லேபிள்கள்

செவ்வாய், 25 டிசம்பர், 2018

பிரசவவலி ஏன் இரவில் அதிகம்பேருக்கு வருகிறது தெரியுமா?


நிறை மாத கர்பிணியா நீங்கள் இதோ உங்கள் கவணத்திற்காக சில உன்மைகள் :
ஒன்று தெரியுமா உங்களுக்கு , அதிகப்படியான கர்பிணிகளுக்கு பிரசவ வலி நல் இரவில் தான் எற்படுகிறது .
ஆம் , இதற்கு காரணம் தூங்கும் போது உங்கள் உடலிற்கு முழு ஓய்வுகிடைப்பதால் , இடுப்பு எலும்பு தளர்ந்து பிரசவத்திற்கு ஏதுவாக இருக்கும்
நல்ல ஓய்வு தான் எளிய பிரசவத்திற்கு வழிவகுக்கும் என்பது இயற்கை விதி , உடல் ஓய்வு மட்டும் அல்ல மன ஓய்வும் தான்.
பல தாய்மார்களுக்கு இதனால் தான் இரவில் பிரசவ வலி எற்படுகிறது
ஆழ்ந்த உறக்கத்தில் முதல் கட்ட பிரசவ வலி எற்படுவதால் இது பலருக்கு தெரியாமலேயே போய்விடுகிறது .
முதல் கட்ட பிரசவ வலி மாதவிலக்கின் போது எற்படும் மென்மையான வலி போல் இருக்கும் , இது மேல் அல்லது கீழ் வயிற்றில் உணரப்படும் மாறாக கீழ் முதுகுத்தண்டில் விட்டு விட்டு வலி வரலாம் , சிலசமயம் உடல் சோர்வு கூட எற்படலாம் .
பிறப்புறுப்பிலிறுந்து பனிக்குட நீர் வெளியேறாமல் இருக்கும் வரை நீங்கள் விட்டிலேயே இருக்கலாம் , உங்கள் வீட்டில் இருப்பது உங்களை சற்று பாதுகாப்பாகவும் , தைரியமாகவும் வைத்திருக்கும் உதவும் .
ஒருவேளை பனிக்குட நீர் வெளியேறுவதாக நீங்கள் உணர்ந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுங்கள் .
அப்படி நீங்கள் அவரை அணுகும்போது அவர் உங்களிடம் முன்று கேள்விகளை கட்டாயம் கேட்பார்
அவை
1) Frequency<
2) Duration<
3) Leaking<
இப்போது இவை பற்றி விரிவாக பார்ப்போம் .
1)#Frequency
இது ஒரு வலிக்கும் மற்றொன்றிற்கும் உள்ள இடைவெளி (நேரம் ),
முதல் வலிக்கும் அடுத்த வலிக்கும் இடைப்பட்ட நேரம் ஆகும் .
இந்த நேரம் குறைவாக இருந்தால் நீங்கள் பிரசவத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம் .
2)#Duration
இது வலி நீடிக்கும் கால அளவை குறிக்கும் , ஒரு வலி எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்பதாகும் .
இது ஆரம்பகாலத்தில் குறைந்த தாகவும் , பிரசவ நேரம் நெருங்க நெருங்க அதிக மாகவும் இருக்கும் .
3)#Leaking
இது பனிக்குட நீர் வழிவதை குறிக்கும் பனிக்குட நீர் வழியும் போது நீங்கள் பிரசவத்தின் அடுத்து கட்டத்தை அடைந்திருப்பீர்கள் ,இன் நிலையில் உங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படும் .
உங்கள் நிலையை வைத்து மருத்துவர் சுகப்பிரசவமா அல்லது சிசேரியனா என முடிவு செய்யமுடியும் .
(பிரசவ வலி என்பது கர்ப்பப்பை சுருங்கி விரிவதால் உண்டாவது )
நிங்கள் பிரசவத்திற்கு மருத்துவமனை செல்லும்போது மறக்காமல் உங்களது மாதாந்திர பரிசோதனை ரிப்போர்ட்டையும் எடுத்துச்செல்லுங்கள் .
பிரசவம் எதிர்பார்க்கப்படுகிற தேதிக்கு முன்னதாகவே உங்களுக்கு தேவையானவற்றை ஒரு பையில் எடுத்த வைத்துக்கொள்வது நல்லது .
உலகத்தமிழ் மங்கையர் மலர்
தமிழச்சி நித்யா



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.

இரத்த சோகை காரணமாக உடல் மிகவும் பலவீனமாக தோன்றும். எப்போதும் சோர்வாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்படும். உடலில் ரத்தம் குறைவாக இருக்கும்ப...

Popular Posts