லேபிள்கள்

செவ்வாய், 1 நவம்பர், 2011

சிரிச்சா நல்லது...


 

துணை ஆசிரியர்...இவ்வார அட்டைபடம் வெகு
ஜோர்னு நிறைய பேர் லெட்டர் போட்டிருக்காங்க.
ஆச்சரியமா இருக்கு...

பத்திரிகை ஆசிரியர்...- இதுல ஆச்சரியம் என் இருக்கு..?

துணை ஆசிரியர்..- போன வாரம் நாம அட்டையில
படமே போடல ஸார்..அது தான்...!
ஒருவர்..- உங்க அழகிலேயே உங்க சிரிப்பழகுதான்
சூப்பர்னு லவ் லெட்டர் எழுதியது தப்பா போச்சு!

நண்பர்..- ஏன்? என்ன ஆச்சு..?

அவர்..
 அந்த நடிகை தன் பல்செட்டை
பார்சலில் அனுப்பிவிட்டாங்க.. .
சாப்பிட வந்தவர் : என்னய்யா சாம்பார்ல புதுசா
பிளேடு ஒன்று கிடக்குது....?

சர்வர்.:
 தாங்ஸ்! கொண்டாங்க ஸார்.
ஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம
தேடிட்டு இருக்கேன்.
முதல் பெண் : “ஏண்டி! வாயில லிங்கம் எடுக்கற சாமியார்கிட்ட போனியே, என்ன ஆச்சு?”

மற்றொரு பெண்
 : “ம். அவர் என்னை ‘வாந்தி’ எடுக்க வச்சுட்டாரு...
நடிகர் மோகன் பேக்கரி கடைக்குப் போய் 'கேக்' எப்படி கேட்பார்...

மலையோரம் வீசும் காத்து,
மனதோடு பாடும் பாட்டு
, கேக்கு தா, கேக்கு தா.....
ஒருவர் : ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??

மற்றவர்
 : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா... 
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு
நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்?

நபர் 2 : உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக இப்படியொரு வழக்கம் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
நபர் 1 : காதல் திருமணம் சிறந்ததா பெரியோர் நிச்சயிக்கும் திருமணம் சிறந்ததா என்று பட்டிமன்றத்திற்கு பெயர் வைப்பதற்குப் பதிலாக இப்படியும் வைக்கலாம்.

நபர் 2: எப்படி?

நபர் 1 : தற்கொலை செய்வது சிறந்ததா? கொலை செய்யப்படுவது சிறந்ததா?
ஒரு மனிதன் தனது மனைவியால் மிகவும் கஷ்டப் பட்டான். அவர் அவனுக்கு அடங்காமல் இவனை ஆட்டுவித்தாள். இந்த உலகத்தில் பெண்களே இல்லாத இடத்திற்குப் போய் சந்தோஷமாக இருக்க போகின்றேன். நான் பட்டது போன்ற வேதனையை என்மகனும் படக்கூடாது என்று நினைத்து தனது ஒரே மகனையும் தன்னோடு எடுத்துக் கொண்டு போய்.... 

மனிதர்களே இல்லாத ஓர் தீவில் மகனுடன் வாழ்ந்து வந்தான். வருடங்கள் பல சென்றன. ஒரு நாள் ஒரு சிறிய கப்பல் அந்த தீவிற்கு வந்தது. அதிலே ஒரு குடும்பம் வந்திறங்கியது அதிலே ஓர் இளம்மங்கை ஒருத்தியும் இருந்தாள். தகப்பனும் மகனும் அங்கே (உடைகள் இல்லாது) வந்த போது அந்த மங்கை இவர்களைக் கண்டதும் பயத்தில் ஓ....வென்று கத்தியபடி ஓடத்தொடங்கினாள்.
 

அவள் ஓடிய சிறிது நேரத்தில் அந்த கப்பலும் தீவினை விட்டு போய்விட்டது. அப்போது மகன் தந்தையைப் பார்த்து கேட்டான்.
 

" நாங்கள் கண்டது என்ன அப்பா?"
 

"ஓ....அதுவா அது பிசாசு! அந்தப் பிசாசு எங்களைக் கொன்று இரத்ததைக் குடிக்கும்"
 

ஆ! அப்படியா என்று மகனும் பயத்துடன் கேட்டான்.
 

இரவு பாதி தூக்கத்தில் மகன் சொன்னான்.
 

"அப்பா, அப்பா அந்த பிசாசு அழகா இருந்தது என?
 

அப்பா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 :cyclopsani: :cyclopsani: :cyclopsani:

கருத்துகள் இல்லை:

Hiccups: விக்கல் என்னும் சிக்கலைத் தீர்க்க டிப்ஸ்

Hiccups: விக்கல் வருவதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. பொதுவாக யாராவது உங்களை நினைத்தால் ...

Popular Posts