லேபிள்கள்

திங்கள், 13 ஜனவரி, 2020

இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி: அல்லாஹ்வுடன் மூஸா (அலை) அவர்களின் உரையாடல்

மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ
நபியவர்களோடு இணைத்து சமூக வலைத்தளங்களில் பரப்பும் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி:
ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம்,
"யா அல்லாஹ்! நீ என்னை உன்னுடன் நேரடியாகப் பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்.. இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா?"
எனக் கேட்டார்.
அதற்கு அல்லாஹு தஆலா,
"மூஸாவே! இறுதி காலப்பகுதியில் நான் முஹம்மத் (ஸல்) இன் கூட்டத்தினரை அனுப்புவேன். அவர்கள் காய்ந்த உதடுகளுடனும், வரண்ட நாவுடனும், மெலிந்து கண்கள் குழிவிழுந்த தோற்றத்துடனும் இருப்பதோடு வயிற்றில் பசியுடன் – என்னை அழைப்பர் (துஆ மூலம்). அவர்கள் தான் அதிகம் அதிகம் எனக்கு நெருக்கமானவர்கள்!
மூஸாவே! உங்களுக்கும் எனக்கும் மத்தியில் 70000 தடுப்புக்கள் இருந்தன. ..ஆயினும் இஃப்தார் நேரத்தில் எந்த ஒரு தடுப்பும் எனக்கும் நபி முஹம்மதின் உம்மத்திற்கும் இருக்காது.
மூஸாவே! இஃப்தார் நேரத்தில் நோன்பாளியின் துஆ நிராகரிக்கப்படாது. அதற்கான பொறுப்பை நானே ஏற்கிறேன்"
என்றான்..
ஸூப்ஹானல்லாஹ்!!
இந்த ஹதீஸை அதிகம் அதிகம் பகிரவும்..
தயவு செய்து மகத்துவம் மிக்க கண்ணியப்படுத்தப்பட்ட நோன்பு திறக்கும் நேரத்தை வீணாகக் கழிக்காமல் இறைவனின் பொருத்தம் அடைவீர்..
மேற்படி செய்தி 'நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்பதற்கான அறிவிப்பாளர் வரிசையுடன் எந்த ஹதீஸ் கிரந்தத்திலும் இடம் பெறவில்லை என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்த செய்தியை ஹிஜ்ரி 894 ல் மரணித்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரான அப்துர் ரஹ்மான் இப்னு அப்துஸ் ஸலாம் அஸ்ஸபூரி என்பவர் தனது கதைகளும், கப்சாக்களும், இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்திகளும் நிறையவே உள்ள 'நுஸ்ஹதுல் மஜாலிஸ் வமுன்தஹபுன் நபாயிஸ்' என்ற புத்தகத்தில் 182, 183 ஆகிய பக்கங்களில் எந்த ஒரு ஆதாரத்தையும் முன்வைக்காமல் வெறும் புனையப்பட்ட கதையாகக் குறிப்பிடுகின்றார்.
மேலும் அவரை தொடர்ந்து ஹிஜ்ரி 1127 இல் மரணித்த இஸ்மாயீல் ஹக்கி அல் ஹலூதி என்பவர் தனது 'ரூஹுல் பயான்' எனும் தப்ஸீரில் (8/112) எந்த ஒரு அறிவிப்பாளர் வரிசையையும் குறிப்பிடாமல் எழுதி வைத்திருக்கின்றார்.
இவ்வாறு பிற்பட்ட காலத்தில் வந்தவர்கள் எழுதி வைத்துள்ள மேற்படி செய்தியை நபியவர்களோடு இணைத்து சமூக வலைத்தளங்களில் பரப்புவது பாரிய குற்றமாகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் இந்த செய்தி நபி மூஸா (அலை) அவர்களின் கண்ணியத்தைக் குறைப்பதாகும் என்பதை நாம் அவதானிக்க வேண்டும். 'நபியவர்களின் உம்மத்தைச் சேர்ந்த ஒருவர் நபி மூஸா (அலை) அவர்களை விட அல்லாஹ்விடத்தில் கண்ணியமானவர்' என்ற தோற்றப்பாட்டை இந்த செய்தி ஏற்படுத்தக் கூடிய அபாயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே இவ்வாறான எந்த ஒரு ஆதாரமற்ற செய்திகளையும் நன்மை என்று நினைத்துப் பகிர்வதில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோம்!
– எம். றிஸ்கான் முஸ்தீன் மதனி

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

கேஸ் சிலிண்டரை சேமிக்க சிறந்த வழி முறைகள்.

' மாதம் பிறந்தா இதுக்கு அழுதே ஆகணும்னு... ' ஒரு பட்டியல் இருக்கும். அதில் ஒன்ற காஸ் ...

Popular Posts