லேபிள்கள்

வியாழன், 21 பிப்ரவரி, 2013

உங்களுக்கு ஒரே கால் வலியா? இதை கொஞ்சம் படிங்க.


இன்றைய காலகட்டத்தில் உடலில் பல வலிகள் வருகின்றன. அதற்கு முக்கிய காரணம், நல்ல ஊட்டச்சத்துக்கள் இருக்கும் உணவுகளை உண்ணாமல் இருப்பதே ஆகும். அவ்வாறு உண்ணாமல் இருப்பதால் உடலைத் தாங்குகின்ற கால்கள் வலுவிழந்து, சோர்வடைந்து வலிகள் ஏற்படுகின்றன. மேலும் பெண்களுக்கே இத்தகைய வலிகள் அதிகம் வருகின்றன. அதற்கு காரணம், அவர்கள் அணியும் செருப்புகள். ஏனெனில் செருப்புகள் அணியும் போது அதிகமான உயரம் கொண்ட செருப்புகளை அணிவதால் இடுப்பு வலிகளோடு, கால் வலிகளும் வருகின்றன. ஆகவே அத்தகைய கால் வலி மற்றும் கால்களில் அலுப்பு போன்றவற்றை நீக்க ஈஸியான சில வழிகள் இருக்கின்றன. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்

* ஒரு வாளியில் வெழவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது உப்பை போட்டு, கால்களை நீரில் மூழ்கி இருக்குமாறு 15-20 நிமிடம் வைக்கவும். இதனால் கால்களானது வலி இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஒரு வேளை நிறைய நேரம் தண்ணீரில் கால்களை வைக்க நேரம் இல்லாமல் இருப்பவர்கள், குளிக்கும் போது ஒரு வாளியில் வெதுவெதுப்பான தண்ணீரை விட்டு, உட்கார்ந்து கொண்டு கால்களை மட்டும் வாளியில் விட்டுக் கொள்ளலாம். இதனால் கண்டிப்பாக கால் வலியானது போகும்.
*சுளுக்கு எடுக்க தெரிந்திருந்தால், விரல்களை வைத்து கால்களை சுளுக்கு எடுப்பது போல் 15-20 நிமிடம் தேய்த்து இழுத்து விடவும். இதனால் உடனடியாக கால் வலியானது போய்விடும். அது தெரியவில்லை என்றால், கால்களை நன்கு மடக்கி நீட்ட வேண்டும். இது ஒரு சிறந்த உடற்பயிற்சி. தண்ணீரை குடிக்கும் போதெல்லாம், இந்த உடற்பயிற்சியை செய்தால் கால் வலியானது வராமல் இருப்பதோடு, கால்களும் சோர்வடையாமல் இருக்கும்.
* ஒரு டேபிள் ஸ்பூன் காட்-லிவர் எண்ணெயை ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் உடன் கலந்து, படுக்கும் முன்பு குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்தால் கால் வலி போவதோடு, உடலில் இருக்கும் சோர்வும் குறையும்.
* தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை, ஒரு கப் வெதுவெதுப்பான நீருடன் குடிக்க வேண்டும். அது விரைவில் கால் வலி மற்றும் கால் சோர்வை குணப்படுத்தும்.
* உண்ணும் உணவில் அதிகமான அளவு கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ போன்றவற்றை சேர்த்து உண்ண வேண்டும். அதிலும் இதனை சரியான அளவு உண்டு வந்தால், கால் வலி வராமல் இருக்கும்.
* முழங்கால்களில் வலி ஏற்படும் போது, அந்த இடத்தில் ஐஸ்களை வைத்து 10-15 நிமிடம் ஒத்தடம் தர வேண்டும். இவ்வாறு கொடுத்து வந்தால் எந்த வலியும் ஈஸியாக குணமாகும்.
* முக்கியமாக எப்போது தூங்கும் போதும் கால்களுக்கு அடியில் குஷன் அல்லது தலையணை வைத்து தூங்க வேண்டும். அதனால் கால்கள் வலிக்காமல் இருப்பதோடு, மெதுமெதுப்பான இடத்தில் கால்களை வைத்து தூங்குவதால் தூக்கமும் நன்றாக வரும்.
ஆகவே எப்போதெல்லாம் கால்கள் வலிக்கின்றதோ, அப்போதெல்லாம் நன்றாக ஓய்வு எடுத்தால் கால்கள் வலிக்காது. அதிலும் முதலில் ஹீல்ஸ் போடுவதை முக்கியமாக தவிர்க்க வேண்டும். மேலும் ஆரோக்கியமாக உணவுகளை, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் உணவுகளை உண்டால் கால்கள் வலிக்காமல் இருக்கும்.

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

வீட்டை சுத்தம் செய்யணுமா? கோலா வெச்சு ட்ரை பண்ணுங்க…


குளிர்பானங்களில் ஒன்றான கோலா, குடிப்பதற்கு மட்டும் தான் பயன்படுத்த முடியுமா என்ன? இல்லை அதனை வைத்து வீட்டை சுத்தப்படுத்தலாம். சொல்லப்போனால் கோலாவும் ஒரு வகையான வீட்டை சுத்தப்படுத்தும் பொருட்களில் ஒன்றாகவும் பயன்படுத்தலாம். ஆகவே அடுத்த முறை கோலாவை வாங்கி முற்றிலும் குடித்துவிடாமல், சிலவற்றை சேமித்து வைத்து, வீட்டை சுத்தப்படுத்தலாம். அத்தகைய கோலா கறை போகாத, அழுக்கு நிறைந்த பொருட்களை எளிதில் சுத்தப்படுத்தும். அத்தகைய கோலாவை எவற்றிற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!


* சமைப்பதற்கு அடுப்பில் அடிக்கடி வைத்து, அதனால் கருப்பாக மாறிய பாத்திரங்களை கூட, கோலாவை வைத்து சுத்தம் செய்தால் எளிதில் அந்த கருப்பானது போய்விடும். ஆகவே பாத்திரங்களை புத்தம் புதிது போல் மாற்றுவதற்கு சிறந்த பொருளில் கோலாவும் ஒன்றாகிவிட்டது. அதிலும் அந்த கருப்பான பாத்திரத்தை சுத்தம் செய்வதற்கு, அந்த பாத்திரத்தில் கோலாவை விட்டு, அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து விடவும். பின் 15 நிமிடங்கள் கழித்து அதனை இறக்கி தேய்த்தால், அதில் உள்ள கருப்பு நீங்கி புத்தம் புதிதாக மாறிவிடும்.

* துணிகளில் ஏதேனும் கறை படிந்துவிட்டால், உடனே கடைகளில் விற்கும் கறைகளை நீக்கும் பொருளை வாங்கி நீக்குவோம். ஆனால் அவற்றை விட இந்த கோலாவை பயன்படுத்தி துவைத்தால், துணிகளில் ஏற்பட்ட கறைகளை காணவே முடியாது.
சிலசமயங்களில் துணிகளில் இரத்தக் கறை அல்லது கிரீஸ் கறைகள் படிந்துவிட்டால், அப்போது ஒரு சிறிய துணியில் கோலாவை நனைத்து, நீக்கலாம். வீட்டில் வாஷிங் மிஷின் பயன்படுத்துபவர்கள் என்றால் துணிகளோடு சிறிது கோலாவை ஊற்றி, சோப்பு பவுடரை போட்டு துவைத்தால், கறைகள் சுத்தமாக போய்விடும். அதுமட்டுமல்லாமல், கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கி கறைகளை நீக்கினால், கறை ஏற்பட்ட இடம் நன்கு தெரியும், ஆனால் கோலாவை வைத்து பயன்படுத்தினால், அந்த கறை எங்கு ஏற்பட்டது என்று கண்டுபிடிக்கவே முடியாது.

* கோலாவை வைத்து வாஷ்பேஷன், பாத் டியூப், டாய்லட் போன்றவற்றை கூட சுத்தம் செய்யலாம். அதற்கு கோலாவை அவற்றிலெல்லாம் ஊற்றி 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் டாய்லட் பிரஷ் வைத்து தேய்த்து, தண்ணீர் ஊற்றினால், புத்தம் புதிது போல் மின்னும்.

* ஏதேனும் துரு பிடித்த பொருட்களை இருந்தாலம் அவற்றையும் கோலாவால் சுத்தம் செய்ய முடியும். அதற்கு கோலாவை, இரவில் படுக்கும் முன் துருப்பிடித்த பாத்திரத்தில் ஊற்றி ஊற வைத்து, மறுநாள் காலையில் தேய்த்தால், துரு எளிதில் போய்விடும்.

* கண்ணாடிப் பொருட்களை கோலாவை வைத்து சுத்தம் செய்தால், அதில் படிந்திருக்கும் தூசிகள் எளதில் நீங்கிவிடும். இது ஒரு சிறந்த கிளாஸ் கிளீனர். ஆகவே கோலாவை ஒரு காட்டனில் தொட்டு, கண்ணாடியை துடைத்தால், கண்ணாடி நன்கு மினுமினுப்போடு இருக்கும்

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்க


தற்போது அழகாக இருக்கும் முகத்தின் அழகை கெடுப்பதில் கரும்புள்ளிகளும் ஒன்று. அதிலும் இந்த பிரச்சனை டீனேஜ் வயதினரையே அதிகம் பாதிக்கிறது.

அது ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி. அவ்வாறு கரும்புள்ளிகள் வந்துவிட்டால், அதைப் போக்குவது என்பது கடினம்.
கரும்புள்ளிகள் கூட ஒரு வகையான பருக்கள் தான். இத்தகைய கரும்புள்ளிகளை நீக்க சிறந்த வழி என்றால் அது முகத்தில் அதனை போக்க பயன்படுத்தும் ஃபேஸ் மாஸ்க் தான்.
மேலும் ஃபேஸ் மாஸ்க்கை போட, கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை விட, வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்தே, அதனை ஈஸியாக நீக்கலாம்.
இத்தகைய இயற்கை பொருட்களை பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள், முகத்துளைகளில் இருக்கும் அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் போன்றவை எளிதில் போய்விடும்.
முட்டை சருமத்திற்கு மிகவும் சிறந்த பொருள். அதனை சருமத்திற்கு பயன்படுத்தினால் சருமம் பொலிவு பெறுவதுடன், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளும் போய்விடும்.
அதற்கு முட்டையின் மஞ்சள் கருவுடன், ஜெலட்டின் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பாலை சேர்த்து, 1 நிமிடம் சூடேற்றவும். பின் அதனை நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதனை முகத்திற்கு தடவி, 5-10 நிமிடம் காய வைக்க வேண்டும். பிறகு அதனை முகத்தில் இருந்து விரல்களால், உரித்து எடுக்கவும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் தடவவும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, சருமமும் இறுக்கமடையும்.
எலுமிச்சை சாற்றில் இருக்கும் ஆல்பா ஹைட்ராக்ஸி ஆசிட் சருமத்தில் இருக்கும் பாக்டீரியா, கிருமிகள் போன்றவற்றை அழிப்பதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள், கரும்புள்ளிகளை எளிதில் நீக்கிவிடும்.
மேலும் எலுமிச்சை சாற்றை முட்டையின் வெள்ளை கருவோடு கலந்து பேஸ்ட் செய்து முகத்திற்கு தடவி, 10 நிமிடம் கழித்து, அதனை முகத்தில் இருந்து உரித்துவிட வேண்டும். பின் அதனை மைல்டு ஃபேஸ் வாஷால் கழுவி விட வேண்டும். இதனால் அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய்கள் நீங்கிவிடும்.
ஆரஞ்சு பழத்தின் தோலை காய வைத்து, பொடி செய்து, பாலுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து முகத்திற்கு தடவ வேண்டும். வேண்டுமென்றால் அதில் சிறிது எலுமிச்சை சாற்றையும் சேர்த்து கலந்து தடவலாம்.
அவ்வாறு அதனை தடவி 10-15 நிமிடம் காய வைத்து, பின் அதனை நீக்கிவிட்டு, வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க பெரும்பாலோனோர் இந்த முறையையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மேற்கூறியவற்றையெல்லாம் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, மற்ற பிரச்சனைகளும் வராமல் இருக்கும்.
முக்கியமாக முகத்தை கழுவியப் பின், முகத்தில் அரிப்புகள் எதுவும் ஏற்படாமல் இருக்க கிளின்சரை வைத்து ஒருமுறை கழுவி விட வேண்டும். இதனால் முகமானது நன்கு பொலிவோடு, மிருதுவான சருமத்தோடு அழகாக இருக்கும்.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

ஓடிப்போவது ஏன்? எதற்காக?


அப்பப்பா......விடிந்துவிட்டால் போதும்! ' எங்கோ, யாரோ யாருடனோ ஓடிப்போய்விட்டார்கள்.  அங்கே அவன் அவளோடு ஓடிவிட்டான்' அட அல்லாஹ்....  இப்படி ஓடி, ஓடியென ஓட்டத்திற்கே களைப்பு ஏற்படுவது போலாகிவிட்டது தற்கால சூழ்நிலை :(  கண்ட, கேட்ட, கேள்விப்பட்டவைகளில் பல 'சரியான காரணங்கள்', பல 'காராணங்களுக்காகவே சரியாக்கபட்டவை'கள்!

சரி நேடியாகவே விசயத்துக்கு வருவோம்....
முன்பெல்லாம் கன்னிப்பெண்கள் காதல் வலையில் வீழ்ந்துவிட்டதற்காக ஓடினார்கள். ஆனால் தற்போது திருமணமானவர்கள்,  குழந்தை பெற்றவர்கள் கூட ஓடிப்போவது வாடிக்கையாகி வருகிறதே??!!   இதற்கு காரணங்கள்தான் என்ன?
சும்மா ஓடிப்போறா, ஓடிபோறான்னு குற்றம் சொல்லிகிட்டிருக்கோமே தவிர, அதுக்குக் காரணம் பற்றி யாரும் கண்டுக்குறதில்ல! கல்யாணமாகாத சின்னப் பொண்ணுன்னாகூட அறியாப் பருவம், இனக்கவர்ச்சின்னு சொல்லலாம். ஆனா கல்யாணமான பொண்ணும் போறாங்கன்னா ஏன் என யாரும் யோசிக்கிறதில்லையே ஏன்? உடல்சுகம் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளாகவே பிரச்சனையை பெண்பக்கம் திசைதிருப்பி ஆண்களின் தவறை  அவர்களுக்கு கடைசிவரை உணர்த்தாமல் போய்விடுகிறோமே ஏன்?
என்ன காரணமாயிருக்கும்..?? இவ்வுலக இச்சையா? இனக்கவர்ச்சியின் தாகமா?  இல்லை இல்லறத்தில் இனிமையில்லையா? இல்லை இல்லத்தில் மனக்கசப்பா? இல்லை கணவன் மனைவிக்குள் எவ்விதத்திலும் ஒத்துபோகவில்லையா? அல்லது அன்பின் பறிமாற்றங்கள் அணுவளவுமில்லையா? இதில் எது இல்லை?   எதில் குறை? இல்லை  எதில் பிழை????  கன்னியாய் ஒருபெண் படிதாண்டி சென்றாலே காலங்காலத்திற்கு ஒரு சொல்லாகிவிடும். அதேசமயம் சென்றவள் ஒன்று இனக்கவர்ச்சிக்காக சென்றிருக்கவேண்டும். அல்லது மனக்காதலுக்காக சென்றிருக்கவேண்டும். எதுவென்றபோதும் படிதாண்டுவது பாதகச்செயல் அவளுக்கு மட்டுமல்ல அவள் குடும்பதிற்கும் அவள் வாரிசுகளுக்கும் சேர்த்துதான். ஆனால்
 அதனினும் அநியாயச்செயல் கல்யாணம் முடிந்தும், குழந்தை பிறந்தும் ஒரு பெண் படிதாண்டுவது. சிந்திக்கத்தவறி, சிந்தனைகள் குழம்பி, சீரழிவிற்கு போகும் பெண்மக்களாய் மாறுவது ஏன்? அல்லது அவர்களை மாற்றுவது எது? என வினாக்களோடு புறப்பட்ட மனதுக்குள் விடைகளென்னும் வெளிச்சம் சிறு மின்னல் கீற்றாக தென்பட்டது. அவைகளிங்கே !
தவறுகள் ஆண்களிடமிருந்தே ஆரம்பமாகிறது :

தமது மனைவியரிடத்தில் அன்பாக நடங்கள்; அவளோடு உண்ணுங்கள்; பருகுங்கள்; அவளின் தேவையறிந்து நடந்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம் கட்டளையிடுகிறது இஸ்லாம். ஆனால் அதை சரிவர செய்கிறார்களா கணவர்மார்கள்???
  

மனைவியர்களுக்கு உணவு, உடை போன்றவற்றை மட்டும் கொடுத்துவிட்டு, மன நிறைவை
  கொடுக்காது தவறிவிடுகின்றனர். பொன்னும் பொருளும் மட்டும் ஒரு பெண்ணிற்கு  போதுமென்றால் அது தன் தாய்வீட்டிலோ அல்லது தனது சம்பாத்தியத்திலோ பெற்றுக்கொள்ள முடியுமே? ஆனால் அதையும் தாண்டி பாசமென்ற  ஒன்றும், காதலென்ற அதீத அன்பும் அனைத்துப் பெண்களுக்கும் தேவைப்படுமென்பதை எத்தனை கணவர்மார்கள் அறிந்து வைத்துள்ளார்கள்???  கணவன் மனைவியென்றால் என்ன? புரிந்துணர்ந்து, ஈருடல் ஓருயிராய் வாழ்வதுதானே? 

சரி அதுக்கும் ஓடி போவதற்கும் சம்பந்தம் என்ன என கேட்கலாம்.
 
மனைவியர்களைத் திருப்திப்படுத்த முடியாத ஆண்மைக் குறைவுள்ள கணவர்கள் தங்களின் பலவீனத்தை வெளிக்காட்டினால் தனக்கு கேவலமென்று மறைப்பதோடு மனைவின் தேவைகளை நிறைவேற்றத் தவறி, வீட்டிற்குள்ளே நடக்கும் சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் குறைகளையும் குற்றங்களையும் மனைவி மீதே சுமத்தி அன்றாட வாழ்வையே அவதிக்குள்ளாக்குவது தனது பலவீனத்தை மறைக்க! இவர்களை போன்றவர்களை அல்லாஹ் எவ்வாறு கண்டிக்கிறான் எனப் பாருங்கள்...
ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்; அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள்; இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்; எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள் - 2:231
தம் மீது எக்குற்றமும் இல்லை என  அனைத்திற்கும் மனைவி நியாயம் தேட முற்பட்டாலும்  'கல்லானாலும் கணவன்' என  முத்திரையையும் குத்தி விடுகிறது இச்சமூகம்.  இதை விடக் கொடுமையானது  இச்சமுதாயம் இந்த விஷயத்தில் ஆண்களின் எல்லா செயல்களையும் நியாயப்படுத்தி பெண்களின் மேல் பழி போடுவதுதான்!  குழந்தை பெறவோ, உடல் சுகம் கொடுக்க முடியாதவளோ உடனே கணவனால் விவாகரத்து கொடுக்க அனுமதிக்கும் சமூகம் பெண்களுக்கு மட்டும்  இதை மறுப்பதோடல்லாமல் மார்க்கம் கூறியபடி அக்கணவனுடன் வாழமறுத்து வேறொரு திருமண செய்ய எத்தனித்தாள் எனில் அவள் மீது அவதூறு கூறுகிறது....அஸ்தஃபிருல்லாஹ்....
எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்- 24:4
அவதூறு செய்வோருக்கு இறைவன் கொடுத்த தண்டனையைப் பாருங்கள்! தேவையற்ற அவதூறுக்கு பயந்து தானே இஷ்டம் இல்லாத வாழ்க்கை வாழ நேரிடுகிறது?  இச்சமூகம்தானே அவள் தவறான பாதைக்கு செல்வதை தீர்மானிக்கிறது? 

மேலும், நண்பர் என்று அதீத நம்பிக்கை வைத்து அதிகமாக வீட்டுக்குள் அனுமதிப்பது! கணவர் இல்லாத நேரத்திலும் தனியே வர அனுமதிப்பது, வெளியில் போக அனுமதிப்பது,
 இதனால் கணவரை விட அதிகம் நேரம், நெருக்கம் நண்பருடன்  அதிகமாகிறது... அத்துடன் நண்பர்களின் குணாதிசயங்களை அதிகமாக மனைவியிடம்  கூறுவதால் காதல், பாசம் உள்ளுணர்வில் ஏற்பட ஆண்களே வழி வகுத்துக் கொடுக்கின்றனர். இதனாலும் தவறுகள் அதிகரிக்கிறது.

அடுத்து தனக்கான செல்வமொன்று வீட்டிலிருப்பதையே மறந்துவிட்டு,
  செல்லென்னும் அழைபேசி வழியே ஆண்டுக் கணக்கில் உறவாடிவிட்டு பணம் பணம் என்று செல்வத்தின் பின்னேயே ஓடி ஓய்கின்றனர். இங்கே இவள்  சொல்லியழக்கூட ஆளில்லாமல், சாய்ந்து அழக்கூட தோளில்லாமல் வாட்டம் கண்டு, வாழ்வே ஆட்டம் கண்டதுபோல் உணருகிறாள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பல கணவர்கள் செய்யும் செயல்களை! 

குறைகளை களைந்தெறிவோம்:

சிந்திக்க வேண்டும்! குறைகள் எங்கே என்று கண்டுபிடித்து களையவேண்டும். ஓடி போன பின்பு எப்படி களைவது குறைகளை என்கிறீர்களா? முன்னோடிகளை வைத்து பின்னோடிகள் தன் பாதைகளை மாற்றிக் கொள்ளவேண்டும். நேற்று பிறருக்கு நடந்தவைகள் இன்று அல்லது நாளை நமக்கு நடவாது பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
 

எப்படி????

இன்றய காலகட்டம், ஆதாள பாதாளத்தின் மேல் கட்டப்பட்ட மெல்லிய கயிற்றின் மேல் நடப்பது போலாகும். ஆகவே உங்களில் ஒவ்வொரு செயல்களும் உங்களிருவருக்கானதாக இருக்கவேண்டும். உங்கள் மனைவியர்கள் மீது முதலில் உங்களுக்கு முழுமையான நம்பிக்கை வரவேண்டும். அடுத்து அவள் மீது அதீத பாசம், அன்பு கொள்ளவேண்டும்.
உங்களிடம் மட்டுமே தன் தேவைகளை நிறைவேற்ற நினைக்கும் அவளுக்கு தேவையானவைகளை நீங்கள் அறிந்திருக்கவேண்டும். அது வாங்கிக்கொடுக்கும் பொருள்களில் மட்டுமல்ல!
  உங்களுக்கு [மார்க்கமும் அனுமதிக்காத] பிடிக்காத காரியத்தில் ஈடுபட்டால் கண்டியுங்கள் முடிந்தவரை அன்பாக! வெளியிலிருந்து வந்தால் மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். சிடுசிடுப்புடன் இருக்காதீர்கள். உப்பு சப்பு இல்லாத விசயங்களுக்கெல்லாம் விதண்டாவாதம் செய்யாதீர்கள். அன்பொழுக பேசாவிட்டாலும் அணுசரனையாக பேசுங்கள். 

அவளின் சில விசயங்களுக்காகவும் விட்டுக்கொடுங்கள். வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் களைப்படைந்திருந்தால்
  பரிவாக நடந்துக்கொள்ளுங்கள்.  அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள்.  அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள். அவளுக்கு பிடித்தபடி உடையணிந்துக் கொள்ளுங்கள். வீட்டுப்பொறுப்பு, குடும்ப நிர்வாக விசயத்தில் அனைத்திலும் அவளை கலந்துக் கொள்ளுங்கள். அவளுக்குத் தேவையானவற்றிற்கு  கஞ்சத்தனம் பாராது செலவழியுங்கள். படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை உங்கள் உற்ற நண்பனிடம்கூட வெளிப்படுத்தாதீர்கள். அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுத்து இல்லறத்தில் உறவாடுங்கள். சிலருக்கு கண்ணியமான பேச்சுகள் பிடிக்கும், சிலருக்கு நகைச்சுவை பேச்சுப் பிடிக்கும், சிலருக்கு கொஞ்சம் கொஞ்சலாக பேசுவது பிடிக்கும். எது பிடிக்குமென்று உணர்ந்துக் கொண்டு அதுபோல் நடந்துக் கொள்ளுங்கள்.
அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்- 4:19
இவையனைத்தும் எங்கு தடைபடுகிறோ அல்லது தடைபடுவதுபோல் எண்ணப்படுகிறதோ அங்கே தவறுகள் உள்நுழைந்து மனக்கட்டுப்பாட்டை தட்டுக்கெட வைக்கிறது. அன்பையும் ஆறுதலையும் இனக்கவர்ச்சியையும் ஈர்ப்பையும் உணர்ச்சிகளையும் ஊக்கம் தரும் வார்த்தைகளையும் எதிர்ப்பார்க்கும் மனங்கள், அது கிடைக்காது ஏங்கித் தவிக்கும்போது அவையத்தனையும் ஒட்டுமொத்தமாய் கிடைக்கப் பெறும்போது, அதாவது கிடைக்கப் பெறுவதைபோல் உணர்த்தப்படுவதால்  ஓடிப்போக நினைக்கிறது... பின்வரக்கூடிய விளைவுகள் புரியாமல் அதோடு தன் வாழ்க்கை அர்த்தமற்றுப் போவதை உணராமல்!!

நீங்கள் படிக்கும் காலத்தில் பெண்களோடு பழகியதுபோல்தான்
  தன் மனைவியும் பிற ஆண்களோடு பழகியிருப்பாள் என்ற வீணான தவறான சந்தேகத்தால் உங்கள் வாழ்க்கையின் அழகியலை கெடுத்துக்கொள்ளாதீர்கள். ஒளிவு மறைவின்றி உங்களிடம் ஒப்படைத்த விசயங்களை வைத்து அவர்களை 'இடுக்கு கிடைக்கும்போதெல்லாம் கொடுக்கு' போடாதீர்கள். அப்புறம் உங்களிடம் அனைத்தையுமே ஒளிக்கக் கற்றுக்கொள்வார்கள்.. உங்களைவிட்டு ஒதுங்கியே வாழ நினைப்பார்கள்.. அப்படியே  உங்களுடன் ஒட்டியிருந்தாலும் மனதளவில் ஒட்டாமலே இருப்பார்கள்..
மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்- நபிமொழி
அதுமட்டுமல்லாது நடத்தைகளில் பழக்க வழக்கங்களில் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களறியாது அவர்களை கண்காணியுங்கள். இக்காலகட்டத்தில் ஓடிப் போவோருக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது செல் எனும் கைப்பேசியே! இனக்கவச்சியையும், இல்லாத ஒழுக்கங்களையும் காட்டிக்கொடுக்கிறது. சினிமாவும் சீரியல்களும். அதை அப்படியே செயல்படுத்த மன்னிக்கவும் கூட்டிக் கொடுக்கிறது கைபேசியும் கணினியும். அவற்றுடன் அவர்கள் அதிக நேரம் உரையாடல்கள் தொடர்ந்தால் அந்த நம்பரை செக் செய்துக் கொள்ளுங்கள்.. வீணாக சந்தேகப்பட்டு அப்புறம் வீண் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். 

[ இவையனைத்தும் கணவர்கள் மனைவிமார்களுக்கு மட்டும் செய்யக்கூடியவைகள் அல்ல மனைவிகளும் கணவர்மார்களுக்கு செய்யக்கூடியவைகள் [சிலதைத்தவிர]. ஏனெனில் தவறுவது பெண் மட்டுமல்ல ஆணும்தான்! ஆனால் ஆணின் இச்செயல்கள் மட்டும் அழுத்தம் கொடுக்கப்படாமலே அமுக்கப்பட்டுவிடும். பெண்ணின் இவ்விழிச் செயல் ஆண்டாண்டு காலம் அசிங்கமாக பேசப்படும்..]
 

இவையெல்லாம் மீறி ஒன்றுமில்லாத காரணங்களுக்காக குடும்பத்தைவிட்டு குழந்தைகளை தவிக்கவிட்டு, யார் எக்கேடு கெட்டாலென்ன, மானம் காற்றில் பறந்து கந்தலானாலென்ன, தன் சுகம் மட்டுமே முக்கியம் என்று தறிகெட்டு தடம்மாறி போகிறவர்களை, உற்றார்களோ உறவினர்களோ அல்லது அந்த ஊர் ஜமாத்தோ ஊர்காரர்களோ ஏற்றுக்கொள்ளக் கூடாது. தண்டனை கடுமையானால் தவறுகள் குறையக்கூடும். என்ன செய்துவிடுவார்கள் நாளு நாட்கள் பேசுவார்கள், அப்புறம் 6 மாதமோ 1 வருடமோ ஒரு பிள்ளையை பெற்றுக்கொண்டு வந்தால் என்ன செய்யப் போகிறார்கள் என்ற நினைப்புதான் பலரை இத்தவறுகளுக்கு தூண்டுகோளாய் அமைகிறது. அதேபோன்று மனைவியிருந்தும், கணவர்கூடவேயிருந்து தவறு செய்பவர்களுக்கும் தக்க படிப்பினை தரவேண்டும். [தெரியாமல் அறியாமல் செய்துவிட்டேன், இனி அத்தவறுகளின் பக்கம் போகமாட்டேன் என்று இறைவன்மீது ஆணையிட்டு தவறை உணர்ந்தவரை தவிர]
9:106. அல்லாஹ்வின் உத்தரவை எதிர்ப்பார்க்கப்படுகின்ற மற்றும் சிலரும் இருக்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னிக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
அதைவிடுத்து இறைவனுக்காக ஏற்றுக்கொள்றேன் என்று பெயரளவில் சொல்லிவிட்டு உள்ளுக்குள் ஒரு ஒப்பாத வாழ்க்கை வாழ்வோர் நிறைய!  "நீ உனக்காக வாழ்! நான் எனக்காக வாழ்க்கிறேன்! ஆனால் நாம் இருவரும் இணைந்திருந்தபடியே!" என்று  வாழ்க்கை நடத்துவோருமுண்டு. நஊதுபில்லாஹி மின்ஹா. இறைவன் காப்பற்றவேண்டும். அவனே அனைத்தையும் அறிந்தவன்..

உங்கள் துணையோடு உங்களுக்கு சந்தேகமா? அல்லது உடன்படாமைகள் தொடர்கிறதா? தீர்க்கப் பாருங்கள்; அல்லது தீர்த்து விடுங்கள் [அச்சொ உயிரையல்ல] அவ[ரி]ளின் உறவை. கூடவே வைத்துக்கொண்டு குத்திக்குத்திக் காட்டுவதில் வாழ்க்கைதான் வலுவிழந்து போகும். குடும்பம்தான் நிம்மதியிழந்து தவிக்கும். ஒன்று சுமூகமான முடிவெடுங்கள்! அல்லது மார்க்கம் சொல்லித் தந்தவாறு பிரச்சனைக்கு
  தீர்வு காணுங்கள். வல்ல இறைவனின் உதவியோடு இருவருமே நிம்மதி காணுங்கள்; இல்லறத்தை நல்லறமாக்குங்கள்; இல்லத்தை இனிமையாக்குங்கள்; சமுதாயத்தையும் நல்வழிப்படுத்துங்கள்!
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் 2:284

புதன், 13 பிப்ரவரி, 2013

அலர்ஜி அலர்ஜி என்று அல்லல்படுபவரா?


சிலருக்குக் கத்தரிக்காய் சாப்பிட்டால் ஒப்புக்காது. சிலருக்கு தூசு ஆகாது. இப்படி நம்முடைய உடம்பு ஒரு சில விஷயங்களை ஏற்றுக்கொள்ளாது. இந்த ஒவ்வாமையைத்தான் அலர்ஜி என்கிறோம். ஒருத்தருக்கு உடம்பு ஏற்றுக்கொள்கிற விஷயம் இன்னொருத்தருக்கு அலர்ஜியாக இருக்கலாம். இது அவரவர் உடம்பைப் பொறுத்தது. 

பலருக்கு மருந்தாக இருக்கிற `பென் சிலின்' சிலருக்கு விஷமாகவே இருக்கிறது. பென்சிலின் ஊசி போடுவதற்கு முன்பு அலர்ஜி டெஸ்ட்டாக ஒரு `குட்டி ஊசி' போட்ட செக் செய்வதைக் கவனித்திருப்பீர்கள். சரி, அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன? தொடர்ச்சியாகத் தும்மல் போடுவார்கள். மூக்கில் நீர் கொட்டும். நமைச்சல், மூக்கடைப்பு போன்றவை உண்டாகி, அதனால் வாசனை அறியும் திறன் குறையும். தலை வலிக்கும்.
 

இந்த அலர்ஜியானது நுனிமூக்கோடு நிற்காமல், சைனஸ் பிரச்சினை. காதில் சீழ் வழிவது, தொண்டைப்புண் என்று மற்ற பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். மூக்கில் அலர்ஜி உண்டானால் மூக்கை கசக்கிக்கொண்டே இருப்பார்கள். ஒரு சிலர் மூக்கை உள்ளங்கையால் அழுத்தித் தேய்ப்பார்கள். இதை நாங்கள் செல்லமாக `அலர்ஜி சல்யூட்' என்று சொல்வோம்.
 

அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ அலர்ஜி, எக்ஸிமா என்கிற தோல் வியாதி, ஆஸ்துமா இப்படி ஏதாவது இருந்தால் அது குழந்தைக்கு அலர்ஜியாக வர வாய்ப்பு இருக்கிறது. இது குழந்தைப் பருவத்தில் தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜியாகவும் இளம் பருவத்தில் மூக்கு சம்பந்தப்பட்ட அலர்ஜியாகவும் வயதான பருவத்தில் ஆஸ்துமாவாகவும் வர வாய்ப்புகள் உண்டு.
 

சிலருக்கு ஏ.சி. அறைக்குள் நுழைந்தால் ஒப்புக்காது. தும்மல் போட்டு ரகளை பண்ணி விடுவார்கள். ஈரத்தன்மை கூட சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவது உண்டு. குறிப்பிட வேண்டிய இன்னொரு காரணம்... தூசு! வீட்டில் ஒட்டடை அடிக்கும்போதோ, பழைய பேப்பர்களைக் கையாளும் போதோ சிலருக்குத் தும்மல் வருவதைப் பார்த்திருப்பீர்கள்.
 

வீட்டில் வளர்க்கப்படுகிற நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை, கோழி, வாத்து என மிருகங்கள், பறவைகள் மூலமாகவும் சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது. அலர்ஜி வருவதற்கான முக்கியமான வில்லன்களை உங்களுக் குத் தெரியுமா? மைட்ஸ்! நம்ம வீட்டு மெத்தை, தலையணைகளிலும் கார்பெட்களிலும் இவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள்.
 

கண்ணுக்குத் தெரியாத மிகமிக நுண்ணியபூச்சிகள் இவை. துல்லியமாகச் சுத்தம் செய்த தலையணை ஒன்றில் சுமார் நாற்பதாயிரம் `மைட்ஸ்' இருக்குமாம்! நம்முடைய தோலில் இருக்கும் இறந்த செல்கள்தான் இவற்றுக்குத் தீனி! இதன் மூலம்தான் பலருக்கு அலர்ஜி உண்டாகிறது.
 

நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல, நாம் சாப்பிடுகிற ஒரு சில உணவுகளாலும் அலர்ஜி ஏற்படும். இப்படித்தான், என்னிடம் ஒரு பேஷண்ட் வந்தார். காதில் சீழ் வழிவதாகச் சொன்னார். பலவித சிகிச்சைகள் செய்தும் குணமாகவில்லை. ஆபரேஷன் செய்வது என முடிவு செய்தேன். கடைசி கட்டத்தில் பேஷண்ட் திடீரென்று தொடர்ச்சியாகத் தும்மல்போட ஆரம்பித்தார். விசாரித்தபோது, சீஸ்... அதாவது பாலாடைக் கட்டி சாப்பிட்டதாகவும், அதனால் தான் தும்மல் என்றும்... பல காலமாக இதைச் சாப்பிடும் போதெல்லாம் தும்மல் வரும் என்றும் சொன்னார்.
 

ஆரம்பத்திலேயே நாங்கள் உணவு அலர்ஜி பற்றிக் கேட்டிருந்தோம். அப்போது, `அப்படி எதுவும் இல்லை' என்று அவர் சொல்லி விட்டதால் தான் அவ்வளவு குழப்பம்! அந்த பேஷண்ட்டுக்கு ஆபரேஷன் செய் யாமல் அலர்ஜிக்கான ட்ரீட்மெண்ட் மட்டும் கொடுத்து, சீஸ் சாப்பிடுவதைத் தவிர்க்கச் சொல்லி அனுப்பினோம். இங்கிலாந்தில் வித்தியாசமான அலர்ஜி இருக்கிறது. அங்கேயெல்லாம் ஜுன் மாதத்திலிருந்து செப்டம்பர்வரை பூக்கள் பூக்கிற சமயம். அதிக அளவில் மதுரந்தச்சேர்க்கை நடக்கும் என்பதால் காற்றிலேயே மகரந்தம் கலந்திருக்கும். அதை சுவாசிக்கும் பலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது. இந்த மகரந்த அலர்ஜியை `ஹே ஃபீவர்' என்கிறார்கள்.
 

மே மாதம் வந்தால் போதும்... உஷாராக இந்த `ஹே ஃபீவரு'க்கான தடுப்பு ஊசிகளை அவர்கள் போட்டுக் கொண்டு விடுவார்கள்! இந்த மகரந்த அலர்ஜியெல்லாம் ஒரு சீஸனில்தான் வரும். இந்த மாதிரி அலர்ஜியை சீஸனல் அலர்ஜி என்றும், எப்போதும் இருக்கிற அலர்ஜியை பெரினியல் அலர்ஜி என்றும் சொல்வார்கள்.
 

அலர்ஜி எதனால் ஏற்படுகிறது என்பதைச் சுலபமாகக் கண்டு பிடிக்க முடியும். டைரி ஒன்றை வைத்துக்கொண்டு, தும்மல், அரிப்பு, போன்ற அலர்ஜி அறிகுறிகள் ஏற்படும்போதெல்லாம் என்ன சாப்பிட்டீர்கள். அப்போதைய சூழ்நிலை, இருந்த இடம் போன்ற விவரங்களை எழுதி வரலாம்.
 

ஐந்து அல்லது ஆறு தடவை இப்படி எழுதிய குறிப்பை வைத்து, அதில் பொதுவாக உள்ள அம்சங்களை அலர்ஜிக்கான பொருள்களாக (அலர்ஜன்) தீர்மானிக்கலாம். அலர்ஜி பற்றி மட்டுமே கவனம் செலுத்துகிற `அலர்ஜி கிளினிக்'குகள் இப்போது நிறைய வந்து விட்டன. இவர்களிடம் சென்றால் நமக்கு அலர்ஜி டெஸ்ட்... அதாவது அலர்ஜி உண்டாக்குகிற `அலர்ஜன்'களை பட்டியல் போட்டு வைத்திருக்கிறார்கள்.
 

பேஷண்ட்டோடு
  பேசி ஒரு குறிப்பிட்ட அலர்ஜன்களை மட்டும் அவர் கையில் `டெஸ்ட்டிங் டோஸ்' ஆக ஊசி மூலம் செலுத்துவார்கள். அந்த இடத்தில் வீக்கம், அரிப்பு, சிவந்து விடுவது போன்ற ரியாக்ஷன் களை வைத்துச் சரியான அலர்ஜனைக் கண்டுபிடிக்கிறார்கள். 

இந்த பேஷண்ட்டுக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிற அந்தப் பொருளையே தான் மருந்தாகத் தருகிறார்கள். இதை `இம்யூனோ தெரபி' என்பார்கள். அதாவது அலர்ஜியைத் தரக்கூடிய அந்தப் பொருளின் பவரை நூறாயிரம் மடங்கு குறைத்து அதிலிருந்து 0.1 மில்லியை வாரம் இரண்டு தடவை பேஷண்ட் உடம்பில் ஏற்றுகிறார்கள்.
http://www.sinthikkavum.net/2012/07/blog-post_20.html

திங்கள், 11 பிப்ரவரி, 2013

உங்களுக்காகவே குட்டி குட்டி “டிப்ஸ்” கவலைய விடுங்கள்.


உங்களுக்கு கன்னங்களில் சிவப்பு நிறத்தில் முகப்பரு புள்ளி புள்ளியாக இருக்கிறதா? சூடான மற்றும் மசாலாக்கள் கலந்த உணவுப் பொருட்களை தவிர்த்து விடுங்கள். வெயிலில் அலையாதீர்கள். வாட்டர் பேஸ்ட் மேக்கப்போட்டுக் கொள்ளுங்கள். ஓயில் மேக்கப்பைத் தவிர்த்து விடுங்கள். சுடுநீரில் தலைக்குக் குளிக்காதீர்கள் உடலைக் கூலாக வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு தலைமுடி சுருள் சுருளாக குட்டையாக மெயின்டெய்ன் செய்ய முடியாமல் அடங்காப் பிடாரியாக இருக்கிறதா? இப்படிப்பட்ட முடியைக் கொண்ட பெண்கள் தலைக்குக் குளித்தவுடனே முடியில் ஆலுவேரா ஜெல்லைத் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து அலசி விடுங்கள் போதும்.
சோப், ஃபேஷ் வாஷ் என்று எதையும் ஏற்றுக்கொள்ளாத சென்சிட்டிவ் ஸ்கின் உங்களுடையதா? ஹைப்போ அலர்ஜெனிக் சோப் மற்றும் ஃபேஷ் வாஷை பயன்படுத்த ஆரம்பியுங்கள். தவிர வாட்டர் பேஸ்டு மொய்ஸ்ர‌ரைஸரை தொடர்ந்து யூஸ் செய்யுங்கள்.
உங்கள் சருமத்தில் முகச் சுருக்கம் விழுந்து விட்டதா?
டோன்ட் வொர்ரி…. முகத்திலும், கழுத்திலும் தேனை அப்ளை செய்து வட்டமாக மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள். பிறகு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை வாஷ் செய்து விடுங்கள். தொடர்ந்து இப்படியே செய்து வர உங்களுடைய சரும ஈரப்பதத்தை, தேன் சீர் செய்து சரும சுருக்கத்துக்கு குட்பை சொல்லிவிடும்.
டிரை ஸ்கின் உள்ளவர்கள் ஃபேஷியல் செய்தால், அவர்கள் சருமம் இன்னும் வறண்டு போய்விடும். இந்தப் பிரச்சினை உங்களுக்கு இருக்கிறதா?
கெமிக்கல் ஃபேஷியலை அவாய்டு செய்து விட்டு, அதற்குப் பதில் பாலில் அரிசி மாவைக் குழைத்து முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து தேய்த்து கழுவி விடுங்கள். டெட் செல்லும் ரிமூவாகும். சருமமும் டிரை ஆகாது.
உங்களுடைய புருவமும், கண் இமையும் அடர்த்தியாக இல்லையா?
கவலையை விடுங்கள். விட்டமின் ஆயில், ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயிலில் ஏதோவொன்றைத் தொடர்ந்து புருவத்திலும், கண் இமைகளிலும் தடவி வாருங்கள் போதும். ஆனால் உங்கள் புருவமும், கண் இமைகளும் மெல்லியதாக இருப்பது பரம்பரையாக வருவதென்றால், இந்த ஆயில் ட்ரீட்மெண்ட் அதிகம் சக்ஸஸ் ஆகாது.
செலவே இல்லாத ஈஸி ஸ்க்ரப்பர் வேண்டுமா உங்களுக்கு?
பாசிப் பருப்பு அல்லது கடலைப் பருப்பை நற நறவென அரைத்து தயிருடன் மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவி விடுங்கள். சருமத்தில் உள்ள இறந்த செல்லெல்லாம் நீங்கி சருமம் சாஃப்ட்டாகி விடும்.
ட்ரை ஸ்கின்உள்ள எனக்கு எந்த சைட் எஃபெக்ட்டும் இல்லாத வெஜிடபிள் ஃபேஸ்பேக்இருக்கிறதா என்று கேட்பவரா நீங்கள்?
பீட்ருட்டை வேக வைத்து மசித்து, இத்துடன் ஓட்ஸ் மீலைக் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்து விடுங்கள். ட்ரை ஸ்கின்னும் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.

சனி, 9 பிப்ரவரி, 2013

பிறை : - அப்டீன்னா...? (for dummies)


பிறை : ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதம் வந்துவிட்டால் வருஷத்துக்கு இரண்டு பிறை மட்டும் பார்க்கும் மக்கள் வாய்களில் பிறக்கும் ஒரு வார்த்தை அல்ல இது..!

அல்லது...

ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதம் முடியும் நேரம் நெருங்கி விட்டால் முஸ்லிம்களுக்கு "ரம்ஜான் பண்டிகை என்றைக்கு..?" என்று ஊடகங்கள் வாய்களில் தப்பிப்பிழைக்கும் ஒரு வார்த்தையும் அல்ல இது..!

மாறாக, மாசாமாசம்... அதாவது ஒவ்வொரு மாதமும்... மேற்கில் சற்றுமுன்னர் மறைந்த சூரியனின் ஒளி அடுத்த சில நிமிடங்களில் அல்லது சில மணி நேரத்தில் மேற்கில் மறையப்போகும் சந்திரனின் பக்க-அடிப்பகுதியில் ஏற்படுத்தும் ஒரு ஒளிக்கீற்று தான் பிறை எனப்படுவது..!

பிறை பற்றிய சில அடிப்படை தகவல்கள்:

இது உலக மக்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி தெரியாது. நேரம் ஆக ஆக மாறிக்கொண்டே இருக்கும் இந்த பிறை பற்றி மேலும் அறிய நாம் அதற்கு காரணமான சூரியன், சந்திரன் மற்றும் பூமி பற்றி இன்னும் சிறிது அறிந்து வைத்து இருக்க வேண்டும்..!
 

நமக்கு நன்கு தெரியும் இது... அதாவது...
 நாம் வாழும் இந்த பூமி மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுற்றுவதால்...ஒவ்வொரு நாளும் காலை நிலையாக இருக்கும் சூரியன் கிழக்கில் உதித்து மாலை மேற்கில் மறைவது போல தோன்றுவது பற்றி..!

ஆனால், சந்திரன்..? அது எங்கே உதிக்கிறது..? எங்கே மறைகிறது..? இது ஏனோ நிறைய பேருக்கு தெரிவதில்லை. அல்லது தவறான புரிதலில் உள்ளனர்.

சந்திரன் பற்றி நாம் அமாவாசையில் இருந்து ஆரம்பிப்போம். இங்கே நிலநடுக்கோட்டில் கோடையும் குளிரும் அல்லாத ஓர் இடைப்பருவத்தில் பூரண அமாவாசை என்பது... நடுப்பகலில் சூரியன் நம் தலைக்குமேல் செங்குத்தாக இருக்கும் நட்டநடுப்பகல் நேரத்தில்தான் ஏற்படும்..! ஆறுமணிக்கு உதித்து ஆறுமணிக்கு மறையும் சூரியன் எனில்... பகல் 12 மணிக்கு அமாவாசை..!

இந்த அமாவாசைகளில்... என்றாவது ஒரு அமாவாசை நாளில்... நம் பூமியும் இந்த சந்திரனும் அந்த சூரியனும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்தால்... சூரிய கிரகணம்..! அதாவது, நமக்கும் சூரியனுக்கும் நடுவே சந்திரன் வந்து சூரியனை முழுக்க முழுக்க மறைத்து கருப்பாக்கி விடும் அல்லவா... அதுதான்... பூரண சூரியகிரகணம்..!

ஆக, இப்படியான ஒரு பூரண சூரிய கிரகண நாளில், கிட்டத்தட்ட சூரியன் உதிக்கும் அதே நேரம் சந்திரன் அதன் அருகே சற்று தென்கிழக்கில் / வடகிழக்கில் உதித்து.... ஏறக்குறைய சூரியன் மறையும் அதே நேரம் அதற்கு சற்று வடமேற்கில் / தென்மேற்கில் மறையும். இந்த இணையான ஓட்டத்தில்... நடுப்பகலில் தன் நேர்க்கொட்டை சந்திரன் மாற்றும் போது சூரியனின் (நம் பார்வையிலான) 'ஓட்டக்கோட்டுக்கு' குறுக்கே வரும்போது... (லைனை கிராஸ் பண்ணும்போது) சூரிய கிரகணம் உண்டாகிறது. 

இவ்வருடம்... கடந்த மே மாதம் நடந்த சூரிய கிரகணம்..! இங்கே பூமியில் மேல் விழும் நிழல் இடத்தில் உள்ளவர்கள் பகுதியான கிரகணத்தை கண்டவர்கள். அந்த நிழலின் மையத்தில் உள்ள சிகப்பு புள்ளியில் சிக்கியவர்கள் பூர்ண கிரகணம் கண்டவர்கள்.
 

இவ்வருடம்... இனி இறைநாடினால் வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் சூரிய கிரகணம்..!  பூமியின் மறுபாதியில் இரவில் இருப்போருக்கு கிரகணம் இல்லை. அதேபோல இந்த நிழலில் சிக்காதவர்களுக்கு கிரகணம் இல்லை. அவர்கள் பகலில் இருந்தாலும்..!

இல்லையேல், கிரகணம் அல்லாத அமாவாசைகளில்... சந்திரன், தென்கிழக்கில் உதித்தது தென்மேற்கிலேயே மறைந்தாலோ.... வடகிழக்கில் உதித்தது... வடமேற்கிலேயே மறைந்தலோ... கிரகணம் கிடையாது..! 

ஆக, கிரகண அமாவாசை அன்று, மாலை சூரியன் மறைவதற்கு சில நிமிடங்கள் முன்பே சந்திரன் மறைந்து விடுவதால் பிறை பார்த்தல் என்ற பேச்சுக்கே வேலை இல்லை..!

அந்த கிரகண அமாவாசைக்கு அடுத்தநாள், சூரியன் உதித்ததுக்கு பிறகு சுமார் 35~40 நிமிஷம் தாமதமாக சந்திரன் உதித்து... சுமார் 65 நிமிடம் வரை தாமதமாக மறையும்... இது 30 மணிநேர பிறை எனப்படும்..! கண்களால் காணக்கூடிய இதனை
 தலைப்பிறை என்பர்..! 

பூமியின் இந்த இடத்துக்கு பின்னர் மேற்கு பக்கமாக யாருக்கெல்லாம் இனி சூரியன் மறைகின்றதோ.... அவர்களுக்கெல்லாம் பிறையின் வயதும் ஏறும், அது மறையும் காலமும் அதிகரிக்கும்..! அதனால், இவர்களுக்கு மேற்கில் உள்ளவர்கள் இன்னும் இலகுவாக பிறையை காணவும் இயலும்... மேக மூட்டம் இல்லாதிருந்தால்..!


அவ்வாறின்றி... கிரகண அமாவாசை அன்று இரவு 11 மணியில் இருப்பவர்,
 பூர்ண கிரகண அமாவாசை பார்ப்பவரை விட சுமார் 11 மணி நேரம் கிழக்கு பக்கமாக முன்னேறிவிட்டார்..! இதனால் அமாவாசைக்கு மறுநாள் அவருக்கு சூரியன் மறையும் போது... (30-11)=19 மணி நேரம் கொண்ட பிறை, சூரிய அஸ்தமனத்துக்கு  பிறகு சுமார் 30 நிமிடங்கள் கழித்து மறையும்.

இந்த... 24 மணிநேரத்துக்கு
 குறைவான வயதின் பிறை பொதுவாக கண்ணுக்கு தெரிவதில்லை. காரணம், இன்னும் மீதம் இருக்கும் சூரிய வெளிச்சம், அடிவானத்தில் இருந்து பிறை இருக்கும் மிக குறைந்த உயரம், மிக மெல்லிய பிறை..... மற்றும் மேக மூட்டம் இவற்றால் பிறை நம் கண்ணுக்கு தெரியாது..!

அடுத்த நாள், ஒண்ணேமுக்கால் மணி நேரம் தாமதமாக சூரிய உதயத்துக்கு பின்னர் உதித்து.... சூரிய மறைவுக்கு பின்னர் சுமார் இரண்டேகால் மணி நேரம் கழித்து மறையும். இப்போது, சாதாரண கண்களுக்கு கூட இரண்டாம் பிறை தெரியும்...! காரணம்... சூரியவெளிச்சம் குறைவு, அடிவானத்திலிருந்து பிறை சற்று உயரமாக இருப்பது, பிறை சற்று தடிமனாக வளர்ந்து இருப்பது..! இன்னும் மேகமூட்டம் இல்லாதிருப்பதும்..!

இப்படியே... ஒவ்வொரு நாளும் சூரியனைவிட தாமதமாக உதிக்கும் சந்திரன்... இறுதியில் ஏறக்குறைய சூரியன் மேற்கில் மறையும் அதே நேரம் கிழக்கில் சந்திர வளர்பிறை உதிக்கும்..! பூர்ண அமாவாசையிலிருந்து சரியாக பதிநான்கே முக்காலாவது நாள் - இப்போது அது வளர்பிறை அல்ல... பவுர்ணமி முழுநிலவு ஆகி... ஏறக்குறைய சூரியன் கிழக்கில் உதிக்கும் நேரத்தில் மேற்கில் மறையும்..!

சரி, இப்போது இங்கே ஒரு விஷயம் சொல்லியாக வேண்டும். என்னதான் சந்திரன் சூரியனோடு உதித்து சூரியனோடு மறைந்தாலும் அமாவசை அன்று பிறை நம் கண்களுக்கு தெரியும் நேரம் ஜீரோ வினாடிகள்..! காரணம் அது முழுக்க முழுக்க பகலில் இருப்பதால்..!

பின்னர் சூரியன் உதித்த பின்னர் உதித்தாலும்... அது நாம் கண்ணுக்கு தெரியும் நேரம் என்னவோ சூரிய அஸ்தமனத்துக்கு பின்னர்தான். இதுதான் பிறை தெரியும் நேரம். இந்த நிலவு காயும் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்பிறையாக கூடி... முழு நிலவு தெரியும் பெளவுர்ணமி அன்று ஆக அதிக பட்ச தெரியும் நேரமாக... இரவு முழுதும் இருக்கும்..!

பெளர்ணமிக்கு பிறகு.... இனி சூரியன் மறைந்த பிறகு கிழக்கில் உதிக்க ஆரம்பிக்கும் தேய்பிறை... படிப்படியாக சூரிய அஸ்த்தமனத்துக்கு வெகு தாமாதமாக இரவில் உதித்து, அது சூரிய உதய நேரத்தை நோக்கி செல்லும். அதேபோல... படிப்படியாக சூரிய உதயத்துக்கு பின்னர் வெகு தாமதமாக மறைய துவங்கும்..! அதாவது.. சூரிய உதயத்துக்கு பின்னர் அதீத சூரிய வெளிச்சத்தால்... தேய்பிறையின் ஒளி இழந்து நம் கண்களில் இருந்து தேய்பிறை மறைந்து விடும்..! இதனால் வானில் தேய்பிறை நம் கண்களுக்கு தெரியும் நேரம் போகப்போக குறைய ஆரம்பிக்கும்...!

இப்படியாக சூரிய உதயத்துக்கு பின்னர் தாமதமாக மறையத்துவங்கும் சந்திரன்... கிட்டத்தட்ட சூரிய அஸ்தமன நேரத்தை நெருங்கி வரும்போது... அமாவாசை நாள் வந்துவிடும்..! அதாவது... சூரியன் மறையும் போது சந்திரன் மறைந்து உதிக்கும் போது உதிக்கும்...! இப்படியாக, இனி.... மீண்டும் முதல் பாரா சங்கதி ஆரம்பிக்கக்கூடிய இந்த இருபத்தொன்பதரையாவது  நாள், பூர்ண அமாவாசை நேரமானது, பூமியில் உள்ள இந்த மக்கள் இருக்கும் இடத்தில் இருந்து ஏறக்குறைய நேர் பின்னாடி உள்ள சுமார் பதினொன்றரை மணி நேரம் பிந்திய மக்களுக்கு நேரும்...! :-)

பொதுவாக சந்திர பிறை தெரியும் வாய்ப்பு பற்றி கூறுவது சற்று கடினம். சந்திர சூரிய கிரகண கணக்கீடு கூட இதைவிட சுலபம்தான்..! என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா...?

பூமியை சந்திரன் சுற்றி வரும் தளம் சூரியனை பூமி சுற்றி வரும் தளத்துடன் ஒரே கிடை மட்ட பரப்பில் இருக்காது. அது ஒருபுறம் 5.2 டிகிரி... உயர்ந்தும் மறுபுறம் 5.2 டிகிரி தாழ்ந்தும் இருக்கும். இதனால்தான்... ஒவ்வொரு அமாவாசையும் பெளர்ணமியும் கிரகணம் வருவதில்லை. அதன் நிழல் பலமுறை பூமிக்கு வெளியே விழுந்து விடுகிறது..!

சந்திரன் பூமியை சுற்றி வர ஆகும் கால அளவும் சற்று வேறுபடுகிறது. இருந்தாலும் சராசரியாக... தன் சமதளத்தில் சந்திரன் ஒரு சுற்றுக்கு 29.53059 நாட்கள்  (29 days, 12 hours, 44 minutes and 3 seconds) ஆகிறது. இதனால்... அது எங்கிருந்து புறப்பட்டதோ அதே இடத்தில் வந்து முப்பதாவது நாள் சுற்றி வந்து நிற்பதில்லை..! இல்லையேல்... உலகின் பிறை பிறக்கும் இடம் ஒரே இடமாக இருந்திருக்கும். என்றென்றும் "நிலையான சர்வதேச பிறைக்கோடு" ஒன்றும் அமையபெற்று இருந்திருக்கும்..! அமையவில்லை..! இன்னும் வருஷத்துக்கு இரண்டு கிரகணம் மட்டுமே சரியாக அமையப்பெற்று இருந்திருக்கும்..! இவை யாவும் நிகழவில்லை..!

அப்புறம், இந்த சந்திர சுற்றுத்தளம்... பூமியின் நிலநடுக்கோட்டின் தளத்திலிருந்து 28.7 டிகிரி சாய்ந்து சுற்றுகிறது...! இதனால்தான்... ஒவ்வொரு நாளும் 50 நிமிடம் சந்திரோதயம் தாமதிக்கிறது..!  இந்த கால தாமதம்...   உலக மக்கள் அனைவருக்கும் பொது இல்லை..! :-)) நிலநடுக்கோட்டு மக்களுக்கு மட்டும் இது பொருந்தும். அதிலிருந்து வடக்கிலும் தெற்கிலும் உள்ளோருக்கும் இந்த நேரம் மாறுபடும்..! அதனால்... ஒரே தீர்க்க ரேகை கோட்டில் இருக்கும் உலகமக்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் கிரகணம் /பிறை தெரிவது இல்லை..!

எனவே, இம்மாதம் எந்த இடத்தில் அமாவாசை கிரகணம் ஏற்பட்டதோ... அங்கிருந்து சுமார் அரை நாள் முன்னரே சந்திரனின் ஒரு மாத சுற்று முடிந்து விடுகிறது. இதுவும் கூட சரியான அரைநாள் என்று (29 days 12 hours என்று)இந்திருக்குமேயானால்... சந்திரன் பிறை பிறக்கும் இடம் உலகில் இரண்டே இரண்டு என்றும், இம்மாதம் இங்கே எனில் அடுத்த மாதம் அங்கே என்று இரு சர்வதேச பிறைக்கோடுகள் உண்டாகி இருக்கும்..!

ஆனால், 44 minutes, 3 seconds.... என்று இருந்துகொண்டு... உலகின் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு மாதத்தில் பிறை பிறக்கும் புதுப்புது இடங்களாக ஆகி வருகின்றன..!

இது போதாது என்று... சந்திரன் பூமியை சுற்றும்போது... பூமியும் நிலையாக ஓரிடத்தில் நில்லாமல்... சூரியனை சுற்றிக்கொண்டு வருகிறது..! இதையும் கணக்கு பண்ணி... சந்திரன் பூமியை சுற்றி வருகிறது. இதன் சுற்றுவட்டப்பாதை எப்படி இருக்கிறது என்றால்... ஸ்ப்ரிங்-ஐ இழுத்தது போல... சுருள் சுருளான டெலிஃபோன் வயர் சற்றே இழுபட்டது போல...நிறுக்கும். மேலிருந்து பார்த்தால்...  "மூணு சுழி ண வை.... 'பதினொன்றரை சுழி ண' (!?) என்று வட்டமாக போட்டால் எப்படி இருக்கும்...?" அப்படி இருக்கும்..!

அது கூட...  பூமியின் சரியான ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்தால் சரியான முடிவில் முடியாது...! காரணம்... சந்திர சுற்று 354.37 நாட்கள். புவியின் சுற்றோ 365.25 நாட்கள்..! இங்கேயும் விட்டகுறை தொட்டகுறை..! இன்னும் ஒரு பிரச்சினை... சந்திரனின் ஓடு பாதை நீள்வட்டம்..! சரியான வட்டம் அல்ல..!


ஆனால் ஒன்று மட்டும் பக்கா பர்ஃபெக்ட்..! சந்திரன் தனது மறுபாதியை நமக்கு காட்ட மறுத்து விடுகிறது. அது எப்படி..? பூமியின் சுழற்சிக்கு எதிர் திசையில் அது தன்னைத்தானே...
 27.32166 (27 days, 7 hours, 43 minutes, 11.6 seconds)  நேரத்தில் நாட்களில் சுற்றிக்கொள்கிறது..! இதனால் நமக்கு எப்போதும் காட்டிய ஒரே முகத்தையே காட்டுகிறது..!

ஆக இவ்வளவு விஷயங்களையும் கணக்கில் கொண்டு... சந்திர - சூரிய கிரகணம் ஏற்படப்போகும் நொடி முதற்கொண்டு மிக மிக துல்லியமாக பல ஆண்டுகளுக்கு முன்னிலிருந்தே வானியல் வல்லுனர்கள் கணக்கிடுகின்றனர்..! ஆனால், அதேபோல பிறை பிறக்கும் நேரத்தை சொன்னாலும்... இன்னும் அந்த பிறை மனிதனுக்கு தென்படுமா தென்படாதா என்பதை மட்டும் துல்லியமாக கணக்கிட அறிவியலாளர்களால் இதுவரை இயலவில்லை..! காரணம் என்ன...?

பிறை பார்க்கும் இடத்தில் உள்ள சீசன், அன்றைய மேகமூட்டம், அன்றைய வானிலை, அந்த இடம் அமைந்திருக்கும் இடத்தில் பூமியின் சாய்வு, துருவ மாறுபாடு, கடல் மட்டத்தில் இருந்து அந்த  பிறை பார்க்கும் இடத்தின் உயரம், காற்றின் காரணமாக அங்கே நிலவும் புழுதி மண்டலம்...  போன்ற, பல பாதிக்கும் காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது..!

இதனால்தான்.... இன்றைய நாள் வரை... கிரகண நேரத்தை நொடி சுத்தமாக  துல்லியமாக கணக்கிடும் அறிவியலுக்கு மழை மேகம் எந்த ஊரில் திரளும்... காற்று எந்தப்பக்கம் அடித்து புழுதி மண்டலம் கிளம்பி பிறையை எங்கே மறைக்கும் என்று கணக்கிட முடியவில்லை...! இது இறைவன் மட்டுமே அறிந்த ஞானம்..! மேட்டர் இதுதான்..! பிறை பிறக்கும் நேரத்தை துல்லியமாக அறியும் அறிவியலுக்கு... அதை நாம் காண முடியுமா முடியாதா என்று மட்டும் சொல்ல இயலவில்லை..!

இதனால்தான்... இன்றைய நிச்சயமற்ற வானியல்... மழை-மேகம்-காற்று விஷயத்தில் "...கூடும்", "...லாம்" "...என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றுதான் வானிலை ஆராய்ச்சி மையம் இன்றும் கூட நிச்சயமற்றதாக அறிவித்துக்கொண்டு இருக்கிறது..! :-))

இப்படி எல்லா நுட்பங்களையும் கருத்தில் கொண்டு... தன் நீண்ட கால ஆய்வுக்கு பின்னர், அதை 300 முறை சோதனைக்குட்படுத்திய பின்னர், தம் தலைக்கு மேலே நடுப்பகலில் பூரண கிரகண அமாவாசை கண்ட மக்களுக்கு, அடுத்தநாள் அந்திசாய்ந்த நேரத்தில், (6 + 24 மணி நேரம்) சுமார் 30 மணி நேரம் கழிந்த இந்ததலைப்பிறை அம்மக்களின் கண்களுக்கு தெரியும் வாய்ப்புகள் பற்றியும், அதை எப்படி பார்க்க வேண்டும் என்றும், பெர்னார்ட் டேவிட் எல்லோப் என்ற வானசாஸ்த்திர அறிஞர், கடந்த 1997 ஆம் ஆண்டு ஆய்வுகளை முடித்து பலரும் ஏற்றுக்கொள்ளத்தக்க முடிவுகளை மிகவும் அழகிய வரைபடங்கள் மூலம் தெளிவாக கூறினார்..

ஹேண்ட்பேக் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நல பிரச்சனைகள்.

பெண்கள் வெளியே செல்லும் போது ஹேண்ட்பேக் அவசியமானது. ஏற்கனவே எடுத்து செல்லும் பொருட்களின் எ...

Popular Posts