லேபிள்கள்

வெள்ளி, 7 அக்டோபர், 2016

டிப்ஸ்... டிப்ஸ்...!

இனிப்புகள் தயாரிக்கும்போது பாதாம், முந்திரி போன்ற உலர்பழங்களை சீரான அளவில் சிறு துண்டுகளாக வெட்ட வேண்டுமா? அவற்றை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருங்கள். ஒரு டம்ளரில் சூடான நீரை வைத்துக்கொண்டு, கத்தியை வெந்நீரில் தோய்த்து, காய்களை வெட்டுவது போல் சாதாரணமாக நறுக்கினால், உலர்பழங்களை ஒரே அளவில் துண்டுகள் போட முடியும் (கவனம்... கத்தியால் அழுத்தி வெட்டினால் துண்டுகள் சிதறிவிடும்)

குழந்தைகளின் காதுக்கருகில் செல்போனை வைத்தபடி பேச்சு, பாட்டு முதலியவற்றைக் கேட்கச் செய்வதைத் தவிர்க்கவும். திடீரென்று பெரும் ஓசை காதில் விழுந்தால் குழந்தைக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்பதோடு அலைக்கதிர்களாலும் அபாயம் ஏற்படலாம்.

தினமும் நெய்யை அடுப்பில் வைத்து உருக்கினால், மணமும், ருசியும், நிறமும் மாறிவிடும். நெய்யை உருக்க நினைக்கும்போது, ஒரு எவர்சில்வர் ஸ்பூனை 10, 15 விநாடிகள் தீயில் காட்டி சூடு பண்ணி, நெய் பாத்திரத்தின் ஒரு மூலையில் செருகுங்கள். உடனே அந்த ஓரத்தில் நெய் உருகிவிடும். உருகிய பகுதியை மட்டும் ஸ்பூனால் எடுத்து, பரிமாறினால் போதும்.  மற்ற பகுதியில் உள்ள நெய் நிறம் மணம் மாறாமல் இருக்கும்

துவையல், இட்லி மிளகாய்ப்பொடி முதலியவை தயாரிக்க, பருப்புகளை வறுப்போம். பருப்பு முதலியவற்றை வறுத்த உடனே சூடாக இருக்கும்போதே மிக்ஸியில் அரைத்தால், மிக்ஸி பாதிக்கப்படலாம். அத்துடன் பொடியாக அரைபடவும் நேரமாகும். அதேசயம் வறுத்த பொருட்களை அதிக நேரம் ஆறவிட்டாலும் சரியாக இருக்காது. வெதுவெதுப்பான சூட்டுடன் இருக்கும்போது அரைத்தால் சீக்கிரம் மசிவதுடன், பொடி மொறுமொறுப்பாக நமத்துப் போகாமல் இருக்கும்.
-
குழந்தைகள் ஸ்வீட் கேட்கிறார்களா? அரை டம்ளர் ஓட்ஸை ஒரு டீஸ்பூன் நெய்யில் சிவக்க வறுத்துக்கொண்டு, சற்று ஆறியதும், அதை மிக்ஸியில் போட்டு, கால் டம்ளர் சர்க்கரையும் சேர்த்து நைஸாகப் பொடிக்கவும். தேவைக்கேற்ப, உருக்கிய நெய், வறுத்த முந்திரி, ஏலக்காய்ப்பொடி சேர்த்து உருண்டைகளாகப் பிடித்தால், சத்தான ஓட்ஸ் ஸ்வீட் ரெடி
வீட்டு பராமரிப்பு டிப்ஸ்
வீட்டில் எங்கு பார்த்தாலும் எறும்பு மொய்த்தால், ஒரு பக்கெட் நீரில் சிறிது மண்ணெண்ணெய் ஊற்றி வீட்டைத் துடைத்தால் எறும்பு மட்டுமல்லாமல் சிறுசிறு கிருமிகளும் ஒழியும்.

வீட்டினுள் வைத்துள்ள அலங்கார பிளாஸ்டிக் அல்லது பூச்செண்டுகளை எவ்வளவு துடைத்தாலும் பளிச்சென ஆகாது. அதற்கு ஹேர் டிரையரை கொண்டு க்ளீன் செய்தால் நொடியில் பளிச் பளிச்தான்.
வொயிட் வினிகரை சிறிதளவு நீரில் கலந்து, பாத்ரூம் டைல்ஸில் தெளித்து பிளாஸ்டிக் நாரிலான பிரஷ்ஷில் தேய்த்தால், டைல்ஸில் படிந்துள்ள கறை காணாமல் போய்விடும்.

சோப்புக் கரைசலில், சிறிது சோடா மாவை கலந்து,  அதில் கரித்துணிகளை ஒரு மணி நேரம் ஊறவைத்து துவைத்தால் எண்ணெய் பிசுக்கும் போகும், துணிகளும் பளிச்சென ஆகும்.
வீட்டில் பாத்திரம் கழுவும் சின்க் அடைத்துக்கொண்டால், சோடா மாவு மற்றும் வினிகர் கலந்து ஊற்றி ஒரு மணி நேரம் கழித்து சுடுநீர் ஊற்றி விடுங்கள். அடைப்பு ஓடிவிடும்.

வாஷ் பேஸினை கழுவும் முன்னர். அதை அடைத்துவிட்டு பேஸின் முழுக்க வெந்நீர் ஊற்றி அரை மணி நேரம் தேங்கவிடுங்கள். பிறகு அடைப்பை நீக்கி தண்ணீர் வெளியேறியதும்  பிரஷ்ஷால் தேய்த்துக் கழுவினால் நாள்பட்ட அழுக்கும் நீங்கிவிடும்.

வொயிட் வினிகரை வெந்நீரில் கலந்து, வீட்டைத் துடைத்தால், தரையில் உள்ள கிருமிகள் அழிவதுடன் தரையும் பளபளவென பொலிவுடன் காட்சிதரும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

கேஸ் சிலிண்டரை சேமிக்க சிறந்த வழி முறைகள்.

' மாதம் பிறந்தா இதுக்கு அழுதே ஆகணும்னு... ' ஒரு பட்டியல் இருக்கும். அதில் ஒன்ற காஸ் ...

Popular Posts