லேபிள்கள்

சனி, 27 டிசம்பர், 2014

அழுக்கு-கறை நீங்க

அழுக்கு-கறை நீங்க

அழுக்கு நீங்க
  • கழுத்தில் அணித்திருக்கும் மஞ்சள் சரடு அழுக்கடைந்து விட்டால் சலவை சோடாவை பஞ்சில் எடுத்து சுடுநீரில் நனைத்து அதனால் சரடை நன்கு உருவித் துடைத்துக் கழுவினால்
  • பளிச்சென்று இருக்கும்.
வெள்ளிப் பாத்திரம் பளிச்சிட
  • கடலைமாவுடன் எலுமிச்சைச்சாற்றை சேர்த்துப் பிசைந்து அதனால் வெள்ளிப் பாத்திரங்களைக் கழுவினால் பளிச்சென்று ஆகிவிடும்.
நகைகளில் எண்ணெய் நீங்க
  • கல் பதித்த நகைகளில் உள்ள எண்ணெயை நீக்க சாக்பீஸை தண்ணீரில் நனைத்து அதன் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் போதும்.
நகைகள் பளிச்சிட
  • சிறிதளவு மஞ்சள், நீல டிடர்ஜென்ட் பவுடர் இரண்டையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சிறிது நேரம் தங்க நகைகளை போட்டு பின்பு எடுத்து டூத் பிரஷ்ஷால் சுத்தம் செய்தால் நகைகள் பளிச்சிடும்.
திருகாணி பொருத்தமாக இருக்க
  • தோடு, மூக்குத்தி இவைகளின் திருகாணியை பூண்டுச் சாற்றில் தேய்த்து திருகினால் பொருத்தமாக இருக்கும்.
தோல் பொருள்கள் பளபளக்க
  • தோல் சாமான்கள் பளபளக்க வாசலினை தேய்த்து உலர விட்டு பிறகு கம்பளி துணியால் துடைக்க வேண்டும்.
  • தோல் பொருள்கள் மீது படியும் காளானை வெங்காயச்சாறு கொண்டு தடவி துடைத்தால் போதும்.
இரும்பு சாமான் புதியது போல் இருக்க
  • இரும்பு சாமான்களை ஆறு மணி நேரம் ஊறவைத்து கழுவினால் புதியது போல் இருக்கும்.
துரு நீங்க
  • இரும்பு பொருள்களில் படிந்துள்ள துருவை நீக்க உப்பு கரைத்த எலுமிச்சைச்சாற்றை தடவினால் போதும்.
  • அரிவாள்மனை, தேங்காய் துருவி, கத்தி போன்றவைகளில் உள்ள துருவைப் போக்க இவற்றின் மீது ஒரு சீமை வெங்காயத்தை தேய்த்தால் துரு போய் விடும்.
துருப்பிடிக்காமல் இருக்க
  • கத்திகள் துருப்பிடிக்காமல் இருக்க அவைகளில் எண்ணெய் தடவி பிளாஸ்டிக் பேப்பரில் வைத்தால் துரு பிடிக்காது.
  • குண்டூசி டப்பாவில் சிறிதளவு சாக்பீஸ் தூளை தூவி வைத்தால் துருப்பிடிக்காது.
  • இரும்பு டூல்ஸ், ஆணிகள் முதலியன வைக்கும் பெட்டிக்குள் ஒரு கரித்துண்டை வைத்தால் அது காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி கொள்ளும். பொருட்கள் துரு பிடிக்காது.
எண்ணெய் பசை போக
  • பித்தளை விளக்கில் உள்ள எண்ணெய் பசையைப் போக்க விபூதியுடன் மண்ணெண்ணெய் கலந்து உலர்ந்த துணியால் தேய்த்தால் போய் விடும்


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.

இரத்த சோகை காரணமாக உடல் மிகவும் பலவீனமாக தோன்றும். எப்போதும் சோர்வாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்படும். உடலில் ரத்தம் குறைவாக இருக்கும்ப...

Popular Posts