லேபிள்கள்

திங்கள், 28 பிப்ரவரி, 2022

காய்ச்சல் வந்ததும்என்னவெல்லாம் செய்யவேண்டும் செய்யக்கூடாது...?

காய்ச்சல்காரர் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும். தாகம் எடுத்தால், வெந்நீரை ஆறவைத்தோ, வெதுவெதுப்பாகவோ பருக வேண்டும். தாகம் இல்லாமல் ஒரு சொட்டு நீர் கூட பருகக்கூடாது.

காய்ச்சல் துவக்கநிலையில் இருக்கையில், பசிக்கும்போது, அரிசிக் கஞ்சி, இட்லி, இடியாப்பம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். இட்லி இடியாப்பத்திற்கு சர்க்கரை தொட்டுக் கொண்டால் நல்லது. குழம்பு, சட்னிகளைத் தவிர்க்க வேண்டும்.

காய்ச்சல் உயர்ந்து பின்னர் இறங்கும். அந்த நிலையில் பசிக்கும்போது, இரசம் ஊற்றி சோற்றை நன்கு கரைத்து உட்கொள்ளலாம். இரசத்தில் புளிக்குப் பதில்  தக்காளி சேர்ப்பது நல்லது. இதற்கு பருப்புத் துவையல், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி துவையல் வகைகள் தொட்டுக்கொள்ளலாம்.

காய்ச்சலின் அளவு மிகவும் அதிகமானால், குளிர்ந்த நீரில் துணியை நனைத்து நெற்றியில் ஒத்தடம் தரவேண்டும். உடல் குளிரும் அளவுக்கு ஒத்தடம் தரக் கூடாது. அதிக வெப்பம் குறையும் அளவு தந்தால் போதும்.

காய்ச்சல் இருக்கும்போது, பசிக்காமல் சாப்பிடுவது மிகமோசமான விளைவுகளை உருவாக்கும். மேலும் தாகம் இல்லாமல் தண்ணீர் பருகுவதும் நல்லதல்ல. எக்காரணம் கொண்டும் உடலின் தேவையைப் புரிந்துகொள்ளாமல் உணவை நாடாதீர்கள்.

மேற்கண்ட உணவுகள் தவிர வேறு எந்தவகை உணவையும் பானத்தையும் தவிர்ப்பது சிறந்தது. குறிப்பாக, பால் பொருட்களை நிறுத்திவிடுவது மிகமுக்கியம்.

நிலவேம்பு போன்ற கசாயங்களைப் பருகும் வழக்கம் இப்போது அதிகரித்துள்ளது. முறையான மருத்துவ ஆலோசனை இல்லாமல் நிலவேம்பு போன்ற மருந்துகளைப்  பருகுவது நல்லதல்ல.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-not-to-do-when-the-fever-comes-120110600069_1.html


--

சனி, 26 பிப்ரவரி, 2022

மீன் எண்ணெய்மாத்திரைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !!

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீன் எண்ணெய்யை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது. இந்த எண்ணெய்யில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

மீன் எண்ணெய் மாத்திரையை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.

மீன் எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெய்யை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெய்யை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு  சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெய்யில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.

முக்கியமாக இந்த எண்ணெய்யை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும்  நன்கு இருக்கும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/benefits-of-eating-fish-oil-tablets-120111000043_1.html


--

புதன், 23 பிப்ரவரி, 2022

கருப்பட்டில்போலி எது என்பதை எவ்வாறு கண்டறிவது...?

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனீரிலிருந்து தயாரிக்கப்படுவது தான் கருப்பட்டி வெல்லம். இதனை பனை வெல்லம் என்றும் அழைப்பர். பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனீரினை காய்ச்சுவது மூலம் இந்த வெல்லம் கிடைக்கிறது.

கருப்பட்டியை அல்லது கருப்பட்டித் துண்டைக் கடித்து மெல்லும் போது, அதன் சுவை கரிப்புத் தன்மையுடன் கூடிய இனிப்புச் சுவையாக இருந்தால், அதுதான் ஒரிஜினல் கருப்பட்டி.

முழுக் கருப்பட்டியை உடைத்துப் பார்த்தால் கறுப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும். ஆனால், போலி கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கும். கடைகளில் வாங்கி வீட்டில் வைத்திருக்கும் கருப்பட்டி சில நாட்களில், சில வாரங்களில் அதனுடைய கெட்டித் தன்மையில் இருந்து இளக ஆரம்பித்தால் அது போலி. கல்லு போன்று அதன் தன்மை மாறாமல் இருந்தால், அது தான் உண்மையானது.

நாள்பட்ட கருப்பட்டியின் மேல்புறம் புள்ளிப் புள்ளியாக மாறும். பதநீரில் சுண்ணாம்பு சேர்ப்பதால்தான் இந்த மாற்றம். ஆனால், போலி கருப்பட்டியில் புள்ளி வராது.
 

ஒரு டம்ளர் தண்ணீரில் சின்னக் கருப்பட்டி துண்டைப் போட்டால், அது முழுவதுமாக கரைய ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாகும். ஆனால் போலி கருப்பட்டி, அரை மணி நேரத்திலேயே கரைந்துவிடும்.

தேங்காயைத் தட்டிப் பார்ப்பது போல, கருப்பட்டியின் அடிப்பாகத்தை தரையில் தட்டிப் பார்க்கவும். சத்தம் மிதமாகக் கேட்டால் அது ஒரிஜினல். சத்தம் அதிகமாகக்  கேட்டால் அது போலி. கருப்பட்டியை கையில் எடுத்து உற்றுப்பார்த்தால் பளபளப்பில்லாமல் இருந்தால் அது ஒரிஜினல். அதுவே, கருப்பட்டியின் மேல் மைதா மாவு  போல, தொட்டால் கையில் வெள்ளையாக ஒட்டினால் அது போலியானது என கண்டுபிடிக்கலாம்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/how-to-find-out-what-is-fake-karupatti-120111000092_1.html


--

சனி, 19 பிப்ரவரி, 2022

அழகை பேணிக்காப்பதில்முக்கிய பங்கு வகிக்கும் கடலை மாவு !!

அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும்.

கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.

கடலைமாவை உடல் முழுவதும் பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.

இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும்.

இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும்.

கடலை பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் "பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ்வேண்டும். பருக்கள் இருந்த படிப்படியாக மறைந்து போகும். 

https://tamil.webdunia.com/article/health-related-to-beauty/gram-flour-plays-an-important-role-in-preserving-beauty-120111300067_1.html


--

புதன், 16 பிப்ரவரி, 2022

மண்பாண்டத்தைஉபயோகிப்பதால் உண்டாகும் நன்மைகள் !!

மண்பானையில் சிறு சிறு துவாரங்கள் இருக்கும். வெளியில் உள்ள வெப்பநிலை அதிகரிக்கும்போது, இந்த நுண்துவாரங்கள் வழியாக பானையின் வெப்பமும்,  தண்ணீரின் வெப்பமும் தொடர்ந்து ஆவியாவதன் மூலம் வெளியேற்றப்படுகிறது. அதனால்தான் மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீர் சில்லென்று குளிர்ச்சியாக  இருக்கிறது.

மண்பாண்டத்தில் சமைப்பதால், வெப்பம் சீராக பாத்திரம் முழுவதும் பரவுகிறது. மேலும், நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை மண்பாண்டங்களுக்கு இருப்பதால், உணவு சூடாகவே இருக்கும். அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் போகாது. பாத்திரம் முழுவதும் வெப்பம் மெதுவாகப் பரவுவதால்,  உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படியே நிலைத்திருக்கின்றன. இதுவே மண்பாண்டத்தில் சமைக்கப்படும் உணவு கூடுதல் சுவையுடன் இருப்பதற்கு முக்கியக்  காரணம்.

மண்பாண்டங்களில் ஆல்கலைன்கள்  நிறைந்துள்ளன. இவை தண்ணீரின் அமிலத்தன்மையோடு இணைந்து, உடலின் pH தன்மையை சமன் செய்கிறது. நீரில்  அமிலத்தன்மை சமன் செய்யப்படுவதால், வாயுத்தொல்லைகள் நீங்கும்.

மண்பாண்டங்களில் சேமிக்கப்படும் தண்ணீரைப் பயன்படுத்துவது ஜீரண உறுப்புகள் சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. மேலும், தசைகள் வளர்ச்சி, எலும்புகள்  மண்டலத்தை உறுதியாக்குதல் உள்ளிட்டவற்றுக்கு முக்கியக் காரணியாகச் செல்படும் டெஸ்டோஸ்டெரோன் அளவை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது.

மண்பாண்டத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரைப் பருகுவது, சன் ஸ்டோக்கில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. மற்றொரு நன்மை என்னவென்றால், தொண்டையில் நோய் தொற்று உள்ளவர்கள் இதனைப் பருகுவதால், தொற்று நீங்கி குணமடைவர். வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் நம்மைத் தாக்காமல் இருக்க மண்பாண்டங்களே சிறந்தவை.

பலவித நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள உதவும் மண்பாண்டங்கள், கோடை காலத்திற்கு மட்டுமல்ல, எல்லா காலங்களுக்கும் ஏற்றது.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/benefits-of-using-mudpots-120112000052_1.html


--

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

எலும்புகள் வலுவிழப்பதற்கானகாரணங்கள் என்ன தெரியுமா...?

உடல் பருமன் பல வித உடல்நல ஆபத்துக்களை ஏற்படுத்தும். இந்த ஆபத்துகளில் ஒன்று தான் எலும்புகளுக்கு ஏற்படும் ஆபத்து. உடலில் உள்ள அதிகமான எடை கால்களின் மீது தான் தாங்கி நிற்கும். இதனால் மூட்டுக்களில் பாதிப்பு ஏற்பட்டு, எலும்புகள் வலுவிழக்கும். 

எலும்புகளில் ஏதாவது பிரச்சனை என்றால் எழுந்திருக்கும் போதோ அல்லது நடக்கும் போது ஒரு வித வலியை ஏற்படுத்தும். அவை கால்சியம் குறைபாடு உள்ளது  என அர்த்தமாகும். 

தைராய்டு கோளாறுக்காக நாம் உண்ணும் மருந்துகளின் பக்க விளைவை ஏற்படுத்தும். எலும்புகளில் இருந்து கால்சியத்தை எடுத்து விடும். அதனால் தைராய்டு மருந்துகள் எடுத்துக் கொண்டால், 5 மணி நேரத்திற்கு பிறகு கால்சியம் மாத்திரையையும் சாப்பிடுவது நல்லது.

உப்பு அதிகமாக இருக்கும் பதப்படுத்தப்பட்ட மற்றும் ஜங்க் உணவுகளை உட்கொள்ளும் பழக்கத்தை நீங்கள் கொண்டிருந்தால், அதனை குறைத்திடுங்கள். இல்லையென்றால் எலும்புகள் வலுவிழக்கும்.

அன்றாட உணவில் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்வதால் எலும்புகளை காத்திடலாம். கால்சியம் கலந்த மாத்திரை மருந்துகளை விட இவை  சிறப்பாக செயல்படும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/do-you-know-the-causes-of-weak-bones-120112400075_1.html


--

புதன், 9 பிப்ரவரி, 2022

பனங்கிழங்குசாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா...?

பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலுகிடைப்பதுடன், ஆரோக்கியமும் மேலோங்கும். இந்த பனங்கிழங்கை அப்படியே சாப்பிடாமல் வித்தியாசமாக தோசை செய்தும் சாப்பிடலாம்.

நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக் கூடியது. மார்கழி மாசம் தொடங்கி தை, மாசி வரை பனங்கிழங்கு சீசன் என்று சொல்வார்கள். அந்த மாதங்களில் பனங்கிழங்கு அதிகமாக நமக்கு கிடைக்கும். இதனைச் சாப்பிடுவதால் நமக்கு பலம் கூடுகிறது.

பனங்கிழங்கை சிறிது மஞ்சளுடன் சேர்த்து வேக வைத்து, பின்னர் கிழங்கை வெயிலில் காய வைத்து, அதை, மாவாக்கி, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட, உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைத்து, உடல் வலுவாகும்.

பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட பெண்களின் கர்ப்பப்பை வலுப்பெறும் மற்றும் உடல் உள் உறுப்புகள் நலம் பெறும். சர்க்கரை பாதிப்பு  உள்ளவர்களும், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு உள்ளவர்களும் மாவை உணவில் சேர்த்துவர, நல்ல பலன்கள் தெரியும்.

வேக வைக்காத பனங்கிழங்கை வெயிலில் காயவைத்து, அரைத்து மாவாக்கி சேகரித்து வைத்துக் கொள்ளவேண்டும். தேவைக்கேற்ப இந்த மாவை கூழாக்கி  சாப்பிடலாம். இந்த மாவை நீரில் கரைத்து, தேவைக்கு உப்பு சேர்த்து, கோதுமை தோசை ஊற்றுவது போல் ஊற்றி தோசையாக சாப்பிடலாம் அல்லது உப்புமா  செய்தும் சாப்பிடலாம்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/do-you-know-the-benefits-of-eating-panang-kizhangu-120112400037_1.html


--

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

வாயு பிரச்சனைக்குஅற்புத மருந்தாகும் பெருங்காயம் !!

பெருங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் உள்ளது. சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில்  பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் புரதச்சத்தை பெறலாம்.

உடலில் வாதத்தையும் கபத்தையும் சமநிலைப்படுத்தும், உடலில் உள்ள நச்சுக்களை, அழிக்கும் ஆற்றல் மிகுந்தது. மலச்சிக்கல் பிரச்சனை தீர்க்கும். ஆனால்  அளவுக்கு அதிகமாக உபயோகித்தால், உடலில் பித்தம் அதிகமாகும்.

ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுபவர்கள், பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல்  பிரச்சனை தீரும். 

வாயு பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும், இருமலுக்கும் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.

பிரசவம் ஆன தாய்மார்களுக்கு, பிரசவத்திற்கு பின்னர் சில நாட்களுக்கு உதிரப்போக்கு இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு, வாணலியில் பெருங்காயத்தை  வறுத்து, அத்துடன் சிறிது கருப்பட்டி, இஞ்சிச்சாறு மற்றும் பூண்டு சேர்த்து, சாப்பிடக் கொடுப்பார்கள். இதனால், அவர்களின் உதிரபோக்கு பாதிப்புகள் படிப்படியாக  குறையும்.

தினமும் பெருங்காயத்தை உணவோடு சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் தீரும். மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை  அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/asafoetida-is-a-wonderful-medicine-for-gas-problem-120112500025_1.html


--

வியாழன், 3 பிப்ரவரி, 2022

பற்களை பாதுகாக்கும்வழிமுறைகளும் சில டிப்ஸ்களும்...!!

எலும்பு தாதுவிலிருந்துதான் பற்கள் வலிமை பெறுகின்றன. அதனால் நமது உடலில் எலும்பை பலப்படுத்தும் உணவும் பானமும் மருந்துகளும் சிறுவயது முதலே  உட்கொள்ளத் தொடங்கினால் எலும்புடன் பற்களும் உறுதிப்படும்.

பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பற்களை திடமாக வைப்பதில் நல்லெண்ணெய்க்கு நிகராக எதுவுமில்லை. தினமும் காலையில் பல்துலக்கியதும் அரைவாய் நிறையும் அளவு நல்லெண்ணெயை வாயில் விட்டுக் கொண்டு 10 -15 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு துப்ப வேண்டும். இதை தைல கண்டூஷம் என்று ஆயுர்வேதம் வர்ணிக்கின்றது. 

தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.

சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

பல் துலக்கும் முறையில் அதிக அழுத்தம் கொடுத்து பற்களை தேய்க்கக்கூடாது. ஈறுகளில் பிரஷ் படாதவாறு நிதானமாகத் தேய்க்க வேண்டும். மேல் வாய்  பற்களை தேய்க்கும்போது மேலிருந்து கீழாகவும், கீழ்வாய்ப் பற்களை கீழிருந்து மேலாகவும் தேய்க்க வேண்டும். பல் தேய்த்ததும் வாயில் நிறைய தண்ணீர் விட்டு  கொப்பளிக்க வேண்டும்.

இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/ways-to-protect-teeth-and-some-tips-120112600056_1.html


--

சனி, 29 ஜனவரி, 2022

பல் ஈறுகளில்ஏற்படும் பிரச்சனைகளை போக்கும் வெங்காய சாறு..!!

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி  குறையும்.

வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும். ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம். தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

நான்கு அல்லது ஐந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும்.

சம அளவு வெங்காயச் சாறு வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி குறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம  அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது லவங்க பிசினைத்தூள் செய்து சேர்த்து. சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/onion-juice-to-cure-gum-problems-120113000025_1.html


--

புதன், 26 ஜனவரி, 2022

அற்புத மருத்துவநன்மைகளை அள்ளி தரும் வில்வப்பழம்...!!

Sasikala|

வில்வப்பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் கண்டிக்கும்.

வாய்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும்   குணமாக்கும் வில்வப் பழம்.

வில்வப்பழமும் நல்லெண்ணெய்யும் சேர்ந்த தைலத்தை சிறிது விளக்கில் சூடாக்கி காதில் விட்டு பஞ்சால் அடைக்க வேண்டும் நாளடைவில் செவி நோய்கள்  நீங்கிவிடும்.

வில்வக்காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்துப் பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள்   போகும்.

வில்வத் தளிருடன் சிறிது துளசி, சில மிளகு ஆகியவற்றைச் சேர்த்து நசித்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். வில்வ வேர்ப்பொடி நான்கு சிட்டிகையெடுத்து தேனில் கலந்து உட்கொண்டால் உஷ்ணபேதி நிற்கும்.

வில்வவேர் தூளை நான்கு சிட்டிகையெடுத்து பசும்பாலில் கலந்து ஒரு நாளைக்கு இரு வேளையென தொடர்ந்து பதினெட்டு நாட்கள் உட்கொள்ள உடலழகும் சருமப்  பளபளப்பும் கூடும்.

வேர் நோய் நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம் மலமிளக்கும்.

வில்வப்பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அத்துடன் பழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் வீதம் ஒரு நாளைக்கு  3  முறை வீதம் குடித்து வந்தால் மலத்தில் சீதம், இரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளியேற்றும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/vilva-pazham-gives-amazing-medical-benefits-120113000080_1.html


--

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

சிறந்ததைத் தெரிவு செய்ய இஸ்திகாராதொழுகை

உங்களில் ஒருவருக்கு இரண்டு விடயங்களில் எதைத் தெரிவு செய்வது? எது நன்மையான காரியம் என்பதில் குழப்பமான நிலை ஏற்பட்டால் இஸ்லாம் காட்டும் அழகிய வழிமுறை தான் நீங்கள் இரண்டு ரக்அத் தொழுது விட்டு கீழ்வரும் துஆவை ஓதி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதன் பின்னர் நீங்கள் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.

இதற்கு மாற்றமாக குறி பார்பது, சீட்டுக் குளுக்கிப் போடுவது, போன்ற காரியங்கள் தவறான வழிமுறைகளாகும்.

قال تعالى (وأن تستقسموا بالأزلام ذلكم فسق

سورة المائدة :03

அல்லாஹ் கூறுகிறான்:

"நீங்கள் அம்பெறிந்து குறிபார்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளன. இவை பாவமாகும்" (அல்குர்-ஆன் 5:3)

இஸ்திகாரா தொழுகை முறை:

1) அழகிய முறையில் வுளூ செய்து இஸ்திகாரா நிய்யத்துடன் கடமையில்லாத இரண்டு ரக்அத்களைத் தொழ வேண்டும்.

2) இத்தொழுகை நமது வழமையான தொழுகைகளைப் போன்றது.

3) தேவை ஏற்படக்கூடிய நேரத்தில் தொழ முடியும். அதற்கென குறிப்பிடட்பட்ட நேரமில்லை. பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களை (இரவின் கடைசிப்பகுதி/அதானுக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரம்) தெரிவு செய்வது நல்லது.

4) தூங்கப் போகமுன் இஸ்திகாரா தொழுதால் நாம் தெரிவு செய்ய வேண்டிய விடயம் பற்றி கனவில் காட்டப்படும் என்ற நம்பிக்கை தவறானது.

5) ஹராமான காரியங்களுக்கு இஸ்திகாரா தொழக்கூடாது. அது போல் அன்றாட வாழ்கையில் உள்ள உண்ணுதல் , பருகுதல் போன்ற காரியங்களுக்கு இஸ்திகாரா கிடையாது.

6) இரண்டு ரக்ஆத் தொழுது விட்டே பின்வரும் துஆவை ஓத வேண்டும். மாதவிடாய் பெண்கள் தேவை ஏற்படும் போது இந்த துஆவை ஓதினால் போதுமானது.

7) நாம் இஸ்திகார தொழுது விட்டு எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். நாம் நினைத்ததற்கு மாற்றமாக நடை பெற்றால் கூட அதில் தான் நலவு இருப்பதாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:

"நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்; நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்குத் தீங்காகவும் இருக்கலாம்; நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன்" (அல்-குர்ஆன் 2:216)

இரண்டு ரக்அத்துக்களை தொழுத பின் ஓத வேண்டிய பிரார்த்தனை:

عن جابر بن عبد الله رضي الله عنهما، قال : كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كما يعلمنا السورة من القرآن، يقول : " إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة، ثم ليقل : اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك، وأسألك من فضلك العظيم، فإنك تقدر ولا أقدر، وتعلم ولا أعلم، وأنت علام الغيوب، اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني، ومعاشي، وعاقبة أمري " أو قال : " عاجل أمري وآجله، فاقدره لي ويسره لي ثم بارك لي فيه، وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري " أو قال : " في عاجل أمري وآجله، فاصرفه عني واصرفني عنه، واقدر لي الخير حيث كان، ثم أرضني ". قال : " ويسمي حاجته ".

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தது போல் எல்லாக் காரியங்களிலும் நல்லதைத் தேர்வு செய்யும் முறையையும் கற்றுத் தந்தார்கள்.

அவர்கள் கூறினார்கள்:

'உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கடமையல்லாத இரண்டு ரக்அத்களை அவர் தொழட்டும்.

பின்னர் 'இறைவா! உனக்கு ஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உனக்கு வல்லமை இருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன். உன்னுடைய மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ அனைத்திற்கும் அறிகிறாய். நான் அறிய மாட்டேன். மறைவான என்னுடைய இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் என்னுடைய மறுமைக்கும் சிறந்தது என்று நீ அறிந்தால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா! அதை எனக்கு பரக்கத் செய்! இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் கெட்டது என்று நீ அறிந்தால் என்னைவிட்டு இந்தக் காரியத்தையும் இந்தக் காரியத்தையும்விட்டு என்னையும் திருப்பி விடு. எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றிற்கு ஆற்றலைத் தா! திருப்தியைத் தா! என்று கூறட்டும். அதன் பிறகு தம் தேவையைக் குறிப்பிடட்டும்.'

ஸஹீஹ் புகாரி : 1162.

http://www.islamkalvi.com/?p=125528


--

புதன், 19 ஜனவரி, 2022

எடை போடப்படும் நன்மையும்– தீமையும்!

الوزن அல்வஸ்ன் – எடை,

ميزان மீஸான் – தராசு,

توازن தவாஸுன் – எடைக் கருவி,

மனிதன் தனது வாழ்க்கையில தவிர்க்க முடியாத ஒன்று அளவை கணக்கிட பயன்படுத்தும் கருவி "தராசு".

இந்த நவீன உலகில் மனிதன் பிறந்தவுடன் முதலில் அவனது உடல் தராசில் வைத்து எடை போடப்படுகிறது. அக்குழந்தையின் எடை மூன்று கிலோவுக்கும் அதிகமாக இருந்தால் அது ஆரோக்கியமான குழந்தை என்றும் மூன்று கிலோவுக்கும் குறைவாக இருந்தால் அது இன்னும் ஆரோக்கியம் தேவைப்படும் குழந்தை என்றும் இன்றைய மருத்துவ உலகம் கூறுகின்றது.

மனிதன் தனக்குத்தேவையான உணவுப் பொருட்களிலிருந்து கட்டுமானப் பொருட்கள்வரை அத்தனையும் அளந்து எடை போட்டுத்தான் பெறுகின்றான். விலை உயர்ந்த அல்லது விலை மலிவான ஆடைகள் முதல், தனது பாதங்களுக்கு அணியும் பாதணிகள் வரை அளவுகோல் வைத்து அளந்துதான் வாங்கமுடியும்.

கண்களால் பார்க்க முடியாத காற்றையும் அளந்து எடைபோட்டுத்தான் வாகனத்தின் டயர்களுக்கு நிரப்பப்பவேண்டும். அந்த வாகனத்தில் ஏற்றப்படும் சுமைகளையும் அளந்துதான் ஏற்றவேண்டும். அளவுக்கு அதிகமாக நிரப்பப்படும் காற்றும், சுமையும் வாகனத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

அதிகப் பணம் கொடுத்து, அளவில் குறைவாக வாங்கப்படும் தங்கம் முதல் பணம் குறைவாகக் கொடுத்து அளவில் அதிகமாக வாங்கப்படும் உப்புவரை அத்தனைப் பொருட்களையும் நிறுத்து எடை போட்டுத்தான் மனிதன் பெற்றுக்கொள்கின்றான்.

மனிதன் வாழ்வதற்கான வீட்டுமனை முதல் அவன் மரித்த பின்பு அவனை புதைப்பதற்கான புதைக்குழிவரை அளவுகோலைக் கொண்டு அளக்கப்படாமல் இல்லை! ஆக தராசு, அளவுகோல், எடைக் கருவி என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்கமுடியாத ஒன்றாகும்.

அதே போன்று வியாபாரத்தில் அளவையிலும், நிறுப்பதிலும் நியாயமாக நடந்து கொள்ளுங்கள், அளவையில் மோசடி செய்பவன் பாவத்தை சுமக்கின்றான், எடையில் மோசடி செய்பவனுக்குக் கேடுதான், அளப்பதிலும் நிறுப்பதிலும் நீதமாக நடந்துகொள்ளுங்கள், அளந்தால் நீதியாக சரியான தராசைக்கொண்டு நிறுத்து அளந்துகொடுங்கள் என்று அளவுகோல் மற்றும் தராசைப் பற்றி அல்குர்ஆன் பல இடங்களில் குறிப்படுகின்றது. (பார்க்க அல்குர்ஆன்:06:152, 07:85, 11:84, 11:85, 17:35, 26:181)

இப்படியாக தனது வாழ்நாள் முழுவதும் எடைக் கருவியை தவிர்க்க முடியாமல் வாழ்ந்த மனிதனின் செயல்களும் மறுமை நாளில் தராசில் வைத்து எடை போடப்படுகிறது.

அல்லாஹ், மறுமை நாளில் மனிதர்களின் நன்மை தீமைகளை நீதமான தராசைக் கொண்டு நிறுத்து அதிக நன்மையையோடு வருபவர்களை சொர்க்கத்திலும், அதிகம் தீமையோடு வந்தவர்களை நரகத்திலும் புகுத்துவான் என்பது அல்குர்ஆன் போதிக்கும் அடிப்படைகளில் உள்ளதாகும்.

وَنَضَعُ الْمَوَازِيْنَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيٰمَةِ فَلَا تُظْلَمُ نَـفْسٌ شَيْــٴًـــا‌ وَاِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ اَتَيْنَا بِهَا‌ وَكَفٰى بِنَا حٰسِبِيْنَ

மறுமை நாளுக்காக நியாயமான தராசுகளை நாம் நிறுவுவோம். எனவே, எந்த உயிருக்கும் சிறிதளவுகூட (அப்போது) அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகின் வித்தளவு (ஒரு செயல்) இருந்தாலும் அதையும் நாம் கொண்டு வந்து விடுவோம். கணக்கெடுக்க நாமே போதும். (அல்குர்ஆன்:21:47)

ஏமாற்றக் கூடிய, கள்ளத்தனம் செய்யக்கூடிய தராசும் அளவுகோலும் இந்த பூமியில்தான். உதாரணமாக ரேஷன் கடையில் மூன்று கிலோ சர்க்கரை வாங்கினால் 2,700 கிராம்தான் இருக்கும், மூன்று லிட்டர் மண்ணெண்ணெய் வாங்கினால் அதில் முன்னூறு மில்லி குறையும்.

அதேபோன்று நிலத்தகராறில் கைகலப்பு வரை போவதெல்லாம் நிலத்தை அளந்த அளவுகோல் மூலம் செய்த மோசடியால், இதுபோன்ற கள்ளத்தனங்கள் செய்யும் தராசும் அளவுகோலும் இந்த பூமியில்தான். மறுமையில் அல்லாஹ்விடம் உள்ள தராசு மிகவும் நீதமானது நேர்மையானது. அதில் ஒரு சிறிய வித்தளவு எடையையும் மிகத்துல்லியமாக காட்டிவிடும்.

يٰبُنَىَّ اِنَّهَاۤ اِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُنْ فِىْ صَخْرَةٍ اَوْ فِى السَّمٰوٰتِ اَوْ فِى الْاَرْضِ يَاْتِ بِهَا اللّٰهُ ‌ اِنَّ اللّٰهَ لَطِيْفٌ خَبِيْرٌ

என் அருமை மகனே! நிச்சயமாக கடுகின் வித்தளவு எடை உள்ளதையும், அது பாறையில் அல்லது வானங்களில், அல்லது பூமியில் (மறைந்து) கிடந்தாலும் அதையும் அல்லாஹ் வெளியே கொண்டுவந்துவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான். (என்று லுக்மான் கூறினார். (அல்குர்ஆன்: 31:16)

அதாவது மனிதன் செய்யக்கூடிய நன்மையோ – தீமையோ எதுவாயினும் அது அணுவளவு இருந்தாலும் சரி, அது கற்பாறைக்குள் மூடி மறைக்கப் பட்டிருந்தாலும் அதையும் அல்லாஹ் வெளியில் கொண்டுவந்து அவன் துரோகமிழைக்கப்படாமல் அதை நிறுத்து எடை போடப்பட்டு அதற்கான பிரதிபலன் வழங்கப்படுவான். இதனால்தான் லுக்மான் தன் மகனிடம் இதையெல்லாம் செய்யக்கூடிய அல்லாஹ் மிகவும் நுட்பாமானவனாவான், நன்கு அறியக்கூடியவன் என்று கூறினார்.

وَالْوَزْنُ يَوْمَٮِٕذِ اۨلْحَـقُّ‌ فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ

وَمَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤٮِٕكَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ بِمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَظْلِمُوْنَ

அந்நாளில் (நன்மை-தீமையை) எடை போடுதல் நியாயமாக இருக்கும். யாருடைய (நன்மையின்) எடை கனமாக இருக்குமோ அவர்கள்தான் வெற்றியாளர்கள். யாருடைய நன்மையின் எடை கணம் குறைவாக இருக்குமோ அவர்கள் தமக்குத்தாமே இழப்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள் ஆவர். நமது வசனங்களின் மீது அநீதி இழைத்துகொண்டிந்ததே இதற்கு காரணமாகும். (அல்குர்ஆன்: 07:8-9)

فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ ۙ
فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍ

وَاَمَّا مَنْ خَفَّتْ مَوَازِيْنُه
ٗ ۙ
 فَاُمُّهٗ هَاوِيَةٌ

அந்நாளில் (மறுமை) நாளில் எவருடைய நன்மையின் எடை கனத்ததோ அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் (சுவனத்தில்) இருப்பார். ஆனால் எவருடைய நன்மையில் எடை இலேசாக இருந்ததோ அவர் தாங்கும் இடம் "ஹாவிய"தான் ஹாவிய என்பது சுட்டெரிக்கும் நரகமாகும். (அல்குர்ஆன்: 101: 6-9)

மறுமை நாளில் மனிதர்களின் நன்மை – தீமையை எவ்வாறு எடை போடப்படும் என்பதில் மூன்று விதமாக கருத்துக்கள் உள்ளன:

1- நன்மை – தீமைகளுக்கு உருவத்தை அல்லாஹ் வழங்கி அதை தராசில் வைத்து எடை போடப்படும்.

2- நன்மை – தீமைகள் பதியப்பட்ட ஏட்டை (பதிவுப் புத்தகத்தை) தராசில் வைத்து எடை போடப்படும்.

3- நன்மை – தீமைகளைச் செய்த அந்த மனிதனை தராசில் வைத்து எடை போடப்படும்.

இந்த மூன்று கருத்துக்களுக்கும் ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது. ஆனால் அந்த தராசு எப்படி இருக்கும் என்பதை அல்லாஹ் ஒருவனே நன்கு அறிவான்!

ஆகவே நற்செயல்கள் குறைந்துவிட்ட இக்காலத்தில், ஒரு வித்தளவு நன்மை தரக்கூடிய அல்லது ஒரு அணுவளவு நன்மை தரக்கூடிய காரியமாக இருந்தாலும் அதைச்செய்யும் வாய்ப்பு யாருக்கெல்லாம் கிடைகின்றதோ அவர்கள் அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு நன்மையின் எடை கனத்த நிலையில் மறுமையில் தன் ரப்பை (இரட்சகனை) சந்தித்து சுவனத்தை அடையவேண்டும் அவர்தான் வெற்றி பெற்றவராவார்.

http://www.islamkalvi.com/?p=125364


--

ஞாயிறு, 16 ஜனவரி, 2022

யாரைப் புகழ்வது வணக்கம்?

நபி (ﷺ) அவர்கள் வபாத்தான தினத்தைப் பிறந்த தினமாகக் கொண்டாடும் சகோதரர்கள் ரபீஉல் அவ்வல் பிறை பன்னிரெண்டில் மௌலித் மஜ்லிஸ் போன்ற விசேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதை ஓர் இபாதத்தாக செய்து வருகின்றார்கள். இது பற்றிய தெளிவுகளை அவர்களுக்கு நாம் வழங்கினால் நபிகளாரை புகழக்கூடாதா…? நபிகளாரின் புகழை மேலோங்கச் செய்வதை எப்படி பித்அத் , ஷிர்க் என்று சொல்லுவீர்கள்? என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள்.

நபி (ﷺ) அவர்களைப் புகழுங்கள் என்று அல்லாஹ்வோ, அவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ சொல்லி உள்ளதாக வஹியிலிருந்து ஒரு செய்தி இவர்களால் காட்ட முடியுமா…? எனக் கேட்டால் நிச்சயமாக முடியாது.

இந்தக் கேள்விக்கு இவர்கள் கேட்கும் எதிர்க் கேள்வி அல்லாஹ் நபி (ﷺ) அவர்களின் மீது ஸலவாத் சொல்லும்படிக் கூறி உள்ளானே..? அப்படி இருக்க நீங்கள் எப்படிப் புகழக்கூடாது என்று கூறுவீர்கள் .? என்ற அடிப்படையிலாக இருக்கும்.

இதற்கான எமது பதில்.

1) நபிகளாரின் புகழை நாம் மேலோங்கச் செய்ய வேண்டிய தேவை எமக்கில்லை அல்லாஹ் அதை செய்து முடித்து விட்டான்.

وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَ

மேலும், உமக்காக உம் புகழினை உயர்த்தினோம்.
(அல்குர்ஆன் : 94:4)

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ

107. (முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.

திருக்குர்ஆன் (21:107)

நபி (ﷺ) அவர்கள் தனக்குள்ள பெயர்களைக் கூறும் போது இவ்வாறு கூறினார்கள்.

எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன.

1: நான் முஹம்மது – புகழப்பட்டவர் – ஆவேன்.

2: நான் அஹ்மத் – இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன்.

3: நான் மாஹீ – அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான்.

4: நான் ஹாஷிர் – ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள்.

5:நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன்.

என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹ் புகாரி)

நபிகளார் தன்னைப் பற்றிக் கூறும் போது ஏற்கனவே தான் புகழப்பட்டவர் என்று கூறுகின்றார் முன்னைய வேதங்களில் அவரின் பண்புகள் கூறப்பட்டிருந்ததை நாம் அறிவோம்.

عن عبد الله بن عمرو رضي الله عنهما قال: "قرأت في التوراة صفة النبي صلى الله عليه وسلم: محمد رسول الله، عبدي ورسولي، سميته المتوكل، ليس بفظ ولا غليظ" رواه البخاري.

அதா இப்னு யஸார் (ரஹ்) அறிவித்தார்.

நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து 'தவ்ராத்தில் நபி( ﷺ) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வர்ணனையை எனக்குச் சொல்லுங்கள்!' என்றேன். அவர்கள், 'இதோ சொல்கிறேன்!

அல்லாஹ்வின் மீது ஆணையாக! குர்ஆனில் கூறப்படும் அவர்களின் சில பண்புகள் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளன.

'நபியே! நிச்சயமாக உம்மை சாட்சியளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம்!

நீர் என்னுடைய அடிமையும் என்னுடைய தூதருமாவீர்!

المُتَوَكِّلُ

தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன்!'

(இவ்வாறெல்லாம் கூறிவிட்டு, நபி (ﷺ) அவர்களின் அடையாளங்களைக் கூறும் விதத்தில்)

1 'அவர் கடின சித்தம் கொண்டவராகவோ, முரட்டுத்தனமுடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசிச் சச்சரவு செய்பவராகவோ இருக்க மாட்டார்!

2 தீமைக்குப் பதிலாகத் தீமையைச் செய்யமாட்டார்; மாறாக, மன்னித்துக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்!

3: அவர் மூலம் வளைந்த மார்க்கத்தை நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவ(ரின் உயி)ரைக் கைப்பற்ற மாட்டான்! மக்கள் 'லாயிலாஹ இல்லல்லாஹு' என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும், செவிட்டுக் காதுகளும், மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும்!' என்று அதில் அவர்களைக் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது!' என பதிலளித்தார்கள்.

(ஸஹீஹ் புகாரி 2125 )

நான் முஹம்மத் புகழப்பட்டவன் எனக் கூறிவிட்டு அடுத்ததாக நபிகளார் சொல்லும் செய்தி நான் அஹ்மத் இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன் என்று தான் கூறுகின்றார்களே தவிர தன்னை அதிகம் புகழுமாறு கூறவில்லை.

2) நபி (ﷺ) அவர்களைப் புகழ்வதைப் பொதுவாக இரண்டு விதத்தில் நோக்க முடியும்

1: நபி (ﷺ) அவர்களின் வாழ்கையில் நடந்த நிகழ்வுகளைக் கூறி மக்களுக்கு உபதேசம் செய்தல். இதன் போது உத்தமத் தூதரின் பரிசுத்த வாழ்கையில் நடந்தவற்றை உள்ளதை உள்ளபடி புகழ்ந்து பேசுதல். இது அனுமதிக்கப்பட்ட காரியம். இது நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் என்ற பகுதியில் உள்ள ஓர் இபாதத்தாகும். பல நபித்தோழர்கள் நபிகளாரின் அழகிய வாழ்வு பற்றிக் கூறியுள்ள செய்திகள் இதற்குச் சிறந்த சான்றாகும்.

4625. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அவர்கள் ஒருபோதும் என்னிடம் "இன்னின்னதை நீ ஏன் செய்தாய்?" என்று கேட்டதாக எனக்குத் தெரியவில்லை; அவர்கள் எதற்காகவும் என்னை ஒருபோதும் குறை கூறியதுமில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்

لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا

உண்மை யாதெனில், உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருந்தது. உங்களில் அல்லாஹ்வையும், மறுமைநாளையும் நம்புகின்றவராகவும், அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருபவராகவும் இருக்கின்ற ஒவ்வொருவர்க்கும்!
(அல்குர்ஆன் : 33:21)

நபி (ﷺ) அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த விடயங்களைப் பாடலாகப் படித்து அவர்களைப் புகழ்வது வணக்கம் கிடையாது. நபி (ﷺ) அவர்களின் முன்மாதிரிகளை வாழ்கையில் எடுத்து நடப்பதே வணக்கமாகும்.

2: நபி(ﷺ) அவர்களைப் புகழ்வதை ஒரு வணக்கமாக எடுத்துக் கொண்டு அதற்காக அல்லாஹ்வின் இடத்துக்கு நபி (ﷺ) அவர்களை உயர்த்தி அல்லாஹ்வின் பண்புகளை நபி ( ﷺ) அவர்களுக்கு வழங்கும் விதமான வாசகங்களைக் கொண்ட கவிதைகளைக் கட்டி மக்களை ஒன்று திரட்டி அந்தக் கவிதைகளை நபிகளாரை புகழுகிறோம் என்ற பெயரில் பாடலாகப் படிப்பது ஷிர்க்காகும். இத்தகைய புகழ்ச்சியை நபி (ﷺ) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

ஆயிஷா(ரலி) அவர்கள், 'முஹம்மத் (ﷺ) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் அறிவிக்கிறவர் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ 'கண்பார்வைகள் அவனை எட்ட முடியாது' என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 06:103). மேலும், முஹம்மத் (ﷺ) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என உங்களிடம் அறிவிக்கின்றவரும் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ 'அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறியமாட்டார்' என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 27:65)' என்றார்கள்.

(ஸஹீஹ் புகாரி 7380)

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் இப்னி அஃப்ரா(ரலி) (காலித் இப்னு ஃதக்வான்(ரஹ்) அவர்களிடம்) கூறினார்.

எனக்குக் கல்யாணம் நடந்த நாள் (காலை) நபி (ﷺ) அவர்கள் (எங்கள் வீட்டுக்கு) வந்தார்கள். எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி(ﷺ) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்தார்கள். (அங்கு) சில (முஸ்லிம்) சிறுமியர் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக்கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட எம் முன்னோரைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒரு சிறுமி, 'எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்" என்று கூறினாள். உடனே, நபி( ﷺ) அவர்கள், '(இப்படிச் சொல்லாதே!) இதை விட்டுவிட்டு முன்பு நீ சொல்லிக்கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்!" என்று கூறினார்கள்.
(ஸஹீஹ் புகாரி 5147)

3) நபி( ﷺ) அவர்கள் மீது ஸலவாத் கூறுவது என்பது நாம் கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு இபாதத்தாகும். ஆனால் ஸலவாத் என்பது நாம் அவர்களுக்காகச் செய்யும் பிரார்த்தனையே ஒழிய புகழாரம் கிடையாது. என்பதை அதன் பொருளைப் படிக்கும் குர்ஆன் மத்ரஸா மாணவனும் அறிந்து கொள்ள முடியும்.

ஒரு முறை நபி(ﷺ) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களே உங்கள் மீது 'ஸலாம்" உரைப்பதை அறிந்து வைத்துள்ளோம். ஆனால் 'ஸலவாத்" சொல்வது எவ்வாறு என்று கேட்டோம். இதனை செவியுற்ற நபி(ﷺ) அவர்கள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். பின்னர் '

اللّهمّ صلّ على محمّد وعلى آل محمّد كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم إنّك حميد مجيد ، اللّهمّ وبارك على محمّد وعلى آل محمّد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنّك حميد مجيد

எனக் கூறும்படி கூறினார்கள் புகாரி, நஸயீ, இப்னுமாஜா, அபூதாவூத் – கஃப் இப்னு உஜ்ரா (ரலி).

பொருள்: இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள்புரிந்ததைப் போல் முஹம்மத் (ﷺ) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனும், கண்ணியத்திற்குரியவனுமாவாய்.

இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் பரக்கத் (அபிவிருத்தி) செய்தது போல் முஹம்மத் (ﷺ) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அபிவிருத்தியை(பரக்கத்தை) அருள்வாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும், கண்ணியத்திற்குரியவனுமாவாய்.

நபி (ﷺ) அவர்களைப் புகழ்வதை இஸ்லாம் ஒரு அமலாக இபாதத்தாகச் சொல்லவில்லை மாறாக நபி( ﷺ) அவர்களைப் பின்பற்றுவதையே இஸ்லாம் வணக்கமாகக் கூறி உள்ளது. அதுவே நபிகளாரை நேசிப்பதற்கான அடையாளமும் கூட.

4).அளவுக்கதிகமாக ஒருவர் மற்றவரைப் புகழ்வதை நபி (ﷺ) வெறுத்தார்கள்.

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ﷺ) அவர்கள், ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அளவுக்கதிகமாகப் புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பதைச் செவியுற்றார்கள். அப்போது நபி (ﷺ) அவர்கள், "அந்த மனிதரின் முதுகை அழித்துவிட்டீர்களே! அல்லது முறித்துவிட்டீர்களே" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5729.

ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்களைப் புகழ்ந்து பேசலானார். அப்போது மிக்தாத் பின் அம்ர் (ரலி) அவர்கள் அவரை நோக்கிச் சென்று முழந்தாளிட்டு அமர்ந்து, அவரது முகத்தில் பொடிக்கற்களை அள்ளி வீசலானார்கள். மிக்தாத் (ரலி) அவர்கள் உடல் பருமனான மனிதராயிருந்தார்கள். (எனவே தான், முழந்தாளிட்டு அமர்ந்தார்கள்.)
அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் அவரைப் பார்த்து, "உமக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டார்கள். அதற்கு மிக்தாத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ﷺ)
அவர்கள், "அளவுக்கதிகமாகப் புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களுடைய முகங்களில் மண்ணை அள்ளி வீசுங்கள்" என்று கூறினார்கள்" என்றார்கள்.
அறிவிப்பவர் மிக்தாத் (ரலி)
ஸஹீஹ் முஸ்லிம் : 5731.

5) இறந்த மனிதரின் நற்செயல்களைப் பற்றிப் புகழ்து பேச அனுமதியுண்டு:

அனஸ்(ரலி) அறிவித்தார்கள்.

ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி(ﷺ) அவர்கள், 'உறுதியாகிவிட்டது' என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி(ﷺ) அவர்கள், 'உறுதியாகிவிட்டது?' எனக் கூறினார்கள். உமர்(ரலி) 'எது உறுதியாகிவிட்டது?' எனக் கேட்டதும் நபி(ﷺ) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்' எனக் கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி : 1367.

இறந்தவர் உலகில் செய்த நற்கருமங்களைப் பற்றிப் பேசுவது நாம் அவருக்குச் செய்யும் ஒரு பிரார்த்தனை போன்ற ஒரு காரியமாகும். வானவர்கள் அதற்கு ஆமீன் கூறுவார்கள்.

6) புகழ்வதற்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே.

அல்லாஹ்வின் தூதர் (ﷺ)அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும், மாண்பும் மிக்க அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமில்லை. அதனால்தான்,அவன் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டுள்ளான். அல்லாஹ்வைவிட அதிகத் தன்மானமுள்ளவர் வேறெவருமில்லை. ஆகவேதான், மானக்கேடான செயல்களுக்கு அவன் தடை விதித்துள்ளான். அல்லாஹ்வைவிட அதிகமாகத் திருந்துவதற்கு வாய்ப்பு அளிப்பதை விரும்பக்கூடியவர் வேறெவருமில்லை. அதனால்தான், அவன் வேதங்களை அருளினான்; தூதர்களை அனுப்பினான்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 5328.

இப்னு மஸ்ஊத் ரழி அறிவித்தார்கள்.

'அல்லாஹ்வை விட அதிக ரோஷமுடையவர் வேறெவருமில்லை. எனவேதான் மானக் கேடான செயல்களில் வெளிப்படையானவை, மறைவானவை அனைத்தையும் அவன் தடைசெய்துள்ளான். மேலும், அல்லாஹ்வை விட அதிகமாகப் புகழ்ச்சியை விரும்பக்கூடியவர் வேறெவரும் இல்லை. எனவே, தான் அவன் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டுள்ளான்' என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 4637.

புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவனே அவனையே நாம் புகழ வேண்டும். அவன் தன்னைப் புகழ்வதை விரும்புகிறான். அதை அடியார்கள் மீது கடமையாக்கி உள்ளான்.

7) உயிரை விட மேலாக நபி (ﷺ) அவர்களை நேசிப்போம்.

النَّبِيُّ أَوْلَىٰ بِالْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ ۖ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ ۗ

6. நம்பிக்கை கொண்டோருக்குத் தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர்..

திருக்குர்ஆன் 33:6

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆகமாட்டார்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலிலி)
நூல் : புஹாரி (15)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்த வராவார். (அவை:)

1. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதனையும்விட அதிக நேசத்திற்குரியோராவது.

2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.

3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலிலி)
நூல் : புஹாரி (16)

8) நபிகளாரை நேசிப்பது அவர்களைப் பின்பற்றுவதாகும். கவிதைகளைக் கொண்டு புகழ்வது நேசிப்பதாக ஆகிவிடாது.

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ

(நபியே! மக்களிடம்) நீர் கூறுவீராக: "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுடைய பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் பெரும் கருணையுடையவனுமாவான்."
(அல்குர்ஆன் : 3:31)

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.
எவர் எனக்குக் கீழ்ப்படிந்தாரோ அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந் தவராவார். எவர் எனக்கு மாறு செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவராவார்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
நூல் : புஹாரி (2957)

9) நபிகளாரின் மீதான நேசத்தை வெளிப்படுத்துவது எப்படி?

பாங்கு சொல்லும் போது அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்பதை செவியுற்றால் இரு கட்டைவிரல்களையும் கண்களில் ஒத்திக்கொள்ளுதல், முஹம்மது என்று அட்டையில் எழுதி வீட்டு வாயலில் மாட்டி வைத்தல் போன்ற காரியங்கள் நபிகளாரை நேசிப்பதின் அடையாளமாக ஆகுமா என்றால் ? நிச்சயமாக இல்லை.

உண்மையான நேசம் எது தெரியுமா?

قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ‌ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ

(நபியே!) நீர் கூறுவீராக: "உங்கள் தந்தையர், உங்கள் பிள்ளைகள், உங்கள் சகோதரர்கள், உங்கள் மனைவியர், உங்களுடைய உறவினர்கள், நீங்கள் சம்பாதித்த செல்வங்கள் மற்றும் தேக்கநிலை ஏற்பட்டுவிடுமோ என நீங்கள் அஞ்சுகின்ற உங்களுடைய வணிகம், மற்றும் உங்களுக்கு விருப்பமான இல்லங்கள் ஆகியவை அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும்விட அவன் வழியில் போராடுவதைவிட உங்களுக்கு நேசமானவையாயிருந்தால்,

அல்லாஹ் தன்னுடைய தீர்ப்பினை (உங்களிடம்) செயல்படுத்தும் வரை நீங்கள் எதிர்பார்த்திருங்கள்! அல்லாஹ் தீய சமுதாயத்துக்கு நேர்வழி காட்டுவதில்லை."
(அல்குர்ஆன் : 9:24)

எமது வியாபாரம், எமது மனைவியர் , எமது பிள்ளைகள் , உற்றார் உறவினர்கள், எமது விருப்புக்கள், அனைத்தையும் விட உலகமே எம்மை எதிர்த்து நின்றால் கூட அல்லாஹ்வையும், றஸுலையுமே நாம் நேசிக்க வேண்டும். அப்போது தான் நபிகளாரை உண்மையில் நாம் நேசித்தவர்களாக ஆக முடியும்.

وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا نَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا‌ وَاتَّقُوا اللّٰهَ ‌ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‌ۘ

மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.
(அல்குர்ஆன் : 59:7)

ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ﷺ)
அவர்கள், "என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?" என்று கேட்டார்கள். நபி (ﷺ) அவர்கள், "எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்" என்று பதிலலித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)
நூல் : புஹாரி (7280)

வருடத்தில் ஒரு முறை நபிகளாரின் புகழைப்பாடி நினைவு கூற நபி( ﷺ) அவர்கள் ஒன்றும் கட்சித் தலைவர் கிடையாது. அவர் அல்லாஹ்வின் உத்தமத் தூதர் அவரின் வாழ்கை வழிமுறைகளை அணுவணுவாக வாழ்கையில் கடைபிடிப்பது ஒவ்வொருவர் மீதும் நாளாந்தக் கடமையாகும்.

மர்யமின் மகன் ஈஸாவை நஸாராக்கள் அளவு கடந்து புகழ்வதைப் போன்று என்னைப் புகழாதீர்கள், நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியான், (என்னை) அல்லாஹ்வின் அடியார், தூதரென்று மாத்திரமே சொல்லுங்கள்' என நபிகளார்(ﷺ) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 6830).

இவற்றைப் புரிந்து கொண்டு கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை அளவுகடந்து புகழ்ந்து அல்லாஹ்வின் மகன் என்று சொல்லி இன்று பிறந்ததினம் கொண்டாடுவதற்கு ஒப்பாக நபிகளாரை ஷிர்க்கான வாசகங்களைக் கொண்டு அளவுகடந்து புகழ்ந்து கவிதைபாடி பிறந்த தினக் கொண்டாட்டத்தை நிகழ்த்தும் சகோதரர்கள் நேர்வழியின்பால் மீள முயற்சிக்க வேண்டும்.

நபிகளாரை உண்மையிலே நேசித்த ஸஹாபாக்கள் நபிகளாரைப் புகழ அதற்கென மஜ்லிஸ்களை ஏற்படுத்தவுமில்லை. பிறந்த தினக் கொண்டாட்டங்களைக் கொண்டாடவுமில்லை. இத்தகைய பித்அத்துக்கள் அனைத்தும் ஹிஜ்ரி 600க்குப்பின் பாதிமிய்யாக்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட பித்அத்துக்களாகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்

http://www.islamkalvi.com/?p=125367


--

புதிதாக குழந்தைபெற்ற தாய்மார்களின் தூக்கமில்லா இரவுகளுக்கான சில தீர்வுகள்.

உங்கள் வீட்டில் புதிதாகப் பிறந்த குழந்தை இருக்கும் போது சரியான நேரத்தில் தூங்குவது சாத்தியமில...

Popular Posts