லேபிள்கள்

சனி, 1 அக்டோபர், 2016

வெற்றிலையின் மருத்துவ குணம் !

சற்றே இதயவடிவம் போல கை அகல அளவில் சராசரியாக வளரும் பச்சை, இளம்பச்சை இலைகளே வெற்றிலையாக உண்ணப்படுகிறது.
புகையிலை, பாக்குடன் வெற்றிலை உண்பது தீய பழக்கமாகும்.
வெற்றிலை வலியைப் போக்கக்கூடியது. வீக்கத்தைத் தணிக்கக் கூடியது. வெற்றிலையை கடுகு எண்ணெய் விட்டு லேசாக வதக்கி வெதுப்பான சூட்டில் மார்பில் பற்றாகக் கட்டிவர மூச்சுத்திணறல் மற்றும் இருமல் குணமாகும்.
ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிய வருகின்ற சாற்றினில் பத்து துளிகள் எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும். நெஞ்சு சளி கரைந்து மலத்தோடு வெளியேறும்.
திரிகடுகம் எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்த மருந்தோடு வெற்றிலைச் சாறும் தேனும் கலந்து கொடுத்தால் ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பு நோய், நெஞ்சுச் சளி இருமல் குணமாகும்.
பாம்பு கடித்தவருக்கு வெற்றிலைச் சாறு பருகக் கொடுப்பதால் விஷம் முறிந்து குணமாகும். இதனாலேயே இதற்கு நாகவல்லி என்றும் ஒரு பெயர் விளங்குகிறது.
வெற்றிலையை அரைத்து வாதம், விரைவாதம் ஆகியவற்றுக்கு மேல் பற்றாக கட்டினால், வீக்கமும் வலியும் குறைந்து நல்ல தீர்வு ஏற்படும். வெற்றிலைச் சாற்றோடு சமபங்கு இஞ்சிச்சாறும் தேனும் கலந்து குடித்தால் சுவாச கோளாறுகள் அத்தனையும் குணமாகும்.

அளவான வெற்றிலையை சுண்ணாம்புடன் மட்டும் சுவைப்பது பல்வேறு மருத்துவ குணம் கொண்டதாக அறியப்பட்டு உள்ளது.
வெற்றிலைச் சாற்றில் சிறிது கற்பூரம் சேர்த்து லேசாகக சூடு செய்து வெதுவெதுப்பான நிலையில் நெற்றிப் பொட்டுகளின் மேல் தடவ தலைவலி விலகும்.
இரவு தூங்கச் செல்லும் முன் 2 தேக்கரண்டி வெற்றிலைச் சாற்றுடன் சிறிது ஓமத்தைப் பொடித்து சேர்த்து குடித்துவர மூட்டு வலி, எலும்புவலி ஆகியன குணமாகும்.
வெற்றிலை அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்தது. 6 வெற்றிலைகளில் 80 முதல் 85 சதவீதம் நீர்ச்சத்து காணப்படுகிறது.
மேலும் புரதம், தாது உப்பு, நார்ச்சத்து மற்றும் பல அத்தியாவசிய ரசாயனப் பொருட்களும் இதில் உள்ளன.

எந்த பூச்சி கடித்தது என்று தெரியாமல் ஏற்படும் பாதிப்பான காணாக் கடிக்கு நடுநரம்பு நீக்கிய வெற்றிலை 5, மிளகு 10 ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து, 200 மில்லி நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது 50 மில்லியாக ஆனவுடன் தினமும் 2 வேளை சாப்பிட்டு வர காணாக்கடி விரைவில் குணமாகும்.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பு தூண்டப்படுகிறது. அத்துடன், ஒருவித உற்சாக உணர்வும் கிடைக்கி றது.
வாத நோய்களை குணமாக்கும் "வாத நாராயணா" எண் ணெய் தயாரிப்பில் வெற்றிலை சாறும் ஒரு முக்கிய மூலப் பொருளாகும்.
தீப்புண் குணமாக வெற்றிலையில் நெய் தடவி லேசாக வதக்கி புண்ணின்மீது பற்றாக போடவேண்டும். விரை வில் அந்த புண் குண மாகும்.
வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற் றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந் து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது.

வயிற்றுவலி நீங்க 2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரை த்து, 5 வெற்றிலை எடுத்து காம்பு, நுனி, நடு நரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக் கி பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மந்தம் குறையும்.
வெற்றிலை–4, வேப்பிலை ஒரு கைப்பிடி , அருகம் புல் ஒரு கை ப்பிடி. சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்றவை த்து ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.
அஜீரணக் கோளாறு அகல வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அத னுடன் 5 நல்ல மிளகுசேர்த்து நீர்விட்டு காய் ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந் தால் சிறுவர்களுக்கு உண்டாகும் செரியா மை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழு ங்கி வந்தால் அஜீரணக் கோளா றுகள் நீங்கும்.
தீப்புண் ஆற தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலை யுடன் அத்தி இலை 1 கைப் பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையை ச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.
தேள் விஷம் இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென் று விழுங்கி தேங்காய்துண்டுகள் சிலவற்றினை யும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.
விஷக்கடி குணமாக உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமா ன வண்டுக்கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றி லையில் நல்ல மிளகு வைத்துமென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.
குறைந்த ஆற்றல் வழங்குபவை வெற்றிலைகள். 100 கிராம் வெற்றிலையால் உடலுக்கு 44 கலோரிகள் ஆற்றலே கிடைக்கிறது.
6 வெற்றிலையில் 3.5 சதவீதம் அளவு புரதமும், 3.3 சதவீதம் தாதுஉப்புக்களும், கொழுப்புப் பொருட்கள் மிகக் குறைவாக கொண்டது வெற்றிலை.
6 வெற்றிலையில் 0.4 முதல் 1 சதவீதம் வரையே கொழுப்பு பொருட்கள் காணப்படுகின்றன
.
நிகோடின் அமிலம் 100 கிராம் வெற்றிலையில் 0.89 மில்லிகிராம் அளவில் காணப்படுகிறது.
வைட்டமின்-ஏ 2.9 மில்லி கிராம் அளவும், இதர வைட்டமின்களான தயாமின் 70 மைக்ரோ கிராம், ரிபோபிளேவனி 30 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 0.01 சதவீதம் காணப்படுகிறது. இவை வளர்ச்சிதை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு உடற்செயல்களில் ஈடுபடுபவை.
உடலுக்கு அத்தியாவசியமான தாதுஉப்புக்களான பொட்டாசியம் 4.6 சதவீதமும், கால்சியம் 0.5 சதவீதமும், நைட்ரஜன் 7 சதவீதமும் காணப்படுகிறது.
இதில் பொட்டாசியம் இதய செயல்பாடுகளுக்கும், கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் உறுதிக்கும் அவசியமாகும். இரும்புத்தாது மற்றும் பாஸ்பரஸ் குறைந்த அளவில் காணப்படுகிறது.
பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் நோய்த் தொற்றுகளை தடுக்கவல்லவை.
டைபாய்டு, காலரா, காசநோய் கிருமிகளை கொல்லும் ஆற்றல்கூட இவற்றுக்கு உண்டு.
சில ரசாயனங்கள் மூளையை சுறுசுறுப்பாக செயல்பட தூண்டுகிறது.
புத்துணர்ச்சி தருகிறது.

வியர்வை சுரப்பிகள் நன்கு வேலை செய்ய தூண்டுகிறது.
6 வெற்றிலையை சுண்ணாம்பு தடவி சுவைப்பதால் ஒரு டம்ளர் பாலில் கிடைக்கும் தாதுக்கள் உடலுக்கு கிடைக்கிறதாம்.
வென்னீரில் வெற்றிலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தினமும் தண்ணீருக்குப் பதிலாக பருகி வந்தால் உடலில் பல்வேறு நோய்த்தொற்றுகளை தடுக்குமாம்.
மலச்சிக்கல், தலைவலி, சரும அரிப்பு, அழற்சி, நினைவிழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கான மருந்து தயாரிப்பில் வெற்றிலைகள் சேர்க்கப்படுகிறது.
பாக்கு கலக்காத வெற்றிலை உடலுக்கு நன்மை பயக்கும். வயிறு உப்புசம், வாதம், பித்தம், கபம் எனப்படும் முப்பிணியைக் குணமாக்கும்.
வெற்றிலை மற்றும் இஞ்சி ஆகியவற்றின் சாறு எப்பேர்ப்பட்ட நுரையீரல் நோய்களுக்கும் உடனடி நிவாரணமாக அமையும். நாள் பட்ட நுரையீரல் நோய்களுக்கும் தீர்வாகும். வெற்றிலையை உணவுக்குப் பின்பு உண்டால் செரிமானம் ஆகும்.

வெற்றிலையுடன் மிளகு சேர்த்துத் தயாரிக்கப்படும் கஷாயம் உணவு செரிமானத்துக்கும் சளி, கபம் போன்றவற்றுக்கும், விஷ முறிவுக்கும் அருமருந்து.
குழந்தைகளுக்கு வரும் இருமலை வெற்றிலை சாறு மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவையை தொண்டை பகுதியில் தடவுவதன் மூலம் குணமாக்கலாம்.
அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.
வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.
வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.
குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.
வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.
வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.
கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.
வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது.
சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.

குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும்.
வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும்.
சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.
நுண்ணுயிர் தாக்கத்தினை எதிர்க்க வெற்றிலைச்சாறு உதவுகிறது.சைனஸ் பிரச்சினைக்கு வெற்றிலைச்சாறு தகுந்த நிவாரணம் அளிக்கக்கூடியது.
வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.

வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.
வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் ஒட்டி வைக்க இருமல், மூச்சுத் திணறல், கடினமான சுவாசம், குழந்தைகளுக்கு இருமல் நீங்கும்.
வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும்.
இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும்.
புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு.
வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.
வெற்றிலை இரத்த விருத்தியை அதிகரிக்கும். சுண்ணாம்பு 'கால்சியம்' ஆனதால் எலும்புகள் வலிமை பெறும். பாக்கு குடலில் பூச்சிகள் தாக்காமல் தடுக்கும். ஏலக்காய், பச்சைக்கற்பூரம், வால் மிளகு சேர்த்துக் கொண்டால் கபம் சேர்வதை குறைக்கும்.

தாம்பூலம் வாய்க்கு புத்துணர்ச்சி உண்டாக்கி, துர்நாற்றத்தை போக்கும்.
தாம்பத்தய உறவை மேம்படுத்தும்.
வெற்றிலையில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும் சக்தியால் ஆஸ்துமா, காசநோய்கள் நீங்கும்.
செரிமானத்தை தூண்டும்.
பற்கள் உறுதியடையும்.
தாம்பூலம் நோய்தடுப்பு மருந்தாகும்.
பெண்கள் தாம்பூலம் தரித்தவுடனே, நன்றாக வாய், நாக்கு சிவந்தால் அவர்களுக்கு அமையும் கணவன் அந்தப் பெண் மீது பிரியமாக இருப்பான் என்று சொல்வதுண்டு.
ஆனால், ஒரு எச்சரிக்கை: தாம்பூலம் தரிப்பதுடன் தற்போது புகையிலையை சேர்ப்பது வழக்கமாகி வருகிறது. இது நிச்சயமாக வாய்புற்றுநோயை வரவழிக்கும் வழக்கம். தவிர வெற்றிலை பாக்கு போடுவதும் அளவுக்கு மேல் போகக்கூடாது


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.

இரத்த சோகை காரணமாக உடல் மிகவும் பலவீனமாக தோன்றும். எப்போதும் சோர்வாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்படும். உடலில் ரத்தம் குறைவாக இருக்கும்ப...

Popular Posts