லேபிள்கள்

புதன், 5 செப்டம்பர், 2018

மார்க்கத்தில் எது சில்லரை விடயம்?


மார்க்கத்தில் ஏதேனுமொரு விடயம் ஊர்வலமைக்கு மாற்றமாக அல்லது ஒருவர் சுமந்து கொண்டிருக்கும் கொள்கைக்கு மாற்றமாக
-குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் மூலம்- எடுத்துக் கூறப்பட்டால்,
"ஏன் சில்லரைப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிப் பேசி காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள்"
எனும் வார்த்தைப் பிரயோகங்களை நாம் அதிகம் செவிமடுக்கக் கூடியவர்களாக இருக்கின்றோம்.
இப்படிக் கூறுபவர்களிடம் ஓர் கேள்வி "உங்களுக்கு மார்க்கத்திலுள்ள விடயங்களை சில்லரை விடயம், தாள் விடயம், ரியால் விடயம், டொலர்விடயம் என வகுத்து கற்றுத்தந்தவர்கள் யார்???"
இஸ்லாம் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் எப்படி இபாதத்தாக மாற்றிக் கொள்வது என வழிகாட்டியிருக்கின்ற சந்தர்ப்பத்தில்,
நீங்கள் எப்படி மார்க்கத்தின் விடயங்களை சில்லரை விடயங்களாக கருதுவீர்கள்???
யார் உங்களுக்கு அந்த அதிகாரத்தை தந்தது???
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

"لا تَحْقِرَنَّ مِنَ المَعْرُوْفِ شَيْئًا"

"நன்மையான சிறு விடயமாயினும் இழிவாக (சில்லரையாக)க் கருதாதே.
(ஆதாரம் : முஸ்லிம்)
எனவே மார்க்கத்தில் எந்த விடயமும் அட்பமான, சில்லரை விடயங்களாகக் கிடையாது.
உதாரணமாக நமக்கு இறைவன் பேசக்கூடிய நாவொன்றை தந்திருக்கின்றான். அதன் மூலம் நாம் விரும்பும் விடயத்தை விரும்பிய விதத்தில் பேசலாம் என்று ஒருவன் கரிசனையின்றி செயற்பட்டால் சிலவேலை அது நம்மை நரகத்தில் தள்ளிவிடும்.
ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார் :

إِنَّ العبد لَيتكلّم بالكلمة -مِنْ رضوان الله- لا يُلْقِي لها بالاً، يرفعه الله بها في الجنة, وإن العبد ليتكلم بالكلمة -من سَخَط الله- لا يُلْقِي لها بالاً، يهوي بها في جهنم))

"ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்."
ஆதாரம் : புஹாரி (6478)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள்
#மேலும்,
– அனைத்து நற்செயல்களும் ஸதகா
– தன் சகோதர முஸ்லிமைப்பார்த்து புன்முறுவல் பூப்பது ஸதகா
– நன்மையை ஏசி தீமையை தடுப்பது ஸதகா
– பாதை தெரியாமல் வழிதவரி தத்தளிக்கும் மனிதனுக்கு வழிகாட்டுவது ஸதகா
– பாதையில் கிடக்கும் (கட்கள், முட்கள், எழும்புகள் போன்ற) மக்களுக்கு இடையூறு தரும் பொருட்களை பாதையை விட்டும் அப்புறப்படுத்துவது ஸதகா
#மேலும் ,
– மலசலம் கழிக்கச்செல்லும் போது இடது காலை வைத்தும், அதிலிருந்து வெளிவரும் போது வலது காலை வைத்து வெளியேருதல்.
– தும்மல், கொட்டாவி விடும்போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்
– எச்சில் துப்பும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்
– தூங்கும் போதுள்ள ஒழுங்குகள்
போன்ற அனைத்து விடயங்களையும் இஸ்லாம் எங்களுக்கு வழிகாட்டியிருக்கும் சந்தர்ப்பத்தில், இதில் எந்த விடயத்தை நீங்கள் சில்லரை விடயமாகக் கருதப்போகின்றீர்கள்???
இப்படி சில்லரை சில்லரை என்று மார்க்கத்தின் விடயங்களை அலட்சியம் செய்யாதீர்கள். ஏனெனில் நாளை மறுமையில், நாங்கள் செய்த சிறிய , பெரிய அனைத்துவிடயங்களையும் அல்லாஹுத்தஆலா நம்முன் கொண்டுவருவான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ

அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
(அத்தியாயம் :99 , வசனம் : 06)

فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
(அத்தியாயம் : 99 , வசனம் : 07)

وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ

அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
(அத்தியாயம் : 99 , வசனம் : 08)
#எனவே, மார்க்க விடயங்களை சில்லரை விடயங்கள் என்று கருதாமல் ; அனைத்தும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல் என்ற உறுதியான கொள்கையில் "நபியவர்கள் ஏவிய விடயங்களை முடியுமான அளவு பின்பற்றி நடக்கவும், அவர்கள் தடுத்த விடயங்களை முழுமையாக தவிர்ந்து நடக்கவும் வல்லவன் அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!.
அன்புடன் :
Razeen Akbar



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts