லேபிள்கள்

சனி, 9 ஆகஸ்ட், 2025

ஸ்வீட் மீதுசில்வர் கலர்! ஏன் தெரியுமா? இதிலும் போலி. எப்படி கண்டுபிடிக்கலாம்?

இனிப்பு என்று சொன்னாலே, அதன் சுவை நாவில் ஒட்டிக் கொள்ளும். நம் கற்பனையில், எல்லா இனிப்புகளும் நொடியில் வந்து போகும், இல்லையா?

வயதுவித்தியாசமின்றி இனிப்பு வகைகள் என்றால் எல்லோருக்கும் பிரியம்தான். இனிப்புக் கடைகளில் ட்ரேகளில் வகைகள் பிரித்து அடுக்கப்பட்டிருக்கும் இனிப்புகளைப் பார்த்தேலே நா ஊறும் இல்லை. அப்படியே, நாம் இனிப்புகளின் மீது இருக்கும் சிலவர் நிற ஜரிகை பேப்பர்களை கவனித்திருப்போம். அது என்ன என்ற கேள்வியும் நம்மிடம் இருந்திருக்கும். இனிப்புகள் மீது ஒட்டப்படும் சிலவர் நிற பொருள் என்ன? அதன் பயன் என்ன? இதற்கான விடையை இக்கட்டுரையில் காணலாம்.

இனிப்புகள் மீது ஒட்டப்படும் சிலவர் நிற பேப்பர்கள் vark silver leaf என்றழைக்கப்படுகிறது. இது சுத்தமான வெள்ளியால் ஆனது. 2.8 மைக்ரோ கிராம் அளவு கொண்டது. ஆசிய மற்றும் சீனா பாரம்பரிய முறையில் வெள்ளி பாத்திரங்கள் உணவு உண்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படிதான், நம் ஊரில் வெள்ளி பாத்திரங்களில்தான் குழந்தைக்கு உணவு ஊட்டப்படும். ஏனெனில், குழந்தைகளுக்கு பெரிதாக நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. அவர்களை வைரஸ் மற்றும் பாக்டிரீயாவிகளிடம் இருந்து பாதுகாக்கவும், உடல்நலனிற்கு கேடு ஏதும் நடக்காமல் இருக்க வெள்ளி பாத்திரங்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. அப்படிதான், இனிப்புகளில் வெள்ளி பேப்பர்கள் பயன்படுத்தப்படுவதும்.

வார்க் சில்வர் லீஃப் (vark silver leaf)-இன் வேலை என்ன?

வார்க் சில்வர் லீஃப் இனிப்புகளுக்கு மீது ஒட்டப்படுவதால், இனிப்புகள் சீக்கிரம் வீணாகிவிடாமல் இருக்க உதவுகிறது. இந்த வார்க் சில்வர் லீஃப்கள் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனுடக் சேர்ந்து வினைபுரிகிறது. வைரஸ்,பாக்டீரியா உள்ளிடவைகளை அழிக்க உதவுகிறது. இனிப்புகளில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் தாக்குதல்களை சமாளிக்கவும், நம் உடலில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளிடமிருந்து பாதுகாக்கிறது.

இந்த வார்க் சில்வர் லீஃப் பாக்டீரியாவின் வெளிப்புறச் சுவரை தகர்ப்பதுடன், பாக்டீரியாவின் டி,என்.ஏ. மற்றும் மெம்பரன்ஸ் உள் நுழைந்து அவைகளை அழிக்கிறது. இது 99 சதவீதம் வெள்ளியால் ஆனது. இதை நாம் சாப்பிடுவதால் உடல்நலனுக்கு எவ்வித பாதிப்புகளும் வராது. ஆனால், இன்றைய சந்தையில் இனிப்புகளில் அலுமினியன் ஃபாயில் ஷீட்களும் பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்த அலுமினியம் ஃபாயில் ஷீட்களை உட்கொண்டால் மூளையை பாதிக்கும் என்கிறது மருத்துவ உலகம். அப்படியிருக்க, இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களைக் கண்டறிவது எப்படி?

வார்க் சில்வர் லீஃப் - அலுமினியம் ஃபாயில் ஷீட்கள் வித்தியாசத்தை கண்டுபிடிப்பது எப்படி?

அலுமினியம் ஃபாயில் ஷீட் உணவு பொருளை சூடாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், இதை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு.

நீங்கள் கடைகளில் இருந்து இனிப்பு வாங்கும்போது, இனிப்பின் மேல் உள்ள சில்வர் நிற பேப்பரை சிறிது கையில் எடுத்து அதை உள்ளங்கையில் தேய்த்துப் பாருங்கள். உண்மையான வெள்ளி, அதாவது வார்க் சில்வர் லீஃப் என்றால் உங்கள் உள்ளங்கையில் அது முற்றிலுமாக துகளாகிவிடும். இதுவே, அலுமினியம் ஃபாயில் ஷீட் என்றால், குட்டி உருண்டையா வரும்.

இனிப்புகளின் மீது இருக்கும் சில்வர் நிற பொருள் குட்டி பந்து போன்று இருந்தால் அது நிச்சயம் அலுமினியன் ஃபாயில் ஷீட்தான் என்பதை தெரிந்துகொள்ளங்கள்.

இனி, இனிப்பு வாங்கும்போது விழிப்போடு இருங்கள். ஏன்னா, நமக்கு இனிப்பு வகைகள்னா அவ்வளவு பிடிக்குமே. அதை தவிர்க்க முடியாதே, ஆனால், தரமானதா என்று பார்த்து வாங்கி சாப்பிடலாம்.



--

புதன், 6 ஆகஸ்ட், 2025

நிறைய செலவு வைக்கும் சிறுநீர் பிரச்சனைகளுக்கு செலவில்லாத சிகிச்சை முறைகள்.

ஒவ்வொருவரது உடலமைப்பும் வேறுபடும். எப்படி உயரம் மற்றும் உடல் எடையில் மாற்றம் உள்ளதோ, அதே போல் உள்ளுறுப்புகளின் அளவும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

பொதுவாக ஒருவரது சிறுநீர்ப்பையில் 2 கப் சிறுநீர் சேரும். எப்போது சிறுநீர்ப்பை முழுமையாக நிரம்புகிறதோ, அப்போது தான் சிறுநீர் அவசரமாக வருவது போன்ற உணர்வு எழும். சிலருக்கு சிறுநீர்ப்பையில் 1 ½ கப் சிறுநீர் தான் சேரும். இத்தகையவர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரும். எனவே அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு சிறுநீர்ப்பையின் அளவும் ஓர் காரணமாகும்.

நீங்கள் தினமும் போதுமான அளவில் நீரைக் குடித்து, சர்க்கரை நோய் எதுவும் இல்லாமல் இருந்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்

அதிலும் ஒருவருக்கு சிறுநீரக கற்கள் இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிப்பதோடு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிமுதுகு பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் வலி போன்றவற்றையும் சந்திக்க நேரிடும். எனவே இம்மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

சிலருக்கு சிறுநீர் கழிப்பதில் நிறைய பிரச்சனை ஏற்படலாம். சிலருக்கு சீராக சிறுநீர் வராது.

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும், மற்றும் நீர் கடுப்பு என பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

இவை அனைத்திற்கும் எளிய வீட்டு வைத்திய முறையில் தீர்வு காண வழிகள் இருக்கின்றன.

நீர் கடுப்பு குணமாக

வெங்காயத்தை பொடி 6பொடியாக நறுக்கி. பிறகு நறுக்கிய வெங்காயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பருகினால், நீர்க்கடுப்பு விரைவில் குணமாகும். அல்லது வெங்காயத்தை அப்படியே பச்சையாகவும் கூட சாப்பிடலாம்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப் பழத்தின் தோலைநீக்கிய பிறகு அதை பொடி பொடியாக நறுக்கி, அரைத்து சாறு பிழிந்து, அந்த அன்னாசிப்பழச் சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.

சிறுநீர் கோளாறுகள் குணமாக

நன்னாரி வேர், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வெந்தயம், மிளகு, சோம்பு மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக இடித்து தண்ணீரில் இட்டு நன்கு காய்ச்சி கசாயம் போல செய்து பருகி வந்தால் சிறுநீர் சம்பந்தப்பட்ட அணைத்து கோளாறுகளும் குறையும்.urine_problem_004

தாமரை, ரோஜா இதழ்கள்

தாமரை பூவின் இதழ்கள் மற்றும் சிவப்பு நிற ரோஜா இதழ்கள் இரண்டையும் தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்.urine_problem_005

பெர்ரி

சுத்தமான பெர்ரி பழங்களை எடுத்து சாறு பிழிந்து தேவையான அளவு நீர் விட்டு தினமும் காலை, மாலை குடித்து வந்தால் சிறுநீர் சம்பந்தப்பட்ட‌ எல்லா கோளாறுகள் குறையும்.urine_problem_006

எலுமிச்சையும், கற்கண்டும்

வெந்நீரில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து அதில் கற்கண்டை கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.



--

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் ஏன் பச்சைநிற ஆடை அணிகிறார்கள் என்று தெரியுமா?


ஆரம்ப காலகட்டத்தில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது வெள்ளை நிற ஆடைகளை தான் அணிந்து இருக்கிறார்கள்.

ஆனால் இருபதாம் நூற்றாண்டில்தான் அறுவை சிகிச்சையின் போது, மருத்துவர்கள் ரத்தத்தை பார்த்து விட்டு வெள்ளை நிற ஆடையை பார்த்தார்கள் என்றால் சில நொடிகளுக்கு அவர்களால் எதையுமே தெளிவாக பார்க்க முடியாது என்பதை புரிந்துகொண்டார்கள்.

அது மட்டும் இல்லாமல் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அவர்களுக்கு ஏற்படும் தலைவலிக்கு இது முக்கிய காரணமாக அமைந்து விடும். அதனால் இந்த சிக்கலை தீர்க்க வேண்டும் என்பதற்காக பச்சை மற்றும் நீல நிறம் போன்ற வண்ணம் கொண்ட ஆடைகளை மருத்துவர்கள் அணிகிறார்கள்.



--

செவ்வாய், 29 ஜூலை, 2025

ஏ.டி.எம் கார்டில் பாதுகாப்பு அவசியம். இல்லையேல் Block..Block.. கவனமாக இருங்கள்.

ஏ.டி.எம் கார்டு தொலைந்து விட்டதா?

இன்றைய காலக்கட்டத்தில் விவரம் தெரிந்த குழந்தை முதல் வயதான தாத்தா வரையில், ஏ.டி.எம் கார்டுகளை பயன் படுத்துகின்றனர்.

என்னதான் பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டு வந்தாலும் ஏ.டி.எம் கொள்ளைகளும், பண மோசடிகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நமக்கே தெரியாமல் நமது ஏ.டி.எம் கார்டு விவரங்களைத் திருடி பணத்தை எடுப்பது போன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இப்படி இருக்கையில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஏ.டி.எம் கார்டு தொலைந்து விட்டால், அச்சச்சோ ஏ.டி.எம் கார்டு தொலைந்து விட்டதே... அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து கொண்டே இருப்போம்.

அவ்வாறு தொலைந்துவிட்டால் உடனடியாக அதனை எப்படி பிளாக் செய்வது? எப்படி பத்திரமாக பார்த்துக்கொள்வது? என்ற விவரங்கள் தெரியுமா? தெரியாது எனில் நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கானதே...!!

முதலில் பிளாக் செய்யுங்கள்:

நீங்கள் உங்களது ஏ.டி.எம் கார்டினை தொலைத்து விட்டால், பதற்றப்படாமல் உடனே பிளாக் செய்யுங்கள். இன்றைய காலக்கட்டத்தில் உங்களது கார்டினை எளிதில் பிளாக் செய்து கொள்ளலாம். அதற்காக பல வழிமுறைகளும் உள்ளன.

பலரும் ஏ.டி.எம் கார்டை தொலைத்துவிட்டு எப்போது தொலைத்தோம் என்பது கூட தெரியாமல் இருந்து விடுகின்றனர். அதை நாம் பார்த்து அதற்காக வங்கியின் உதவி எண்ணுக்கு தகவல் சொல்வதற்குள், கிட்டத்தட்ட நான்கு, ஐந்து முறையாவது அந்த கார்டு பயன்படுத்தப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பது தெரிய வரும்.

மேலும் பின் நம்பரை அறிந்து கொள்ள இன்று பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. எனவே அலட்சியமாக இருக்காமல், ஏ.டி.எம் கார்டு தொலைந்தவுடன் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் உடனே தங்களது வங்கிக் கிளையை அணுகி கார்டை பிளாக் செய்வது மிக மிக முக்கியம்.

எவ்வாறு பத்திரமாக பார்த்துக்கொள்வது?

உங்கள் பின் நம்பரை யாராலும் கண்டுபிடிக்க முடியாதவாறு வைத்திருப்பது நல்லது.

பிறந்த நாள், திருமண நாள், வண்டி நம்பர், அலுவலக தொலைபேசி எண் போன்ற எளிதில் கணிக்கக்கூடிய எண்களைத் தவிர்க்க வேண்டும்.

அதே போல் பாஸ்வேர்ட் மறந்துவிடும் என ஏ.டி.எம் கார்டின் அட்டையிலேயே பாஸ்வேர்டினை எழுதி வைக்கும் முட்டாள்தனமான வேலையை தவிர்ப்பது சிறந்தது.

சில சமயங்களில் ஏ.டி.எம். சென்டரில் பின்னால் நிற்கும் ஆட்கள் நமது பாஸ்வேர்டை தெரிந்து வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது.

அதனால் ஏ.டி.எம் சென்டரை விட்டு வெளியேறும் போது கார்டு நம்மிடம் தான் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

இணையத்தில் பாதுகாப்பில்லாத தளங்களில் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்வதை தவிர்க்கவும்.

ஏ.டி.எம். எண், பாஸ்வேர்ட்-ஐ இணையத்தில் அளித்து, டிக்கெட், ஷாப்பிங் என்று பல தேவைகளுக்கும் பயன்படுத்தும்போது, அது பாதுகாப்பான வலைதளமா என்று விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.



--

சனி, 26 ஜூலை, 2025

முழு முட்டை அல்லது முட்டையின் வெள்ளைக்கரு - எது ஆரோக்கியமானது?

முட்டையின் வெள்ளைக்கரு மட்டுமா அல்லது முழு முட்டையும் சாப்பிடலாமா? இது ஒரு விடையில்லா கேள்வி. முட்டையின் வெள்ளைக்கரு மிகவும் ஆரோக்கியமானது என்று சிலர் கூறினாலும், பலர் அதை கேள்விக்குள்ளாக்குகின்றனர்.

மஞ்சள் கரு முக்கியமாக கொழுப்பு மற்றும் சில புரதங்களால் ஆனது. அவை பயோட்டின் உட்பட பல ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளன.`

ஒரு முட்டையின் பிரகாசமான மஞ்சள் கருவைச் சுற்றியுள்ள வெள்ளை திரவமானது, சுமார் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 10 சதவீதம் புரதத்தால் ஆனது. பயோட்டின் பிணைப்பு புரதமான அவிடின் அவற்றில் உள்ளது. அதேநேரம், மஞ்சள் கரு கொழுப்பு மற்றும் சில புரதங்களால் ஆனது. அவை பயோட்டின் உட்பட பல ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளன.`

நீங்கள் முடிவெடுப்பதற்கு முன், ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா நீங்கள் அறிந்திருக்க வேண்டிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டுகிறார்.

முழு முட்டைகள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் வளமான ஆதாரம் மட்டுமல்ல, இதில் புரதம் மற்றும் கலோரிகள் அதிகளவில் உள்ளன. மறுபுறம், முட்டையின் வெள்ளைக்கருவில் வைட்டமின்கள் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கும்.

நீங்கள் கவனிக்க வேண்டியது இங்கே

முழு முட்டை உடலுக்கு அதிக புரதத்தை அளிக்கும் அதே வேளையில், அவை அதிக கலோரிகளையும் கொண்டு வருகின்றன.

முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரதம் 'உயர்தர முழுமையான புரதம்' என்றும் கருதப்படுகிறது, அதாவது உடலுக்குத் தேவையான அளவு ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களும் இதில் உள்ளன.

எப்படி தேர்வு செய்வது?

முழு முட்டைகளை உண்பது, உங்களை முழுதாக உணர வைப்பதோடு குறைவான கலோரிகளை உட்கொள்ள உதவுகிறது. முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒப்பிடும்போது இது ஊட்டச்சத்துக்களில் அதிக நன்மை பயக்கும் என்றும் அறியப்படுகிறது.

தசையைப் பராமரிப்பதற்கும் கட்டியெழுப்புவதற்கும், உணவில் போதுமான புரதத்தைப் பெறுவது அவசியம், குறிப்பாக ஒருவர் எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது. இதைக் கருத்தில் கொண்டு, எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு முட்டையின் வெள்ளைக்கரு சிறந்த வழி என்று கூறலாம்.

முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு அனைத்தும் மஞ்சள் கருவில் காணப்பட்டாலும், முட்டையின் வெள்ளைக்கருவில் கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரால் இல்லை. மேலும் அவற்றில் கார்போஹைட்ரேட் அல்லது சர்க்கரையும் இல்லை.

முட்டையின் வெள்ளைக்கரு' அதிக புரதம் தேவைப்படுபவர்களுக்கு ஒரு கவர்ச்சியான தேர்வாக இருக்கும், ஆனால் விளையாட்டு வீரர்கள் அல்லது பாடி பில்டர்கள் போன்றவர்கள் அவர்களின் கலோரி உட்கொள்ளலைக் கவனிக்க வேண்டும்.



--

புதன், 23 ஜூலை, 2025

சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவை!

சாப்பிட்ட பின் மறந்தும் கூட செய்யக் கூடாத சில செயல்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். ஏனெனில் இவை உடல நலத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும்.

இது கோடை காலம் என்பதால், குளிப்பது மிகவும் புத்துணர்ச்சியைத் தரும். அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, பெரும்பாலானோர் மூன்று முதல் நான்கு முறை குளிக்கிறார்கள். சிலருக்கு சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிடும் வழக்கம் உள்ளது. இவை உடப சில பொதுவான தவறுகள் நோயை வரவேற்கும் செயல்கள்.

சாப்பிட்ட பிறகு குளிக்க கூடாது

சிலருக்கு சாப்பிட்ட பின் குளிக்கும் வழக்கம் உள்ளது. இரவில் சாப்பிட்ட பின் குளிக்கும் அந்த தவறை செய்யக்கூடாது. இப்படி செய்வது பல நோய்களுக்கு வரவேற்பை அளிக்கும் செயல் என்று சொல்லலாம்.

உணவு உட்கொண்ட பிறகு குளிக்கும் பழக்கம் பெரும் உடல நல பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக உங்கள் எடையும் அதிகரிக்கலாம் . அதோடு அமிலத்தன்மை அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே இதைத் தவிர, இதுபோன்ற சில பழக்கவழக்கங்களும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக நீங்கள் பல நோய்களின் பிடியில் செல்லலாம்.

காலை உணவாக இருந்தாலும் சரி, இரவு உணவாக இருந்தாலும் சரி, சாப்பிட்ட உடனேயே குளிக்கக் கூடாது. இதைச் செய்வதன் மூலம், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். குளித்த பிறகு, உடல் வெப்பநிலை உயர்கிறது, இதன் காரணமாக உணவு சரியாக ஜீரணமாகாது.

சாப்பிட்ட பிறகு பழங்களை சாப்பிட வேண்டாம்

பெரும்பாலானோர் சாப்பிட்ட பிறகு பழங்களை சாப்பிடுவார்கள். இதைச் செய்வதன் மூலம் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். உண்மையில், இதைச் செய்வது உங்களுக்கு அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.

உணவுக்குப் பிறகு புகைபிடித்தல்

சிலருக்கு சாப்பிட்டவுடன் புகை பிடிக்கும் பழக்கம் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆனால் இதை செய்பவர்கள் எச்சரிக்கையாக இருங்கள். அப்படி செய்தால் உடல் எடை கூடும்.

சாப்பிட்ட உடனேயே படுத்துக்கொள்வது

சிலருக்கு சாப்பிட்ட உடனேயே தூக்கம் வரும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உடலால் உணவை சரியாக ஜீரணிக்க முடியாது. இது உங்கள் செரிமானத்தை கெடுக்கும். அதனால்தான் சாப்பிட்ட உடனேயே 10-15 நிமிடங்கள் நடக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.



--

சனி, 19 ஜூலை, 2025

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு சில வழிமுறைகள்:

தலையில் தினமும் எண்ணெய் தேய்க்க வேண்டும்.

வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். நுங்கு, இளநீர், மோர் போன்றவற்றை வாங்கி குடிக்க வேண்டும். சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். பெரும்பாலும் வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். இதனால் பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்படும். மெல்லிய காட்டன் அல்லது கதர் அணிவதால் உடலில் உஷ்ணம் கூடாமல் இருக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்க தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.



--

புதன், 16 ஜூலை, 2025

சிலிண்டர் எப்படி வெடிக்கிறது? அதற்கான காரணங்கள்.

நீங்கள் பல்வேறு செய்திகளில், சமூக வலைத்தளங்களில் கேஸ் சிலிண்டர் வெடித்து பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை கேள்விப் பட்டிருப்பீர்கள்.

எப்படி வீடுகளில் சிலிண்டர் வெடிக்கும் என்று யோசித்து உள்ளீர்களா? கேஸ் சிலிண்டர் வெடிப்பதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளது. அதைப்பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம்.

கேஸ் சிலிண்டர் என்பது தற்போது அனைத்து வீடுகளிலும் ஏன் கிராமப்புறங்களில் கூட அனைவரது வீடுகளிலும் பயன்படுத்தக்கூடிய பொருளாக மாறிவிட்டது. எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் கிடைக்கின்றது. மேலும் ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றது. சிலிண்டர் என்பது தற்போது அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்த சிலிண்டர் வெடிப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

அதில் முதலாவது நாம் சிலிண்டரை முறையாக கையாளாமல் இருப்பதால் வெடிக்கின்றது. அதாவது சிலிண்டருக்கும் அடுப்புக்கும் பயன்படுத்தப்படும் வயர்கள் பழுதடைந்த காரணத்தினால் அல்லது எலிகள் அந்த வயர்களை கடித்து இருந்தால் அதன் மூலம் வெளியேறும் எரிவாயு மூலமாக சிலிண்டர் வெடிக்கும் அபாயம் ஏற்படும்.

இரண்டாவது காலாவதியான சிலிண்டரைப் பயன்படுத்துவதால் வீடுகளில் சிலிண்டர்கள் வெடிக்கும் அபாயம் ஏற்படுகின்றது. இப்போது நாம் எப்படி சிலிண்டர் காலாவதியாகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சிலிண்டரை A-07, B-06 என்று எழுதப்பட்டிருக்கும். A என்பது ஜனவரி முதல் மார்ச் வரைக்கும், B என்பது ஏப்ரல் முதல் ஜூன் வரைக்கும், C என்பது ஜூலை முதல் செப்டம்பர் வரைக்கும், D அக்டோபர் முதல் டிசம்பர் வரைக்கும், அடுத்து உள்ள இரண்டு எண்கள் வருடத்தைக் குறிக்கும். உதாரணதிற்கு சிலிண்டரில் B -21 என்று இருந்தால் அந்த சிலிண்டரை(கேஸ் இல்லை) 2021 ஜூன் மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அர்த்தம். எனவே சிலிண்டர் வாங்கும் போது இதையெல்லாம் கவனித்து வாங்குங்கள்.



--

ஞாயிறு, 13 ஜூலை, 2025

அம்மிக்கல்லும், ஆட்டுக்கல்லும்... - அழித்து வரும் ஆரோக்கியமும்....!

க்ரைண்டர் மாவுக்கும், மிக்சி சட்டினிக்கும் பழகிபோன என் நாக்கிற்கு ஒரு நாள் என் பாட்டி புதுவிதமான சுவை அளித்தார் என்றால் அது மிகையாகாது.

நாமது வாழ்கையில் பெரும்பாலும் சுவையான உணவை சாப்பிடவே உடலை வருத்தி உழைக்கிறோம். ஆனால், அந்த சுவை துரித உணவுகளின் கையேந்தி பவனிலும், வீட்டில் அரைக்கும் மிக்சி சட்டினியிலுமே முடிந்து விடுகிறது. அன்று ஒரு நாள் பாட்டி ஆட்டுக்கல்லில் மாவாட்டிக்கொண்டு இருந்தார். ஒரு கையில் குளவி மறு கையில் மாவை தள்ளி விட்டவாறு அந்த வேலையை செய்து கொண்டு இருந்தார். நான் பாட்டியிடம் எதற்கு உனக்கு இந்த தேவை இல்லாத வேலை, க்ரைண்டரில் போட்டால் பத்து நிமிடத்தில் வேலை முடிந்து விடும் உனக்கும் கை வலி இருக்காது என்று சொன்னேன்.

73 வயதான என்பாட்டி என்னிடம் இன்றும் நான் ஆரோக்கியமாக இருக்க இந்த ஆட்டுக்கலும், அம்மிக்கலும்தான் காரணம் என சொன்னார். அடுத்த நாள் காலையில் அடுப்பில் இரும்பு கல் வைத்து வாழை தண்டில் என்னை தொட்டு கல்லில் தேய்த்து சொய் என்ற சத்தத்தோடு மாவை கல்லில் ஊற்றி பரத்தி விட்டு சுட்ட அந்த தோசையின் மனம்.. எங்கேயோ நின்றுகொண்டிருந்த என் மூக்கை துளைத்து சுவையின் நரம்புகளை தூண்டி விட்டது. அதனோடு சேர்த்து மிளகாய் வருத்து சின்ன வெங்காயம் சேர்த்து அம்மியில் அரைத்த அந்த காரச்சட்டினி.. அப்பப்பா.. அந்த சுவைக்கு நான் இன்றும் அடிமைதான்.

ஆனால், இதுபோன்ற ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த உணவு பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் வருகிறது என்பது வருத்தத்தைதான் தருகிறது. பல ஆயிரம் ரூபாய் பணம் செலவு செய்து ஜிம்மிற்கு சேன்று உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என நினைக்கும் இன்றைய தலைமுறை.., பழங்கால பாரம்பரிய பழக்க வழக்கங்களை பின்பற்றினால் போதும் என்பதை கண் மூடித்தனமாக மறுத்து வருகிறது. இன்றும் பல கிராமங்களில் ஆட்டுக்கல், அம்மிக்கல் உள்ள வீடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

அம்மியில் அரைக்கும்போது அந்த உணவுக்கு குளுர்ச்சி கிடைத்து உணவின் பக்குவமும், சுவையும் மாறாமல் கிடைக்கிறது. அதனுடன் கல்லோடு கல் உரசி அதனோடு உணவுப்பொருட்களும் அரைபடும்போது அந்த கல்லில் இருக்கும் சத்துக்களும் இயற்கையாகவே உடலுக்குள் செல்கிறது. இது ஆரோக்கியத்திற்கு பெரும் பலனை தருகிறது. எதிர்கால தலைமுறை இந்த அவசரமான வாழ்கை நடைமுறைக்கு இடையே கொஞ்சம் ஆரோக்கியத்தையும் பார்த்துக்கொண்டால் அழிந்து வரும் அம்மிக்கல்லும், ஆட்டாங்கல்லும் மறு வாழ்வு பெரும்.


--

புதன், 9 ஜூலை, 2025

முட்டைகளைதண்ணீரில் கழுவக்கூடாது. எச்சரிக்கும் நிபுணர்கள்.

சமைப்பதற்கு முன் எந்த பொருளையும் கழுவுவது மிகவும் முக்கியம். கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து, மக்கள் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

அத்தகைய சூழ்நிலையில், காய்கறி பழங்களை போலவே பலர் முட்டைகளை தண்ணீரில் கழுவும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவ்வாறு செய்வது சரியல்ல.

அமெரிக்க வேளாண்மைத் துறை, முட்டைகளை தண்ணீரில் கழுவுவது சரியல்ல என எச்சரித்துள்ளது. அனைத்து முட்டைகளும் தேவையான அளவிற்கு சுத்தம் செய்யப்பட்ட பின்பே விற்பனைக்கு வருகின்றன. அத்தகைய சூழ்நிலையில், அதை மீண்டும் வீட்டில் கழுவும்போது,     இந்த செயல்முறை முட்டையின் மேற்பரப்பில் இருந்து 'க்யூட்டிகல்' அல்லது 'ப்ளூம்' எனப்படும் அடுக்கை நீக்குகிறது.

கோழிப்பண்ணையில் முட்டைகளை கழுவும் முறை

அமெரிக்க வேளாண்மைத் துறை இது குறித்து மேலும் கூறுகையில், கோழி முட்டைகளை கழுவியவுடன், அதன் மீது உண்ணக்கூடிய கனிம எண்ணெய் பூசப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம், எந்த பாக்டீரியாவும் முட்டையை மாசுபடுத்தாது, முட்டையின் உள்ளே நுழைய முடியாது. முட்டை ஓடு நுண்துளையாக இருப்பதால், முட்டையை தண்ணீரில் கழுவினால், பாக்டீரியா முட்டைக்குள் நுழையும். முட்டைகளை தண்ணீரில் கழுவக்கூடாது என்பதற்கான காரணம் இதுதான்.

முட்டைகளை கழுவ சரியான வழி

நீங்கள் பல்பொருள் அங்காடி போன்ற இடங்களில் முட்டைகளை வாங்கினால், முட்டைகளை கழுவ வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், நீங்கள் முட்டைகளை கழுவாமல் சாப்பிட விரும்பவில்லை என்றால், நீங்கள் அவற்றை வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். முட்டையைக் கழுவினால் முட்டை கெட்டுப்போவது மட்டுமின்றி ஆரோக்கியமும் கெடும். எனவே, முட்டையை கழுவ வேண்டாம். அப்படி உங்களுக்கு சுத்தம் செய்ய வேண்டும் என தோன்றினல், ஈரமான துணியால் சுத்தம் செய்த பிறகு பயன் படுத்தவும்.



--

ஞாயிறு, 6 ஜூலை, 2025

துப்பாக்கியால்வானத்தை நோக்கி சுட்டால் அந்த குண்டு என்னவாகும்.?


துப்பாக்கியால் விண்ணை நோக்கி சுடும்போது மேலே செல்லும் குண்டுகள் என்னவாகும். அது திரும்பவும் பூமியை நோக்கி வரும் போது நமக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?

இதைப்பற்றி நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடப்படும் புல்லட் 3 கிலோமீட்டர் வரைக்கும் நேராக விண்ணை நோக்கி செல்லும். அதன்பிறகு புவியீர்ப்பு விசையின் காரணமாக அது மீண்டும் பூமியை நோக்கி திரும்பும்போது, வேகம் சற்று குறைவாக இருக்கும். அதாவது ஒரு மணி நேரத்திற்கு 400 கி.மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கித் திரும்பும். அது யார் மீதாவது பட்டால் கட்டாயம் காயத்தை ஏற்படுத்தும். ஏன் உயிரே போவதற்குக் கூட வாய்ப்புள்ளது. இதுபோல் வானத்தை நோக்கி சுடப்பட்ட புல்லட்டுகளால் இதுவரை பல மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாகவே பல நாடுகளில் பண்டிகைகளின் பொழுது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டைப் பொருத்தவரை பெரும் தலைவர்கள் யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கிகளை சுடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த துப்பாக்கிகளில் இருந்து வெளியாகும் குண்டுகள் போலியானவை என்றும், அவை வெடி சத்தத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. இருப்பினும் சில அதிபுத்திசாலி நபர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் துப்பாக்கிகளை கொண்டு வானத்தை நோக்கி சுடுகின்றன. இதனால் பலருக்கும் உயிருக்கே ஆபத்து ஏற்படுகின்றது. ஆனால் இந்தியாவில் லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது. அதையும் மீறி துப்பாக்கியை பயன்படுத்தினால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் படுவார்கள்.



--

வியாழன், 3 ஜூலை, 2025

பாடி லோஷன் எப்படி பயன்படுத்த வேண்டும்?

சாதாரணமாகவே சிலருக்கு எந்நேரமும் சரும வறட்சி இருக்கும். அதிலும் கோடை காலத்தில் உடலில் நீரேற்றம் குறைந்து உடல் முழுவதுமே பெரும்பாலானோருக்கு வறட்சியாகக் காணப்படும்.

இந்த சூழ்நிலையில் உடல் வறட்சியைத் தடுக்கவும் சருமப் பாதுகாப்புக்கும் பாடி லோஷன்(உடலில் தடவும் திரவம்/கிரீம்) பயன்படுத்துவது அவசியம். பெண்கள் அதிகமாக இதனை பயன்படுத்தினாலும் சிலர் சரியான முறையில் அதனை உபயோகிப்பதில்லை.

பாடி லோஷன் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

அனைத்து விதமான சருமம் கொண்டவர்களும் பாடி லோஷன் பயன்படுத்தலாம்.

மிகவும் வறண்ட சருமம் கொண்டவர்கள் தண்ணீர் போன்று இருக்கக்கூடிய பாடி லோஷன்களை பயன்படுத்த வேண்டும்.

எண்ணெய் சருமம் கொண்டவர்கள் க்ரீம் வகை பாடி லோஷன்களை பயன்படுத்தலாம்.

அடுத்ததாக உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு முடிந்தவரை ரசாயனம் கலக்காத தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் கொண்டு செய்யக்கூடிய பாடி லோஷன்களை பயன்படுத்துங்கள்.

குளித்தவுடனேயே உடல் முழுவதும் பாடி லோஷனை அப்ளை செய்ய வேண்டும். ஈரப்பதம் இருக்கும்போது போட்டால் நன்றாக உறிஞ்சி உடல் வறண்டு போகாமல் தடுக்கும்.

முதலில் கீழிருந்து அதாவது காலில் இருந்து தொடங்கி உடல் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். முழங்கை, கால்களில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். வட்ட வடிவில் தேய்ப்பதே சரியான முறையாகும்.

கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை சரிசெய்ய பாடி லோஷன் அவசியமான ஒன்றுதான். முடிந்தவரை இயற்கை முறையில் இயற்கையான பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்ட லோஷன்களை பயன்படுத்தி சருமத்தை பராமரியுங்கள்.



--

பிறந்தகுழந்தைகளுக்கு டயாப்பர் அணிவிப்பது சரியானதா?

  டயாப்பர் அணிவிக்காமல் இன்றைய சூழ்நிலையில் சமாளிக்க முடிவதில்லை. டயாப்பர் அணிவிக்கக் கூட...

Popular Posts