லேபிள்கள்

திங்கள், 9 ஜூன், 2025

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

உயர் இரத்த அழுத்த நோயாளிகள் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

ஆனால் இரத்த அழுத்த நோயாளிகள் சில உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இல்லையெனில் அவர்களின் இதயத்தில் அழுத்தம் ஏற்பட்டு திடீர் மாரடைப்பு வரலாம். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எந்தெந்தப் பயிற்சிகளைச் செய்யக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

இந்த பயிற்சிகளை தவிர்க்கவும்

உடற்பயிற்சி செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இதற்கு சரியான வழியும் உள்ளது. உண்மையில், மிகக் குறுகிய காலத்தில் மிக வேகமாக பிபியை அதிகரிக்கும் பயிற்சிகளைச் செய்வது, உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு ஆபத்தானது. இந்த பயிற்சிகளில் எடை தூக்குதல், ஸ்பிரிண்டிங், ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங், ஸ்குவாஷ் போன்றவை அடங்கும்.

அதேபோல் இவற்றைத் தவிர வேறு ஏதேனும் உடற்பயிற்சிகளைச் செய்யும்போது உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தலைவலி, உடல் வலி, அதீத சோர்வு அல்லது வாந்தி போன்ற பிரச்சனைகள் மேற்கொண்டால் உடனே உடற்பயிற்சி செய்வதை நிறுத்தி மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த பயிற்சிகள் அனைத்தும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்

- நடைபயிற்சி

- ஜாகிங்

- ஸ்கிப்பிங் செய்வது

- ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி

- டான்ஸ்

உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு உடற்பயிற்சி செய்யும் போது இந்த விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்

* மெதுவான வேகத்தில் உடற்பயிற்சியை செய்யத் தொடங்குங்கள்.

* இரத்த அழுத்தம் அதிகரித்தால், படிப்படியாக உடற்பயிற்சியை நிறுத்துங்கள்.

* உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

* அதிக டென்ஷன் எடுக்காதீர்கள் மற்றும் கனமான உடற்பயிற்சிகளை செய்யாதீர்கள்.

* தேவையானதை விட அதிக நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.

6 விஷயங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்

* காபி: உயர் இரத்த அழுத்த நோயாளிகள் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். காபி மற்றும் சோடா போன்ற பானங்கள் தீங்கு விளைவிக்கும். நீங்களும் தேநீரைத் தவிர்த்தால் நல்லது.

* மசாலா: அதிக காரமான உணவுகள் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். உணவில் பயன்படுத்தப்படும் மசாலாக்கள் இரத்த அழுத்த பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.

* சர்க்கரை: உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் சர்க்கரை அல்லது இனிப்புப் பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். அதிக சர்க்கரை சாப்பிடுவது உடல் பருமனுக்கு வழிவகுக்கும், இது உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

* உப்பு: அதிகப்படியான உப்பு உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். உப்பு அதிகமாக உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

* ஊறுகாய்: எந்த உணவுப் பொருளையும் பாதுகாக்க உப்பு அவசியம். உணவு விரைவில் அழுகுவதை உப்பு தடுக்கிறது. உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு உப்பு சேர்த்து பாதுகாக்கப்பட்ட பொருட்களை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும்.

* பாக்கெட் உணவு: உயர் இரத்த அழுத்தம் நோயாளிகள் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. பேக்கேஜ் செய்யப்பட்ட ஸ்டாக்கில் சோடியம் அதிகமாக உள்ளது. மேலும் உயர் இரத்த அழுத்தத்திற்கு சோடியம் நல்லது இல்லை.



--

வெள்ளி, 6 ஜூன், 2025

வெயில் நாளில் வெளியே சாப்பிடுவோருக்கு வரும் வயிற்று பிரச்சனைகளுக்கு சில வழிகள்.

வயிற்றுவலி நம் மண்டையைப் பிராண்டும் மிக மோசமான வலிகளுள் ஒன்று. வலது விலா எலும்புகளுக்குக் கீழே அவ்வப்போது வலி, சில நேரம் எதுக்களிப்பு, கொஞ்சம் அஜீரணம்...

என இருக்கும். உடனே அது வயிற்றுப் புண்ணா, குடல் புண்ணா இல்லை வேறு ஏதேனுமா என நாம் குழம்புவோம். மருத்துவரிடம் போனால், `எவ்வளவு நாளா வயிற்றுவலி' என ஆரம்பித்து, `நெஞ்சு எலும்புக்குக் கீழேயா, மார்பின் நடுப் பகுதியிலா... எங்கே எரிச்சல்?, கொஞ்சம் சாப்பிட தாமதமானால், பசி வரும்போது வலிக்குதா, சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வலிக்குதா?' என்றெல்லாம் கேள்விகள் எழுப்புவார். ஒருவேளை பித்தப்பைக் கல் இருந்தாலும் இருக்கலாம் என அனுமானித்து, ஸ்கேன் எடுக்கச் சொல்லும் மருத்துவர்களும் உண்டு

பொதுவாக நிறைய பேருக்கு இரவில் நன்றாக சாப்பிட்டு விட்டு தூங்கி எழுந்திருக்கும் போது வயிறு வீங்கியதாக ஒரு உணர்வு தோன்றும்.

இதற்கு முக்கிய காரணம் நம் குடல் மற்றும் வயிற்றில் வாயுக்கள் நிரம்பியதாலே இந்த பிரச்சினை உண்டாகிறது.

இதை நீங்கள் கண்டுக்காமல் விட்டால் வயிற்று வலி, வயிற்றில் போக்கு போன்றவற்றை அனுபவிக்க கூடும்.

இதனை ஒரு சில எளிய முறையில் போக்கலாம். தற்போது அவை எப்படி என பார்ப்போம்.

ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு, அரை டீஸ்பூன் ஏலக்காய் பொடி, ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதில் ஒரு கைப்பிடி அளவு சாதத்தை சேர்த்து இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். கஞ்சி போன்ற பதத்துக்கு வந்ததும் எடுத்து குடிக்கலாம். வாய்வுப் பிடிப்பு ஏற்பட்டிருக்கிற சமயத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த கஞ்சியைக் குடித்தால் போதும் வாய்வுப் பிடிப்பு மற்றும் வயிற்றுக் கோளாறுகள் தீரும்.

இரண்டு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு மற்றும் 2 பல் பூண்டு ஆகியவற்றை தட்டிச் சேர்த்து கொதிக்க விடுங்கள். இது ஒரு கப் அளவுக்கு சுண்டி வந்த பிறகு அதை ஆறவிட்டு வெதுவெதுப்பாக குடியுங்கள். அதேபோல இரவில் தூங்குவதற்கு முன்பாக, பாலில் பூண்டு பற்கள் 10 சேர்த்து நன்கு வேகவிட்டு குடித்து வந்தாலும் வாயுத்தொல்லை தீரும்.

ஓமத்தை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து அதை அப்படியே 5 நிமிடங்கள் மூடி வைத்து விட வேண்டும். பிறகு அதை வடிகட்டி குடிக்கலாம். அல்லது ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து காலை வேளையில் டீயாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு டம்ளர் புளிக்காத மோரில் ஒரு சிட்டிகை கருப்பு உப்பு மற்றும் கால் ஸ்பூன் அளவு பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதை அப்படியே குடித்து வரலாம். குறிப்பாக, வெயில் காலத்துக்கு வயிற்றுக்கு மட்டுமல்லாது, உடலின் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

ஒரு கப் பூசணிக்காயை நறுக்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதில் மஞ்சள் தூள், சிறிது உப்பு மற்றும் சீரகம் கால் ஸ்பூன் சேர்த்து, கால் டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். நன்கு வெந்ததும் சாப்பிடவும்.

வயிறு வீக்கம் மற்றும் வாயுத் தொல்லையால் சிரமப்படுகிறவர்கள் காலை மற்றும் இரவு தூங்குவதற்கு முன் என இரண்டு வேளை, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 ஸ்பூன் அளவுக்கு ஆப்பிள் சிடார் வினிகரைக் கலந்து குடித்து வர வேண்டும். இப்படி குடித்து வரும்போது நான்கு நாட்களில் வாயுத்தொல்லை நீங்கும். வயிறு வீக்கமும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒன்றரை ஸ்பூன் அளவுக்கு எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். இதை அப்படியே கலந்து வெறும் வயிற்றில் குடிக்கவும்.



--

செவ்வாய், 3 ஜூன், 2025

தலைவலியை போக்க எளிமையாக தீர்வுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.


தலைவலி வந்துவிட்டால் எந்த வேலையும் சரியாக ஓடாது. மற்றும் உடல்நிலையையும் மிக சோர்வாக உணர வைக்கும் இந்த தலைவலி.

தலைவலியை வந்துவிட்டாலே போதும் பலர் கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட மருந்துகளை வாங்கி போடுவதுண்டு. இருப்பினும் இதனை சில வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு தீர்க்க முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

வெற்றிலை காம்பு, லவங்கம், ஆலரிசி சமஅளவு பால் கலந்து அரைத்து சூடாக்கி நெற்றி பொட்டில் உச்சந்தலையில் தடவ தலைவலி குணமாகும். எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெய் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றை தலைவலி போகும்.

மரிக்கொழுந்து செடியின் பூவை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி தலைவலி உள்ள இடத்தில் வைத்துக் கட்டுப்போட உடனே தலைவலி நிற்கும். மருதாணி இலையைப் பறித்து சுத்தம் செய்து தாய்ப்பால் விட்டு மைய அரைத்து நெற்றியில் பற்றுப்போட தலைவலி உடனே குணமாகும். மிளகை மைய தேய்த்து எடுத்து அதை எலுமிச்சம் பழச் சாற்றில் நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.

குங்குமப்பூ வாங்கி வந்து தாய்ப்பால் விட்டு மைய உரைத்து நெற்றியில் பற்றுப்போட தலைவலி உடனே நிற்கும். முற்றிய வெற்றிலையின் நுனி பகுதியை சிறிது எடுத்து நெற்றிப்பொட்டின் இருபுறமும் ஒட்டினால் தலைவலி குணமாகும்.


--

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

உயர் இரத்த அழுத்த நோயாளிகள் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். ஆனால் இ...

Popular Posts