லேபிள்கள்

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

சோர்வு அதிகமாக இருக்கா ?

சோர்வு அதிகமாக இருக்கா ?

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பெண்களுக்கு சோர்வு, அமைதியின்மை, மயக்கம், போன்றவை
ஏற்படுவது சகஜம். இ?து போன்று அடிக்கடி ஏற்பட்டால் அது ஏதேனும் உடல் கோளாறின் அறிகுறியாக
?ருக்கலாம். அதனால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம். குடும்ப டாக்டரிடம் ஆலோசனை
பெறலாம். ஆனால் சில பெண்களுக்கு வேலைக்குச் செல்வதாலும்,வீட்டில் அயராத வேலைகள் இ?ருப்பதாலும்
உடலில் சத்து குறைந்து பலகீனம்
ஏற்படலாம். இ?வற்றை சரிவிகித உணவு முறை பழக்கத்தின் மூலம் மாற்றிவிடலாம். புத்துணர்ச்சியுடன்
விளங்கலாம்.


பெரும்பாலான பெண்களுக்கு காலை உண்வு சாப்பிடுவதற்கு நேரம் ?ருக்காது. அதற்காக காலை உணவை
தவிர்த்துவிடுகின்றனர். அவ்வாறு செய்வது மிகவும் தவறு. இரவில் நீண்ட நேர தூக்கத்திற்கு பிறகு அன்றைய
நாளில் உடலும் மனமும் நன்கு வேலை செய்யத் தயாகராக இ?ருக்கும். அப்போது அதற்குரிய சத்துக்களை
தந்தால்தான் அன்று முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்யமுடியும். மேல் நாட்டில் காலை உண்வைத்தான்
முக்கியமாக கருதுவார்கள்.

அவ்வாறு காலை வேளையில் அமர்ந்து ஆற அமர சாப்பிட முடியாதவர்கள் சத்து மாவில் கஞ்சி செய்து
சாப்பிடலாம். பாதம் பருப்பு நான்கு என்ற கணக்கில் எடுத்து இ?ரவில் ஊறப் போட்டு விடவேண்டும்.
காலையில் அந்த பருப்பு தோல் நீக்கி சாப்பிடலாம். பேரீச்சம் பழங்களை சாப்பிடலாம். ஏதாவது முளை
கட்டிய பயறு வகையை சேர்த்துக் கொள்வது அவசியம். நெய் கொழுப்பு சத்து மிகுந்தது என்று கூறப்பட்டாலும்
பலகீனமான பெண்களுக்கு ஊட்டம்
தரக்கூடியது, துவரம் பருப்பு, பயத்தம் பருப்பை குழைய வேகவிட்டு, அதில் ?ரண்டு டீஸ்பூன்கள் நெய் கலந்து
சாப்பிட்டு வர உடலுக்கு தெம்பு கிடைக்கும்.

நெல்லிக்காய்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. நெல்லிக்காய் கிடைக்காத காலத்தில் நெல்லிவத்தில்
தயிர் கலந்து பச்சடி போல் உண்ணலாம். மிக களைப்பாக உணரும் போது மிதமான சூடில் உள்ள வெந்நீரில் ஒரு
டீஸ்பூன் தேன் கலந்து பருகலாம். எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து பருகலாம். மோரில் சுக்கு மற்றும்
புதினா கலந்து பருகினால் புத்துணர்வு கிடைக்கும்.

வாரம் ஒரு முறையாவது ஏதேனும் பழச்சாறு அல்லது காய்கறிச்சாற்றை வீட்டிலேயே செய்து நிறைய குடிப்பது
நல்லது. பீட் ரூட், காரட் போன்றவற்றிலிருந்து சாறு எடுத்துக் குடிக்கலாம். வேப்பங்கொழுந்துகளை
அவ்வப்போது பறித்து மென்று தின்ன வேண்டும். சற்று கசக்கும் ஆனாலும் பரவாயில்லை
http://www.tamilyes.com/t52454-topic

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts