லேபிள்கள்

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

தண்ணீருடன் எந்தெந்த பொருட்களை சேர்த்து பருகலாம்? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

தண்ணீர் மட்டும் குடிப்பதே நல்லது.

மேலும் இந்தத் தண்ணீரோடு சில முக்கியப் பொருட்கள் கலந்து குடித்திட, விதவிதமான வாட்டர் ஃபாஸ்டிங் எடுக்கலாம். ஒவ்வொரு வாட்டர் ஃபாஸ்டிங் ஏராளமான பலன்களைத் தரும். அவரவரின் உடல் கழிவுகளை வெளியேற்றுவதில் 'வாட்டர் ஃபாஸ்டிங்' முறையை கடைபிடிப்பது, முதலிடம். வாட்டர் ஃபாஸ்டிங்கே ஒரு சிகிச்சை என இந்திய மருத்துவமுறைகள் கூறுகின்றன. மாதம் ஒருமுறை இந்த 7 வாட்டர் ஃபாஸ்டிங் வகைகளில் ஏதாவதொரு ஃபாஸ்டிங் இருப்பது நல்லது. என்னென்ன வாட்டர் ஃபாஸ்டிங் எனப் பார்க்கலாமா. மேலும், ஃபாஸ்டிங்காக இல்லாமல் தனது அன்றாட வாழ்வில் முடிந்த நாட்களில் நாம் குடிக்கும் தண்ணீர் பழக்கத்தில் இந்த மாற்றங்களைச் செய்துகொண்டும் பலன் பெறலாம்.

தண்ணீர்

தண்ணீர் உடலுக்கு அவசியம் தேவை. ஆனால், அதிக அளவிலோ குறைந்த அளவிலோ இல்லை. தேவையான அளவில் மட்டுமே. தேவையான அளவை எப்படிக் கண்டுபிடிப்பது என்றால், தாகத்தின் தேவையைப் பொறுத்துத் தண்ணீர் பருகுவது சரியான அளவு. உடலுக்குத் தேவையான அளவும் இதுதான். தாகம் இல்லாமல் இருந்து, அந்நேரம் தண்ணீர் பருகுவது உடலுக்குத் தேவையற்றது. இதனால் சிறுநீரகங்கள் மற்றும் இதன் சார்ந்த உறுப்புகளுக்குக் கூடுதல் சுமையைத் தரும். தண்ணீரைத் தேவையானபோது மட்டும் தாராளமாகப் பருகினாலே பெரும்பாலான நோய்களைத் தவிர்க்கலாம்; ஏற்கெனவே இருக்கும் நோய்களைக் குணமாக்கலாம். ஒரு நாள் முழுக்கத் தண்ணீர் மட்டுமே பருகி, வேற எதுவும் பருகாமல் பசிக்கும்போது நீர் மட்டுமே பருகி எடுக்கும் ஃபாஸ்டிங்தான் 'வாட்டர் ஃபாஸ்டிங்' முறை. உடலில் உள்ள 70% உடல் தொந்தரவுகளை நீக்கிவிடும். மாதம் ஒரு முறை வாட்டர் ஃபாஸ்டிங் எடுக்கலாம். அதிகப் பசி, அலசர் இருப்பவர்களுக்கு இந்த ஃபாஸ்டிங்கை பின்பற்ற முடியாது. அவர்கள் மட்டும் இதைத் தவிர்க்கவும்.

தேன் தண்ணீர்

தண்ணீரில் எந்தச் சுவை கலந்தாலும், அது உணவாகி விடுகிறது. தேன் தண்ணீர் என்பது உணவுதான். வயிறு எரிச்சல், நெஞ்சு எரிச்சல், அடிக்கடி பசி, உணவு எதுக்களித்தல், வாயு பிரச்சனை உள்ளவர்கள் தேன் தண்ணீரைப் பருகிட இந்தப் பாதிப்புகள் குறையும். தேன் தண்ணீரை பசிக்கும்போதெல்லாம் தேவையான அளவு தாராளமாகப் பருகி ஒரு நாள் முழுக்கத் தேன் தண்ணீர் சுவைத்து மட்டுமே விரதம் இருந்து வர உடலில் உள்ள கழிவுகள் கரைந்து வெளியேறும். குறிப்பாக வயிற்றுக் கழிவுகள் வெளியேறிட உதவும். இந்த ஃபாஸ்டிங்கை மாதம் ஒரு முறை எடுக்கலாம். அல்சர், அதிகப் பசி, வயிற்று எரிச்சல், நெஞ்சு எரிச்சல் இருப்பவர்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய ஃபாஸ்டிங் முறை. பசி மிகவும் எடுத்தால் வெள்ளரிக்காய் மட்டும் கூடுதலாகச் சாப்பிட்டு இந்த ஃபாஸ்டிங்கை கடைப்பிடிக்கலாம்.

லைம் வாட்டர்

எலுமிச்சை பழச்சாறு என்பது முழுமையான உணவு. லைம் வாட்டரில் சிறு வேறுபாடுகள் உள்ளது. குடிக்கின்ற தண்ணீரில் எலுமிச்சை பழச்சாறு மட்டும் சேர்த்துக் குடிப்பது 'லைம் வாட்டர்'. சர்க்கரை, உப்பு, தேன் சேர்க்கக் கூடாது. குடிக்கச் சற்று புளிப்பாக இருக்கும். ஆனால் உடலுக்கு நல்லது. அனைத்து கழிவுகளையும் வெளியேற்றும். வெயிட்லாஸ் செய்பவர்கள் முயற்சி செய்யலாம். ஒரு டம்ளரில் 10-15 எலுமிச்சை சாறு சொட்டுக்கள் விட்டுக் குடிப்பதும் நல்லது. தண்ணீருக்குப் பதிலாகத் தாகம் எடுக்கையில் காலை வேளையில் குடித்திட பலன் கிடைக்கும். அனைத்து டாக்ஸிக்களும் வெளியேறும்.

டிடாக்ஸ் வாட்டர்

தண்ணீரில் எலுமிச்சை பழத்தை ஸ்லைஸாக நறுக்கிப் போடவும். மேலும், அதில் இஞ்சி ஒரு இன்ச் அளவுக்கு லேசாகத் தட்டி போடவும். கூடுதலாக ஒரு பட்டை சேர்க்கவும். இதுவும் டிடாக்ஸ் வாட்டராக செயல்படுகிறது. நச்சு நீக்கும் ஃபாஸ்டிங்கின் ஒருமுறைதான். இதில் விதவிதமான டிடாக்ஸ் வாட்டர் தயாரிக்கலாம். வெள்ளரிக்காய், வாட்டர் மெலான், எலுமிச்சை, இஞ்சி, புதினா, பட்டை, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி என விதவிதமான காம்போக்களை பயன்படுத்தி டிடாக்ஸ் செய்யும் பழக்கங்களும் உண்டு.

பிங்க் வாட்டர்

கேரளாவில் பிரபலம். பதிமுகம் எனச் சொல்வார்கள். தண்ணீரில் சிறிது பதிமுகத்தைக் கலந்து குடிக்க, தண்ணீர் பிங்க் கலராக மாறும். இவற்றைக் குடித்திட உடல் குளிர்ச்சியாக்குகிறது என ஆயுர்வேதம் சொல்கிறது. உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. செரிமான மண்டலத்தைச் சீர்படுத்துகிறது. இந்தப் பதிமுகம் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதற்கு 'கேரளா ரெட் வுட் வாட்டர்' என்ற இன்னொரு பெயரும் உண்டு. தண்ணீருக்குப் பதிலாகத் தண்ணீரில் பதிமுகத்தைக் கலந்து தண்ணீராகக் குடிக்கும் பழக்கம் கேரள மக்களுக்கு உண்டு. இங்கும் சில கேரள உணவகத்தில் வழங்கப்படுவதைப் பார்க்கலாம்.

சீரகத் தண்ணீர்

சீரகத் தண்ணீரும் கேரளத்தில் மிக பிரபலம். இங்குத் தமிழ்நாட்டில் சிலர் சீரகத் தண்ணீர் குடிப்பதையே வழக்கமாக வைத்திருக


--

வியாழன், 23 ஏப்ரல், 2026

Fwd: ஹெல்மெட் வாங்கப் போறீங்களா? நீங்கள் கவனிக்க வேண்டியவை!

ஹெல்மெட் வாங்கப் போறீங்களா?

காவலரிடம் பைன் கட்ட வேண்டுமே என கடமைக்காக தினமும் ஹெல்மெட் அணிவோர் தான் அதிகம்..

ஆனால் உயிரை காக்க ஹெல்மெட் அணிவது மிக அவசியம்...

டூவீலர்களை ஓட்டும்போது தேவைப்படும் மிக முக்கியமான பாதுகாப்பு உபகரணம் ஹெல்மெட்தான். ஹெல்மெட் அணிந்துகொண்டால் மட்டும் போதாது. அது, தலையில் சரியாக பொருந்தி உள்ளதா? என்பதை உறுதிசெய்வது மிக முக்கியம்.

அந்த வகையில் ஹெல்மெட்டின் வகைகள் என்ன? அவற்றை எவ்வாறு தேர்வு செய்வது என இப்பதிவில் பார்க்கலாம்.

ஹெல்மெட்.. எவ்வாறு தேர்வு செய்வது?

ஹெல்மெட்டின் விலை எவ்வளவு என்பதை மட்டுமே பிரதானமாக யோசிக்காமல், தங்கள் தலைக்கு அது பொருந்துகிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். (குறிப்பாக தலையோடு தொடர்பில்லாத அளவுக்குப் பெரிதாக இருப்பதையோ, மிகக் கஷ்டப்பட்டு தலைக்குள் நுழைக்க வேண்டி இருப்பதையோ தேர்வு செய்யக்கூடாது).

ஆண், பெண் ஆகிய இருவருக்குமே பொதுவாக முகத்தை முழுவதும் மூடும் ஹெல்மெட்தான் லாங் டிராவலுக்கு சிறந்தது. ஏனெனில் இதுதான் தலைக்கு முழு பாதுகாப்பு அளிக்கிறது. பூச்சி அடிக்காமல் இருக்க அணியப்படும் பாதி ஹெல்மெட் சிறந்தது அல்ல.

ஹெல்மெட் வாங்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் 'ஐஎஸ்ஐ" முத்திரை இருக்கிறதா?... 'டாட்" மற்றும் 'இசிஇ" தரச்சான்றிதழ் பெற்றதா? என்பதை தான்... பைக் ரேஸர்களும் கூட இந்த தரச்சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்களையே பயன்படுத்துகின்றனர்.

ஹெல்மெட்டின் வகைகள் என்ன?

வகை, நிறம், கிராபிக்ஸ், டிசைன் மற்றும் பாதுகாப்பு அளவு என்பதற்கு ஏற்ப, பல்வேறு ஆப்ஷன்களுடன் ஹெல்மெட்கள் விற்பனைக்கு வருகின்றன. ஆனாலும் புல் பேஸ் , ஓபன் பேஸ் மற்றும் மாடுலர்என ஹெல்மெட்களில் மூன்று முக்கியமான வகைகள்தான் உள்ளன.

புல் பேஸ் ஹெல்மெட்கள் ஒட்டுமொத்த தலையையும் கவர் செய்யும். மற்ற வகைகளுடன் ஒப்பிட்டால், இருப்பதிலேயே புல் பேஸ் ஹெல்மெட்கள்தான் மிகவும் பாதுகாப்பானவை.

ஓபன் பேஸ் ஹெல்மெட்கள் ரைடரின் தலையை மட்டுமே கவர் செய்யும். ரைடரின் முகத்திற்கு எவ்வித பாதுகாப்பையும் வழங்காது. ஆனால், ரைடர்களுக்கு சிறப்பான கூலிங்கை இது வழங்கும். இதர வகை ஹெல்மெட்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான பாதுகாப்பையே வழங்கும்.

மாடுலர் ஹெல்மெட்களில் உள்ள பிளிப் ஆப்ஷன் மூலம், இதனை புல் பேஸ் ஹெல்மெட்டாகவோ அல்லது ஓபன் பேஸ் ஹெல்மெட்டாகவோ மாற்றிக்கொள்ள முடியும்.

'எப்போதும் தரமான ஹெல்மெட்களை அணிந்துகொண்டு, பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வதே சிறந்தது



--

ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

தீராத முதுகு வலியைசுலபமாக குணமாக்க உதவும் எளிய வழி முறைகள்


முதுகுவலியால் நாம் போராடும் போதெல்லாம், நமக்கு ஓய்வு தேவை என்று நினைக்கிறோம். ஆனால் எல்லா வகையான முதுகு வலிக்கும் ஓய்வு தேவையில்லை.

அது போன்ற முதுகுவலியை எவ்வாறு அகற்றுவது? முதுகுவலி சில சமயங்களில் தானாகவே சரியாகிவிடும். ஆனால் சிலருக்கு அது காலப்போக்கில் மோசமடைகிறது. அது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் மருத்துவ கவனிப்பைத் தேடுவது மிகவும் முக்கியம்.

ஆரோக்கியமான மற்றும் வலியற்ற முதுகை பராமரிக்க உங்கள் தினசரி பழக்கங்களை நீங்கள் கண்காணிக்க வேண்டும்.

முதுகுவலியைத் தவிர்க்க, மனதில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்:

1. நீண்ட நேரம் உட்காருவதைத் தவிர்க்கவும்

நாம் அனைவரும் நமது வேலை நாட்களின் பெரும்பகுதியை ஒரே நிலையில் அமர்ந்து செலவிடுகிறோம். அப்படி உட்கார்ந்திருப்பது முதுகு வலியை உண்டாக்கும். இடைவெளிகளுக்கு இடையில் நீங்கள் உங்கள் முதுகிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது செயலற்ற தன்மையால் உங்கள் முதுகு தசைகளை பலவீனப்படுத்தும்.

2. மெத்தையை மாற்றவும்

உங்கள் மெத்தை கட்டியாகவோ, கடினமாகவோ, அல்லது பத்து வருடத்திற்கு மேல் பழமையானதாகவோ இருந்தால், அதை மாற்ற வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம். ஒரு மெத்தை உங்கள் முழு உடலையும், குறிப்பாக உங்கள் முதுகெலும்பின் வளைவு மற்றும் சீரமைப்புக்கு ஆதரவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அது அசௌகரியமாக இருந்தால், அது உங்கள் முதுகுத்தண்டில் அழுத்தம் கொடுக்கலாம். இதன் விளைவாக முதுகு வலி ஏற்படும்.

3. நன்றாக தூங்குங்கள்

ஒரு அசௌகரியமான மெத்தையில் தூங்குவது அமைதியின்மையை ஏற்படுத்தும். இதனால் சரியான தூக்கம் இல்லாமல் எழுவதால் முதுகு வலியும் ஏற்படுகிறது.

4. ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்

ஆரோக்கியமான உடல் எடை முதுகுவலியைத் தடுக்க உதவுகிறது. மேலும் உங்களுக்கு முதுகுவலி இருந்தால், நீங்கள் அதிக எடையுடன் இருப்பதால் இருக்கலாம். அதிக எடையுடன் இருப்பது உங்கள் முதுகெலும்பு மற்றும் தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, உடல் எடையை குறைக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்.

5. மோசமான தோரணையைத் தவிர்க்கவும்

உட்கார்ந்த வாழ்க்கை முறை மோசமான தோரணைக்கு காரணமாகும். மோசமான தோரணை உங்கள் முதுகு, முதுகுத்தண்டு மற்றும் இடுப்பில் நிற்கும்போது அல்லது உட்காரும்போது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும், காலப்போக்கில், இந்த தசை சமநிலையின்மை முதுகுவலியை ஏற்படுத்தும். எனவே, நாள் முழுவதும் நகர்ந்து கொண்டே இருங்கள்.

6. புகைபிடிப்பதை தவிர்க்கவும்

புகைபிடித்தல் உங்கள் நுரையீரல் மற்றும் இதயத்திற்கு மட்டுமல்ல, உங்கள் எலும்புகளுக்கும், குறிப்பாக முதுகுத்தண்டுக்கும் தீங்கு விளைவிக்கும். புகைபிடிப்பதால் முதுகுவலி ஏற்படலாம், ஏனெனில் இது கால்சியம் உறிஞ்சுதலைக் குறைக்கிறது மற்றும் புதிய எலும்பு வளர்ச்சியைத் தடுக்கிறது.

7. வழக்கமான உடற்பயிற்சி செய்யுங்கள்

முதுகுவலிக்கு வழிவகுக்கும் சில தவறுகள், வழக்கமான அடிப்படையில் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, அதிக எடையுள்ள எடையைத் தூக்குவது மற்றும் மோசமான தோரணையுடன் உடற்பயிற்சி செய்வது ஆகியவை அடங்கும்.

8. உங்கள் ஊட்டச்சத்து உட்கொள்ளலைக் கட்டுக்குள் வைத்திருங்கள்

போதுமான கால்சியம், வைட்டமின் டி மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கான பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நீங்கள் தொடர்ந்து உட்கொள்ளவில்லை என்றால், உங்கள் முதுகுவலியின் அபாயத்தை அதிகரிக்கலாம்.

9. ஹை ஹீல்ஸ் அணிவதை தவிர்க்கவும்

நீண்ட காலத்திற்கு ஹை ஹீல்ஸ் அணிவது பெண்களுக்கு முதுகு மற்றும் கால் வலியை ஏற்படுத்தும். ஏனெனில் அவை உங்கள் கால்கள் மற்றும் முதுகுத்தண்டில் அழுத்தம் கொடுக்கின்றன.

10. கனமான பைகளை தூக்க வேண்டாம்

உங்கள் தோளில் அதிக எடையை சுமப்பது உங்கள் தோள்பட்டை, கழுத்து மற்றும் முதுகில் வலியை ஏற்படுத்தும்



--

வியாழன், 16 ஏப்ரல், 2026

டிவி வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.

இன்று எவ்வளவு தான் ஸ்மார்ட் போன்கள் வந்தாலும், பலரின் பொழுதுபோக்கு அம்சமாக திகழ்வது என்னவோ தொலைக்காட்சிகள் தான்.

அப்படி நாம் வாங்கக்கூடிய தொலைக்காட்சிகளிலும் சில பல வழிமுறைகள் உள்ளது, எதையும் கவனிக்காமல் டிவிகளை வாங்கிவிட முடியாது. பல விஷயங்களை கருத்தில் வைத்து தான் டிவி வாங்க வேண்டும். சரியான அளவை கண்டறிந்து டிவி வாங்குவது முதல் படியாகும், சில சமயங்களில் நீங்கள் எதிர்பார்த்ததை விட பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ டிவி இருந்துவிடலாம். ஆனால் உங்கள் அறைக்கு எந்த அளவிலான டிவி பொருத்தமாக இருக்கும் என்பதை தெளிவாக தெரிந்த பின்னரே நீங்கள் அதனை வாங்க வேண்டும். ஓரளவு பெரிய அறையில் 55 இன்ச் முதல் 65 இன்ச் வரையிலான டிவிகளை பொருத்திக்கொள்ளலாம்.

ஓஎல்இடி டிவிகள் விலையுயர்வானதாக உள்ளது, அதேசமயம் இது சிறந்த அனுபவத்தை தருகிறது, அதேபோல கியூஎல்இடி டிவிகளும் விலை மிகுதியானவை தான், இதுவும் சிறந்த தரத்தில் உள்ளது. பட்ஜெட் தொகையில் வாங்க நினைப்பவர்களுக்கு உகந்தது எல்இடி அல்லது எல்சிடி டிவிகள் தான், இரண்டு வகையான எல்சிடி பேனல்கள் உள்ளன. எட்ஜ் பேனல்கள் கொண்ட டிவிகளை வாங்காமல் தவிர்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது. சந்தையில் உள்ள 8கே டிவிகள் போதுமான வசதிகளை கொண்டிருப்பதாக தெரியவில்லை, அதனால் நீங்கள் ஹெச்டி மற்றும் 4கே விருப்பங்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஹெச்டி டிவிகள் 1920x1080 பிக்சலையும், 4கே டிவிகள் 3840x2160 பிக்சல்களையும் கொண்டுள்ளது. 4கே டிவிகள், ஹெச்டி டிவிகளை விட நான்கு மடங்கு அதிகமான பிக்சல்களையும் கொண்டுள்ளது.

டிவிக்கு முக்கியமாக ஹெச்டிஎம்ஐ மற்றும் யூஎஸ்பி போர்ட் தேவை, ஹெச்டிஎம்ஐ 4.1க்கு பதிலாக ஹெச்டிஎம்ஐ 2.0 அல்லது ஹெச்டிஎம்ஐ 2.1 டிவியை தேர்வு செய்யலாம். டால்பின் விஷன் கொண்ட டிவிகள் சிறந்த பார்வை தரத்தை வழங்குகின்றன. டிவிக்கு மேலும் முக்கியமானது சிறந்த ஒலி, ஒளி இல்லாமல் படம் பார்ப்பது சிறந்ததல்ல. டால்பி அட்மாஸ் மற்றும் டிடிஎஸ் போன்ற ஸ்பீக்கர்களுக்கு பதிலாக நல்ல ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்ட டிவியை தேர்ந்தெடுப்பது சிறந்ததாகும். ஸ்மார்ட் டிவியில் மூன்று முக்கியமான தளங்கள் உள்ளது, அதாவது ஆண்ட்ராய்டு டிவி, டைசெனோஸ் மற்றும் வெபோஸ் ஆகியன. இந்த மூன்றில் ஆண்ட்ராய்டு டிவி சிறந்ததாக கருதப் படுகிறது.



--

திங்கள், 13 ஏப்ரல், 2026

டீயில் வெல்லம் கலந்து குடிக்கும் பழக்கம் இருந்தால் அதை விட்டு விடுங்கள்.

ஃபிட்னஸ் ஆர்வலர்கள் சர்க்கரையை ஆரோக்கியமான மாற்றுகளான வெல்லம் மற்றும் தேன் போன்றவற்றுடன் மாற்றும் சமீபத்திய டிரெண்ட் உருவாகியுள்ளது.

ஏனெனில் அவை இயற்கையான இனிப்புகள் மற்றும் சர்க்கரை வழங்காத கூடுதல் ஆரோக்கிய நன்மைகள் அவற்றில் உள்ளன. பலர் தங்கள் நாளை வெல்லம் கலந்த தேநீருடன் தொடங்க விரும்புகிறார்கள்.

பழங்கால மருத்துவ நடைமுறையின்படி, மோசமான உணவு சேர்க்கைகள் மோசமான செரிமானத்திற்கு வழிவகுக்கும் மற்றும் உடலில் நச்சுக் கழிவுகளை ஏற்படுத்தக்கூடும். இது செரிமானத்தை மேலும் பாதிக்கிறது. வெல்லத்தில் பல நன்மைகள் உள்ளன மற்றும் வைட்டமின்கள், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை உள்ளன. ஆனால் பாலுடன் அதனை சேர்த்து சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும்.

ஆயுர்வேதத்தின் படி, உணவுகளின் தவறான கலவையானது உங்கள் செரிமானத்தை பாதிக்கும். ஆயுர்வேதத்தில், ஒவ்வொரு உணவுக்கும் அதன் சொந்த குறிப்பிட்ட தரம், சுவை, ஆற்றல், பிந்தைய செரிமான விளைவு மற்றும் பல உள்ளன.

பால் குளிர்ச்சியடையும் போது வெல்லம் சூடாகிறது. மேலும் நீங்கள் ஒரு சூடான உணவுடன் அல்லது ஒரு குளிர் உணவை இணைக்கும்போது, அது பொருந்தாது என்று கூறப்படுகிறது. தேநீருக்கு ஆரோக்கியமான இயற்கை இனிப்பானைத் தேடும் நபர்களுக்கு, நாட்டுச் சர்க்கரையை சிறந்தது.

ஆயுர்வேதத்தின்படி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்ற உணவு சேர்க்கைகள்: வாழைப்பழம் மற்றும் பால், பால் மற்றும் மீன், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி, தேன் மற்றும் நெய். தவறான உணவு சேர்க்கைகள் வீக்கம், தோல் கோளாறுகள் முதல் ஆட்டோ இம்யூன் நோய்கள் வரை பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.



--

வியாழன், 9 ஏப்ரல், 2026

தவிர்க்க வேண்டிய மூன்று 'எஸ்

கெட்ட கொழுப்பு உடலில் சேருவதைத் தவிர்க்க, 'சால்ட்' எனப்படும் உப்பு, 'சுகர்' என்று சொல்லப்படும் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரை, இன்னொரு எஸ், 'சேச்சுரேட்டட் பேட்' எனப்படும் கரையாமல் படியும் கொழுப்பு.

வறுத்த, பொரித்த, முன்கூட்டியே சமைத்து, 'பேக்கிங்' செய்து விற்கப்படும் உணவுகள், மாடு, ஆடு போன்ற விலங்குகளின் மாமிசம் போன்றவை உடலுக்குள் சென்று கெட்ட, கரையாத கொழுப்பாக மாறுகின்றன.முந்திரி, பாதாம் போன்ற 'நட்ஸ்' வகைகள் சாப்பிடும் போது, வறுத்து, உப்பு துாவாமல், அப்படியே சாப்பிட வேண்டும். கோழி இறைச்சியில் புரதம் அதிகம் என்றாலும், வறுத்து, பொரித்தால், கெட்ட கொழுப்பாக மாறும்.



--

வெள்ளி, 3 ஏப்ரல், 2026

பாம்பு அதன்சட்டையை உரிப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா

தோலை உரிக்கும் நிகழ்வு உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான ஒன்று என்றாலும் பாம்பு சட்டை உரிப்பது மிகவும் விசேஷமானது. உடலில் விஷத்தை வைத்திருக்கும் பாம்பின் சட்டையிலும் நஞ்சு இருக்கும் என்ற பயமும் பலருக்கு உண்டு.

மனிதர்களாகிய நமது சருமத்தில் இருக்கும் தோல் திசுக்களும் அவ்வப்போது வெளியில் வந்துக் கொண்டு தானே இருக்கிறது. ஆனால் மனிதர்களுக்கும் பாம்புகளுக்கும் தோல் உரிதலில் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு.

பாம்புகளின் உருவத்திற்கு ஏற்ப அவற்றின் சட்டை இருக்கும். பாம்பு சட்டை உரித்தல் Ecdysis அல்லது moulting என்று அழைக்கப் படுகிறது.

பாம்பின் பழைய தோல் அதன் வளர்ச்சிக்குத் தடையாக மாறும்போது பாம்பின் உடல் தனது சட்டையை அகற்றத் தொடங்கும்.

தனது தோலை உரிப்பதற்கு முன் பாம்புகள் தண்ணீரில் நீந்தும் என்று கூறப்படுகிறது. சருமத்தில் இளக்கத்தன்மையை ஏற்படுத்துவதற்காக இந்த செயல்முறையை பாம்பு செய்யும். அதன்பிறகு, தனது மூக்கை ஒரு கடினமான பாறையிலோ அல்லது மரத்திலோ வைத்து பாம்பு தேய்க்கும்போது, அதன் தோல் உரியத் தொடங்கும்.

இளம் பாம்புகள் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை தோலை உரிக்கும் என்றால், வயதான பாம்புகள் ஆண்டுக்கு 4 முதல் 8 முறை சட்டையை உரிக்கும். அதிக வயதான பாம்புகள் வருடத்திற்கு ஒரு முறை தோலை உரிக்கும். தோலை உரிக்கும் தன்மை என்பது வெப்பத்தைப்பொறுத்தும், அவற்றின் இரை எடுக்கும் தன்மையைப் பொறுத்தும் மாறும்.

ஆனால், தனது தோலை உரிப்பதற்கு முன்னரே உணவைத் தவிர்த்துவிடும் பாம்புகள் பாதுகாப்பான இடத்தில் பதுங்கிவிடும். பாம்பின் உரித்த சட்டை முழுவதுமாக இருந்தால், அது ஆரோக்கியமான பாம்பின் சட்டை என்று கருதப் படுகிறது.



--

வியாழன், 26 மார்ச், 2026

ஆரோக்யமாக வாழகட்டாயம் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்...!


🌟 நாம் அன்றாடம் செய்யும் சில சாதாரண பழக்கவழக்கங்கள் கூட நோய் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இப்பழக்கங்கள் நம் உடல்நலத்தில் சிறிது சிறிதாக பாதிப்பினை ஏற்படுத்தி நம்மை கொல்லும் விஷமாகிறது.

🌟 நம்மில் பல பேரிடம் இருக்கும் கெட்டப்பழக்கம் நகம் கடித்தல் ஆகும். நாம் விரலில் உள்ள நகத்தினை கடிக்கும்போது அதில் உள்ள கிருமிகள் நமது உடலுக்குள் சென்று நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

🌟 நமது விரலில் ஏராளமான கிருமிகள் நிறைந்து இருக்கும். மூக்கு மற்றும் வாயில் நாம் விரலை வைப்பதால் நம் கையில் உள்ள கிருமிகள் உடலுக்குள் எளிதாக சென்று நோய் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

🌟 தரம் குறைவான கண்ணாடியினை பயன்படுத்தி சூரியனை பார்க்கும்போது அதிலிருந்து வரும் ஊதாக்கதிர்கள் நேரடியாக நமது கண்ணின் கருவிழியினை தாக்கி பார்வை குறைபாடுகளையும், சில சமயங்களில் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.

🌟 கால்மேல் கால் போட்டு அமர்வதால் இரத்தநாளங்களில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும், இதனால் உயர் மனஅழுத்தம், நரம்பு சிதைவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

🌟 உச்சி முதல் உள்ளங்கால் வரை போர்த்திக் கொண்டு தூங்கும்போது கார்பன்-டை-ஆக்சைடு அளவுக்கு அதிகமாக அதிகரித்து மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

🌟 தொடர்ந்து செல்போனில் ஹெட்ஃபோனை உபயோகிப்பதால் நோய்தொற்று ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாது, காது கேட்கும் திறனும் குறைகிறது.

🌟 அதிக எடையுள்ள பைகளை நாம் எடுத்து செல்லும்போது நமக்கு தோல் வலி, முதுகு தண்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

🌟 அதிக உயரமுள்ள செருப்புகளை அணியும்போது, குதிகாலில் எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

🌟 காலை உணவானது ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். இதனை தவிர்க்கும்போது உடல் ஆற்றலை குறைத்து, உடல் எடையினை அதிகரிக்க செய்கிறது.

🌟 ஜங்க் உணவுகளை வாரத்திற்கு 4-5 முறை சாப்பிட்டால், உடலில் நிச்சயம் பிரச்சனை ஏற்படும்.

🌟 நண்ட நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளைச் சாப்பிடுவதால் வயிற்று உபாதைகளும், செரிமானப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. கண்களுக்குத் தெரியாத பூச்சிகள் உணவுகளின் மேல் படர்ந்திருக்கும். இது, வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும்.



--

திங்கள், 23 மார்ச், 2026

சோப்பை ஏன் முகத்திற்குஅதிகம் பயன்படுத்தக்கூடாது?

🔵 பொதுவாக முகத்தில் உள்ள அழுக்கை நீக்க சோப்பு பயன்படுத்தி முகத்தை கழுவுவோம். ஆனால் சோப்பை முகத்திற்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது. மேலும் குளிக்கும்போது தவிர, மற்ற நேரங்களில் சோப்பு பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக சரும வகைக்கு ஏற்ப ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தலாம்.

🔵 உடலை சுத்தப்படுத்த பயன்படும் சோப்புகளில் கெமிக்கல்கள் அதிகம் உள்ளது. அதனால் தான் சோப்புகளில் நுரை அதிகம் வருகிறது. மேலும் எந்த சோப்புகளில் நுரை அதிகம் வருகிறதோ அவற்றில் கெமிக்கல் அளவுக்கு அதிகமாக உள்ளது. கெமிக்கல் இருக்கும் சோப்பை முகத்திற்கு அதிகம் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் முற்றிலும் வெளியேறி, சருமம் அதிகம் வறட்சியடையும். மேலும் சிலருக்கு குளித்த பின் சருமம் வறட்சி ஏற்படுவதற்கு முக்கிய காரணமும் இதுவே தான் ஆகும்.

🔵 சோப்புகளை பயன்படுத்தும்போது கெட்ட பாக்டீரியாக்கள் மட்டுமின்றி, நல்ல பாக்டீரியாக்களும் அழிக்கப்படுகின்றன. நல்ல பாக்டீரியாக்கள் நம் சருமத்தில் இருந்தால் தான் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். சோப்புகளை முகத்திற்கு அதிக அளவில் பயன்படுத்தும்போது சருமத்திற்கு பாதுகாப்பு தரும் அடுக்கு அழிக்கப்பட்டு, சருமத்தினுள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் நுழைந்து பல சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

🔵 சோப்பை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் அதிகப்படியான சருமம் வறட்சியின் காரணமாக சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு விரைவிலேயே முதுமைத் தோற்றத்தை பெறக்கூடும். சில நேரங்களில் சோப்புகளும் முகப்பரு வருவதற்கு காரணமாக விளங்கும்.



--

தண்ணீருடன் எந்தெந்த பொருட்களை சேர்த்து பருகலாம்? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

தண்ணீர் மட்டும் குடிப்பதே நல்லது. மேலும் இந்தத் தண்ணீரோடு சில முக்கியப் பொருட்கள் கலந்து குடித்திட , விதவிதமான வாட்டர் ஃபாஸ்டிங்...

Popular Posts