லேபிள்கள்

சனி, 15 மார்ச், 2014

தனியாக செல்லும் பெண்கள் தெரிந்து கொள்ள‍ வேண்டியது

தனியாக செல்லும் பெண்கள் தெரிந்து கொள்ள‍ வேண்டியது

பெண்கள் தனியாக பயணம் மேற்கொள்ளும் பெண்கள் பலவித பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ள து. கொலைகள், கற்பழிப்புகள் மற்றும் ஜாடை மாடையாக கேலிசெய்வது போன்ற தொந் தரவுகள், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் போது, குறிப்பாக தனியாக பயணிக்கும்போது, சர்வ சாதார ணமாக நிகழ்கின் றன. இது போன்ற சூழல்களில், பெண்கள் தங்க ளைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் அதிக கவனத் தோடும் விழிப்புணர்வோ டும் பயணிப்பது மிக முக்கியம்.
தனியாக பெண்கள் பயணம் செய்வது என்பது பிரம்மப் பிரயத்தனமான செயலாகவே உள்ளது. பெண்க ளை விழுங்குவது போன்று பார்ப்பதில், அலாதி அல்ப சுகம்காணு ம் ஆண்களின் அலைபாயும் கண்களிலிருந்து பெண்கள் தப்பவே முடியாது. பெண்கள், இன்னும் சமூக கட்டுப்பாடுகள் மற்றும் பழ மைவாதம் நிலவும் ஒரு நாட்டில் தான் வாழ்கிறோம் என்பதை மறக் கக் கூடாது. இதுபோன்ற ஒரு சமூக க்கட்டமைப்பில், பெண்கள் தாங்கள் எவ்வாறு வெளியிடங்களில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெளி வாகக் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் கலாச்சாரப் பெருமைக்கு இழுக்கு உண்டாக்காமல் இருக்கவும், தனியாக பயணிக்கும் போது எப்படி இருக்க வேண்டும் என்றும் சில முக்கி யமான டிப்ஸ் களை கொடுத்துள்ளோம். அதைப்படித்து பார்த்து, அதற்கேற்றாற் போல் நடந்து கொ ள்ளுங்கள்.
உடைகளில் கவனமாய் இருக்கவும்
என்னமாதிரி உடைகளை அணிகிறோமோ, அதைப்பொறுத்து தான் கவன ஈர்ப்பின் தன்மை உள்ளது. அதிலும் உடலை இறுக் கிப் பிடிக்கும் உடைகள் மற்றும் குட்டைப் பாவாடைகள் போன்ற உடைகள் அணிவதைத் தவிர்ப்ப தன் மூலம், பெண்கள் தங்கள் மேல் விழும் அந்நியர்களின் தேவை யில்லாத பார்வைகளைத் தவிர்க்க லாம். எப்போதும் சுடிதார் அணிந்து, அதற்கு மேல் துப்பட்டா அல்லது ஷால் அணிவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். வேண்டுமெனில் ஜீன்ஸ் மற் றும் குர்தாகூட அணியலாம், ஆனால் எப்போதும் ஷால் ஒன்றை கட்டாயம் வைத்திருக்க வேண் டும்.
அந்நியர்களுடனான உரையாடல்களைத் தவிர்க்கவும்
அரட்டை அடிப்பதில் ஆர்வம் உள்ளவராய் இருக்கலாம். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால், தனி யாகச் செல்லும் போது, அவ் வாறான அரட்டைகளை தவிர்ப்பது நல்லது. முடிந்த வரையில், யாரோடும் தேவை யில்லாத உரையாடல்களில் ஈடுபடு வதை தவிர்க்கவும். மேலும் பயணிப் போர் யாரேனும், உரையாடல் களில் கலந்து கொள்ளும்படி நச்சரித்தால், குறைந்த அளவில் உரையாடல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தனிப்பட்ட தகவல்கள் எதையும் பகிர்ந்து கொள்ள கூடாது.
உடைமைகளின் மேல் ஒரு கண் வைக்கவும்
உடைமைகள் அருகிலேயே இருக்கு மாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவை மீது வைத்திருக்கும் கண் பார் வையிலிருந்து அகல கூடாது. ஏனெனி ல் இது இந்தியா! "வணக்கம்" என்று சொ ல்லி முடிக்கும் முன், பொருள்கள் மாயமாய் மறைந்திருக்கும். ஆகவே எந் நேரமும் விழிப்புணர்வோடு கண்கா ணித்துக் கொண் டே இருக்க வேண்டும்.
விலை உயர்ந்த நகைகளை அணிய வேண்டாம்
பெண்கள் தனியாக வெளியில் செல் லும் விலையுயர்ந்த நகைகளை அணி ந்து செல்ல‍வேண்டாம். இன்னும் சொல் ல‍ப்போனால், தங்க, வைர நகைகளை அறவே தவிர்த்து, கவரிங் நகைகளை யோ அல்ல‍து பிளாஸ்டிக் காலான நவீன வடிவத்தில் உள்ள‍ நகைகளை அல்ல‍து மணிகளை அணிந்து செல்ல‍வும்.
பணப்பையின் மேல் பிரியம் கொள்ளவும்
பணம் வைத்திருக்கும் கைப்பையை மிக அருகிலேயே அல்லது கைகளிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், கொண்டு செல் லும் பணத்தை ஒரே இடத்தில் வைக் காமல், அவற்றை பிரித்து, பின் பாக் கெட் அல்லது பையின் பக்க வாட்டுப் பகுதிகள் போன்ற, வெவ்வேறு இடங் களில் போட்டு வைக்க வேண்டும். ஏதேனும் துரதிர்ஷ்டவசமான நிகழ் வின்போது, அச்சூழலில் இருந்து வெ ளியே வருவதற்கு, இந்தப் பணம் மிகவும் உதவியாக இருக்கும்.
தைரியமாக இருக்கவும்
முதன்முறையாக தனியாக பயணிப் பவராய் இருப்பின், தைரியமாக நடந் து கொள்ளவேண்டும். அதுவும் முதன் முறையாக தனியாக பயணிக்கிறீர் கள் என்பது வெளியே தெரியும்படி எந்த தருணத்திலும் நடந்து கொள்ளக் கூடாது. என்ன செய்கிறோ ம், எங்கே செல்கிறோம் என்பதில் தெளிவாக இருப்பதாகவே எப்போதும் காட்டிக் கொள்ள வேண்டும். தலை நிமிர்ந்து நடந்து, திடமான குரலில் பேச வேண் டும்.
எதையும் கடன் வாங்க கூடாது
அந்நியர்களிடம் இருந்து எந்த விதமான பொருளையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. யாரேனும் பிஸ்கட் அல்லது பழங்கள் கொடு த்தால், அதை பணிவாக மறுத்து விட்டு, இருக்கைக்குத் திரும்ப வேண்டும்.
தனிமையைத் தவிர்க்கவும்
இரயில் / பேருந்தின் ஓரத்தில், ஒரு ஆணின் பக்கத்தில் தனியாக இருப்பதாக உணரும் பட்சத்தில், பெண்கள் அதிகம் உள்ள பகுதி க்கு உடனே செல்ல வேண்டும். அருகில் அமர்ந்திருக்கும் நபரி னால் தர்ம சங்கடமாக உணர்ந்தால், இருக்கை யை மாற்றித் தரக் கோரலாம் அல்லது சக பயணிகளிடம் பேசி, அவர்களை உங்கள் இருக்கையில் அமர்த்தி, அவர்களின் இருக்கையில் நீங்கள் சென் று அமரலாம்.
அதிக பாரமின்றி பயணிக்கவும்
ஏகப்பட்ட லக்கேஜ்களைத் தூக்கிச் செல்ல வேண்டாம். அவ்வளவையும் ஒருவரே கையா ள வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும். அதனால், எப்போதும் எடை குறைவாக, ஒரு தோள் பையோ அல்லது ஒரு ட்ராலி பையோ மட்டும் கொண்டு செல்வது நல்ல து. அதே போல், நிறைய நகையோ அல்லது பணமோ கொண்டு செல்வ தும் நல்லதல்ல.
இவ்வ‍ளவையும் மீறி உங்களுக்கு ஆபத்து நேர்ந்தால். .. மேற்கூறிய யாவையும் சரியாக கடைபிடித்தும், உங்களை யாரா வது மிரட்டினாலோ, உடமைகளை பறிக்க‍ முற்பட்டாலோ, அல்ல‍ து பாலியல் பலாத்காரம் செய்ய‍ முற்பட்டாலோ, நீங்கள் செய்ய‍ வேண்டியது என்ன‍ தெரியுமா? ஓர் ஆணின் மென்மையான பகுதிகள் தொண்டை, மூக்கு, கண்கள், நடு மார்பு பகுதி, விதைப்பை, கைகளி ல் உள்ள‍ சுட்டுவிரல் ஆகும். உங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் அந்நபரின் மேற்கூறிய மென்மையான பகுதிகளில் ஒன்றையோ அல்ல‍து பலவற்றை யோ உங்களால் முடிந்த அளவுக்கு கைகளாலோ அல்ல‍து கால்களா லோ பலமாக தாக்கு ங்கள். இதற்காக கராத்தே குங்பூ போன்ற தற்காப்பு கலைகள் தெரிந்திருக்க‍ வேண்டும் என்றில்லை. உங்களது முழுபலத்தை யும் காட்டுங்கள். உங்களது தாக்கு தலுக்கு உட்பட்ட‍ நபர் நிலைதடுமாறி கீழே விழும்பட்சத்தில், அல்ல‍து மயக்க‍முறும் பட்சத்திலோ அந்த இடத்தைவிட்டு நீங்கள் விரைவாக சென்று விடுங்கள்.
விலாசம் கேட்பதிலும் கவனம் தேவை!
நீங்கள் போகவேண்டிய வீடு அல்ல‍து அலுவலகத்தின் விலாசம் உங்களுக்கு தெரியவில்லை என்றா ல், அவ்விலாசத்தை அப்பகுதியில் இருக்கும் யாரிடமாவதுகேட்டு தெரிந் துகொள்ள‍ முயல்வோம். அப்ப‍டி நாம் கேட்க கூடிய நபரின் தோற்ற‍ம் வைத் து அந்நபரிடம் கேட்கலாமா வேண் டாமா என்பதை தீர்மானிக்க‍ வேண் டும். முதலில் அப்பகுதியை உங்கள் கண்களால் நோட்ட‍மிடுங்கள். உங்கள் உள்ளுணர்வு என்ன‍ சொல்கிறதோ அதன்படி நடந்து கொள்ளுங்கள். மூணு சீட்டு ஆடும் நபர்களிடமோ, குடி போதை யில் தள்ளாடும் நபரிடமோ, வேறு விதமாக காட்சியளிக்கும் சமூக விரோத மனிதர்களிடம் நெருங்கவே நெருங்காதீர்கள்.


--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts