லேபிள்கள்

வெள்ளி, 26 ஜூலை, 2019

நேர்மறை ஆற்றல்


நீங்கள் எந்த சூழ்நிலையிலும், புன்முறுவலோடு இருந்தால் நீங்கள் நேர்மறை ஆற்றலோடு இருக்கிறீர்கள்.
நன்றியுணர்வு, எப்போதும் இருந்தால் பாஸிட்டிவ் எனர்ஜி, உங்களை சூழ்ந்திருக்கும்…..
எனக்கு யாருமே உதவவில்லை, நான் எப்படி நன்றி உணர்வோடு இருப்பது என்று கேட்டால்………
முதலில் உங்கள் உடலுக்கு நன்றி சொல்லுங்கள், இந்த உடலில் தான் நீங்கள் வசிக்கிறீர்கள், அதற்கு நன்றி சொல்லுங்கள்…..
உங்கள் காலையே தொட்டு வணங்கி பாருங்கள், நன்றிணர்வு மேலெலும்பும்…..
அந்த உடலை பூமிக்கு கொண்டு வந்தவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்…..
கண்களை மூடி அப்பா, அம்மா ஒவ்வொறுவர் காலிலும் (கற்பனையில் தான்) விழுந்து நன்றி சொல்லுங்கள், ஆனந்தக் கண்ணீரோடு நன்றிணர்வு பொங்கி வரும்…..
இப்படி உங்களுக்கு ஏதாவது சூழ்நிலையில் உதவுபவர்களுக்கு நன்றி சொல்லலாம்….
சாப்பிடும் போது நன்றியுணர்வோடு சாபிடுங்கள்,
அந்த உணவில் ஆயிரக்கணக்கானோர் உழைப்பு உள்ளது, விதைத்தவன், உழுதவன், அறுவடை செய்தவன், விற்பனையாளன், சமைத்தவன் இப்படி,,,,,,,,,,,,,
ஒரு பிடி சோற்றில் உலக ஒற்றுமை கண்டிடு' என்று சொல்லின் பொருள் இதுவே
இப்படி, குளிக்கும் போதும், நன்றியோடு தண்ணீரை மேலே ஊற்றுங்கள்….
உடை அணியும் போதும், காலில் செருப்பு அணியும் போதும் நன்றியுணர்வோடு இருங்கள்…..
பொதுவாக இந்த மாதிரி வேலை செய்யும் போது, உங்களுக்கே தெரியாமல், மனம் கொந்தலைப்போடுத்தான் இருக்கும், யாருக்காவது பதில் சொல்லும், தொணத் தொணவென்று பேசிக் கொண்டிருக்கும்….
இப்படி விழிப்போடு, நன்றியுணர்வோடு செய்யும் போது விழிப்புணர்வும், நேர்மறை ஆற்றலும் உங்களை ஆட் கொள்ளும்……
சரி, இப்படியே இருபத்தி நான்கு மணி நேரமும் இருக்க முடியுமா என்று கேட்டால்….
எப்போது எல்லாம், நினைவுக்கு வருகிறதோ, அந்த நேரத்தில் முயற்சிக்கவும்….
முயற்சியில் தொடங்கி, முயற்சியற்ற நிலைக்கு வரும் போது, முழுமையான நேர்மறை ஆற்றலோடு இருப்பீர்கள்……
ஏற்பு விதி, ஏற்றுக் கொள்ளும் தன்மை!
இதை புரிந்து கொள்வது அவசியம்….
உங்கள் எல்லா பிரச்சனைக்கும் காரணம் ஏற்று கொள்ளாமை தான்….
மனஅழுத்தம், மனசிதைவு, டென்ஷன், வெறுப்புணர்வு எல்லாத்துக்குமே காரணம், ஏற்று கொள்ளாமை தான்….
ஏற்றுக் கொள்ளாததால், உங்கள் மனதுக்கு எதிராக, நீங்களே செயல் பட்டு, உங்கள் மனதுக்கு துன்பத்தை கொடுக்கிறீர்கள்.
நமக்கு சொல்லப் பட்டது, எதிர்த்து நில், எதிர்த்து போராடு, புரட்சி செய் இப்படி,,,,,,,,
இது கூட்டு மனப்பான்மைக்கு, சமூக அரசியலுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்….
தனி மனித மனதுக்கல்ல…..
ஒரு தவறு நடக்கிறது, எப்படி ஏற்றுக் கொள்வது என்று கேட்டால்…….
எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன்…..
உங்கள் வீட்டிலேயே ஒருவருடைய செயல்பாடு, உங்களுக்கு பிடிக்கவில்லை, முரண்பாடு உள்ளது என்றால்……
முதலில் அவரை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள், அவர் குணத்தை ஏற்று கொள்ளுங்கள்….
இப்போது, முதலில் உங்கள் மனம் அமைதியடையும், இந்த அமைதியில் மனமே உங்களுக்கு எப்படி எதிர் கொள்வது என்று சொல்லும்…..
இப்படித் தான் எந்த சம்பவம் நடந்தாலும், தெரிந்தோ, தெரியாமலோ உங்கள் மனம் சம்பந்தப் பட்டிருக்கும்…..
இதை எதிர்த்தால், உங்கள் மனதை எதிர்க்கிறீர்கள், ஏற்றுக் கொள்ளும் போது, மனமே தீர்வுக்கு வழி காட்டும்…..
சரியென்று, முழு மனதோடு, ஆழ்ந்த சுவாசத்தோடு ஏற்றுக் கொள்ளுங்கள்…..
ஓஷோ சொல்வார், ஒரு நாள் முழுவதும், எது நடந்தாலும், சரி, சரி…, எல்லாம் சரி என்று சொல்லிப் பாருங்கள், என்ன நடக்கிறது என்று…..
எப்போதும், புன்முறுவலோடு, நன்றியுணர்வோடு, ஏற்றுக் கொள்ளும் தன்மையோடு இருந்தால்……
நேர்மறை ஆற்றலோடு, பிரபஞ்ச உணர்வோடு இருப்பீர்கள்….
இப்படி இருந்தால், உடல், மனத் தேவையை பிரபஞ்ச ஆற்றல் பூர்த்தி செய்யும்…!!!!
நன்றி திரு லெட்சுமணன் செட்டியார்

--
v
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

கேஸ் சிலிண்டரை சேமிக்க சிறந்த வழி முறைகள்.

' மாதம் பிறந்தா இதுக்கு அழுதே ஆகணும்னு... ' ஒரு பட்டியல் இருக்கும். அதில் ஒன்ற காஸ் ...

Popular Posts