லேபிள்கள்

சனி, 5 ஜனவரி, 2019

ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருள்கள் பல உள்ளன. அவற்றை அறிவோம்.!


ஒரு பொருளைப் பதப்படுத்தி, பாதுகாத்து நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஃப்ரிட்ஜ். ஆனால், காய்கறிகள், பழங்கள், சாக்லேட், பீட்சா என எல்லாவற்றையுமே ஃப்ரிட்ஜுக்குள் அடக்கிவிடுகிறோம். ஃப்ரிட்ஜுக்குள் இடமிருக்கிறது என்பதற்காக இருக்கும் பொருள்களையெல்லாம் அடுக்கிவிடுவது நல்லதல்ல. பலருக்கு இதுபற்றிய விழிப்பு உணர்வு இருப்பதில்லை. பொருள்களை எத்தனை நாள்கள் வைத்திருக்கலாம் என்பதை அறியாமல் அந்தப் பொருளையும் கெடுத்து, உடல்நலனையும் பாழாக்கிக் கொள்கிறோம். ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருள்கள் பல உள்ளன. அவற்றை அறிவோம்.
பச்சை மிளகாய்
பச்சை மிளகாயை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. ஃப்ரிட்ஜினுடைய அதிக குளிரானது மிளகாயை அழுகச் செய்துவிடும். சாதாரண சூழலில் வெளியில் வைப்பதே போதுமானது.

பூண்டு
பூண்டை ஃப்ரிட்ஜில் வைத் தால் சுவை குறைந்துவிடும். பூண்டையும் பச்சை மிளகாய் போலவே வெளியில் வைத்தாலே போதும்.

வெங்காயம்
வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைத்தால் அழுகிய நாற்றம் ஏற்படும். அதி்லுள்ள ஃபோலிக் ஆசிட், குவர்சிட்டின் சத்துகளும் குறைந்துவிடும். வெங்காயத்தை வெளியே வைத்திருந்தாலே போதும். வெங்காயம் உலர்ந்தாலும் அதன் சுவையும் சத்துகளும் மாறாமல் இருக்கும்.

பரங்கிக்காய், சுரைக்காய்
பரங்கிக்காய், சுரைக்காய் வகை களையும் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. அதன் இயற்கையான நீர்ச்சத்து மாறி, சுவையும் கெட்டுவிடும்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்குகளை ஃப்ரிட்ஜில் வைப்பதால் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படலாம். இதனால் காற்றோட்ட முள்ள இடங்களில் உருளைக்கிழங்கு களை வைக்க லாம். ஃப்ரிட்ஜில் வைப்பதால் அதனுடைய சுவை குறைந்து விடும்.

தர்பூசணி, முலாம்பழம்
தர்பூசணி, முலாம்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்களை வெளியில் வைத்தாலே போதும். ஒருவேளை நறுக்கினால், இரண்டு நாள்கள் மட்டும் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து சாப்பிடலாம். அதற்கு மேல் அப்பழங்கள் நீர்த்தன்மையை இழந்துவிடும்.

சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகை பழங்களையும் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. சாதாரண வெப்பநிலையே இந்தப் பழங்களைப் பழுக்கச் செய்துவிடும். ஃப்ரிட்ஜில் வைப்பதால் அப்பழங் களின் தோல் பாதித்து, பளபளப்பும் மங்கிவிடும்.

மூலிகைகள், கீரைகள்
மூலிகைகள், கீரைகள், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அவற்றின் சத்துகள் குறையும். நீர் நிறைந்த பாத்திரத்தில் இவற்றின் தண்டுப்பகுதியை நீரில் மூழ்கி இருக்குமாறு வைத்திருந்தாலே போதும். உலர்ந்து போகாமல் இருக்கும்.
பழங்கள்

எந்தப் பழத்தையும் நறுக்கிய பின்னர் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃப்ரிட்ஜுக்குள் இருக்கும் வாயு பழங்களின் மீது படரும். இது உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும். பழங்களில் கிருமிகளின் தாக்கம் ஏற்படும். தேவையானபோது பழத்தை நறுக்கி உண்பதே நல்லது.

வாழைப்பழம்
ஃப்ரிட்ஜில் இருந்து வெளியாகும் வாயுவானது அதிகப்படியான குளிரில் வாழைப்பழத்தின் சத்தைக் கெடுத்துவிடும். பழமும் அழுகிவிடும். காற்றோட்டமுள்ள இடத்தில் வாழைப் பழத்தை வைத்திருப்பதே நல்லது.

தக்காளி
அதிக குளிர், தக்காளியின் பளபளப்பையும் சுவையும் பாதிக்கக் கூடியது. காற்றுப்புகக் கூடிய சாதாரண சூழலிலேயே தக்காளி சில நாள்கள் வரை கெடாமல் இருக்கும். ஃப்ரிட்ஜில் வைக்கும் தக்காளியின் சுவை குறையும்.

உலர்பழங்கள்
திராட்சை, அத்தி, பேரீச்சம் போன்ற உலர்பழங்களையும் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. உலர்ந்த பழங்கள் அதன் உலர்ந்த தன்மைக்காகத்தான் விரும்பப் படுகின்றன. அந்தத் தன்மையை ஃப்ரிட்ஜ் கெடுத்துவிடும்.

பெர்ரி வகைப் பழங்கள்
சாதாரண தட்பவெப்ப நிலையே பெர்ரி வகைப் பழங்களுக்குப் போதுமானது. ஃப்ரிட்ஜில் வைக்கும்போது இப் பழங்களின் சுவை கெட்டு விடும்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts