லேபிள்கள்

செவ்வாய், 1 நவம்பர், 2011

மனை (ப்ளாட்)வாங்க ஆலோசனை தேவை



1.நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட இடத்தில் ஒரு இடம் வாங்கினால்,இடத்தை விற்பரிடம் என்னென்ன ஆவணங்களை கேட்டு சரிபார்க்கவேண்டும்?

2.இடத்தை விற்பனை செய்வரின் இடம்தானா அது?அல்லது வேறொருவரின் இடத்தை நம்மை ஏமாற்றி நம்மிடம் போலியாக விற்பனை செய்கிறாரா?என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

3.நாம் வாங்கும் இடம் அரசின் தேவைகளுக்காக ஒதுக்கப்படாத இடம் என்றும்,அந்த இடம் வீடுகட்ட தகுதியான அதாவது விவசாய நிலம் அல்ல என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

4.பத்திர பதிவின்போது கடைபிடிக்கவேண்டிய நடைமுறை என்ன?

5.எப்போது பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவேண்டும்? பட்டா மாற்றம் செய்ய என்னென்ன விதிமுறைகள் உள்ளன?

6.பட்டாவிற்கும் பத்திரத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

7.குறிப்பாக நிலத்தை விற்பவர்தான் அதன் உரிமையாளர் என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

8.ஒரு நிறுவனம் 20,30 மனைகளை போட்டு விற்பனை செய்கிறார்கள்.அப்படிப்பட்ட மனைகளை நாம் வாங்கும்போது சட்டரீதியாக என்னென்ன அம்சங்களை பார்க்கவேண்டும்.அந்த மனைக்கு என்னென்ன அனுமதியை விற்பவர்கள் பெற்றிருக்கவேண்டும்?லே அவுட் என்கிறார்களே,அதைப்பற்றியும் விளக்கவும்.
நகராட்சி என்றில்லை. எந்த நிலமாக இருந்தாலும் முதலில் மூல ஆவணங்கள் தேவை. உங்களிடம் விற்பவருக்கு இந்த நிலம் எப்படி வந்தது? விற்பவருக்குத் தந்தவருக்கு எப்படி வந்தது? ஆகிய இரு மூல ஆவணங்கள் இருந்தால் நல்லது. அதுவும் நகல் ஆவணமாக இல்லாமல் அசல் ஆவணமாக இருந்தால் சரி. 

விற்பவர் பெயரில் பட்டா இருக்கின்றதா என்று பார்க்கவேண்டும். இதற்கான ஆவணத்தை 10(1) என்பார்கள்.

ஏற்கனவே அந்த நிலத்தில் கட்டிடம் இருந்தால் அந்தக் கட்டிடத்திற்கான சமீபத்திய தீர்வை ரசீது மற்றும் மின்கட்டண ரசீதுகள் பார்க்க வேண்டும். நகராட்சி அனுமதித்த கட்டிட வரைபடமும் வாங்கி அதன்படி கட்டிடம் இருக்கின்றதா என்றும் காண்பது நல்லது.

நகராட்சியாக இருந்தால் சர்வே எண் மற்றும் ப்ளாட் எண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கின்றதா என்று காண வேண்டும். கிராமப் புறம் என்றால் சர்வே எண் மட்டுமே இருக்கலாம்.

இடத்தின் விஸ்தீரணம் சரியாக எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளவேண்டும். இடத்தைச் சுற்றி இருப்பவர்கள் பெயர்களும் இருக்கும். நான்கு திசைகளில் இருப்பதைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.
 

இடத்துக்குச் செல்லும் பாதையின் அளவு என்ன? அது தனிப்பாதையா பொதுப்பாதையா? அல்லது பங்குப் பாதையா? இவையனைத்தும் முக்கியம். பாதையில்லா நிலத்தால் எந்தப் பயனுமில்லை. 

2.இடத்தை விற்பனை செய்வரின் இடம்தானா அது?அல்லது வேறொருவரின் இடத்தை நம்மை ஏமாற்றி நம்மிடம் போலியாக விற்பனை செய்கிறாரா?என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

மூல ஆவணத்தைச் சரி பார்த்த பின்னால், குறைந்த பட்சம் 20 ஆண்டுகளுக்கு வில்லங்கச் சான்றிதழ் வாங்க வேண்டும். அதில் சொத்து பற்றிய அனைத்து உரிமை மாற்றங்களும் இருக்கும். அதை வைத்து உண்மையிலேயே இந்தச் சொத்து யாருடையது என்று கண்டறியலாம். 

3.நாம் வாங்கும் இடம் அரசின் தேவைகளுக்காக ஒதுக்கப்படாத இடம் என்றும்,அந்த இடம் வீடுகட்ட தகுதியான அதாவது விவசாய நிலம் அல்ல என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

வீடு கட்டுவதற்கான இடம் என்றால், மாநகராட்சி/நகராட்சி/ஊராட்சி/பஞ்சாயத்து ப்ளாட் அப்ரூவல் இருக்கும். 

4.பத்திர பதிவின்போது கடைபிடிக்கவேண்டிய நடைமுறை என்ன?

இடத்தின் அரசு உத்தேச‌ மதிப்புக்கு பத்திரங்கள் வாங்கப்பட்டிருக்கின்றதா? மூல ஆவணத்தில் குறிப்பிட்டவர்கள்/ தேவைப்பட்டால் அவர்களது வாரிசுகள் அனைவரும் வந்து கையெழுத்து இடுகின்றனரா? போன்றவற்றைக் காண வேண்டும். வருமான வரி பற்றிய பிரச்னைகள் ஏதுமிருக்குமா என்பதைப் பற்றியும் யோசிக்கவேண்டும். 

5.எப்போது பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவேண்டும்? பட்டா மாற்றம் செய்ய என்னென்ன விதிமுறைகள் உள்ளன?

நம் பெயருக்குப் பத்திரம் பதிந்து கையில் வந்ததும் மாற்றம் செய்யலாம். நகராட்சி/கிராம நிர்வாக அலுவலரிடம் மாற்றிக் கொள்ள விண்ணப்பிக்க வேண்டும்.

6.பட்டாவிற்கும் பத்திரத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

பத்திரம் நமக்கு யார் எழுதிக் கொடுத்தார்கள் என்பதற்கான உரிமை சாசனம். பட்டா என்பது நகராட்சி அல்லது கிராம நிர்வாக அலுவலகத்தில் யார் பெயரில் சொத்து இருக்கின்றது என்று பதிந்து கொள்ளும் ஆவணம். இரண்டும் வெவ்வேறு அரசு இயந்திரங்கள். இரண்டிலும் பதிந்து கொள்வது நமக்கு நல்லது.

7.குறிப்பாக நிலத்தை விற்பவர்தான் அதன் உரிமையாளர் என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

மூல ஆவணம் மற்றும் சொத்து வில்லங்கச் சான்றிதழ், தேவைப்பட்டால் வாரிசுச் சான்றிதழ்.

8.ஒரு நிறுவனம் 20,30 மனைகளை போட்டு விற்பனை செய்கிறார்கள்.அப்படிப்பட்ட மனைகளை நாம் வாங்கும்போது சட்டரீதியாக என்னென்ன அம்சங்களை பார்க்கவேண்டும்.அந்த மனைக்கு என்னென்ன அனுமதியை விற்பவர்கள் பெற்றிருக்கவேண்டும்?லே அவுட் என்கிறார்களே,அதைப்பற்றியும் விளக்கவும்.

கருத்துகள் இல்லை:

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts