லேபிள்கள்

வியாழன், 21 மார்ச், 2019

சளித் தொல்லைக்கு...!

சளித் தொல்லைக்கு...!

1. மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடசளித்தொல்லை பறந்து போய்விடும்!

2. மிளகுப் பொடியை ஒரு காட்டன்துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல்எல்லாம் பறந்தே போய்விடும்!

3. சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

4. நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

5. கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க, கொள்ளு(காணப்பயறு) சூப் அருமையான மருந்து.

6. கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.

7. தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.

8. மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.

9. வெங்காயம் சளியை முறிக்கும்.பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.

10.சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில் வைட்டமின் 'c' இருக்கிறது.வைட்டமின் 'c' ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது.

11. துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.

12. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.

13. ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்.

14. தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.

15. சளி, தடுமன்( ஜலதோசம்) அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியினை சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலே நல்ல குணம் ஆகலாம். ( இது உண்மையாய் எனக்கு குளிர்காலங்களில் அன்டிபயடிக்ஸ் எடுப்பதினை முற்றாக இல்லாமல் செய்கிறது)

16. நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகப்போயிரும்.
http://pettagum.blogspot.com/2018/06/blog-post.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 19 மார்ச், 2019

இரவு தொழுகையை விட்டு விடாதீர்கள்..

இரவு தொழுகையை விட்டு விடாதீர்கள்..

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்-
நாம் அன்றாடம் செய்யும் வணக்கங்களில் முதன்மையான வணக்கம் தொழுகையாகும். அந்த தொழுகையை பர்ளு என்றும், சுன்னத் என்றும் நபில் என்றும் பல பெயர்களில் நமக்கு நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். பர்ளு தொழுகைக்கு அடுத்தபடியான உச்சக்கட்டமான பல சிறப்புகளை உள்வாங்கிய தொழுகை தான் இந்த இரவுத் தொழுகையாகும்.
இந்த இரவுத் தொழுகைக்கு நபியவர்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதை தொடர்ந்து கவனிப்போம்.
இந்த இரவுத் தொழுகையை தூங்குவதற்கு முன்னும் (முன்) இரவிலே தொழலாம். அல்லது கடைசி இரவிலும் தொழலாம். அல்லது முன் இரவில் குறிப்பிட்ட ரக்அத்துகளும் ஏனைய மீதி ரக்அத்துகளை பின் இரவிலும் தொழலாம் அனைத்திற்கும் நபியவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள். ஒவ்வொன்றாக விடை காண்போம்.
முன் இரவில், அல்லது பின் இரவில் தொழுவது:
"நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யார் இரவின் இறுதியில் எழ முடியாது என அஞ்சுகிறாரோ அவர் (முதலில்) வித்ர் தொழுதுவிட்டுப் பிறகு உறங்கட்டும்! இரவில் தம்மால் எழ முடியும் என உறுதியாக நம்புகின்றவர் அதன் இறுதியில் வித்ர் தொழட்டும்! ஏனெனில், இரவின் இறுதி நேரத்தில் குர்ஆன் ஓதும்போது (வானவர்கள்) பங்கேற்கின்றனர். இதுவே சிறந்ததாகும்.(முஸ்லிம் 1381)
இந்த ஹதீஸின் படி ஒருவர் நோயாளியாக இருக்கிறார். அவருக்கு பின் இரவில் எழுந்து தொழ முடியாது. அல்லது ஒருவர் பாரமான வேலை செய்கிறார். அதனால் பின் இரவில் எழுந்து தொழுவது கஷ்டம் என்றால் தூங்குவதற்கு முன் இஷாவையும், அதனுடைய பின் சுன்னத்தையும் தொழுது விட்டு வித்ரை தொழுது விட்டு தூங்கும் படி நபியவர்கள் வழிக் காட்டுகிறார்கள். வித்ர் என்றால் ஒத்தப்படையாக தொழ வேண்டும். குறைந்தது ஒரு ரக்அதாகும். கூடியது பதினொரு ரக்அத்துகளாகும். அதாவது ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று என்று ஒத்தப்படையில் அமையக் கூடிய அளவிற்கு தொழுகையை அமைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரம் ஒருவருக்கு தூங்கி எழுந்து பஜ்ருக்கு முன் (இறுதி இரவில்) இந்த தொழுகையை தொழ முடியும் என்றால் அவர் அப்படியே செய்து கொள்ள வேண்டும். பின் இரவில் தொழுவதால் பலவிதமான சிறப்புகள் கிடைக்கும் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த தொழுகையை பிரித்து தொழுவதற்கும் நபியவர்கள் பின் வரும் ஹதீஸின் மூலமாக நமக்கு வழிக் காட்டியுள்ளார்கள்
பிரித்து தொழுவது
'என்னுடைய சிறிய தாயாரும் நபி(ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா பின்து அல் ஹாரிஸ்(ரலி) அவர்களின் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் தங்கியிருந்த இரவில் நானும் தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் இஷா தொழுகை நடத்திவிட்டுப் பின்னர் தம் வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள் தொழுதுவிட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து 'பையன் தூங்கிவிட்டானோ?' அல்லது அது போன்ற ஒரு வார்த்தை கூறி விசாரித்துவிட்டு மீண்டும் தொழுகைக்காக நின்றார்கள். நானும் (அவர்களுடன்) அவர்களின் இடப் பக்கமாகச் சென்று நின்றேன். உடனே என்னை அவர்களின் வலப் பக்கத்தில் இழுத்து நிறுத்திவிட்டு (முதலில்) ஐந்து ரகஅத்துகளும், பின்னர் இரண்டு ரகஅத்துகளும் தொழுதுவிட்டு அவர்களின் குறட்டையொலியை நான் கேட்குமளவுக்கு ஆழ்ந்து உறங்கினார்கள். பிறகு (சுப்ஹுத்) தொழுகைக்குப் புறப்பட்டார்கள்' இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி 117)
இந்த ஹதீஸில் மூன்று முக்கியமான விடயங்களை நாம் கவனிக்க வேண்டும். முதலாவது நபியவர்கள் பகல் நேரத்து சுன்னத்தான தொழுகைகளாக இருந்தாலும் சரி, இரவு நேர சுன்னத்தான தொழுகைகளாக இருந்தாலும் சரி, தனது வீட்டில் தான் தொழுவார்கள். உங்களது தொழுகைகளில் சில (சுன்னத்தான) தொழுகைகளை வீட்டில் தொழுது கொள்ளுங்கள் என்று வழி காட்டியுள்ளார்கள்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் (ஃபர்ள்) தொழுது முடித்ததும் தமது தொழுகையில் சிலவற்றை (கூடுதல் தொழுகையை) தமது வீட்டிலும் தொழட்டும். ஏனெனில், அவ்வாறு அவர் தொழுவதால் அவரது வீட்டில் அல்லாஹ் நன்மையை உருவாக்குகிறான்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம் 1428)
நபியவர்கள் ஓரிரு சந்தர்ப்பங்களில் பள்ளியிலும், பயணத்திலும் சுன்னத்துகளை தொழுதுள்ளார்கள்.
இரண்டாவது அந்த இரவுத் தொழுகையை முன் இரவில் குறிப்பிட்ட சில ரக்அத்துகளை தொழுதுள்ளார்கள். மீதியை பின் இரவில் தொழுதுள்ளார்கள்.
மூன்றாவது இந்த பதினொரு ரக்அத்துகளை முன் இரவிலும், பின்னிரவிலும் பிரித்து, பிரித்து தொழலாம் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
எனவே எது எப்படியோ இந்த இரவுத் தொழுகையை முன் இரவிலோ, அல்லது பின் இரவிலோ தொழுதே ஆக வேண்டும் என்பதை தான் நபியவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகிறார்கள். எனவே நாம் மரணிக்கின்ற வரை இந்த இரவு தொழுகை விடயத்தில் விடாமல் ஆர்வத்துடன் தொடர்ந்து தொழக் கூடிய பழக்கத்தை அமைத்துக் கொள்வோமாக!
http://www.islamkalvi.com/?p=117948


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 17 மார்ச், 2019

சமையல் சந்தேகங்கள் நிபுணர் பதில்கள்!

சமையல் சந்தேகங்கள் நிபுணர் பதில்கள்!

கோடையில் புதிதாக வற்றல், வடாம் போட ஆரம்பித்துவிடுவோம். சென்ற ஆண்டில் மீந்த, தூளான, நொறுங்கிய வடாம்களை என்ன செய்வது?

தூளான, நொறுங்கிய வடாம்களைத் தேவையான அளவு எடுத்து ஒரு தட்டில் போட்டு அது மூழ்கும் அளவு கைபொறுக்கும் சூட்டில் வெந்நீரை ஊற்றிவைக்கவும். இடையிடையே நன்கு கிளறிவிடவும். அரை மணி நேரம் கழிந்த பின் வடாம் நீரில் ஊறி மென்மையாகிவிடும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, ஒரு பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, இதனுடன் ஒரு தக்காளியை நறுக்கிச் சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன் போட்டு வதக்கவும். பிறகு, ஊறிய வடாம்களைச் சேர்த்து வதக்கி, ஈரம் வற்றியதும் 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான தூள் வடகப் பொரியல் தயார். இது சாம்பார், ரசம், மோர் சாதங்களுக்குத் தொட்டுச் சாப்பிட ஏற்றது.

தூள் வடாம்களை எண்ணெய் ஊற்றி வறுத்து எண்ணெயை வடியவிட்டு தனியே வைக்கவும். கால் கப் தேங்காய்த் துருவல், சிறிதளவு புளி, 3 வறுத்த காய்ந்த மிளகாய், கால் கப் கொத்தமல்லித்தழை சேர்த்து, முதலில் வறுத்த வடகங்களை ஒரு சுற்று மிக்ஸியில் சுற்றி, பிறகு மற்ற பொருள்களைச் சேர்த்து, தேவையான அளவு நீர்விட்டு அரைக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். சுவையான சட்னி தயார். இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்குத் தொட்டுச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

வீட்டில் நாம் தயாரிக்கும் பிஸ்கட், கேக், சிப்ஸ் போன்றவை நமுத்துப் போகாமல் எப்படிப் பாதுகாப்பது? நமுத்துவிட்டால் என்ன செய்வது?
 

பிஸ்கட் நமுத்துப் போகாமல் இருக்க பிஸ்கட் வைக்கும் டப்பாவில் முதலில் ஃபிளாட்டிங் பேப்பரைப் போட்டுவிட்டு அதன்மேல் பிஸ்கட்டுகளை வைத் தால் பிஸ்கட்டுகள் பல நாள்கள் மொறுமொறுவென்று இருக்கும்.

சிப்ஸ், பிஸ்கட் நமுத்துப் போய் இருந்தால் அதை ஒரு தட்டில் கொட்டி நாம் சமைக்கும்போது அடுப்பின் அடியில் வைத்தால் அந்த அனலிலேயே மொறுமொறுப்பு மீண்டும் வந்துவிடும்.

கேக், பிஸ்கட் செய்து முடித்தபின் அவன் (oven) நீண்ட நேரம் சூடாக இருக்கும். அப்போது அந்தச் சூட்டிலேயே நமுத்துப் போயிருக்கும் பிஸ்கட், அப்பளம் போன்றவற்றை அவனில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் புதிது போல மொறுமொறுவென்று இருக்கும்.

சிப்ஸ், பிஸ்கட் போன்ற அயிட்டங் களை டப்பாவில் போட்டுவைப்பதைவிட ஹாட்பேக்கில் போட்டு வைத்தால் நீண்ட நாள்கள் நமுத்துப் போகாமல் இருக்கும்.

தோசைக்கல்லில் தோசை மாவு ஒட்டிக்கொண்டு தோசையை எடுக்க முடியாமல் போவதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

ஒரு சின்ன துணியில் கல் உப்பைக் கட்டித் தோசைக்கல்லைத் துடைக்கவும். வெட்டின வெங்காயத்தால் துடைத்தாலும் போதும்.
தோசைக்கல்லை உபயோகம் முடிந்தவுடன் கழுவக் கூடாது. எண்ணெய் தடவி வைத்திருந்து உபயோகப்படுத்தும் போது கழுவினால் போதும்.
சூடான கல்லில் குளிர்ந்த தண்ணீர் தெளித்து பிறகு எண்ணெய் தடவி தோசை மாவு விட வேண்டும்.

உணவை வாழை இலையில் பொட்டலம் கட்டும்போது இலை பிரிந்து உணவு வெளியே வராமல் எப்படி கட்டுவது?
 

உணவைப் பொட்டலம் கட்டும்போது வாழை இலையை வெந்நீரில் நனைத்துவிட்டுக் கட்டலாம்.
வாழை இலையைச் சிறிது நேரம் வெயில் வைத்திருந்து லேசாக வதங்கியதும் எடுத்துக் கட்டலாம். அல்லது வாழை இலையைத் தணலில் காட்டி லேசாக வதங்கியதும் எடுத்து உணவைப் பொட்டலமாகக் கட்டினால் இலை பிரிந்து உணவு வெளியே வராமல் இருக்கும்.

சம்மரில் டூர் செல்லும்போது எடுத்துச் செல்லும் அயிட்டங்கள் நீண்ட நேரம் கெட்டுப்போகாமலிருக்க சின்னச் சின்ன டிப்ஸ் ஃப்ளீஸ்...
 

சட்னிக்குப் பொட்டுக்கடலை வைத்து அரைப்பதற்குப் பதிலாக கடலைப்பருப்பை வறுத்து அரைத்துத் தேங்காயுடன் சட்னி அரைத்தால் விரைவில் கெட்டுப்போகாது. அல்லது உளுத்தம்பருப்பை வறுத்து, தேங்காயுடன் சேர்த்துக் கெட்டியான துவையலாக அரைக்கலாம். துவையல் அரைக்கும்போது சிறிதளவு வெல்லமும் சேர்த்து அரைக்கவும். இது நீண்ட நேரம் கெடாமலிருக்க உதவும்.

மிளகாய்ப்பொடியுடன் எண்ணெய் சேர்த்து இட்லிக்குத் தொட்டுக்கொள்ள எடுத்துச் செல்லும்போது எண்ணெய்க்குப் பதிலாக நெய்யை உருக்கி மிளகாய்ப் பொடியில்விட்டு எடுத்துச் சென்றாலும் நீண்ட நேரம் கெடாது.

சர்க்கரை போடாமல்தான் ஃபிளாஸ்கில் காபி, டீயை ஊற்ற வேண்டும். சர்க்கரையைத் தனியே எடுத்து வைத்துக்கொண்டு குடிக்கும் போது ஃபிளாஸ்கில் இருந்து குவளைகளில் ஊற்றும்போதுதான் சர்க்கரையைச் சேர்க்க வேண்டும். அப்போதுதான் காபி நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.

மாங்காய்த் தொக்கு, தக்காளி ஊறுகாய் எடுத்துச் செல்வதைவிட எலுமிச்சை ஊறுகாய் எடுத்துச் சென்றால் நீண்ட நாள்கள் கெடாது.

வற்றல்குழம்பு செய்தால் மணத்தக்காளி, சுண்டைக்காய் வற்றல்கள் மட்டும் சேர்க்க வேண்டும்.

தோசை எடுத்துச் சென்றால் கனமாக வார்த்து எடுத்துச் செல்ல வேண்டும். மெலிதாக வார்த்து எடுத்துச் சென்றால் தோசை காய்ந்து தொண்டையைவிட்டு இறங்காது.

சப்பாத்தி எடுத்துச் சென்றால் ஓரங்களில் எண்ணெய்விடாமல் தணலில் மேல் வலையைப் போட்டுச் சுட்டு எடுத்துச் செல்லலாம்.

தயிர் சாதம் எடுத்துச் சென்றால் பாலை நிறைய ஊற்றி (ஒரு பங்கு பால் என்றால் கால் பங்குக்கும் குறைவாகத் தயிர் ஊற்றி) எடுத்துச் செல்ல வேண்டும். பால் தயிரில் உறைந்து நாம் சாப்பிடும்போது புளிக்காமல் சரியான பதத்தில் இருக்கும்.

புளி சாதம் செய்து எடுத்துச் சென்றால் புளிக்கரைசலுக்குப் பதில் புளிப்பேஸ்ட்டில் செய்து எடுத்துச் சென்றால் விரைவில் கெடாது.

இனிப்புக் குழிப்பணியாரம் எடுத்துச் செல்லும்போது வெல்லத்தைப் பாகு காய்ச்சி பிறகு மாவில் கலந்து, குழிப்பணியாரம் செய்யும்போது ஓரங்களில் லேசாக நெய் விட்டு (எண்ணெய்க்குப் பதில்) செய்யலாம். இது விரைவில் கெடாது.

சாலட்கள் பக்குவமாகச் செய்வது எப்படி?
காய்கறிகள் நறுக்கி சாலட் செய்யும் போது நறுக்கியவுடன் எலுமிச்சைச்சாறும் உப்பும் அதில் சேர்க்கக் கூடாது. அவற்றைச் சாப்பிடும்போதுதான் சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் சாலட் தண்ணீர் விட்டுக்கொள்ளும். அப்படியும் தண்ணீர் விட்டுவிட்டால் பிரெட் துண்டுகளைப் போட்டுவிட்டால் தண்ணீரை உறிஞ்சிவிடும். அந்த பிரெட் துண்டுகளைக் காய்கறிகளில் இருந்து தனியே எடுத்தும் சுவைக்கலாம்.

 ரவா தோசை மொறுமொறு என்று இருக்க என்ன செய்ய வேண்டும்? 
ரவா தோசை செய்யும்போது ஒரு கப் ரவைக்கு ஒரு கரண்டி கடலை மாவு சேர்த்துக் கலந்து செய்தால், தோசை நன்கு மொறுமொறுவென்று இருக்கும்.
http://pettagum.blogspot.com/2018/06/blog-post_65.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 15 மார்ச், 2019

சுன்னத்தான நோன்புகளை தொடராக பிடியுங்கள்…

சுன்னத்தான நோன்புகளை தொடராக பிடியுங்கள்

பர்ளான நோன்புகள், நேர்ச்சையான நோன்புகள்,  சுன்னத்தான நோன்புகள், மற்றும் நபிலான நோன்புகள் இப்படி பலவிதமான நோன்புகளை காலத்திற்கும், நேரத்திற்கும், இடத்திற்கும் ஏற்ப நபியவர்கள் நமக்கு வழிக் காட்டியுள்ளார்கள்.
சுன்னத்தான நோன்புகளில் ஒவ்வொரு திங்கள். மற்றும் வியாழக் கிழமை நாட்களில் நோற்கும் நோன்பின் முக்கியத்துவங்கள், சிறப்புகளைப் பற்றி நாம் தொடர்ந்து கவனிப்போம்.
"நபி(ஸல்) அவர்கள் திங்கள் வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள். ஆயிஷா(ரலி)  அஹ்மத், நஸயி, திர்மிதி, இப்னுமாஜா
மேலும் "ஒவ்வொரு வியாழன் மற்றும், திங்கட்கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபுஹூரைரா(ரலி) அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா
நாம் செய்கின்ற எல்லா அமல்களும் ஒவ்வொரு திங்கள், மற்றும் வியாழன் நாட்களில் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகிறது. அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்து காட்டப்படும் அந்த நேரத்தில் நான் நோன்பாளியாக இருக்க விரும்புகிறேன் என்று நபியவர்கள் ஆசைப்பட்டார்கள் என்றால், அவர்களை முன் மாதிரியாக அடிக்கடி நினைவு கூறும் நாம், இந்த குறிப்பிட்ட நாட்களில் நோன்பு பிடிப்பதற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு திங்கள், மற்றும் வியாழக் கிழமை நாட்கள் வந்து விட்டால் இன்று எனது அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்து காட்டப்படுகிறது என்ற சிந்தனை நம்மில் ஒவ்வொருவருக்கும் தானாக வர வேண்டும். வருவது மட்டுமல்ல நான் இந்த இடைப்பட்ட நாட்களில் எந்த அளவிற்கு அமல்கள் செய்துள்ளேன் என்பதை மீட்டிப் பார்த்து நம்மை அமல்கள் பக்கம் ஆர்வமாக்கி கொள்ள வேண்டும். மேலும்  குறிப்பிட்ட இந்த நாட்களில் எனது அமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா என்ற கவலையோடு அந்த நாட்களை நாம் கழிக்க வேண்டும்.
அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்து காட்டப்படும் நாட்கள்
"ஒவ்வொரு திங்கள், மற்றும் வியாழக் கிழமைகளில் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. அதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியதை பின் வரும் ஹதீஸில் காணலாம். "ஒவ்வொரு திங்கட் கிழமையும், ஒவ்வொரு வியாழக் கிமையும், சுவர்கத்தின் கதவுகள் திறக்கப் படுகின்றன. அப்போது அல்லாஹ்விற்கு இணை வைக்காத ஒவ்வொரு அடியார்களின் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. பகைமைக் கொண்டவர்களைத் தவிர. அவர்கள் ஒன்று சேரும் வரை விட்டு வைய்யுங்கள் என்று கூறப்படும். (முஸ்லிம் 5013)
இந்த ஹதீஸின் படி ஒவ்வொரு திங்கள், மற்றும் வியாழக் கிழமைகளில் சுவன வாசல்கள் திறக்கப் படுகின்றன, அந்த நேரத்தில் நாம் செய்த அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப் படுகின்றன, இணை வைக்காத நிலையில் அமல் செய்தவரகளுக்கு நன்மைகள் வழங்கப் பட்டு். பாவங்கள் அழிக்கப் படுகின்றன. அதே நேரம் பிரச்சனைப் பட்டு பேசாமல்இருந்தவர்களைத் தவிர என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
தஃவா களத்தில் உள்ளவர்களின் சிந்தனைக்கு
தஃவா களத்தில் ஈடுபடக் கூடிய அனைவருக்கும் அல்லாஹ் அருள் பாளிக்க வேண்டும். நாம் மக்களிடத்தில் எதை எடுத்து நடக்கும் படி அடிக்கடி சொல்லி வருகின்றோமோ அவைகளில் நம் மீது கடமையானவைகளை சரியாக தொடராக செய்யக் கூடிய நிலையை நாம் முதலில் அமைத்துக் கொள்ள வேண்டும். வெறுமனே பேச்சாளர்களாக மட்டும் இருக்க கூடாது.
குறிப்பாக இந்த நோன்புகளை களத்தில் உள்ள தாயிகள் வழமையாக பிடிக்க கூடியவர்களாக இருக்க வேண்டும்.
ஏனைய பொது மக்களும் ஒவ்வொரு கிழமையும் இந்த இரண்டு நோன்புகளையும் பிடிக்க கூடிய சூழலை அமைத்துக் கொள்ள வேண்டும்.
நான் வேலைக்குப் போகிறேன், நான் ஆபிஸூக்கு போகிறேன், நான் இங்கு போகிறேன், நான் அங்கு போகிறேன் என்று பல பொருத்தமற்ற காரணங்களை கூறி அதிகமான மக்கள் குறிப்பாக ஆண்கள் இந்த நாட்களில் நோன்புகள் பிடிப்பதை அலட்சியப் படுத்தி வருகிறார்கள்.
ரமழானில் ஒரு மாத காலம் இதே தொழில்களோடு தான் அனைத்து நோன்புகளையும் பிடித்தோம். அப்படியானால் ரமழானில் கற்ற பாடங்கள் என்றடிப்படையில் ரமலான் அல்லாத காலத்தில் வாரத்தில் இரண்டு சுன்னத்தான நோன்புகளை எனக்கு பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையோடும், உற்சாகத்துடனும் தொடராக நோன்பை பிடிக்க பழகி கொள்ள வேண்டும். பல வேலைகளுக்கு மத்தியில் ரமலானில் ஒரு மாதம் தொடராக நோன்பு பிடிக்க முடியும் என்றால், ஏன் வாரத்தில் இந்த இரண்டு நாட்கள் நபியவர்கள் தொடராக பிடித்து வந்த நோன்புகளை என்னால் பிடிக்க முடியாது? என்ற கேள்வியை எழுப்பி, எனக்கு முடியும் என்ற நம்பிக்கையை உள்ளத்தில் பதித்து, இந்த சுன்னத்தையும் நமது வாழ்க்கையில் நடைமுறை படுத்தி இறையன்பை பெற்றுக் கொள்வோம்.  அல்லாஹ் போதுமானவன்.
http://www.islamkalvi.com/?p=118056


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 13 மார்ச், 2019

கல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு!

கல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு! அஞ்சறைப் பெட்டி !!

பசுமைமாறா மரத்தின் சிறிய மலர் மொட்டான கிராம்பு, வாசனையாலும் வசீகரத்தாலும் மருத்துவக் கூறுகளாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நலன் காத்துவருவது இயற்கையின் கவிதை. வைரத்தை ஏந்திக்கொண்டிருக்கும் மோதிரம்போலவே காட்சியளிக்கும் கிராம்பு, அஞ்சறைப் பெட்டியின் விலை மதிப்பில்லா வைரமே!

நறுமணமூட்டிகளில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களைக் கொண்டது கிராம்பு. ஆரம்பநிலை பல்வலியைப் போக்க, கிராம்புத் தைலத்தைப் பஞ்சில் நனைத்துத் தடவும் மருத்துவம் இன்றைக்கும் உதவுகிறது. பல் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் களிம்புகளில் கிராம்பின் நுண்கூறுகள் நிச்சயம் இடம்பிடித்திருக்கும். பிரியாணியில் தொடங்கி அடிப்படை இனிப்புகள் வரை கிராம்பின் பங்களிப்பு உறுதி.

இது ஆணி போலவும் காணப்படுவதால், `க்ளோவ்' (Clove) என்று பெயர் வந்தது. லவங்கம், உற்கடம், அஞ்சுகம், சோசம், திரளி, வராங்கம் போன்ற வேறு பெயர்களும் உண்டு. காரத்தோடும் சிறிது இனிப்புச் சுவையோடும் விறுவிறுப்புத்தன்மை கொண்டிருக்கும் கிராம்பு மயக்கம், வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், ஆசனவாய் எரிச்சல், தசைப்பிடிப்பு, செவி நோய்கள், சரும நோய்கள் என பலவற்றை நீக்கும் திறன் கொண்டது. 'பித்த மயக்கம் பேதியோடு வாந்தியும்போம்' எனத் தொடங்கும் சித்தர் அகத்தியரின் பாடல், கிராம்பின் குணங்களை விவரிக்கிறது.

`சீனத்தின் பொற்காலம்' எனப்படும் `ஹான் ராஜ்ஜியத்தில்' அரசரிடம் நிறைகுறைகளைக் கூற வேண்டுமென்றால், பொதுமக்கள் வாயில் கிராம்பை அடக்கிக்கொண்டுதான் பேச வேண்டுமாம். கிருமிகள் வாய்மூலம் பரவி அரசரைத் தாக்காமல் இருக்க இந்த ஏற்பாடு!

15-ம் நூற்றாண்டில் நறுமணமூட்டிகளுக் கான போர் உச்சத்திலிருந்தபோது, பிற நாடுகளுக்குக் கிராம்பின் இருப்பிட ரகசியம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகப் பெரிய அளவிலான கிராம்புக் காடுகளை டச்சுக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.

கி.மு 17-ம் நூற்றாண்டில், மெசபடோமியா நாகரிகப் பகுதி மக்களின் சமையலறையில் கிராம்பு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. தனது பிறப்பிடமான இந்தோனேசியாவின் மலுக்கா தீவுகளிலிருந்து நீர் வழி (கடல் பயணம்) மற்றும் தரைவழிப் பயணமாகத் தென்னிந்தியாவைத் தாண்டி, அரேபிய பாலைவனத்தையும் கடந்து, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மெசபடோமியா பகுதிகளுக்கு கிராம்பு சென்றடைந்துள்ளது. கிராம்பைத் தேடி சீனர்களும் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் மலுக்கா தீவுகளுக்கு விரைந்தனர் என்கிறது வரலாறு. கி.பி 3-ம் நூற்றாண்டுக்குப் பிறகான சீன இலக்கியங்களிலும் கிராம்பு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
ஒரு கிராம்பைத் தீயிட்டுக் கொளுத்தி, சமைத்து முடித்த உணவுகளில் மேலோட்ட மாகப் புதைத்து, ஒரு பாத்திரத்தைக் கொண்டு மூடிவிடுங்கள். 10 நிமிடங்களுக்குப் பிறகு, அந்த உணவின் மணமும் சுவையும் பல மடங்கு அதிகரித்திருப்பதை உணரலாம். ராஜஸ்தானி சமையலில் இந்த `கிராம்பு புகையூட்டல்' முறை அதிகளவில் பின்பற்றப் படுகிறது.

மண்பானைச் சமையலின் சிறப்பை அதிகரிக்க, பானைக்குள் சிறிது நெய் சேர்த்து, ஒரு கிராம்பைப் போட்டு, சில துளிகள் நீர்விட்டு, சிறு தீ மூட்டி மூடிவிட வேண்டும். சிறிது நேரத்துக்குப் பிறகு கிராம்பின் மருத்துவக்கூறுகளால் செறிவூட்டப்பட்ட மண்பானையில் பாரம்பர்யச் சமையலைத் தொடங்கலாம். உத்தரப்பிரதேச மாநிலத்தின் குக்கிராமங்களில் இன்றைக்கும் `மண்பானைச் செறிவூட்டல்' நடைமுறையில் இருக்கிறது.

இனிப்புச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இனிமையான `பார்ஸி மசாலா'வில் பொடித்த கிராம்பு சேர்க்கப் படுகிறது. பண்டைய குஜராத்திய சமையல் கலாசாரத்தில் இனிப்பு, புளிப்புச் சுவை கலந்த ஊறுகாய் தயாரிக்கும்போது, அதில் கிராம்பும் ஏலக்காயும் இடம் பிடித்திருக்கின்றன. திராட்சை ரசத்தில் கிராம்பும் லவங்கப்பட்டையும் சேர்த்து, லேசாகக் கொதிக்கவைத்து அருந்தும் வழக்கம் ஐரோப்பியருக்கு உண்டு.

பொடித்த கிராம்பு, தோல் சீவிய சுக்கு தலா 50 கிராம், வறுத்த ஓமம், இந்துப்பு தலா 60 கிராம் எடுத்து ஒன்றாகக் கலக்க வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், பசியை அதிகரிக்கச் செய்து முறையான செரிமானத்தைக் கொடுக்கும். விந்தின் தரத்தை மேம்படுத்த உதவும் சித்த மருந்துகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. நெல்லிக்காய், கடுக்காய், சீரகம் தலா 30 கிராம் சேர்த்துப் பொடியாக்கி, அதில் ஐந்து கிராம் கிராம்புப்பொடி சேர்த்துப் பற்பொடியாகப் பயன்படுத்தலாம்.
 

விலாமிச்சை வேர், கிராம்பு, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்துத் தயாரிக்கப்படும் 'கிராம்பு வடகம்' மயக்கம், வாந்தி போன்ற பித்த நோய்களைக் குறைக்க உதவும். தொண்டைப்புண் இருப்பவர்கள், ஒரு கிராம்பை எடுத்து லேசாக வதக்கி, தேனில் நனைத்துச் சுவைத்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். வாந்தி உணர்வு ஏற்படும்போது, ஒரு கிராம்பை எடுத்து வாயில் அடக்கிக்கொண்டால் பயன்தரும். கிராம்பு, புதினா, திருநீற்றுப்பச்சிலை, ஏலக்காயை நீர்விட்டுக் கொதிக்கவைத்து, அதன் வாசனையை முகர்ந்தால் உடலும் மனமும் உற்சாகமடையும்.

கிராம்புக்கு ஆன்டி-ஹிஸ்டமைன் செயல்பாடு இருப்பதால், அலர்ஜி சார்ந்த நோய்களுக்கும் பயனளிக்கும்.

வயிற்றுப்புண்களை உண்டாக்கும் ஹெலிகோபாக்டர் பைலோரி பாக்டீரியா வுக்கு எதிராக, கிராம்பில் உள்ள `யுஜெனால்' எனும் நறுமண எண்ணெய் செயல்படுவதாக ஆய்வுகளில் தெரியவருகிறது. வைரஸ்களை எதிர்க்கும் மருந்துகளுடன் கிராம்பின் சத்துகளைச் சேர்த்துக் கொடுத்தபோது, மருந்துகளின் வீரியம் அதிகரித்திருப்பதை ஆவணப்படுத்தியுள்ளனர். கிராம்பு `ஹெபடைடிஸ்' வைரஸ்களின் ஆதிக்கத்தைத் தடுத்துக் கல்லீரலுக்குப் பாதுகாப்பளிக்கும். கிராம்பை வாயில் அடக்கிக்கொண்டால், மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் குறைவதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிராம்பை நம் உணவுகளில் தொடர்ந்து சேர்த்துவந்தால், முதிர்ந்த வயதில் வரக்கூடிய பல நோய்கள் தடுக்கப்படும் என்கிறது ஓர் ஆராய்ச்சி. `புரோஸ்டாகிளாண்டின்ஸ்' எனும் வேதிச்சேர்மத்தை உற்பத்திச் காரணிகளைத் தற்காலிக மாகத் தடுத்து, வலியையும் வீக்கத்தையும் தடுக்க கிராம்பில் உள்ள `யுஜெனால்' உதவும். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கரோட்டின், தயாமின் என நுண்ணூட்டச் சத்துகளும் கிராம்பில் இருக்கின்றன.

கிராம்பு வாங்கும்போது, நான்கு மடல்களால் மூடிய மொட்டாகவும் முழுமையாகவும் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். முழுமையாக இல்லையென்றால், வேறு சில குச்சிகளைச் சேர்க்கவும் மலர் மொட்டுகளில் கலப்படம் நடக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

இனி உங்கள் நண்பர்களை வாழ்த்த வேண்டுமென்றால், விரைவில் வாடக்கூடிய பூங்கொத்துகளுக்குப் பதில் வாடாத மலர்மொட்டுகளைப் பரிசளியுங்கள், கிராம்பின் வடிவில். உங்கள் வாழ்த்துகளின் விருப்பம், அவர்களது ஆரோக்கியத்தின் மூலம் நிறைவேறும்!


நறுமண ஆப்பிள்

இரண்டு ஆப்பிள் பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு நீர் சேர்க்க வேண்டும். அதனுடன் இரண்டு டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை, ஐந்து கிராம்பு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். அந்தப் பாத்திரத்தின்மீது ஏடு கட்டி, ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்த ஆப்பிள் துண்டுகளின்மீது தேன் ஊற்றிப் பரிமாறினால் மணம் கமழும் சிற்றுண்டி தயார். கிராம்பில் உள்ள நறுமண எண்ணெய்கள், பிரத்யேக வாசனையுடன் உங்களைப் பரவசப்படுத்தும்.

சீன மசாலா

மூன்று அன்னாசிப்பூ, ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் வெந்தயம், ஒரு டீஸ்பூன் கிராம்பு, ஒரு லவங்கப்பட்டை அனைத்தையும் ஒன்றாகப் பொடித்தால் சீன மசாலாப் பொடி தயார். சீன ருசியை விரும்புபவர்கள் நோய் உண்டாக்கும் அஜினோமோட்டோவைத் தவிர்த்துவிட்டு, ஐந்து நறுமணமூட்டிகள் நிறைந்த சீன மசாலாவை (Five Spices powder) சமையலுக்குப் பயன் படுத்தலாம்.
Thanks to Aval vikatan.
http://pettagum.blogspot.com/2018/06/blog-post_49.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 11 மார்ச், 2019

குர்ஆனை எத்தனை நாட்களுக்குள் ஓதி முடிப்பது?

குர்ஆனை எத்தனை நாட்களுக்குள் ஓதி முடிப்பது?

நாம் அனுதினமும் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்க வேண்டும் என்பது அல்லாஹ்வுடைய கட்டளையும், நபியவர்களின் வழி முறையுமாகும்.
குர்ஆனை ஓதுவதின் மூலம் இந்த உலகத்திலும், மறுவுலகத்திலும் பல விதமான சிறப்புகளும், உயர்வுகளும் கிடைக்கின்றன. அல்ஹம்து லில்லாஹ் ! வழமையாக ஓதி வரும் இந்த குர்ஆனை ரமலான் காலங்களில் அவரவர்களின் நிலையை பொருத்து வேகமாக ஓதி ஒரு தடவையோ, இரண்டிற்கு மேற்ப்பட்ட தடவைகளோ ஓதுவார்கள். அதே நேரம் ரமலான் இருபத்தி ஏழாம் நாள், ஓரிரு பள்ளிகளில் இந்த குர்ஆனை தராவீஹ் தொழுகையில், இரவின் குறிப்பிட்ட நேரத்தில் ஓதி முடிக்க வேண்டும் என்றடிப்படையில் ஹாபிலைக் கொண்டு ஓதி முடிக்கிறார்கள். அதை சாதனையாகவும். பேசிக் கொள்கிறார்கள். நபியவர்கள் தடுத்த ஒன்றை செய்து விட்டு அதை எப்படி சாதனை என்று சொல்ல முடியும் ? மார்க்கத்தின் பெயரால் மாறு செய்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். குர்ஆனை எத்தனை நாட்களுக்குள் ஓதி முடிக்க வேண்டும் என்பதை பின் வரும் நபி மொழி தெளிவுப் படுத்துகிறது.
" அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஒவ்வொரு மாதமும் (ஒருமுறை குர்ஆனை) ஓதி நிறைவுசெய்!' என்று கூறினார்கள். அப்போது நான், '(அதை விடவும் குறைந்த நாள்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது' என்று கூறினேன். 'அப்படியானால், ஏழு நாள்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்; அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கிவிடாதே' என்று கூறினார்கள். (புகாரி 5054) இப்படி ஹதீஸ் தெளிவாக இருக்கும் போது, எப்படி குறிப்பிட்ட நேரத்தில் முழுக் குர்ஆனையும் ஓத முடியும். ? இனம் புரியாத வேகத்தில் ஓதும் போது, என்ன ஓதுகிறேன் என்று தெரியாத அளவிற்கு குர்ஆனை முறை தவறி ஓதி விடுவார்கள் என்பதற்காக தான் நபியவர்கள் இப்படியான சட்டத்தை நமக்கு வழி காட்டுகிறார்கள். எனவே நபியவர்களின் வழி காட்டலின் படி, குர்ஆனை ஓதுவதில் அதிக கவனம் செலுத்துங்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.
http://www.islamkalvi.com/?p=116780


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 9 மார்ச், 2019

உங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்!

உங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்!

ஆனால், நம் ஊரில் வாகனத்தின் விலையைத் தாண்டி, பலர் கேட்கும் ஒரே கேள்வி... என்ன மைலேஜ் தரும்? என்பதாகவே இருக்கும்.

பவர், டார்க், தொழில்நுட்பம், வசதிகள், டாப் ஸ்பீடு... இவற்றில் நமது வாகனம் சிறப்பாக இருக்க வேண்டும் என ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், நம் ஊரில் வாகனத்தின் விலையைத் தாண்டி பலர் கேட்கும் ஒரே கேள்வி... `என்ன மைலேஜ்  தரும்?' என்பதாகவே இருக்கும். 
 அதுவும் தற்போது பெட்ரோல்/டீசல் விலை தொட்டிருக்கும் புதிய உச்சத்தால், ரன்னிங் காஸ்ட் மீது பலரின் கவனம் விழுந்திருக்கிறது. எனவே, உங்கள் வாகனம் கார் அல்லது பைக் என எதுவாக இருந்தாலும், அதன் மைலேஜை அதிகரிப்பதற்கு இந்தக் கட்டுரை உதவும் என எண்ணுகிறோம். 
 சர்வீஸ் வேண்டும் மக்களே!
ஒவ்வொரு நிறுவனமும் தமது வாகனங்களுக்கு ஏற்றபடி குறிப்பிட்ட காலக்கெடுவில் அவற்றை சர்வீஸ் செய்வது குறித்த அட்டவணையை, Owners Manual-ல் வழங்கியிருக்கும். எந்த வாகனமாக இருப்பினும், அது சிறந்த கண்டிஷனில் இருந்தால்தான் சிறந்த மைலேஜ் கிடைக்கும். புதிய வாகனங்களை அந்தந்த நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டர்களில், சரியான நேரத்தில் சர்வீஸ் செய்வதே நலம். அப்போதுதான் பின்னாளில் வாரன்ட்டி க்ளெய்ம் செய்வதில் எந்தச் சிக்கலும் எழாது.
சில சந்தர்ப்பங்களில் உங்கள் வாகனத்தை வெளியிடங்களில் சர்வீஸ் விட நேர்ந்தாலும், முடிந்த அளவுக்கு வாகன நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட உதிரிபாகங்களைப் பயன்படுத்துங்கள். பைக் என்றால் செயின் ஸ்ப்ராக்கெட்டையும், கார் என்றால் வீல் அலைன்மென்ட்டையும் சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது செக் செய்யவும். இது சரியாக இல்லாதபட்சத்தில், அது உங்கள் வாகனத்தில் மைலேஜில் சிறிய பாதிப்பைத் தரலாம்.
கச்சிதமான ஆக்ஸிலரேஷனே போதும்!
ஆக்ஸிலரேட்டரில் முழு பலத்தைக் காட்டுவதைவிட, தன்மையாகப் பயன்படுத்துவது நல்ல மைலேஜைத் தர உதவும். இது பிரேக்குக்கும் பொருந்தும். மேலும் தேவையில்லாமல் வாகனத்தை விரட்டி ஓட்டுவதைவிட, நிலையான வேகத்தில் க்ரூஸ் செய்வது, இன்ஜினுக்கும் பர்ஸுக்கும் நல்லது. இந்த நேரத்தில் சரியான கியரில் பயணிப்பதும் முக்கியம். ஏனெனில், எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் செல்வது, இன்ஜினின் செயல்திறனைப் பாதிக்கும். 
தவிர, ஆரஞ்சு விளக்கு எரியும்போதோ - சிக்னலை நெருங்கும்போதோ வேகமெடுப்பதைவிட, படிப்படியாக கியரைக் குறைத்து வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதே சிறந்தது. பைக் என்றால் சரியான சீட்டிங் பொசிஷன் மற்றும் கார் என்றால் கதவுக் கண்ணாடிகளை ஏற்றிவிட்டுக்கொண்டு செல்லும்போது, வாகனத்தின் ஏரோடைனமிக்ஸ் பக்காவாக இருக்கும். அதனால் நல்ல மைலேஜும் கிடைக்கும்.
காற்று அழுத்தம்... முக்கியம்!
வாகனம் வைத்திருக்கும் பலரும், பெரிதும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாத விஷயம் இதுதான். ஆனால், உங்கள் வாகனத்தின் மைலேஜில் 5 முதல் 10 சதவிகிதம் பங்கு வகிப்பது, டயர் பிரெஷர்தான். ஒவ்வொரு வாகனத்தின் பர்ஃபெக்ட்டான டயர் பிரெஷர் குறித்த விவரங்கள், அதன் Owners Manual-ல் வழங்கப்பட்டிருக்கும். தற்போதைய வாகனங்களில் பெரும்பாலும் டியூப்லெஸ் டயர்களே இருக்கின்றன. அவை டியூப் டயர்களைவிடக் குறைவான அளவிலேயே காற்றழுத்தத்தைக் கைவிடும் என்பதுடன், இதில் பஞ்சர் சரிபார்ப்பதும் சுலபம். 
ஒருவேளை உங்கள் வாகனத்தின் டயரில் வழக்கத்தைவிடக் குறைவான காற்றழுத்தம் இருந்தால், அது கூடுதல் உராய்வைத் தந்து மைலேஜைக் குறைக்கும். இதுவே அதிக காற்றழுத்தம் இருந்தால், அது உங்கள் வாகனத்தின் ஓட்டுதல் அனுபவத்தைப் பாதிக்கும். எனவே வாரத்துக்கு ஒருமுறை அல்லது வாகனத்துக்கு பெட்ரோல்/டீசல் நிரப்பும்போதோ, டயரில் சரியான காற்றழுத்தத்தை மெயின்டெயின் செய்வது, மைலேஜையும் டயரின் ஆயுளையும் கூட்டும். இதுவே நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டால், அது டயரின் வெப்பநிலையைச் சீராக்குவதில் உதவும்.
அதிக ஐடிலிங் கூடாது!
நெரிசல்மிக்க டிராஃபிக்கில் செல்லும்போது, சிக்னல்கள் நம்மை நிழல்போல பின்தொடர்வது வழக்கமான ஒன்றுதான். எனவே, சிக்னலில் 10 விநாடிக்கும் அதிகமாக நிற்க நேர்ந்தால், இன்ஜினை ஆஃப் செய்துவிடலாம். இதனால் எரிபொருள் சேமிப்பதுடன், காற்று மாசடைவதும் கட்டுப்படுத்தப்படும். பைக் என்றால் இன்ஜினை ஸ்டார்ட் செய்யும்போது அதிக எரிபொருளைப் பயன்படுத்தும் எனவும், கார் என்றால் ஏசி ஆஃப் ஆகிவிடும் என்பதாலும், சிக்னலில் நிற்கும் பலர் தமது வாகனங்களை ஆஃப் செய்யாமல் ஐடிலிங்கில் விடுவதைப் பார்க்க முடியும்.
இன்னும் சிலர் ஏதோ ரேஸுக்கு ரெடியாவதுபோல ஆக்ஸிலரேட்டரை அழுத்திக்கொண்டே இருப்பார்கள். இதற்குப் பதிலாக, காலையில் வாகனத்தை ஸ்டார்ட் செய்யும்போது, சில நிமிடம் ஐடிலிங்கில்விடுவது நன்மை தரும். அப்போதுதான் ஆயில் இன்ஜின் முழுவதும் பரவியிருக்கும். இதனால் சரியான வெப்பநிலையில் இயங்குவதற்கும் இன்ஜின் ரெடியாகியிருக்கும். 
லைட் வெயிட் நல்லது!
உங்கள் வாகனத்தின் எடை குறைவாக இருந்தால், அது இயங்குவதற்குக் குறைவான எரிபொருளையே எடுத்துக்கொள்ளும். இதனால் உங்கள் வாகனத்தின் மைலேஜில் கணிசமான முன்னேற்றம் தெரியும். எனவே, பைக் என்றால் இரண்டு நபர்களுக்கு மேலே செல்வது சட்டவிரோதமானது என்பதுடன், அது வாகனத்தின் ஆயுளையும் பாதிக்கும். இதுவே கார் என்றால், ரூஃப்புக்கு மேலே அல்லது டிக்கியில் அளவுக்கு அதிகமான பொருள்களைக் கொண்டுசெல்வது, வாகனத்தின் ஏரோடைனமிக்ஸ் மற்றும் மைலேஜில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தேவைப்படும்போதுதான் க்ளட்ச்!
உங்கள் வாகனத்தில் கியர் மாற்றுவதற்கு மட்டுமே க்ளட்ச்சைப் பயன்படுத்த வேண்டும்; நெரிசல்மிக்க டிராஃபிக்கில் வாகனத்தை முன்னோக்கிச் செலுத்துவதற்கு அல்ல என்பதை நினைவில்கொள்ளவும். அதுவும் சிக்னலில் நிற்கும்போது நியூட்ரலில் இல்லாமல், முதல் கியரில் க்ளட்ச்சைப் பிடித்துக்கொண்டே நிற்பதைப் பார்க்க முடியும். 
அது மைலேஜையும் க்ளட்ச் ப்ளேட்டின் ஆயுளையும் குறைக்கும். மேலும், பிரேக் பிடிக்கும்போது க்ளட்ச்சைப் பிடிக்கவே கூடாது மக்களே! இவற்றையெல்லாம் தவிர்க்க, சரியான கியரில் சரியான வேகத்தில் வாகனத்தைச் செலுத்தினாலே போதுமானது. 
தரமான எரிபொருள் அவசியம்!
எத்தனை பெட்ரோல் பங்க் இருந்தாலும், கலப்படம் என்பது தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. எனவே, முடிந்த அளவுக்கு ஒரே பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்புவதை வாடிக்கையாக்கிக்கொள்ளுங்கள். மேலும் IOC, BP, HP போன்ற எரிபொருள் நிறுவனங்கள், Company Owned & Company Operated (COCO) பாணியில் பெட்ரோல் பங்க்குகளைக் கொண்டுள்ளன. இவற்றில் உங்கள் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பும்போது, கலப்படமற்ற எரிபொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையைப் பெற முடியும். 
ப்ரீமியம் எரிபொருள் என்றால் அது போனஸ்! ஏனெனில், தொடர்ச்சியாகக் கலப்படம் செய்யப்பட்ட எரிபொருளில் இயங்கும் வாகனம், முதலில் மைலேஜைக் குறைத்து, பிறகு கார்புரேட்டர்/ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் தொடங்கி இன்ஜின் வரை அனைத்தையும் படிப்படியாக காலி செய்துவிடும். மேலும் பெட்ரோல் டேங்க்கை ஃபுல் செய்வதற்கு, காலை அல்லது இரவு நேரத்தில் நிரப்புவது லாபகரமாக இருக்கும். அதாவது மதிய நேர வெயிலில், எரிபொருள் விரைவாகவே வெப்பமயமாகும் தன்மையைக்கொண்டிருக்கிறது
Thanks to vikatan.com
http://pettagum.blogspot.com/2018/06/blog-post_25.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

பிறந்தகுழந்தைகளுக்கு டயாப்பர் அணிவிப்பது சரியானதா?

  டயாப்பர் அணிவிக்காமல் இன்றைய சூழ்நிலையில் சமாளிக்க முடிவதில்லை. டயாப்பர் அணிவிக்கக் கூட...

Popular Posts