லேபிள்கள்

செவ்வாய், 30 ஜூன், 2015

உடல் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் கண்கள்

உடல் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் கண்கள்


கண்களை வைத்து நம்மால் தற்போதுள்ள உடல் ஆரோக்கியத்தின் நிலையை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அதற்காகத் தான் உடல் நிலை சரியில்லை என்று மருத்துவரிகளிடம் சென்றால், அவர்கள் முதலில் கண்களை பரிசோதிக்கின்றனர்.
ஆகவே நாமும் நமது கண்கள் எப்படி இருந்தால், என்ன பிரச்சனை என்பதை ஈஸியாக தெரிந்து கொள்ளலாம்.
மங்கலான பார்வை: பொதுவாக இந்த பிரச்சனை கணனியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும்.
ஏனெனில் கணனியில் உள்ள பிக்சல்களின் அமைப்பு சரியாக இல்லாததாலும், இந்த நிலை ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல் சிலருக்கு கண்களில் இருந்தும் கண்ணீர் வரும்.
மேலும் கண்களில் உள்ள லூப்ரிகேட்டிங் ஏஜென்ட் இல்லாத காரணத்தினால், கண்களில் எரிச்சல் ஏற்படுகிறது. அதிலம் மங்கலான பார்வை இருந்தால் அது நீரிழிவிற்கு ஒருவிதமான அறிகுறியாக கூட இருக்கும்.
சிவப்பு மற்றும் எரிச்சல் கண்கள்: கண்கள் சிவப்பாகவும், எரிச்சலுடனும் இருந்தால் அது சைனஸ் மற்றும் சளியின் அறிகுறி. மேலும் சில நேரத்தில் அலர்ஜியின் காரணமாகவும், கண்களுக்கு போடும் மேக் கப் செட்டில் இருக்கும் கெமிக்கல்களின் மூலமாகவும் வரும்.
அதுமட்டுமல்லாமல் கண்களுக்கு தேவையில்லாமல் கண்களுக்கான மருந்துகளை பயன்படுத்தினாலும் ஏற்படும். ஆகவே இது ஒரு கண்களை வைத்து, ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ளலாம்.
வெளிர் நிற கண்கள்: வெளிரி நிறத்தில் கண்கள் இருந்தால் உடலில் அனிமியா முற்றியுள்ளது என்பதற்கான அறிகுறி. அதாவது உடலில் உள்ள ஹீமோகுளோபினின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், கண்கள் வெளிர் நிறத்தில் இருக்கிறது. ஆகவே இந்த நிலையில் கண்கள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
மஞ்சள் நிற கண்கள்: இந்த நிறத்தில் கண்கள் இருந்தால் உடலில் கல்லீரல், பித்தப்பை மற்றும் பித்த நாளங்கள் சரியாக இயங்காததால் ஏற்படுகிறது. மேலும் கண்களில் இருக்கும் வெள்ளை நிறப்பகுதி மட்டும் நன்கு மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் அவர்கள் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறியலாம்.
வீக்கமான கண்கள்: கண்கள் வீக்கத்துடன் காணப்பட்டால் உடலில் குறைபாடு உள்ளது என்பதை காட்டுகிறது. அதுவும் தைராய்டிசத்தில் ஒன்றான ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறியாக உள்ளது.
ஆகவே அப்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஆனால் சில சமயங்களில் அது எந்த வித காரணமும் இல்லாமல் இருக்கலாம். ஆகவே என்னவோ, கண்கள் வீக்கத்துடன் காணப்படுகிறதென்று யாராவது கூறினாலோ, உங்களுகே தோன்றினாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
வறட்சியான கண்கள்: கண்கள் வறட்சியுடன் காணப்பட்டால் உடல்நிலையில் குறைபாடு மிகுந்துள்ளதை காட்டுகிறது. மேலும் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்துள்ளது.
இதனால் உடலில் நோய்கள் எளிதில் நுழையும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த நிலையில் இருந்த தவிர்க்க, நிறைய தண்ணீரை பருக வேண்டும். மேலும் நல்ல ஆரோக்கியத்தை தரும் உணவுகளை உண்ண வேண்டும்


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உங்கள் பைக்கை நீங்களே பராமரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள்.

  மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு அதை பற்றிய அனைத்து விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்ற அவ...

Popular Posts