லேபிள்கள்

சனி, 13 பிப்ரவரி, 2016

மருந்து மாத்திரை வாங்கும்பொழுது கவனிக்கவேண்டியவை

மருந்து மாத்திரைகளை வாங்கும் போது முதலில் நிதானத்துடன் செயல்படவேண்டும் ஒரு போதும் அவசரம் காட்டக்கூடாது பொருமையுடன் வாங்கவேண்டும்.. மருந்துகளை வாங்கும் போது உரிமம் பெற்ற சில்லறை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும்.

மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்து சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே கவனமாக வாங்க வேண்டும். வாங்கிய மருந்து மாத்திரைகளுக்கு கடைக்காரர்களிடமிருந்து விற்பனை ரசீது கேட்டு பெறவும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும். மருந்துகளை வாங்கும் போது அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை பார்த்து வாங்க வேண்டும்..

மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்து அதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும். மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும். குறிப்பிட்ட‍ சில மருந்து வகைகளை மட்டும் குளிர்ச்சியாக வைத்திருக்க‍ வேண்டியது அவசியம்.

மருந்துகளை குழந்தைகளால் எடுக்க முடியாத, குழந்தைகளின் கண்களில் படாதவாறு வைத்துக்கொள்ள வேண்டும். மருந்துகளை சமையல் அறை, குளியல் அறையில் உள்ள அலமாரிகளில் வைக்காதீர்கள். என்ன தான் ஒரே மாதிரி அரிப்பு ஏற்பட்டாலும் மற்றவரின் நோயின் தன்மை உங்களது போன்று இருந்தாலும் நீங்கள் உபபோகப்படுத்தும் மருந்துகளை அவர்களுக்கு கொடுக்காதீர்கள்.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மெடிக்கல் சென்டரில் உங்கள் நோய்க்கு தகுந்தாற் போல மருந்து மாத்திரைகளை வாங்கக்கூடாது-. ஏதேனும் உடல் உபாதைகள் வந்தால் மருத்துவரை அனுகுவது மிக அவசியம்.
http://tamil4health.blogspot.in/2014/04/When-buying-prescription-pills.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts