லேபிள்கள்

திங்கள், 23 பிப்ரவரி, 2026

தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

 

சாதாரணமாக வெயில் காலத்தில் உணவு செரிமானமாவதில் சிக்கலிருக்கும். தயிர்சாதம் சாப்பிட்டால் அது மந்தத்தை ஏற்படுத்தி, செரிமானக் கோளாறை இன்னும் அதிகப்படுத்திவிடும்.

அதனால் உடலில் சூடு அதிகமாகிவிடும். வெயில் காலத்தில் உடல் குளிர்ச்சிக்குத் தயிரைவிட மோரைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

தயிரினால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 'நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்கள், முழு தானியங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து தயிரை எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது தனியாக எடுத்தாலும் சரி இதயம் ஆரோக்கியமாக இயங்கும் என ஆய்வில் தெரியவந்தது.

தயிர் என்பது புளிக்கவைக்கப்பட்ட, ஆரோக்கியமான மற்றும் புரோபயாடிக் கொண்ட ஒரு பாலில் இருந்து பிரிக்கப்படும் ஒரு உணவு பொருள் ஆகும்.

தயிர் வடை, தயிர் சாதம், தயிர் பச்சடி, சாஸ் இன்னும் பல இனிப்பு, காரம் மற்றும் சைவம், அசைவம் போன்ற பல உணவு வகைகளில் இதை முக்கிய பொருளாக பயன்படுத்தி அல்லது சேர்த்து பயன்படுத்தப் படுகிறது.

தயிர் நன்மைகள் :

தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தயிர் நன்மைகள்

செரிமானத்தை மேம்படுத்துகிறது :

தயிர் புரோபயாடிக் நுண்ணுயிரிகள் இருப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது வயிறு உப்புசத்தை குறைக்கிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது :

தயிர் சாப்பிடுவது எடை இழப்புக்கு உதவுகிறது. இது ஸ்டீராய்டு ஹார்மோன்கள் அல்லது கார்டிசோலின் வளர்ச்சியைத் குறைப்பதன் மூலம் உடல் பருமன் ஏற்படும் வாய்ப்புகளை கட்டுப்படுத்துகிறது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது :

தயிரில் உள்ள மெக்னீசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

ஆயுர்வேத நிபுணர் டாக்டர் தன்வந்திரி தியாகியின் கூற்றுப்படி, தயிர் மற்றும் சர்க்கரை கலந்து சாப்பிடுவது மூளைக்கு அளிக்கப்படும் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது. மேலும், இது ஆற்றலை மேம்படுத்தி நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

மன அழுத்தத்தை குறைக்கிறது :

தயிரில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், நல்ல கொழுப்புகள் மற்றும் புரோபயாடிக்குகள் மன அழுத்தத்தை சமாளிப்பதில் அல்லது குறைப்பதில் உதவுகிறது.

நுண்ணுயிர் சமநிலை :

தயிரில் ஆக்ஸிஜனேற்றிகளுடன் புரோபயாடிக் நுண்ணுயிரிகளும் இருப்பதன் காரணமாக உடலில் நுண்ணுயிர் சமநிலையை மேம்படுத்துகிறது. மேம்படுத்தப்பட்ட நுண்ணுயிர் சமநிலை செரிமான ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.

தயிர் சாப்பிடுவதால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் :

தயிர் உட்கொள்வது சரும வரட்சியைத்தை தடுத்து ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் தோல் அரிப்பு குணப்படுத்தப் படுகிறது. தோல் ஆரோக்கித்திற்கு அவசிமான ஊட்டச்சத்தை உறுதி செய்கிறது. இதில் உள்ள துத்தநாகம், வைட்டமின் சி மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு நன்மை பயக்கிறது மற்றும் ஊட்டமளிக்கிறது.

எலும்பு, பற்கள் ஆரோக்கியம் :

தயிரில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால் தினமும் உணவில் சேர்த்து கொள்வது பற்களை பலப்படுத்து கிறது. எலும்புகளை வலிமையாக்கி கீல்வாதத்தைத் தடுக்க உதவுகிறது.

இதயத்திற்கு நல்லது :

தினமும் உணவில் தயிரை சேர்த்துக்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தையும் பராமரிப்பதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது :

தயிரில் உள்ள சத்துக்கள் மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கிரேக்க தயிர் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதாகவும், நீரிழிவு நோயாளிகளின் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

தயிர் பயன்கள் :

தயிர் என்பது ஒரு பல்துறை உணவாகும். இதை உணவு பொருட்களிலும், பானங்களிலும், சிற்றுண்டிகளிலும் மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

தயிரை சர்க்கரை அல்லது உப்புடன் சேர்ந்தோ அல்லது தனியாகவோ உட்கொள்ளலாம்.

பல்வேறு வகையான இனிப்பு உணவுகளை தயாரிக்க தயிரை பயன்படுத்தப் படுகிறது.

தயிரில் தாதுச் சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இது பல்வேறு அழகு சாதனப் பொருட்களின் முக்கிய அங்கமாக பயன்படுத்தப் படுகிறது.


--

வியாழன், 19 பிப்ரவரி, 2026

வாட்டி வதைக்கும்தலைவலியைப் போக்க சில எளிய வழி முறைகள்.


தலைப் பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் சீரற்று இருப்பதன் காரணமாகவே, தலைவலி ஏற்படுகிறது.

நமது அன்றாட வேலைகளாலும், மன அழுத்தம் காரணமாகவும் நமக்கு உடல் வலி மற்றும் தலைவலி ஏற்படலாம்.

இது நம்மை மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளிவிடும். சிலருக்கு டென்ஷன் ஆனாலே தலைவலி வந்து விடும்...

இதனை போக்க கண்ட கண்ட மருந்துகளை வாங்கி போட வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சில இயற்கை வழிகளே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

கிராம்பை நன்கு அரைத்து பசை போல் மாற்றி அதை லேசாக சூடேற்றி பின் வலியுள்ள நெற்றியில் தடவினால் தலைவலி உடனே குணமாகும். கல் உப்பிற்கு நீரை உறிஞ்சிக்கொள்ளும் திறன் உள்ளது. மேலும் சிறிது கிராம்பு சிறிது கல் உப்பை பால் கலந்து அரைத்து சாப்பிட்டால் தலைவலி குணமாகும்.

30 கிராம் சீரகப் பொடியை 1 லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து பின் அதை வாரத்திற்கு இருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குணமாகும்.

குங்குமப்பூவை சிறிது பால் சேர்த்து பசையாக்கி நெற்றியில் தடவினால் தலைவலி மறையும். வெற்றிலையை இதமாக சூடேற்றி நெற்றியில் சிறிது நேரம் வைத்தால் தலைவலி குணமாகும்

பட்டையினை பொடியாக்கி நீர் சேர்த்து பசையாக்கி கொள்ள வேண்டும், பின்பு நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.

1-2 இஞ்சியை எடுத்து கொதிக்க வைத்து அந்த நீரில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட தலைவலியை வராமல் தடுக்கலாம்.

சிறிது எலுமிச்சை சாற்றை ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் கலந்து அருந்தினால் தலைவலி குணமாகும், இந்த சாறு வாயு உற்பத்தியை குறைத்து தலைவலியை சரி செய்கிறது.

யூகலிப்டஸ் தைலம் தலைவலிக்கு நல்ல மருந்து ஆகும், இதனைக் கொண்டு மாசாஜ் செய்தால் தலைவலிக்கு உடனே நல்ல தீர்வு கிடைக்கும்.

தலைவலி இருக்கும் போது கொஞ்சம் சூடான பால் குடித்தால் தலைவலி விரைவாக குறையும். சாப்பாட்டில் கொஞ்சம் நெய் சேர்த்து உண்டாலும் தலைவலி குறையும்.

சந்தனத்தை சிறிது தண்ணீர் விட்டு மைபோல மென்மையாக அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி சரியாகும்.


--

திங்கள், 16 பிப்ரவரி, 2026

வேலை நேரத்தில்தூக்கம் வருகிறதா? இதைக் கடை பிடியுங்கள்.


பலருக்கு இன்றியமையாத ஒன்று வேலை. பலரும் பல வேலை பார்த்தாலும் அவர்களுக்குள் இருக்கும் ஒரு ஒற்றுமை வேலை நேரத்தில் வரும் தூக்கம்.

இதனால் பணியாளர்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

தூக்கம் என்பது இயற்கையானதுதான் என்றாலும் வேலை நேரத்தில் வந்தால் அது பெரிய சங்கடத்தை ஏற்படுத்தும். அப்படி வேலை நேரத்தில் வரும் தூக்கத்தை போக்குவதற்கு எளிமையான வழிகள் இருக்கின்றன.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது இயல்பாகவே சோர்வை உண்டாக்கி தூக்கத்தை வரவழைக்கும். அதனால் சிறிது நேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடந்து ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ளலாம்.

உணவுகளில் சில உற்சாகத்தை உருவாக்கும். சில உணவுகள் உறக்கத்தை ருவாக்கும். அதனால் உணவில் கவனம் தேவை. உதாரணமாக பொங்கல் போன்ற பருப்பு ஐட்டங்களை தவிர்க்கலாம். அதேபோல் மதிய நேரத்தில் அளவோடு சாப்பிட்டாலும் தூக்கம் வராது.

பெரும்பாலானோர் கம்ப்யூட்டர் முன் அமர்ந்துதான் வேலை பார்க்கின்றனர். எனவே அவர்கள் குறிப்பிட்ட நேரம் தங்களுக்கு பிடித்த பாடலையோ, இசையையோ கேட்கலாம். அப்படி கேட்கும்போது மூளை சுறுசுறுப்படைந்து தூக்கத்திலிருந்து விடுபடுவீர்கள்.

தூக்கத்திலிருந்தும், சோம்பலில் இருந்தும் விடுபடுவதற்கு பலரின் விருப்ப தேர்வாக இருப்பது டீ அல்லது காபி. எனவே எந்த வேலையாக இருந்தாலும் தூக்கம் வரும்போது அதனை ஒத்திவைத்துவிட்டு நேராக கடைக்கோ, காஃபிடேரியாவுக்கோ சென்று ஒரு டீயோ அல்லது காபியோ அருந்தலாம். தூக்கத்தோடு வேலை செய்து சொதப்புவதற்கு 10 நிமிடங்கள் தூக்கத்தை போக்குவதற்காக கழிப்பதில் எந்த தவறும் இல்லை.

முக்கியமாக செய்யும் வேலையை விருப்பப்பட்டு ஆர்வத்தோடு செய்ய வேண்டும். கடமைக்கு செய்தோம் என்றால் எந்த ஒரு ஆர்வமும் எடுபடாமல் உடலும், மூளையும் இயல்பாகவே தூக்க நிலைக்கு செல்லும்.



--

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

கொளுத்தும் வெயில்: பைக் ஓட்டுனர்களுக்கு சிறந்த டிப்ஸ்.!

குளிர் காலமானாலும், வெயில் காலமானாலும் வேலைக்கு செல்பவர்கள் சென்று கொண்டே தான் இருக்க வேண்டும்.

பலர் வேலைக்கு செல்வதையே மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டியுள்ளது.

அதுவும் கோடைகாலங்களில் அலுவலகம் செல்வதற்கு பிரதானமான மக்கள் பைக்கையே பயன்படுத்துவார்கள்.

அந்த வகையில் கொளுத்தும் வெயிலில் பைக்கில் செல்பவர்களின் சிரமத்தை குறைக்கக்கூடிய எளிமையான வழிகளை பற்றி பார்க்கலாம்.

சிறந்த டிப்ஸ்:

கொளுத்தும் வெயிலில் பலர் ஷார்ட்ஸ் மற்றும் டீ ஷர்ட் அணிந்து பைக் ஓட்ட நினைப்பார்கள். ஆனால் அதுதான் மிகவும் தவறான விஷயம்.

ஏனென்றால் இவ்வாறு செல்வதால் நாம் நேரடியாக சூரிய வெளிச்சத்தின் பாதிப்பிற்கு ஆளாகலாம். எனவே எப்போதும் முழு ஸ்லீவ், காட்டன் ஷர்ட் மற்றும் பேண்ட் அணிந்து செல்வது மிகவும் அவசியம் ஆகும்.

லைட் ஆடைகள் அணிந்து செல்வது சிறப்பானது. முழுதாக மறைத்துக்கொண்டு செல்வதால் நாம் வெயிலில் இருந்து தப்பிக்க முடியும்.

வெயிலினால் நம் கண்கள் மிக கடுமையாக பாதிப்படைகின்றன. எனவே ஒரு கூலிங் கிளாஸ் அணிவதால் நாம் நம்முடைய கண்களை வெயிலின் பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும்.

வெயில் உச்சக்கட்டத்தில் இருக்கும் மதியம் 12 முதல் 3 மணி வரை முடிந்த அளவு வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.

ஏனென்றால் இந்த சமயத்தில் சூரியன் உச்சத்தில் இருக்கும். இதனால் இந்த சமயங்களில் வெயிலின் தாக்கம் பல மடங்கு இருக்கும்.

மற்ற நேரங்களில் இருப்பதுபோல இல்லாமல் கோடைகாலங்களில் நாம் ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டுவது மிகவும் சிரமமான விஷயம்.

இதுபோன்ற காலங்களில் நாம் சராசரி ஹெல்மெட் பயன்படுத்துவதைவிட ஓபன் பேஸ் ஹெல்மெட் பயன்படுத்துவது மிகவும் வசதியாக இருக்கும்.இதனால் நாம் ஹெல்மெட் அணிந்துகொண்டு பயணிப்பது மட்டுமல்லாமல் சற்று காற்றோட்டமாகவும் பயணம் செல்ல முடியும்.

குறிப்பு :

வெயில் நேரங்களில் தார் ரோடுகளின் மேற்புறம் உருகி மிகவும் வழவழப்பு தன்மை கொண்டிருக்கும்.

இதனால் நாம் அதன் மீது பைக் செலுத்தும்போது வழுக்கும் அபாயம் உள்ளது. எனவே மிகவும் கவனமுடன் பயணம் செல்வது நல்லது.



--

திங்கள், 9 பிப்ரவரி, 2026

கோடை காலத்தில் ஷூஅணிவது சிரமமா? சில வழி முறைகளை பின்பற்றலாம்.

சுட்டெரிக்கும் கோடை வெயிலியிடம் இருந்து தப்பிக்க சன் கிளாஸ், குடை, கோர்ட், ஸ்கார்ப், தொப்பி, சன்ஸ்கிரீன் லோஷன்கள் ஆகியவற்றுடன் சம்மர் ட்ரெண்டுக்கு ஏற்ற காலணி வகைகளும் முக்கிய இடம் பிடிக்கின்றன.

நீங்கள் ஷார்ட்ஸ் அணிந்து பார்க்கில் ரிலாக்ஸ் செய்தாலும் சரி, வீக் என்டில் பீச்சில் கூலாக காற்று வாங்கினாலும் சரி உங்களுக்கு உடைக்கு பொருத்தமான காலணிகள் அவசியம்.

கோடை வெயிலில் எங்காவது வெளியே செல்கிறீர்களாக ஒரு ஜோடி மினிமலிஸ்ட் ஸ்னீக்கர்கள் உங்கள் தோற்றத்தை மெருகேற்றி காட்ட உதவும், அதே வேளையில் கோடை காலத்தில் அணிய வசதியாகவும் இருக்கும். நீங்கள் இன்னும் வீட்டிலிருந்து வேலை செய்கிறீர்கள் என்றால், ஸ்டைலான ஜோடி ஸ்லிப்-ஆன் ஷூக்கள் பொருத்தமாக இருக்கும்.

இருப்பினும், இந்த சீசனில் நீங்கள் எங்கு சென்றாலும், வெப்பத்தைத் தணிக்கவும், கால்களை சுவாசிக்க வைக்கும் வகையிலும் இருக்கக்கூடிய காலணிகள் அவசியம். எனவே கோடை காலத்திற்கு ஏற்ற, அதே சமயத்தில் லேட்டஸ்ட் ட்ரெண்டிங்கில் உள்ள காலணிகளை எவ்வாறு தேர்வு செய்வது என பார்க்கலாம்...

1. காலணி தேர்வு: கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் எனவே, இந்த சமயத்தில் பாதங்களை முழுமையாக கவர் செய்திருப்பது போன்ற காலணிகளை தவிர்ப்பது நல்லது. நாம் பெரும்பாலும் பொருளின் விலையை மட்டுமே கருத்தில் கொள்கிறோம். மாறாக, காலணிகளின் விலை, தரம், வசதி மற்றும் வானிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒட்டுமொத்தமாக மதிப்பிட வேண்டும். இந்த கோடையில், பல்வேறு டிசைன்களில் பிரகாசமான மற்றும் வண்ணமயமான காலணிகள் விற்பனைக்கு வருகின்றன. கோடையில், ஹை ஹீல்ஸ் மற்றும் ஸ்ட்ராப்பி ஷூக்களை அணியலாம், இவை அழகாக இருப்பது மட்டுமல்ல, உங்கள் கால்களை சுவாசிக்க கூடியதாகவும் வைத்திருக்கும்.

2. காலணிகளின் தரம்: முதுகு, முழங்கால் மற்றும் தோள்பட்டை வலி போன்ற பல உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் தவறான காலணிகளைத் தேர்ந்தெடுப்பது காரணமாக அமைகிறது. தோற்றம் கவர்ச்சிகரமானதாக இருப்பதால் பெண்கள் பொதுவாக ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிவதை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் வியர்வை, சிவத்தல், புண் மற்றும் காயங்களில் இருந்து உங்கள் பாதத்தைப் பாதுகாக்க மென்மையான, கடினமான அடித்தளத்தைக் கொண்ட காலணிகளை தேர்வு செய்ய வேண்டும்.

3. காலணி அணிவதன் செளகரியம்: காலணிகள் பார்ப்பதற்கு மட்டுமல்ல அணிவதற்கும் செளகரியமானதாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு எளிதில் கழட்ட முடியாத ஷூக்கள் அல்லது செருப்புகளை அணிவது மிகுந்த அசெளகரியத்தை உருவாக்கும். குறிப்பாக கோடை காலத்தில் அனைவரும் சுற்றுலாவிற்கு திட்டமிடுவது வழக்கம். அப்படிப்பட்ட நீண்ட தூர பயணத்தின் போது எளிதில் கழட்டவும், தேவையான போது விரைவாக அணிந்து கொள்ளவும் கூடிய காலணிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் பயணத்தை வசதியாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்ற, திறந்த ஸ்ட்ராப்பிகள் மற்றும் இறுக்கமாக கால்களை பற்றிக்கொள்ளக்கூடிய காலணிகளை தேர்வு செய்யலாம்.

4. பாதத்தை மூடும் காலணிகள் வேண்டாம்: கோடைக் காலத்தின் கடுமையான வெப்பத்தில், பூட்ஸ் அல்லது முழுமையாக பாதங்களை மூடக்கூடிய காலணிகளை அணிவதைத் தவிர்க்கவும், இது சொறி, கால் சிவந்து போதல் மற்றும் வியர்வை காரணமாக அதிக வலியை ஏற்படுத்தும். மேலும் இறுக்கமான காலணிகளால் உருவாகும் வியர்வை கடுமையான துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும். சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து பாதங்களை விடுவிக்க இரத்தம் மற்றும் காற்றின் சுழற்சியை உறுதி செய்யும் வகையில் செருப்புகள் அல்லது செப்பல்களை அணிய முயற்சியுங்கள்.



--

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

தினமும் இன்ஸ்டண்ட்இட்லி மாவு பயன் படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்.


உலக ஆராய்ச்சியாளர்களால் காலை உணவுக்கு சிறந்த உணவு என கூறப்பட்டுள்ள ஆரோக்கிய உணவு இட்லி. இதற்கு காரணம் இதில் எண்ணெய் கலப்பு இல்லை மற்றும் நீராவி மூலம் சமைக்கும் முறை தான்.

இதனால் செரிமான கோளாறோ, கொலஸ்ட்ரால் பிரச்சனையோ ஏற்படாது என்பதால் தான் இட்லி சிறந்த காலை உணவு என கூறப்படுகிறது.

ஆனால், இன்று நேரமின்மை மற்றும் சோம்பேறித்தனம் போன்ற காரணத்தால் நாம் இட்லி, தோசைக்கு பயன்படுத்தும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு நமது ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கிறது என்பதை அறியாமலேயே நாம் அதை தினந்தோறும் பயன்படுத்தி வருகிறோம்..

சுகாதாரமின்மை!

முன்பெல்லாம் ஆட்டாங்கல்லில் தான் மாவு ஆட்டும் பழக்கம் இருந்து வந்தது. கிரைண்டர் வந்த பின் ஆட்டாங்கல் வீட்டில் காட்சி பொருளாகி போனது. பல வீடுகளில் அது வீட்டின் பின்புறத்தில் குப்பையாக தான் கிடைக்கிறது.

காணாமல் போன ஆட்டாங்கல்!

ஆட்டாங்கல்லில் மாவாட்டும் முன்னரும், மாவாட்டிய பிறகும் சுத்தமாக கழுவும் பழக்கம் நம் வீட்டு ஆட்களுக்கு இருந்தது. ஆனால், கடைகளில் விற்க அவர்கள் பயன்படுத்தும் பெரிய கிரைண்டர்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பது யாருக்கு தெரியும்?

ஈகோலி பாக்டீரியா:

மாவு ஆட்டும் போது, அதன் பிறகு கிரைண்டரை கழுவும் போதும் சுத்தமான நீரை பயன்படுத்த வேண்டும். இல்லையேல் ஈகோலி எனும் பாக்டீரியா தாக்கம் அதிகளவில் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இது மாவாட்டும் போது இட்லி, தோசை மாவில் அடைக்கலம் புகுந்து விடுகிறது.

உடல்நலக் குறைபாடுகள்:

இந்த ஈகோலி பாக்டீரியா தாக்கத்தால் நாள்ப்பட வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, உடல் வறட்சி, வாந்தி, மயக்கம், இரைப்பை நோய், தலைசுற்றல் போன்ற உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

வேக வைத்தாலும் அழிவதில்லை:

நீங்கள் எண்ணலாம், தினமும் இட்லி, தோசை தான் சாப்பிடுகிறோம்? பிறகு எப்படி உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று. இதற்கு எல்லாம் காரணம் நீங்கள் வெளி கடைகளில்வாங்கும் இட்லி மாவு தான்.

ஈகோலி எனும் பாக்டீரியா நீங்கள் மாவை வேக வைத்தாலும் கூட முழுமையாக அழிவதில்லை என்பது தான் சோகமே.

இன்ஸ்டன்ட் இட்லி மாவு:

கடைகளில் வாங்கும் மாவினால் தான் இந்த பிரச்சனைகள் என்றால், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு நாம் வாங்கும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு அதுக்கும் மேல ராகம்.

கால்சியம் சிலிகேட்:

இன்ஸ்டன்ட் இட்லி மாவு சீக்கிரம் கேட்டுவிடக் கூடாது என கால்சியம் சிலிகேட் சேர்க்கின்றனர். இதனால் மாவு சீக்கிரம் கெடாது, புளித்து போகாது. ஆனால், இதன் காரணத்தால் உங்கள் செரிமான மண்டலம் பாதிக்கப்படும். இதை தொடர்ந்து அஜீரண கோளாறுகள், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்றவை ஏற்படும்.

சிந்தியுங்கள்:

காசுக் கொடுத்து உடல்நலக் கோளாறுகள், ஆரோக்கியமின்மை போன்றவற்றை விலைக்கு வாங்க வேண்டுமா? அரை மணிநேரம் செலவிட்டால் இட்லி மாவு வீட்டிலேயே அரைக்கலாம். ஆனால், 20 - 30 ரூபாய்க்கு கிடைக்கிறது என கடைகளில் வாங்கி சாப்பிடுகிறோம்.

இது மட்டுமா?

இரண்டு நிமிடம் தட்டி போட்டால் இஞ்சி பூண்டு பேஸ்ட் ரெடி. ஆனால் அதைக் கூட நாம் அஞ்சு, பத்து கொடுத்து பாக்கெட்டில் தான் வாங்குகிறோம். நீங்கள் பாக்கெட்டில் வாங்கும் அனைத்துமே உடல் நலத்திற்கு கேடு தான் விளைவிக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.



--

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

ஞாபக மறதியை உண்டாக்கும் உணவுகள்.

உடல் உழைப்பு மட்டுமன்றி நாம் சாப்பிடும் உணவுகளும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்த வகையில் உடலையும், மனதையும் இணைக்கும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம். எனவே ஞாபக மறதியை அதிகரிக்கும் இந்த உணவுகளை தவிர்த்தல் நல்லது. இதனால் மூளையின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

சுத்தீகரிக்கப்பட்ட உணவுகளான பாஸ்தா, பிரெட் போன்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளாதது நல்லது. கார்போஹட்ரேட் உணவுகளை அதிகம் உட்கொள்ளும் பழக்கமும் ஆபத்து. அப்படி வெள்ளை அரிசி சாதம் குறைந்த அளவு எடுத்துக்கொண்டு காய்கறி, பழ வகைகளை அதிகமாக உட்கொள்ளலாம். இதனால் குழந்தையிலிருந்தே மூளை ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

சுத்தீகரிக்கப்பட்ட உணவு : சுத்தீகரிக்கப்பட்ட உணவுகளான பாஸ்தா, பிரெட் போன்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளாதது நல்லது. கார்போஹட்ரேட் உணவுகளை அதிகம் உட்கொள்ளும் பழக்கமும் ஆபத்து. அப்படி வெள்ளை அரிசி சாதம் குறைந்த அளவு எடுத்துக்கொண்டு காய்கறி, பழ வகைகளை அதிகமாக உட்கொள்ளலாம். இதனால் குழந்தையிலிருந்தே மூளை ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

சூரை மீன் ஊட்டச்சத்து மிக்க உணவு என்றாலும் அதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது ஞாபக மறதியை அதிகரிக்கும். அதில் உள்ள மெர்க்குரி மூளையின் செயல் திறனை பாதிக்கும்.

அதிகப்படியான சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உணவில் அதிகப்படியான சர்க்கரை சேர்ப்பதனால் அறிவாற்றல் மற்றும் மூளை குறைபாடுகள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சர்க்கரை பானங்களை குடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது. அதிக இனிப்பு பானங்களை உட்கொள்பவர்களுக்கு நினைவாற்றல் குறைவு மற்றும் ஒட்டுமொத்த மூளையின் அளவு குறைகிறது.

நீங்கள் வயதாகும்போது உங்கள் மூளையை கூர்மையாக வைத்திருக்க விரும்பினால், அதிக ஸ்வீட் பானங்களைத் தவிர்க்கவும். சோடா, இனிப்பு தேநீர் மற்றும் பிற சர்க்கரை பானங்களை அதிகம் குடிப்பவர்களுக்கு நினைவாற்றல் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

பொரித்த உணவுகள்

வறுத்த உணவு வகைகளில் சுவைக்காக செயற்கை பொருட்கள், ரசாயனம், உணவுக்கு நிறமேற்ற சாயப்பொருட்கள் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்களுக்கு பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள நரம்பு செல்களை மெதுவாக பாதித்து அழிக்கிறது. வறுப்பதற்காக பயன்படுத்தப்படும் சில எண்ணெய் வகைகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. இதனால் சிறந்த எண்ணெய் வகைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

வறுத்த கோழி மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் உங்கள் மூளைக்கும் தீங்கு விளைவிக்கும். பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நினைவகம் மற்றும் மூளை செயல்பாடு போன்றவை பாதிக்க வாய்ப்புள்ளது.

அதிக கார்போஹைட்ரேட் உணவுகள்

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், இனிப்பு சுவை இல்லாதவை கூட உங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கலாம். அதைத் தொடர்ந்து அடிக்கடி உணவில் சேர்க்கும் போது மனரீதியான பிரட்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்க்கு பதிலாக முழு தானிய ரொட்டிகள், பழுப்பு அரிசி மற்றும் முழு கோதுமை உணவுகளை சாப்பிடலாம்.

வெள்ளை அரிசியில் முற்றிலும் அதிகளவு கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் அரிசி உணவை அதிகமாக உட்கொள்ளும்போது மூளையின் செயல்பாட்டில் பிரச்சினைகளை உண்டாக்கும். மனஅழுத்தத்தில் கொண்டு போய்விடும் அபாயங்களையும் அதிகரிக்கும்.

மது

ஆல்கஹால் அருந்துவது உங்கள் மூளையில் நீண்ட காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆல்கஹால் நேரடியாக மூளையின் தொடர்புப் பாதைகளை பாதிக்கிறது. நீங்கள் எவ்வளவு அதிகமாக குடிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு புதிய தகவலைச் அல்லது விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது பாதிக்கிறது . மது உங்களை குழப்பி அல்லது மனச்சோர்வடையச் செய்கிறது.

அதிகப்படியான மது அருந்துதல் மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும், அது மூளையின் செயல்திறனை குறைப்பது மட்டுமல்லாமல் மனரீதியான பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆல்கஹால் மூளை செல்களை அழித்து மூளை திசுக்களை சுருங்கச் செய்கிறது. அதிகப்படியான மது அருந்துபவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் உருவாகி மூளையின் செயல்பாட்டை மேலும் சேதப்படுத்தும்.



--

வியாழன், 29 ஜனவரி, 2026

தவறுதலாகக் கூட இந்த பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம்.. உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்து..

காலை உணவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்..

காலை உணவில் கவனம் செலுத்தாமல், இதன் விளைவாக, அவர்களின் உடல்நிலை சரியாகிவிடாமல் மோசமடையத் தொடங்குகிறது. இதனுடன், பல வகையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன. உண்மையில், காலையில் வெறும் வயிற்றில், ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும், ஆனால் சிலர் அமிலத்தன்மை கொண்ட பொருட்களை சாப்பிடுகிறார்கள், இதனால் அவர்களின் செரிமான அமைப்பு தொந்தரவு செய்யப்படுகிறது.

உங்கள் செரிமான அமைப்பு தனது வேலையைச் சிறப்பாகச் செய்து, நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதற்காக வெறும் வயிற்றில் கூட சாப்பிடக்கூடாத சில உணவுகளை பார்க்கலாம்..

இனிப்பு : நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் சில இனிப்புகளை சாப்பிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். உண்மையில், காலையில் வெறும் வயிற்றில் இனிப்புகளை சாப்பிடுவது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது மற்றும் நாள் முழுவதும் சோர்வாக இருக்கும்.

இனிப்பு உருளைக்கிழங்கு : இனிப்பு உருளைக்கிழங்கு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஆனால் நீங்கள் அதை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், அது நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். உண்மையில், இனிப்பு உருளைக்கிழங்கை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், அதில் உள்ள டானின் மற்றும் பெக்டின் காரணமாக, உங்களுக்கு இரைப்பை, அமில பிரச்சனைகள் ஏற்படலாம். இது தவிர, இது உங்களுக்கு நெஞ்செரிச்சல் மற்றும் வாயு பிரச்சனைகளையும் தரும்.

பால் மற்றும் வாழைப்பழம் : எடை குறைவாக இருப்பவர்கள் காலை வேளையில் பால், வாழைப்பழம் சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்கலாம் ஆனால் வாழைப்பழம் மற்றும் பால் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அஜீரணம், வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளும் வரலாம்..

மது : காலையில் வெறும் வயிற்றில் மது அருந்தினால், அது உங்களுக்கு விஷத்திற்கு சமமான தாக்கத்தை ஏற்படுத்தும். உண்மையில், வெறும் வயிற்றில் மது அருந்துவது விரைவாக போதைக்கு வழிவகுக்கிறது மற்றும் அது வயிற்று குடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது.

தக்காளி : நிச்சயமாக, தக்காளி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், ஆனால் பச்சையாக தக்காளியை உட்கொள்வதை காலையில் வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டும். உண்மையில், இதில் இருக்கும் புளிப்பு அமிலம் வயிற்றில் இருக்கும் இரைப்பை குடல் அமிலத்துடன் இணைந்து வயிற்று வலி, வாயு மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை அதிகரிக்கும். மேலும், இது கற்களைப் பெறுவதற்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது.

மருந்துகள் : பெரும்பாலும் மருத்துவர்கள் தங்கள் நோயாளிக்கு உணவு உண்ட பிறகு மருந்து எடுத்துக் கொள்ள அறிவுறுத்துகிறார்கள், ஆனால் நீங்கள் வெறும் வயிற்றில் மருந்துகளை உட்கொண்டால், அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும். வெறும் வயிற்றில் மருந்துகளை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும், எனவே மருத்துவரை அணுகிய பின்னரே மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

கிரீன் டீ : ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கிரீன் டீ ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதை நினைத்து, காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்தால், அது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதில் உள்ள காஃபின் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளை உங்களுக்கு ஏற்படுத்தும்.



--

தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

  சாதாரணமாக வெயில் காலத்தில் உணவு செரிமானமாவதில் சிக்கலிருக்கும். தயிர்சாதம் சாப்பிட்டால் அது மந்தத்தை ஏற்படுத்தி , செரிமானக் கோளாறை இன்னும்...

Popular Posts