லேபிள்கள்

சனி, 7 ஏப்ரல், 2018

போலீஸ் அவர்கள் பதிவு செய்யாதபோது, அவற்றை பதிவு செய்ய அவர்களுக்கு உத்தரவிட...

போலீஸ் அவர்கள் பதிவு செய்யாதபோது, அவற்றை பதிவு செய்ய அவர்களுக்கு உத்தரவிட....
உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் அளிக்கப்படுகின்ற புகார்களை அவர்கள் பதிவு செய்ய மறுக்கின்ற போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ்வர்களிடம் அதுபற்றிய புகாரினை

( ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவுத்தபால் மூலம்) அனுப்பி, உள்ளூர் காவல்நிலைய அதிகாரிகளுக்கு ஒரு நெருக்கடியை மனுதாரர் ஏற்படுத்த முடியும்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் நமது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்ன செய்வது?



இதுபோன்ற சூழ்நிலையில் நாம் நீதிமன்றத்தை நாடுவது நல்ல பலனைத்தரும். இதனையே சுருக்கமாக கோர்ட் டைரக்‌ஷன் என்கிறார்கள்.
சிலர் இதற்காக நேரடியாக உயர்நீதிமன்றத்தினை நாடுகிறார்கள். அது அவசியமில்லை. மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகினாலே போதுமானது.
இதற்கு குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 482ன் கீழ் பாதிக்கப்பட்ட மனுதாரர் நீதிமன்றத்தில் மனுச் செய்யலாம்.

இந்தப் பிரிவின் கீழ், போலீசில் அளிக்கப்படும் புகார்களை அவர்கள் பதிவு செய்யாதபோது, அவற்றை பதிவு செய்ய அவர்களுக்கு உத்தரவிடும் படியும், நடைபெறுகின்ற விசாரணையை வேறு ஏஜன்சிக்கு மாற்றவும், வழக்கை ரத்து செய்யவும் நாம் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கலாம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

பலரும் இரவு நேரத்தில் அதிகளவு மூக்குபிடிக்க உணவுகளை சாப்பிடுவார்கள். உண்மையில் இரவு வேளை என்ப...

Popular Posts