாதை நோய் தொற்றுக்கு காரணம்

சிறுநீர் பாதை நோய் தொற்றுக்கு முக்கிய காரணம் நாம் அனைவரின் உடலிலும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் மற்றும் தீமை செய்யும் பாக்டீரியாக்கள் இரண்டும் உள்ளன. நாம் ஆரோக்கியமாக இருக்கும் போது பாக்டீரியாக்களின் சமநிலை பேணப்படுகிறது. நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது தீங்கு செய்யும் பாக்டீரியாக்கள் நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்றன. மற்றுமொரு காரணம் நீரிழப்பு நாம் வெப்பப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகிறோம் நமது உடலில் நீர் இழப்பை சரி செய்ய அதற்கேற்றார் போல் தண்ணீர் குடிக்க வேண்டும் போதிய அளவு நீர் குடிக்க வில்லை என்றால் நீர் இழப்பு ஏற்பட்டு சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும். சிறுநீர்ப்பையில் சிறுநீர் வெகு நேரம் அடக்கி வைத்தலும் நோய் தொற்றுக்கு காரணமாகும். வேலைக்கு செல்வோர், வெளியில் செல்வோர், கழிவறையை பயன்படுத்தாமல் சிறுநீரை அடக்கி வைத்திருந்தாலும் பாதிப்பு ஏற்படும்.

திருமணமான புதிதில் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுவது

ஏன் ? (Honeymoon Cystitis)

திருமணமான புதிதில் ஏராளமான பெண்கள் இந்த பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். நமது ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமானது. நமது ஒவ்வொருவரின் உடலிலும் உடலுக்கு ஏற்றார்போல் பாக்டீரியாக்கள் உள்ளன. திருமணமான புதிதில் உடலுறவின்போது ஆணின் உடலில் உள்ள பாக்டீரியாக்களால் பெண்களுக்கு அலர்ஜி ஏற்பட்டு சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும். இதனால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படலாம். இதைப்போன்று பெண்ணின் பாக்டீரியாக்களால் ஆணுக்கு பாதிப்பு ஏற்படலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி பாக்டீரியா நோய்த் தொற்று எதிர்ப்பு மாத்திரைகளை (antibacterial tablet) எடுத்துக் கொள்வதன் மூலம் இதை எளிதில் குணமாக்கலாம்.

சிறுநீர் பாதை நோய் தொற்றுக்கான அறிகுறிகள்

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் மற்றும் வலி ஏற்படுவது ஏன் ?

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் வலி ஏற்படுதல். அடிக்கடி சிறுநீர் கழித்தல் அதாவது ஒரு மணி நேரத்தில் மூன்றில் இருந்து நான்கு முறை சிறுநீர் கழிப்பது. கவனிக்காமல் இருந்தால் நாளடைவில் அதிக காய்ச்சல், அடிவயிற்றில் வலி, சிறுநீர் கழிக்கும்போது நாற்றம் மற்றும் சிறுநீருடன் ரத்தம் வெளியேறலாம்.

சிறுநீர் பாதை நோய் தொற்று தடுப்பது எப்படி ?

சிறுநீர் பாதை நோய் தொற்று எளிதில் வராமல் தடுக்கலாம். தினமும் இரண்டரை லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலம் பலவிதமான பிரச்சினைகளில் இருந்து உடலை பாதுகாக்கலாம். மது அருந்தும் பழக்கத்தை கைவிடுதல், காபி, டீ, குளிர்பானங்களுக்கு பதிலாக இயற்கையில் கிடைக்கும் இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். நாலு மணி நேரத்திற்கு ஒரு முறை அல்லது தோன்றும்போது சிறுநீரை அடக்காமல் சிறுநீர் கழிக்க வேண்டும். இதனால் சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். பருத்தியில் ஆன உள்ளாடைகள் அணிவது, உடலுறவிற்கு பிறகு சிறுநீர் கழிப்பது போன்றவை சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் சிறுநீர் பாதை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பைத் தரும்



--

சனி, 6 ஏப்ரல், 2024

மீன்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கடலுக்கு அடியில் நம்மால் நம்ப இயலாத வகையிலான பல உயிரினங்கள் வாழ்கிறது. இதில் மீன் வகைகள் மிக முக்கியமானது. மீன்கள் உருவாகி, சுமார் 50 கோடி வருடங்கள் ஆகிறது என்று கூறப்படுகிறது. முதுகெலும்பு உடைய பிற உயிரினங்களை விட மீன்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.

மீன்கள் குளிர் ரத்தப் பிராணிகள். மீன்களின் உடல் வெப்பநிலை, அவை வாழும் நீரின் வெப்பநிலையை பொறுத்து மாறுபடுகிறது. மீன்கள் அனைத்திற்கும் துடுப்புகள் உண்டு. மீன்களின் செதிள்கள், அவற்றின் உடல் பாதுகாப்பிற்கு உதவுகிறது.

மீன்களில் சுமார் 22,000 வகைகள் இருக்கிறது.

ஒவ்வொரு மீன் வகையும், நிறம், வடிவம் மற்றும் எடை போன்றவற்றால் வேறுபடுகிறது. மீன்களுக்கு நுரையீரல் இல்லை. எனவே, அவை தன் வாயால், நீரை உறிந்து அதில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு செவில்கள் வழியே கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றும்.

மீன்களுக்கு இமைகள் இல்லாததால், கண்களை திறந்தவாறே தூங்கும். ஆழ் கடலில் வாழும் மீன்கள், தூங்குவதில்லை. மீன்களால் நீரில் உண்டாகும் சிறு அதிர்வுகளையும் துல்லியமாக உணர முடியும்.

மிகவும் சிறிதாக இருக்கும் மீன் கோபி. இதன் எடை 13 மில்லி மீட்டர். நுரையீரல் மீன்கள், நுரையீரல் வழியே சுவாசிக்கிறது. ஆழ் கடலில் ஒளியை உமிழக்கூடிய மீன்கள் வாழ்கின்றன.

பறக்கும் மீன்கள் குறிப்பிட்ட தூரம் தாவிச்செல்லும். மிகவும் அதிக வேகத்தில் செல்லக்கூடிய மீன்கள் Seil Fish. சூரிய மீன், கோடிக்கணக்கில் முட்டைகள் இடும். 

Puffer fish தட்டையாக இருக்கும். ஆனால், எதிரிகளை கண்டால் தண்ணீரை குடித்து உருண்டையாக மாறிவிடும். அதனை பார்த்து எதிரிகள் பயந்து ஓடி விடும். 



--

புதன், 3 ஏப்ரல், 2024

Fish oil மாத்திரை விட்டமின் டி குறைபாட்டை போக்க உதவுமா? நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.


மீன் மாத்திரையை மருத்துவர்கள் பல பிரச்னைகளுக்காக பரிந்துரைப்பார்கள்.

ஆனால் அது எதற்காக , ஏன் என யோசித்தது உண்டா..? இதற்கான விடைதான் இந்தக் கட்டுரை.

மீன் மாத்திரையானது பண்ணா மீன் ( Cod fish ) எனப்படும் ஒரு வகையான மீனின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படுகிறது. எனவே இதை Cod Liver Oil என்றும் அழைப்பார்கள். இதில் வைட்டமின் A, வைட்டமின் D மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக இருக்கிறது.

வைட்டமின் D சத்துக் குறைபாடு பலருக்கும் உண்டு என்பதால் இந்த மாத்திரை பலருக்கும் பரிந்துரைக்கப்படும். இந்த வைட்டமின் D யானது உணவில் உள்ள மற்ற ஊட்டச்சத்துகளை உறிஞ்சி உறுப்புகளுக்கு அனுப்ப உதவுகிறது.

குறிப்பாக கால்சியம் சத்து, நோய் எதிர்ப்பு சக்தி, செல்களின் வளர்ச்சி ஆகிவற்றை பிரதானமாக அளிக்கிறது. எனவேதான் வைட்டமின் D நிறைந்த மீன் எண்ணெய் மாத்திரை அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.

வைட்டமின் A கண்களுக்கு நல்லது. கண் பார்வையை கூர்மையாக்க உதவுகிறது.

Omega 3 fatty acid என்பது கெட்டக் கொழுப்புகளை சேர விடாமல் குறைக்க உதவுகிறது. இதனால் உடல் எடையும் குறையும்.

இவை தவிற வைரஸை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் தடுத்து அடியோடு அழிக்க உதவுகிறது.

எனவேதான் மருத்துவர்கள் மீன் மாத்திரையை அதிகம் பரிந்துரைக்கின்றனர். எனினும், இதை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தாமாக வாங்கி உண்பது ஆபத்தை விளைவிக்கும்.



--

வெள்ளி, 29 மார்ச், 2024

உங்கள் பைக்கை நீங்களே பராமரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள்.

 மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு அதை பற்றிய அனைத்து விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

எனவே எப்போதுமே மெக்கானிக்கிடம் எடுத்து சென்று பைக்கை நீட்டுவது நம் அனைவருக்கும் வழக்கமான ஒன்று. ஏனென்றால் கற்று கொள்ள பைக் ஒன்றும் விலை குறைந்த பொருள் அல்லவே.. விலை உயர்ந்தது என்பதால் சிறிய ரிப்பேர் என்றால் கூட மெக்கானிக்கிடம் எடுத்து செல்கிறோம்.

எனினும் பைக் ஓட்டுபவர்கள் தங்கள் பைக்கின் இயக்கவியல் மற்றும் அவை எவ்வாறு வேலை செய்கின்றன என்பது போன்ற அடிப்படையை அறிந்து வைத்திருப்பது அவற்றை பராமரிக்க மற்றும் பயணங்களை சிறப்பாக்க மேலும் உதவும். உங்கள் பைக்கை தலை முதல் கால் வரை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து என்னென்னெ பார்ட்ஸ்கள் எப்படி வேலை செய்கின்றன, அவற்றை நாமே எவ்வாறு சிறந்த முறையில் பராமரிப்பது என்பன உள்ளிட்ட சில விஷயங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பைக்கை சுற்றி நடை.. இது வேடிக்கையாக இருந்தாலும் உங்கள் பைக்கை நீங்கள் முற்றிலும் சுற்றி அனைத்து பார்ட்ஸ்களையும் பார்த்தது எப்போது என்று யோசியுங்கள்.. நீங்கள் தொடர்ச்சியாக பைக்கை பயன்படுத்துவதால் அதில் உள்ள அனைத்தும் படிப்படியாக சிறிது சேதமடைந்து இருக்கலாம் அல்லது தேய்ந்து இருக்கலாம். உங்கள் பைக்கை நீங்கள் முழுமையாக ஆய்வு செய்யும் போது கவனிக்கப்பட வேண்டிய குறைபாடுகளை அவை தீவிரமாவதற்கு முன்னே உங்களுக்கு வெளிப்படுத்தலாம். ஏதேனும் லீக் இருக்கிறதா என்று பார்க்கலாம், ஃபோர்க் லோயர்களில் காணப்படும் ஆயில் ஃபெயிலிங் ஃபோர்க் சீலை குறிக்கிறது.

டயர்களில் பிரஷரை செக் செய்யவும்: நீங்கள் உங்கள் பைக்கில் பாதுகாப்பாக பயணம் செய்ய போகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த உங்கள் பைக்கின் டயர் பிரஷரை செக் செய்வது முக்கியம். தாயாரின் பிரஷர் குறைந்தால் டயர் பிளாட் ஆகிவிடும் அல்லது வேகமாக செல்லும் போது டயர் அடிபடும். இதனால் பைக்கின் பேலன்ஸ் பாதிக்கப்படலாம். பிரஷர் கேஜ் மூலம் உங்கள் பைக் டயர்களில் உள்ள PSI எண்ணை சரிபார்த்து தேவைக்கேற்ப காற்றை நிரப்பவும்.

டிரைவ் செயின் லூப்பிரிகேட்: பைக் எஞ்சினிலிருந்து பின்புற சக்கரங்களுக்கு டார்க்கை மாற்ற டிரைவ் செயின் முக்கிய பொறுப்பு. எனவே இது சரியாக கையாளப்படாவிட்டால் மிகவும் ஆபத்தானது. ஒவ்வொரு ரைடுக்கு பிறகும் டிரைவ் செயின் சூடாக இருக்கு ம்போதே செயினை லூப்பிரிகேட் செய்வது ஒரு ஸ்மார்ட் ப்ராக்டீஸ் ஆகும். இப்படி செய்வதால் செயினின் ஒவ்வொரு இணைப்பிறகும் ஆயில் செல்கிறது. அதே போல செயினின் டென்ஷனை செக் செய்து சரியாக வைத்திருப்பது பைக்கின் ஆயுளை நீட்டிக்கிறது.

என்ஜின் ஆயில் அளவை சரி பார்க்கவும்: எப்போதும் எஞ்சின் ஆயில் அளவை முழுமையாக வைத்திருக்க வேண்டும். பெரும்பாலும் உங்கள் மோட்டார் பைக்கை சென்டர் ஸ்டாண்ட் போட்டு வைப்பது நல்ல. இன்ஜினின் அடிப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள என்ஜின் ஆயில் கிளாஸை செக் செய்து அது முழு கொள்ளளவில் இல்லை என்றால் அதை நிரப்பவும். அதே போல என்ஜின் ஆயில் கருப்பாகி விட்டால் உடனடியாக அதை மாற்றுவது முக்கியம்.

ஏர் ஃபில்ட்டர்: ஸ்ட்ரீட் மற்றும் அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிள்களில் உள்ள ஏர் ஃபில்டர்களை ஒவ்வொரு 5,000 கிமீ-க்கு ஒருமுறை க்ளீன் செய்ய வேண்டும் அல்லது மாற்ற வேண்டும். உங்கள் பைக்கின் ஏர் ஃபில்ட்டர் நிலையை ஆய்வு செய்ய ஏர்பாக்ஸை தூக்கி ஃபில்ட்டரை பிரிக்கவும். ஃபில்ட்டர் தூசி நிறைந்ததாகவும், அடைத்திருப்பது போலவும்தோன்றினால் அதை மாற்றவும் அல்லது சுத்தம் செய்து மீண்டும் பொருத்தவும்.

செவ்வாய், 26 மார்ச், 2024

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.

இரத்த சோகை காரணமாக உடல் மிகவும் பலவீனமாக தோன்றும்.

எப்போதும் சோர்வாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்படும். உடலில் ரத்தம் குறைவாக இருக்கும்போது,   குறிப்பிட்ட வகை உணவுகளை எடுத்துக் கொண்டால் ரத்தம் நன்றாக அதிகரிக்கும். அந்த சூப்பர் உணவுகள் என்னவென்று இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.

பீட்ரூட்: பீட்ரூட் உடலில் இரத்த வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது உடலில் உள்ள அழுக்குகளை நீக்கி இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

ஆப்பிள்: தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் மட்டும் போதும் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்று பலரும் சொல்லுவார்கள். ஆப்பிளில் அனைத்து விதமான நன்மைகளும் உள்ளன. ஆப்பிள் நம்மை ஆரோக்கியமாக வைத்து, ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது.

மாதுளை: ரத்த சிவப்பாக காட்சியளிக்கும் மாதுளை, ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் சோடியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மாதுளம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த வளர்ச்சி அதிகரிக்கும்.

உலர் பழங்கள்: பேரீச்சம்பழம், பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்ற உலர் பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவற்றின் உட்கொள்ளல் படிப்படியாக இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

கீரை: ரத்த அழுத்தம் குறைவாக இருந்தால், கீரையை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது.

சனி, 23 மார்ச், 2024

சூடான காலை உணவு தரும் நம்ப முடியாத பலன்கள்.

பலர் குளிர்ந்த காலை உணவுகளை விரும்பினாலும், செரிமான அமைப்பை புதுப்பிக்க, சூடான உணவை அன்றைய முதல் உணவாக ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.

ஆயுர்வேதத்தின் படி, காலையில் ஒரு சூடான காலை உணவு முக்கியமானது. அன்றைய மிகப்பெரிய உணவை ஜீரணிக்க உடலை தயார்படுத்துகிறது மதிய உணவு. பண்டைய மருத்துவ நடைமுறையானது நமது வளர்சிதை மாற்றத்தின் ஆதாரமாக சூரியனைக் கருதுகிறது மற்றும் அது மதியம் 12 முதல் 2 மணி வரை பிரகாசமாக பிரகாசிப்பதாகக் கருதுகிறது. இது மதிய உணவுக்கு ஏற்ற நேரமாகக் கருதப்படுகிறது.

நாளின் தொடக்கத்தில், வளர்சிதை மாற்றத்திற்கு ஒரு மென்மையான கிக்ஸ்டார்ட் தேவைப்படுகிறது மற்றும் ஒரு சூடான காலை உணவு உணவை நன்றாக ஜீரணிக்க உதவுகிறது மற்றும் உங்கள் குடலை வரவிருக்கும் நாளுக்கு தயார்படுத்துகிறது.

காலையில், சூரியன் உதிக்கின்றது. அதே போல் நமது அக்னியும் (செரிமான நெருப்பு/பசியின்மை) அதன் உகந்த திறனில் செயல்படாது. எனவே, நமது குடலைத் தயார் செய்வதற்காக, நாள் முழுவதும் உணவை ஜீரணிக்க, ஒளியுடன் இருக்க முடியும். மேலும் சூடான காலை உணவு சிறந்தது. ஏனெனில் இது ஜீரணிக்க இலகுவானது மற்றும் உங்கள் குடலை உகந்த செரிமானத்திற்கு தயார்படுத்துகிறது.

வெதுவெதுப்பான காலை உணவு என்பது செரிமான நெருப்புக்கான ஒரு வார்ம்-அப் பயிற்சியைப் போன்றது. இது அதிக வலிமை தேவைப்படும் மதிய உணவை ஜீரணிக்கும் உண்மையான உடற்பயிற்சிக்கு நம் உடலை தயார்படுத்துகிறது.

ஆயுர்வேதம் மதியம் 12 முதல் 2 மணி வரை அதிக மதிய உணவை சாப்பிட பரிந்துரைக்கிறது. ஏனென்றால் சூரியன் வானத்தில் உச்சத்தில் இருக்கும் நேரம் மற்றும் நமது செரிமான திறன் உகந்ததாக இருக்கும்.

குளிர்ந்த காலை உணவு நமது செரிமான அமைப்புக்கு என்ன செய்கிறது?

குளிர்ந்த காலை உணவை உட்கொள்வது, எரியும் நெருப்பில் தண்ணீரை ஊற்றுவது போன்றது. அது எரிவதற்கு உதவுவதை விட அதை அணைத்துவிடும். எனவே, புதிதாக சமைத்த கஞ்சி, சுண்டவைத்த பழங்கள் (ஆப்பிள்/பேரி), காய்கறி சூப் போன்ற சூடான மற்றும் லேசான காலை உணவை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.

இருப்பினும், ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகையில், அதிக பிட்டா உள்ளவர்களுக்கு குளிர்ந்த காலை உணவு சிறந்தது. ஆனால் பிற மக்களுக்கு, சூடான காலை உணவுகள் சிறப்பாக செயல்படும்.

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts