லேபிள்கள்

ஞாயிறு, 5 ஜூன், 2011

வேணாம்... விட்ருங்க... !


வேணாம்... விட்ருங்க... !


போஸ்ட்மேன்: சார் உங்க ஒருத்தருக்காக அஞ்சு கிலொமீட்டர் வரேன்

மங்குனி: யோவ் ஏன்யா இப்படி வேஸ்ட்டா அலையறே? பேசாம போஸ்ட் பண்ணிட வேண்டியதுதானே?
*****
சிரிப்பு போலீஸ்: என்னடா டெர்ரர் பாண்டி, ஜெராக்ஸ் எடுக்க போயிட்டு இவ்வளவு நேரம் கழிச்சி வர்ரே? ஜெராக்ஸ் எடுக்க கொடுத்த காச முறுக்கு வாங்கி தின்னுபுட்டியா?

டெர்ரர் பாண்டியன்: பின்ன, நீ பாட்டுக்கு 10 பக்கத்த கொடுத்துட்டே, ஜெராக்ஸ்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் வந்திருக்கான்னு எல்லாத்தையும் படிச்சி  செக் பண்ணி பார்க்க வேணாமா?
*****
நம்ம இம்சை பாபு இல்ல, அவரு ஒரு பொண்ணுகிட்ட ப்ரொபோஸ் பண்ணாரு,

அதுக்கு அந்த பொண்ணுஎனக்கு உங்களவிட ஒரு வயசு ஜாஸ்திங்க...

இம்சை அரசன் பாபு: சரி, அப்போ அடுத்த வருசம் வர்ரேன்....!
*****
சிரிப்பு போலீஸ்: ஏன்டா நரி.. ஏன் கண்ணாடிக்கு முன்னாடி இப்படி கண்ண மூடிக்கிட்டு ரொம்ப நேரமா நிக்கிறே? ஏதாவது புதுசா யோகா பண்ணி திருந்தி வாழ முயற்சி பண்றியா?

நரி: அட போ மச்சி... அதுலாம் ஒண்ணுமில்ல.... நான் தூங்கும் போது எப்படி இருப்பேன்னு பாக்க ட்ரை பண்றேன் மச்சி, நீயும் வேணா ட்ரை பண்ணி பாரேன்.....!
*****
டெர்ரர் பாண்டியன்: ஏன் எல்லாரும் ஓடிக்கிட்டு இருக்காங்க...?

மங்குனி: இது ஓட்டப்பந்தயம், ஜெயிக்கிறவருக்கு கப்பு கொடுப்பாங்க...!

டெர்ரர்: அப்போ ஏன் மத்தவங்க ஓடுறாங்க...?

*****
மங்குனி : ஏண்டா டெரரை போட்டு இந்த அடி அடிக்கிற?
சிரிப்பு போலீஸ்: நம்ம புரோக்கர் கூடஅக்ரிமென்ட் போடுறதுக்கு பத்திர பேப்பர் வாங்கிட்டு வாடான்னா வெறுங்கைய வீசிட்டு வந்து நிக்கிறான். ஏன்னு கேட்டா பத்திர பேப்பர் பத்திரமா இருக்கட்டும்னு பேங்க் லாக்கர்ல வச்சிட்டேன்னு சொல்றான்.
டெரர் : நான் சரியாதான செஞ்சேன். எதுக்கு என்னை அடிக்கிறான். !#@@@@
*****
நம்ம நரி ஒரு இண்டர்வியூவுக்கு போயிருந்தான் (வேறெதுக்கு... வேலைக்குத்தான்...!). அங்க துரதிர்ஷ்டவசமா சிரிப்பு போலீசுதான் டேமேஜரு...!

சிரிப்பு போலீசு: இப்போ ஒரு கேள்வி கேப்பேன், கரெக்டா பதில் சொல்லனும்!

நரி: கேளுங்க சார், அதுக்குத்தானே வந்திருக்கேன்!

சிரிப்பு போலீசு: நான் உங்களுக்கு மொதல்ல ரெண்டு பெருச்சாளி, அப்புறம் ரெண்டு பெருச்சாளி, அப்புறம் ரெண்டு பெருச்சாளி தந்தா, இப்போ உங்ககிட்ட எத்தன பெருச்சாளி இருக்கும்...!

நரி: ம்ம்ம்.... ஏழு சார்...!

சிரிப்பு போலீசு: தம்பி அவசரப்படாம யோசிச்சு பதில் சொல்லனும், நான் உங்களுக்கு மொதல்ல..... ரெண்டு பெருச்சாளி........, அப்புறம் ரெண்டு பெருச்சாளி..........., அப்புறம் ரெண்டு பெருச்சாளி..... தந்தா, இப்போ........... உங்ககிட்ட எத்தன பெருச்சாளி இருக்கும்...!

நரி: இப்பவும் ஏழு தான் சார்.....!

சிரிப்பு போலீசு: (என்ன எழவுடா இது.... ஒண்ணு ரெண்டு கூட எண்ணத்தெரியாம காலங்காத்தால வந்து நம்ம உயிரெடுக்கிறானுக...!), அது எப்படி தம்பி ஏழு வரும்....?

நரி: ஏன்னா என்கிட்ட ஏற்கனவே ஒரு பெருச்சாளி இருக்கே...!


கருத்துகள் இல்லை:

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts