லேபிள்கள்

செவ்வாய், 19 டிசம்பர், 2017

எக்ஸாம் டிப்ஸ்!ஈஸியா பாஸாகலாம்!

எக்ஸாம் டிப்ஸ்!ஈஸியா பாஸாகலாம்!

ப்ளஸ் டூ, எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் தொடங்கி நடந்துவருகின்றன. ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெறுவதால், ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே நன்கு படிக்க இடைவெளியும் உள்ளது. பொதுவாக, ப்ளஸ் டூ, எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதும் மாணவர்களின் வீடுகள் பரபரப்பாக இருக்கும். வீட்டில் டி.வி இணைப்பைத் துண்டித்து, தூங்கும் நேரத்தைக் குறைத்து, ஒருநாளைக்கு 16 - 18 மணி நேரம் படிக்கச் சொல்வார்கள். இதனுடன் `ஸ்பெஷல் கிளாஸ்', கோச்சிங் என்றெல்லாம் சேர்த்து, தேர்வு எழுதும் மாணவருக்கு எக்ஸாம் ஃபீவர் வர வைத்துவிடுவார்கள். மாணவர்களைக் காட்டிலும், அவர்களின் பெற்றோர்களுக்கு இந்தப் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.



அந்தப் பதற்றத்தையும் பயத்தையும் போக்க ஆலோசனை தருகிறார் பொதுநல மருத்துவர் கூ.சுப்ரஜா...

உடல் ஆரோக்கியம் என்பது அனைவருக்கும் பொதுவானது. நாம் ஆரோக்கியமுடன் இருந்தால்தான், மனம் தைரியப்படும். ப்ளஸ் டூ மற்றும் 10-ம் வகுப்பு முடிவுகள், எதிர்கால வாழ்க்கையை முடிவுசெய்யும் காரணிகளாக இருக்கின்றன. ஒரு மாணவருக்கு இருக்கும் உடல்நிலையும் மனநிலையும் மற்ற மாணவர்களுக்கு இருப்பது இல்லை. சின்ன பயம்கூட பெரிய அளவிலான குழப்பத்தையும், அதனால் பாதிப்புக்களையும் ஏற்படுத்திவிடும். `எல்லாத் தடைகளும் மனத்தடைகளே' என விட்டுவிட முடியாது. அதனுள், உடல் தடைகளும் மறைந்திருக்கலாம். நலம் வாழ பல வழிகள் உள்ளன. அவற்றைத் தெரிந்துகொண்டாலே போதும், வெற்றி நமக்குத்தான்.

கல்வி பயில்வதற்கு மட்டும் அல்ல, படிப்பதற்குக்கூட உகந்த நேரம், கற்கும் சூழல் இரண்டையும் ஒழுங்குபடுத்துவதும், தேர்ந்தெடுப்பதும் அவசியம். முக்கியமாக, சில செயல்களை அவசியம் செய்ய வேண்டும். பல செயல்களைத் தவிர்ப்பதே மேல். அவற்றைச் சரிசெய்தாலே போதும், வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்.

மாணவர்கள் செய்யவேண்டியவை!
நம் உடல் பற்றிய தெளிவு இருப்பது அவசியம். உடலினை உறுதிசெய்ய வேண்டும். அது எப்போதும் கைகொடுக்கும். நிதானம் மற்றும் சந்தோஷமான தருணங்களில் படிப்பது என்பது, மனதுக்கு மட்டும் அல்ல, உடலுக்கும் சுகமானது.

தொடர்ந்து படித்துக்கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் இன்று படித்தது போதும் என்ற மனநிலைக்கு நாமே வந்துவிடுவோம். ஒரே நாளில் அதிகம் படித்தால், தேவை இல்லாத டென்ஷன் ஏற்படும்.

நம் சுகாதாரத்தில் குடும்பத்தின் ஆரோக்கியமும் இருக்கிறது. அதனால், தேர்வுக் காலங்களில் ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொள்வது அவசியம்.
  நாம் வழக்கம்போல் சாப்பிடும் உணவையே சாப்பிட வேண்டும். எளிதில் செரிமானம் ஆகும் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

எலுமிச்சைச் சாறு, மோர், இளநீர், போன்ற எனர்ஜியான பானங்களையும் அருந்தலாம். புத்துணர்வு தரும் உணவை எடுத்துக்கொள்வதும் அவசியம்.

தேர்வு நேரங்களில் நல்ல தூக்கம் வேண்டும். குறைந்தது 7 - 8 மணி நேரமாவது தூங்க வேண்டும்.

சின்னச்சின்னப் பிரச்னைகள் வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக அர்த்தம். எனவே, நோய் எதிர்ப்பு சக்திகொண்ட உணவுகளை உண்பதும் அவசியம்.

மாணவர்கள் செய்யக்கூடாதவை!
நெருக்கடியான நேரத்தில் படிக்க வேண்டாம். படிக்கும் நேரத்தில் நெருக்கடி வேண்டாம். மனநிலையைத் தாண்டி நாம் எது செய்தாலும், அது தோல்வியைத்தான் தரும்.

பொதுவாக, நமது மூளையில் சில விஷயங்கள் பதிவதற்கு சில விநாடிகளாவது ஆகும். அதற்குக்கூட நேரம் கொடுக்காமல் படித்துக்கொண்டே இருந்தால், நஷ்டம் நமக்குத்தான். எல்லா பாடங்களையும் படிக்க வேண்டும்தான். ஆனால், அதற்காக எல்லாவற்றையும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் படிக்க முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

தேர்வுக் காலங்களில் படிக்கும்போது பொதுவாக காய்ச்சல், சளி, இருமல், தலைவலி போன்றவையே பெரும்பாலும் ஏற்படும். இதற்கு, மன அழுத்தம்கூட ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், மனஅழுத்தத்துக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தியானம், யோகா உள்ளிட்ட மனதை அமைதிப்படுத்தும் பயிற்சிகள் செய்யலாம்.

புதியவகை உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, எண்ணெயில் பொரித்த உணவு, குளிர்பானம் மற்றும் சாக்லெட் உணவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது.

மன அழுத்தத்துக்கு ஆளாகி தூங்காமல் இருந்தால், படித்ததும் மறந்துபோகும். பெற்றோர் உடன் இருந்து, உதவ வேண்டும்; ஊக்கப்படுத்த வேண்டும்.

அரை மணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் அமரக் கூடாது.
  இடைவேளைவிட்டு படிப்பது, எழுதுவது நல்லது. படிப்புக்கு இடையே சின்னதாக உடற்பயிற்சி செய்யலாம்.

தேர்வு அறைக்கு அவசர அவசரமாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதுவே, ஒருவிதப் பதற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

`ரிலாக்ஸ்' எனச் சொல்லி, அதிக நேரம் விளையாடுவது கூடாது. தேர்வு நேரங்களில் சினிமாவுக்குப் போவதோ, அதிக நேரம் டி.வி பார்ப்பதோ கூடாது.

பெற்றோர்கள் கவனித்துச் செயல்பட வேண்டியவை!
மறதி என்பது ஒரு சாதாரணக் குறை. அதில் இருந்து சுலபமாக விடுபட முடியும். அதைப் பெரிதுபடுத்தி எதுவும் பேச வேண்டாம். பிள்ளைகளைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதே சிறந்தது. மாணவர்களின் மனநலம் குறித்துப் பகிர்ந்துகொள்கிறார் குழந்தைகள் மனநல நிபுணர் பி.பி.கண்ணன்.

மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?
நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை நமக்குள் எப்போதும் வேண்டும். அதுதான் வெற்றிக்கான முதல் படி. நாம் அன்றாடம் படித்த பாடத்தைத்தான் தேர்வுக்கு முன்பாகப் படிப்போம். அதனை ஞாபகம் மட்டுமே படுத்த வேண்டும். அதுவும், வேகமாகப் படிக்க வேண்டும். இதனால், பதற்றமும் பயமும் நம்மில் ஏற்பட வாய்ப்பே இல்லை. எந்தக் கேள்விக்கும் நம்மிடம் பதில் இருக்கிறது. நாம் படித்த கேள்வி-பதில்கள்தான் வரும் என்ற நம்பிக்கை மட்டும் போதும்.

படிக்கும்போதே திட்டமிட்டுப் படிக்க வேண்டும். எதை, எப்போது படிக்க வேண்டும் என்பது மட்டும் இல்லாமல், குறிப்பிட்ட ஒரு பதிலில் எத்தனை கேள்விகள் அடங்கி இருக்கின்றன என்பதையும் திட்டமிட்டு யூகித்துக்கொள்ள வேண்டும்.

மாதிரி வினாத்தாள்களை அடிக்கடி பார்க்க வேண்டும். அதன்படி சுயபரிசோதனை செய்யும் விதமாக, நமக்கு நாமே தேர்வு எழுதிப் பரிசோதித்துக்கொள்ளலாம். அப்போதுதான், தேர்வு எழுதுவதை இன்னும் எளிமைப்படுத்த முடியும்.

நம்மிடையே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமை மற்றும் சக்தி இருக்கும். ஒருவருக்கு அழகாக எழுதும் திறன் இருக்கும். மற்றவருக்கு ஓவியம் நன்றாக வரையத் தெரிந்திருக்கும். சிலருக்குப் பதில் எழுதும் விதம் நன்றாக வரும். இந்தக் கலைகளை அப்படியே இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இதில், மதிப்பெண் குறைபாடு பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒவ்வொருவருக்கும் உள்வாங்கக்கூடிய நேரம், அளவு மாறுபாடும். அதனால், தேர்வு எழுதப்போகும் பதில் மட்டுமே, நமது நோக்கமாக இருக்க வேண்டும். தன்னைப் பற்றி உயர்வான உணர்வு இருக்க வேண்டும். மனதில் எழும் உணர்வுதான் நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

எந்தவிதமான கேள்வி-பதிலைப் படித்தாலும், உடனடியாக எழுதிப்பார்த்துவிட வேண்டும். அப்போதுதான், நாம் படித்தது முழுவதுமாக மனதில் பதியும்.

படிப்பு தொடர்பாகச் சில நுணுக்கங்களை நாம் கற்றுக்கொள்ளத் தயங்கக் கூடாது. கற்றுக்கொள்ளும் விஷயத்தில் வெட்கம், கூச்சம் அறவே கூடாது. தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை எழவே கூடாது.
மாணவர்கள் என்னவெல்லாம் செய்யக் கூடாது?
நம்மால் முடியாது என்ற உணர்வை ஒருபோதும் உருவாக்கிக்கொள்ளக் கூடாது. அந்த உணர்வுதான் பயத்துக்கான ஆரம்பம். தோல்விக்கான முதல் படி.

தேர்வுக்குச் சில மணி நேரம் முன்பாக நாம் எதையுமே படிக்கக் கூடாது. எதையுமே ஏனோ தானோ எனப் படிக்கக் கூடாது. படிக்கும்போது நாம், வேறு ஒரு சிந்தனையில் இருப்பது நிச்சயம் கூடாது.
படிக்கும்போதோ தேர்வு எழுதும்போதோ எதிர்காலப் படிப்பு மற்றும் வேலை பற்றி சிந்திக்கவே கூடாது. மற்றவர்களை நம்முடன் ஒப்பிட்டுப் பார்க்கவே கூடாது.

பெற்றோர்கள் செய்யவேண்டியவை; செய்யக் கூடாதவை
ஒவ்வொரு பெற்றோருக்குமே தங்களின் குழந்தை பொக்கிஷம்தான். இந்த நினைப்பு மட்டும் இருந்தால் போதும்.

நமது குழந்தைகளிடம் உள்ள திறமையைக் கண்டுபிடிக்க வேண்டும். நமது குழந்தைகளிடம் பன்முகத்திறமை இருப்பதை முதலில் நாம் நம்ப வேண்டும். தொடர்ந்து, அதை ஊக்கப்படுத்தும்விதமாக நாம் நடந்துகொள்ள வேண்டும்.
குழந்தைகள் செய்யும் சிறிய செயல்களையும் நாம் உற்சாகப்படுத்திப் பாராட்ட வேண்டும். உற்சாகப்படுத்துகிறோம் என நமது கருத்துக்களைக் குழந்தைகள் மனதில் திணிப்பதும் தவறுதான்.

மதிப்பெண் பெறுவது என்பது நீண்டகாலத் திட்டம். இதில் மாணவர்களோடு சேர்ந்து பெற்றோர்களும் திட்டமிடலாம். குழந்தைகளின் திறன் அறிந்து அதற்கு தகுந்தாற்போல வெற்றிக்கான மதிப்பெண் நோக்கியே நாம் திட்டமிடுவது அவசியம். அவர்களுக்கு உதவி தேவைப்படும் இடங்களில் நாம் உதவலாம்.

நான் இவ்வளவு செலவு செய்திருக்கிறேன் என்று, சொல்லி காண்பிக்கக் கூடாது. பிறர் முன் தவறுகளை சுட்டிக்காட்டுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
வாழ்க்கை என்பது, மதிப்பெண்களில் இல்லை என்பதை, மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். நாமும் அதை அர்த்தத்துடன் புரிந்துகொண்டால், வாழ்க்கை இன்னும் இனிமையாக இருக்கும்.
  தடைகளைத் தாண்டும் அனைத்துப் படிகளுக்கும் வழி சொல்லியாயிற்று; வெற்றிக்கான வாசல் கதவுகள் திறக்கப்பட்டு உள்ளன; இனி ஜெயிப்பதும் முன்னேறுவதும் உங்கள் கையில்! கனவு மெய்ப்படட்டும்!
http://pettagum.blogspot.com/2016/03/blog-post_24.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

மலக்கழிவு சொல்லும் உடல் ஆரோக்கியம்!

மலக்கழிவு சொல்லும் உடல் ஆரோக்கியம்!
கழிவறையை சமஸ்கிருதத்தில் 'செளசாலயம்' என்பார்கள். உடல் கழிவை நீக்கி, ஆரோக்கியம் பேணும் இடம் என்பதால், அந்த இடத்துக்கு ஆலய அந்தஸ்து அளித்தது நம் மரபு. மலம் எனும் கழிவு நம் ஆரோக்கியம் காட்டும் அற்புதக் கண்ணாடி. உங்கள் ஆரோக்கியம் அறிய ஒரு டாய்லட் டேட்டா இங்கே!


டைப் 1:  உதிரி உதிரியாக, தடிமனான கட்டிகள்போல வெளியேறும் மலம், கொட்டைகளைப்போல

தீவிர மலச்சிக்கல் இது. கட்டாயம் நீர், நார்ச்சத்துக்கள் நிரம்பிய உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
 

டைப் 2: உதிரி உதிரியாக சிறிய கட்டிகளாகவும், சிறிது நார்மலாகவும் மலம் வெளிவரும். மலத்தை வெளியேற்றுவது சிறிது கடினமாகத்தான் இருக்கும்.

மலச்சிக்கலின் ஆரம்ப நிலை. துரித உணவுகளைத் தவிர்த்து, காய்கறி, பழங்கள், பயறுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

டைப் 3: மலக்கழிவின் இடையே வெட்டுக்கள், பிசிறுகள் இருக்கும். மலத்தை வெளியேற்ற வலியோ, சிரமமோ இருக்காது.

நார்மல் நிலை இது. உணவை மென்று தின்னும் பழக்கத்தில் ஈடுபடுவது நல்லது.

டைப் 4: ஸ்மூத்தாக இருக்கும். மலத்தை வெளியேற்ற எந்தச் சிக்கலும் இருக்காது.

நார்மல். சமச்சீர் உணவைத் தொடர்ந்து சாப்பிட்டுவரலாம்.

டைப் 5: மிருதுவான, மிதக்கும்தன்மையில் சின்னச்சின்னத் துண்டுகளாக வெளியேறும். வலியோ, சிரமமோ இருக்காது.

நார்ச்சத்துக்களின் பற்றாக்குறையை உணர்த்துகிறது. அஜீரணக் கோளாறுகள், நேரம் கடந்து சாப்பிடும் பழக்கம் போன்றவை இருக்கிறதா எனக் கவனித்துச் சரி செய்துகொள்ளுங்கள்.

டைப் 6: திருத்தமற்ற சுருள்கள்போல காணப்படும். பேஸ்ட் போன்ற நிலையில் இருக்கும்.

டீஹைட்ரேஷன், மனஅழுத்தம், மனச்சோர்வு இருக்கிறதா எனக் கவனித்து சரி செய்துகொள்ளுங்கள்.

டைப் 7: திடமான மலக்கழிவாக இல்லாமல் நீர்த்தன்மையுடன் இருக்கும்.

தொடர்ந்து இதுபோன்ற பிரச்னை இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று, உடலைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.

காணப்படும். சிரமப்பட்டு மலத்தை வெளியேற்றுவார்கள்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 15 டிசம்பர், 2017

முதலுதவிகள்... முத்தான அறிவுரைகள்!

முதலுதவிகள்... முத்தான அறிவுரைகள்!

தீ விபத்து முதல் மாரடைப்பு வரையிலான எதிர்பாராத சமயங்களில், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் முன் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்க வேண்டிய முதலுதவிகளைப் பற்றி இந்த இதழ் `ஒரு டஜன் யோசனைகள்' பகுதியில் விளக்குகிறார்... சென்னை, மேத்தா மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவர் டாக்டர் சரவணக்குமார்.



 தீ விபத்து
''தீக்காயத்தை குளிர்ந்த நீரால் கழுவுவது, கொப்புளங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும். சில்வர் சல்ஃபாடையஸின் (Silver Sulfadiazine) என்ற மருந்தை காயத்தில் தடவலாம். கொப்புளங்களை உடைத்துவிடுவது, காயத்தால் உரிந் திருக்கும் தோலைப் பிய்த்துவிடுவது, தீ விபத்தால் உருகி உடலோடு ஒட்டியிருக்கும் துணியைப் பிரிப்பது இவையெல்லாம் கூடாது.

தவறு: காயத்தில் மை ஊற்று வது, மஞ்சள்தூள் தடவுவது, மாவு பூசுவதை எல்லாம் கண்டிப்பாகச் செய்யக்கூடாது.

மாரடைப்பு
இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் மாரடைப்பு நிகழும். முதலில் இதயத்

தவறு: மாரடைப்பை வாயு என்று நினைத்து சோடா குடிக்க வைப்பது பலரும் செய்யும் தவறு. 'மாரடைப்பு வந்தால் வேகமாக 20 முறை இரும வேண்டும்'என்பது போன்ற வாட்ஸ்அப் வதந்திகளையும் நம்ப வேண்டாம்.

லோ சுகர்
தின் நடுப்பகுதியில் தீராத வலி ஏற்பட்டு, பின்னர் இடது தோள்பட்டை, கை என வலி பரவும். வழக்கத்தைவிட அதிகமாக வியர்ப்பது, மூச்சு வாங்கு வது போன்றவை அறிகுறிகள் (சர்க்கரை நோயாளிகள் மற்றும் மிக வயதானவர்களுக்கு இந்த அறிகுறிகள் இல்லாமலும் அட்டாக் ஏற்படலாம்). பாதிக்கப்பட்டவரை காற் றோட்டமான இடத்தில் அமரவைத்து, கைவசம் ஆஸ்பிரின் (Aspirin),  க்ளோப்பிடெக்ரல் (Clopidogrel) போன்ற மாத்திரைகள் இருந்தால் 300 மில்லி கிராம் கொடுக்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் சரியாக உணவு எடுத்துக்கொள்ளாதது, உடல் தேவைக்கும் சற்று அதிகமான டோசேஜ் மருந்து எடுத்துக்கொள்வது போன்றவை அவர்களுக்கு லோ சுகர் ஏற்படச் செய்யும். வாய்க்குழறல், படபடப்பு, அளவுக்கு அதிகமாக வியர்ப்பது, மயக்கம் போன்றவை அறிகுறிகள். கைவசம் குளுக்கோ மீட்டர் இருந்தால் சுகரின் அளவை செக் செய்து, சர்க்கரையின் அளவு குறைவாக இருந்து நோயாளி நினைவுடன் இருக்கும்பட்சத்தில் சாக்லேட், ஜூஸ் கொடுக்கலாம். 

தவறு: பாதிக்கப்பட்டவர் மயக் கத்தில் இருக்கும்போது சாப்பிட எதுவும் கொடுத்தால், அது நுரையீரலைச் சென்றடைந்து உயிருக்குக்கூட ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால் தவிர்க்கவும்.
 

இதயத்துடிப்பு முடக்கம்
சீராகத் துடித்துக்கொண்டிருக்கும் இதயம் திடீரெனத் துடிக்காமல் இயக்கத்தை நிறுத்துவது, இதயத் துடிப்பு முடக்கம் (கார்டியாக் அரஸ்ட்). இது குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை யாருக் கும் மூச்சுக்குழாய் அடைப்பு, எலெக்ட்ரிக் ஷாக் போன்றவற்றால் ஏற்படலாம். பாதிக்கப்பட்டவரின் நெஞ்சின் நடுப்பகுதியில் இரு கைகளையும் வைத்து 30 முறை அழுத்தம் கொடுக்கலாம்; அவர் வாயோடு வாய்வைத்து இரண்டு முறை மூச்சுக்காற்று கொடுக்கலாம். இதற்குத் தகுந்த பயிற்சி அவசியம். இப்போது இந்த முதலுதவிப் பயிற்சிகள் பல மருத்துவமனைகளில் வழங்கப்படுகின்றன.

தவறு: மாரடைப்பும் இதுவும் வேறு வேறு என்பதால், அதற்கான மாத்திரைகளை இவர்களுக்குக் கொடுத்துக் குழப்பக் கூடாது.

எலெக்ட்ரிக் ஷாக்
முதலில் கரன்ட் சர்க்யூட்டை ஆஃப் செய்யவும். பாதிக்கப்பட்ட வருக்கு தீக்காயம் ஏற்பட்டால், தீக்காயம் தொடர்பாக ஏற்கெனவே  கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். இதயத்துடிப்பில் மாற்றம் அல்லது இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டால், ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

தவறு: பாதிக்கப்பட்டவர் ஒரு வேளை எந்தப் பிரச்னையும் இன்றி எழுந்து நார்மலாக இருந்தாலும்கூட, அப்படியே விட்டுவிடக் கூடாது. ஒருமுறை மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.
 

எலும்பு முறிவு
குழந்தைகள், பெரியவர்கள் இடறி விழுவது, விபத்தில் பலமாக அடிபடுவது போன்ற சமயங்களில் எலும்பு முறிவு ஏற்படும்போது, அந்த இடத்தில் ஐஸ் பேக் வைக்கலாம். காயம் ஏற்பட்ட பாகத்துக்கு அசைவு கொடுக்கக் கூடாது. ஒரு ஸ்கேல் அல்லது நீளமான குச்சியை அடிப்பக்கம் சப்போர்ட் ஆகக்கொடுத்து மெதுவாகக் கட்டியபடி மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும்.

தவறு: ஐஸை நேரடியாக வைக்கக் கூடாது, ஒரு கவரில் வைத்து வைக்கவும்.
 

வலிப்பு
பாதிக்கப்பட்டவர் இறுக்கமான ஆடைகள் அணிந்திருந்தால் தளர்வுபடுத்தி, முதலில் நல்ல காற்றோட்டமான சூழல் தரவும். காயங்கள் ஏற்படுத்தக்கூடிய பொருட்களை அவர்களிடம் இருந்து விலக்கிவைக்கவும். புரை யேறுவதைத் தடுக்கும் வகையில் அவர்களை இடதுபுறமாகத் திருப்பிப் படுக்கவைக்கவும். குழந்தைகளுக்கு அதிகப்படியான காய்ச்சலால் வலிப்பு வரும் என்பதால், முதலில் காய்ச்சலின் அளவைக் குறைக்கவும். வலிப்பு சமயங்களில் வாய்வழியாக மருந்து கொடுக்கக் கூடாது; ஆசனவாயில் வைக்கக்கூடிய மாத்திரைகளைப் பயன்படுத்தலாம்; குளிர்ந்த நீரால் பற்றுப்போடலாம்.

தவறு: கையில் இரும்பு, சாவி கொடுப்பது, சூடுவைப்பது எல்லாம் தவறு.

விஷம் உட்கொண்டவர்களுக்கு...
ஆசிட், ஃபினாயில் போன்ற பொருட்களை உட்கொண்டவர்களுக்கு உணவுக்குழாய் பாதிப்பு ஏற்படும். பாதிக்கப்பட்டவர் சுயநினைவுடன் இருந்தால், முட்டையின் வெள்ளைக் கருவைக் குடிக்கவைக்கலாம். அது குடல் பகுதியில் ஒரு கோட்டிங்போல அமைந்து பாதிப்பைக் குறைக்கும். பூச்சிக்கொல்லி, அளவுக்கு அதிக மான தூக்க மாத்திரைகளை உட்கொண்ட

வர்களை கொஞ்சம் கரித்தூள், டீத்தூள் எனச் சாப்பிட வைக்கலாம் (ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் என்ற அளவில் கொடுக்கலாம். உதாரணமாக, 50 கிலோ எடை உள்ளவருக்கு 50 கிராம் கொடுக்கலாம்). இவை விஷத்தன்மையை உறிஞ்சி அதிகப்படியான குடல் பாதிப்பை தவிர்க்கும்.

தவறு: புளி போன்ற பொருட் களைக் கரைத்துக்கொடுத்து கட்டாய வாந்தி எடுக்கவைக்கக் கூடாது.

பூச்சிக்கடி
தேனீ, குளவி போன்றவை கடித்த இடத்தில் அதன் கொடுக்கு இருந்தால், ஒரு சின்ன பேப்பர் அட்டையை பக்குவமாகத் தேய்த்து கொடுக்கை முதலில் எடுக்கவும். பின் அங்கு ஐஸ் பேக் வைக்கலாம். பாம்பு கடித்த பாகத்தை அசைக்கக் கூடாது. அந்த இடத்தில் இருந்து 15 செ.மீ தள்ளி மேல் பாகத்தில் தளர்வான கட்டுப்போடலாம், இதனால் விஷம் அதிகம் பரவாமல் இருக்கும்.

தவறு: பாம்பு கடித்த இடத்தில் நெருப்பு வைப்பது, வாயால் உறிஞ்சுவது போன்றவை எல்லாம் தவறு.

விபத்தில் அடிபட்டவர்களுக்கு...
பாதிக்கப்பட்டவரை முதலில் அதிகபதற்ற நிலையில் இருந்து இயல்பு நிலைக்குக் கொண்டுவரவும். ரத்தப்போக்கை நிறுத்த, ஒரு சுத்தமானதுணியால் காயத்தில் அழுத்தம் கொடுத்துப் பிடித்துக் கொள்ளவும். தண்டுவடத்தில் ஏற்படும் காயங்க ளைத் தவிர்க்க அடிபட்டவரை துணியிலோ, கை, கால்கள் பிடித்தோ தூக்கிவராமல், பலகையில் வைத்துத் தூக்கிவரவும்.

தவறு: காயத்தில் டீத்தூள், மண் வைக்கக் கூடாது. காயம் பட்டவர் சுயநினைவில் இல்லாதபோது எதுவும் பருகக் கொடுக்கக் கூடாது.

விரல் துண்டாவது...
விபத்து மற்றும் மிக்ஸி, ஃபேனில் கையைக்கொடுத்து விரல் துண்டானால், ரத்தப்போக்கு உள்ள இடத்தில் சுத்தமான துணியால் அழுத்தம் கொடுக்கவும். துண்டான பகுதியை ஒரு கவரில் வைத்து ஐஸ் பேக்கின் மீது வைத்து மருத்துவ மனைக்கு விரையவும். 

தவறு: ஏற்கெனவே சொன்னதுபோல, காயத்தில் வெளிப்பொருட்கள் எதையும் வைக்கக்கூடாது.

முதலுதவிப் பெட்டி
நோய்க் கிருமிகளை அழிக்கும் மருந்து, காயத்தை ஆற்றும் மற்றும் தீக்காய ஆயின்மென்ட், காயம்பட்ட இடத்தை சுத்தம் செய்வதற்கான காட்டன், பேண்டேஜ், கத்தரிக்கோல், எலும்பு முறிவுக்குக் கட்டப்படும் ஸ்கேல் / கட்டை, ஒட்டும் தன்மையுள்ள டேப் ரோல்கள், தெர்மாமீட்டர்... இவையெல்லாம் அடங்கிய ஃபர்ஸ்ட் எய்டு கிட் எப்போதும் கையோடு இருக்கட்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 13 டிசம்பர், 2017

ஷாப்பிங் போகலாமா..?

ஷாப்பிங் போகலாமா..?
வாக்குவம் க்ளீனருக்கு `வெல்கம்'...டஸ்ட் அலர்ஜிக்கு `டாட்டா'!
வீட்டைச் சுத்தமாக்கும் வேலையை எளிதாக செய்து முடிக்கும் வாக்குவம் க்ளீனரை வாங்கும்போது பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பராமரிக்க வேண்டிய முறைகள் பற்றிச் சொல்கிறார், சென்னை சத்யா ஏஜென்சியின் விற்பனைப் பிரிவைச் சேர்ந்த அஜய்குமார்.



வகைகள்
``வாக்குவம் க்ளீனரில் டிரை, வெட் அண்ட் டிரை என இரண்டு வகைகள் இருக்கின்றன. தரை, ஜன்னல், கதவு, சுவர்கள், சோபா, மெத்தை, கார் ஸீட் சுத்தம் செய்ய டிரை வாக்குவம் க்ளீனர் வாங்கலாம். தரையில் டீ, காபி,
  தண்ணீர் போன்றவை கொட்டிவிட்டால்.. அதை துணியைக் கொண்டு சுத்தம் செய்துகொண்டிருக்க தேவையில்லை. ஈரத்தைச் சுத்தம் செய்ய வெட் அண்ட் டிரை வாக்குவம் க்ளீனர் தேர்வு செய்யலாம்.  மேலும், சிறிய வீட்டு உபயோகத்துக்கானது, பெரிய வீடுகளைச் சுத்தம் செய்ய உகந்தது, அலுவலகப் பயன்பாட்டுக்கானது என்று அளவு மற்றும் செயல்திறனில் வேறுபாடு உள்ள மாடல்கள் உள்ளன. தேவைக்குத் தகுந்த மாடல்களைப் பார்த்து தேர்வு செய்யலாம்.

விலை
டிரை வாக்குவம் க்ளீனர் 2,600 ரூபாயில் இருந்தும் வெட் அண்ட் டிரை க்ளீனர் 9,000 ரூபாயில் இருந்தும் கிடைக்கின்றன. ஒரு வருட வாரன்டி உண்டு. சில இறக்குமதி மாடல்களில் ஈரத்தைத் துடைக்கும் மாப் அட்டாச்மென்ட் இருக்கும். தேவைப்படுபவர்கள், அந்த மாப் மாடலைக் கேட்டு வாங்கலாம்.

அட்டாச்மென்ட்ஸ்
வாக்குவம் க்ளீனருடன் டஸ்ட் பேக், பிரஷ், டியூப் போன்ற அக்சஸரிகள் கொடுக்கப்படும். வாங்கும் மாடலுக்குத் தகுந்தாற்போல 4 முதல் 13 அட்டாச்மென்ட்டுகள் வரை பெறலாம். பாகங்கள் அனைத்தும் பிளாஸ்டிக் என்பதால், பயன்படுத்துவது சுலபம்.

வாங்கும்போது கவனிக்க... 
வாக்குவம் க்ளீனர் உபகரணத்தில் மோட்டார்தான் முக்கியம். எனவே, வாங்கும்போது மோட்டார் சரியாக, ஸ்மூத்தாக வேலை செய்கிறதா என்று பரிசோதித்து வாங்கவும்.

கொடுக்கும்
  அட்டாச்மென்ட்டுகள் எல்லாம் சரியாகப் பொருந்துகிறதா எனப் பார்க்கவும்.

இப்போது வாக்குவம் க்ளீனர் வாங்கும் கடைகளில் அதைப் பற்றிய டெமோ தருவது இல்லை. அதனுடன் ஒரு சி.டி-தான் தருகிறார்கள். ஒருவேளை டெமோ கொடுத்தாலும், ஒரே டெமோவில் எல்லா செயல்பாடுகளையும் உள்வாங்கிக்கொள்வது சிரமம். எனவே, வாக்குவம் க்ளீனரைப் பயன்படுத்துவதில் உள்ள சந்தேகங்களுக்கு அந்த சி.டி-யில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் கைகொடுக்கும். சி.டி-யை தவறாமல் கேட்டு வாங்கவும்.

பராமரிப்பு
வாக்குவம் க்ளீனரால் வீட்டைச் சுத்தம் செய்துவிட்டு, அந்த வேலையைச் செய்த க்ளீனரை பலரும் சரியாகச்

டஸ்ட் அலர்ஜி ஏற்படாது!
'சுத்தம் செய்ய வாக்குவம் க்ளீனர் வாங்கினா... அதை வேற சுத்தம் செய்யணும்' என்று பலரும் இதைத் தவிர்ப்பார்கள். ஆனால், அது எளிமையான காரியமாகத்தான் இருக்கும். மேலும், நேரடியாகத் தூசுகளை சுத்தம் செய்யும்போது அதனால் ஏற்படும் டஸ்ட் அலர்ஜி குழந்தைகளில் இருந்து பெரியவர்கள்வரை சளி, இருமல் என்று பாதிக்கும். ஆனால், வாக்குவம் க்ளீனரில் அதற்கான வாய்ப்பே இல்லை'' என்று சொன்னார், அஜய்குமார்.

தரையில் இருந்து கூரை வரை வீட்டின் மொத்த க்ளீனிங்கையும் சிம்பிள் அண்ட் ஸ்மார்ட் ஆக்கும் வாக்குவம் க்ளீனரை... வேண்டாம் என்று சொல்ல முடியுமா என்ன?!

சுத்தம்செய்து வைப்பதில்லை. க்ளீனரில் இருக்கும் டஸ்ட் பேக்கை மட்டும் சுத்தம் செய்துவிட்டு வைத்துவிடுகிறார்கள். அது தவறு. பிரஷ், டியூப் என பயன்படுத்தும் மற்ற பொருட்களையும் கழுவி, துடைத்துவைக்க வேண்டும். டிரை மாடல் க்ளீனரை தூசுகளைச் சுத்தம் செய்ய மட்டுமே பயன்படுத்த வேண்டும். கவனக்குறைவாக ஈரம் இருக்கும் இடத்தில் பயன்படுத்தினால், அது மோட்டாரின் ஆயுளைக் குறைக்கும்.
http://pettagum.blogspot.com/2016/03/blog-post_81.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 11 டிசம்பர், 2017

ஆபீஸ் ஸ்ட்ரெஸ் தவிர்க்கும் வழிகள்

ஆபீஸ் ஸ்ட்ரெஸ் தவிர்க்கும் வழிகள்
குடும்பம்
மனோஜுக்கு 42 வயது. ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரி. மீட்டிங், டார்கெட் என அலுவலகத்தில் மூச்சுவிட நேரமின்றி பரபரப்பான வேலை. டென்ஷனைக் குறைக்க, அவ்வப்போது சிகரெட்களாக ஊதித்தள்ளுவார். வார இறுதியில் நண்பர்களுடன் மது அருந்துவார். இந்தத் தவறான வாழ்க்கைமுறையால் உடல்பருமனுக்கு ஆளானார். அதைத் தொடர்ந்து, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என வரிசைகட்டின. ஒரு நாள் கடுமை யான வயிற்று வலி ஏற்பட, மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தபோது, பேஃட்டி லிவர் பிரச்னை இருப்பது தெரியவந்தது. ஏற்கெனவே, குடும்பத்திலும் பிரச்னை என்பதால், இப்போது மனோஜைக் கவனித்துக்கொள்ளக்கூட ஆள் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்.



மனோஜைப் போலவே பல்லாயிரக்கணக்கானோர் இப்படிப் பரிதவிக்கின்றனர். 'ஆபீஸ் ஸ்ட்ரெஸ்'
  எனப்படும் அலுவலக மன அழுத்தத்தை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் வாழ்க்கையைத் தொலைப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆபீஸ் ஸ்ட்ரெஸ் ஏன் வருகிறது என்பதற்குப் பொதுவாக 10 காரணங்கள் உள்ளன.

1 நிறைய வேலைசெய்ய வேண்டும். ஆனால், குறைவான சம்பளம் மட்டுமே கிடைக்கும்  எனும் நிலையில் இருப்பவர்கள் முதல் வகை. பணிச்சுமை மற்றும் குடும்பத்தைச் சமாளிக்க முடியவில்லை எனும் ஆதங்கத்தால் மன அழுத்தம் ஏற்படும்.

2 மூன்று, நான்கு பேர் செய்ய வேண்டிய வேலையை ஒருவரே செய்யும்போது ஏற்படும் பணிச்சுமையால் ஸ்ட்ரெஸ் ஏற்படும்.

3 'நான்தான் அலுவலகத்திலேயே பெஸ்ட்'
  என நினைப்பவர்கள் மற்றவர்களின் வேலையையும் முன்வந்து எடுத்துச் செய்வார்கள். மற்றவர்கள் செய்யும் அனைத்து வேலைகளும் அவர்களுக்குக் குறையாகத் தோன்றும். இதுவே அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

4 ஒரு சிலர் மற்றவர்களைக் காட்டிலும் திறன் மிக்கவராக இருப்பர். நன்றாக வேலை செய்யக்கூடியவர், இவர் செய்தால், வேலையில் பிழை இருக்காது என்பதால் அலுவலகத்தில் அதிகப் பணிச்சுமை கொடுப்பார்கள்.
  இதனால், பாதிக்கப்படும் நபர்கள் கடுமையான மன அழுத்தத்தில் புழுங்குவார்கள்.

5 நவீன உலகத்தில், அனைவருமே எட்டு கால் பாய்ச்சலில் ஓடவேண்டிய நிலை உள்ளது, பல நிறுவனங்களும் இதைக் கருத்தில்கொண்டு தொழில்நுட்ப மாற்றங்களை உடனுக்குடன் அப்டேட் செய்கிறார்கள். இந்தத் தொழில்நுட்ப
  மாற்றங்களை அப்டேட் செய்துகொள்ளும் திறன் குறைவாக உள்ளவர்கள், பொறுப்புகளில் இருந்து ஒதுக்கப்படுகிறார்கள். இந்தப் பிரச்னையால் மன உளைச்சல் ஏற்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

6 ஒரு சில நிறுவனங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் பரவலாக்கப்படாமல் இருக்கும். சிறுசிறு முடிவுகளுக்குக்கூட உயர் அதிகாரியை நாட வேண்டி இருக்கும். பல வருடங்கள் உழைத்தும் சிறு முடிவைக்கூட தங்களால் எடுக்க முடிவது இல்லை எனும் விரக்தி சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். பெரும்பாலும், 35 வயதைத் தாண்டியவர்கள் இந்தப் பிரச்னைக்கு ஆளாகிறார்கள்.

7 அலுவலகத்தில் நல்ல மரியாதை, நல்ல சம்பளம் கிடைத்தும் சிலர் வேலைப்பளு காரணமாக இரவு வீட்டுக்குத் தாமதமாக வருவது, வீட்டில்
  குடும்பத்தினரைக் கண்டுகொள்ளாமல் இருப்பது என்று இருப்பார்கள். இதனால், வீட்டில் மனைவி, குழந்தைகள் போன்றோருடன் சரியான பிணைப்பு இன்றி, சண்டைச் சச்சரவுகள் அதிகரிப்பதால், அலுவலக வேலைகளில் சுணக்கம் காண்பித்து அலுவலகத்திலும் கெட்ட பெயர் எடுப்பார்கள்.

8 சில அலுவலகங்களில் 'ஜாப் புரொஃபைல்' எனப்படும் ஒருவருக்கு என்ன வேலை என்பதையே
  தெளிவாகச் சொல்லாமல் பணியாளராகச் சேர்த்திருப்பார்கள். அவரிடம் எல்லாவிதமான வேலைகளையும் வாங்குவார்கள். இதனால், எந்தத் துறையிலும் சிறப்பாகச் செயல்பட முடியாமல், தான் எந்த வேலையில் சிறப்பாகச் செயல்படக்கூடியவர் என்பதும்  தெரியாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாவார்கள்.

9 அலுவலக அரசியல், பணிச்சூழல், நிர்வாகச்சூழல் என்பனவற்றை எல்லாம் தாண்டி, சிலர் அலுவலகத்தில் உயர் அதிகாரி ஆகியிருப்பார்கள். சிலர் நீண்ட நாட்கள் உழைத்தும் சரியான அங்கீகாரம் இல்லை என அலுத்துக்கொண்டிருப்பார்கள். தன்னம்பிக்கை இன்மை, தாழ்வு மனப்பான்மை
  எதிர்காலம் குறித்த அச்சத்தால் பாதிக்கப்படுவார்கள்.
10 சிலர் தாங்களாகவே மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொள்வதும் உண்டு. சக ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்கை யைப் பற்றி கிசுகிசு பேசுவது, எதற்கெடுத் தாலும் உயர் அதிகா ரியைத் திட்டிக் கொண்டே இருப்பது, தனக்கு மட்டுமே கடினமான வேலைகளைக் கொடுக்கிறார்கள் என நினைப்பது, தன்னை மட்டும் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறார்கள் எனத் தேவையற்ற பயம் கொள்வது, பிடிக்காத வேலையைத் தேர்ந்தெடுத்துவிட்டு பின்னர் புலம்புவது, தன்னை யாரும் மதிப்பது இல்லை என நினைத்துக்கொள்வது போன்ற காரணங்களால் மன உளைச்சலை தாங்களாகவே ஏற்படுத்திக்கொள்வோரும் உண்டு.

ஆபீஸ் ஸ்ட்ரெஸ்ஸால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது எப்படி?
இரண்டு மூன்று மாதங்களாக வழக்கத்துக்கு மாறாகக் கோபமாகக் காணப்படுவார்கள்.

அடிக்கடி நகம் கடித்துக்கொண்டே இருப்பார்கள்; 'ஆப்சென்ட் மைண்ட்' பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்; எதையாவது வெறித்துப் பார்ப்பார்கள்; செய்த வேலையைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள்; எப்போதும் சோர்வாக இருப்பார்கள்.

அலுவலக ஸ்ட்ரெஸ் தாங்க முடியாமல் நிறையச் சாப்பிடுவார்கள். எப்போதும் ஒருவித பயம், பதற்ற உணர்வுடன் இருப்பார்கள். சிலர் எப்போதும் தங்களை தைரியசாலிபோல மற்றவர்களிடம் வேண்டுமென்றே காட்டிக்கொள்வார்கள்.
 
இரவு, நீண்ட நேரம் தூங்காமல் விழித்திருப்பார்கள்.

சிலர் சிகரெட், மது போன்ற தீயப் பழக்கங்களுக்கு அடிமையாகிவிடுவார்கள்.
 
மன அழுத்தத்தின் அளவைப் பொறுத்து மறுவாழ்வு சிகிச்சைகள் தேவைப்படலாம்.


ஆபீஸ் ஸ்ட்ரெஸ்ஸைக் கையாள்வது எப்படி?
ஆபீஸ் ஸ்ட்ரெஸ் காரணமாகப் பாதிக்கப்படுபவர்களில் அதிகம் பேர் 25-35 வயதைச் சேர்ந்தவர்கள்.

அலுவலக வேலை குறித்தத் தெளிவின்மைதான் மனஅழுத்தத்துக்கு முக்கியமான காரணம். கல்லூரிக்குச் செல்லும்போது காலை முதல் மாலை வரை நாம் செலவுசெய்து கற்றுக்கொள்கிறோம். அலுவலகத்துக்குச் செல்லும்போது அதே காலை முதல் மாலை வரை வேலை செய்வதற்கு நமக்கு அலுவலகம் சம்பளம் தருகிறது என்பது மட்டும்தான் கல்லூரி முடித்து அலுவலகம் செல்பவர்களின் புரிதலாக உள்ளது.

நமக்கான வேலை, நமக்கான புரொஃபைலை நாம் உருவாக்கிக்கொள்ளும்போது அதற்குரிய பணிச்சூழல், அதனால் ஏற்படும்
  மன அழுத்தம் ஆகியவற்றை உணர்ந்து லைஃப்ஸ்டைலை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஓய்வுதான் மன அழுத்தம் போக்குவதற்கான சிறந்த நிவாரணி. தியேட்டருக்குச் செல்வது, ஹோட்டலில் சென்று சாப்பிடுவது, நண்பர்களுடன் பேசுவது போன்றவை மட்டுமே மனஅழுத்தம் போக்கும் காரணிகள் அல்ல.

நல்ல ஆழ்நிலை தூக்கம்தான் மன அழுத்தம் போக்கும் முக்கியமான நிவாரணி. தினமும் ஏழெட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.

உடற்பயிற்சியை விரும்பிச்செய்ய வேண்டும். ஜிம்முக்குச் சென்றுதான் உடற்பயிற்சி செய்ய
  வேண்டும் என அவசியம் இல்லை, வசிக்கும் இடத்திலேயே அவரவர்க்கு ஏற்ற உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

தியானம், யோகா ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளலாம். நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினரோடு சேர்ந்து எளிமையான குழு விளையாட்டுக்களை விளையாடலாம்.

பிடித்த டிஷ் செய்தல், ஃபேஷன் போன்றவற்றில் கவனம் செலுத்துதல் மனஅழுத்தம் போக்கும். சமூக வலைதளங்களில் ஒருநாளைக்கு அரை மணி நேரத்துக்கு மேல் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மூளையைச் சுறுசுறுப்பாக்கும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அவரவர் விருப்பம்போல, பல மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம், பெயின்டிங் செய்யலாம்.

அலுவலகத்துக்கும் குடும்பத்துக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அலுவலக டென்ஷனை வீட்டிலும், வீட்டில் ஏற்படும் டென்ஷனை அலுவலகத்திலும் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

மகிழ்ச்சியான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். எப்போதும், எந்தச் சூழ்நிலையிலும் நேர்மறை எண்ணங்களைக் கைவிடாதீர்கள்.

சுற்றுலா செல்வது மனஅழுத்தம் போக்கும் சிறந்த நிவாரணி என்றாலும், பணிச்சூழல், பண வசதி ஆகியவற்றின் காரணமாக சிலர் சுற்றுலா செல்ல முடியாமல் நேரிடலாம். வாய்ப்பு இருந்தால் சுற்றுலா செல்லலாம். இல்லை எனில், அன்றாட வாழ்க்கையிலேயே சிறுசிறு மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் மனஅழுத்ததைத் தவிர்க்க முடியும்.

கோபம், மன அழுத்தம் தவிர்த்தலின் ஆறு நன்மைகள்...
அலுவலகத்தில் சரியாகப் பணிபுரிவதால், உங்களுக்கும் அலுவலகத்துக்கும் வளர்ச்சி ஏற்படும்.
வீட்டில் இருப்பவர்களுடன் நேரம் ஒதுக்க முடிவதால், சண்டைச் சச்சரவுகள் இன்றி, வீட்டில் அன்பும் மகிழ்ச்சியும் பெருகும்.

மன அழுத்தம் காரணமாக ஏற்படும் உடல்பருமன் குறையும்.
மூளை சுறுசுறுப்படையும்; பல விஷயங்களில் தெளிவு பிறக்கும்.
வாழ்வியல்முறையை மாற்றிக்கொள்வதால், பல்வேறு நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

யோகா, உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்வதால், உடல் ஃபிட்டாகும்.

நேர மேலாண்மை
நேர மேலாண்மைதான் மனஅழுத்தம் போக்குவதற்கு மிகவும் முக்கியமான விஷயம். 'எனக்கு நேரம் இல்லை' எனச் சொல்வதைத் தவிருங்கள். அலுவலகத்தில் வேலை நேரத்தில் ஒழுங்காக வேலைசெய்யாமல், கூடுதல் நேரம் எடுத்து, வேலையை முடிப்பதைத் தவிர்க்கவும். காலை எழுவதிலும், இரவு உறங்குவதிலும் நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிப்பது அவசியம். டி.வி  பார்க்கலாம், மொபைல் கேம்ஸ் விளையாடலாம், போன் பேசலாம், சமூக வலைதளங்களில்  உலாவலாம். இதில் தவறு இல்லை. ஆனால், பொழுதுபோக்கு விஷயங்களுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒதுக்குங்கள். வலுக்கட்டயமாக நேர மேலாண்மையைக் கடைப்பிடிக்காமல், மன நிறைவோடு கடைப்பிடித்தால், நிம்மதியும் இருக்கும். உங்கள் துறையில் வளர்ச்சியும் அடைய முடியும்.
http://pettagum.blogspot.com/2016/02/blog-post_17.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 9 டிசம்பர், 2017

குட்டீஸ் சுட்டீஸ் - அதிகம் தாக்கும் 6 பிரச்னைகள்

குட்டீஸ் சுட்டீஸ் - அதிகம் தாக்கும் 6 பிரச்னைகள்
பேரன்டிங் கைடு
"பையன்கிட்ட என்னதான் அன்பா சொன்னாலும் அடிச்சாலும் அடங்கவே மாட்டேங்கிறான். ரொம்பச் சேட்டை செய்றான். கீழே விழுந்து காயம் பட்டுச்சு... இருந்தாலும்  ஓடுறதும் தாவுறதுமா ரொம்ப அட்ட காசம் செய்றான். ஸ்கூல்ல ஒரு இடத்தில உட்கார மாட்டேங்கிறான்; படிப்பே ஏற மாட்டேங்குது..." - பல பெற்றோர்களின் புலம்பல் இது.



போட்டி மிகுந்த உலகில், ப்ரீகேஜியில் இருந்தே நன்றாகப் படித்தால்தான் வெற்றிபெற முடியும் என நினைக்கும் பெற்றோர்கள், குழந்தைகளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கின்றனர். ஆனால், குழந்தைகளோ சரியாகப் படிக்காமல் விளையாட்டில், சேட்டைத்தனங்களில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது, மனஉளைச்சல் வந்துவிடுகிறது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய அச்சத்தில்,
  "படி... படி..." என்றும் "அதைச் செய்யாதே... இதைத் தொடாதே..." என்றும் பெற்றோர் கண்டிப்புக் காட்டுகின்றனர். மறுபுறம், பள்ளியிலும் இதே கெடுபிடி, மிரட்டல். இதனால், குழந்தைகளுக்கும் மனஅழுத்தம் வந்து, மன உளைச்சலுக்கு ஆளாகித் தவிக்கின்றனர்.

சினிமா, டி.வி-யைப் பார்த்தும், யாரோ ஒரு நண்பர் யாருக்கோ நடந்ததாகச் சொன்னதைக் கேட்டும், கூகுளிலும் சமூக வலைதளங்களிலும் உள்ள ஆதாரமற்ற தகவல்களைப் படித்தும், டாக்டரிடம் போய் "குழந்தைக்கு சைக்காலஜிக்கலா பிரச்னை இருக்கு டாக்டர்... ஒருவேளை இந்தக் குறைபாடா இருக்குமோ?" எனக் குழந்தைகளை நோயாளியாகவே ஆக்கிவிடும் பெற்றோர்களும் அதிகம். உண்மையில், இவை எல்லாம்
  பெற்றோர் அஞ்சும் அளவுக்குத் தீவிரமான குறைபாடுகளா... கற்றலில் குழந்தைகளுக்கு வரும் குறைபாடுகள் என்னென்ன... சிகிச்சைகள் என்னென்ன?

குழந்தைகளைப் பாதிக்கும் பிரச்னைகள்
படிப்பதில் சிரமம் (Learning Difficulty (LD): விளையாட்டு, உணவு என மற்ற விஷயங்களில் கவனம், ஆர்வம் இருக்கும். ஆனால், படிப்பில் மட்டும் கவனம் இருக்காது.

கவனத்திறன் குறைதல் (Attention Deficit): படிக்கப் பிடிக்காது. ஓர் இடத்தில் அமர்ந்து கவனிக்கவே மாட்டார்கள். வகுப்பறையில் எழுந்து நடந்துகொண்டு இருப்பார்கள். போர்டில் எழுதிப்போடுவதைப் பார்த்து, எழுதப் பிடிக்காது. எழுத்துகள் அவர்களுக்கு வேறு மாதிரியாகத் தெரியும்.

அதீத இயக்கம் (Hyperactivity): ஓர் இடத்தில் நிற்காமல் துள்ளிக்கொண்டே இருப்பார்கள். கை, கால் அமைதியாக ஓர் இடத்தில் நிற்காது. எதிரில் இருக்கும் பொருட்களைக் கைகளில் எடுப்பது, உடைப்பது, ஆராய்ச்சிசெய்வது போன்ற செயல்களைச் செய்வர்.

டிஸ்லெக்‌ஷியா (Dyslexia): வார்த்தைகளைக் கண்ணாடியால் பார்த்தால் எப்படி இடமிருந்து வலமாகத் தெரியுமோ, அதுபோல, இவர்களுக்கு சில எழுத்துக்கள் தலைகீழாகவோ, இடமிருந்து வலமாகவோ தெரியும். உதாரணத்துக்கு 'b' என்கிற எழுத்து 'd'யாகவும், 'm' எழுத்து 'w'வாகவும் தெரியலாம். இவர்களுக்கு எழுதுவது, படிப்பது பெரும் சிரமமாக இருக்கும். சிலருக்குக் கணக்கைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்கலாம்; சில குழந்தைகளுக்கு வாசிப்பதில் சிரமம் ஏற்படலாம்; சில குழந்தைகளுக்கு நுணுக்கமான வேலைகளைச் செய்வதில் பிரச்னை ஏற்படலாம்.

கவனஈர்ப்பு (Attention seekers): எந்தச் செயல் செய்தாலும் அதைப் பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் காண்பித்து, அதைக் கவனிக்கச் சொல்லி, பதில் எதிர்பார்க்கும் தன்மை.
  உதாரணத்துக்கு, 'குட்மார்னிங்' சொல்லிய பிறகு, திரும்ப 'குட்மார்னிங்' சொல்லவில்லை என்றால், அந்தக் குழந்தை அடுத்த வேலையைச் செய்யாது. தன் மேல் கவனம் எப்போதும் இருக்க வேண்டும் என்று  நினைப்பர்.

ஏ.டி.ஹெச்.டி (Attention Deficit Hyperactivity Disorder): படிப்பதே மிகவும் அரிதாக இருக்கும். வீட்டில் சேட்டை செய்து விட்டு பள்ளியில் அமைதியாக இருந்தால், அது ஏ.டி.ஹெச்.டி இல்லை. வீடு, பள்ளி இரண்டிலும் துறுதுறுவென துள்ளிக்கொண்டே இருந்து, படிப்பிலும் கவனம் இல்லாமல் இருப்பதுதான் `ஏ.டி.ஹெச்.டி' எனப்படும் அதீதப் பரபரப்பு மற்றும் கவனக்குறைபாடு பிரச்னை.

இந்தக் குழந்தைகளுக்கு அறிவுத்திறன் நன்றாகவே இருக்கும். நினைவுத்திறனிலும் குறைபாடு இருக்காது. உடல் உறுப்புகளின் செயல்பாடும் இயல்பாக இருக்கும். ஆனால், எதிலும் கவனத்தை ஒருமுகப்படுத்த முடியாமல் அவதிப்படுவார்கள்.


பிரச்னைகள் வரக் காரணங்கள் என்னென்ன?
கர்ப்ப காலத்தில், தாய்க்கு அயோடின், கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால், பிறக்கும் குழந்தைக்கு இத்தகையப்
  பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். குறிப்பாக, படிப்பதில் சிரமம் ஏற்படலாம். இவர்களுக்கு, கவனத்திறன் குறைவாக இருக்கும். மற்றவர்களிடம் பேசுவது, தன்னுடைய இயல்பில் மாற்றம், ஓர் இடத்தில் நிற்காமல் ஓடுவது போன்ற நடத்தைப் பிரச்னைகள் இருக்கும்.

மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற காரணங்கள்கூட குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கலாம்.

குளிர்பானங்கள், பர்கர், பீட்சா போன்ற துரித உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவது, ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் குறைவாக எடுத்துக்கொள்வதுகூட, பிறக்கும் குழந்தையைப் பாதிக்கும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள், மகப்பேறு மருத்துவர்களிடம் சென்று ஆலோசனைப் பெறுகின்றனர். முதல் ஐந்து மாதங்களுக்குள் குழந்தையின் எல்லா உள்உறுப்புக்களும் தோன்ற ஆரம்பித்து முதிர்ச்சியடைய ஆரம்பிக்கும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் அதிக சோகம், கவலை, கோபம் போன்றவை குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும். இதனாலும், குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படலாம்.

சிகிச்சைகள் என்னென்ன?
குழந்தைகளை மிரட்டுவது, அடிப்பதைத் தவிர்த்து அவர்களிடம் அன்புகாட்ட வேண்டும். மனநல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றால், இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும். என்ன பிரச்னை என்பதை டாக்டர் கண்டறிந்து, மருந்து தேவையா அல்லது கவுன்சலிங் தேவையா என முடிவுசெய்வார். மனப் பயிற்சிகள், உடற்பயிற்சிகள், மூளைப் பயிற்சிகள், கவுன்சலிங் போன்றவற்றாலேயே குழந்தைகளை இயல்புநிலைக்கு மாற்ற முடியும். ஏ.டி.ஹெச்.டி குழந்தைகளைக் கட்டுப்படுத்தவே முடியாத சமயத்தில் மட்டும் மருத்துவர் அனுமதியுடன் மருந்து கொடுப்பது நல்லது. விரல்களைவைத்துச் செய்யும் மூளைக்கான பயிற்சி, அபாக்கஸ், மாத்தி யோசி (லேட்ரல் திங்க்கிங்), நினைவுத்திறன் பயிற்சி, பர்சனாலிட்டி டெவலப்மென்ட் போன்ற பயிற்சிகளால் குழந்தைகளை முழுமையாகக் குணப்படுத்த முடியும்.

என்ன செய்ய வேண்டும்?
இந்தக் குழந்தைகள் 'வேண்டும்' என்றே இப்படி செய்யவில்லை என்பதை முதலில் பெற்றோரும், ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இவர்களுக்குத் தண்டனை கொடுப்பது தீர்வு இல்லை.

படிக்கச் சிரமப்பட்டு, மதிப்பெண் குறைவாக எடுத்தால், அவர்களிடம் பேசி என்ன பிரச்னை எனக் கண்டுபிடித்து,
  படிக்க ஆர்வம் இருக்கிறதா எனக் கவனிக்க வேண்டும்.

படிக்க, எழுத, கவனிக்க ஆர்வம் இல்லை எனில், அடித்தோ, மிரட்டியோ குழந்தைகளைச் செய்யவைக்கக் கூடாது. மனநல மருத்துவர், மூளை நரம்பியல் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று காண்பிக்கலாம்.

இதுதான் பெஸ்ட் ஸ்கூல் என்று குழந்தைக்குப் பிடிக்காத சூழலில் படிக்கவைக்கக் கூடாது.

பொருட்களை எடுப்பதில் சிரமம், ஒவ்வொரு வயதுக்குண்டான இயல்பான வளர்ச்சி இல்லாத குழந்தைகளை உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

மற்ற குழந்தைளோடு ஒப்பிடும்போது நடத்தையில் மாற்றம், இயல்பான விஷயங்களில்கூட மாற்றம் இருப்பதாகத்
  தெரிந்தால், உடனே மருத்துவரிடம் சென்று காண்பிக்க வேண்டும்.

மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதை நிறுத்த வேண்டும்.

குறைபாடுகளைத் தவிர்க்க!
குழந்தைகளுக்கு ஏற்படும் இந்தப் பிரச்னைகளுக்கு கர்ப்ப காலத்தில் தாய் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுக்காததே பெரும்பாலும் காரணமாக உள்ளது. எனவே, சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

முட்டை, மீன், ஒமேகா 3 சத்துக்கள் நிறைந்த உணவுகள், கேரட், பீன்ஸ், அனைத்து வகையான கீரைகள் சாப்பிட் டால், பிறக்கும் குழந்தைக்குக் குறைபாடுகள் வராது. மருத்துவர் பரிந்துரைக்கும் ஃபோலிக் அமில மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.

கர்ப்ப காலத்தில் மன உளைச்சலைத் தவிர்த்துவிட்டு, மகிழ்ச்சியாக இருக்கும் வழிகளைப் பின்பற்ற வேண்டும்.

யோகா, தியானம் செய்யலாம். மிதமான பயிற்சிகளைச் செய்ய வேண்டும். நடைப்பயிற்சி செய்வது பெஸ்ட்.
நான்காவது மாதத்திலிருந்து வயிற்றில் உள்ள குழந்தையிடம், 'அம்மா பிரஷ் பண்ணப்போறேன்', 'அம்மா சாப்பிடப்போறேன்', போன்ற எல்லா செயல்களையும் பேசிக்கொண்டே செய்தால், கவனிக்கும் திறன் அதிகரிக்கும். நியூரான்கள் நன்றாக வளர்ச்சியடையும். ஐ.க்யூ அதிகரிக்கும்.

வயிற்றில் உள்ள குழந்தையைத் தடவிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த 'டச் தெரப்பி' வயிற்றில் உள்ள குழந்தையின் மனநலம் மற்றும் உடல்நலத்தை மேம்படுத்தும்.

பெரும்பாலும், ஏ.டி.ஹெச்.டி, ஆட்டிசம் போன்ற குறைபாடுகள் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளையே அதிகம் பாதிக்கின்றன.

30 வயதுக்கு மேல் பெண்ணும், 40 வயதுக்கு மேல் ஆணும் குழந்தை பெற்றுக்கொள்வதால், சில குழந்தைகள் குறைபாட்டுடன் பிறக்கும் வாய்ப்புகள் அதிகம்.

திருமணமாகி ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் குழந்தை பெறாமல் தள்ளிப்போட்டால் 18 சதவிகிதம், படிப்பதில் சிரமம் பிரச்னை வரும். திருமணமாகி மூன்று வருடத்துக்குள் குழந்தை பெற்றுக்கொள்வது நல்லது.

சமச்சீரான உணவு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு, சீரான தூக்கம், மகிழ்ச்சியான மனநிலை, மிதமான உடற்பயிற்சிகள் செய்தாலே குறைபாடுகள் வராமல் தடுக்க முடியும்.

இடது மூளை என்ன செய்யும்?
குழந்தைகள் பள்ளியில், இடது பக்க மூளையைத்தான் அதிகம் பயன்படுத்துவர். லாஜிக்கல் திங்க்கிங், மேத்தமேட்டிக்கல் திங்க்கிங், படித்ததை நினைவில் நிறுத்துதல் போன்றவற்றுக்காக இடது பக்க மூளையைப் பயன்படுத்துவது இயல்பாக இருக்கும்.

வலது மூளை என்ன செய்யும்?
வலது பக்க மூளையையும் தூண்டச் செய்தால் படைப்பாற்றல் திறன், கற்பனைத் திறன், புதிய கண்டுபிடிப்புகள், நிறங்கள், படங்கள் போன்ற கலை தொடர்பான அறிவும் மேம்படும்.

படிப்பு ஏறாத குழந்தைகள், குறைபாடுள்ள குழந்தைகளா?
சாதனையாளர்கள் அனைவருமே படிப்பில் கெட்டிக்காரர்கள் அல்ல. பெரும்பாலான சாதனையாளர்களுக்கு, வலது பக்க மூளைதான் அதிகமாக வேலை செய்யும். படிப்பில் கவனம் குறைவாக இருந்து, மற்ற திறன்கள் இருக்குமாயின், அந்தக் குழந்தை குறைபாடுடைய குழந்தை இல்லை. மாறாக அது சாதிக்கும் குழந்தை. அதன் சிறப்பு ஆர்வம் எதுவெனக் கண்டறிந்து அதை மேம்படுத்தினால், அந்தத் துறையில் பெரும் சாதனையாளராக மாற வாய்ப்பு உள்ளது. எனவே, இது ஒரு நோய் எனக் கவலைகொள்ளாது, உண்மையை உணர வேன்டும்.
http://pettagum.blogspot.com/2016/02/6.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 7 டிசம்பர், 2017

மனதை படித்த மருத்துவர்! பெட்டகம் சிந்தனை!!

மனதை படித்த மருத்துவர்! பெட்டகம் சிந்தனை!!
மூத்தவர்களை கவனித்துக் கொள்ளும் விதம்!
சமீபத்தில், மும்பையிலுள்ள எங்கள் குடும்ப டாக்டரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டில், 90 வயதான அவரது பாட்டியும் இருந்தார். எங்களைப் பார்த்ததும் அப்பாட்டிக்கு ரொம்ப சந்தோஷம். அவருக்கு, எங்களை அறிமுகப்படுத்திய டாக்டர், பின், தன் பாட்டியை கலாய்க்க ஆரம்பித்தார்...



'பாட்டி... இவங்க சொல்றாங்க... நீ ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்கியாம்... உன் திருமணத்தில் நடந்ததை இவங்களுக்கு சொல்லு...' என்றும், 'நான் சின்னக்குழந்தையா இருந்தப்போ ஒரு பாட்டு பாடுவியே... அதை இவங்களுக்கு பாடிக் காட்டு...' என்றும் கூறி, அவரது பழைய நினைவுகளை நினைவுபடுத்தினார்.

சிறிது நேரத்திற்கு பின், 'பாட்டி... நீ ஒரு கோலம் போடு; இவங்களையும் ஒரு கோலம் போடச் சொல்லலாம். யாரோடது அழகா இருக்குன்னு நீயே பார்த்து சொல்லு...' என்று கோலப்பொடி டப்பாவை பாட்டியிடம் நீட்ட, பாட்டியும் சரியாக புள்ளி வைத்து, அதைக் கணக்கிட்டு அழகாக கோலம் போட்டார்.

பின், அங்கிருந்த தொப்பியை எடுத்து, பாட்டி தலையில் மாட்டி, அவரை சிரிக்க வைத்தும், பொம்மைகளைக் கொடுத்து, 'இதை நீ கையில் வச்சுக்கோ, போட்டோ எடுக்கலாம்...' என்று பேச்சுக் கொடுத்தபடியே இருந்தார். அவரது கலாட்டா சற்று அதிகமோ என்று நினைத்து, மெதுவாக அதுபற்றி கேட்டேன்.
'பாட்டியிடம் பழைய விஷயங்களைப் பற்றி பேச்சு கொடுப்பதுடன், தினமும் பத்து நிமிடமாவது சிரிக்க வச்சுடுவேன். இதனால், அவங்களுக்கு நினைவுத் திறன் நன்றாக இருப்பதுடன், ரொம்ப சந்தோஷமாகவும் இருப்பாங்க. அதோட, தினமும் அவரது காலில் விழுந்து வணங்கி, என் நெற்றியில் திருநீறு பூசப் சொல்வேன். அவரும் மனம் நிறைந்த ஆசி வழங்கி, திருநீறு பூசி விடுவார்...' என்றார்.

வயதானலே தொல்லையென சலித்துக்கொள்வோருக்கு மத்தியில், இவரைப் போன்றோரும் இருக்கின்றனரே... என எண்ணி, அவரை பாராட்டி விடைபெற்றேன்.
நாமும், நம் வீட்டில் உள்ள பெரியவர்களுடன் அமர்ந்து, தினமும் சிறிது நேரமாவது அவர்களது பழைய நினைவுகளை கிளறி, சிரித்து பேசுவதன் மூலம், அவர்கள் உற்சாகமாக இருப்பதோடு, நமக்கு அவர்களது நல்லாசியும் கிட்டும் என்பதை கூறவும் வேண்டுமோ!

நல்லதை எடுத்துக் கொள்வதே...
புது வீட்டில் குடியேறிய என் தோழியைக் காண, குடும்பத்தோடு சென்றிருந்தோம். வீட்டைச் சுற்றிப் பார்த்த போது, ஹால் மட்டுமே நவநாகரிக முறையில் இருந்தது. மற்றபடி, சமையலறையில், அழகிய கயிற்றில், உறி ஒன்று தொங்கியது. மற்றொரு புறம், தண்ணீர் ஊற்றப்பட்ட தாம்பாளத்தின் மீது, ஒரு பாத்திரம் இருந்தது. மேலும், அவர்கள் வீட்டில் மிக்சி, கிரைண்டர் மற்றும் வாஷிங் மிஷின் போன்ற உபகரணங்கள் இருந்த போதிலும், அம்மி, உரல் மற்றும் துணி துவைக்கும் கல்லும் இருந்தன.

இதனால், ஆச்சரியமடைந்த நான், 'என்னடி... உன் வீடு பொருட்காட்சி மாதிரி இருக்கு...' என்றேன். அதற்கு தோழி, 'இந்த வீட்டை வடிவமைக்கும் போது, என் மாமனாரும் சில யோசனைகள் கூறினார். பால், தயிர், நெய் வைக்க உறி; எறும்பு ஏறாமல் இருக்க தண்ணீர் தாம்பாளம்; மின்சாரம் இல்லாத போது அரைக்க, அம்மி, உரல் என்று அவர் கூறியதில், நல்ல விஷயங்கள் இருக்கவே, அதற்கும் முக்கியத்துவம் அளித்துள்ளோம்...' என்றாள்.
வீட்டின் பின்புறம் செடி, கொடிகளுக்கு நடுவில் கூண்டில், வான்கோழி ஒன்றும் இருந்தது. அதற்கு தோழி, 'தோட்டத்தில், புழு, பூச்சிகள், பூரான், பாம்பு போன்ற விஷ ஜந்துகள் வந்தால், வான்கோழி ஒரு கை பார்த்துவிடும் என்பதால் இதுவும் என் மாமனார் சாய்ஸ் தான்...' என்றவள், 'விவசாயியான என் மாமனார், கடுமையாக உழைத்து, என் கணவரை படிக்க வைத்தார். இன்று நாங்கள் நல்ல நிலையில் இருந்தாலும், எந்த ஒரு விஷயத்திற்கும், அவரை கலந்து கொள்ளாமல், நாங்களாகவே முடிவெடுப்பதில்லை. வீட்டுப் பெரியோர் சொல்லும் நல்ல விஷயங்களை நாம் ஏற்றுக்கொண்டால், அது, நம் குழந்தைகளுக்கும் பயன்படும்...' என்றாள்; பிரமித்துப்போனேன்.
என்ன தான் நாகரிகத்தின் பாதையில் சென்றாலும், பழமையான பாரம்பரியத்தில் உள்ள அருமையான விஷயங்கள் அழிந்து விடாமல் பின்பற்றுவது சிறப்பு தானே!

மனதை படித்த மருத்துவர்!
சமீபத்தில், எலும்பு முறிவு மருத்துவரை பார்க்க அவருடைய கிளினிக்கிற்கு சென்றிருந்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, நடுத்தர வயதுக்காரர் ஒருவரை தூக்கி வந்தனர். முழங்காலுக்கு கீழ், எலும்பு உடைந்திருந்ததால், வலியில் துடித்தார். அவரை பரிசோதித்த டாக்டர், 'கவலைப்படாதீங்க... சிறிய எலும்பு முறிவு தான்; ஒரு வாரத்தில குணமாகிடும்...' என்று கூறி, சிகிச்சை அளித்தார். பின், அறைக்கு வந்தவரிடம், 'என்ன டாக்டர்... எலும்பு முறிஞ்சு தொங்குது; எழுந்து நிக்கவே ஆறு மாசம் ஆகும் போல இருக்கே... நீங்க என்னடான்னா, நோயாளியிடம் சின்ன பிரச்னை தான்னு சொல்றீங்க...' என்றேன்.

அதற்கு அவர், 'நீங்க சொல்ற மாதிரி அது, பலமான எலும்பு முறிவு தான்; ஆனா, நான் சொன்ன அந்த வார்த்தைகள், அவருக்கு நம்பிக்கைய ஏற்படுத்தும். மருத்துவர்கள், நோயாளிகளுக்கு தரும் முதல் மருந்தே, நம்பிக்கையான வார்த்தைகள் தான். அதிலேயே அவங்களுக்கு பாதி நோய் குணமாகிடும்...' என்றார்.
அவர் கூறியதைப் போலவே, கால் முறிந்த அந்த நபர், அழுவதை நிறுத்தி, சகஜமாக மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
நோயாளிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி, பணம் பிடுங்கும் டாக்டர்களுக்கு மத்தியில், இவர் எனக்கு வித்தியாசமாக தெரிந்தார்.
இதை மற்ற மருத்துவர்களும் செய்யலாமே!
http://pettagum.blogspot.com/2016/01/blog-post_31.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கண் தெரியாதவர்கள் ஏன் கருப்பு கண்ணாடி போடுகிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுகிறார்கள். கண்கள் தெரியாமல் இருந்தாலும் கண்ணாடி போடுகிறார்கள். பொதுவாக கண்களில் ஏற்படு...

Popular Posts